குற்றாலத்தில் உள்ள செண்பகா தேவிக்கு சித்ரா பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது சந்தன வாசனையுடன் மழை பொழியும் என்பது நம்பிக்கை.
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில், சித்ரா பௌர்ணமி அன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, கோயில் தீர்த்தமான சரபேஸ்வர தீர்த்தத்தில் கலப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
தேவேந்திரனின் பிரம்மஹத்தி தோஷம், மதுரை பொற்றாமரைக் குளக்கரையில் ஶ்ரீ சொக்கநாதர் தரிசனத்தால் தீர்ந்தது என்கின்றன புராணங்கள். இங்கு ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று தேவேந்திரன் வந்து வழிபடுவதாக ஐதீகம்.
விழுப்புரம் அருகில் கூவாகத்தில் நடைபெறும் ‘கூத்தாண்டவர் திருவிழா’ சித்ராபெளர்ணமி அன்றே நடைபெறுகிறது.
சித்தர் பெளர்ணமி... சித்ரகுப்தர் வழிபாடு!
சித்ரா பௌர்ணமியன்று ஒரு சில ஊர்களில் இரவில் முழு நிலா வெளிச்சத்தில், பூமியில் இருந்து ஒருவகை உப்பு வெளிக் கிளம்பும். பூமிநாதம் என்று அழைக்கப்படும் அந்த உப்பு, மருந்து களுக்கு அதிகமான சக்தியை அளிக்கக் கூடியது. இந்த உப்பு சித்ரா பௌர்ணமி அன்று வெளிப்படும் என்பது சித்தர்கள் வாக்கு. இதையொட்டி சித்ரா பௌர்ணமி ஆதியில் ‘சித்தர் பௌர்ணமி’ என்று அழைக்கப்பட்டதாம்!
சித்ரகுப்தர் வழிபாட்டுக்கும் உகந்த நாள் சித்ராபெளர்ணமி. இந்த நாளில் சித்ர குப்தரை வழிபாடு செய்து வணங்கினால், அவர் நமக்கு எளிய முறையில் சிவனருளை அடைய வகை செய்வார் என்பது நம்பிக்கை. முற்காலத்தில் சித்ராபெளர்ணமி அன்று பூஜை அறையில், ஓர் ஓலைச் சுவடியில் ‘சித்ரகுப்தன் படி அளக்க...’ என்று எழுதி வைத்து வழிபடுவார்களாம். இன்று நாம் அதை ஒரு நோட்டில் எழுதி வைத்து வணங்கலாம். விரதம் இருந்து மாலையில் பூஜை செய்வதும் விசேஷம். இந்த நாளில் செய்யும் தானம் சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில், சித்ரா பௌர்ணமி அன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, கோயில் தீர்த்தமான சரபேஸ்வர தீர்த்தத்தில் கலப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
தேவேந்திரனின் பிரம்மஹத்தி தோஷம், மதுரை பொற்றாமரைக் குளக்கரையில் ஶ்ரீ சொக்கநாதர் தரிசனத்தால் தீர்ந்தது என்கின்றன புராணங்கள். இங்கு ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று தேவேந்திரன் வந்து வழிபடுவதாக ஐதீகம்.
விழுப்புரம் அருகில் கூவாகத்தில் நடைபெறும் ‘கூத்தாண்டவர் திருவிழா’ சித்ராபெளர்ணமி அன்றே நடைபெறுகிறது.
சித்தர் பெளர்ணமி... சித்ரகுப்தர் வழிபாடு!
சித்ரா பௌர்ணமியன்று ஒரு சில ஊர்களில் இரவில் முழு நிலா வெளிச்சத்தில், பூமியில் இருந்து ஒருவகை உப்பு வெளிக் கிளம்பும். பூமிநாதம் என்று அழைக்கப்படும் அந்த உப்பு, மருந்து களுக்கு அதிகமான சக்தியை அளிக்கக் கூடியது. இந்த உப்பு சித்ரா பௌர்ணமி அன்று வெளிப்படும் என்பது சித்தர்கள் வாக்கு. இதையொட்டி சித்ரா பௌர்ணமி ஆதியில் ‘சித்தர் பௌர்ணமி’ என்று அழைக்கப்பட்டதாம்!
சித்ரகுப்தர் வழிபாட்டுக்கும் உகந்த நாள் சித்ராபெளர்ணமி. இந்த நாளில் சித்ர குப்தரை வழிபாடு செய்து வணங்கினால், அவர் நமக்கு எளிய முறையில் சிவனருளை அடைய வகை செய்வார் என்பது நம்பிக்கை. முற்காலத்தில் சித்ராபெளர்ணமி அன்று பூஜை அறையில், ஓர் ஓலைச் சுவடியில் ‘சித்ரகுப்தன் படி அளக்க...’ என்று எழுதி வைத்து வழிபடுவார்களாம். இன்று நாம் அதை ஒரு நோட்டில் எழுதி வைத்து வணங்கலாம். விரதம் இருந்து மாலையில் பூஜை செய்வதும் விசேஷம். இந்த நாளில் செய்யும் தானம் சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Author: SudhaSri
Article Title: சித்ரா பெளர்ணமி!!சிறப்பு நிகழ்வுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: சித்ரா பெளர்ணமி!!சிறப்பு நிகழ்வுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.