• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கவிக்குயிலின்_ கவி விமர்சனம்

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
204
#மாறினேன்_பாவையாலே

#ஆரணி

#கதைத்தறி_போட்டிக்_கதை

#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்

#கவிக்குயிலின்_கவி _ விமர்சனம்


தந்தையின் தவறில்
தாயின் மரணம்
தங்கையின் நிலை
தன்னை விட்டு சென்ற
தன் மனைவி என
தாங்காத பாரமாய்
தனக்குள்ளே இறுகி
துடித்து மருகி
தனித்து நிற்கும்
திடமான
தைரியமான காவலன் மாறன்.....

திருமணத்தில் இருந்து
தப்பிக்க வேண்டி
திடீரென்று
தந்தையிடம்சொல்லும்
தன் காதலன் என்ற
தவறில் தொடங்குது
காவ்யாவின் காதல்...

தாய் தந்தை செய்த
தவறில் தொடங்குது
ஹேமாவின்
வலியான வாழ்வு....

முடியாத அப்பா
முறைக்கும் அண்ணன்
மறுகும் ஹேமா
மறுக்கும் அதி காதல்
மாற்றம் தேடி காத்திருக்க...

மர்மமான முறையில்
மரணமான பெண்கள்
மர்மத்தை கண்டுபிடிக்க
மாறன் களம் இறங்க....

குற்றத்தை கண்டுபிடித்து
குற்றத்தை நிரூபித்தால்
குற்றம் செய்தவர்கள்
குற்றத்தில் இருந்து தப்பிக்க
குற்றம் யார் மேலே....

திருடனாய் பார்த்து
திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
தவறு செய்வதற்கு
தண்டனை கிடைத்தால் தானே குற்றம் குறையும்
தப்பித்தால் என்ன சொல்வது....
தக்க தண்டனை காலம்
தவறாமல் கொடுக்கும்.....


மாறினேன் பாவையாலே
மாறினது பாவை அல்ல
மாறனின்
மனைவி காவ்யா....
மாறனுக்காக அவனின்
மனநிம்மதிக்காக....
மாறும் ஒருநாள்
மாற்றம் ஒன்றே
மாறாதது
மாறும் என்ற
மனநிறைவுடன்....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 👏🏻 💐 🤩






 

Author: Mrs Beenaloganathan
Article Title: கவிக்குயிலின்_ கவி விமர்சனம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom