அத்தியாயம் - 2
அதே ஞாயிற்றுக்கிழமை, சென்னை பெசன்ட் நகரில் பீச் ஃபேசிங் பங்களா என்று சொல்லும் படியான அந்தப் பெரிய வீடு விழாக்கோலம் பூண்டு இருந்தது. வாசலில் போடப் பட்டிருந்த செம்மண் கரையிட்ட பெரிய படிக் கோலமும் கட்டி இருந்த தோரணங்களும் அதை உறுதி செய்தன.
வெளித்தோற்றத்தில் பழமையானதாகக் காட்சி அளித்தாலும் உள்ளே நுழைந்து பார்த்தால் மட்டுமே வீட்டின் நவீனம் தெரியும்.
அதிகாலையிலேயே வீட்டினுள் தெரிந்த பரபரப்பு இன்றைய விழாவின் கதாநாயகியைப் பெருமிதம் கொள்ளச் செய்தது, காரணம் அவரது வாரிசுகளிடையே நிலவிய ஒற்றுமை. குடும்பங்கள் தனித் தனியே வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தாலும் விழாக்கள் பண்டிகைகள் என்று வரும் போது ஒன்றாகக் கூடுவதும் எதையும் பங்கிட்டுச் செய்வதிலும் இந்தக் காலத்தில் அருகி விட்ட விஷயமாகிற்றே. ஆனாலும் முக்கியமான ஒருவன் வந்து சேர்ந்தானா தெரியவில்லை.
'என் கண்ணே பட்டுடும் போல இருக்கே. எல்லாருக்கும் ராத்திரி மறக்காமல் சுத்திப் போடணும்' மனதுக்குள் நினைத்துக் கொண்டவருக்குத் தெரியாது, அந்த ஒற்றுமையைச் சற்றே ஆட்டம் காண வைக்கும் நிகழ்வு ஒன்று இன்றே அதுவும் காலையிலேயே அரங்கேறப் போகிறதென்று.
யோசனையின் ஊடே புடவையைக் கட்டி முடித்தார். பச்சை நிறத்தில் மெஜந்தா பார்டருடன் அவருக்கென பிரத்யேகமாக ஆர்டர் கொடுத்து நெய்யப் பட்ட மடிசாரில் தெய்வீகமான இருந்தவர் கண்ணாடி முன் நின்றார். இது வரை தூங்கிக் கொண்டிருக்கும் கணவரைத் தொந்தரவு செய்யாமல் இருட்டில் வேலை செய்தவர் இப்போது வேறு வழியின்றி சுவிட்சைத் தட்டினார். அவர், திருமதி.ராஜலக்ஷ்மி சேஷாத்ரி.
சிங்கார் ஆஷாவை (குங்குமம் இடுவற்கான base இது. சிவப்பு நிறத்தில் பேஸ்ட் மாதிரி இருக்கும். பேச்சு வழக்கில் அதன் பெயர் ஆஷாவாகிப் போனது. அம்பர் என்றும் அழைப்பர்) எடுத்து நெற்றியில் நாலணா அளவில் பெரிய வட்டம் போட்டவர் நாலாம் நம்பர் சுகந்தா குங்குமத்தைக் கையில் எடுத்தார். நெற்றியில் இட்டுக் கொண்டு பின் வகிட்டிலும் குங்குமத்தை வைத்துக் கொண்டார்.
கண்ணாடி வழியே கணவர் எழுந்து அமர்ந்து இருப்பதைப் பார்த்தவர் அவசரமாக, "Wish you a very happy Anniversary ன்னா" என்றார். அன்று தான் திருமணம் ஆனது போல அவரது முகத்தில் ஒரு நாணம், முகம் சிவந்து போனது.
சேஷாத்ரி மனைவியின் நாணத்தையும் சிவந்த முகத்தையும் பெரிதும் ரசித்தார் என்றாலும் வார்த்தைகளில் வேறு சொன்னார்.
"அது சரி. இப்போ என்ன நான் same to you சொல்லணுமோ?"
இன்றோடு அறுபது வருட திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக கடந்திருக்கும் ஆதர்ச தம்பதியர் இவர்கள்.
"சொன்னா என்னவாம்?" என்ற ராஜலக்ஷ்மியின் குரல் அறுபது வருடங்களுக்கு முந்தையதாக இருந்தது.
"ஏய்.. சரியா போச்சு போ. நீ என்ன இன்னைக்கு தான் புதுசா கல்யாணம் ஆன மாதிரி வெட்கப் படறே. பேரன் பேத்திக்கெல்லாம் கல்யாணம் பண்ற வயசாச்சு. ஞாபகம் இருக்கட்டும்."
"ஹூக்கும்.." என்று தோளில் இடித்துக் கொண்டு, "ஞாபகத்தைப் பத்தி நீங்க பேசறேள். எல்லாம் என் நேரம். ஏதோ நம்ம பசங்க எல்லாம் தலையெடுத்ததுக்கு அப்புறம் தான் இந்த நாளெல்லாம் தெரியறது உங்களுக்கு. முதல் கல்யாண நாளையே மறந்துட்டு ஆஃபீஸ் டூர் போன ஆள் தானே நீங்க!"
"அட ராமா! இதோ ஆச்சு அறுபது வருஷம். இன்னும் அதை மறக்கவே மாட்டியா நீ. "
"மறக்கறதா?? எப்படி மறக்க முடியும்? அன்னைக்கு எங்கம்மா உங்கம்மான்னு ஆரம்பிச்சு எல்லாரும் ஏதோ எனக்கு சாமர்த்தியம் போறாதுன்னு எவ்வளவு பேசினா. அதிலேயும் உங்க மன்னி எங்க ஆத்துக்காரர்லாம் அப்படி கிடையாது, எனக்கு அதை வாங்கித் தந்தார் இதை வாங்கித் தந்தார்னு லிஸ்ட் போட்டு என் வயித்தெரிச்சலைக் கொட்டிண்டா. அதோட விட்டாளா? வருஷா வருஷம் அதை ஞாபகப் படுத்தி.. அப்பப்பா.. நான் பட்ட அவஸ்தை கொஞ்சநஞ்சமா? உங்களுக்கென்ன.. நீங்க மாட்டுக்கு இன்னும் ஞாபகம் வச்சிண்டிருக்கியான்னு ஒரே வார்த்தைல கேட்டுட்டேள்"
படபடவென்று பேசியபடி மூச்சு வாங்கிய மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தவரை போனால் போகிறது என்று சமாதானப் படுத்த விழைந்தார் ராஜலக்ஷ்மி. "சரி சரி, போய் குளிச்சிட்டு வாங்கோ. உங்க பீரோல மேலாக உங்களுக்கு வேஷ்டி, உத்தரீயம் எடுத்து வச்சிருக்கேன். பழக்க தோஷத்துல மடிசஞ்சியைக் கட்டிண்டு வந்து நிக்காதீங்கோ. மறக்காமல் இந்த செயினைப் போட்டுண்டு வாங்கோ. நான் போய் எல்லாரும் எழுந்தாச்சான்னு பாக்கறேன்"
"அதெல்லாம் நீ ஒன்னும் பார்க்க வேண்டாம். எல்லாம் சரியா தான் நடக்கும். இந்த பசங்களைப் பார்த்தியா ராஜம்? சொல்லச் சொல்லக் கேட்காம இத்தனை அமர்க்களம் பண்றா. வயசான காலத்துல இதெல்லாம் தேவையா? எதுக்கு வீணா இவ்வளவு செலவு? பணம் என்ன மரத்துலயா காய்க்கறது?"
"ஏன் இப்படி சொல்றேள்? போன வருஷமே எண்பது பண்ணி இருக்க வேண்டியது. உடம்பு படுத்திடுத்துன்னு பெருசா எதுவும் பண்ணலை. அதனால தான் பசங்க பிடிவாதமா இருந்துட்டா"
"ம்ம்.."
"என்ன கவலை உங்களுக்கு? இன்னைக்கு ஒன்னும் பெருசா தடபுடல் பண்ணலையே. நம்ம மனுஷா மட்டும் தானே. இதைச் சாக்கு வச்சு பசங்க எல்லாம் கூடி இருக்கா. அவ்வளவு தான்னு நினைச்சுக்கோங்கோ. நன்னா நடத்திக் கொடு பெருமாளேன்னு வேண்டிக்கறத விட்டு நீங்க ஏன் டென்ஷன் ஆறேள்?"
"நான் டென்ஷன் ஆகலை. ஆனால் என்ன சொல்றதுன்னு தெரியாதபடிக்கு ஏதோ ஒரு குழப்பம். சரியாகிடும். நீ கொஞ்சம் இப்படி உட்காரு. நான் குளிச்சிட்டு வந்துடறேன்" என்றவர் மனைவியின் பதிலை எதிர்பார்க்காமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டார்.
அவர் வெளியே வர எடுத்துக் கொண்ட இருபது நிமிடங்களும் இவருக்கு இருபது யுகங்களாக இருந்தது. ஏதேதோ கற்பனை வந்து வயிற்றைப் பிசைந்தது. அவரது கற்பனைக் குதிரையைத் தடை செய்யவென்று ஒரு குரல் கேட்டது.
"அட.. என்ன இது ராஜம்? இப்படிக் கன்னத்துல கை வச்சு உட்கார்ந்துண்டு இருக்க? எந்த கப்பல் கவிழ்ந்து போச்சு? சேஷா எங்க? கல்யாணப் பொண்ணே சீக்கிரம் ரெடி. மாப்பிள்ளை இன்னுமா ரெடி ஆகல?"
வழக்கமாக, 'டேய் படவா பாட்டி தாத்தாவைப் பேர் சொல்லியா கூப்பிடற?' என்று காதைப் பிடிப்பவர் இன்று வேறொரு உலகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார்.
"ம்ச்.. பாட்டீ! உன்னைத் தான். என்ன தான் ஆச்சு உனக்கு?" என்று அருகில் அமர்ந்து அணைத்துக் கொண்டான், சம்பத்.
அப்போது தான் நிகழ்வுக்கு வந்த ராஜலக்ஷ்மியின் கண்கள் வியப்பில் விரிந்தன. "வந்துட்டியா டா ராஜா. உன்னை மிஸ் பண்ணுவோமேன்னு நினைச்சேன். எத்தனை மணிக்கு வந்த?"
"நான் வராமலா. ஆத்துக்கு வர இரண்டு மணி ஆச்சு பாட்டி" குளித்து விட்டு பாந்தமாக வேஷ்டி உடுத்திக் கொண்டு வந்திருந்தான்.
"இரண்டு மணிக்கா! அப்புறம் ஏன் சீக்கிரம் எழுந்துட்ட? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே"
"அதெல்லாம் பரவாயில்லை பாட்டி. இது எனக்குப் பழக்கம் தானே. ஒரு குட்டித் தூக்கம் போட்டு தான் வந்தேன்."
"ரொம்ப உடம்பை அலட்டிக்காதே. சரியா. ஆமா… இதென்ன? குளிச்சிட்டு பாழ் நெத்தியா வந்திருக்க. சந்தி பண்ண வேண்டாமா? நான் வேணும்னா குங்குமம் இட்டு விடட்டுமா?"
"பாட்டீஈஈஈ… என்னை இப்படி அசிங்கப் படுத்தாதே. நேக்கு தாத்தா கிட்டத் தான் நெத்திக்கு இட்டுக்கணும். அதான் வந்தேன். நீ தள்ளு. இந்த சேஷா இன்னும் பாத்ரூம்ல என்ன தான் பண்றார்?"
"டேய்.. அவரைப் பேர் சொல்லிக் கூப்பிடாத."
"உனக்கு ஒரு விஷயம் தெரியவே இல்ல ராஜம். பேரன் அதாவது பெயரன்னு சொன்னா தாத்தாவோட பெயரைக் கொண்டவன்னு அர்த்தம். எனக்கும் அந்த பேர் இருக்கே. அதனால எனக்கு.. இன் ஃபேக்ட் எனக்கு மட்டும் தான் சேஷான்னு சொல்ல ஃபுல் ரைட்ஸ் இருக்கு யூ நோ" புதுவிதமான லாஜிக் சொல்லி பாட்டியைக் குழப்பி விட்டவனுக்கு ஹைஃபை கொடுத்தார் குளித்து விட்டு வெளியே வந்த சேஷாத்ரி.
"சபாஷ் டா ராஜா. எங்கேயோ லாஜிக் இடிச்சாலும் இந்தக் கிழவியோட வாயை அடைச்சுட்டியே"
"தாத்த்த்தா! எதுக்கும் நீ கொஞ்சம் அடக்கி வாசி. என் மேல காட்ட முடியாத கோபம் எல்லாம் யூ டர்ன் போட்டு உன் கிட்ட வந்துடப்போறது" காதோரம் முணுமுணுத்த பேரனின் அறிவுரையை சிரமேற்கொண்டு வாய்க்கு ஃபெவிகால் போட்டுக் கொண்டு வேலையைப் பார்த்தார் சேஷாத்ரி.
மயில் கண் வேஷ்டியில் அருமையாக பஞ்சகச்சம் உடுத்திக் கொண்டு திருமண் பெட்டியைக் கையில் எடுத்தார்.
"தாத்தா! எனக்கு முதல்ல இட்டு விட்டுடு." முகத்தை நீட்டிய பேரனைக் கண்டு கண்கள் கலங்கியது சேஷாத்ரிக்கு.
"காலா காலத்தில கல்யாணம் பண்ணி இருந்தா இவன் பிள்ளைக்கே நெத்திக்கு இட்டிருக்கலாம். அது கூட தானே இட்டுக்கும். இவன் என்னடான்னா ஆறடி உசரத்தில இருந்துண்டு இன்னமும் தாத்தா கிட்ட வரான்." நொடித்துக் கொண்டாலும் ராஜலக்ஷ்மியின் குரலில் தெரிந்தது பேரனின் பெருமை மட்டுமே. வயதானவர்கள் தனிமையை உணரக் கூடாது என்று தன்னால் இயன்ற முயற்சிகளை எப்போதும் செய்வான்.
"சரி.. சரி.. கல்யாண நாளும் அதுவுமா அழக் கூடாது ராஜம்.. கண்மை கரைஞ்சிடும். இப்படி தாத்தா கிட்ட வந்து நில்லு" என்றவன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்தான்.
"இந்தாங்கோ இரண்டு பேரும் இதை வாங்கிக்கோங்கோ. அப்படியே என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கோ" என்று கையில் இருந்ததை அவர்களிடம் கொடுத்து சாஷ்டாங்கமாக சேவித்து எழுந்தான். கர்ம சிரத்தையுடன் அபிவாதயே சொன்னவனை அணைத்துக் கொண்டார் அந்தப் பாசமிகு தாத்தா.
"என்னடா இதெல்லாம்? வயசான காலத்துல எங்களுக்கு எதுக்கு இவ்வளவு விலை கொடுத்து வாங்கி இருக்கே?" கையில் பளபளத்த வைர அட்டிகையையும் திருமண் சங்கு சக்கரம் வைர டாலரையும் பார்த்த அதிர்ச்சி அவரை விட்டுப் போக மாட்டேன் என்றது.
"ஏன் டா ராஜா, இதை நீ சபைல வச்சே கொடுத்திருக்கலாமே. ஏதுக்கு இப்பவே…"
"இல்ல தாத்தா. அது தேவையில்லாத காஸிப் கிரியேட் பண்ணும். இது நான் கொடுத்தேன்னு தெரியவே வேண்டாம்.. நீங்களும் யாருக்கும் சொல்லாதீங்கோ"
"அதெப்படி சொல்லாமல் இருக்க முடியும்? முரளிக்குத் தெரியுமா தெரியாதா?" என்று குறுக்கே வந்தார் ராஜம்.
"அம்மா அப்பாக்குத் தெரியாமல் நான் எதையும் செய்யமாட்டேன்னு நோக்குத் தெரியாதா பாட்டி?"
"அப்போ மத்தவா கேட்டா இது முரளிக்கும் தேவிக்கும் வாங்கினது. எங்களுக்கு இரவல் தான்னு சொல்லிடறேன்." என்ற ராஜலக்ஷ்மி மறக்காமல் "நீங்களும் அதையே சொல்லுங்கோன்னா" என்றார் கணவரிடம்.
"என் கிட்ட யாரும் கேட்டால் பார்த்துக்கலாம்"
"ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தாத்தா"
"ஹா… ஹா.. இது ஓவர் இல்ல டா. சரியான அளவு தான். நீயே பாரு. இந்த லேடி வெளிலே போய் இரண்டே நிமிஷத்துல இந்த நகையோட ஜாதகத்தை எல்லாரும் தோய்ச்சு அலசிப் பிழிஞ்சு காய் வச்சுடுவா. அதுக்கப்புறம் வேற டாபிக் போயிடுவா. நம்ம கிட்ட வரதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மி யூ நோ."
"கிழவருக்கு இந்த நக்கல் மட்டும் குறையறதா பாரு. ஆமா.. நீ எப்போ இதை வாங்கினே? லண்டன்ல இதெல்லாம் கிடைக்கிறதா?"
"ஆமா. லண்டன்ல கோபால்தாஸ் ஒரு பிராஞ்ச் ஓபன் பண்ணி இருக்கான். அதான் வைரத்துல திருமண் காப்பு எல்லாம் கிடைக்கறது"
அவனது குரலில் வழிந்த கேலியை உணராமல் "நிஜமாவா டா! அப்புறம் ஏன் இந்த கோமளா இங்கே வந்தா கடைகடையா ஏறி இறங்கறா?" என்று ஏகத்துக்கும் கவலைப்பட்ட ராஜலக்ஷ்மியைப் பார்த்து சேஷா தாத்தா சிரிப்பை அடக்கிக் கொள்ள, பேரனுக்கு எந்தத் தடையும் இல்லாமல் போனதால் வாய் விட்டுச் சிரித்தான். அதோடு நில்லாமல் எழுந்து அறை வாசலுக்குப் போய் நின்று கொண்டான்.
"சோ.. ச்வீட் பாட்டி.. இப்படியே இன்னொசென்ட்டா இரு. அப்போ தான் உன் பெரிய பொண்ணு இன்னும் நன்னா மொளகா அரைப்பா" அப்போது தான் பல்ப் எரிந்தது பாட்டிக்கு.
"டேய்.. உன்னை என்ன பண்றேன் பாரு.." எழுந்து வந்தவரின் கையில் அகப்படாமல் ஹாலுக்கு ஓடி விட்டான்.
போகிற போக்கில், "ஜஸ்ட் ஜோக்கிங் பாட்டி. இது நான் லண்டன் போறதுக்கு முன்னாடியே ஆர்டர் கொடுத்து வாங்கி வச்சுட்டேன். உன் கிட்ட சொன்னா சென்ட்டிமென்ட் பார்த்து, இப்போவே கூடாதுன்னு எதையாவது சொல்லுவ. அதான் சொல்லலை. இரண்டு பேரும் அதைப் போட்டுண்டு வாங்கோ. இன்னும் அம்மாவைத் தவிர யாருக்கும் சுப்ரபாதம் ஆகலை" என்று சொல்லி விட்டே போனான்.
"ரொம்பவே பொறுப்பான பையன், முரளிய மாதிரியே.."
"வரப் போறவ கொடுத்து வச்சவ. இருபத்தாறு முடிஞ்சாச்சு. ஜாதகத்தை எடுக்க விடமாட்டேங்கறானே"
"யாரையாவது பார்த்து வச்சிருக்கானோ என்னவோ?" கணவரின் பதிலில் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார் ராஜலக்ஷ்மி.
"அவனை எப்படி இப்படி சொல்லலாம்?"
"அப்படி இப்படி ன்னு நீ ரைமிங்கா கோபப்பட்டாலும் யதார்த்தம்னு ஒன்னு இருக்கு.. அதை முதல்ல தெரிஞ்சுக்கோ நீ.."
"ஆமா.. பொல்லாத யதார்த்தம். பேரனைப் பத்தி எனக்குத் தான் நன்னாத் தெரியும்னு தம்பட்டம் அடிச்சுண்டா மட்டும் போறாது. எதையும் யோசிக்காமல் பேசப் படாது."
"நான் சொல்ல வரதை நீ சரியா புரிஞ்சுக்க முயற்சி பண்ணு ராஜம். அவனுக்கு ஆத்துக்குள்ளயே யாரையாவது பிடிச்சுப் போகலாம்னு தோணறது எனக்கு"
"ஆத்துக்குள்ளயா? நீங்க யாரைச் சொல்றேள்? ஸ்நேகாவையா? எப்படி ஒத்து வரும்? அவ இவனை விட எட்டு வயசு சின்னவ. இந்த காலத்தில எல்லாரும் ஜாஸ்தி போனா இரண்டு வயசு தான் வித்தியாசம் இருக்கணும்னு கேட்கறாளே"
"ஸ்நேகா இல்லை.. " என்றவருக்கே அதற்கு மேல் பேச வரவில்லை.
"இதுக்கு மேல ஒரு வார்த்தை நீங்க பேசப் படாது. நல்ல நாளும் அதுவுமா அச்சானியமா எதுவும் சொல்லிடப் போறேன்.." என்றவர் பேரன் கொடுத்த வைர அட்டிகையைப் போட்டுக் கொண்டு கண்ணாடி முன் நின்று அதன் அழகை ரசித்து விட்டு விருட்டென்று அறையை விட்டு வெளியேறினார். போவதற்கு முன் கணவருக்கும் செயினைப் போட்டு விட்டு அழகு பார்த்து விட்டே சென்றார்.
—--
"விளக்கே திருவிளக்கே
வேந்தன் உடன்பிறப்பே
ஜோதிமணி விளக்கே
ஸ்ரீதேவி பொன்மணியே
அந்திவிளக்கே
அலங்கார நாயகியே
காந்தி விளக்கே
காமாக்ஷி தாயாரே
பசும்பொன் விளக்கு வைத்து
பஞ்சு திரி போட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்"
திருவிளக்கு அகவலைச் சத்தமாகச் சொல்லியபடி விளக்கேற்றி, நமஸ்காரம் செய்துவிட்டு குங்குமம் இட்டுக் கொண்டு தன் அருகில் நின்ற மாமியாருக்கும் குங்குமம் கொடுத்தாள் தேவிகா. மாமியாரும் மருமகளும் பேசியபடி ஹாலுக்கு வந்தனர்.
"அம்மா! இந்தாங்கோ பூ!" நீட்டிய முல்லைப் பூவை வாங்கிக் கொண்டு மருமகளை மெச்சுதலாகப் பார்த்தார் ராஜலக்ஷ்மி. மாமியாருக்குப் பிடிக்கும் என்று மறக்காமல் முல்லைப்பூவைத் தேடி வாங்கி வரும் மருமகள் அவள்.
"இப்படி நில்லுங்கோ மா. சேவிச்சுக்கறேன்." இது தேவிகாவின் பிறந்த வீட்டுப் பழக்கம். வீட்டில் விளக்கேற்றிய யாராக இருந்தாலும் எல்லாருக்கும் குங்குமம் கொடுத்து பெரியவர்களை நமஸ்காரம் செய்வார்கள். திருமணமாகி வந்த பிறகு அதே பழக்கத்தை மாமியாரிடம் தொடர்கிறாள். இதனால் புகுந்த வீட்டில் சிலரது பொறாமையையும் வயித்தெரிச்சலையும் சம்பாதித்து இருக்கிறாள்.
"இருக்கட்டும்.. இருக்கட்டும்.. தீர்க்காயுசா.. தீர்க்க சுமங்கலியா நோய் நொடி இல்லாதைக்கு சௌக்கியமா இரு. உன் நல்ல மனசுக்கு உன்னை மாதிரியே ஒரு நல்ல மாட்டுப் பொண்ணு அமையட்டும்." மருமகளை மனதார வாழ்த்திய ராஜலக்ஷ்மி தனது எழுபதுகளில் இருந்தார். மாமியார் மருமகள் இருவரும் பலர் கண்படும்படி வாழ்பவர்கள். ராஜலக்ஷ்மி மூன்று மருமகளிடமும் பிரியமாகத் தான் இருப்பார் என்றாலும் தேவிகா எப்போதும் ஒருபடி மேலே தான்.
"அம்மா! நீ பண்றது கொஞ்சம் கூட நன்னா இல்லை சொல்லிட்டேன். நான் உனக்கு ஒரே பொண்ணு. ஆனால் என்னை விட உனக்கு உன் மாட்டுப் பொண்கள் தான் உசர்த்தி.." என்று அவரது மகளே பல தடவை பொறாமையில் புழுங்கி இருக்கிறாள்.
"என்ன காலங்காத்தால மாமியாரும் மாட்டுப் பொண்ணும் கொஞ்சிண்டு இருக்கேள். அட! இரண்டு பேரும் மேட்சிங்கா புடவை வேறயா! ஏன் தேவிகா? உனக்கென்ன வயசாச்சுன்னு இப்படி மடிசார் கட்டிக்கற?" படபடவென்று பேசிக்கொண்டு வந்த கோமளவல்லி, தேவிகாவின் நாத்தனார். ராஜலக்ஷ்மி, சேஷாத்ரி தம்பதியரின் சீமந்த புத்திரி. முரளீதரன், சுந்தர்ராஜன், ரகுராமன் என்ற மூன்று தம்பிகளுக்கு அக்கா.
"வாங்கோ கா.. காப்பி எடுத்துக்கோங்கோ.. "என்று உபசரித்த தேவிகா நாத்தனாரின் கேள்வியை டீலில் விட்டாள். ஆனால் அவளது மாமியார் மகளுக்கு பதில் கொடுக்கத் தவறவில்லை.
"மடிசார் கட்டிக்க கல்யாணம் ஆகி இருந்தால் போறும் கோமளா. வயசாகணும்னு அவசியம் இல்லை. என் உடை என் உரிமைன்னு நாள் கிழமைக்குக் கூட நாம பாரம்பரியத்தை கடைப்பிடிக்காமல் அப்புறமா திடீர்னு அச்சோ இது என் பாரம்பரியம்னு பொங்கறதுல என்ன அர்த்தம் சொல்லு.."
"அட.. சபாஷ் மாமி! உங்க பொண்ணுக்கு நன்னா உரைக்கற மாதிரி சொல்லுங்கோ. பாரம்பரியத்தைப் பத்தி அவளுக்கு அக்கறை இருந்திருந்தால் இப்படி ஆகி இருக்குமா?" திடீர் என்ட்ரி கொடுத்த மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்வது என்று ராஜலக்ஷ்மிக்கும் தெரியவில்லை. முதல் முறையாகத் தன் வளர்ப்பை நினைத்து வருந்தினார்.
"நல்ல நாளும் அதுவுமா உங்களை வருத்தப் பட வச்சுட்டேன். ஸாரி மாமி."
"அச்சோ என்ன மாப்பிள்ளை நீங்க போய் மன்னிப்பு கேட்டுண்டு"
"அதானே.. ராஜத்துக்குத் தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு" என்றபடி சேஷாத்ரி அங்கே வர கணவரை மாப்பிள்ளை முன் முறைக்க முடியாமல் திணறிப் போனார் ராஜம்.
"ஹா.. ஹா.. குட் மார்னிங் மாமா. விஷ் யூ எ வெரி ஹேப்பி அனிவர்சரி! எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கோ. நீங்க இப்படி வந்து நில்லுங்கோ மாமி" அந்த நேரத்திற்கு ஏற்றபடி மனைவியையும் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொண்ட மாப்பிள்ளையின் மேல் மரியாதை பொங்கியது.
சேவித்து எழுந்த கோமளாவின் கண்களில் தாய் தந்தையின் கழுத்தில் புதிதாக ஏறியிருக்கும் நகைகள் பட்டு, "அம்மா! இது ஏது? புத்தம் புதுசா இருக்கே. யார் வாங்கிக் கொடுத்தா? பொதுவிலே வருமா?" என்று அடுக்கடுக்காக கேள்விகள் வந்ததில் தாத்தாவும் பேரனும் அர்த்தமுள்ள ஒரு பார்வையைப் பகிர்ந்து கொண்டனர்.
"கோமளா! என்னது இப்படி ஒரு கேள்வி உனக்கு.. பொதுவில வந்தால் செலவில பங்கு நீ தரப் போறயா?"
"அண்ணா தம்பிகள் மூணு பேரும் தான் பகிர்ந்துப்பா.. நான் எதுக்கு தரணும்.."
"ஓ.. அப்போ பொதுவிலே வருமான்ற கேள்வி ஏன் வந்தது?"
"அது.. வந்து.."
"ஏன் பூசி மொழுகற.. அம்மா கழுத்துல இருக்கறது அவாளுக்கு அப்புறம் உனக்கு வரதுக்கு சான்ஸ் இருக்கான்னு டைரக்டா கேட்டக வேண்டியது தானே.. எனக்குத் தெரிஞ்சு மாமாவும் மாமியும் முரளியாத்துல தான் இருக்கா. வயசானவாளுக்கு எத்தனையோ செலவு..
அண்ணா தம்பிகள் அழகா ஒத்துமையா அட்ஜஸ்ட் பண்ணிக்கறா. அறுபது எண்பதுன்னு எல்லாத்துக்கும் நமக்கு வரவு இருந்ததே தவிர நீ எதுவும் செய்யல. என்னையும் செய்ய விடலை. இப்பவும் பேருக்கு ஏதோ கொடுத்திருக்கோம். ஆனால் அவா பதிலுக்கு கொடுத்ததே பல மடங்கு. இதுக்கு மேலயும் உனக்கு இப்படி ஒரு கேள்வி கேட்கத் தோணறது. எத்தனை வருட ஆதங்கமோ, பொரிந்து தள்ளி விட்டார் ஆத்து மாப்பிள்ளை.
கடைசிப் பஞ்ச்சாக, "யார் வாங்கினான்னு ஒரு கேள்வி.. யாரா இருந்தாலும் இப்படி ஒரு கேள்வி வரும் னு தெரிஞ்சு தான் சபைல கொடுக்காமல் தனியா கொடுத்திருக்கா" சொல்லிக்கொண்டே சம்பத்தைப் பார்த்தவரின் பார்வையில் பாராட்டு தெரிந்தது.
"இட்ஸ் ஓகே அத்திம்பேர். அக்கா தானே கேட்டா. பரவாயில்லை விடுங்கோ" என்று முரளீதரன் வந்து சமாதானம் சொன்ன பிறகே பேச்சு அடுத்த டாபிக்கை நோக்கிப் போனது.
"காஃபி எடுத்துக்கோங்கோ பா. நீங்களும் எடுத்துக்கோங்கோ அத்திம்பேர்" என்று தேவிகா காஃபி சப்ளை செய்து கொண்டிருக்க ஒவ்வொருவராக எழுந்து வரத் தொடங்கினார்கள்.
"ஹாய் எவ்ரிபடி. வெரி குட் மார்னிங்" என்று வந்தவள் ஐஸ்வர்யா, கோமளவல்லி ஸ்ரீனிவாசன் தம்பதியரின் சீமந்த புத்திரி. சென்னையில் பிறந்து லண்டனில் வளர்ந்தவள். பிறந்த ஊரின் நாகரீகம் எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் கிடையாது. வளர்ந்த ஊரின் நாகரீகம் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவள்.
அனைவரும் அவளை வேண்டாவெறுப்பாகப் பார்த்து
க் கொண்டு இருக்க, அவளோ நேராக ஒருவரிடம் சென்றாள்.
"ஹாய் டியர்! You look awesome man.. shall we have a dinner date tomorrow?"
அத்தனை பெரியவர்கள் மத்தியில், காதில் விழுந்த ஏடாகூடமான கேள்வியில் குடித்துக் கொண்டிருந்த காஃபி புரையேறி விடாமல் இரும ஆரம்பித்தான் சம்பத் சேஷாத்ரி, முரளீதரன் தேவிகா தம்பதியரின் மூத்த குமாரன். அந்த வீட்டின் பெரியவர்கள் அனைவருக்கும் செல்லப் பிள்ளை.
அதே ஞாயிற்றுக்கிழமை, சென்னை பெசன்ட் நகரில் பீச் ஃபேசிங் பங்களா என்று சொல்லும் படியான அந்தப் பெரிய வீடு விழாக்கோலம் பூண்டு இருந்தது. வாசலில் போடப் பட்டிருந்த செம்மண் கரையிட்ட பெரிய படிக் கோலமும் கட்டி இருந்த தோரணங்களும் அதை உறுதி செய்தன.
வெளித்தோற்றத்தில் பழமையானதாகக் காட்சி அளித்தாலும் உள்ளே நுழைந்து பார்த்தால் மட்டுமே வீட்டின் நவீனம் தெரியும்.
அதிகாலையிலேயே வீட்டினுள் தெரிந்த பரபரப்பு இன்றைய விழாவின் கதாநாயகியைப் பெருமிதம் கொள்ளச் செய்தது, காரணம் அவரது வாரிசுகளிடையே நிலவிய ஒற்றுமை. குடும்பங்கள் தனித் தனியே வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தாலும் விழாக்கள் பண்டிகைகள் என்று வரும் போது ஒன்றாகக் கூடுவதும் எதையும் பங்கிட்டுச் செய்வதிலும் இந்தக் காலத்தில் அருகி விட்ட விஷயமாகிற்றே. ஆனாலும் முக்கியமான ஒருவன் வந்து சேர்ந்தானா தெரியவில்லை.
'என் கண்ணே பட்டுடும் போல இருக்கே. எல்லாருக்கும் ராத்திரி மறக்காமல் சுத்திப் போடணும்' மனதுக்குள் நினைத்துக் கொண்டவருக்குத் தெரியாது, அந்த ஒற்றுமையைச் சற்றே ஆட்டம் காண வைக்கும் நிகழ்வு ஒன்று இன்றே அதுவும் காலையிலேயே அரங்கேறப் போகிறதென்று.
யோசனையின் ஊடே புடவையைக் கட்டி முடித்தார். பச்சை நிறத்தில் மெஜந்தா பார்டருடன் அவருக்கென பிரத்யேகமாக ஆர்டர் கொடுத்து நெய்யப் பட்ட மடிசாரில் தெய்வீகமான இருந்தவர் கண்ணாடி முன் நின்றார். இது வரை தூங்கிக் கொண்டிருக்கும் கணவரைத் தொந்தரவு செய்யாமல் இருட்டில் வேலை செய்தவர் இப்போது வேறு வழியின்றி சுவிட்சைத் தட்டினார். அவர், திருமதி.ராஜலக்ஷ்மி சேஷாத்ரி.
சிங்கார் ஆஷாவை (குங்குமம் இடுவற்கான base இது. சிவப்பு நிறத்தில் பேஸ்ட் மாதிரி இருக்கும். பேச்சு வழக்கில் அதன் பெயர் ஆஷாவாகிப் போனது. அம்பர் என்றும் அழைப்பர்) எடுத்து நெற்றியில் நாலணா அளவில் பெரிய வட்டம் போட்டவர் நாலாம் நம்பர் சுகந்தா குங்குமத்தைக் கையில் எடுத்தார். நெற்றியில் இட்டுக் கொண்டு பின் வகிட்டிலும் குங்குமத்தை வைத்துக் கொண்டார்.
கண்ணாடி வழியே கணவர் எழுந்து அமர்ந்து இருப்பதைப் பார்த்தவர் அவசரமாக, "Wish you a very happy Anniversary ன்னா" என்றார். அன்று தான் திருமணம் ஆனது போல அவரது முகத்தில் ஒரு நாணம், முகம் சிவந்து போனது.
சேஷாத்ரி மனைவியின் நாணத்தையும் சிவந்த முகத்தையும் பெரிதும் ரசித்தார் என்றாலும் வார்த்தைகளில் வேறு சொன்னார்.
"அது சரி. இப்போ என்ன நான் same to you சொல்லணுமோ?"
இன்றோடு அறுபது வருட திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக கடந்திருக்கும் ஆதர்ச தம்பதியர் இவர்கள்.
"சொன்னா என்னவாம்?" என்ற ராஜலக்ஷ்மியின் குரல் அறுபது வருடங்களுக்கு முந்தையதாக இருந்தது.
"ஏய்.. சரியா போச்சு போ. நீ என்ன இன்னைக்கு தான் புதுசா கல்யாணம் ஆன மாதிரி வெட்கப் படறே. பேரன் பேத்திக்கெல்லாம் கல்யாணம் பண்ற வயசாச்சு. ஞாபகம் இருக்கட்டும்."
"ஹூக்கும்.." என்று தோளில் இடித்துக் கொண்டு, "ஞாபகத்தைப் பத்தி நீங்க பேசறேள். எல்லாம் என் நேரம். ஏதோ நம்ம பசங்க எல்லாம் தலையெடுத்ததுக்கு அப்புறம் தான் இந்த நாளெல்லாம் தெரியறது உங்களுக்கு. முதல் கல்யாண நாளையே மறந்துட்டு ஆஃபீஸ் டூர் போன ஆள் தானே நீங்க!"
"அட ராமா! இதோ ஆச்சு அறுபது வருஷம். இன்னும் அதை மறக்கவே மாட்டியா நீ. "
"மறக்கறதா?? எப்படி மறக்க முடியும்? அன்னைக்கு எங்கம்மா உங்கம்மான்னு ஆரம்பிச்சு எல்லாரும் ஏதோ எனக்கு சாமர்த்தியம் போறாதுன்னு எவ்வளவு பேசினா. அதிலேயும் உங்க மன்னி எங்க ஆத்துக்காரர்லாம் அப்படி கிடையாது, எனக்கு அதை வாங்கித் தந்தார் இதை வாங்கித் தந்தார்னு லிஸ்ட் போட்டு என் வயித்தெரிச்சலைக் கொட்டிண்டா. அதோட விட்டாளா? வருஷா வருஷம் அதை ஞாபகப் படுத்தி.. அப்பப்பா.. நான் பட்ட அவஸ்தை கொஞ்சநஞ்சமா? உங்களுக்கென்ன.. நீங்க மாட்டுக்கு இன்னும் ஞாபகம் வச்சிண்டிருக்கியான்னு ஒரே வார்த்தைல கேட்டுட்டேள்"
படபடவென்று பேசியபடி மூச்சு வாங்கிய மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தவரை போனால் போகிறது என்று சமாதானப் படுத்த விழைந்தார் ராஜலக்ஷ்மி. "சரி சரி, போய் குளிச்சிட்டு வாங்கோ. உங்க பீரோல மேலாக உங்களுக்கு வேஷ்டி, உத்தரீயம் எடுத்து வச்சிருக்கேன். பழக்க தோஷத்துல மடிசஞ்சியைக் கட்டிண்டு வந்து நிக்காதீங்கோ. மறக்காமல் இந்த செயினைப் போட்டுண்டு வாங்கோ. நான் போய் எல்லாரும் எழுந்தாச்சான்னு பாக்கறேன்"
"அதெல்லாம் நீ ஒன்னும் பார்க்க வேண்டாம். எல்லாம் சரியா தான் நடக்கும். இந்த பசங்களைப் பார்த்தியா ராஜம்? சொல்லச் சொல்லக் கேட்காம இத்தனை அமர்க்களம் பண்றா. வயசான காலத்துல இதெல்லாம் தேவையா? எதுக்கு வீணா இவ்வளவு செலவு? பணம் என்ன மரத்துலயா காய்க்கறது?"
"ஏன் இப்படி சொல்றேள்? போன வருஷமே எண்பது பண்ணி இருக்க வேண்டியது. உடம்பு படுத்திடுத்துன்னு பெருசா எதுவும் பண்ணலை. அதனால தான் பசங்க பிடிவாதமா இருந்துட்டா"
"ம்ம்.."
"என்ன கவலை உங்களுக்கு? இன்னைக்கு ஒன்னும் பெருசா தடபுடல் பண்ணலையே. நம்ம மனுஷா மட்டும் தானே. இதைச் சாக்கு வச்சு பசங்க எல்லாம் கூடி இருக்கா. அவ்வளவு தான்னு நினைச்சுக்கோங்கோ. நன்னா நடத்திக் கொடு பெருமாளேன்னு வேண்டிக்கறத விட்டு நீங்க ஏன் டென்ஷன் ஆறேள்?"
"நான் டென்ஷன் ஆகலை. ஆனால் என்ன சொல்றதுன்னு தெரியாதபடிக்கு ஏதோ ஒரு குழப்பம். சரியாகிடும். நீ கொஞ்சம் இப்படி உட்காரு. நான் குளிச்சிட்டு வந்துடறேன்" என்றவர் மனைவியின் பதிலை எதிர்பார்க்காமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டார்.
அவர் வெளியே வர எடுத்துக் கொண்ட இருபது நிமிடங்களும் இவருக்கு இருபது யுகங்களாக இருந்தது. ஏதேதோ கற்பனை வந்து வயிற்றைப் பிசைந்தது. அவரது கற்பனைக் குதிரையைத் தடை செய்யவென்று ஒரு குரல் கேட்டது.
"அட.. என்ன இது ராஜம்? இப்படிக் கன்னத்துல கை வச்சு உட்கார்ந்துண்டு இருக்க? எந்த கப்பல் கவிழ்ந்து போச்சு? சேஷா எங்க? கல்யாணப் பொண்ணே சீக்கிரம் ரெடி. மாப்பிள்ளை இன்னுமா ரெடி ஆகல?"
வழக்கமாக, 'டேய் படவா பாட்டி தாத்தாவைப் பேர் சொல்லியா கூப்பிடற?' என்று காதைப் பிடிப்பவர் இன்று வேறொரு உலகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார்.
"ம்ச்.. பாட்டீ! உன்னைத் தான். என்ன தான் ஆச்சு உனக்கு?" என்று அருகில் அமர்ந்து அணைத்துக் கொண்டான், சம்பத்.
அப்போது தான் நிகழ்வுக்கு வந்த ராஜலக்ஷ்மியின் கண்கள் வியப்பில் விரிந்தன. "வந்துட்டியா டா ராஜா. உன்னை மிஸ் பண்ணுவோமேன்னு நினைச்சேன். எத்தனை மணிக்கு வந்த?"
"நான் வராமலா. ஆத்துக்கு வர இரண்டு மணி ஆச்சு பாட்டி" குளித்து விட்டு பாந்தமாக வேஷ்டி உடுத்திக் கொண்டு வந்திருந்தான்.
"இரண்டு மணிக்கா! அப்புறம் ஏன் சீக்கிரம் எழுந்துட்ட? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே"
"அதெல்லாம் பரவாயில்லை பாட்டி. இது எனக்குப் பழக்கம் தானே. ஒரு குட்டித் தூக்கம் போட்டு தான் வந்தேன்."
"ரொம்ப உடம்பை அலட்டிக்காதே. சரியா. ஆமா… இதென்ன? குளிச்சிட்டு பாழ் நெத்தியா வந்திருக்க. சந்தி பண்ண வேண்டாமா? நான் வேணும்னா குங்குமம் இட்டு விடட்டுமா?"
"பாட்டீஈஈஈ… என்னை இப்படி அசிங்கப் படுத்தாதே. நேக்கு தாத்தா கிட்டத் தான் நெத்திக்கு இட்டுக்கணும். அதான் வந்தேன். நீ தள்ளு. இந்த சேஷா இன்னும் பாத்ரூம்ல என்ன தான் பண்றார்?"
"டேய்.. அவரைப் பேர் சொல்லிக் கூப்பிடாத."
"உனக்கு ஒரு விஷயம் தெரியவே இல்ல ராஜம். பேரன் அதாவது பெயரன்னு சொன்னா தாத்தாவோட பெயரைக் கொண்டவன்னு அர்த்தம். எனக்கும் அந்த பேர் இருக்கே. அதனால எனக்கு.. இன் ஃபேக்ட் எனக்கு மட்டும் தான் சேஷான்னு சொல்ல ஃபுல் ரைட்ஸ் இருக்கு யூ நோ" புதுவிதமான லாஜிக் சொல்லி பாட்டியைக் குழப்பி விட்டவனுக்கு ஹைஃபை கொடுத்தார் குளித்து விட்டு வெளியே வந்த சேஷாத்ரி.
"சபாஷ் டா ராஜா. எங்கேயோ லாஜிக் இடிச்சாலும் இந்தக் கிழவியோட வாயை அடைச்சுட்டியே"
"தாத்த்த்தா! எதுக்கும் நீ கொஞ்சம் அடக்கி வாசி. என் மேல காட்ட முடியாத கோபம் எல்லாம் யூ டர்ன் போட்டு உன் கிட்ட வந்துடப்போறது" காதோரம் முணுமுணுத்த பேரனின் அறிவுரையை சிரமேற்கொண்டு வாய்க்கு ஃபெவிகால் போட்டுக் கொண்டு வேலையைப் பார்த்தார் சேஷாத்ரி.
மயில் கண் வேஷ்டியில் அருமையாக பஞ்சகச்சம் உடுத்திக் கொண்டு திருமண் பெட்டியைக் கையில் எடுத்தார்.
"தாத்தா! எனக்கு முதல்ல இட்டு விட்டுடு." முகத்தை நீட்டிய பேரனைக் கண்டு கண்கள் கலங்கியது சேஷாத்ரிக்கு.
"காலா காலத்தில கல்யாணம் பண்ணி இருந்தா இவன் பிள்ளைக்கே நெத்திக்கு இட்டிருக்கலாம். அது கூட தானே இட்டுக்கும். இவன் என்னடான்னா ஆறடி உசரத்தில இருந்துண்டு இன்னமும் தாத்தா கிட்ட வரான்." நொடித்துக் கொண்டாலும் ராஜலக்ஷ்மியின் குரலில் தெரிந்தது பேரனின் பெருமை மட்டுமே. வயதானவர்கள் தனிமையை உணரக் கூடாது என்று தன்னால் இயன்ற முயற்சிகளை எப்போதும் செய்வான்.
"சரி.. சரி.. கல்யாண நாளும் அதுவுமா அழக் கூடாது ராஜம்.. கண்மை கரைஞ்சிடும். இப்படி தாத்தா கிட்ட வந்து நில்லு" என்றவன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்தான்.
"இந்தாங்கோ இரண்டு பேரும் இதை வாங்கிக்கோங்கோ. அப்படியே என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கோ" என்று கையில் இருந்ததை அவர்களிடம் கொடுத்து சாஷ்டாங்கமாக சேவித்து எழுந்தான். கர்ம சிரத்தையுடன் அபிவாதயே சொன்னவனை அணைத்துக் கொண்டார் அந்தப் பாசமிகு தாத்தா.
"என்னடா இதெல்லாம்? வயசான காலத்துல எங்களுக்கு எதுக்கு இவ்வளவு விலை கொடுத்து வாங்கி இருக்கே?" கையில் பளபளத்த வைர அட்டிகையையும் திருமண் சங்கு சக்கரம் வைர டாலரையும் பார்த்த அதிர்ச்சி அவரை விட்டுப் போக மாட்டேன் என்றது.
"ஏன் டா ராஜா, இதை நீ சபைல வச்சே கொடுத்திருக்கலாமே. ஏதுக்கு இப்பவே…"
"இல்ல தாத்தா. அது தேவையில்லாத காஸிப் கிரியேட் பண்ணும். இது நான் கொடுத்தேன்னு தெரியவே வேண்டாம்.. நீங்களும் யாருக்கும் சொல்லாதீங்கோ"
"அதெப்படி சொல்லாமல் இருக்க முடியும்? முரளிக்குத் தெரியுமா தெரியாதா?" என்று குறுக்கே வந்தார் ராஜம்.
"அம்மா அப்பாக்குத் தெரியாமல் நான் எதையும் செய்யமாட்டேன்னு நோக்குத் தெரியாதா பாட்டி?"
"அப்போ மத்தவா கேட்டா இது முரளிக்கும் தேவிக்கும் வாங்கினது. எங்களுக்கு இரவல் தான்னு சொல்லிடறேன்." என்ற ராஜலக்ஷ்மி மறக்காமல் "நீங்களும் அதையே சொல்லுங்கோன்னா" என்றார் கணவரிடம்.
"என் கிட்ட யாரும் கேட்டால் பார்த்துக்கலாம்"
"ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தாத்தா"
"ஹா… ஹா.. இது ஓவர் இல்ல டா. சரியான அளவு தான். நீயே பாரு. இந்த லேடி வெளிலே போய் இரண்டே நிமிஷத்துல இந்த நகையோட ஜாதகத்தை எல்லாரும் தோய்ச்சு அலசிப் பிழிஞ்சு காய் வச்சுடுவா. அதுக்கப்புறம் வேற டாபிக் போயிடுவா. நம்ம கிட்ட வரதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மி யூ நோ."
"கிழவருக்கு இந்த நக்கல் மட்டும் குறையறதா பாரு. ஆமா.. நீ எப்போ இதை வாங்கினே? லண்டன்ல இதெல்லாம் கிடைக்கிறதா?"
"ஆமா. லண்டன்ல கோபால்தாஸ் ஒரு பிராஞ்ச் ஓபன் பண்ணி இருக்கான். அதான் வைரத்துல திருமண் காப்பு எல்லாம் கிடைக்கறது"
அவனது குரலில் வழிந்த கேலியை உணராமல் "நிஜமாவா டா! அப்புறம் ஏன் இந்த கோமளா இங்கே வந்தா கடைகடையா ஏறி இறங்கறா?" என்று ஏகத்துக்கும் கவலைப்பட்ட ராஜலக்ஷ்மியைப் பார்த்து சேஷா தாத்தா சிரிப்பை அடக்கிக் கொள்ள, பேரனுக்கு எந்தத் தடையும் இல்லாமல் போனதால் வாய் விட்டுச் சிரித்தான். அதோடு நில்லாமல் எழுந்து அறை வாசலுக்குப் போய் நின்று கொண்டான்.
"சோ.. ச்வீட் பாட்டி.. இப்படியே இன்னொசென்ட்டா இரு. அப்போ தான் உன் பெரிய பொண்ணு இன்னும் நன்னா மொளகா அரைப்பா" அப்போது தான் பல்ப் எரிந்தது பாட்டிக்கு.
"டேய்.. உன்னை என்ன பண்றேன் பாரு.." எழுந்து வந்தவரின் கையில் அகப்படாமல் ஹாலுக்கு ஓடி விட்டான்.
போகிற போக்கில், "ஜஸ்ட் ஜோக்கிங் பாட்டி. இது நான் லண்டன் போறதுக்கு முன்னாடியே ஆர்டர் கொடுத்து வாங்கி வச்சுட்டேன். உன் கிட்ட சொன்னா சென்ட்டிமென்ட் பார்த்து, இப்போவே கூடாதுன்னு எதையாவது சொல்லுவ. அதான் சொல்லலை. இரண்டு பேரும் அதைப் போட்டுண்டு வாங்கோ. இன்னும் அம்மாவைத் தவிர யாருக்கும் சுப்ரபாதம் ஆகலை" என்று சொல்லி விட்டே போனான்.
"ரொம்பவே பொறுப்பான பையன், முரளிய மாதிரியே.."
"வரப் போறவ கொடுத்து வச்சவ. இருபத்தாறு முடிஞ்சாச்சு. ஜாதகத்தை எடுக்க விடமாட்டேங்கறானே"
"யாரையாவது பார்த்து வச்சிருக்கானோ என்னவோ?" கணவரின் பதிலில் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார் ராஜலக்ஷ்மி.
"அவனை எப்படி இப்படி சொல்லலாம்?"
"அப்படி இப்படி ன்னு நீ ரைமிங்கா கோபப்பட்டாலும் யதார்த்தம்னு ஒன்னு இருக்கு.. அதை முதல்ல தெரிஞ்சுக்கோ நீ.."
"ஆமா.. பொல்லாத யதார்த்தம். பேரனைப் பத்தி எனக்குத் தான் நன்னாத் தெரியும்னு தம்பட்டம் அடிச்சுண்டா மட்டும் போறாது. எதையும் யோசிக்காமல் பேசப் படாது."
"நான் சொல்ல வரதை நீ சரியா புரிஞ்சுக்க முயற்சி பண்ணு ராஜம். அவனுக்கு ஆத்துக்குள்ளயே யாரையாவது பிடிச்சுப் போகலாம்னு தோணறது எனக்கு"
"ஆத்துக்குள்ளயா? நீங்க யாரைச் சொல்றேள்? ஸ்நேகாவையா? எப்படி ஒத்து வரும்? அவ இவனை விட எட்டு வயசு சின்னவ. இந்த காலத்தில எல்லாரும் ஜாஸ்தி போனா இரண்டு வயசு தான் வித்தியாசம் இருக்கணும்னு கேட்கறாளே"
"ஸ்நேகா இல்லை.. " என்றவருக்கே அதற்கு மேல் பேச வரவில்லை.
"இதுக்கு மேல ஒரு வார்த்தை நீங்க பேசப் படாது. நல்ல நாளும் அதுவுமா அச்சானியமா எதுவும் சொல்லிடப் போறேன்.." என்றவர் பேரன் கொடுத்த வைர அட்டிகையைப் போட்டுக் கொண்டு கண்ணாடி முன் நின்று அதன் அழகை ரசித்து விட்டு விருட்டென்று அறையை விட்டு வெளியேறினார். போவதற்கு முன் கணவருக்கும் செயினைப் போட்டு விட்டு அழகு பார்த்து விட்டே சென்றார்.
—--
"விளக்கே திருவிளக்கே
வேந்தன் உடன்பிறப்பே
ஜோதிமணி விளக்கே
ஸ்ரீதேவி பொன்மணியே
அந்திவிளக்கே
அலங்கார நாயகியே
காந்தி விளக்கே
காமாக்ஷி தாயாரே
பசும்பொன் விளக்கு வைத்து
பஞ்சு திரி போட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்"
திருவிளக்கு அகவலைச் சத்தமாகச் சொல்லியபடி விளக்கேற்றி, நமஸ்காரம் செய்துவிட்டு குங்குமம் இட்டுக் கொண்டு தன் அருகில் நின்ற மாமியாருக்கும் குங்குமம் கொடுத்தாள் தேவிகா. மாமியாரும் மருமகளும் பேசியபடி ஹாலுக்கு வந்தனர்.
"அம்மா! இந்தாங்கோ பூ!" நீட்டிய முல்லைப் பூவை வாங்கிக் கொண்டு மருமகளை மெச்சுதலாகப் பார்த்தார் ராஜலக்ஷ்மி. மாமியாருக்குப் பிடிக்கும் என்று மறக்காமல் முல்லைப்பூவைத் தேடி வாங்கி வரும் மருமகள் அவள்.
"இப்படி நில்லுங்கோ மா. சேவிச்சுக்கறேன்." இது தேவிகாவின் பிறந்த வீட்டுப் பழக்கம். வீட்டில் விளக்கேற்றிய யாராக இருந்தாலும் எல்லாருக்கும் குங்குமம் கொடுத்து பெரியவர்களை நமஸ்காரம் செய்வார்கள். திருமணமாகி வந்த பிறகு அதே பழக்கத்தை மாமியாரிடம் தொடர்கிறாள். இதனால் புகுந்த வீட்டில் சிலரது பொறாமையையும் வயித்தெரிச்சலையும் சம்பாதித்து இருக்கிறாள்.
"இருக்கட்டும்.. இருக்கட்டும்.. தீர்க்காயுசா.. தீர்க்க சுமங்கலியா நோய் நொடி இல்லாதைக்கு சௌக்கியமா இரு. உன் நல்ல மனசுக்கு உன்னை மாதிரியே ஒரு நல்ல மாட்டுப் பொண்ணு அமையட்டும்." மருமகளை மனதார வாழ்த்திய ராஜலக்ஷ்மி தனது எழுபதுகளில் இருந்தார். மாமியார் மருமகள் இருவரும் பலர் கண்படும்படி வாழ்பவர்கள். ராஜலக்ஷ்மி மூன்று மருமகளிடமும் பிரியமாகத் தான் இருப்பார் என்றாலும் தேவிகா எப்போதும் ஒருபடி மேலே தான்.
"அம்மா! நீ பண்றது கொஞ்சம் கூட நன்னா இல்லை சொல்லிட்டேன். நான் உனக்கு ஒரே பொண்ணு. ஆனால் என்னை விட உனக்கு உன் மாட்டுப் பொண்கள் தான் உசர்த்தி.." என்று அவரது மகளே பல தடவை பொறாமையில் புழுங்கி இருக்கிறாள்.
"என்ன காலங்காத்தால மாமியாரும் மாட்டுப் பொண்ணும் கொஞ்சிண்டு இருக்கேள். அட! இரண்டு பேரும் மேட்சிங்கா புடவை வேறயா! ஏன் தேவிகா? உனக்கென்ன வயசாச்சுன்னு இப்படி மடிசார் கட்டிக்கற?" படபடவென்று பேசிக்கொண்டு வந்த கோமளவல்லி, தேவிகாவின் நாத்தனார். ராஜலக்ஷ்மி, சேஷாத்ரி தம்பதியரின் சீமந்த புத்திரி. முரளீதரன், சுந்தர்ராஜன், ரகுராமன் என்ற மூன்று தம்பிகளுக்கு அக்கா.
"வாங்கோ கா.. காப்பி எடுத்துக்கோங்கோ.. "என்று உபசரித்த தேவிகா நாத்தனாரின் கேள்வியை டீலில் விட்டாள். ஆனால் அவளது மாமியார் மகளுக்கு பதில் கொடுக்கத் தவறவில்லை.
"மடிசார் கட்டிக்க கல்யாணம் ஆகி இருந்தால் போறும் கோமளா. வயசாகணும்னு அவசியம் இல்லை. என் உடை என் உரிமைன்னு நாள் கிழமைக்குக் கூட நாம பாரம்பரியத்தை கடைப்பிடிக்காமல் அப்புறமா திடீர்னு அச்சோ இது என் பாரம்பரியம்னு பொங்கறதுல என்ன அர்த்தம் சொல்லு.."
"அட.. சபாஷ் மாமி! உங்க பொண்ணுக்கு நன்னா உரைக்கற மாதிரி சொல்லுங்கோ. பாரம்பரியத்தைப் பத்தி அவளுக்கு அக்கறை இருந்திருந்தால் இப்படி ஆகி இருக்குமா?" திடீர் என்ட்ரி கொடுத்த மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்வது என்று ராஜலக்ஷ்மிக்கும் தெரியவில்லை. முதல் முறையாகத் தன் வளர்ப்பை நினைத்து வருந்தினார்.
"நல்ல நாளும் அதுவுமா உங்களை வருத்தப் பட வச்சுட்டேன். ஸாரி மாமி."
"அச்சோ என்ன மாப்பிள்ளை நீங்க போய் மன்னிப்பு கேட்டுண்டு"
"அதானே.. ராஜத்துக்குத் தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு" என்றபடி சேஷாத்ரி அங்கே வர கணவரை மாப்பிள்ளை முன் முறைக்க முடியாமல் திணறிப் போனார் ராஜம்.
"ஹா.. ஹா.. குட் மார்னிங் மாமா. விஷ் யூ எ வெரி ஹேப்பி அனிவர்சரி! எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கோ. நீங்க இப்படி வந்து நில்லுங்கோ மாமி" அந்த நேரத்திற்கு ஏற்றபடி மனைவியையும் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொண்ட மாப்பிள்ளையின் மேல் மரியாதை பொங்கியது.
சேவித்து எழுந்த கோமளாவின் கண்களில் தாய் தந்தையின் கழுத்தில் புதிதாக ஏறியிருக்கும் நகைகள் பட்டு, "அம்மா! இது ஏது? புத்தம் புதுசா இருக்கே. யார் வாங்கிக் கொடுத்தா? பொதுவிலே வருமா?" என்று அடுக்கடுக்காக கேள்விகள் வந்ததில் தாத்தாவும் பேரனும் அர்த்தமுள்ள ஒரு பார்வையைப் பகிர்ந்து கொண்டனர்.
"கோமளா! என்னது இப்படி ஒரு கேள்வி உனக்கு.. பொதுவில வந்தால் செலவில பங்கு நீ தரப் போறயா?"
"அண்ணா தம்பிகள் மூணு பேரும் தான் பகிர்ந்துப்பா.. நான் எதுக்கு தரணும்.."
"ஓ.. அப்போ பொதுவிலே வருமான்ற கேள்வி ஏன் வந்தது?"
"அது.. வந்து.."
"ஏன் பூசி மொழுகற.. அம்மா கழுத்துல இருக்கறது அவாளுக்கு அப்புறம் உனக்கு வரதுக்கு சான்ஸ் இருக்கான்னு டைரக்டா கேட்டக வேண்டியது தானே.. எனக்குத் தெரிஞ்சு மாமாவும் மாமியும் முரளியாத்துல தான் இருக்கா. வயசானவாளுக்கு எத்தனையோ செலவு..
அண்ணா தம்பிகள் அழகா ஒத்துமையா அட்ஜஸ்ட் பண்ணிக்கறா. அறுபது எண்பதுன்னு எல்லாத்துக்கும் நமக்கு வரவு இருந்ததே தவிர நீ எதுவும் செய்யல. என்னையும் செய்ய விடலை. இப்பவும் பேருக்கு ஏதோ கொடுத்திருக்கோம். ஆனால் அவா பதிலுக்கு கொடுத்ததே பல மடங்கு. இதுக்கு மேலயும் உனக்கு இப்படி ஒரு கேள்வி கேட்கத் தோணறது. எத்தனை வருட ஆதங்கமோ, பொரிந்து தள்ளி விட்டார் ஆத்து மாப்பிள்ளை.
கடைசிப் பஞ்ச்சாக, "யார் வாங்கினான்னு ஒரு கேள்வி.. யாரா இருந்தாலும் இப்படி ஒரு கேள்வி வரும் னு தெரிஞ்சு தான் சபைல கொடுக்காமல் தனியா கொடுத்திருக்கா" சொல்லிக்கொண்டே சம்பத்தைப் பார்த்தவரின் பார்வையில் பாராட்டு தெரிந்தது.
"இட்ஸ் ஓகே அத்திம்பேர். அக்கா தானே கேட்டா. பரவாயில்லை விடுங்கோ" என்று முரளீதரன் வந்து சமாதானம் சொன்ன பிறகே பேச்சு அடுத்த டாபிக்கை நோக்கிப் போனது.
"காஃபி எடுத்துக்கோங்கோ பா. நீங்களும் எடுத்துக்கோங்கோ அத்திம்பேர்" என்று தேவிகா காஃபி சப்ளை செய்து கொண்டிருக்க ஒவ்வொருவராக எழுந்து வரத் தொடங்கினார்கள்.
"ஹாய் எவ்ரிபடி. வெரி குட் மார்னிங்" என்று வந்தவள் ஐஸ்வர்யா, கோமளவல்லி ஸ்ரீனிவாசன் தம்பதியரின் சீமந்த புத்திரி. சென்னையில் பிறந்து லண்டனில் வளர்ந்தவள். பிறந்த ஊரின் நாகரீகம் எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் கிடையாது. வளர்ந்த ஊரின் நாகரீகம் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவள்.
அனைவரும் அவளை வேண்டாவெறுப்பாகப் பார்த்து
க் கொண்டு இருக்க, அவளோ நேராக ஒருவரிடம் சென்றாள்.
"ஹாய் டியர்! You look awesome man.. shall we have a dinner date tomorrow?"
அத்தனை பெரியவர்கள் மத்தியில், காதில் விழுந்த ஏடாகூடமான கேள்வியில் குடித்துக் கொண்டிருந்த காஃபி புரையேறி விடாமல் இரும ஆரம்பித்தான் சம்பத் சேஷாத்ரி, முரளீதரன் தேவிகா தம்பதியரின் மூத்த குமாரன். அந்த வீட்டின் பெரியவர்கள் அனைவருக்கும் செல்லப் பிள்ளை.
Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.