காலங்கள் மாறினாலும்…
உலகின் மிகப் பழமையான மனித உரிமைப் பிரச்சனை எது?
எங்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர வரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனப்பான்மையுடன் வருவார்கள். நடக்கவே முடியாமல் வீல்சேரில் வருபவர்கள், சாதாரணமாக பரிசோதனைக்கு வந்த இடத்தில், உள்நோயாளியாகச் சேரவேண்டும் என்று அறிந்து சேரலாமா வேண்டாமா என்று குழப்பத்துடனும் பதற்றத்துடனும் இருப்பவர்கள், ஒன்றுமில்லாத பிரச்சனைக்கு 'பெட்டில் சேர்ந்தே தீருவேன்' என்று கூறுபவர்கள். இப்படிப் பலவகை.
உடனடியாக எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் நினைத்த நேரத்தில் வந்து கொண்டும், நினைத்த நேரம் டிஸ்சார்ஜ் ஆகிப் போய்க் கொண்டும் இருப்பவர்கள் ஒரு வித்தியாசமான வகை. இந்த கடைசி வகையைச் சேர்ந்தவர்கள் வெளிநோயாளிகள் பிரிவில் கூட்டம் குறையும் வரை எங்காவது ஓரமாகக் காத்திருப்பார்கள் கடைசியாக மருத்துவரிடம் வந்து 'அட்மிஷன்!' என்பார்கள். புது மருத்துவர் என்றால் மறைவாக வைத்திருக்கும் தங்களது கையையோ காலையோ காட்டுவார்கள். மருத்துவரும் புரிந்துகொண்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் உள்நோயாளியாக சேர்ப்பதற்கு சீட்டு எழுதிக் கொடுத்துவிடுவார். என்ன இது? வித்தியாசமாக இருக்கிறதே என்று கேட்கிறீர்களா? தொழுநோயாளிகள் தான் இப்படிக் கடைசி நபராக யார் கவனத்தையும் கவராமல் வந்து அட்மிஷன் கேட்பவர்.
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அரசு மருத்துவமனைகளில் மட்டும் தொழுநோயாளிகளுக்கான சிறப்பு வார்டு இருக்கிறது. அவசர சிகிச்சைக்காக வந்தவர்கள் ஓரிருவர் இருந்தாலும் பெரும்பாலும் அத்தகைய வார்டுகள் முதியோர் இல்லங்கள் போல் தங்குமிடங்களாக செயல்படுவது தான் அதிகம்.
உலகெங்கும் எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் தொழுநோயை உருவாக்கும் மைக்கோபாக்டீரியம் லெப்ரே. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் அறிந்த ஒன்று தான் இந்த நோய். அகழ்வாராய்ச்சி செய்து எடுக்கப்பட்ட மனித எலும்புகளில் இந்த ககருக்கான டிஎன்ஏ-க்கள் பிரித்தறியப் பட்டிருக்கின்றன. பைபிள், மனுசாஸ்திரம் போன்ற நூல்களிலும் இதைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஆர்மடில்லோக்கள், சில குரங்கு வகைகள், அணில்கள் இவற்றிலும் தொழுநோய் மைக்கோபாக்டீரியம் லெப்ரே கிருமியால் ஏற்படுவதும் பண்டைக் காலத்திலிருந்தே அறியப்பட்டுள்ளது.
1750 முதல் 1850 வரை ஏற்பட்ட தொழிற்புரட்சி (Industrial revolution) மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் உலகெங்கும் பரவி ஆக்கிரமித்ததால் நிகழ்ந்த குடியேற்றம் (Colonisation) இவற்றால் தொழுநோய் கண்டம் விட்டு கண்டம் எளிதில் பரவியதாகக் கூறுகின்றனர். தொட்டால் ஒட்டிக் கொள்ளும், பாவம் செய்தவனுக்குத்தான் தொழுநோய் வரும், ஒரு மனிதனின் பாலியல் ஒழுக்கம் சார்ந்தது இது போன்ற தவறான கற்பிதங்கள் ஆதிகாலம் முதலே இருந்து வந்திருக்கின்றன. இதனால் தொழுநோய் பாதித்தவர்களை வீட்டிலிருந்தும், ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. சட்டங்கள் தடுத்தாலும் நடைமுறையில் இன்றும் அதே நிலை தொடர்கிறது.
நவீன மருத்துவத்தின் கூற்றுப்படி தொழுநோய் தொட்டால் ஒட்டிக் கொள்வதில்லை. தொழுநோய் பாதித்த நபருடன் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் பழகும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மூக்கின் வழியாகவே கிருமி உள் நுழைவது (aerosol) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியாக உள்ளே நுழையும் கிருமி இனப்பெருக்கம் செய்து முதலில் சிறு நரம்புகளை பாதிக்கிறது. தோல்களில் இருக்கும் சிறு நரம்புகளில் பெருகி அந்த நரம்பின் நுண்ணிய கால்களை செயலிழக்கச் செய்வதால், குறிப்பிட்ட இடங்களில் வியர்வை குறைவது, உணர்ச்சியற்று மரத்துப்போவது போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. தோலின் வண்ணமும் மாறுகிறது.
தோலில் வண்ணம் மாறி ஒரு தேமல்/ திட்டு போன்ற தோற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். அவர் மிக எளிதாக குச்சி அல்லது பேனா முனையால் லேசாகத் தொட்டுப் பார்த்து தொழுநோயா என்பதை 90 சதம் உறுதியாகக் கண்டுபிடித்து விடுவார். உறுதிப்படுத்துவதற்காகத் தோலில் இருந்து எடுக்கப்படும் திசு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படும், அதன்பின் கூட்டு மருந்து சிகிச்சை அளித்தால் முழுவதுமாக குணப்படுத்தி விடலாம். தோலின் நிறமும் பழையபடி மாறிவிடும். நரம்புகளும் பாதிக்கப்படாது.
வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாகப் பெருகும் பூஞ்சைக்கிருமியால் வரும் தேமலும் வேறு சில பிரச்சனைகளும் சில சமயம் தொழுநோயை ஒத்திருக்கும். தோலில் எந்த திட்டு தோன்றினாலும் அது தொழுநோயாக இருக்குமோ என்ற பயம் பலருக்கு எழுகிறது. அதுவே சுய மருத்துவம், தாமதமான பரிசோதனை இரண்டிற்கும் காரணமாக அமைகிறது.
தொழு நோயாக இருந்தாலும் சரி, வேறு தோல் பிரச்சனையாக இருந்தாலும் சரி முளையிலேயே சரி செய்ய முடியாததற்கு இந்த பயமும் ஒரு முக்கிய காரணம். லேசான பாதிப்புக்கு ஆறு மாதங்கள், தீவிர பாதிப்புக்கு ஒரு வருடம் என்ற அளவில் கூட்டு மருந்து சிகிச்சை மூலமும் முழுவதுமாக குணப்படுத்திவிட முடியும்.
அரைகுறை சிகிச்சை எடுத்த நபர்கள் மற்றும் சிகிச்சையே எடுக்காத நபர்களுக்கு தோலின் உணர்ச்சியற்ற நிலை அதிகரிக்கும். இதனால் கல், முள் குத்தி புண்கள் வரலாம். வலி தெரியாததால் அந்தப் புண் இருப்பது தெரியவே தாமதமாகிவிடும். அத்தகைய புண்களை (trophic ulcer) குணப்படுத்துவதும் கடினம்.
நாட்பட்ட தொழுநோயில் கைகால் விரல்களின் எலும்புகள் அரித்து சுருங்கி விடுகின்றன. கைவிரல்கள் மட்டுமில்லாது மூக்கு, காது மடல் போன்ற பகுதிகளும் அளவில் மாறுபடுகின்றன. இமை முடிகள் உதிர்கின்றன. கண் இமைகளை மூடித் திறக்க வைக்கும் நரம்புகள் செயலிழப்பதால் கண்கள் சரியாக பாதுகாக்கப்படாமல் கருவிழியில் புண் வந்துவிடக்கூடும். இதனால் பார்வை பறிபோகும் அபாயமும் உள்ளது.
உலகில் சில நோய்கள் இருக்கின்றன. அந்த நோயால் மரணம் வராது, ஆனால் மரணம் வரை அந்த நோய் ஒருவர் கூடவே இருக்கும். You don't die of the disease, you die with the disease என்பார்கள். அத்தகைய நோய்களில் தொழுநோயும் ஒன்று. மரணத்தை ஏற்படுத்தாது, ஆனால் இறப்பு வரை பல பிரச்சனைகளை உருவாக்கும்.
என் மருத்துவப் பணியின் ஆரம்ப காலத்தில் தொழு நோய் பாதித்து, முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு தாய் வந்தார். சிகிச்சையின் ஒரு பின்விளைவாக சிறு ஒவ்வாமை அவருக்கு ஏற்பட்டிருந்தது. அதற்கான சிகிச்சைக்கு வந்திருந்த போது உடனிருந்த அவரது மகனை தற்செயலாக கவனித்தேன். அவனுக்கும் தொழுநோயின் அறிகுறி தெரிந்தது. அவனுக்கு ஒரு தம்பி இருந்தான். இருவரையும் விரிவாகப் பரிசோதிக்க, இருவருக்கும் தொழுநோய் உறுதியானது. அவர்களது தாய்க்கு தொழுநோய் முற்றிய நிலை, ஆனால் சிறுவர்களுக்கு ஆரம்ப கட்டம் தான். உடனடியாக சிகிச்சை அளித்தால் சரிசெய்துவிடலாம். ஆனால் தொழுநோய் என்று தெரிந்தவுடன் இரண்டு சிறுவர்களையும் அன்று இரவே திருப்பூருக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டார் அந்தத் தாய். செல்போன், தொலைபேசி வசதிகள் இன்றைய அளவுக்கு இல்லாத காலகட்டம் அது. வெகு சிரமப்பட்டே அந்தச் சிறுவர்களை அதன்பின் கண்டுபிடிக்க முடிந்தது. நல்லவேளையாக பெரிய நரம்பு பாதிப்பு வருவதற்கு முன்பாக சிகிச்சையைத் துவங்கி விட்டோம். அதுவே பெரிய சாதனை போல் எங்களுக்குத் தோன்றியது. தொழுநோயின் பக்கவிளைவுகளை அறிந்த தாயே இப்படி சிகிச்சையை தன் மகன்களுக்கு மறுக்கிறார் என்றால் அதற்கு ஒரே காரணம் இந்த சமூகம் பார்க்கும் பார்வைதான்.
இன்றும் பல நாடுகளில் தொழுநோயாளிகளை ஒதுக்கி வைப்பதற்காகக் கட்டப்பட்ட இடங்கள் வரலாற்றின் சாட்சியாக நின்று கொண்டிருக்கின்றன. தொழுநோய் பாதித்த நபர்களுக்கு கருணையுடன் சிகிச்சை அளித்தவர்களை புனிதர் என்ற நிலையில் இன்றும் சமூகம் கொண்டாடுகிறது. ஆனால் அந்த புனிதருக்கே தொழுநோய் தொற்றிவிட்டால் அவரையும் ஏளனமாகவே பார்க்கிறது. நன்கு படித்த நபர்களும் கூட தொழுநோய் பாதித்ததால் வேலை வாய்ப்பின்றி பிச்சை எடுத்த கதைகளைக் கேட்டிருக்கிறோம்.
நான் பயிற்சி மருத்துவம் பணிபுரிந்த காலத்தில் ஒரு நாள் தொழுநோய் வார்டுக்குச் மாலை நேர சிகிச்சையை அளிப்பதற்காகச் சென்றிருந்தேன். கணக்குப்படி இருபது நோயாளிகள் இருக்க வேண்டும். இரண்டு பேரோ மூன்று பேரோ தான் இருந்தார்கள். மற்றவர்களை எங்கே என்று நான் தேடிய போது, "இவ்வளவு சீக்கிரமா ஊசி போட வந்துட்டீங்களே டாக்டர்? போயிட்டு எட்டு மணிக்கு வாங்க.. அப்போதான் பிசினஸ் முடிச்சு வருவாங்க" என்றார் செவிலியர். எனக்கு அவர் கூறியது சுத்தமாகப் புரியவில்லை. விடுதி அறைக்குச் சென்று விட்டு மீண்டும் எட்டு மணிக்குப் போனேன். எல்லா நோயாளிகளும் இருந்தார்கள். அப்போது இருந்த வேறொரு செவிலியரிடம், "ஏதோ பிசினஸ்னு சொன்னாங்களே? என்ன அது?" என்று விசாரித்தேன். அப்போதுதான் தெரிந்தது, வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான நோயாளிகள் வெளியில் போய் பிச்சை எடுத்து விட்டு எட்டு மணிக்குத் தான் திரும்புவார்கள் என்பது. பலரின் கண்ணீர் கதைகளைக் கேட்டுத் தூக்கம் தொலைத்த பல இரவுகளில் ஒன்றாக அன்றைய இரவும் அமைந்துவிட்டது.
இப்போது முதலில் கேட்ட கேள்விக்கு வருவோம். உலகின் பழமையான மனித உரிமைப் பிரச்சனை தொழுநோயாளிகளை ஒதுக்கி வைத்தது தான். அந்த பிரச்சினைக்கு இன்று வரையிலும் தீர்வு காணப்படவில்லை என்பதே உண்மை.
*அரசின் திட்டங்கள்
*தொண்டு நிறுவனங்களின் பணி
*எதிர்காலம்
நல்ல காலமே!
... அடுத்த இதழில்..
உலகின் மிகப் பழமையான மனித உரிமைப் பிரச்சனை எது?
எங்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர வரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனப்பான்மையுடன் வருவார்கள். நடக்கவே முடியாமல் வீல்சேரில் வருபவர்கள், சாதாரணமாக பரிசோதனைக்கு வந்த இடத்தில், உள்நோயாளியாகச் சேரவேண்டும் என்று அறிந்து சேரலாமா வேண்டாமா என்று குழப்பத்துடனும் பதற்றத்துடனும் இருப்பவர்கள், ஒன்றுமில்லாத பிரச்சனைக்கு 'பெட்டில் சேர்ந்தே தீருவேன்' என்று கூறுபவர்கள். இப்படிப் பலவகை.
உடனடியாக எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் நினைத்த நேரத்தில் வந்து கொண்டும், நினைத்த நேரம் டிஸ்சார்ஜ் ஆகிப் போய்க் கொண்டும் இருப்பவர்கள் ஒரு வித்தியாசமான வகை. இந்த கடைசி வகையைச் சேர்ந்தவர்கள் வெளிநோயாளிகள் பிரிவில் கூட்டம் குறையும் வரை எங்காவது ஓரமாகக் காத்திருப்பார்கள் கடைசியாக மருத்துவரிடம் வந்து 'அட்மிஷன்!' என்பார்கள். புது மருத்துவர் என்றால் மறைவாக வைத்திருக்கும் தங்களது கையையோ காலையோ காட்டுவார்கள். மருத்துவரும் புரிந்துகொண்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் உள்நோயாளியாக சேர்ப்பதற்கு சீட்டு எழுதிக் கொடுத்துவிடுவார். என்ன இது? வித்தியாசமாக இருக்கிறதே என்று கேட்கிறீர்களா? தொழுநோயாளிகள் தான் இப்படிக் கடைசி நபராக யார் கவனத்தையும் கவராமல் வந்து அட்மிஷன் கேட்பவர்.
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அரசு மருத்துவமனைகளில் மட்டும் தொழுநோயாளிகளுக்கான சிறப்பு வார்டு இருக்கிறது. அவசர சிகிச்சைக்காக வந்தவர்கள் ஓரிருவர் இருந்தாலும் பெரும்பாலும் அத்தகைய வார்டுகள் முதியோர் இல்லங்கள் போல் தங்குமிடங்களாக செயல்படுவது தான் அதிகம்.
உலகெங்கும் எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் தொழுநோயை உருவாக்கும் மைக்கோபாக்டீரியம் லெப்ரே. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் அறிந்த ஒன்று தான் இந்த நோய். அகழ்வாராய்ச்சி செய்து எடுக்கப்பட்ட மனித எலும்புகளில் இந்த ககருக்கான டிஎன்ஏ-க்கள் பிரித்தறியப் பட்டிருக்கின்றன. பைபிள், மனுசாஸ்திரம் போன்ற நூல்களிலும் இதைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஆர்மடில்லோக்கள், சில குரங்கு வகைகள், அணில்கள் இவற்றிலும் தொழுநோய் மைக்கோபாக்டீரியம் லெப்ரே கிருமியால் ஏற்படுவதும் பண்டைக் காலத்திலிருந்தே அறியப்பட்டுள்ளது.
1750 முதல் 1850 வரை ஏற்பட்ட தொழிற்புரட்சி (Industrial revolution) மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் உலகெங்கும் பரவி ஆக்கிரமித்ததால் நிகழ்ந்த குடியேற்றம் (Colonisation) இவற்றால் தொழுநோய் கண்டம் விட்டு கண்டம் எளிதில் பரவியதாகக் கூறுகின்றனர். தொட்டால் ஒட்டிக் கொள்ளும், பாவம் செய்தவனுக்குத்தான் தொழுநோய் வரும், ஒரு மனிதனின் பாலியல் ஒழுக்கம் சார்ந்தது இது போன்ற தவறான கற்பிதங்கள் ஆதிகாலம் முதலே இருந்து வந்திருக்கின்றன. இதனால் தொழுநோய் பாதித்தவர்களை வீட்டிலிருந்தும், ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. சட்டங்கள் தடுத்தாலும் நடைமுறையில் இன்றும் அதே நிலை தொடர்கிறது.
நவீன மருத்துவத்தின் கூற்றுப்படி தொழுநோய் தொட்டால் ஒட்டிக் கொள்வதில்லை. தொழுநோய் பாதித்த நபருடன் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் பழகும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மூக்கின் வழியாகவே கிருமி உள் நுழைவது (aerosol) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியாக உள்ளே நுழையும் கிருமி இனப்பெருக்கம் செய்து முதலில் சிறு நரம்புகளை பாதிக்கிறது. தோல்களில் இருக்கும் சிறு நரம்புகளில் பெருகி அந்த நரம்பின் நுண்ணிய கால்களை செயலிழக்கச் செய்வதால், குறிப்பிட்ட இடங்களில் வியர்வை குறைவது, உணர்ச்சியற்று மரத்துப்போவது போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. தோலின் வண்ணமும் மாறுகிறது.
தோலில் வண்ணம் மாறி ஒரு தேமல்/ திட்டு போன்ற தோற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். அவர் மிக எளிதாக குச்சி அல்லது பேனா முனையால் லேசாகத் தொட்டுப் பார்த்து தொழுநோயா என்பதை 90 சதம் உறுதியாகக் கண்டுபிடித்து விடுவார். உறுதிப்படுத்துவதற்காகத் தோலில் இருந்து எடுக்கப்படும் திசு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படும், அதன்பின் கூட்டு மருந்து சிகிச்சை அளித்தால் முழுவதுமாக குணப்படுத்தி விடலாம். தோலின் நிறமும் பழையபடி மாறிவிடும். நரம்புகளும் பாதிக்கப்படாது.
வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாகப் பெருகும் பூஞ்சைக்கிருமியால் வரும் தேமலும் வேறு சில பிரச்சனைகளும் சில சமயம் தொழுநோயை ஒத்திருக்கும். தோலில் எந்த திட்டு தோன்றினாலும் அது தொழுநோயாக இருக்குமோ என்ற பயம் பலருக்கு எழுகிறது. அதுவே சுய மருத்துவம், தாமதமான பரிசோதனை இரண்டிற்கும் காரணமாக அமைகிறது.
தொழு நோயாக இருந்தாலும் சரி, வேறு தோல் பிரச்சனையாக இருந்தாலும் சரி முளையிலேயே சரி செய்ய முடியாததற்கு இந்த பயமும் ஒரு முக்கிய காரணம். லேசான பாதிப்புக்கு ஆறு மாதங்கள், தீவிர பாதிப்புக்கு ஒரு வருடம் என்ற அளவில் கூட்டு மருந்து சிகிச்சை மூலமும் முழுவதுமாக குணப்படுத்திவிட முடியும்.
அரைகுறை சிகிச்சை எடுத்த நபர்கள் மற்றும் சிகிச்சையே எடுக்காத நபர்களுக்கு தோலின் உணர்ச்சியற்ற நிலை அதிகரிக்கும். இதனால் கல், முள் குத்தி புண்கள் வரலாம். வலி தெரியாததால் அந்தப் புண் இருப்பது தெரியவே தாமதமாகிவிடும். அத்தகைய புண்களை (trophic ulcer) குணப்படுத்துவதும் கடினம்.
நாட்பட்ட தொழுநோயில் கைகால் விரல்களின் எலும்புகள் அரித்து சுருங்கி விடுகின்றன. கைவிரல்கள் மட்டுமில்லாது மூக்கு, காது மடல் போன்ற பகுதிகளும் அளவில் மாறுபடுகின்றன. இமை முடிகள் உதிர்கின்றன. கண் இமைகளை மூடித் திறக்க வைக்கும் நரம்புகள் செயலிழப்பதால் கண்கள் சரியாக பாதுகாக்கப்படாமல் கருவிழியில் புண் வந்துவிடக்கூடும். இதனால் பார்வை பறிபோகும் அபாயமும் உள்ளது.
உலகில் சில நோய்கள் இருக்கின்றன. அந்த நோயால் மரணம் வராது, ஆனால் மரணம் வரை அந்த நோய் ஒருவர் கூடவே இருக்கும். You don't die of the disease, you die with the disease என்பார்கள். அத்தகைய நோய்களில் தொழுநோயும் ஒன்று. மரணத்தை ஏற்படுத்தாது, ஆனால் இறப்பு வரை பல பிரச்சனைகளை உருவாக்கும்.
என் மருத்துவப் பணியின் ஆரம்ப காலத்தில் தொழு நோய் பாதித்து, முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு தாய் வந்தார். சிகிச்சையின் ஒரு பின்விளைவாக சிறு ஒவ்வாமை அவருக்கு ஏற்பட்டிருந்தது. அதற்கான சிகிச்சைக்கு வந்திருந்த போது உடனிருந்த அவரது மகனை தற்செயலாக கவனித்தேன். அவனுக்கும் தொழுநோயின் அறிகுறி தெரிந்தது. அவனுக்கு ஒரு தம்பி இருந்தான். இருவரையும் விரிவாகப் பரிசோதிக்க, இருவருக்கும் தொழுநோய் உறுதியானது. அவர்களது தாய்க்கு தொழுநோய் முற்றிய நிலை, ஆனால் சிறுவர்களுக்கு ஆரம்ப கட்டம் தான். உடனடியாக சிகிச்சை அளித்தால் சரிசெய்துவிடலாம். ஆனால் தொழுநோய் என்று தெரிந்தவுடன் இரண்டு சிறுவர்களையும் அன்று இரவே திருப்பூருக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டார் அந்தத் தாய். செல்போன், தொலைபேசி வசதிகள் இன்றைய அளவுக்கு இல்லாத காலகட்டம் அது. வெகு சிரமப்பட்டே அந்தச் சிறுவர்களை அதன்பின் கண்டுபிடிக்க முடிந்தது. நல்லவேளையாக பெரிய நரம்பு பாதிப்பு வருவதற்கு முன்பாக சிகிச்சையைத் துவங்கி விட்டோம். அதுவே பெரிய சாதனை போல் எங்களுக்குத் தோன்றியது. தொழுநோயின் பக்கவிளைவுகளை அறிந்த தாயே இப்படி சிகிச்சையை தன் மகன்களுக்கு மறுக்கிறார் என்றால் அதற்கு ஒரே காரணம் இந்த சமூகம் பார்க்கும் பார்வைதான்.
இன்றும் பல நாடுகளில் தொழுநோயாளிகளை ஒதுக்கி வைப்பதற்காகக் கட்டப்பட்ட இடங்கள் வரலாற்றின் சாட்சியாக நின்று கொண்டிருக்கின்றன. தொழுநோய் பாதித்த நபர்களுக்கு கருணையுடன் சிகிச்சை அளித்தவர்களை புனிதர் என்ற நிலையில் இன்றும் சமூகம் கொண்டாடுகிறது. ஆனால் அந்த புனிதருக்கே தொழுநோய் தொற்றிவிட்டால் அவரையும் ஏளனமாகவே பார்க்கிறது. நன்கு படித்த நபர்களும் கூட தொழுநோய் பாதித்ததால் வேலை வாய்ப்பின்றி பிச்சை எடுத்த கதைகளைக் கேட்டிருக்கிறோம்.
நான் பயிற்சி மருத்துவம் பணிபுரிந்த காலத்தில் ஒரு நாள் தொழுநோய் வார்டுக்குச் மாலை நேர சிகிச்சையை அளிப்பதற்காகச் சென்றிருந்தேன். கணக்குப்படி இருபது நோயாளிகள் இருக்க வேண்டும். இரண்டு பேரோ மூன்று பேரோ தான் இருந்தார்கள். மற்றவர்களை எங்கே என்று நான் தேடிய போது, "இவ்வளவு சீக்கிரமா ஊசி போட வந்துட்டீங்களே டாக்டர்? போயிட்டு எட்டு மணிக்கு வாங்க.. அப்போதான் பிசினஸ் முடிச்சு வருவாங்க" என்றார் செவிலியர். எனக்கு அவர் கூறியது சுத்தமாகப் புரியவில்லை. விடுதி அறைக்குச் சென்று விட்டு மீண்டும் எட்டு மணிக்குப் போனேன். எல்லா நோயாளிகளும் இருந்தார்கள். அப்போது இருந்த வேறொரு செவிலியரிடம், "ஏதோ பிசினஸ்னு சொன்னாங்களே? என்ன அது?" என்று விசாரித்தேன். அப்போதுதான் தெரிந்தது, வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான நோயாளிகள் வெளியில் போய் பிச்சை எடுத்து விட்டு எட்டு மணிக்குத் தான் திரும்புவார்கள் என்பது. பலரின் கண்ணீர் கதைகளைக் கேட்டுத் தூக்கம் தொலைத்த பல இரவுகளில் ஒன்றாக அன்றைய இரவும் அமைந்துவிட்டது.
இப்போது முதலில் கேட்ட கேள்விக்கு வருவோம். உலகின் பழமையான மனித உரிமைப் பிரச்சனை தொழுநோயாளிகளை ஒதுக்கி வைத்தது தான். அந்த பிரச்சினைக்கு இன்று வரையிலும் தீர்வு காணப்படவில்லை என்பதே உண்மை.
*அரசின் திட்டங்கள்
*தொண்டு நிறுவனங்களின் பணி
*எதிர்காலம்
நல்ல காலமே!
... அடுத்த இதழில்..
Author: SudhaSri
Article Title: காலங்கள் மாறினாலும்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: காலங்கள் மாறினாலும்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.