Subha Balaji
Member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 79
சுயம்பு-34
அன்று முழுவதுமே தனக்கு சில முக்கியமான வேலைகள் இருப்பதாலும் இரவு வீட்டுக்கு வருவது கஷ்டம்.. என சத்யா உத்ராவிடம் போன் செய்து சொல்லி விட..குழந்தை ஹர்ஷாவை மீரா தன் குழந்தையோடு பார்த்து கொள்ள..உத்ரா சாப்பிடுவது..தாத்தாவுடன் பேசுவது..பெரியப்பா, அப்பா, வருண், மீராவுடன் பேசுவது...வர்ஷாவிடம் போனில் பேசுவது..என நாள் எல்லாம் பிசியாக இருப்பது...எல்லாருடனும் பேசி விட்டு இரவு நேரம் கழித்து தூங்கியது என தன் பொழுதை சந்தோஷமாக கழித்தாள்.
அதுவரை வீட்டினரோடு பேசாத பேச்செல்லாம் நிறுத்தாமல் பேசியவளை பார்த்த வருண் "அம்மா...நீ வாய் ஓயாம பேசுவியா...இதுவரைக்கும் எங்களுக்கு தெரியாத போச்சே..
பாவம் மாப்ளை..உன்னை எப்டி சமாளிக்கறாரோ..தெரியல.." என அவளை வாரினான்.
"போங்க..அண்ணா..என்ன கேலி செஞ்சுக்கிட்டு..அதெல்லாம் ஒண்ணுமில்ல..நான் அதிகம் பேச மாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா.." என சொல்லி சிணுங்கினாள்.
"சரி..சரி..ரொம்ப நேரமாச்சு..போங்க..போய் தூங்குங்க.."என்ற பெரியப்பாவின் கண்டிப்பான குரலால் மணியை பார்க்க அது இரவு பதினொன்று என காட்ட..அமைதியாக போய் படுத்து கொண்டாள்.
மறுநாள் காலையில் வீட்டை சுற்றி வாக்கிங் போகும் போது வந்து இறங்கிய சத்யாவை பார்க்க இரவெல்லாம் தூங்காமல் கண் விழித்திருந்ததால் கண்கள் இரண்டும் சிவந்திருப்பதை பார்த்து வேகமாக அவனருகில் வந்தவள் "என்னாச்சு சத்யா..நைட் எல்லாம் தூங்கலையா..கண்ணு சிவந்திருக்கே.." என அக்கறையாக விசாரிக்க..
ம்ச்..ஆமா..நேத்து காலைல ஒரு முக்கியமான வேலைனு போனேன்ல...அது இப்ப வரைக்கும் முடியல...நானும் என் டீமும் சோர்ந்து போயிடவே...கொஞ்சம் நேரம் தூங்கிட்டு மதியத்துக்கு மேல திரும்பி வேலையை ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டோம்.." என சோர்வான குரலில் சொல்லியவன்.."குழந்தை எழுந்துட்டானா..
இல்லேனாலும் அவனை தூக்கிட்டு வா..நாம வீட்டுக்கு கிளம்பலாம்.." என அவளை அழைக்க..
அவனை தயக்கமாக பார்த்தவளை "அது உன் வீடும் தான்.. எத்தனை நாளைக்கு உன்னால வராம இருக்க முடியும்...போ..
போ..போய் வேகமா கிளம்பு..அடுத்த அஞ்சாவது நிமிஷம் நாம கிளம்பி ஆகணும்...சீக்கிரம்...எனக்கு நேரமில்ல.."
என சொல்லி வராண்டாவில் இருந்த சேரில் ஓய்வாக உட்கார்ந்து கொள்ள..அவனை பார்த்து வந்த மாமனாரிடம் தாங்கள் கிளம்புவதாக சொல்லி விடை பெற்றவன், உள்ளே போய் தாத்தாவிடமும் சொல்லி விட்டு, உத்ராவின் பெரியப்பாவிடம் போன் பேசியபடி அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
உள்ளே வேகமாக போனவள் தாத்தாவிடம் சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு. போய் தங்களது பேக்கை தூக்கி கொண்டு வந்து வராண்டாவில் வைத்து விட்டு, குழந்தை தூக்கி கொண்டு வந்தாள்.
அதற்குள் அங்கு சத்யா வந்ததை அறிந்து வந்த வருண் அவன் அருகில் உட்கார்ந்து இருக்க..மீரா சூடாக இருவருக்கும் காஃபி குடுத்தாள். அரக்க பறக்க கிளம்பிய உத்ராவின் கைகளில் ஒரு பெரிய ப்ளாஸ்க் நிறைய சத்து மாவு கஞ்சி தயார் செய்து குடுத்த மீராவை நன்றியோடு பார்த்த உத்ரா அதை வாங்கி கொண்டு காரில் ஏறி கிளம்பினாள்.
சத்யா வீட்டுக்கு போனதும் இறங்கி கதவை நிறந்து காரை நிறுத்தி விட்டு குழந்தையை தன் தோளில் எடுத்து கொண்டு உள்ளே நுழைய போனவனை வாசலில் நிறுத்தி அவன் தங்கை தர்ஷிணி ஆலம் சுற்றிய பின்னே அவர்களை வீட்டுக்கு அனுமதித்தாள்.
சோஃபாவில் உட்கார்ந்ததுமே கண் விழித்த ஹர்ஷா மெல்ல வீட்டுக்கு சுற்றி பார்க்க...அது நேற்றிருந்ததை போல இல்லாமல் புதிதாக இருக்க..எழுந்தவன் சிணுங்கி கொண்டே சத்யாவின் தோளில் படுத்து கொண்டான்.
அவன் அருகில் வந்த தர்ஷிணி ஹர்ஷாவை பார்த்து "டேய்..குட்டி பையனே..இங்க பாரு..நான் யாரு சொல்லு பாப்போம்.." என கொஞ்ச..
மெல்ல கண் திறந்தவன் அவளை பார்த்து "ஐ...தர்ஷீ அத்த.." என சொல்லி அவளிடம் தாவினான்.
அவனை ஆசையோடு தாங்கி கொண்டவள் சத்யாவிடம் "என்ன அண்ணா.. குழந்தைக்கு ஹர்ஷா தான் முழு பேரா..இதை கேட்க கேர்ள் பேரு மாதிரி இருக்கே..." என தயங்கி கேட்க..
"இல்ல டா..அவனோட முழு பேரு ஹர்ஷவர்தன்..கூப்பிடறது தான் ஹர்ஷா.." என்க..
அதை கேட்டு அதிர்ந்தவள் "உன்னால வர்த்தினி அக்காவை மறக்க முடியலையா.." என கேட்க..
அவளை ஏன் மறக்கணும்..நம்ம அம்மாவால தேவையில்லாம பழி சுமந்து போனவ.."என்றவனை அங்கிருந்த அவனுடைய அப்பா முரளி குழப்பமாக பார்க்க..
"ஏன் குழப்பமா பாக்கறீங்க...உங்களுக்கு எதுவும் தெரியாதா பா.." என கேட்க..
"என்னது டா..எனக்கு தெரியலயே.." என பதில் சொன்னதும்..
"நம்ம பக்கத்து வீட்டு வர்த்தினி இருந்தால்ல..அவ எங்க எல்லாருக்கும் நல்ல ப்ரெண்ட் பா..நான், கவுதம் இன்னும் என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் அவ ரொம்ப க்ளோஸ் பா..நாங்க ப்ரெண்டா பழகறது அம்மாக்கு எப்பவுமே பிடிக்காது.. அவ கிட்ட எப்ப பாரு ஆம்பளைங்க கிட்டயே என்ன பேச்சுனு திட்டுவாங்க.."
"ஒரு நாள் அவளை கூப்பிட்டு உனக்கும் என் பையனுக்கும் என்ன ரகசிய தொடர்பு..எப்டி அவன் வந்ததுமே நீ எங்க வீட்டுக்கு வந்துடறனு அசிங்கமா கேட்டிருக்காங்க..."
"அவ வயசென்ன..என் வயசென்ன பா..அவ நம்ம வீட்டுக்கு வரும் போது அவளுக்கு பன்னெண்டு பதிமூணு வயசு தான் இருக்கும்...தப்பான சிந்தனைகள் வர்ற வயசாப்பா..அது.."
"எங்க எல்லாரையும் அண்ணா அண்ணானு சுத்திட்டு வந்தவ..அவங்க சொன்னதை கேட்டதிலிருந்தே அவ எங்க எல்லார் கிட்டே இருந்தும் ஒதுங்க ஆரம்பிச்சா.."
"எனக்கும் அந்த நேரத்துல இதை தப்பா நினைக்க முடியல..சரி..அவளுக்கு படிக்க அதிகமா இருக்கு போலிருக்குனு நானும் அலட்சியமா இருந்துட்டேன்..பா..அதுக்கு பிறகு..அவங்க இங்கே இருந்து வெகேட் பண்ணிட்டு போயிட்டாங்க..அவங்க குடும்பத்துக்கும் நமக்கும் இருந்த தொடர்பும் விட்டு போச்சு.."
"அப்பறம் எப்ப உனக்கு உங்கம்மாவோட லட்சணம் தெரிஞ்சது..சத்யா.." என இறுகிய குரலில் கேட்க..
"நான் ஐபிஎஸ் ட்ரெயினிங் போறத்துக்கு முன்னால சென்னைல அவங்க பாட்டியை தற்செயலா பாத்தேன்..அவங்க சொல்லி தான் எனக்கு தெரிஞ்சது.."
"பாவம்..பா அவ..இதை என் கிட்ட சொல்லவே இல்ல..சொல்லாமயே இங்கே இருந்து கிளம்பி போயிட்டா.."
"நீங்க இதை எப்டி எடுத்துப்பீங்கனு எனக்கு தெரியாததால... தர்ஷிணி கிட்ட மட்டும் சொன்னேன்..அவளும் துடிச்சு போயிட்டா.."
"அப்ப தான் அவ கிட்ட..அந்த குழந்தையோட மனசை நோகடிச்சதுக்கு எனக்கு பிறக்கற குழந்தைக்கு அவளோட பேர் வெப்பேன்னு தீர்மானமா சொன்னேன்..அதே மாதிரி பேரும் வெச்சாச்சு..இனி கூப்பிடற வேண்டியது தான்.." என சொல்லி முடித்தான்.
"ஏண்டா..உங்கம்மாக்கு ஏன் இப்டி புத்தி போகணும்..அவளோட ஆத்திரத்துக்கு எத்தனை பேரை பலி வாங்குவா..மொதல்ல அந்த குழந்தை.."
"அவ கிட்ட முடிச்சு... தர்ஷு கிட்ட எப்ப பாரு சண்டை போடவே..இம்சை தாங்காம..தர்ஷுக்காவது மனநிம்மதி வரட்டும்.. அவளை கொண்டு ஹாஸ்டல்ல விட்ட பிறகு உங்கம்மா அமைதியானா.."
"எல்லாம் முடிஞ்சுதேனு பாத்தா..வீட்டுக்கு வந்த மருமகளை மத்தவங்களை கூட்டு சேத்துக்கிட்டு பேசி..பேசியே அவளை துரத்தி விட்டுட்டு சந்தோஷப்பட்டா.."
"இது எதுவும் தெரியாம..நான் ஏன் நம்ம வீட்டுக்கு மட்டும் இந்த மாதிரி நடக்குதுனு குழம்பிட்டு இருந்திருக்கேனே.. எல்லாத்துக்கும் காரணமே உங்கம்மா தான்னு இப்ப தானே புரியுது.."
"இப்ப கூட பாரு..காலைல வீட்டுல தங்காம...பார்க்குல ஏதோ மீட்டிங்காம்..போயிருக்கா.. எப்ப வருவாளோ தெரியாது.."
"வீட்டுல நல்ல வேளை தர்ஷு இருக்கவே போச்சு..இல்ல..சுடுதண்ணி கூட வெக்க தெரியாத நான் அவ வர்றவரைக்கும் பட்டினி தான் இருக்கணும்.." என கோபமாக திட்டினார்.
"சரி பா..அவங்க வர்றப்ப வரட்டும்.. இந்த வாட்டி நான் பொறுமையா இருக்க மாட்டேன்.. அவங்க எதாவது உத்ராவை, வர்தனை சீண்டினா..எதுவா இருந்தாலும் அவங்க கிட்ட நேரா பேசிடுவேன்.. அப்பறம் நீங்க வருத்தப்பட கூடாது..அதுக்கு தான் முன்னாலயே உங்க கிட்ட சொல்லிடறேன்.." என தீர்மானமாக சொல்ல...
அவரும் "நீ தாராளமா பேசுடா...எனக்கு என் பிள்ளைங்களுக்கு பிறகு தான் மத்தவங்க...." என அவனுக்கு ஆதரவாகவே பதில் சொன்னார்.
அப்போது வேகமாக வீட்டுக்குள் வந்த அவனுடைய அம்மா திலகவதி "வா டா..சத்யா..எப்ப வந்தே.."
"திரும்பி வர ஒரு மாசமாகும்னு சொன்னியே..போன வேலை முடிஞ்சிடவே சீக்கிரம் வந்துட்டியா.." என கேட்டபடி உள்ளே பார்த்தவர் அங்கு குழந்தையோடு நின்று கொண்டு இருந்த உத்ராவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.(தொடரும்
அன்று முழுவதுமே தனக்கு சில முக்கியமான வேலைகள் இருப்பதாலும் இரவு வீட்டுக்கு வருவது கஷ்டம்.. என சத்யா உத்ராவிடம் போன் செய்து சொல்லி விட..குழந்தை ஹர்ஷாவை மீரா தன் குழந்தையோடு பார்த்து கொள்ள..உத்ரா சாப்பிடுவது..தாத்தாவுடன் பேசுவது..பெரியப்பா, அப்பா, வருண், மீராவுடன் பேசுவது...வர்ஷாவிடம் போனில் பேசுவது..என நாள் எல்லாம் பிசியாக இருப்பது...எல்லாருடனும் பேசி விட்டு இரவு நேரம் கழித்து தூங்கியது என தன் பொழுதை சந்தோஷமாக கழித்தாள்.
அதுவரை வீட்டினரோடு பேசாத பேச்செல்லாம் நிறுத்தாமல் பேசியவளை பார்த்த வருண் "அம்மா...நீ வாய் ஓயாம பேசுவியா...இதுவரைக்கும் எங்களுக்கு தெரியாத போச்சே..
பாவம் மாப்ளை..உன்னை எப்டி சமாளிக்கறாரோ..தெரியல.." என அவளை வாரினான்.
"போங்க..அண்ணா..என்ன கேலி செஞ்சுக்கிட்டு..அதெல்லாம் ஒண்ணுமில்ல..நான் அதிகம் பேச மாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா.." என சொல்லி சிணுங்கினாள்.
"சரி..சரி..ரொம்ப நேரமாச்சு..போங்க..போய் தூங்குங்க.."என்ற பெரியப்பாவின் கண்டிப்பான குரலால் மணியை பார்க்க அது இரவு பதினொன்று என காட்ட..அமைதியாக போய் படுத்து கொண்டாள்.
மறுநாள் காலையில் வீட்டை சுற்றி வாக்கிங் போகும் போது வந்து இறங்கிய சத்யாவை பார்க்க இரவெல்லாம் தூங்காமல் கண் விழித்திருந்ததால் கண்கள் இரண்டும் சிவந்திருப்பதை பார்த்து வேகமாக அவனருகில் வந்தவள் "என்னாச்சு சத்யா..நைட் எல்லாம் தூங்கலையா..கண்ணு சிவந்திருக்கே.." என அக்கறையாக விசாரிக்க..
ம்ச்..ஆமா..நேத்து காலைல ஒரு முக்கியமான வேலைனு போனேன்ல...அது இப்ப வரைக்கும் முடியல...நானும் என் டீமும் சோர்ந்து போயிடவே...கொஞ்சம் நேரம் தூங்கிட்டு மதியத்துக்கு மேல திரும்பி வேலையை ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டோம்.." என சோர்வான குரலில் சொல்லியவன்.."குழந்தை எழுந்துட்டானா..
இல்லேனாலும் அவனை தூக்கிட்டு வா..நாம வீட்டுக்கு கிளம்பலாம்.." என அவளை அழைக்க..
அவனை தயக்கமாக பார்த்தவளை "அது உன் வீடும் தான்.. எத்தனை நாளைக்கு உன்னால வராம இருக்க முடியும்...போ..
போ..போய் வேகமா கிளம்பு..அடுத்த அஞ்சாவது நிமிஷம் நாம கிளம்பி ஆகணும்...சீக்கிரம்...எனக்கு நேரமில்ல.."
என சொல்லி வராண்டாவில் இருந்த சேரில் ஓய்வாக உட்கார்ந்து கொள்ள..அவனை பார்த்து வந்த மாமனாரிடம் தாங்கள் கிளம்புவதாக சொல்லி விடை பெற்றவன், உள்ளே போய் தாத்தாவிடமும் சொல்லி விட்டு, உத்ராவின் பெரியப்பாவிடம் போன் பேசியபடி அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
உள்ளே வேகமாக போனவள் தாத்தாவிடம் சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு. போய் தங்களது பேக்கை தூக்கி கொண்டு வந்து வராண்டாவில் வைத்து விட்டு, குழந்தை தூக்கி கொண்டு வந்தாள்.
அதற்குள் அங்கு சத்யா வந்ததை அறிந்து வந்த வருண் அவன் அருகில் உட்கார்ந்து இருக்க..மீரா சூடாக இருவருக்கும் காஃபி குடுத்தாள். அரக்க பறக்க கிளம்பிய உத்ராவின் கைகளில் ஒரு பெரிய ப்ளாஸ்க் நிறைய சத்து மாவு கஞ்சி தயார் செய்து குடுத்த மீராவை நன்றியோடு பார்த்த உத்ரா அதை வாங்கி கொண்டு காரில் ஏறி கிளம்பினாள்.
சத்யா வீட்டுக்கு போனதும் இறங்கி கதவை நிறந்து காரை நிறுத்தி விட்டு குழந்தையை தன் தோளில் எடுத்து கொண்டு உள்ளே நுழைய போனவனை வாசலில் நிறுத்தி அவன் தங்கை தர்ஷிணி ஆலம் சுற்றிய பின்னே அவர்களை வீட்டுக்கு அனுமதித்தாள்.
சோஃபாவில் உட்கார்ந்ததுமே கண் விழித்த ஹர்ஷா மெல்ல வீட்டுக்கு சுற்றி பார்க்க...அது நேற்றிருந்ததை போல இல்லாமல் புதிதாக இருக்க..எழுந்தவன் சிணுங்கி கொண்டே சத்யாவின் தோளில் படுத்து கொண்டான்.
அவன் அருகில் வந்த தர்ஷிணி ஹர்ஷாவை பார்த்து "டேய்..குட்டி பையனே..இங்க பாரு..நான் யாரு சொல்லு பாப்போம்.." என கொஞ்ச..
மெல்ல கண் திறந்தவன் அவளை பார்த்து "ஐ...தர்ஷீ அத்த.." என சொல்லி அவளிடம் தாவினான்.
அவனை ஆசையோடு தாங்கி கொண்டவள் சத்யாவிடம் "என்ன அண்ணா.. குழந்தைக்கு ஹர்ஷா தான் முழு பேரா..இதை கேட்க கேர்ள் பேரு மாதிரி இருக்கே..." என தயங்கி கேட்க..
"இல்ல டா..அவனோட முழு பேரு ஹர்ஷவர்தன்..கூப்பிடறது தான் ஹர்ஷா.." என்க..
அதை கேட்டு அதிர்ந்தவள் "உன்னால வர்த்தினி அக்காவை மறக்க முடியலையா.." என கேட்க..
அவளை ஏன் மறக்கணும்..நம்ம அம்மாவால தேவையில்லாம பழி சுமந்து போனவ.."என்றவனை அங்கிருந்த அவனுடைய அப்பா முரளி குழப்பமாக பார்க்க..
"ஏன் குழப்பமா பாக்கறீங்க...உங்களுக்கு எதுவும் தெரியாதா பா.." என கேட்க..
"என்னது டா..எனக்கு தெரியலயே.." என பதில் சொன்னதும்..
"நம்ம பக்கத்து வீட்டு வர்த்தினி இருந்தால்ல..அவ எங்க எல்லாருக்கும் நல்ல ப்ரெண்ட் பா..நான், கவுதம் இன்னும் என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் அவ ரொம்ப க்ளோஸ் பா..நாங்க ப்ரெண்டா பழகறது அம்மாக்கு எப்பவுமே பிடிக்காது.. அவ கிட்ட எப்ப பாரு ஆம்பளைங்க கிட்டயே என்ன பேச்சுனு திட்டுவாங்க.."
"ஒரு நாள் அவளை கூப்பிட்டு உனக்கும் என் பையனுக்கும் என்ன ரகசிய தொடர்பு..எப்டி அவன் வந்ததுமே நீ எங்க வீட்டுக்கு வந்துடறனு அசிங்கமா கேட்டிருக்காங்க..."
"அவ வயசென்ன..என் வயசென்ன பா..அவ நம்ம வீட்டுக்கு வரும் போது அவளுக்கு பன்னெண்டு பதிமூணு வயசு தான் இருக்கும்...தப்பான சிந்தனைகள் வர்ற வயசாப்பா..அது.."
"எங்க எல்லாரையும் அண்ணா அண்ணானு சுத்திட்டு வந்தவ..அவங்க சொன்னதை கேட்டதிலிருந்தே அவ எங்க எல்லார் கிட்டே இருந்தும் ஒதுங்க ஆரம்பிச்சா.."
"எனக்கும் அந்த நேரத்துல இதை தப்பா நினைக்க முடியல..சரி..அவளுக்கு படிக்க அதிகமா இருக்கு போலிருக்குனு நானும் அலட்சியமா இருந்துட்டேன்..பா..அதுக்கு பிறகு..அவங்க இங்கே இருந்து வெகேட் பண்ணிட்டு போயிட்டாங்க..அவங்க குடும்பத்துக்கும் நமக்கும் இருந்த தொடர்பும் விட்டு போச்சு.."
"அப்பறம் எப்ப உனக்கு உங்கம்மாவோட லட்சணம் தெரிஞ்சது..சத்யா.." என இறுகிய குரலில் கேட்க..
"நான் ஐபிஎஸ் ட்ரெயினிங் போறத்துக்கு முன்னால சென்னைல அவங்க பாட்டியை தற்செயலா பாத்தேன்..அவங்க சொல்லி தான் எனக்கு தெரிஞ்சது.."
"பாவம்..பா அவ..இதை என் கிட்ட சொல்லவே இல்ல..சொல்லாமயே இங்கே இருந்து கிளம்பி போயிட்டா.."
"நீங்க இதை எப்டி எடுத்துப்பீங்கனு எனக்கு தெரியாததால... தர்ஷிணி கிட்ட மட்டும் சொன்னேன்..அவளும் துடிச்சு போயிட்டா.."
"அப்ப தான் அவ கிட்ட..அந்த குழந்தையோட மனசை நோகடிச்சதுக்கு எனக்கு பிறக்கற குழந்தைக்கு அவளோட பேர் வெப்பேன்னு தீர்மானமா சொன்னேன்..அதே மாதிரி பேரும் வெச்சாச்சு..இனி கூப்பிடற வேண்டியது தான்.." என சொல்லி முடித்தான்.
"ஏண்டா..உங்கம்மாக்கு ஏன் இப்டி புத்தி போகணும்..அவளோட ஆத்திரத்துக்கு எத்தனை பேரை பலி வாங்குவா..மொதல்ல அந்த குழந்தை.."
"அவ கிட்ட முடிச்சு... தர்ஷு கிட்ட எப்ப பாரு சண்டை போடவே..இம்சை தாங்காம..தர்ஷுக்காவது மனநிம்மதி வரட்டும்.. அவளை கொண்டு ஹாஸ்டல்ல விட்ட பிறகு உங்கம்மா அமைதியானா.."
"எல்லாம் முடிஞ்சுதேனு பாத்தா..வீட்டுக்கு வந்த மருமகளை மத்தவங்களை கூட்டு சேத்துக்கிட்டு பேசி..பேசியே அவளை துரத்தி விட்டுட்டு சந்தோஷப்பட்டா.."
"இது எதுவும் தெரியாம..நான் ஏன் நம்ம வீட்டுக்கு மட்டும் இந்த மாதிரி நடக்குதுனு குழம்பிட்டு இருந்திருக்கேனே.. எல்லாத்துக்கும் காரணமே உங்கம்மா தான்னு இப்ப தானே புரியுது.."
"இப்ப கூட பாரு..காலைல வீட்டுல தங்காம...பார்க்குல ஏதோ மீட்டிங்காம்..போயிருக்கா.. எப்ப வருவாளோ தெரியாது.."
"வீட்டுல நல்ல வேளை தர்ஷு இருக்கவே போச்சு..இல்ல..சுடுதண்ணி கூட வெக்க தெரியாத நான் அவ வர்றவரைக்கும் பட்டினி தான் இருக்கணும்.." என கோபமாக திட்டினார்.
"சரி பா..அவங்க வர்றப்ப வரட்டும்.. இந்த வாட்டி நான் பொறுமையா இருக்க மாட்டேன்.. அவங்க எதாவது உத்ராவை, வர்தனை சீண்டினா..எதுவா இருந்தாலும் அவங்க கிட்ட நேரா பேசிடுவேன்.. அப்பறம் நீங்க வருத்தப்பட கூடாது..அதுக்கு தான் முன்னாலயே உங்க கிட்ட சொல்லிடறேன்.." என தீர்மானமாக சொல்ல...
அவரும் "நீ தாராளமா பேசுடா...எனக்கு என் பிள்ளைங்களுக்கு பிறகு தான் மத்தவங்க...." என அவனுக்கு ஆதரவாகவே பதில் சொன்னார்.
அப்போது வேகமாக வீட்டுக்குள் வந்த அவனுடைய அம்மா திலகவதி "வா டா..சத்யா..எப்ப வந்தே.."
"திரும்பி வர ஒரு மாசமாகும்னு சொன்னியே..போன வேலை முடிஞ்சிடவே சீக்கிரம் வந்துட்டியா.." என கேட்டபடி உள்ளே பார்த்தவர் அங்கு குழந்தையோடு நின்று கொண்டு இருந்த உத்ராவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.(தொடரும்
Author: Subha Balaji
Article Title: சுயம்பு 34
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: சுயம்பு 34
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.