• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பாவை - 12

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
பாவை - 12

"நம்மளால முடிஞ்ச அளவுக்கு எல்லாம் பண்ணலாம்டா.. அப்பறம் கடவுள் விட்ட வழி தான்.. வேறென்ன பண்ண முடியும்.?" என்ற அதிரனுக்கும் கவலையே.

"ஹேமா ஏன் இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க.? அவங்க அப்படித்தானு தெரிஞ்சும் அவங்ககிட்ட கத்தறதுல என்ன பலன்.?" என்று அவளைச் சமாதானப்படுத்த முயன்றாள் காவ்யா.

அழுகையுடன் அவளோ நானும் இத்தனை வருசம் பொறுமையா தான் இருந்தேன்.. ஆனா இவங்க திருந்தற மாதிரியே இல்ல.. இருபது வருசத்துக்கு முன்னாடி நடந்ததுக்கு இப்ப என்ன பண்ண முடியும்.? நடந்ததை மறந்து தான் ஆகணும்.. கடந்த காலத்துக்குப் போய் நடந்ததை மாத்தி விட்டுட்டா வர முடியும்.?

இவரு கல்யாணமானவருனு தெரிஞ்சும் என் அம்மா இவருகிட்ட எனத்தைப் பார்த்து மயங்கி தொலைஞ்சு இப்படி பண்ணி தொலைஞ்சாங்கனு எனக்கு தெரியல.. அவங்க பண்ணுன தப்புக்கு அவங்க சீக்கிரமே போய் சேர்ந்துட்டாங்க.. ஆனா நான் அனுபவிக்கறேன்.. என்னால அப்பாவை விட்டும் குடுக்க முடியல..சரி திட்டு வாங்குங்கனு விட்டுட்டு அமைதியா நிற்கவும் முடியல..

இத்தனை நாள் எனக்கு ஆதரவா யாருமில்லை.. இப்ப என் புருசன் இருக்கறானு தைரியத்துல தான் என்னால பேசவே முடியுது.. ஆனா அவரும் மாறன் அண்ணனை மீறி எதுவும் பண்ண மாட்டாங்கனு எனக்கு நல்லாவே தெரியும்" என்றாள் விரக்தியுடன்.

காயப்பட்ட மனது இன்னும் இன்னும் காயமாகியே போகிறது. அதற்கான மருந்தைக் காலம் தான் இவளுக்குத் தர வேண்டும். தந்தைக்கு பிறகு பிறந்த வீடு என்ற ஒன்றே இவளுக்கு இருக்குமா.? இருக்காதா.? என்பதே சந்தேகம் தான். இவளின் வாழ்வு இப்படித்தான் என்றிருக்கும் போது எப்படி மாற்றிட முடியும்.?

"ப்ச் அழுகாதீங்க ஹேமா.. அவங்க குணம் அப்படித்தானு தெரிஞ்சும் நம்ம வருத்தப்பட்டு என்னவாக போகுது.? ஒருத்தரோட பிறவிக்குணத்தை அவ்ளோ சீக்கிரம் மாத்த முடியாது.. நம்ம பக்கம் பக்கமா வசனம் பேசுனா உடனே இவரு திருந்தக்கூடிய ஆளா.? அதுக்கும் நம்மளைய தான் கத்துவாரு..

ஒருத்தரோட குணம் இதுதானு புரிஞ்சுட்டா ஒன்னு ஏத்துக்க பழகிக்கணும்.. இல்ல அவங்கள விட்டு விலகிரணும்.. உங்க உறவு விலகி போற உறவு கிடையாது.. என்ன தான் இவங்க உங்களைய பேசுனாலும் உங்க அண்ணன் இல்லைனு ஆகிடுமா.? அதே மாதிரி உங்களுக்கு தேவையானதை செய்யாம இவரும் விட்டுருவாரா.?

இத்தனை வருசம் உங்களுக்கு தேவையானதை பண்ணுனாரு.. அதே சமயம் இனி உங்க குழந்தைகளுக்குத் தாய்மாமனா அத்தனையும் சரியா செய்வாரு.. இதுவும் அவரோட குணம் தான்.. அடுத்தவங்ககிட்ட இருக்கற குறையைக் கண்டுக்காம இருக்க பழகிட்டா நமக்கு எதுவும் பெரிய பிரச்சனையாகவே தெரியாது..

முதல்ல அழுகறதை நிறுத்துங்க.. இப்ப உங்க அப்பாவைப் அப்படி பேசுனவரு தான் கொஞ்ச நேரத்துல அந்த மனுசனுக்கு இன்னும் சாப்பாடு போடாம இருக்கேனு என்னைய திட்டுவாரு.. நம்மகிட்டயும் பல குறைகள் இருக்கும் ஹேமா.. அது நமக்கு தெரியாது..

மத்தவங்க எப்படி நம்மளைய அட்ஜஸ்ட் பண்ணி போறாங்களோ அதே மாதிரி நம்மளும் அவங்களோட குறையை பெரிசா நினைக்காம அட்ஜஸ்ட் பண்ணி வாழ்றதுல தான் வாழ்க்கையே அடங்கி இருக்கு.." என்று அவளைத் தேற்றி ஒரு தெளிவையும் அளித்தாள்.

"இவரைத் தான் கல்யாணம் பண்ணுவேனு அடம்பிடிச்சு கல்யாணம் பண்ணுன உங்க மனதைரியத்தைப் பாராட்டியே ஆகணும்.. இவரை எப்படி உங்களுக்கு பிடிச்சுது.?" என்று விளையாட்டாக வினவினாள் ஹேமா.

சிரிப்புடன் காவ்யாவும் "தெரியலயே.. ஆனா பிடிச்சுருச்சு.. அதான் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்" என்றிட, ரொம்ப தைரியம் தான் அண்ணி என்றவளுக்கு இப்போது மனம் நிறைந்த புன்னகையே.

இனி அவளின் தந்தையைப் பற்றி கவலையில்லை. என்ன தான் அவரின் மேல் கோவமிருந்தாலும் நிச்சயம் அவரை தன் அண்ணன் விட்டு விட மாட்டான் என்பது மட்டும் காவ்யாவின் பேச்சில் உணர்ந்தாள். இவளால் வாய் வார்த்தைக்காக மட்டும் வேணுடுமானால் 'உங்கள என்னுடன் அழைத்துச் செல்கிறேன்' என்று இவளால் கூறிட முடியும்.

உண்மையில் அழைத்துச் சென்று வைத்துக் கொள்ள முடியுமா.? அப்படி மருமகனின் வீட்டில் வந்திருந்து இவர் பேச்சு வாங்குவதை விட மகனுடன் இருப்பதே நல்லது. அதிரன் நல்லவன் தான். ஆனால் அவனும் சராசரி ஆண்மகன் தானே.? அவனின் அன்னையின் பேச்சைக் கேட்பதிலும் தவறில்லையே..

பார்க்க யாருமில்லை என்றால் இவன் பார்க்கலாம்.. மகனிருக்கும் போது அவனின் அன்னை எப்படி விடுவார்.? அன்னை கூறுவது தவறாகவே இருந்தாலும் அவரை மீறி அவன் எப்படி எந்த செயலை செய்வான்.? பெற்ற அன்னையை விட்டு விட்டு மனைவியின் தந்தையை மட்டும் இவனால் பார்க்க இயலுமா.?

அப்படி ஓரிருவர்கள் இருக்கலாம்.. ஆனால் அனைவரும் அப்படியே இருப்பார்களா என்ன.? இது தான் நிதர்சனமும் உண்மையும் கூட. இதை நிச்சயம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

இவர்கள் எவ்வளவு முயன்றும் திருநீலகண்டன் எந்த தவறும் செய்யவில்லை என்றே தீர்ப்பு வர, எள்ளல் சிரிப்புடன் அவர் கிளம்பியும் விட்டார்.

பத்திரிகையாளர்கள் மாறனைச் சூழ்ந்துக் கொண்டு "நீங்க தப்பு செஞ்சவங்களுக்குத் தண்டனை வாங்கி தருவீங்கனு நினைச்சோம்.. ஆனா அப்படி எதுவும் நடக்கலயே.?" என்று கேட்க, "தண்டனையை நானா குடுக்க முடியும்.? அப்படி குடுக்கறதா இருந்தா எப்பவே நான் குடுத்துருப்பேன்.. என் வேலையை நான் சரியா செஞ்சுட்டேன்.. அதே மாதிரி நீங்களும் இனி உங்க வேலையைச் சரியா செஞ்சுருங்க" என்று அவர்கள் நடக்காதது எல்லாம் நடந்தது போல் எழுதுவதைச் சுட்டிக்காட்டி கூறினான்.

"சார் நாங்க எங்க வேலையைத் தான் செய்யறோம்.."

"நானும் அதைய தான் செய்ய சொல்றேன்.. என்னைய என்னம்மா பண்ண சொல்றீங்க.? என் வேலை முடிஞ்சுது.. அந்த பொண்ணுகளோட சாவு தற்கொலைனு தீர்ப்பும் வந்துருச்சு.. இனி அந்த வழக்கைக் கையில் எடுத்து என்ன பண்ண முடியும்.?"

"உங்ககிட்ட இருந்து இப்படியொரு பதில் வரும்னு நாங்க நினைக்கல சார்.."

"வேறெப்படி பதில் வரும்னு நினைச்சீங்க.?" என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகவே மாறனின் பதில் இருக்க, பாவம் அவர்களால் தான் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

அவனின் மொத்த கடுப்பையும் அவர்களின் மேல் இறக்கி வைத்தான். உண்மையும் அது தான். தவறுக்கான நீதி கிடைத்தே ஆக வேண்டும் என்றெண்ணியவன் இவன். ஆனால் வழக்கு திசைமாறி இப்போது ஒன்றுமில்லாமல் போனதை இவனால் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியவில்லை.

அந்த மீனவக்குப்பமே என்னை நம்பினார்கள்.. அவர்களின் நம்பிக்கைக்கு நான் செய்த கைம்மாறு இதுவா.? என்று அவனுக்கே அவனை நினைத்து கோவமெழுந்தது.

கமிஷ்னர் தான் அதிரனுக்கு அழைத்து மாறனை அழைத்துச் செல்ல கூறினார். இழுக்காத குறையாக அதிரனும் நண்பனை இழுத்துச் செல்ல, "ப்ச் விடுடா அவங்க கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு தான் வர முடியும்.. இப்படி பாதில வந்தா நல்லாவா இருக்கும்.?" என்று கடிந்தான்.

"நீ பதில் சொன்ன வரைக்கும் போதும் ராசா.. நீ முதல்ல வீட்டுக்குக் கிளம்புனு கமிஷ்னரே சொல்லிட்டாரு" என்றவனும் அவனைத் தனியே விடாமல் அவனுடனே கிளம்பினான்.

காசிக்கும் இது தான் நடக்கும் என்று முன்னரே தெரியும்.. அவனின் தந்தையின் மூலம் அரசியலைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் முன்னரே அறிந்து வைத்திருந்தானே.. அதனால் தான் எதிலும் அவ்வளவு ஈடுபாடுடன் கலந்துக் கொள்ளவில்லை. இவன் போராடுனாலும் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும்.

அதனால் தான் எதையும் கண்டு கொள்ளவில்லை. மாறனிடம் வேலன் பேசும்போது கூட அப்படி என்ன இவன் பேச போகிறான்.? என்ற ஆவலில் தான் மறைந்திருந்து ஒட்டுக் கேட்டான். அதுவும் தவறாகவே காணப்பட்டது.

இன்றைய காலத்தில் தவறு செய்பவர்களுக்குத் தண்டனை கிடைப்பது அரிதாக இருக்கும் போது எங்ஙனம் அதில் நம்பிக்கை வைத்து காத்திருக்க முடியும்.?

மாறனுடன் பேசியதோடு வேலன் எதுவும் செய்யவில்லை. அவனுக்குச் சற்று பயமெழுந்ததில் அமைதியாக இருந்து விட்டான் எனலாம். வள்ளியை நினைத்து வருந்தினான்.. அழுதான்.. துடித்தான்.. அது மட்டும் தான் அவனால் செய்ய முடிந்ததும். இப்போது கூட வள்ளியின் புகைப்படத்தின் அருகில் அமர்ந்து தான் புலம்பிக் கொண்டிருக்கிறான்.

"அப்படி என்ன தான் நடந்துச்சு.? ஏன் அப்படி பண்ணுனீங்க.? எல்லாம் தெரிஞ்சாலும் என்னால என்ன பண்ண முடியும்.? உங்க சாவுக்கான காரணமே வெளில வராம அப்படியே மறைஞ்சும் போயிரும் போல.? இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாதுனு புரிஞ்சுருச்சு.. என்னால தைரியமா சாகவும் முடியல.. வாழவும் மனசில்லாம இருக்கு.. எனக்கு என்ன பண்றதுனு சுத்தமா புரியல.. வள்ளி வள்ளி" என்று ஓயாமல் புலம்பி அரற்றினான்.

இனி இவர்களின் சாவும் பத்தோடு பதினொன்று தான். இரண்டு வாரங்களுக்கு இதைப் பற்றி பேசுபவர்கள் வேறொரு பிரச்சனை வந்ததும் இதை மறந்தும் விடுவார்கள். எப்படி பிறப்பு ஒரு சாதாரண நிகழ்வோ இறப்பும் அப்படியே மாறி விடுகிறது.

காலப்போக்கில் மீனவக்குப்பத்தில் மூன்று பெண்கள் இறந்தார்கள்.. அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.. இறுதியில் தற்கொலை என்று முடித்து விட்டார்கள் என்ற பேச்சு மட்டும் தலை தலைமுறையாக தொடர்ந்து பின்பு காணாமலும் போய் விடும்.

அவ்வளவுதான் இவர்களின் சாவிற்கான நீதியும். அவர்களின் பிறப்பிற்கான அர்த்தமும். முடிந்தது அவர்களின் அத்தியாயமும். இனி அதைப்பற்றி பேசினாலும் என்ன பலன்.?

இதோ ஆளும்கட்சியின் மூலம் மாறனுக்கு வேலை மாற்றலும் வந்து விட்டது. வேலையில் நேர்மையாக இருப்பவர்கள் இதை அனைத்தையும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டுமே.? கமிஷ்னரே இதை எதிர்பார்க்கவில்லை. ஆளுங்கட்சியைப் பகைத்து கொள்ள விரும்பாமல் மாறனை வேறொரு இடத்திற்கு இடமாற்றமும் செய்து அனுப்பி வைத்தார். அதில் அதிரனுக்கு பெரும் வருத்தம். இவனாலும் எதுவும் செய்ய முடியாத நிலை.

எடுத்த வழக்குகள் அனைத்தையும் திறன்பட மாறன் முடித்திருந்தாலும் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கான தண்டனை என்பது மட்டும் கேள்விக்குறியே. அதில் மட்டும் இவனின் வருத்தம் ஓய்ந்தபாடில்லை. இனியும் தீருமா.? என்பதே சந்தேகம் தான்.

வேலை மாற்றம் காரணமாக காவ்யாவும் அவனும் வேறொரு ஊருக்கு இடம் பெயர்ந்திருந்தனர். காவ்யாவின் தந்தை தான் இப்போது மாறனின் தந்தைக்குத் துணையாக இருப்பது. ஹேமாவும் அடிக்கடி வந்து விடுவதால் ஒன்றும் பெரியதாக பிரச்சனை இல்லை.

இப்போது தான் காவ்யாவும் மாறனும் பேசவே ஆரம்பித்திருந்தனர்.. அவனின் தவறுகளைச் சுட்டிக் காட்ட இவள் மறந்ததே இல்லை. அதில் சண்டை வந்தாலும் இவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து விடுவாள்.

உடனே மாறன் இறங்கி வந்து விடுவான் என்று நினைப்பது உங்களின் தவறு. இவள் தான் இறங்கி போக வேண்டியதாக இருக்கும்.

பெண்ணவளின் மூலம் இவன் சிறிது சிறிதாக மாறி விட்டான். ஆனால் தவறுக்கான தண்டனை கிடைப்பதில் நம் நாடு மாறுமா.? என்பது கேள்விக்கு
றியே.


இத்துடன் நாமும் இவர்களிடம் இருந்து விடைபெறுவோம்..

முற்றும்..




 

Author: AArani
Article Title: பாவை - 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

EswariSasi

New member
Joined
Jun 3, 2025
Messages
12
Kathai title paaththuttu padikka aarambichchen... aanaa just opposite story line.... police, investigation appdinnu pochchu kathai.ksthaila sonna vishayangal aththanaiyum nitharsanam...aalunga thaan maaruraanga Vera yethuvum maarala . Yezhuththu nadai la maturity theriyuthu... vazhthukkal writer madam 👍👍👍
 

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
Kathai title paaththuttu padikka aarambichchen... aanaa just opposite story line.... police, investigation appdinnu pochchu kathai.ksthaila sonna vishayangal aththanaiyum nitharsanam...aalunga thaan maaruraanga Vera yethuvum maarala . Yezhuththu nadai la maturity theriyuthu... vazhthukkal writer madam 👍👍👍
உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள் டியர்
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
192
மாறினேன் பாவையாலே...
மாறினது மாறன் அல்ல
மனைவி காவ்யா தான்....
மாறனுக்காக அவன்
மன நிம்மதிக்காக.... 🤩🤩🤩

மாறும் ஒருநாள்
மாற்றும் காலம்...
மாற்றம் ஒன்றே
மாறாதது...நம்புவோம்... 💐💐🤩🤩👏🏻👏🏻👏🏻❤️
வாழ்த்துக்கள் மா 💐💐
 

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
மாறினேன் பாவையாலே...
மாறினது மாறன் அல்ல
மனைவி காவ்யா தான்....
மாறனுக்காக அவன்
மன நிம்மதிக்காக.... 🤩🤩🤩

மாறும் ஒருநாள்
மாற்றும் காலம்...
மாற்றம் ஒன்றே
மாறாதது...நம்புவோம்... 💐💐🤩🤩👏🏻👏🏻👏🏻❤️
வாழ்த்துக்கள் மா 💐💐
நன்றிகள்
 
Top Bottom