• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Arangam 3

Paithani

New member
Joined
Jun 19, 2024
Messages
17

அரங்கம் 3

மாலதி நிறையவே மாறியிருந்தாள். உடை,பழக்க வழக்கங்கள் , உணவுமுறை என்று ஒவ்வொன்றிலும் தான் ஒரு அமேரிக்க வாசி என்று நிரூபித்தது அவளது நடவெடிக்கைகள். சுந்தரம் இன்னமும் விடுமுறை நாட்களில் கற்றுக்கொண்ட வேதம்,பிரபந்தம் போன்றவற்றை பாராயணம் செய்வதும் , சந்தியாவந்தனம் செய்வதுமாக இருக்க அவன் மனைவி அப்படியே மாறாக மாறிப்போய்விட்டதில் அவனுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

ஆனால் அமேரிக்காவில் அமெரிக்கனாக வாழ்வதில் தவறில்லை என்று அமைதியாகிவிட்டான். மாலதி வீட்டில் அசைவம் சமைப்பது இல்லை. அவ்வளவுதான். இந்த நிலையில்தான் திருமணம் முடிந்து ஐந்து வருஷங்கள் கழித்து மாலதி தாய்மை பேற்றை அடைந்தாள். மசக்கை அவளை படுத்தி எடுத்ததில் அலுவலகம் செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே வேலை செய்தாள் . பிரசவத்திற்கு அவள் பெற்றவர்கள் வந்தாக வேண்டும் என்பதால் சுந்தரமும் வீட்டிலிருந்தே வேலை செய்தான்.

ஏழாம் மாதம் பேபி ஷவரிங் முடிந்த பிறகுதான் இருவருக்கும் சுந்தரத்தின் பெற்றவர்களிடம் சொல்லவேண்டும் என்றே தோன்றியது போலும்.நிதானமாக சொன்னவர்களை ,"எங்களோட ஆசீர்வாதங்கள் ரெண்டு பேருக்கும் " என்றுவிட்டு அவர்களும் முடித்துக்கொண்டார்கள். அவன் குடும்பம் ..அவன் வாழ்க்கை.நன்னா இருந்தா சரி " எனும் பக்குவத்திற்கு இருவரும் வந்து விட்டார்கள்.

"என்ன பெரிய அமேரிக்கா.. என்னோட சீரங்கம் மாறி வேறேதேனும் வருமா ?"என்று கோதையின் வாய் சொன்னாலும் அமெரிக்காவுக்கு சுந்தரம் நம்மள கூட்டிண்டு போலயே " என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் நிச்சயம் உண்டு. தன்னுடைய பேரன் தன்னையும்,தனது கணவரையும் ஆண்டு கணக்கில் சர்வ மரியாதைகளுடன் அங்கே அமெரிக்காவில் தங்க வைக்கப்போகிறான் என்று இப்போது கோதையிடம் யாராவது சத்தியம் செய்திருந்தால் கூட நம்பியிருந்திருக்க மாட்டார்.

பேரனையோ பேத்தியையோ பெற்று நம் கைகளில் கொடுக்க மாட்டார்களா என்ற ஆசை இருவருக்கும் உண்டு. மகனே தங்களைவிட்டு மனதளவில் ஒதுங்கி நிற்கும்பொழுது மற்றவிஷயங்கள் எல்லாம் தூரத்தில் தானே!

ஒன்பதாம் மாதம் ஆரம்பிக்கும் சமயத்தில் மாலதியின் பெற்றவர்கள் அங்கே அமெரிக்காவிற்கு வந்து விட்டார்கள். இருவருக்கும் மகளை நேராக இத்தனை மாதங்களாக பார்க்காத ஏக்கமும், மகளுக்கு மசக்கைக்கு வாய்க்கு ருசியாக சமைத்து போடா முடியாத குறையுமாக இருந்தது. இப்போது மாலதியால் நன்றாக சாப்பிட முடிந்ததால் வீட்டில் தினமும் தடபுடல் தான். மாலதியும் விரும்பி சாப்பிட்டாள். வயிற்றில் இருக்கும் குழந்தையும் நன்றாகவே எடை கூடியது.

பகல் நேரங்களில் மாலதியை நெருங்கவும் விடாமல் ஆயிரம் தடங்கல்கள் சுந்தரத்திற்கு.முன்பெல்லாம் மாலதி கொஞ்சம் ஓய்வாக அமர்ந்திருக்கும் பொழுதுகளில் அவள் வயிற்றில் இருக்கும் தங்கள் மகவுடன் பேசிக்கொண்டிருப்பான்.இப்போது அப்படி முடிவதில்லை. அதனால் இரவு நேரங்களில் மாலதி தூங்கி கொண்டிருக்கும் சமயங்களில் அவளது வயிற்றை தடவிக்கொடுத்து,முத்தமிட்டு வெகுநேரம் ஏதேதோ கதைகள் பேசி,தனது பெற்றவர்கள் தனக்கு சொல்லிக்கொடுத்த நல்ல விஷயங்களை, கதைகளை,நீதிகளை , சிலசமயங்களில் ஸ்லோகங்களை சொல்லி குழந்தையுடன் நேரத்தை செலவிடுவான். குழந்தை தனது தகப்பனின் குரல் கேட்டு அதற்கு வினையாற்றும் சமயங்களில் சுந்தரத்தின் தேகம் சிலிர்த்துதான் போகும்.

யார் சொன்னது அம்மாவால் மட்டும் தான் தாய்மையை குழந்தைக்கு கொடுக்க முடியும் என்று. பல தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளிடம் செலுத்தும் பாசத்தை அளவு சொல்லவே முடியாது.

ஒன்பதாம் மாதம் முடியும் தருவாயில் மாலதிக்கு பனிக்குடம் உடைந்து விட்டது. பிரசவத்திற்கு இன்னமும் இரண்டு வாரங்கள் உண்டு . இப்போது இது எதிர்பாராத நிகழ்வுதான். அவசரமாக மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துக்கொண்டு சென்றான் சுந்தரம்.மாலதியின் அம்மா முதல்நாள்தான் மாலதிக்கு பிரசவ காலத்தில் தேவை என்று சில பொருட்களை தயார் செய்து வைத்திருந்தார்.வீட்டில் மாலதியின் அப்பா தங்கிவிட, மருத்துவமனைக்கு மாலதியின் அம்மாவும் உடன் சென்றாள்.

மருத்துவமனைக்கு சென்ற அரை மணிநேரத்தில் சுந்தரத்தின் சாயலில், கோதையின் தங்க நிறத்தில் , திருவோண திருநட்சத்திரத்தில் அந்த சிசு பூலோகம் வந்தது. தாதி குறித்துக்கொடுத்த நேரத்தை அப்படியே தனது தந்தை திருவேங்கடத்திற்கு அனுப்பிய சுந்தரம் குழந்தையின் புகைப்படத்தையும் சேர்த்தே வாட்ஸாப்பில் அனுப்பி வைத்தான். தகப்பனானது அவனுக்கு மனதில் புதிய அனுபவத்தை கொடுத்தது. ரோமக்கால்கள் சிலிர்த்தன. சுகப்பிரசவம் தான்.மாலதி மயக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். குழந்தை நல்ல நீளமாகவும் ஐந்து கிலோ எடையுடனும் இருந்தான்.

குழந்தை பிறப்பு விபரங்கள் கிடைத்தவுடன் , அன்றைய நல்ல நேரம் பார்த்து அவனது ஜாதகத்தை கணித்து பார்த்த திருவேங்கடத்தின் புருவங்கள் உயர்வதும் சுருங்குவதுமாக இருந்தது. கணித்து முடித்தவர் , தனது மகனுக்கு ஜாதகம் கணித்துவிட்டதாகவும்,குழந்தைக்கு ரங்கராஜன் என்று பெயரிடுமாறும் சொல்லி விவரங்களை சுந்தரத்திற்கு வாட்ஸாப் செய்தார்.

மாலதி குழந்தையுடன் பிரசவம் முடிந்து மூன்றாவது நாள் வீடு வந்து சேர்ந்தாள். மற்ற விஷயங்களில் எப்படியோ மாலதிக்கு மாமாவின் திறமை நன்றாகவே தெரியும். அதனால் அவர் சொன்னபடிக்கே 'ரங்க ராஜன் ' என்று பெயரிட சம்மதித்திருந்தாள். புண்யாஜலம் நல்லபடியாக முடிய அதை வீடியோ பதிவாக திருவேங்கடம் தம்பதி பார்ப்பதற்காக அனுப்பி வைத்தான் சுந்தரம்.

குழந்தை பிறந்து ஒரு வருஷத்திற்கு மாலதி வேலைக்கு செல்லவில்லை.குழந்தையுடன் அவனது ஒவ்வொரு நிலை வளர்ச்சியிலும் அவளது மனம் மயங்கியது. சதா சர்வகாலமும் ரங்கராஜன் தான். அவளுக்கு அதுவே சொர்க்கமாகியது. சுந்தரத்திற்கும் அதே நிலைதான்.ஆனால் அவன் வீட்டிலேயே தங்கிவிட முடியாதே.வேலைக்கு சென்றாக வேண்டுமே!

வீட்டுக்கடன் ஓரளவுக்கு அடைத்தாகிவிட்டது. குழந்தை ரங்கராஜனுக்கு மூன்று வருஷங்கள் ஆகிவிட்டது.பகல் நேரங்களில் அங்கே அருகே இருக்கும் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் ரங்கனை விட்டு விட்டு சுந்தரம் மாலதி வேலைக்கு சென்றார்கள். மாலதியின் பெற்றவர்கள் வந்துசெல்வதிலும், அமெரிக்காவை சுற்றுப்பார்ப்பதிலும் என்ற மாற்றமும் இல்லை.

சுந்தரம் பெற்றவர்களுக்கு அழைத்து பேசினால் பேசுபவர்கள் ,தாங்களாக அவனுக்கோ மாலதிக்கோ அழைத்து பேசுவதில்லை. பிள்ளை தங்களது செலவுக்கென ஏதாவது பணம் அனுப்பினாலும் திருவேங்கடம் அதை செலவு செய்யாமல் வங்கியில் கட்டிவிடுவதை வழக்கமாக்கி வைத்திருந்தார். சுந்தரத்திற்கு இதெல்லாம் தெரியாது.

நாட்கள் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. சுந்தரத்திற்கு பதவி உயர்வுகள் வந்து அடுத்த நிலைக்கு சென்றான்.வேலை பளுவும் கூடியது. மாலதிக்கு பெருமை தாங்கவில்லை. நண்பர்களுடன் அடிக்கடி புகைப்படம் எடுத்துக்கொள்வதும் அதை சமூக வலை தளங்களில் பதிவிடுவதுமாக இருந்தாள்.

மாலதியின் அம்மா கூட சொல்லி பார்த்தாள்,"ஏண்டி இவ்ளோ படம் எடுத்து போடாதே.திருஷ்டி படும். ஒருத்தர் மாதிரி ஒருத்தர் இருக்க மாட்டா ." அம்மாவின் வார்த்தைகள் மாலதிக்கு கோவத்தை கொடுக்க ,"அம்மா..சும்மா பத்தாம்பசலி தனமா என்கிட்ட உளறாதே.எனக்கு எல்லாம் தெரியும். இங்கே படிச்சு டாலர்கள்ல சம்பளம் வாங்கறேன். சுந்தரும் நீ சொல்றதையே வேறே மாதிரி சொல்றார். உங்களுக்கெல்லாம் வேறே வேலை இல்ல " என்று சொல்லும் மகளை என்ன சொல்லி திருத்த முடியும் என்று சோர்ந்து தான் போனாள் மாலதியை பெற்றவள்.

சுந்தரம் அடிக்கடி அமெரிக்காவின் மற்ற மாகாணங்களுக்கு செண்டு வேலை செய்யவேண்டியதாக இருந்தது. சிலசமயங்களில் மாதக்கணக்கில் வேலை இருக்கும்.நேரம் கிடைக்கும் சமயங்களில் வீட்டுக்கு வந்துவிடுவான். இருவரும் சியாடலில் புதியதாக இன்னொரு வீடு வாங்கினார்கள். மாலதியின் அலுவலகம் அங்கேதான் இருக்கிறது.

புதிய வீடும்,அலுவலகமும்,அங்கே கிடைத்த நண்பர்களும் மாலதிக்கு வெகுவாக பிடித்துவிட்டது. சுந்தரத்திற்கு வேலைப்பளுவின் காரணமாக அதிகமான மனா அழுத்தம். சரியாக சொல்லவேண்டும் என்றால் அவனால் தனது நிலையிலிருந்து கீழே இறங்கி வேலை செய்யவும் முடியாது.அதே சமயத்தில் அதிகமான வேலையின் கூடுதல் அழுத்தத்தை நிர்வகிக்கவும் முடியவில்லை.மாலதி அவனை கொஞ்சம் குறைவான சம்பளத்திற்கு வேலையை தேடிக்கொள்ளவும் அனுமதிக்கமாட்டாள்.

இரண்டாவது மகள் இப்போதெல்லாம் லீவுக்கு தங்களை தேடிக்கொண்டு சென்னை வந்துவிடுவதால் , மாலதியின் பெற்றவர்களால் அதிகம் அமேரிக்கா வந்து செல்ல முடிவது இல்லை. அதோடு அவர்களுக்கு சலிப்பும் தட்டிவிட்டது. மாலதி அவர்களிடம் கெஞ்சியும்,கோவப்பட்டும் பயனில்லை. உதவிக்கு மாமன் மாமியை அழைத்துக்கொள்ளவும் பிடிக்கவில்லை. இவ்வளவு வருஷங்களாக பாராமுகமாக இருந்துவிட்டு இப்போது கூப்பிட்டால் எப்படி இருக்கும் என்ற தயக்கமும் உண்டே!

கொஞ்ச மாதங்களுக்கு வீட்டிலிருந்தே வேலை பார்த்தவள், திடீரென அதை விட்டுவிட்டாள். சுந்தரம் கேட்டதற்கு,"நீயும் இங்கே இல்லாம அடிக்கடி வேறே இடத்துக்கு மைக்ரேட் ஆகிடுற. அம்மாவும் வர மாட்டேங்குறாங்க. குழந்தை,வீடு,வேலை ,என்னோட கிளாசஸ் ன்னு தனியா என்னால ஹாண்டில் பண்ண முடியல.சோ கொஞ்ச வருஷம் பிரேக் எடுக்கறேன்.அண்ட் உனக்கும் நல்ல இன்கம் தான் வரதே . அல்லொவ் மீ டு என்ஜோய் ..ப்ளீஸ் "என்று அழுத்தமாக சொன்னவளிடம் வேறேதும் சொல்ல அவனுக்கு பிடிக்கவில்லை. எவளாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்துக்கொண்டு நகர்ந்துவிட்டான். அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே அவனுக்குப் பட்டது. தன்னை பெற்றவர்களை உதவிக்கு கூப்பிடலாமா என்று அவன் ஏனோ கேட்கவில்லை.

சும்மா சொல்லக்கூடாது, வீட்டில் மாலதிக்கு நன்றாகவே பொழுது சென்றது.குழந்தை ரங்கனுடன் இருப்பதுடன் வீட்டின் வாசலில் இருக்கும் அந்த வெட்டவெளியை அருகில் இருந்த நர்சரியிலிருந்து ஆளை வரவழைத்து பெரிய தோட்டம் போட்டாள். நிறைய காய்கறிகளை அங்கே நட்டு வளர்ப்பது அவளது பொழுதுகளை வாங்கிக்கொண்டது. சுந்தரம் வீட்டில் இருக்கும் பொழுதுகளில் கணவன் மனைவி குழந்தை மூவருமாக தோட்ட வேலைகளை செய்வார்கள்.அந்த தருணங்கள் ரங்கராஜனுக்கு மிகவும் பிடித்தவை. வீட்டின் பின்னால் அழகான கனிகளை கொடுக்கும் கிறீன் ஆப்பிள் மரங்கள் இரண்டு வேறு இருந்தது.

சுந்தரம் வீட்டில் இருக்கும் சமயங்களில் தனியறையில் அமர்ந்து கொண்டு நிறைய புலம்பினான்.சுவற்றை பார்த்து பேசுவதும் , சுவற்றில் எதையாவது வீசி அடிப்பதும் வாடிக்கை ஆனது. மாடியில் இருக்கும் அவனது அலுவலக அறையில் கதைவை பூட்டிக்கொண்டு அவன் இவ்வாறு நடந்து கொள்வதை மாலதி எப்படி அறிந்து கொள்ள முடியும்?

திடீரென ஒருநாள் மாலை "நாம் டூ மோந்த்ஸ் இந்தியா போறோம்.எல்லாத்தையும் பேக் பண்ணிக்கோ மாலு " என்று வந்து நின்றான் சுந்தரம்.மாலதிக்கு சுத்தமாக இது பிடிக்கவில்லை.

"பட் ஒய்? இங்கே இருக்குற நிம்மதியை கெடுத்துக்கிட்டு இந்தியா வந்து ரெண்டுமாசம் தங்க என்னால முடியாது சுந்தர். அதோட எனக்கும் ரங்கனுக்கும் அங்கே கிளைமேட் வேறே ஒத்துக்காது ." என்று முரண்டு பிடித்தாள் மாலதி. அவளை நக்கலாக பார்த்தவன் ,"ஓகேய் ,நீ இங்கேயே இரு.நா ரங்கனை கூப்டுண்டு போறேன்."என்று முடித்துக்கொண்டான் சுந்தரம்.

அவன் எப்போதாவது பேசும் இந்த குரல் ,மாலதிக்கு கொஞ்சம் பயம் கொடுக்கும். அந்த சமயங்களில் அடிபணிந்து விடுவாள். வேறு வழி இல்லாமல் தன்னுடையதும் மகனுடையதும் எடுத்து வைத்துக்கொண்டாள். அன்றிலிருந்து ஏழாவது நாள் அவர்களது குடும்பம் அமேரிக்க மண்ணை விட்டு கிளம்பியது.

நேரே சுந்தரம் தனது குடும்பத்துடன் சென்னை வந்துவிட்டான். அங்கே அத்தை வீட்டில் ஒருவாரம் இருந்தவனுக்கு அப்பாவையும் அம்மாவையும் பார்க்கவேண்டும் போல இருக்க தனது உடமைகளுடன் கிளம்பியும் விட்டான். மாலதி வரமாட்டேன் என்று அடம்பிடிக்க , குழந்தை ரங்கனை கூட்டிக்கொண்டு ஒரு வாடகை காரில் திருவரங்கம் வந்து சேர்ந்தான்.

வீட்டில் மாலதியின் அம்மா மாலதியை நச்சரித்து சீரங்கம் அனுப்பி வைத்தாள்.

 

Author: Paithani
Article Title: Arangam 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
160
சுயநலம் மிக்க
சுந்தரி இந்த மாலதி....
சுந்தரம் நீ இவ்வளவு
சுயபுத்தி இல்லாம இருக்க...
சம்பாதித்து என்ன இருக்கு
சந்தோஷம் இல்லையே...
சுந்தரம் தனிமை
சோகத்தில் முடிய போகுதா???
 
Top Bottom