• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கவிக்குயிலின்_கவி விமர்சனம்

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
கடல்_தேடும்_மீன்கள்

#இளம்பிள்ளை

#கதைத்தறி போட்டிக் கதை

#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்

#கவிக்குயிலின்_கவி _ விமர்சனம்

கரையின் அழகில்
கடலை தாண்ட துடிக்க
கண்டிக்கும் தாயை கருத்தில் கொள்ளாமல்
கரைக்கு வர....

கரையில் பிழைக்க முடியாது என்ற
காரணத்தை
கஷ்டங்கள் பல கண்டு
காயங்கள் பல பெற்று
கண்ணீரில் புரிந்து
கடலில் சேர துடிக்கும்
கடல் மீன் இவள்.....


பெண்ணுக்கு
படிப்பை வலியுறுத்தும்
பெற்றவள்
பெற்றோர்களின்
பேச்சை கேட்காத
பிள்ளை நல்இனியா
நல்லா வருவமா....

பாசத்தை காட்டி
பார்வதி அத்தையின்
பணத்தாசை அறியாது
பசப்பு வார்த்தையில்
பாவை மயங்க....

படிக்கும் வயதில் காதல் என்னவோ?
பல பெண்களுக்கு புரிவதில்லை
படிப்பு தரும் தன்னம்பிக்கை
பல காதல் தருவதில்லை என்று
பல இன்னல்களை
பார்த்து புரிந்து கொண்டபின் தெளிவது பல பெண்களின் வாழ்வின் எடுத்துக்காட்டாய் இவள்...

புரிந்து செய்யும் தவறுகளுக்கு
பாவ மன்னிப்பு இல்லை
பட்டால் தான் புரியும்
பல பெண்களுக்கு....

தாயை எதிர்த்து
திருமணம் செய்து
தன் வாழ்க்கை என்
தன்னலம் கொண்டு
தொடங்கிய வாழ்வு
துயரத்தில் முடிய...

திருந்தாத ஜென்மம்
தான் கணவன் என்று
தெரிந்த நொடி தான்
தாயின் வார்த்தைகள்
தெளிவை தர...

தன் மகளுடன்
தனித்து நின்றாலும்
தன் வாழ்வை எண்ணி
துவண்டு போகாமல்
தைரியமாக முடிவெடுக்க
தன் படிப்பு தான்
துணை என்று புரிந்ததும்
தாயிடம் மன்னிப்பு கேட்க
துயர் நீங்கி
திருத்தி எழுதும்
திருத்தமான முடிவு.....

பணமும் பாசமும்
பிரித்து அறிய முடியாமல் காதல் கண்ணை மறைக்கும்
பல பெண்களின்
கண்ணீர் கதை இது....
கனமான கதை...

காதல் தவறில்லை
காலம் தான் தவறு
கல்வியின் அருமை கற்றலின் பொறுமை
காதில் அன்னையின் அறிவுரை
கேட்டிருந்தால்
காத்திருந்து கை பிடித்திருந்தால்
காதலும் சொர்க்கம்...

கெட்டதிலும் நல்லதாக கைவிடப்பட்ட நிலையிலும்
கடவுளைப் போல காக்க கனிந்த உள்ளம் உலகத்தில்
கரிகாலன் போல இருக்கிறார்கள்....

இளமை இழந்து இனிமையே இழந்து
இனிய உறவுகளைப் பிரிந்து
இன்னல்களைக் கடந்து
இனியா வாழ்வில்
இல்லை இனி
இன்பம் என்றிருந்த
இந்த வாழ்க்கையில் இனிய
தை சேர்த்த
இதமான முடிவு.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 👏🏻👏🏻👏🏻🤩💐💐💐👍🏻





 

Author: Mrs Beenaloganathan
Article Title: கவிக்குயிலின்_கவி விமர்சனம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom