காதல் காலமிது 11
கபி அல்விதா நா கெஹனா
அர்ஜுன் மேனகாவிடம் மன்னிப்புக் கேட்டதும், மீண்டும் ஒரு முறை பலர் முன்னால் வைத்து ப்ரபோஸ் பண்ணியதும் சட்டென்று நடந்து முடிந்துவிட்டது. மேனகா ஒரு நிமிடம் மௌனம் சாதித்தாள்.
அதான் நீங்க நடந்துக்கிட்டதை நினைச்சு ஃபீல் பண்றீங்கன்னு எனக்கு முன்னாடியே சொல்லிட்டீங்களே.. இப்போ பாயிண்ட்க்கு வாங்க. சுத்தி இத்தனை சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்கள சாட்சியா வச்சு, இனிமே அப்படி எல்லாம் நடந்துக்க மாட்டேன்னு சொல்லுங்க.. நீங்களும் கேளுங்க மகாஜனங்களே.. மறுபடியும் இவர் பழைய மாதிரி எதுவும் பண்ணினார்னா, நான் என்ன பண்ணனும்? நானும் எனக்கு ஒரு பாய் பிரண்டை பிடிச்சுக்கிட்டு அவர் கூட கடலை போட ஆரம்பிக்கலாமா? இல்ல அப்பவாவது டைவர்ஸ் பண்ணிடலாமா? அடுத்த டைவர்சுக்கும் நீங்க வந்து எதுவும் பஞ்சாயத்து பண்ணுவீங்களா?” என்றாள்.
“அந்தப் பொண்ணு கூட எல்லாம் நான் இப்பப் பேசுறது இல்ல மீனு”
“அதுக்குப் பதில் தான் வேல்முருகன்னு ஒரு பையன் கூட பேசுறீங்களே.. சொந்தக் கதை, சோகக் கதை எல்லாம் அவன்கிட்ட சொல்றீங்க.. குடும்ப விவகாரத்தை மூணாம் நம்பர் கிட்ட சொல்ல கூடாதுன்னு தெரியாதா உங்களுக்கு?”
“உனக்கு எப்படி தெரியும்? நீ என் ஃபோனை எடுத்துப் பார்த்தியா? இல்லையே பேட்டர்ன் லாக்கை மாத்திட்டேனே? ஒருவேளை அந்த வேல்முருகன் உனக்குத் தெரிஞ்சவனா?” அர்ஜுன் படபடத்தான்.
“ஏன் குடும்ப விவகாரத்தை வெளியில சொல்றீங்கன்னு கேட்டா எனக்கு எப்படி தெரிஞ்சிச்சுன்னு கேக்குறீங்க? அந்த வேல்முருகனையே கேளுங்க”
என்றோ வாங்கி வைத்திருந்த வேல்முருகனின் எண்ணைத் தேடி எடுத்து, “வெளியே போய் பேசிட்டு வரேன். அவன் கிட்ட ரெண்டுல ஒன்னு கேக்குறேன்” என்று அந்த அறைக்கு வெளியே சென்றான் அர்ஜுன்.
குடும்ப விபகாரத்தில் நாம் எதற்கு என்று நினைத்த உறவினர்கள் பாதி பேர் மெது மெதுவே கலந்து சென்றிருந்தனர். மீதியுள்ளவர்கள், “அடடா! வாழ்க்கையில இப்படி ஒரு சுவாரசியமான காட்சியை இனிமே பார்க்க முடியுமா தெரியல” என்று காத்திருந்தனர். விட்டால் ஹிப் ஹிப் ஹுர்ரே என்று சொல்லி உற்சாகப்படுத்தினாலும் படுத்திருப்பார்கள்.
வெளியே வேல்முருகன் எண்ணிற்கு அர்ஜுன் அழைக்க, உள்ளே மேனகா ஃபோனிலேயே அந்த அழைப்பு அடித்தது. அர்ஜுன் காலிங் என்று வந்த அந்த அழைப்பை அறையில் இருந்த மற்றவர்களிடம் அவள் காட்டினாள்.
“வேல்முருகனும் நான்தான், மேனகாவும் நான்தான்” என்றாள் ஏதோ ஆசி வழங்குவது போல.
“நான் தான் ஆம்பள பேர்ல ஃபேக் ஐடி ஓபன் பண்ணி இந்த ஆள் கூட பேசிகிட்டு இருக்கேன். என்கிட்டயே இது சொந்தக் கதையை எல்லாம் உளறுது. அவர் பார்வைக்கு வேல்முருகன் ஒரு தெரியாத ஆள். முகம் தெரியாத ஆள் கிட்ட இதெல்லாம் சொல்லலாமா?” என்று அவள் சொல்ல, மீண்டும் அலைபேசி அடித்தது.
மாறி மாறி அலைபேசியில் அந்த எண்ணை முயன்று பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனை வெளியே போய் பார்த்த மித்ரன், “டேய் அண்ணா! மானத்தை வாங்காதே” என்று பிடித்து உள்ளே இழுத்தான்.
மித்ரன் சொன்னது முதலில் அர்ஜுனுக்குப் புரியவில்லை. “டேய் அண்ணி தான் வேல்முருகன்ற பேர்ல உன்கிட்ட சாட் பண்ணிட்டு இருக்காங்க.. நீங்க அவங்க கிட்ட தான் பலமுறை உங்க பிரச்சனையைச் சொல்லி இருக்கீங்க.. பாவமன்னிப்பு வாங்கி இருக்கீங்க” என்று அவன் சொல்லி அறைக்குள் அழைத்து வந்த போது அர்ஜுன் முகத்தில் அவ்வளவு அசடு வழிந்தது.
இங்கே பலரும் வாயை மூடிக்கொண்டு சிரித்த வண்ணமே தானே இருந்தனர். தயாளன், “மேனகா, ஏன்மா ஒரு ஆம்பளையை இப்படியா பல்பு வாங்க வைப்பே? அர்ஜுன்! நீ எதுவும் தப்பு பண்ணல டா.. உன் சொந்த பொண்டாட்டி கூட தான் மனசு விட்டு பேசியிருக்கே.. அவ தான் வேல்முருகனா அவதாரம் எடுத்திருக்கா” என்றார் சமாளிக்கும் விதமாக. இதற்கு மேலும் இந்தத் தம்பதிகளைப் பிரிய விட்டுவிடக்கூடாது என்று ஆதங்கம் அவருக்கு
செவ்வந்தி சித்தியும், “மேனகா பப்ளிக்ல வச்சு நீ பண்றது தப்பு டி” இப்போது தயாளன் சொல்வதற்கெல்லாம் செவ்வந்தி ஆமோதிப்பதும், செவ்வந்தி சொல்வதற்கெல்லாம் தயாளன் தலையாட்டுவதும் ரித்திகாவுக்கு இன்னும் விவரமாகக் கண்ணில் பட்டது. அர்ஜுன் மேனகாவை ‘கிடக்குதுக லூசுக’ என்று விட்டுவிட்டு தயாளன் செவ்வந்தியை சுவாரசியமாகப் பார்த்தாள்.
அர்ஜுனுக்கு, ‘ஆம்பளைன்னு நினைச்சு இவகிட்டையா பேசிகிட்டு இருந்தோம்?’ என்று ஒரு வருத்தம். எல்லாரும் சொல்வதைப் போல் இதைப் பொதுவில் சொல்லியிருக்கக் கூடாதோ என்று லேசாக மேனகாவிற்கு ஒரு கலக்கம். அந்த வருத்தமும் இந்தக் கலக்கமும் சேர்ந்து, அடுத்தது என்ன என்று இருவரையும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க வைத்திருந்தது.
அர்ஜுன் அம்மாவும், மேனகா அம்மாவும் இந்த விவகாரத்தில் ஏதாவது கருத்து சொல்வார்கள், ஏதாவது சண்டை வரும் என்று அவரவர் பக்க உறவினர்கள் எதிர்பார்த்து நிற்க, “அவங்களே சண்டை போட்டு, அதுங்களே சேர்ந்துக்குவாங்க.. நம்ம நம்ம கூட அந்த காலத்துல அப்படி பண்ணலையா? ஆனா நாம ரூம் போட்டு சண்டை போட்டதை, இவங்க மேடை போட்டு பண்றாங்க.. அவ்வளவு தான் வித்தியாசம். கண்டுக்காத, விடு! டேமேஜ் அவங்க ரெண்டு பேருக்கும் தான்” என்று அர்ஜுனனின் அம்மாவை அவன் அப்பா சமாதானப்படுத்தினார்.
“அது எப்படிங்க? என் பையன..” என்று அர்ஜுன் அம்மா ஆரம்பித்த போது, “ஏன் நீயும் கூட தான் பல தடவை என் கூட சண்டை போட்டுட்டு உங்க அம்மா வீட்டுக்கு போனே.. அங்கே போய் என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வச்சே.. இமேஜ் டேமேஜ் ஆயிடுச்சுன்னு நினைச்சு நான் டைவர்ஸ் பண்ணினேனா என்ன?” என்று அவர் கணவர் கேட்க,
“அதுவும் சரிதான். என் மூஞ்சிக்கு உங்களையும், உங்க மூஞ்சிக்கு என்னையும் விட்டா வேற யாரும் கிடையாது” என்று ஒத்துக் கொண்டார் அர்ஜுன் அம்மா.
எப்பொழுதும் மகளுக்குப் பரிந்து பேசும் மேனகாவின் அம்மா இந்த முறை மகள் செய்தது பிடிக்கவில்லை. “அது என்னடி இத்தனை பேர் இருக்கோம்.. எங்க கிட்ட சொல்லாம, மாப்பிள்ளை கிட்டயும் முகத்துக்கு நேரா பேசாம இப்படி திருட்டுத்தனமா ஆம்பள பேர்ல பேசி இருக்க? இது எத்தனை நாளா நடக்குது? இப்படி வேற யார்கிட்டயும் பேசுறியா என்ன?” என்று அவளைக் கடிந்து கொண்டார்.
“சரி, நான் பண்ணினதும் தப்புதான்.. அர்ஜுனுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம்னு இருக்கேன். எல்லாரும் என்ன சொல்றீங்க?” என்றாள் மேனகா.
‘அப்பாடா தொல்லை விட்டுச்சு. ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் செவ்வந்தி.
“அப்ப மித்ரன் ரித்திகாவை சேர்த்து வைக்கிற பிளானை டிராப் பண்ணிடலாமா? அவங்க ரெண்டு பேரும் இஷ்டமில்லன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க?” என்று தயாளன் செவ்வந்தியிடமே நேரடியாகக் கேட்க,
“எங்க மேரேஜ் ப்ரோபோசல் இருக்கட்டும்.. இப்ப எனக்கு என்ன தோணுதுன்னா இன்னொரு மேரேஜ் ப்ரொபோஸ்ல கொண்டு வரலாம்னு தோணுது” என்று சாவகாசமாக அறைக்கு நடுவில் வந்தாள் ரித்திகா.
என்ன சொல்லப் போகிறாள் என்று கூர்மையாக கவனித்தான் மித்ரன். இவ்வளவு நேரம் மேனகா அரங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள், இப்பொழுது ரித்திகாவா என்று தோன்றியது.
அர்ஜுனும் மேனகாவும் ஒருவர் கையை இன்னொருவர் பிடித்துக் கொண்டனர். அர்ஜுன் விட நினைத்தாலும் மேனகா விடவே இல்லை. அதையும் ஒரு கண்ணால் பார்த்து, அந்த பஞ்சாயத்து ஓவர் என்பதை உறுதி செய்து கொண்ட ரித்திகா, “பெரியவங்க சேர்ந்து சின்னவங்கள சேர்த்து வைக்கணும்னு நினைக்கிறீங்க. ஆனா உங்க மத்தியிலேயே இருக்கிறே பெரியவங்கள பத்தி தான் எனக்கு கவலை. நான் செவ்வந்தி சித்திக்கும் தயாளன் சித்தப்பாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன். அவங்களுக்கு 45, 50 வயசு இருக்குமா? இந்தக் காலத்தில் அதெல்லாம் ஒரு வயசா? இன்னும் 30, 40 வருஷம் வாழ்றவங்க ஏன் தனியா வாழணும்?” என்று கேட்க, அறையில் சலசலப்பு
“அதானே அதைப் பத்தி நாங்க யோசிக்கவே இல்லையே?” என்றார் ஒரு பெரியவர்.
“நானும் எவ்வளவு தடவை இந்த செவ்வந்தி கிட்ட இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ, பண்ணிக்கோன்னு சொன்னேன் தெரியுமா? இப்பவாவது நடந்தால் சரிதான்” என்று கண்ணில் வடியாத நீரைத் துடைத்துக்கொண்டே சொன்னார் மேனகாவின் அம்மா.
தயாளன், “இத்தனை வயசுக்கு மேல எனக்கு எதுக்குக் கல்யாணம்?” என்று மறுப்புத் தெரிவித்தார். ஆனால் அவரது மறுப்பில் உயிரே இல்லை.
பயங்கரமான வெட்கம் வந்தது செவ்வந்திக்கு. “ரித்திகா என்ன பேசுற நீ? சும்மா இரு.. உன் கல்யாண பேச்சு வேணா வேண்டாம்.. அதுக்கு ஏன் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற? அத பத்தியெல்லாம் நான் யோசிச்சதே இல்ல” என்றார். உள்ளூற தயாளன், செவ்வந்தி இருவருக்குமே இது நடந்தால் என்ன என்று தோன்றியிருந்தது. கடந்த இரண்டு நாட்களில் தயாளனுக்கு செவ்வந்தி மேல் ஒரு மரியாதையும், பிரியமும் தோன்றியிருந்தது. செவ்வந்திக்கும் அந்த விருந்தினர்கள் கூட்டத்தில் குறுக்கே மழுக்கே போகும் பலரை பார்த்தாலும் அதில் தயால் என்னை பார்க்கும் போது மட்டும் பத்து சதவீதம் மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. இப்போது அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் ஈர்ப்பா என்று யோசிக்க ஆரம்பித்தார்.
தன் பிள்ளைகளில் செவ்வந்திக்கு மட்டும் நீண்ட நாள் கல்யாணம் செய்து வைக்க முடியவில்லை என்ற மன வருத்தத்தில் இருந்தார் செவ்வந்தியின் பாட்டி. அது நாள் வரையில் அவர் எந்தத் திருமணத்திற்கும் வந்ததில்லை. திருமண விழா என்று சொல்லாமல் ஏதோ கோவிலுக்குச் செல்கிறோம் என்று கூறி அவரை குண்டுகட்டாகக் கூட்டி வந்திருந்தார்கள். இப்போது அவர் அங்கே வேறு ஒரு அறையில் இருந்தார். அவரது கணவர் எப்போதோ சிவலோக பதவி அடைந்திருந்தார் இப்போது செவ்வந்திக்கு திடீரென்று திருமண பேச்சு துவங்கியதும் எல்லாரும் நடத்தி வைத்தால் என்ன, நல்லது தானே என்று பேசியதும் இந்த விவகாரங்கள் தெரியாமல் சிவனே என்று அறையில் அமர்ந்திருந்தார்.
அதற்குள் தயாளனின் சகோதர சகோதரிகள், ‘நல்ல சம்பந்தமா உனக்கு பொருத்தமா வரன் வந்திருக்கு.. காலகாலத்தில நடக்க வேண்டியது, இப்பவாவது நீ கல்யாணம் பண்ணிக்கோ’ என்று அவர் மனதை மாற்றினர்.
இவ்வளவு நாட்கள் ஊருக்கு உழைப்பவனாக, திருமணம் செய்து கொள்ளாமல் தயாளன் ஒற்றை ஆளாய்த் திரிந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது பெரும்பாலான கடமைகள் முடிவடைந்து விட, ஒற்றையாய் நிற்கும் சகோதரன் தங்களுக்கு சுமையாகி விடுவானோ என்ற கவலை அவரது உடன் பிறந்தோருக்கு இருந்தது. குறிப்பாக தயாளனின் உடன்பிறந்தோரின் வாரிசுகளுக்கு.
“மாமா இவ்வளவு நாள் பேச்சுலரா சுத்தியாச்சு. நீங்களும் சம்சார சாதரத்தில் குதிங்க” என்றான் அர்ஜுன்.
“வாடா வா.. யாரு இதைச் சொல்றது? அந்த நல்லவன் நீதானாடா? இவ்வளவு நாள் அந்த சாகரத்துல விழுந்து மூச்சு முட்டிக்கிட்டு கிடந்தே.. இப்ப என்னையும் இழுத்து உள்ள போடக் பாக்குறியா?” தயாளன் அடிக்குரலில் சொல்ல, அவரது மருமகள் முறையில் ஒருத்தி, “என்ன மாமா யோசிக்கிறீங்க? சரின்னு சொல்லுங்க” என்றாள்.
“அவர்கள் இரண்டு பேரும் தனியாக பேசிட்டு வரட்டும், அப்புறம் முடிவு சொல்லுவாங்க” என்று ரித்திகா ஒரே போடாகப் போட்டாள்.
“அப்படிப் போடு!” என்றான் மித்ரன் யார் காதிலும் விழாமல். ரித்திகாவுக்கு மட்டும் உதட்டசைவை வைத்துப் புரிந்தது. ‘அட! எனக்கும் லிப் ரீடிங் தெரியுது!’ என்று நினைத்துக் கொண்டாள். மித்திரனின் உதட்டசைவு மட்டும்தான் தனக்குப் புரிகிறது, மற்றவர்கள் மைண்ட் வாய்ஸ் புரிவதில்லை என்பது அவளுக்கு அப்போது புரியவில்லை.
ரித்திகாவின் யோசனையை ஏற்று, “தனியா பேசுங்க, தனியா பேசுங்க” என்று பல்வேறு குரல்கள் கேட்க,
“இருங்க.. எங்க அம்மாவைப் போய்ப் பாக்குறேன்” என்று தன்னுடைய பாதி ஒப்புதலைக் கொடுத்தார் செவ்வந்தி.
“அம்மாவெல்லாம் நீ போய் பார்க்க வேண்டாம் அவங்களே வந்துட்டாங்க” என்று அம்மாவைக் கைப்பிடித்து அழைத்து வந்தார் மேனகாவின் அம்மா.
தலையும் புரியாமல், வாலும் புரியாமல் உள்ளே நுழைந்த பாட்டியிடம்,
“பாட்டி உங்க மகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கின்றது பொலம்புவீங்களே.. இப்ப இவங்க நம்ம சித்திய இந்த அங்கிளுக்கு பொண்ணு கேக்குறாங்க.. கொடுத்துடுவோமா?” என்றாள் ரித்திகா.
“அடப்பாவி! நாங்க எப்ப டீ பொண்ணு கேட்டோம்?” என்று வாய்ப்பிடந்து நின்றனர் அர்ஜுன் வகையறாக்கள்.
பாட்டிக்கு பாதி காது கேட்காது. எல்லாரும் சேர்ந்து செவ்வந்தியைக் காட்டி ஏதோ சொல்வதும், அவள் தலை குனிந்து நிற்பதையும் பார்த்து, “எந்த தப்பும் பண்ண மாட்டாளே.. அவள மாதிரி ஒரு தங்கத்தை இந்த உலகத்துல பார்க்க முடியுமா.. அவளைப் பத்தி என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க?” என்றார் பாட்டி பதற்றத்துடன்.
“கல்யாணம்! கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு கேக்குறாங்க!” மீண்டும் ஒருமுறை அவருக்கு விளக்கப்பட, தயாளன் முகத்தை பார்த்த அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் தலைமுறைல, என் மத்த பிள்ளைகள் தலைமுறைல அவங்ககிட்ட சம்மதம் கேட்காமலே கல்யாணம் பண்ணி வச்சிட்டோம்.. இப்ப கட்டாயம் சம்மதம் கேட்கணும். எங்க செவ்வந்தி இப்போ எங்க குடும்பத்துக்கெல்லாம் ஒரு ஆணிவேர் மாதிரி, உடம்ப செருப்பா தச்சு போட்டு உழைக்கிறவ.. அவ எந்த விதத்திலும் மனசு கோணக்கூடாது.. உனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா செவ்வந்தி” என்று கேட்டார் பாட்டி. காது கேட்கவில்லை என்றாலும் பேச்சு அழுத்தம் திருத்தமாக தெளிவாக வந்தது.
“நான் கல்யாணம் ஆகி போயிட்டா நீங்க தனியா இருப்பீங்கன்னு தான் அம்மா கவலை” செவ்வந்தி என்ற ஐம்பது வயது பெண் எண்பது வயது அம்மா முன்னால் வெட்கப் பூ பூத்து நின்றார்.
“அதெல்லாம் நம்ம கூடவே உங்க அம்மா இருந்துக்கலாம்.. எனக்கு சின்ன வயசுலயே அம்மா தவறிட்டாங்க வீட்ல பெரியவங்க இருந்தா வீடே களையா இருக்கும்” அவசரமாக கருத்துக் கூறினார் தயாளன்.
‘என்னடா அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் யோசிச்சுட்ட?’ என்று தயாளனின் அண்ணன் அக்காக்கள் பார்க்க,
“தனியா பேசிட்டு வரலாமா?” என்று தயாளன் கேட்க,
இது மட்டும் எப்படியோ தெளிவாகக் காதில் விழுந்து விட்டது பாட்டிக்கு. “போங்க.. போய் பேசிட்டு வாங்க.. இந்த காலத்துப் புள்ளைங்க எல்லாம் என்னத்தத் தான் பேசுதுகன்னே தெரியாம அங்கங்கே நின்னு பேசுதுக.. நீங்க பேசுனா என்ன? போயிட்டு வாங்க” என்று பாட்டி சம்மதம் கொடுத்தது தான் தாமதம், செவ்வந்தியும் தயாளனும், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் விர்ரென்று வெளியே சென்று நிழலுக்காகப் போடப்பட்டிருந்த குடைகளுக்குள் ஒன்றில் போய் அமர்ந்து திட்டமிட ஆரம்பித்தனர்.
“இரண்டு நாள் முன்னாடி நைட் நாம் பேசும் போது நமக்கும் ஒரு கல்யாணப் பேச்சு நடக்கும்னு நினைச்சிருப்போமா?” என்று தயாளன் கேட்க
“ஆமால்ல!”
“ஆமாவா? இல்லையா?”
“போதும் போதும் இதே டயலாக்கை நான் பல தடவை கேட்டாச்சு.. பழைய காமெடி” என செவ்வந்தி குனிந்து கொண்டார்.
முன்பு இரவில் இவர்கள் பேசிக் கொண்டிருந்த போது வந்து, “எதுவும் வேண்டுமா?” என்று கேட்டு, முறைப்பை வாங்கி விட்டுப் போன அதே பேரர் இப்பொழுது கையில் பழரசங்கள் நிறைந்த தட்டுடன் அந்தப் பக்கமாக நடந்து வந்தார். வெட்கம் நிறைந்த முகங்களுடன் இவர்கள் அமர்ந்திருப்பதை அவர் வினோதமாக பார்த்துக் கொண்டே போக,
“பேரர்! ரெண்டு ஆப்பிள் ஜூஸ் கிடைக்குமா?” என்று கேட்டார் தயாளன். “கொண்டுவரேன்” என்று சிரித்துக் கொண்டே சென்றான் அவன்.
“உங்கள பாத்தப்ப எல்லாம் மனசுக்குள்ள ஏதோ படபடன்னு தோணுச்சு. எல்லாரும் கிளம்பறோம் பாப்போம் அப்படின்னு சொல்ல ஆரம்பிச்ச உடனே, உங்களுக்கும் டாட்டா காட்டிட்டு கிளம்பணுமேன்னு மனசுக்குள்ள ஒரு பாரம். அந்த ஃபீலிங்கை எப்படி வெளியே சொல்றதுன்னு தெரியல. நான் சொல்ல வர்றது உங்களுக்கு புரியுதா?” பக்கவாட்டில் குனிந்து செவ்வந்தியைப் பார்த்து ஒரு லுக்கு விட்டு தயாளன் சொல்ல,
செவ்வந்தி, “புரியுது.. எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு” என்று பதில் சொன்னார். இவர்களுடைய வெட்கம் கலந்த உரையாடலை தூரத்திலிருந்து தன் கேமராவில் ஜூம் செய்து பார்த்த மேனகா,
“பார்ட்டிங்க ஓகே பண்ணிடும்னு நினைக்கிறேன்” என்றாள்.
“கல்யாணத்துக்கு நேரம் எடுத்து நல்லா செய்வோம்.. நிச்சயதார்த்தம் இப்பவே முடிச்சிடலாமா? உங்க சொந்தக்காரங்க எங்க சொந்தக்காரங்க எல்லாரும் இருக்காங்களே” என்றார் அர்ஜுனின் அம்மா மேனகாவிடம். “ஆமா அத்தை!”
மாமியாரும் மருமகளும் ஒன்றுபட்டு நிற்பதைப் பார்த்து அங்கே பலருக்கு ஆச்சரியம். அவர்களோ இதுதானே வழக்கம், சண்டை போட்டாலும் அடுத்த அஞ்சாவது நிமிஷம் நாங்கள் கூடிக்குவோம் என்பது போல் நெஞ்சை நிமிர்த்தி நின்றனர்
தனியாக பேசப்போறேன் இருவரும் திரும்பி வந்து சம்மதம் என்று சொல்லும் முன்னாலேயே மாலையே அதே ஹாலில் நிச்சயதார்த்தம் நடத்தி விடுவது என்று முடிவானது. “நான் பூ பழம் வாங்கிட்டு வரேன்” “நான் போய் ஒரு புடவை வாங்கிட்டு வரேன்” என்று ஆளாளுக்குக் கிளம்ப,
மித்ரன், “நீ போய் இரண்டு பேர் விரல் சைஸ் சைஸையும் வாங்கிட்டுப் போய் மோதிரம் வாங்கிட்டு வா, இருபது கிலோமீட்டர் போனா நகைக்கடை வரும் போல” என்று சொன்னார் அவனது அப்பா.
தொடரும்.
(“கபி அல்விதா நா கெஹனா’ அப்படின்னா ‘எப்பவும் குட்பை சொல்ல வேண்டாம்’னு என்று அர்த்தம். நம்ம கதையில இந்த அத்தியாயத்தில் இந்த அர்த்தம் வர்ற மாதிரி ஒரு வசனம் வந்துச்சா? அதான் இந்த டைட்டிலைத் தேர்ந்தெடுத்தேன். இந்த படம் கரண் ஜோகரோட ஒரு சூப்பர் ஹிட் படம். நிறைய விருதுகள் வாங்குச்சு. அமிதாப் பச்சன், ஷாருக்கான், அபிஷேக் பச்சன், ப்ரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி இப்படி பல பெரிய தலைங்க இந்தப் படத்துல இருக்கு. கதைன்னு பார்த்தா அடிப்படை கதை திருமணம் தாண்டிய உறவு பத்தி. ஆனா கதை சொன்ன விதம் ரொம்பவே நல்ல இருந்துச்சு, கரண் ஜோகரா இருக்க போய் இப்படி ஒரு குழப்பமான பிளாட்டை தன்னுடைய கதை சொல்லும் திறமை மூலமா அருமையா கொண்டு வந்துட்டாருன்னு பேசிக்குவாங்க. மறுமணமும் இந்த கதையில் இருக்கு அதுவும் நம்ம தயாளன் செவ்வந்திக்கலையோட தொடர்புடையது மத்தபடி நம்ம கதையில EMA இல்லை.. விரிவா கதையைப் படிக்கனும்னா google பண்ணுங்க)
கபி அல்விதா நா கெஹனா
அர்ஜுன் மேனகாவிடம் மன்னிப்புக் கேட்டதும், மீண்டும் ஒரு முறை பலர் முன்னால் வைத்து ப்ரபோஸ் பண்ணியதும் சட்டென்று நடந்து முடிந்துவிட்டது. மேனகா ஒரு நிமிடம் மௌனம் சாதித்தாள்.
அதான் நீங்க நடந்துக்கிட்டதை நினைச்சு ஃபீல் பண்றீங்கன்னு எனக்கு முன்னாடியே சொல்லிட்டீங்களே.. இப்போ பாயிண்ட்க்கு வாங்க. சுத்தி இத்தனை சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்கள சாட்சியா வச்சு, இனிமே அப்படி எல்லாம் நடந்துக்க மாட்டேன்னு சொல்லுங்க.. நீங்களும் கேளுங்க மகாஜனங்களே.. மறுபடியும் இவர் பழைய மாதிரி எதுவும் பண்ணினார்னா, நான் என்ன பண்ணனும்? நானும் எனக்கு ஒரு பாய் பிரண்டை பிடிச்சுக்கிட்டு அவர் கூட கடலை போட ஆரம்பிக்கலாமா? இல்ல அப்பவாவது டைவர்ஸ் பண்ணிடலாமா? அடுத்த டைவர்சுக்கும் நீங்க வந்து எதுவும் பஞ்சாயத்து பண்ணுவீங்களா?” என்றாள்.
“அந்தப் பொண்ணு கூட எல்லாம் நான் இப்பப் பேசுறது இல்ல மீனு”
“அதுக்குப் பதில் தான் வேல்முருகன்னு ஒரு பையன் கூட பேசுறீங்களே.. சொந்தக் கதை, சோகக் கதை எல்லாம் அவன்கிட்ட சொல்றீங்க.. குடும்ப விவகாரத்தை மூணாம் நம்பர் கிட்ட சொல்ல கூடாதுன்னு தெரியாதா உங்களுக்கு?”
“உனக்கு எப்படி தெரியும்? நீ என் ஃபோனை எடுத்துப் பார்த்தியா? இல்லையே பேட்டர்ன் லாக்கை மாத்திட்டேனே? ஒருவேளை அந்த வேல்முருகன் உனக்குத் தெரிஞ்சவனா?” அர்ஜுன் படபடத்தான்.
“ஏன் குடும்ப விவகாரத்தை வெளியில சொல்றீங்கன்னு கேட்டா எனக்கு எப்படி தெரிஞ்சிச்சுன்னு கேக்குறீங்க? அந்த வேல்முருகனையே கேளுங்க”
என்றோ வாங்கி வைத்திருந்த வேல்முருகனின் எண்ணைத் தேடி எடுத்து, “வெளியே போய் பேசிட்டு வரேன். அவன் கிட்ட ரெண்டுல ஒன்னு கேக்குறேன்” என்று அந்த அறைக்கு வெளியே சென்றான் அர்ஜுன்.
குடும்ப விபகாரத்தில் நாம் எதற்கு என்று நினைத்த உறவினர்கள் பாதி பேர் மெது மெதுவே கலந்து சென்றிருந்தனர். மீதியுள்ளவர்கள், “அடடா! வாழ்க்கையில இப்படி ஒரு சுவாரசியமான காட்சியை இனிமே பார்க்க முடியுமா தெரியல” என்று காத்திருந்தனர். விட்டால் ஹிப் ஹிப் ஹுர்ரே என்று சொல்லி உற்சாகப்படுத்தினாலும் படுத்திருப்பார்கள்.
வெளியே வேல்முருகன் எண்ணிற்கு அர்ஜுன் அழைக்க, உள்ளே மேனகா ஃபோனிலேயே அந்த அழைப்பு அடித்தது. அர்ஜுன் காலிங் என்று வந்த அந்த அழைப்பை அறையில் இருந்த மற்றவர்களிடம் அவள் காட்டினாள்.
“வேல்முருகனும் நான்தான், மேனகாவும் நான்தான்” என்றாள் ஏதோ ஆசி வழங்குவது போல.
“நான் தான் ஆம்பள பேர்ல ஃபேக் ஐடி ஓபன் பண்ணி இந்த ஆள் கூட பேசிகிட்டு இருக்கேன். என்கிட்டயே இது சொந்தக் கதையை எல்லாம் உளறுது. அவர் பார்வைக்கு வேல்முருகன் ஒரு தெரியாத ஆள். முகம் தெரியாத ஆள் கிட்ட இதெல்லாம் சொல்லலாமா?” என்று அவள் சொல்ல, மீண்டும் அலைபேசி அடித்தது.
மாறி மாறி அலைபேசியில் அந்த எண்ணை முயன்று பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனை வெளியே போய் பார்த்த மித்ரன், “டேய் அண்ணா! மானத்தை வாங்காதே” என்று பிடித்து உள்ளே இழுத்தான்.
மித்ரன் சொன்னது முதலில் அர்ஜுனுக்குப் புரியவில்லை. “டேய் அண்ணி தான் வேல்முருகன்ற பேர்ல உன்கிட்ட சாட் பண்ணிட்டு இருக்காங்க.. நீங்க அவங்க கிட்ட தான் பலமுறை உங்க பிரச்சனையைச் சொல்லி இருக்கீங்க.. பாவமன்னிப்பு வாங்கி இருக்கீங்க” என்று அவன் சொல்லி அறைக்குள் அழைத்து வந்த போது அர்ஜுன் முகத்தில் அவ்வளவு அசடு வழிந்தது.
இங்கே பலரும் வாயை மூடிக்கொண்டு சிரித்த வண்ணமே தானே இருந்தனர். தயாளன், “மேனகா, ஏன்மா ஒரு ஆம்பளையை இப்படியா பல்பு வாங்க வைப்பே? அர்ஜுன்! நீ எதுவும் தப்பு பண்ணல டா.. உன் சொந்த பொண்டாட்டி கூட தான் மனசு விட்டு பேசியிருக்கே.. அவ தான் வேல்முருகனா அவதாரம் எடுத்திருக்கா” என்றார் சமாளிக்கும் விதமாக. இதற்கு மேலும் இந்தத் தம்பதிகளைப் பிரிய விட்டுவிடக்கூடாது என்று ஆதங்கம் அவருக்கு
செவ்வந்தி சித்தியும், “மேனகா பப்ளிக்ல வச்சு நீ பண்றது தப்பு டி” இப்போது தயாளன் சொல்வதற்கெல்லாம் செவ்வந்தி ஆமோதிப்பதும், செவ்வந்தி சொல்வதற்கெல்லாம் தயாளன் தலையாட்டுவதும் ரித்திகாவுக்கு இன்னும் விவரமாகக் கண்ணில் பட்டது. அர்ஜுன் மேனகாவை ‘கிடக்குதுக லூசுக’ என்று விட்டுவிட்டு தயாளன் செவ்வந்தியை சுவாரசியமாகப் பார்த்தாள்.
அர்ஜுனுக்கு, ‘ஆம்பளைன்னு நினைச்சு இவகிட்டையா பேசிகிட்டு இருந்தோம்?’ என்று ஒரு வருத்தம். எல்லாரும் சொல்வதைப் போல் இதைப் பொதுவில் சொல்லியிருக்கக் கூடாதோ என்று லேசாக மேனகாவிற்கு ஒரு கலக்கம். அந்த வருத்தமும் இந்தக் கலக்கமும் சேர்ந்து, அடுத்தது என்ன என்று இருவரையும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க வைத்திருந்தது.
அர்ஜுன் அம்மாவும், மேனகா அம்மாவும் இந்த விவகாரத்தில் ஏதாவது கருத்து சொல்வார்கள், ஏதாவது சண்டை வரும் என்று அவரவர் பக்க உறவினர்கள் எதிர்பார்த்து நிற்க, “அவங்களே சண்டை போட்டு, அதுங்களே சேர்ந்துக்குவாங்க.. நம்ம நம்ம கூட அந்த காலத்துல அப்படி பண்ணலையா? ஆனா நாம ரூம் போட்டு சண்டை போட்டதை, இவங்க மேடை போட்டு பண்றாங்க.. அவ்வளவு தான் வித்தியாசம். கண்டுக்காத, விடு! டேமேஜ் அவங்க ரெண்டு பேருக்கும் தான்” என்று அர்ஜுனனின் அம்மாவை அவன் அப்பா சமாதானப்படுத்தினார்.
“அது எப்படிங்க? என் பையன..” என்று அர்ஜுன் அம்மா ஆரம்பித்த போது, “ஏன் நீயும் கூட தான் பல தடவை என் கூட சண்டை போட்டுட்டு உங்க அம்மா வீட்டுக்கு போனே.. அங்கே போய் என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வச்சே.. இமேஜ் டேமேஜ் ஆயிடுச்சுன்னு நினைச்சு நான் டைவர்ஸ் பண்ணினேனா என்ன?” என்று அவர் கணவர் கேட்க,
“அதுவும் சரிதான். என் மூஞ்சிக்கு உங்களையும், உங்க மூஞ்சிக்கு என்னையும் விட்டா வேற யாரும் கிடையாது” என்று ஒத்துக் கொண்டார் அர்ஜுன் அம்மா.
எப்பொழுதும் மகளுக்குப் பரிந்து பேசும் மேனகாவின் அம்மா இந்த முறை மகள் செய்தது பிடிக்கவில்லை. “அது என்னடி இத்தனை பேர் இருக்கோம்.. எங்க கிட்ட சொல்லாம, மாப்பிள்ளை கிட்டயும் முகத்துக்கு நேரா பேசாம இப்படி திருட்டுத்தனமா ஆம்பள பேர்ல பேசி இருக்க? இது எத்தனை நாளா நடக்குது? இப்படி வேற யார்கிட்டயும் பேசுறியா என்ன?” என்று அவளைக் கடிந்து கொண்டார்.
“சரி, நான் பண்ணினதும் தப்புதான்.. அர்ஜுனுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம்னு இருக்கேன். எல்லாரும் என்ன சொல்றீங்க?” என்றாள் மேனகா.
‘அப்பாடா தொல்லை விட்டுச்சு. ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் செவ்வந்தி.
“அப்ப மித்ரன் ரித்திகாவை சேர்த்து வைக்கிற பிளானை டிராப் பண்ணிடலாமா? அவங்க ரெண்டு பேரும் இஷ்டமில்லன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க?” என்று தயாளன் செவ்வந்தியிடமே நேரடியாகக் கேட்க,
“எங்க மேரேஜ் ப்ரோபோசல் இருக்கட்டும்.. இப்ப எனக்கு என்ன தோணுதுன்னா இன்னொரு மேரேஜ் ப்ரொபோஸ்ல கொண்டு வரலாம்னு தோணுது” என்று சாவகாசமாக அறைக்கு நடுவில் வந்தாள் ரித்திகா.
என்ன சொல்லப் போகிறாள் என்று கூர்மையாக கவனித்தான் மித்ரன். இவ்வளவு நேரம் மேனகா அரங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள், இப்பொழுது ரித்திகாவா என்று தோன்றியது.
அர்ஜுனும் மேனகாவும் ஒருவர் கையை இன்னொருவர் பிடித்துக் கொண்டனர். அர்ஜுன் விட நினைத்தாலும் மேனகா விடவே இல்லை. அதையும் ஒரு கண்ணால் பார்த்து, அந்த பஞ்சாயத்து ஓவர் என்பதை உறுதி செய்து கொண்ட ரித்திகா, “பெரியவங்க சேர்ந்து சின்னவங்கள சேர்த்து வைக்கணும்னு நினைக்கிறீங்க. ஆனா உங்க மத்தியிலேயே இருக்கிறே பெரியவங்கள பத்தி தான் எனக்கு கவலை. நான் செவ்வந்தி சித்திக்கும் தயாளன் சித்தப்பாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன். அவங்களுக்கு 45, 50 வயசு இருக்குமா? இந்தக் காலத்தில் அதெல்லாம் ஒரு வயசா? இன்னும் 30, 40 வருஷம் வாழ்றவங்க ஏன் தனியா வாழணும்?” என்று கேட்க, அறையில் சலசலப்பு
“அதானே அதைப் பத்தி நாங்க யோசிக்கவே இல்லையே?” என்றார் ஒரு பெரியவர்.
“நானும் எவ்வளவு தடவை இந்த செவ்வந்தி கிட்ட இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ, பண்ணிக்கோன்னு சொன்னேன் தெரியுமா? இப்பவாவது நடந்தால் சரிதான்” என்று கண்ணில் வடியாத நீரைத் துடைத்துக்கொண்டே சொன்னார் மேனகாவின் அம்மா.
தயாளன், “இத்தனை வயசுக்கு மேல எனக்கு எதுக்குக் கல்யாணம்?” என்று மறுப்புத் தெரிவித்தார். ஆனால் அவரது மறுப்பில் உயிரே இல்லை.
பயங்கரமான வெட்கம் வந்தது செவ்வந்திக்கு. “ரித்திகா என்ன பேசுற நீ? சும்மா இரு.. உன் கல்யாண பேச்சு வேணா வேண்டாம்.. அதுக்கு ஏன் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற? அத பத்தியெல்லாம் நான் யோசிச்சதே இல்ல” என்றார். உள்ளூற தயாளன், செவ்வந்தி இருவருக்குமே இது நடந்தால் என்ன என்று தோன்றியிருந்தது. கடந்த இரண்டு நாட்களில் தயாளனுக்கு செவ்வந்தி மேல் ஒரு மரியாதையும், பிரியமும் தோன்றியிருந்தது. செவ்வந்திக்கும் அந்த விருந்தினர்கள் கூட்டத்தில் குறுக்கே மழுக்கே போகும் பலரை பார்த்தாலும் அதில் தயால் என்னை பார்க்கும் போது மட்டும் பத்து சதவீதம் மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. இப்போது அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் ஈர்ப்பா என்று யோசிக்க ஆரம்பித்தார்.
தன் பிள்ளைகளில் செவ்வந்திக்கு மட்டும் நீண்ட நாள் கல்யாணம் செய்து வைக்க முடியவில்லை என்ற மன வருத்தத்தில் இருந்தார் செவ்வந்தியின் பாட்டி. அது நாள் வரையில் அவர் எந்தத் திருமணத்திற்கும் வந்ததில்லை. திருமண விழா என்று சொல்லாமல் ஏதோ கோவிலுக்குச் செல்கிறோம் என்று கூறி அவரை குண்டுகட்டாகக் கூட்டி வந்திருந்தார்கள். இப்போது அவர் அங்கே வேறு ஒரு அறையில் இருந்தார். அவரது கணவர் எப்போதோ சிவலோக பதவி அடைந்திருந்தார் இப்போது செவ்வந்திக்கு திடீரென்று திருமண பேச்சு துவங்கியதும் எல்லாரும் நடத்தி வைத்தால் என்ன, நல்லது தானே என்று பேசியதும் இந்த விவகாரங்கள் தெரியாமல் சிவனே என்று அறையில் அமர்ந்திருந்தார்.
அதற்குள் தயாளனின் சகோதர சகோதரிகள், ‘நல்ல சம்பந்தமா உனக்கு பொருத்தமா வரன் வந்திருக்கு.. காலகாலத்தில நடக்க வேண்டியது, இப்பவாவது நீ கல்யாணம் பண்ணிக்கோ’ என்று அவர் மனதை மாற்றினர்.
இவ்வளவு நாட்கள் ஊருக்கு உழைப்பவனாக, திருமணம் செய்து கொள்ளாமல் தயாளன் ஒற்றை ஆளாய்த் திரிந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது பெரும்பாலான கடமைகள் முடிவடைந்து விட, ஒற்றையாய் நிற்கும் சகோதரன் தங்களுக்கு சுமையாகி விடுவானோ என்ற கவலை அவரது உடன் பிறந்தோருக்கு இருந்தது. குறிப்பாக தயாளனின் உடன்பிறந்தோரின் வாரிசுகளுக்கு.
“மாமா இவ்வளவு நாள் பேச்சுலரா சுத்தியாச்சு. நீங்களும் சம்சார சாதரத்தில் குதிங்க” என்றான் அர்ஜுன்.
“வாடா வா.. யாரு இதைச் சொல்றது? அந்த நல்லவன் நீதானாடா? இவ்வளவு நாள் அந்த சாகரத்துல விழுந்து மூச்சு முட்டிக்கிட்டு கிடந்தே.. இப்ப என்னையும் இழுத்து உள்ள போடக் பாக்குறியா?” தயாளன் அடிக்குரலில் சொல்ல, அவரது மருமகள் முறையில் ஒருத்தி, “என்ன மாமா யோசிக்கிறீங்க? சரின்னு சொல்லுங்க” என்றாள்.
“அவர்கள் இரண்டு பேரும் தனியாக பேசிட்டு வரட்டும், அப்புறம் முடிவு சொல்லுவாங்க” என்று ரித்திகா ஒரே போடாகப் போட்டாள்.
“அப்படிப் போடு!” என்றான் மித்ரன் யார் காதிலும் விழாமல். ரித்திகாவுக்கு மட்டும் உதட்டசைவை வைத்துப் புரிந்தது. ‘அட! எனக்கும் லிப் ரீடிங் தெரியுது!’ என்று நினைத்துக் கொண்டாள். மித்திரனின் உதட்டசைவு மட்டும்தான் தனக்குப் புரிகிறது, மற்றவர்கள் மைண்ட் வாய்ஸ் புரிவதில்லை என்பது அவளுக்கு அப்போது புரியவில்லை.
ரித்திகாவின் யோசனையை ஏற்று, “தனியா பேசுங்க, தனியா பேசுங்க” என்று பல்வேறு குரல்கள் கேட்க,
“இருங்க.. எங்க அம்மாவைப் போய்ப் பாக்குறேன்” என்று தன்னுடைய பாதி ஒப்புதலைக் கொடுத்தார் செவ்வந்தி.
“அம்மாவெல்லாம் நீ போய் பார்க்க வேண்டாம் அவங்களே வந்துட்டாங்க” என்று அம்மாவைக் கைப்பிடித்து அழைத்து வந்தார் மேனகாவின் அம்மா.
தலையும் புரியாமல், வாலும் புரியாமல் உள்ளே நுழைந்த பாட்டியிடம்,
“பாட்டி உங்க மகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கின்றது பொலம்புவீங்களே.. இப்ப இவங்க நம்ம சித்திய இந்த அங்கிளுக்கு பொண்ணு கேக்குறாங்க.. கொடுத்துடுவோமா?” என்றாள் ரித்திகா.
“அடப்பாவி! நாங்க எப்ப டீ பொண்ணு கேட்டோம்?” என்று வாய்ப்பிடந்து நின்றனர் அர்ஜுன் வகையறாக்கள்.
பாட்டிக்கு பாதி காது கேட்காது. எல்லாரும் சேர்ந்து செவ்வந்தியைக் காட்டி ஏதோ சொல்வதும், அவள் தலை குனிந்து நிற்பதையும் பார்த்து, “எந்த தப்பும் பண்ண மாட்டாளே.. அவள மாதிரி ஒரு தங்கத்தை இந்த உலகத்துல பார்க்க முடியுமா.. அவளைப் பத்தி என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க?” என்றார் பாட்டி பதற்றத்துடன்.
“கல்யாணம்! கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு கேக்குறாங்க!” மீண்டும் ஒருமுறை அவருக்கு விளக்கப்பட, தயாளன் முகத்தை பார்த்த அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் தலைமுறைல, என் மத்த பிள்ளைகள் தலைமுறைல அவங்ககிட்ட சம்மதம் கேட்காமலே கல்யாணம் பண்ணி வச்சிட்டோம்.. இப்ப கட்டாயம் சம்மதம் கேட்கணும். எங்க செவ்வந்தி இப்போ எங்க குடும்பத்துக்கெல்லாம் ஒரு ஆணிவேர் மாதிரி, உடம்ப செருப்பா தச்சு போட்டு உழைக்கிறவ.. அவ எந்த விதத்திலும் மனசு கோணக்கூடாது.. உனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா செவ்வந்தி” என்று கேட்டார் பாட்டி. காது கேட்கவில்லை என்றாலும் பேச்சு அழுத்தம் திருத்தமாக தெளிவாக வந்தது.
“நான் கல்யாணம் ஆகி போயிட்டா நீங்க தனியா இருப்பீங்கன்னு தான் அம்மா கவலை” செவ்வந்தி என்ற ஐம்பது வயது பெண் எண்பது வயது அம்மா முன்னால் வெட்கப் பூ பூத்து நின்றார்.
“அதெல்லாம் நம்ம கூடவே உங்க அம்மா இருந்துக்கலாம்.. எனக்கு சின்ன வயசுலயே அம்மா தவறிட்டாங்க வீட்ல பெரியவங்க இருந்தா வீடே களையா இருக்கும்” அவசரமாக கருத்துக் கூறினார் தயாளன்.
‘என்னடா அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் யோசிச்சுட்ட?’ என்று தயாளனின் அண்ணன் அக்காக்கள் பார்க்க,
“தனியா பேசிட்டு வரலாமா?” என்று தயாளன் கேட்க,
இது மட்டும் எப்படியோ தெளிவாகக் காதில் விழுந்து விட்டது பாட்டிக்கு. “போங்க.. போய் பேசிட்டு வாங்க.. இந்த காலத்துப் புள்ளைங்க எல்லாம் என்னத்தத் தான் பேசுதுகன்னே தெரியாம அங்கங்கே நின்னு பேசுதுக.. நீங்க பேசுனா என்ன? போயிட்டு வாங்க” என்று பாட்டி சம்மதம் கொடுத்தது தான் தாமதம், செவ்வந்தியும் தயாளனும், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் விர்ரென்று வெளியே சென்று நிழலுக்காகப் போடப்பட்டிருந்த குடைகளுக்குள் ஒன்றில் போய் அமர்ந்து திட்டமிட ஆரம்பித்தனர்.
“இரண்டு நாள் முன்னாடி நைட் நாம் பேசும் போது நமக்கும் ஒரு கல்யாணப் பேச்சு நடக்கும்னு நினைச்சிருப்போமா?” என்று தயாளன் கேட்க
“ஆமால்ல!”
“ஆமாவா? இல்லையா?”
“போதும் போதும் இதே டயலாக்கை நான் பல தடவை கேட்டாச்சு.. பழைய காமெடி” என செவ்வந்தி குனிந்து கொண்டார்.
முன்பு இரவில் இவர்கள் பேசிக் கொண்டிருந்த போது வந்து, “எதுவும் வேண்டுமா?” என்று கேட்டு, முறைப்பை வாங்கி விட்டுப் போன அதே பேரர் இப்பொழுது கையில் பழரசங்கள் நிறைந்த தட்டுடன் அந்தப் பக்கமாக நடந்து வந்தார். வெட்கம் நிறைந்த முகங்களுடன் இவர்கள் அமர்ந்திருப்பதை அவர் வினோதமாக பார்த்துக் கொண்டே போக,
“பேரர்! ரெண்டு ஆப்பிள் ஜூஸ் கிடைக்குமா?” என்று கேட்டார் தயாளன். “கொண்டுவரேன்” என்று சிரித்துக் கொண்டே சென்றான் அவன்.
“உங்கள பாத்தப்ப எல்லாம் மனசுக்குள்ள ஏதோ படபடன்னு தோணுச்சு. எல்லாரும் கிளம்பறோம் பாப்போம் அப்படின்னு சொல்ல ஆரம்பிச்ச உடனே, உங்களுக்கும் டாட்டா காட்டிட்டு கிளம்பணுமேன்னு மனசுக்குள்ள ஒரு பாரம். அந்த ஃபீலிங்கை எப்படி வெளியே சொல்றதுன்னு தெரியல. நான் சொல்ல வர்றது உங்களுக்கு புரியுதா?” பக்கவாட்டில் குனிந்து செவ்வந்தியைப் பார்த்து ஒரு லுக்கு விட்டு தயாளன் சொல்ல,
செவ்வந்தி, “புரியுது.. எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு” என்று பதில் சொன்னார். இவர்களுடைய வெட்கம் கலந்த உரையாடலை தூரத்திலிருந்து தன் கேமராவில் ஜூம் செய்து பார்த்த மேனகா,
“பார்ட்டிங்க ஓகே பண்ணிடும்னு நினைக்கிறேன்” என்றாள்.
“கல்யாணத்துக்கு நேரம் எடுத்து நல்லா செய்வோம்.. நிச்சயதார்த்தம் இப்பவே முடிச்சிடலாமா? உங்க சொந்தக்காரங்க எங்க சொந்தக்காரங்க எல்லாரும் இருக்காங்களே” என்றார் அர்ஜுனின் அம்மா மேனகாவிடம். “ஆமா அத்தை!”
மாமியாரும் மருமகளும் ஒன்றுபட்டு நிற்பதைப் பார்த்து அங்கே பலருக்கு ஆச்சரியம். அவர்களோ இதுதானே வழக்கம், சண்டை போட்டாலும் அடுத்த அஞ்சாவது நிமிஷம் நாங்கள் கூடிக்குவோம் என்பது போல் நெஞ்சை நிமிர்த்தி நின்றனர்
தனியாக பேசப்போறேன் இருவரும் திரும்பி வந்து சம்மதம் என்று சொல்லும் முன்னாலேயே மாலையே அதே ஹாலில் நிச்சயதார்த்தம் நடத்தி விடுவது என்று முடிவானது. “நான் பூ பழம் வாங்கிட்டு வரேன்” “நான் போய் ஒரு புடவை வாங்கிட்டு வரேன்” என்று ஆளாளுக்குக் கிளம்ப,
மித்ரன், “நீ போய் இரண்டு பேர் விரல் சைஸ் சைஸையும் வாங்கிட்டுப் போய் மோதிரம் வாங்கிட்டு வா, இருபது கிலோமீட்டர் போனா நகைக்கடை வரும் போல” என்று சொன்னார் அவனது அப்பா.
தொடரும்.
(“கபி அல்விதா நா கெஹனா’ அப்படின்னா ‘எப்பவும் குட்பை சொல்ல வேண்டாம்’னு என்று அர்த்தம். நம்ம கதையில இந்த அத்தியாயத்தில் இந்த அர்த்தம் வர்ற மாதிரி ஒரு வசனம் வந்துச்சா? அதான் இந்த டைட்டிலைத் தேர்ந்தெடுத்தேன். இந்த படம் கரண் ஜோகரோட ஒரு சூப்பர் ஹிட் படம். நிறைய விருதுகள் வாங்குச்சு. அமிதாப் பச்சன், ஷாருக்கான், அபிஷேக் பச்சன், ப்ரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி இப்படி பல பெரிய தலைங்க இந்தப் படத்துல இருக்கு. கதைன்னு பார்த்தா அடிப்படை கதை திருமணம் தாண்டிய உறவு பத்தி. ஆனா கதை சொன்ன விதம் ரொம்பவே நல்ல இருந்துச்சு, கரண் ஜோகரா இருக்க போய் இப்படி ஒரு குழப்பமான பிளாட்டை தன்னுடைய கதை சொல்லும் திறமை மூலமா அருமையா கொண்டு வந்துட்டாருன்னு பேசிக்குவாங்க. மறுமணமும் இந்த கதையில் இருக்கு அதுவும் நம்ம தயாளன் செவ்வந்திக்கலையோட தொடர்புடையது மத்தபடி நம்ம கதையில EMA இல்லை.. விரிவா கதையைப் படிக்கனும்னா google பண்ணுங்க)
Author: SudhaSri
Article Title: காதல் காலமிது -11 கபி அல்விதா நா கெஹனா
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: காதல் காலமிது -11 கபி அல்விதா நா கெஹனா
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.