• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பாவை - 11

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
பாவை - 11





இதோ மாறனின் துணைவியாக அவனின் வீட்டில் நுழைந்து விட்டாள் காவ்யா. திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருக்க, இருவரும் அதிகமாக பேசிக் கொள்ளவில்லை. ஆனால் இருவரின் பார்வையும் மற்றொருவரைப் பின்தொடர்வதை மட்டும் நிறுத்தவில்லை.

எந்த தைரியத்தில் மாறனைத் திருமணம் செய்துக் கொண்டு வந்தாள் என்று கேட்டால் அவளின் பதில் என்னமோ நிச்சயமாக எனக்கு தெரியவில்லை என்பது தான்.

அவளின் தந்தை இவளின் விருப்பத்திற்குச் சம்மதித்ததையே இவளால் நம்ப முடியவில்லை. இதில் இரண்டு மாதத்திலே திருமணம் என்பதை அவளால் எங்ஙனம் நம்ப முடியும்.?

திருமணத்திற்கு முன்பும் அவன் பேசவில்லை.. பின்பும் பேசவில்லை. அதெல்லாம் இவளுக்கு ஒரு குறையாக தோன்றவும் இல்லை. திருமண வாழ்வின் தொடக்கமே மௌனமாக ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்வது தான்.

இவள் மாறனைப் புரிந்துக் கொள்ள முயல்கிறாள். அவனின் குணம் என்னவென்றும் உணர்ந்து கொண்டாள். அவனின் தந்தையை இவன் ஏதாவது பேசும்போது யாரும் குறுக்கே செல்ல கூடாது. மீறி சென்று பேசினால் அவர்களையும் யோசிக்காமல் காயப்படுத்தி விடுவான். பின்பு அதற்காக வருந்துபவனும் இல்லை.

என் பேச்சையும் மீறி இடையில் வந்தது உங்கள் தவறு தானே.? என்று அசால்ட்டாக கேட்டும் விடுவான். இவனிடம் வாயைக் குடுப்பதை விட அமைதியாக இருந்து விடுவதே மேல் என்பதை மட்டும் நன்றாகவே புரிந்துக் கொண்டாள் காவ்யா.

இப்போதும் அவனின் தந்தையை என்னமோ சொல்கிறான். அவரும் அதைக் கேட்டும் கேட்காததுமாக இருக்கிறான். கணவனுடன் தந்தையைக் காண வந்த ஹேமா அண்ணனின் வார்த்தைகளில் கோவமுற்று "அவங்க தப்பு பண்ணுனவங்க தான்.. அதுக்காக இப்படித்தான் தரக்குறைவாக பேசிட்டே இருப்பீங்களா.? அப்படி பேசுனா நடந்தது எல்லாம் இல்லைனு ஆகிருமா.? ஒரு மனுசனுக்கு அழகே அடுத்தவங்க செஞ்ச தப்பை மன்னிக்கறது தான்..

உங்களுக்கு அந்த மனப்பான்மை கொஞ்சங்கூட இல்லை.. உங்களால அப்பாவைப் பார்க்க முடியலனா சொல்லுங்க.. நான் கூட்டிட்டு போயிறேன்.. இல்லன்னா ஏதாவது ஆசிரமத்துல சேர்த்து விட்டு பார்த்துக்கறேன்.. அங்கையாவது அவங்க நிம்மதியா இருக்கட்டும்" என்று கணவன் இருக்கும் தைரியத்தில் பேசினாள்.

மாறனின் பார்வை தங்கையை பொசுக்கவில்லை. மாறாக நண்பனைச் சுட்டெரிக்கும் சூரியனாக பொசுக்கி தள்ளியது.. அவனால் சமாளிக்க முடியவில்லை. மனைவியை அமைதியாக இரு என்று எப்படி கூற முடியும் அவனால்.? அப்படி கூறினாலும் உன் அம்மாவை இப்படி பேசறப்ப அமைதியா தான் இருப்பீங்களா.? என்று திருப்பிக் கேட்டு விட்டால் இவனுக்குத் தான் அசிங்கமாக போய் விடும்.

அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் செல்லாமல் ஓரமாக நின்று விடலாம் என்று நினைத்தால் நண்பன் விட மாட்டான் போலும். பாவமாக காவ்யாவை ஏறிட, அவளோ இவனைப் பார்ப்பதாக தெரியவில்லை. ஒரு முறை இவள் இடையில் நுழைந்து வாங்கிக் கட்டி கொண்டதை ஜென்மத்திற்கும் மறக்க மாட்டான். அந்தளவிற்கு அல்லவா வார்த்தைகளை அவளின் கணவன் பரிசளித்திருக்கிறான்.

'ப்ச் நானும் அமைதியா நிற்கலாம்னு பார்த்தா இவன் என்னையவே முறைச்சுட்டு இருக்கான்.. அவன் தங்கச்சி பேசறதுக்கு நான் என்ன பண்ண முடியும்.? நானா இப்படி பேச சொன்னேன்.? அவகிட்டயே சண்டை போடறதை விட்டுட்டு என்னைய இப்படி முறைக்கறதுல என்ன அர்த்தம்.?' என்ற புலம்பல் தான் அதிரனிடம்.




தந்தையை நினைத்து ஹேமாவின் அழுகை அதிகமானது. அவரோ அழுகாதே என்பதைப் போல் கையைக் காட்டியவர் அமைதியாக படுத்துக் கொள்ள, காவ்யாவுக்கும் அவரைப் பார்க்க பாவமாக தான் இருந்தது.

அவளால் என்ன செய்ய முடியும்.? பேச முயன்றால் பேசலாம்.. இவனிடம் பேசுவதும் பேசாமல் இருப்பதும் ஒன்றாயிற்றே. அவரை நினைத்து வருத்தப்படுவதை தவிர வேறு வழியுமில்லை.

மாறனின் கோவமும் ஒரு வகையில் நியாயமாக இருந்தாலும் இன்னும் எத்தனை வருடங்களுக்கு இப்படி கோவத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு சுற்ற போகிறான்.? அவனின் அன்னை இருந்தால் கூட இது தவறு என்று கண்டிக்கவே செய்திருப்பார்.

அவனுக்குப் புரியும்படி எடுத்துரைக்கும் அளவிற்கு காவ்யாவிற்கும் இன்னும் பக்குவம் வரவில்லை. இது தவறு என்று கூற மட்டுமே அவளால் முடியும் அவ்வளவே. அப்படி கூறினால் மட்டும் சரியென்று கேட்டு விடுவானா இவன்.?

அண்ணன் தங்கை இருவரும் சண்டைக்கோழிகளாக சிலிர்த்துக் கொண்டு நின்றிருக்க, அவர்களின் துணைகளைத் தான் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர்.

"ஹேமா நீங்க வாங்க" என்று வலுக்கட்டாயமாக காவ்யா அவளை அழைத்துச் செல்ல, இது தப்புடா என்ற அதிரனைக் கடுமையாக முறைத்தான் மாறன்.

"நீ முறைச்சாலும் தப்பு தப்புத்தான்.. இந்த மனுசனை இன்னும் எத்தனை நாளைக்கு தான் உன் பேச்சால சாவடிப்ப.? பாவம்டா அவரு.. இளமைல எல்லாரும் ஆடாத ஆட்டம் ஆட தான் செய்யறாங்க.. முதுமைல அடங்கி விடறாங்க.. அதுக்கு இவரு மட்டும் விதிவிலக்கா என்ன.? மன்னிச்சு விட்டா தான் என்னவாமா.?" என்று அலுத்துப் போய் கூறினான் அதிரன்.

"இதெல்லாம் வக்கனையா பேசு.. நான் சொன்ன வேலையை முடிச்சீயா இல்லையா.?" என்று பேச்சைத் திசை மாற்றிட, "உன்னைய திருத்தவே முடியாது" என்று கூறி "அதெல்லாம் பக்காவா முடிச்சுட்டேன்.. ஆனா அந்த ஆளு எப்படியும் வெளில வந்துருவாருனு தான் தோணுது" என்றான் வருத்தமாக.

இன்னும் மீனவப்பெண்களின் வழக்கு முடிவுக்கு வரவில்லை. சிலைக்கடத்தல் தெரிய வந்ததால் தான் அந்த பெண்களை இவர் கொன்றார் என்று தரகேஷ் அளித்த ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் இவர்கள் சமர்பிக்க, திருநீலகண்டன் வீட்டைச் சோதனையிடவும் அவரை விசாரிக்கவும் உத்தரவிட்டு அன்றைய நாள் முடிந்தது.

இப்போது திருநீலகண்டன் காவல்துறையின் கண்காணிப்பில் தான் இருக்கிறார். அவரின் மேல் சிறு துரும்பும் படக்கூடாது என்று உத்தரவாக மேலிடம் கூறியும் விட்டது.

எப்படி விசாரித்தாலும் நான் அப்படி எதுவும் செய்யவில்லை என்பது தான் அவரின் பதிலாக வெளி வந்தது. அவரின் முகத்தில் சிறிதும் பயமில்லை. செய்த தவறுக்கான அறிகுறியும் தென்படவில்லை. அவரின் வீட்டைச் சோதனையிட்டபோது கூட அப்படி ஒன்றும் அங்கு நடக்கவில்லை என்பது தான் பதிலாக வந்தது.

நாளை மறுநாள் இறுதி தீர்ப்பும் கிடைக்க உள்ளது. அதற்குள் வேறெதாவது தடயம் கிடைக்குமா.? என்று இவர்கள் இருவரும் ஓயாமல் தேடுகின்றனர். கிடைத்த ஆதாரமும் போதவில்லை. அனைத்தும் பணத்தைக் கொண்டே அங்கு நடக்கிறது.

அந்த கடுப்பில் தான் மாறன் சுற்றிக் கொண்டிருக்கிறான். இந்நேரத்தில் அவனின் தந்தை வேறு அவனிடம் வாயைக் குடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டது தான் மிச்சம்.

"வந்துருவாரு இல்ல வந்துருவான்.. நம்ம என்ன தான் நாயா பேயா அலைஞ்சு தடயத்தைக் கண்டுபிடிச்சாலும் அவ்வளவு சீக்கிரத்துல அவனுக்குத் தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை. அவனுக்கு மேல ஒருத்தன் இருக்கறான் பாரு அந்த தைரியத்துல தான் இவனோட முகத்துல கொஞ்சங்கூட பயம் தெரிய மாட்டிங்குது.. எனத்
தை சொல்றது.?" என்றவனின் கடுப்பு இன்னும் ஏறவே செய்தது.


மாறுவான்..
 

Author: AArani
Article Title: பாவை - 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
197
மன்னிக்குறவன் மனுஷன்
மறப்பவன் மகா மனுஷன்
மாறன் இங்கு
மன்னிக்கவும் இல்லை
மறக்கவும் இல்லை...
மனைவி வந்தும்
மாறவில்லை....
மாற்றம் ஒன்றே
மாறாதது ....பார்ப்போம்...
 

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
மன்னிக்குறவன் மனுஷன்
மறப்பவன் மகா மனுஷன்
மாறன் இங்கு
மன்னிக்கவும் இல்லை
மறக்கவும் இல்லை...
மனைவி வந்தும்
மாறவில்லை....
மாற்றம் ஒன்றே
மாறாதது ....பார்ப்போம்...
😍🤩🤩🤩
 
Top Bottom