பாவை - 5
இது மாறனுக்கு அதிர்ச்சி தான். இது அவன் அறிந்திடாத ஒன்று. "என்ன வேலன் சொல்றீங்க.? அவங்க தங்கச்சியும் மூனு பொண்ணுகள்ல ஒன்னா.? அப்ப ஏன் இவங்க போராட்டத்துக்கே வரல.?" என்று கேட்டான்.
ஆம் போராட்டம் நடந்த போது காசி அதில் கலந்துக் கொள்ளவில்லை. அதை மாறனும் அறிந்திருந்தான். இப்போது இங்கு வந்ததும் தான் அவனையே பார்க்கிறான் இவன். இதை வேலனிடம் கேட்கவும் செய்தான்.
"என்னனு தெரியல சார்.. ஆனா போராட்டம் நடந்தப்ப இவன் வரல.. நாங்க அவ்ளோ கூப்பிட்டும் போடா டேய் நம்ம போராட்டம் நடத்துனா மட்டும் செத்தவங்க திரும்பி வந்துருவாங்க பாருனு அவ்ளோ அலட்சியமா சொன்னான் சார்"
இவ்வளவு அலட்சியமான பதில் எதற்காக.? இறந்தது பெண்களில் அவனின் தங்கையும் ஒருத்தியாக இருக்கும் போது.? அவனை கெட்டவன் என்று ஒரேயடியாக பச்சைக் குத்தவும் முடியவில்லை. அதற்காக அவனை நல்லவன் என்று நம்பிடவும் முடியவில்லை.
காசி வருவதை உணர்ந்து "உன்னைய மறுபடியும் நான் கூப்பிடறேன்.. இப்ப கிளம்பு" என்று வேலனை அனுப்பி வைத்தான். காசி நீட்டிய காஃபியை வாங்கிய மாறன் "இப்படி உட்காரு.. கொஞ்சம் பேசலாம்" என்று கூறினான்.
"இல்ல சார்.. எனக்கு வேலை இருக்கு.. எதுவா இருந்தாலும் வேலன்கிட்ட பேசிக்கங்க.. அவனுக்கு எல்லாம் தெரியும்.. நான் கிளம்பறேன் சார்" என்றவன் மாறனின் பேச்சையும் கேளாமல் நகர்ந்தான்.
"இவன் மேல தப்பு இருக்குனு அடிச்சும் சொல்ல முடியல.. அதற்காக இவன் நல்லவனு விடவும் முடியலயே மாறன்.. இவனைக் கண்காணிக்க ஆளு ஒருத்தனைப் போடட்டுமா.? இவன் என்ன பண்றானு தெரிஞ்சுக்கலாம்" என்ற அதிரனிடம் வேணாம் என்று மறுப்பாக தலையசைத்தான் மாறன்.
அவன் எண்ணத்தில் வேறொரு சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. அது எந்தளவிற்கு உண்மையாக இருக்கும் என்பதை இவனால் கணிக்க முடியவில்லை. விட்டுப் பிடிப்போம் என்று நினைத்தும் கொண்டான்.
"எப்போவ் என்னப்பா பண்ணி வெச்சுருக்க.? உன்னைய யாரு அவங்ககிட்ட போய் பேச சொன்னது.? பேசுனதும் இல்லாம வீட்டு அட்ரஸை வேற எழுதி குடுத்துட்டு வந்துருக்க.? முதல்லயே அவருக்கு என் மேல காண்டு.. இதுல நீ இப்படி பண்ணுனதுல நம்ம மேல கொள்ளை கேசு ஒன்னைப் போட்டு உள்ள தூக்கிப் போட போறாரு பாரு" என்று பயத்தில் புலம்பினாள் காவ்யா.
ஆனால் அவளின் தந்தையோ "அந்த தம்பி அப்படியெல்லாம் பண்ணாது புள்ள.. அந்த தம்பியைப் பார்த்தா அந்தளவுக்கு மோசமா தெரியல.. நீ சும்மா பயப்படாம இரு.. இந்த அப்பன் எப்படியாவது உன்னைய அந்த தம்பி கூட சேர்த்து வெப்பேன்.. நீ எதுக்கும் கலங்க கூடாது புள்ள" என்றார் பாருங்களேன்.
காவ்யா தான் நொந்து விட்டாள். அய்யோ எதற்குப் பொய் சொன்னோம்.? அதுவும் அந்த தென்னைமரத்தைப் போய் கை காட்டுனோம் என்று.
காவ்யாவிற்கு அன்னை இல்லை. அவளின் பத்தாவது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரு வருடங்கள் அந்நோயுடன் போராடவும் செய்து பின்பு மரணத்தையும் தழுவினார். அதன் பின்பு காவ்யாவும் அவளின் தந்தையும் தான். ஒற்றைப் பிள்ளை என்பதால் அவளின் தந்தையும் இன்று வரை அவளை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்.
வீட்டில் இவர்கள் இருவரும் மட்டும் தான். அதனால் தான் என்னவோ தந்தையும் மகளும் நண்பர்களைப் போல் சரளமாக அனைத்தையும் பேசுவார்கள். பெண் பிள்ளை என்று காவ்யாவை அடக்கி வைக்க இவர் நினைக்க மாட்டார். தனக்குத் துணையாக தன் மனைவி விட்டுச் சென்ற சொத்து என்று மகளைப் பேணிக் காக்க செய்தாலும் அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கண்டிப்பும் காட்டுவார்.
வயதாகிறது என்று மகளுக்குத் திருமணம் செய்ய ஆசைப்பட, அவரின் ஆசை மகளோ தந்தையைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டுமே என்றெண்ணி திருமணம் வேணாமென்று மறுக்க, அவரும் விடாமல் நச்சரித்தார்.
அதில் தான் நான் ஒருவனை விரும்புவதாகக் கூறி மாறனிடம் சிக்கியும் கொண்டாள்.
இவளின் எந்த பேச்சையும் அவளின் தந்தை செவிமடுக்கவில்லை. எப்படியும் நீ விரும்பியவனுடன் உன்னைச் சேர்த்து வைத்து விடுவேன் என்றதையே திருப்பித் திருப்பிக் கூறிட, இவள் தான் நொந்துப் போனாள்.
'அய்யோ அய்யோ இதைய நான் யாருகிட்ட சொல்லி புலம்புவேன்.? எப்பவும் குமரேசன்கிட்ட தான் எல்லாத்தையும் புலம்புவேன்.. இப்ப இவரே எனக்கு பெயராய் தலைவலினா இந்த தலைவலியை யாருகிட்ட சொல்லுவேன்.? உன் வாய் தான் உனக்கு எதிரினு அப்பப்ப நிரூபணமும் ஆகிருது' என்று விடாமல் புலம்பினாள்.
அவளால் இதை எளிதாக கடந்து விட முடியவில்லை. மாறனின் பார்வையை பயத்தை அதிகரிக்கச் செய்ய, எப்போது என்ன நடக்குமோ.? என்ற அச்சத்தைச் சுமர்ந்தே நாட்களை ஓட்டினாள்.
தந்தையையும் வேலைக்கு விடவில்லை. 'நீ போனதும் அவங்க வந்துட்டா நான் என்ன பண்றது.?' என்று கேட்டே குமரேசனை வீட்டை விட்டு நகராமல் செய்தாள். அத்தியாவசிய தேவைக்காக அவர் வெளியில் சென்றாலும் 'நானும் வர்றேன்' என்று அவருடன் ஒட்டிக் கொள்ளவும் செய்தாள்.
இவள் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. ஒரு வாரமும் ஓடி விட, அதன் பின்பு தான் இவள் நிம்மதி பெருமூச்சும் விட்டாள். 'ஹப்பாடி எப்படியோ அவங்க என்னைய மறந்துட்டாங்க.. அதான் வரல' என்று நினைத்து ஆசுவாசமும் கொண்டாள்.
எப்போதும் போல் அவள் மட்டும் அவளின் தேவைக்காக கடைவீதிக்குச் செல்ல, அதிரனின் கண்களில் சிக்கினாள். 'இந்த பொண்ணு அந்த பொண்ணுல.?' என்று சிந்தனை வயப்பட்டு "இருடா வர்றேன்.." என்று மாறனிடம் கூறியவன் குடித்துக் கொண்டிருந்த காஃபியையும் வைத்து விட்டு ஓடினான்.
ஏனென்றும் கேட்கவில்லை. எதற்கென்றும் வினவவில்லை. அவன் எங்கு செல்கிறான் என்பதை மட்டும் லேசாக தலைச் சாய்த்து சாவகாசமாக பார்த்த மாறனின் பார்வை என்னமோ காஃபியில் தான் நிலைத்திருந்தது.
"ஏய் இந்தா பொண்ணே.. நில்லும்மா.. ஏய் பொண்ணே.. உன்னைய தான்" என்று காவ்யாவின் பின்னே இவன் ஓடிட, அவளுக்குத் தான் இவன் அழைத்தது கேட்கவில்லை. மூச்சு வாங்க அவளின் முன்பே சென்று இவன் நிற்க, 'ஆத்தாடி இவங்களா.?' என்று விழிகளை உருட்டியவளுக்குப் பயப்பந்தும் உருண்டது.
"கூப்பிட கூப்பிட போய்ட்டு இருக்க.? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.." என்று மூச்சு வாங்க கூறியவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
"உன்னைய அன்னைக்குப் பார்த்தது தான்.. அப்பறம் கண்ணுலயே படல.. எங்கம்மா போய்ட்ட.? நீ நல்லா இருக்க தானே.?" என்று அக்கறையுடன் வினவிட, இவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தான் தெரியவில்லை.
இவர்களின் கண்களில் சிக்கக் கூடாது என்று தான் இவள் வீட்டை விட்டு வெளியில் வரவே யோசித்தாள். என்னை மறந்திருப்பார்கள் என்று மகிழ்ச்சியடைந்தவளின் எண்ணமும் பொய்யாகிப் போய் இவனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறாள்.
"என்னம்மா இப்படி முழிக்கற.? ஏதாவது திருடிட்டு ஓடி வந்துட்டியா.? ஓஓஓஓ உன் ஆளைக் காணோம்னு தேடறீயா.? இரு அவனை வர சொல்றேன்" என்று அதிரன் திரும்பிட, "அண்ணா அண்ணா அதெல்லாம் இல்ல.. அவங்கள கூப்பிடாதீங்க.. ப்ளீஸ்ண்ணா.." என்று பதறினாள்.
"ஏன்மா.? நீதான் அவனைத் தேடுனீயே.?"
"நான் எப்பண்ணா அவங்களைத் தேடுனேன்.? நீங்களே ஏதாவது சொல்லாதீங்க"
"சரி சரி கோவப்படாதம்மா.. அப்பா நல்லா இருக்காரா.? அன்னைக்கு உன் அப்பா சொன்னது உண்மையா.?"
"...."
"மாறனை எப்ப பார்த்த நீ.?"
"...."
"அவனை எப்ப இருந்து உனக்குப் பிடிச்சுது.?"
"....."
"ஆனாலும் நீ தைரியமா உன் அப்பாகிட்ட சொல்லியே பேச சொல்லிட்டியே.. செம சூப்பரு போ.. இதைய நான் எதிர்பார்க்கவே இல்ல.. மாறனுக்கு ஏத்த ஜோடி தான்.."
"......"
"என்னம்மா அமைதியா இருக்க.? ஓஓஓ மாறன் சம்மதம் சொல்லுவானா.? இல்லையானு யோசனையா இருக்கா.? அவனைச் சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பும்மா"
"அண்ணா எனக்கு ஒரு உதவி பண்றீங்களா.? உங்களைய என் அண்ணனா நினைச்சுக் கேட்கறேன்"
"அட சொல்லும்மா.. காசா.? பணமா.? உதவி தானே.? சிறப்பா செஞ்சுருவோம்"
"என் அப்பா வந்து அவங்ககிட்ட பேசுனாலும் அவங்கள சம்மதிக்க விடாம பார்த்துக்கங்க அண்ணா.." என்று கூறி இவனுக்கு அதிர்ச்சியை வழங்கினாள்.
"ஏய் ஏய்ய்ய்ய்.. ஏன்மா.? ஏன்.? அவனைப் பிடிச்சுருக்குனு சொல்லித் தானே உன் அப்பா வந்து பேசுனாரு.. இப்ப என்ன நீ இப்படி சொல்ற.? அவன் என்ன சொல்லுவானு நினைச்சுப் பயப்படறீயா.? அவனை நினைச்சு எல்லாம் நீ பயப்பட வேணாம்.. அவனைச் சம்மதிக்க வைக்க வேண்டிய பொறுப்பு என்னோடதுனு சொல்லிட்டேன்.. முதல்ல கோவப்படுவான் அப்பறம் சரியாகிருவான்மா.. நீ அவனை நினைச்சுப் பயப்படாத.. சரியா.?" என்றான்.
காவ்யாவோ "அய்யோ அண்ணா நானே என் அப்பாகிட்ட பொய் சொன்னேன்.. அவரு இப்படி வந்து பேசுவாருனு நான் நினைக்கல.. நான் சும்மாத்தான் அப்படிச் சொன்னேன்.. அவரு அப்பவே உங்ககிட்ட வருவானு நானே எதிர்பார்க்கல" என்றே உண்மையைக் கூறினாள்.
இப்போது அதிர்வது அதிரனின் முறையாயிற்று. "என்னம்மா என்ன சொல்ற.? அவனை வெச்சு நீ விளையாடிருக்கீயா.?" என்று கேட்கவும் செய்ய, பெண்ணவள் தலை குனிந்தாள்.
"என் தப்புத்தான் அண்ணா.. என் அப்பா கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோனு விடாம நச்சரிச்சதுல நான் ஒருத்தரை லவ் பண்றேன்.. அவங்கள மறக்க முடியலனு பொய் சொன்னேன்.. அப்பவும் அது யாருனு கேட்டு நச்சரிச்சதுல அவங்கள கைகாட்ட வேண்டியதா போய்ருச்சு..
போலீஸ்னு என் அப்பா பேசாம அப்படியே விட்டுருவாங்கனு நினைச்சேன்.. ஆனா அவரு அப்பவே வந்து அவங்ககிட்ட பேசுவாங்கனு நான் நினைக்கல.. இப்பத்துக்குக் கல்யாணம் வேணாம்னு தான் இப்படியொரு பொய்யைச் சொன்னேன்ண்ணா..
எல்லாம் என் அப்பா பண்ணுன வேலை.. இதுக்குப் பயந்துட்டு தான் வீட்டை விட்டு வெளில வராம இருந்தேன்.. இப்ப உங்க கண்ணுல படுவேனு நான் நினைச்சும் பார்க்கல.." என்று படபடவென்று பதட்டத்துடன் உண்மையை உரைத்து விட்டாள்.
'அடப்பாவி' என்று அதிரன் வாயில் கை வைத்துத் திகைக்க, "ப்ளீஸ்ண்ணா என்னைய மன்னிச்சுருங்க.. என் அப்பாகிட்ட எப்படியாவது நான் பேசிக்கறேன்.. எனக்குத் தெரியாம என் அப்பா அவங்ககிட்ட பேசுனா அவங்க சம்மதம் சொல்லாம மட்டும் பார்த்துக்கங்க.. இது என் தப்புத்தான்.. தப்புத்தான்.. நான் ஒன்னு நினைச்சுப் பண்ணுனா அது வேற ஒன்னுல போய் முடியுது.. நான் என்னண்ணா பண்றது.?" என்று பாவமாக கேட்டாள்.
தவறு செய்து விட்டு ஆசிரியருக்குப் பயந்து நிற்கும் சிறுபிள்ளைப் போல் தான் இவள் காட்சியளித்தாள். அவளின் பாவமான பாவனைகளைக் கண்டு இவனுக்குப் பாசம் தான் பெருகியது.
சின்ன புன்னகையுடன் "எப்படியும் உன் அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வெக்கத் தான் போறாங்க.. அதுக்கு நீ மாறனையே கல்யாணம் பண்ணிக்கலாமே.? அவனுக்கு என்னம்மா குறை.?" என்று கேட்டான்.
வெந்நீர் காலில் கொட்டியது போல் பதறிய இவள் "அய்யய்யோ நான் மாட்டேன்ண்ணா.. மாட்டேன்.. அவங்கள எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.. நானே அவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கறதுனு யோசிச்சுட்டு இருந்தா நீங்க மறுபடியும் அவங்ககிட்ட மாட்டி விட பார்க்கறீங்க.? அவங்கள பார்த்தாலே எனக்குப் பயமா இருக்குண்ணா.. கைகால் எல்லாம் வேற நடுங்குது.. இதுல உங்களுக்கு இந்த விபரீத ஆசை தேவையா.? உங்க எண்ணத்தை இதோடு மறந்துருங்க.. ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.
இவளின் பதிலில் அதிரனுக்குச் சிரிப்பே பீறிட்டது. இருந்தும் சிரித்து அவளைச் சங்கடப்படுத்த விரும்பாமல் "சரிம்மா விடு.. நான் எதுவும் சொல்லல" என்றதோடு இருவரும் விடைப்பெற்றனர்.
அடுத்த நாள் காலையில் வாசலில் நின்றவனைக் கண்டு காவ்யாவுக்கு மயக்கமே வந்தது. "அப்பா" என்று கத்தவும் தவறவில்லை.
மயங்குவான்..
இது மாறனுக்கு அதிர்ச்சி தான். இது அவன் அறிந்திடாத ஒன்று. "என்ன வேலன் சொல்றீங்க.? அவங்க தங்கச்சியும் மூனு பொண்ணுகள்ல ஒன்னா.? அப்ப ஏன் இவங்க போராட்டத்துக்கே வரல.?" என்று கேட்டான்.
ஆம் போராட்டம் நடந்த போது காசி அதில் கலந்துக் கொள்ளவில்லை. அதை மாறனும் அறிந்திருந்தான். இப்போது இங்கு வந்ததும் தான் அவனையே பார்க்கிறான் இவன். இதை வேலனிடம் கேட்கவும் செய்தான்.
"என்னனு தெரியல சார்.. ஆனா போராட்டம் நடந்தப்ப இவன் வரல.. நாங்க அவ்ளோ கூப்பிட்டும் போடா டேய் நம்ம போராட்டம் நடத்துனா மட்டும் செத்தவங்க திரும்பி வந்துருவாங்க பாருனு அவ்ளோ அலட்சியமா சொன்னான் சார்"
இவ்வளவு அலட்சியமான பதில் எதற்காக.? இறந்தது பெண்களில் அவனின் தங்கையும் ஒருத்தியாக இருக்கும் போது.? அவனை கெட்டவன் என்று ஒரேயடியாக பச்சைக் குத்தவும் முடியவில்லை. அதற்காக அவனை நல்லவன் என்று நம்பிடவும் முடியவில்லை.
காசி வருவதை உணர்ந்து "உன்னைய மறுபடியும் நான் கூப்பிடறேன்.. இப்ப கிளம்பு" என்று வேலனை அனுப்பி வைத்தான். காசி நீட்டிய காஃபியை வாங்கிய மாறன் "இப்படி உட்காரு.. கொஞ்சம் பேசலாம்" என்று கூறினான்.
"இல்ல சார்.. எனக்கு வேலை இருக்கு.. எதுவா இருந்தாலும் வேலன்கிட்ட பேசிக்கங்க.. அவனுக்கு எல்லாம் தெரியும்.. நான் கிளம்பறேன் சார்" என்றவன் மாறனின் பேச்சையும் கேளாமல் நகர்ந்தான்.
"இவன் மேல தப்பு இருக்குனு அடிச்சும் சொல்ல முடியல.. அதற்காக இவன் நல்லவனு விடவும் முடியலயே மாறன்.. இவனைக் கண்காணிக்க ஆளு ஒருத்தனைப் போடட்டுமா.? இவன் என்ன பண்றானு தெரிஞ்சுக்கலாம்" என்ற அதிரனிடம் வேணாம் என்று மறுப்பாக தலையசைத்தான் மாறன்.
அவன் எண்ணத்தில் வேறொரு சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. அது எந்தளவிற்கு உண்மையாக இருக்கும் என்பதை இவனால் கணிக்க முடியவில்லை. விட்டுப் பிடிப்போம் என்று நினைத்தும் கொண்டான்.
"எப்போவ் என்னப்பா பண்ணி வெச்சுருக்க.? உன்னைய யாரு அவங்ககிட்ட போய் பேச சொன்னது.? பேசுனதும் இல்லாம வீட்டு அட்ரஸை வேற எழுதி குடுத்துட்டு வந்துருக்க.? முதல்லயே அவருக்கு என் மேல காண்டு.. இதுல நீ இப்படி பண்ணுனதுல நம்ம மேல கொள்ளை கேசு ஒன்னைப் போட்டு உள்ள தூக்கிப் போட போறாரு பாரு" என்று பயத்தில் புலம்பினாள் காவ்யா.
ஆனால் அவளின் தந்தையோ "அந்த தம்பி அப்படியெல்லாம் பண்ணாது புள்ள.. அந்த தம்பியைப் பார்த்தா அந்தளவுக்கு மோசமா தெரியல.. நீ சும்மா பயப்படாம இரு.. இந்த அப்பன் எப்படியாவது உன்னைய அந்த தம்பி கூட சேர்த்து வெப்பேன்.. நீ எதுக்கும் கலங்க கூடாது புள்ள" என்றார் பாருங்களேன்.
காவ்யா தான் நொந்து விட்டாள். அய்யோ எதற்குப் பொய் சொன்னோம்.? அதுவும் அந்த தென்னைமரத்தைப் போய் கை காட்டுனோம் என்று.
காவ்யாவிற்கு அன்னை இல்லை. அவளின் பத்தாவது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரு வருடங்கள் அந்நோயுடன் போராடவும் செய்து பின்பு மரணத்தையும் தழுவினார். அதன் பின்பு காவ்யாவும் அவளின் தந்தையும் தான். ஒற்றைப் பிள்ளை என்பதால் அவளின் தந்தையும் இன்று வரை அவளை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்.
வீட்டில் இவர்கள் இருவரும் மட்டும் தான். அதனால் தான் என்னவோ தந்தையும் மகளும் நண்பர்களைப் போல் சரளமாக அனைத்தையும் பேசுவார்கள். பெண் பிள்ளை என்று காவ்யாவை அடக்கி வைக்க இவர் நினைக்க மாட்டார். தனக்குத் துணையாக தன் மனைவி விட்டுச் சென்ற சொத்து என்று மகளைப் பேணிக் காக்க செய்தாலும் அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கண்டிப்பும் காட்டுவார்.
வயதாகிறது என்று மகளுக்குத் திருமணம் செய்ய ஆசைப்பட, அவரின் ஆசை மகளோ தந்தையைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டுமே என்றெண்ணி திருமணம் வேணாமென்று மறுக்க, அவரும் விடாமல் நச்சரித்தார்.
அதில் தான் நான் ஒருவனை விரும்புவதாகக் கூறி மாறனிடம் சிக்கியும் கொண்டாள்.
இவளின் எந்த பேச்சையும் அவளின் தந்தை செவிமடுக்கவில்லை. எப்படியும் நீ விரும்பியவனுடன் உன்னைச் சேர்த்து வைத்து விடுவேன் என்றதையே திருப்பித் திருப்பிக் கூறிட, இவள் தான் நொந்துப் போனாள்.
'அய்யோ அய்யோ இதைய நான் யாருகிட்ட சொல்லி புலம்புவேன்.? எப்பவும் குமரேசன்கிட்ட தான் எல்லாத்தையும் புலம்புவேன்.. இப்ப இவரே எனக்கு பெயராய் தலைவலினா இந்த தலைவலியை யாருகிட்ட சொல்லுவேன்.? உன் வாய் தான் உனக்கு எதிரினு அப்பப்ப நிரூபணமும் ஆகிருது' என்று விடாமல் புலம்பினாள்.
அவளால் இதை எளிதாக கடந்து விட முடியவில்லை. மாறனின் பார்வையை பயத்தை அதிகரிக்கச் செய்ய, எப்போது என்ன நடக்குமோ.? என்ற அச்சத்தைச் சுமர்ந்தே நாட்களை ஓட்டினாள்.
தந்தையையும் வேலைக்கு விடவில்லை. 'நீ போனதும் அவங்க வந்துட்டா நான் என்ன பண்றது.?' என்று கேட்டே குமரேசனை வீட்டை விட்டு நகராமல் செய்தாள். அத்தியாவசிய தேவைக்காக அவர் வெளியில் சென்றாலும் 'நானும் வர்றேன்' என்று அவருடன் ஒட்டிக் கொள்ளவும் செய்தாள்.
இவள் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. ஒரு வாரமும் ஓடி விட, அதன் பின்பு தான் இவள் நிம்மதி பெருமூச்சும் விட்டாள். 'ஹப்பாடி எப்படியோ அவங்க என்னைய மறந்துட்டாங்க.. அதான் வரல' என்று நினைத்து ஆசுவாசமும் கொண்டாள்.
எப்போதும் போல் அவள் மட்டும் அவளின் தேவைக்காக கடைவீதிக்குச் செல்ல, அதிரனின் கண்களில் சிக்கினாள். 'இந்த பொண்ணு அந்த பொண்ணுல.?' என்று சிந்தனை வயப்பட்டு "இருடா வர்றேன்.." என்று மாறனிடம் கூறியவன் குடித்துக் கொண்டிருந்த காஃபியையும் வைத்து விட்டு ஓடினான்.
ஏனென்றும் கேட்கவில்லை. எதற்கென்றும் வினவவில்லை. அவன் எங்கு செல்கிறான் என்பதை மட்டும் லேசாக தலைச் சாய்த்து சாவகாசமாக பார்த்த மாறனின் பார்வை என்னமோ காஃபியில் தான் நிலைத்திருந்தது.
"ஏய் இந்தா பொண்ணே.. நில்லும்மா.. ஏய் பொண்ணே.. உன்னைய தான்" என்று காவ்யாவின் பின்னே இவன் ஓடிட, அவளுக்குத் தான் இவன் அழைத்தது கேட்கவில்லை. மூச்சு வாங்க அவளின் முன்பே சென்று இவன் நிற்க, 'ஆத்தாடி இவங்களா.?' என்று விழிகளை உருட்டியவளுக்குப் பயப்பந்தும் உருண்டது.
"கூப்பிட கூப்பிட போய்ட்டு இருக்க.? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.." என்று மூச்சு வாங்க கூறியவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
"உன்னைய அன்னைக்குப் பார்த்தது தான்.. அப்பறம் கண்ணுலயே படல.. எங்கம்மா போய்ட்ட.? நீ நல்லா இருக்க தானே.?" என்று அக்கறையுடன் வினவிட, இவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தான் தெரியவில்லை.
இவர்களின் கண்களில் சிக்கக் கூடாது என்று தான் இவள் வீட்டை விட்டு வெளியில் வரவே யோசித்தாள். என்னை மறந்திருப்பார்கள் என்று மகிழ்ச்சியடைந்தவளின் எண்ணமும் பொய்யாகிப் போய் இவனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறாள்.
"என்னம்மா இப்படி முழிக்கற.? ஏதாவது திருடிட்டு ஓடி வந்துட்டியா.? ஓஓஓஓ உன் ஆளைக் காணோம்னு தேடறீயா.? இரு அவனை வர சொல்றேன்" என்று அதிரன் திரும்பிட, "அண்ணா அண்ணா அதெல்லாம் இல்ல.. அவங்கள கூப்பிடாதீங்க.. ப்ளீஸ்ண்ணா.." என்று பதறினாள்.
"ஏன்மா.? நீதான் அவனைத் தேடுனீயே.?"
"நான் எப்பண்ணா அவங்களைத் தேடுனேன்.? நீங்களே ஏதாவது சொல்லாதீங்க"
"சரி சரி கோவப்படாதம்மா.. அப்பா நல்லா இருக்காரா.? அன்னைக்கு உன் அப்பா சொன்னது உண்மையா.?"
"...."
"மாறனை எப்ப பார்த்த நீ.?"
"...."
"அவனை எப்ப இருந்து உனக்குப் பிடிச்சுது.?"
"....."
"ஆனாலும் நீ தைரியமா உன் அப்பாகிட்ட சொல்லியே பேச சொல்லிட்டியே.. செம சூப்பரு போ.. இதைய நான் எதிர்பார்க்கவே இல்ல.. மாறனுக்கு ஏத்த ஜோடி தான்.."
"......"
"என்னம்மா அமைதியா இருக்க.? ஓஓஓ மாறன் சம்மதம் சொல்லுவானா.? இல்லையானு யோசனையா இருக்கா.? அவனைச் சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பும்மா"
"அண்ணா எனக்கு ஒரு உதவி பண்றீங்களா.? உங்களைய என் அண்ணனா நினைச்சுக் கேட்கறேன்"
"அட சொல்லும்மா.. காசா.? பணமா.? உதவி தானே.? சிறப்பா செஞ்சுருவோம்"
"என் அப்பா வந்து அவங்ககிட்ட பேசுனாலும் அவங்கள சம்மதிக்க விடாம பார்த்துக்கங்க அண்ணா.." என்று கூறி இவனுக்கு அதிர்ச்சியை வழங்கினாள்.
"ஏய் ஏய்ய்ய்ய்.. ஏன்மா.? ஏன்.? அவனைப் பிடிச்சுருக்குனு சொல்லித் தானே உன் அப்பா வந்து பேசுனாரு.. இப்ப என்ன நீ இப்படி சொல்ற.? அவன் என்ன சொல்லுவானு நினைச்சுப் பயப்படறீயா.? அவனை நினைச்சு எல்லாம் நீ பயப்பட வேணாம்.. அவனைச் சம்மதிக்க வைக்க வேண்டிய பொறுப்பு என்னோடதுனு சொல்லிட்டேன்.. முதல்ல கோவப்படுவான் அப்பறம் சரியாகிருவான்மா.. நீ அவனை நினைச்சுப் பயப்படாத.. சரியா.?" என்றான்.
காவ்யாவோ "அய்யோ அண்ணா நானே என் அப்பாகிட்ட பொய் சொன்னேன்.. அவரு இப்படி வந்து பேசுவாருனு நான் நினைக்கல.. நான் சும்மாத்தான் அப்படிச் சொன்னேன்.. அவரு அப்பவே உங்ககிட்ட வருவானு நானே எதிர்பார்க்கல" என்றே உண்மையைக் கூறினாள்.
இப்போது அதிர்வது அதிரனின் முறையாயிற்று. "என்னம்மா என்ன சொல்ற.? அவனை வெச்சு நீ விளையாடிருக்கீயா.?" என்று கேட்கவும் செய்ய, பெண்ணவள் தலை குனிந்தாள்.
"என் தப்புத்தான் அண்ணா.. என் அப்பா கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோனு விடாம நச்சரிச்சதுல நான் ஒருத்தரை லவ் பண்றேன்.. அவங்கள மறக்க முடியலனு பொய் சொன்னேன்.. அப்பவும் அது யாருனு கேட்டு நச்சரிச்சதுல அவங்கள கைகாட்ட வேண்டியதா போய்ருச்சு..
போலீஸ்னு என் அப்பா பேசாம அப்படியே விட்டுருவாங்கனு நினைச்சேன்.. ஆனா அவரு அப்பவே வந்து அவங்ககிட்ட பேசுவாங்கனு நான் நினைக்கல.. இப்பத்துக்குக் கல்யாணம் வேணாம்னு தான் இப்படியொரு பொய்யைச் சொன்னேன்ண்ணா..
எல்லாம் என் அப்பா பண்ணுன வேலை.. இதுக்குப் பயந்துட்டு தான் வீட்டை விட்டு வெளில வராம இருந்தேன்.. இப்ப உங்க கண்ணுல படுவேனு நான் நினைச்சும் பார்க்கல.." என்று படபடவென்று பதட்டத்துடன் உண்மையை உரைத்து விட்டாள்.
'அடப்பாவி' என்று அதிரன் வாயில் கை வைத்துத் திகைக்க, "ப்ளீஸ்ண்ணா என்னைய மன்னிச்சுருங்க.. என் அப்பாகிட்ட எப்படியாவது நான் பேசிக்கறேன்.. எனக்குத் தெரியாம என் அப்பா அவங்ககிட்ட பேசுனா அவங்க சம்மதம் சொல்லாம மட்டும் பார்த்துக்கங்க.. இது என் தப்புத்தான்.. தப்புத்தான்.. நான் ஒன்னு நினைச்சுப் பண்ணுனா அது வேற ஒன்னுல போய் முடியுது.. நான் என்னண்ணா பண்றது.?" என்று பாவமாக கேட்டாள்.
தவறு செய்து விட்டு ஆசிரியருக்குப் பயந்து நிற்கும் சிறுபிள்ளைப் போல் தான் இவள் காட்சியளித்தாள். அவளின் பாவமான பாவனைகளைக் கண்டு இவனுக்குப் பாசம் தான் பெருகியது.
சின்ன புன்னகையுடன் "எப்படியும் உன் அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வெக்கத் தான் போறாங்க.. அதுக்கு நீ மாறனையே கல்யாணம் பண்ணிக்கலாமே.? அவனுக்கு என்னம்மா குறை.?" என்று கேட்டான்.
வெந்நீர் காலில் கொட்டியது போல் பதறிய இவள் "அய்யய்யோ நான் மாட்டேன்ண்ணா.. மாட்டேன்.. அவங்கள எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.. நானே அவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கறதுனு யோசிச்சுட்டு இருந்தா நீங்க மறுபடியும் அவங்ககிட்ட மாட்டி விட பார்க்கறீங்க.? அவங்கள பார்த்தாலே எனக்குப் பயமா இருக்குண்ணா.. கைகால் எல்லாம் வேற நடுங்குது.. இதுல உங்களுக்கு இந்த விபரீத ஆசை தேவையா.? உங்க எண்ணத்தை இதோடு மறந்துருங்க.. ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.
இவளின் பதிலில் அதிரனுக்குச் சிரிப்பே பீறிட்டது. இருந்தும் சிரித்து அவளைச் சங்கடப்படுத்த விரும்பாமல் "சரிம்மா விடு.. நான் எதுவும் சொல்லல" என்றதோடு இருவரும் விடைப்பெற்றனர்.
அடுத்த நாள் காலையில் வாசலில் நின்றவனைக் கண்டு காவ்யாவுக்கு மயக்கமே வந்தது. "அப்பா" என்று கத்தவும் தவறவில்லை.
மயங்குவான்..
Author: AArani
Article Title: பாவை - 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: பாவை - 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.