சங்கடஹர சதுர்த்தி
தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. அந்த நாளில் விநாயகரை வழிபட்டால் வினைகள் நீங்கும். அதிலும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி என்று சிறப்பித்துச் சொல்லப்படும்.
எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வணங்கித் தொடங்குவது மரபு. தனக்கு உவமையில்லாத தனிப்பெரும் தலைவனாக விளங்குபவனே விநாயகர். தேவர்களும் மூவர்களும் கணநாதனை வணங்கியே செயல்களைத் தொடங்குகின்றனர் என்கின்றன ஞான நூல்கள்.
அப்படிப்பட்ட கணபதியை சதுர்த்தி நாளில் வழிபடுவது நல்லது. அதிலும் தேய்பிறைச் சதுர்த்தி என்றால் மிகவும் விசேஷம். தேய்பிறைச் சதுர்த்தியில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் காரியத் தடைகள் விலகும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இப்படிப் பல சிறப்புகள் தேய்பிறைச் சதுர்த்தியில் செய்யும் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு.
இந்த நாளில், மாலையில் விநாயகருக்கு, கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறும்.
அப்போது, பால், தயிர், திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் முதலான 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த நாளில், கணபதிபெருமானுக்கு, வெள்ளெருக்கம்பூ மாலையும் அருகம்புல் மாலையும் சார்த்தி வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும்.
சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு கொழுக்கட்டை அல்லது சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், வீட்டில் மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும். கடன் தொல்லையை நிவர்த்தி செய்து அருள்வார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
சங்கடஹர சதுர்த்தி நாளில் மறக்காமல், மாலையில் கோயிலுக்குச் சென்று விநாயக வழிபாட்டைச் செய்யுங்கள். பிள்ளையாரப்பனை வணங்குங்கள். வணங்கிப் பிரார்த்தனை செய்யுங்கள். சங்கட ஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு மற்றும் விரதம் இருப்பதால் நமது சங்கடங்கள் தீரும்.
தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. அந்த நாளில் விநாயகரை வழிபட்டால் வினைகள் நீங்கும். அதிலும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி என்று சிறப்பித்துச் சொல்லப்படும்.
எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வணங்கித் தொடங்குவது மரபு. தனக்கு உவமையில்லாத தனிப்பெரும் தலைவனாக விளங்குபவனே விநாயகர். தேவர்களும் மூவர்களும் கணநாதனை வணங்கியே செயல்களைத் தொடங்குகின்றனர் என்கின்றன ஞான நூல்கள்.
அப்படிப்பட்ட கணபதியை சதுர்த்தி நாளில் வழிபடுவது நல்லது. அதிலும் தேய்பிறைச் சதுர்த்தி என்றால் மிகவும் விசேஷம். தேய்பிறைச் சதுர்த்தியில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் காரியத் தடைகள் விலகும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இப்படிப் பல சிறப்புகள் தேய்பிறைச் சதுர்த்தியில் செய்யும் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு.
இந்த நாளில், மாலையில் விநாயகருக்கு, கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறும்.
அப்போது, பால், தயிர், திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் முதலான 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த நாளில், கணபதிபெருமானுக்கு, வெள்ளெருக்கம்பூ மாலையும் அருகம்புல் மாலையும் சார்த்தி வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும்.
சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு கொழுக்கட்டை அல்லது சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், வீட்டில் மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும். கடன் தொல்லையை நிவர்த்தி செய்து அருள்வார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
சங்கடஹர சதுர்த்தி நாளில் மறக்காமல், மாலையில் கோயிலுக்குச் சென்று விநாயக வழிபாட்டைச் செய்யுங்கள். பிள்ளையாரப்பனை வணங்குங்கள். வணங்கிப் பிரார்த்தனை செய்யுங்கள். சங்கட ஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு மற்றும் விரதம் இருப்பதால் நமது சங்கடங்கள் தீரும்.
Author: SudhaSri
Article Title: சங்கடஹர சதுர்த்தி
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: சங்கடஹர சதுர்த்தி
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.