• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நினைவெல்லாம் நீயே 10

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
84
நினைவெல்லாம் நீயே 10

மறுநாள் காலை சரியாக பத்து மணிக்கு தன்னுடைய ஆஃபீஸ்க்கு மனைவியோடு வந்த தன்ராஜ், தனக்கு முன்பே வந்து காத்திருந்த பிரபுராமை பார்த்து சிரித்தவர், பிரபுவையும் தன்னோடு அவருடைய அறைக்கு அழைத்து சென்று உட்கார்ந்தனர்.

"சார்..மேடம்" என தயங்கிய பிரபுவை பார்த்த தன்ராஜ் "என்ன இருந்தாலும் நீயும் நானும் ஆம்பிள யா.."

"நாளைக்கு நம்ம பேர்ல அவங்க ஏதாவது புகார் குடுத்திட கூடாதுல்ல..அதான்..நம்ம சேப்ட்டிக்காக மேடம் அவளே கிளம்பி வந்திட்டா"

சில நிமிடங்களில் ரூபாவும், அவளுடைய அம்மா விலாசினியும் வந்து சேர்ந்தனர்.

அவர்களை வரவேற்ற தன்ராஜ் " வாங்க மா..என்ன மா தயாரா இருக்கீங்களா?"

"பத்திரத்தை படிச்சு பார்த்துட்டீங்கனா மேற்கொண்டு நாம கையெழுத்து போட்டு அக்ரீமெண்ட் ரத்து பண்ணிக்கலாம்"..

ஏதோ பேச வந்த ரூபாவை பார்வையால் அடக்கிய விலாசினி "அதுக்கென்ன..சார்..உடனே பண்ணிடலாம்..நீங்கலாம் இன்டர்ஸ்ட்ரில பெரிய ஆளுங்க சார்..பாரம்பரியமான கம்பெனி..."

"நமக்குள்ள எதுவும் பின்னால பிரச்சினை வரக்கூடாது இல்லையா சார்..எனக்கும் லீகல் விஷயங்கள் தெரியாது சார்.."

"பாப்பாக்கு எதுவுமே தெரியாது சார்..ரொம்ப அப்பாவி.."

"என்ன பண்றது..நான் அவளை உலகம் தெரியாம என் கைக்குள்ளயே வெச்சு வளத்திட்டேன்.."

"நான் எங்க போய் நடிக்க சொல்றேனோ..அங்க போய் நடிச்சு குடுத்துட்டு வந்துடும்...அவ்ளோ தான் தெரியும்.."

"அதான் நேத்து எங்க வக்கீல் கிட்ட பேச்சுவாக்குல சொல்லிட்டு இருந்தேனா..அவரே சார் ஆஃபீஸ் தானே நானே பத்துமணிக்கு அங்க வந்துடறேன்னு சொன்னார்.."

"உங்க சைட்க்கு மேடம் இருக்காங்க..போறாததுக்கு டைரக்டரும் வக்கீல் வேற..."

"நாங்க எல்லாம் உலகம் தெரியாத சாதாரண ஆட்கள் இல்லையா சார்..அதான் சேப்ட்டியை யோசிக்கணுமே...தோ..வந்துடுவார் சார்.."

வார்த்தைக்கு வார்த்தை விலாசினி போலி பணிவாக பேசியதை கேட்டு கூர்மையாக தன் மனைவியையும் பிரபுராமையும் பார்த்தார்.

பிரபுராமுக்கோ ஐயோ இந்தம்மா இவ்ளோ பெரிய கிரிமினிலா..நல்ல வேளை நாம தப்பிச்சோம்..என ஆஸ்வாசமாக பெரிய மூச்சு விட்டவர்..சாரை கூட கேட்காம அவரோட ஆஃபீஸ்க்கு இந்தம்மா பாட்டுக்கு தன்னோட ஆளை கூப்பிடலாமா.. என கோவமாக தோன்றியது..

"நீங்க உங்க பக்கம் சேப்ட்டிக்காக உங்க வக்கீலை கூப்பிடறீங்க..நியாயமான விஷயம் தான் மா.."

"ஆனா அவரை எங்க ஆஃபீஸ்க்கு வர சொல்றத்துக்கு முன்னால எங்க கிட்ட கேட்டிருக்கணும்ல்ல."

"எங்க நம்பர் உங்க கிட்ட இருக்குல்ல..அட்லீஸ்ட் காலைல கிளம்பறத்துக்கு முன்னாடியாவது ஒரு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கலாமே.."

"இது ப்ரொடைக்ஷன் கம்பெனி இல்லையா..சினிமாக்காரங்க நடமாட்டம் அதிகம் இருக்கற இடம்.."

"இப்ப நீங்க வந்திருக்கீங்க..உங்கள மாதிரி பல ஆட்கள் வந்து போற இடம் பாருங்க.."

"அதனால ப்ரைவசி இஷ்ஷுக்காக நாங்க பொதுவா வெளி ஆட்களை எங்க ஆஃபீஸ்க்குள்ள அனுமதிக்கறதில்லயே.. இது உங்களுக்கு தெரியாதா.."

தன்ராஜ் மனைவியின் கூர்மையான சொல் அம்பினால் அதிர்ந்த விலாசினிக்கு திருதிரு என விழித்தபடி என்ன பேசுவது என்றே தெரியாது போனது.

"என்னங்க..பேச்சே வரலயா...உங்களுக்கு இந்த பழக்கம் மறந்து போனாலும் உங்க வக்கீல் ஏற்கனவே எங்க கிட்ட இங்க வர பேசி அனுமதி வாங்கிட்டார்.."

சரியான பொம்பள.. நாமளே பத்து பேரோட சண்டை போடுவோம்..இந்தம்மா நம்மளையே தூக்கி சாப்பிட்டுடும் போலிருக்கே என விலாசினி மனதுக்குள் அவரை திட்டியபடி வெளியில் சிரித்தார்.

இவர்களின் பேச்சு நடந்து முடிவதற்குள் வேகமாக வந்த விலாசினியின் வக்கீல் தாமதமாக வந்ததற்க்கு மன்னிப்பு கேட்டு உட்கார்ந்தார்.

அதற்குள் அனைவரும் காபி வர அமைதியாக காபி குடித்தனர்.
அதன் பின் நல்ல நேரம் முடிவதற்குள் கையெழுத்து போட வேண்டும் என விஷயங்கள் வேகமாக நடந்தன.

தன்ராஜ் பத்திரத்தை எடுத்து விலாசினியின் லக்கீலிடம் குடுக்க அவரும் சில நிமிடங்கள் செலவழித்து படித்து முடித்து
"எதுவும் பிரச்சினை வராது மேடம்.. நீங்க கையெழுத்து போட்டுடலாம்"
உடனே பத்திரத்தை வாங்கிய விலாசினி அங்கிருந்த வெங்கடாசலபதி படத்தின் திருவடியில் வைத்து தன் மகளிடம் குடுக்க அவளும் கையெழுத்து போட்டு குடுக்க..ஒப்பந்தம் ரத்து ஆனது..

சரி மா..எல்லாம் சுமுகமா முடிஞ்சிருச்சு...பிரஸ் மீட் இருக்கு..அத முடிச்சிட்டு அப்பறம் நீங்க போகலாம்.."

எல்லாம் முடிந்து வெளியே வந்தவர்கள் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை பார்த்து சிரித்த விட்டு வரிசையாக இருந்த சேர்களில் உட்கார்ந்தனர்.

அங்கிருந்த மூத்த பத்திரிக்கையாளர் "சார்..என்ன விஷயமா எங்களை கூப்பிட்டிங்கனு தெரிஞ்சுக்கலாமா..என கேள்வி எழுப்பினார்.

சரி மா..எல்லாம் சுமுகமா முடிஞ்சிருச்சு...பிரஸ் மீட் இருக்கு..அத முடிச்சிட்டு அப்பறம் நீங்க போகலாம்.."
எல்லாம் முடிந்து வெளியே வந்தவர்கள் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை பார்த்து சிரித்து விட்டு வரிசையாக இருந்த சேர்களில் உட்கார்ந்தனர்.

அங்கிருந்த மூத்த பத்திரிக்கையாளர் "சார்..என்ன விஷயமா எங்களை கூப்பிட்டிங்கனு தெரிஞ்சுக்கலாமா.."என கேள்வி எழுப்பினார்.

தன்ராஜ் "சொல்றேன்..ராஜா...ரூபா நம்ம படத்துல நடிச்சிட்டு இருக்காங்கங்கறது உங்களுக்கு தெரியும்னு நெனக்கறேன்.."

"இப்ப அவங்களுக்கு ஹிந்தி படத்துல நடிக்க சான்ஸ் வந்திருக்காம்..உடனே நடிக்கணுமாம்.."

"அதால அவங்கம்மா எங்க கிட்ட என்ன பண்றதுனு ஆலோசனை கேட்டாங்க..நாங்களும் யோசிச்சு பார்த்தோம்.."

"நாங்க எல்லாருமா உக்காந்து பேசி ஒரே முடிவா ஒப்பந்தத்தை ரத்து பண்ணி அவங்களோட வளர்ச்சிக்கு உதவலாம்னு தீர்மானிச்சோம்..."

"நம்ம பச்சையம்மன் புரோடக்ஷன் எப்பவும் மத்தவங்க வாழ வைச்சு தானே பழக்கம்...அதான்.." என கோர்வையாக சொல்லி முடித்தார்.

தன்ராஜ் பேசுவது கண் கொட்டாமல் பார்த்த விலாசினி தெய்வமே..எப்டி இப்படி தெளிவா பேசறாரோ என ஆச்சரியம் அடைந்தார்

"ரூபா மேடம் நீங்க சொல்லுங்க.."

"எனக்கு ஹிந்தில நடிக்க சான்ஸ் வந்திருக்குனு சார் சொல்றது உண்மை தாங்க... படம் முழுசா நடிச்சி குடுத்திருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்.."

"எனக்கு முழு பேமண்ட் குடுத்து தான் நடிக்க புக் பண்ணாங்க..

இப்ப படம் பாதில நிக்கறது ரொம்ப வருத்தமா இருக்கு.."

"என் கேரக்டருக்கு அடுத்து அவங்க ஆளை தேடி அவங்க சூட் ஆகணும்..அவங்க நல்லபடியா நடிச்சு குடுக்கணும்.."

"அவங்களுக்கும் சம்பளம் குடுக்கணும்..எங்களுக்கும் தயாரிப்பாளரோட கஷ்டம் புரியும் சார்.."

"அதால எங்கம்மா என் கிட்ட வீட்டுலேந்து கிளம்பும் போது வாங்கின சம்பளத்தில பாதிய திருப்பி குடுத்திடணும்..அதான் நியாயம்னு சொல்லி தான் அழைச்சிட்டு வந்தாங்க..அவங்க சொல் படி நான் சம்பளத்துல பாதிய திருப்பி குடுத்திடறேன்.." என சொல்லி தன் ஹேன்ட்பாக்கில் இருந்து செக் எடுத்து தன்ராஜிடம் குடுத்து "வாங்கிக்கங்க சார்..சந்தோஷமா நீங்களும் மேடமும் என்னை வாழ்த்துங்க சார்.." என அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டாள்.

நடந்த சம்பவத்தால் அதிர்ந்து பார்த்து கொண்டு இருந்த விலாசினியை பார்த்த தன்ராஜ் "பரவால்ல..இந்த பொண்ணு தெளிவா இருக்கு.."

"ரொம்ப அமைதியா இருக்கு..அம்மா சொல்படி ஆடுதுனு நெனச்சோமே...அவ கையில பணம் போனா போனது தான்...திரும்ப வராதுனு சொன்னாங்க..
பரவால்லையே..இந்த பொண்ணு நியாயமா நடந்துக்குதே.."

"நடக்கறத பாத்தா இந்த பொண்ணு விலாசினி பிடில இல்ல..விலாசினி தான் இந்த பொண்ணு பிடில இருக்கு.."

"ம்ம்ம்...சும்மா சொல்ல கூடாது..என் நண்பன் பொண்ணாச்சே..
அவனோட நல்ல எண்ணம் எல்லாம் இந்த பொண்ணுக்கு அப்படியே வந்திருக்கே என மனதுக்குள் சொல்லி பூரித்து கொண்டார்.

"பிரபு சார் அடுத்து உங்க கிட்ட ஒரு கேள்வி...ஹீரோயின் யாருனு ஃபைனலைஸ் பண்ணிட்டீங்களா...கதை மாற்றம் ஏதாவது இருக்கா?"

"பாத்திட்டு இருக்கோம்...இந்த வாரத்துக்குள்ள ஃபைனலைஸ் பண்ணிடுவோம்...அடுத்த வாரம் முதல் ஷூட்டிங் ஆரம்பிச்சிடும்..."

"உங்களுக்கு எல்லார்க்கும் தெரியும்...தன்ராஜ் சார் படத்தோட பேமண்ட் குடுக்கும் போதே ரிலீஸ் டேட் கூடவே அனவுன்ஸ் பண்ணிடுவார்..ரூபா மேடம் தனி ஷாட்ஸ் எல்லாம் முடிச்சாச்சே... காம்பினேஷன் ஷாட்ஸ் மட்டும் தான் பாக்கி இருக்கு...

"டைம் ரொம்ப கம்மியா இருக்கறதால நாங்க டே, நைட் ஒர்க் பண்ற மாறி இருக்கும்..அடுத்து எங்களுக்கு ஹீரோயின் ஸ்கீரீன் இருக்கு..கதை மாற்றம் பத்தி நீங்க படத்துல பாத்தா தெரியும்."

"சோ உங்க கிட்ட பேச டைம் கிடைக்குமானே தெரியல..அந்த அளவுக்கு நாங்க ரொம்ப பிஸியா இருப்போம்.."என சொல்லி அமைதியானார்.

தன்ராஜீம் தொடர்ந்து "டைரக்டர் சொன்ன மாறி ஹீரோயின் தேடறதுல நாங்க பிஸியா இருப்போம்..அதனால படம் முடிஞ்ச பிறகு ப்ரோமோல உங்களை எல்லாம் சந்திக்கிறேன்..." என சொல்லி கை கூப்பியவர்...

ராஜா என சீனியர் பத்திரிக்கையாளரை அழைத்து உங்க எல்லாருக்கும் நம்ம வீட்டுல மதிய சாப்பாடு ஏற்பாடு ஆகி இருக்கு..எல்லாரும் சாப்பிட்டு தான் போகணும்..

"வயசாகிட்டதால உடம்பு ஒத்துழைக்கல. நான் போய் ஓய்வெடுக்க போறேன்..எல்லாரும் சாப்பிட்டு போங்க.." என சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.
மகளை தனியாக அழைத்து சென்ற விலாசினி மெல்லிய குரலில் கோபமாக "யாரை கேட்டு பணத்தை திருப்பி தரேன்னு சொன்னே...என்னை கேட்க வேண்டாமா..."

"யாரை கேட்கணும்...மா..நடிக்கறது நான்... உன்னை பல விஷயங்களுக்கு நான் எதுவுமே கேக்கறதே இல்லயே..நீ சொல்றபடி தானே நடந்துக்கறேன்..."

"இங்க நீ பேசி இருந்தா எல்லாருக்கும் அசிங்கமா போயிருக்கும்...நல்ல வேளை நீ வாயை மூடிட்டு இருந்த..."
"எல்லா சமயங்களும் பணத்தை மட்டும் பாக்காம அதையும் தாண்டி நிறைய விஷயங்களை பாக்கணும் மா.."

"அவங்க நியாயமா இருக்க மாறி தான் நாமளும் நியாயமா தான் இருக்கணும் மா...இத இதோட விடு" என சொல்லி அம்மாவிடமிருந்து சற்று நகர்ந்து நின்றாள்.
அனைத்தையும் கேட்ட விலாசினி இவ போக்கு சரியில்லையே... விசாரிக்கணும் என மனதிற்குள் குறித்து கொண்டார். (தொடரும்)
 
Last edited:

Author: Subha Balaji
Article Title: நினைவெல்லாம் நீயே 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
84
இப்ப தான் பாத்தேன்...பாதி தான் வந்திருக்கு....மீதியையும் இப்ப சேர்த்திருக்கேன் மா...படித்து பாருங்கள் கருத்து சொல்லுங்க
 
Top Bottom