• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

காண்பது எல்லாம் உனது உருவம் 8

Uppada

New member
Joined
Mar 27, 2025
Messages
20
காண்பது எல்லாம் உனது உருவம் 8

விக்ரமனும், ரத்னாவும் அவள் வீட்டில் இருந்து கிளம்பி தங்களது வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் வாசலில் இருந்த அப்பாவை பார்த்து சிரித்து விட்டு உள்ளே உட்கார்ந்து இருந்தவர்களை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் நேராக துர்காவின் அறைக்குள் போனார்கள்.

இருவரையும் பார்த்த துர்கா கண்கலங்கி போனவள்
"என்னை மன்னிச்சுக்கோங்க..
கொழுந்தனாரே..நீங்களே எப்பவோ ஒரு தடவை தான் மாமியார் வீட்டுக்கு போவீங்க..நான் உங்களை உடனே வரது மாதிரி பண்ணிட்டேன்..
நீயும் மன்னிச்சுக்கோடி.."

"என்ன கா பேச்சு..கீழே விழுந்ததுக்கு நீங்க என்ன செய்வீங்க..இப்ப எப்படி இருக்கு.."

"அண்ணி நான் யாரோ இல்ல..எதுக்கு இந்த மன்னிப்பு எல்லாம்..நீங்களா வேணும்னே கீழே விழுந்தீங்க..வழுக்கி விழுந்ததுக்கு நீங்க என்ன செய்வீங்க..விடுங்க..
டாக்டர் கிட்ட பாத்தாச்சா..என்ன சொன்னாங்க.."

"மாமா தான் கூப்பிட்டு போனாரு..எதுவும் பெருசா இல்லையாம்..ஆனா ஹேர்லைன் க்ராக் இருக்காம்..பத்து நாளைக்கு பெட்ரெஸ்ட்ல தான் இருக்கணுமாம்.."

"அவ்ளோ தானே கவலையை விடுங்க..பாத்துக்கலாம்...அங்க உக்காந்திருக்கறவங்க யாராவது வந்து உங்களை கேட்டாங்களா.."

"என்ன கொழுந்தனாரே..அது எப்படி நடக்கும்..சூரியன் மேற்கே உதிக்குமா.."

"அப்பா உங்களை கூப்பிட்டு போறவரை வேடிக்கை பாத்துட்டு தான் இருந்தாங்களா... ஏன் உங்க மாமியார் கூட வரலியா.."

"அவங்களை பத்தி தெரியாதா..தேவதையை பாக்காம இருக்கும் போது நல்லா இருப்பாங்க..பாத்துட்டா அவங்க தேவதை கூடவே இருப்பாங்க..நகர கூட மாட்டாங்க...இது என்ன நாம பாக்காததா.."

எப்டியாவது போய் தொலையட்டும் விடுங்க...அண்ணா எப்ப வர்றான்...ஏதாவது தகவல் தெரியுமா..அண்ணி..."

"சாயந்திரம் வந்துடுவாரு...மாமா ஃபோன் பண்ணி பேசிட்டாரு..

"சரிங்க அண்ணி ரத்னாவோட வீட்டுலேந்து உங்களை பாக்க வர்றாங்க..சாப்பாடும் செஞ்சு எடுத்துட்டு வர்றாங்க..வெளியே கார் சத்தம் கேக்குது..வந்துட்டாங்க போலிருக்கு..நான் போய் பாக்கறேன்.."

"ஏன் டி அவங்களுக்கே நல்ல உடம்பு இல்லே..அவங்களை கஷ்டப்படுத்திக்கிட்டு.."

"இங்கே இருந்து ஃபோன் வந்து நாங்க கிளம்பறத்துக்குள்ள எல்லாம் ரெடி கா..."

வெளியே வந்த விக்ரமன் தன் தந்தையோடு வாசலுக்கு போய் வந்தவர்களை வரவேற்றான்.

"வாங்க..வாங்க..உள்ளே வாங்க மாமா..வாங்க அண்ணா.."

உள்ளே வந்தவர்கள் "அண்ணி சௌக்யமா..எப்படி இருக்கீங்க..வத்சலா எப்படி இருக்க மா.." என்ற கேள்வியை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் அவன் அம்மாவும் தங்கையும் மறந்து போய் கூட சிரிக்காமல் முறைத்து கொண்டே எழுந்து அறைக்குள் போய் மறைந்து கொண்டனர்.

துர்காவின் அறைக்குள் போன பார்வதியும், பிருந்தாவும் அவளிடம் "என்ன மா..பாத்ரூம் தான் உங்க வீட்டில தினமும் ரெண்டு தடவை தேய்ச்சு அலம்புவீங்களே..அப்பறம் எப்படி இந்த மாறி ஆச்சு..இப்ப எப்படி இருக்கு..டாக்டர் என்ன சொன்னாரு.."

"வாங்க மா..உக்காருங்க..எப்படி இருக்கீங்க..அப்பாவும் அண்ணாவும் உங்க கூட வர போறதா ரத்னா சொன்னாளே"

"வந்திருக்காங்க..இங்க என்ன நிலைமைனு தெரியாம எப்படி உள்ளே வர்றது தயங்கி அவங்க ஹாலில் உக்காந்திருக்காங்க மா.."

"பாத்ரூம்ல எல்லாம் வழுக்கி விழல மா..சமையலறைல யாரோ வேணும்னே தண்ணியை கொட்டி இருந்தாங்க..நான் சரியா கவனிக்காம அதுல வழுக்கி விழுந்திட்டேன்.."

"ஹேர்லைன் க்ராக் ஆகி இருக்காம்..டாக்டர் பத்து நாளைக்கு பெட்ரெஸ்ட்ல இருக்க சொல்லி இருக்காரு.."

இதை வெளியே நின்று கேட்டு கொண்டு இருந்த விக்ரமனுக்கு சமையலறையில் யார் தண்ணீர் கொட்டி இருப்பாங்க..நித்யா இப்படி எல்லாம் பண்ண மாட்டாளே என குழப்பம் அதிகமானது.

அம்மா கொண்டு வந்து தந்த பையை பிரித்த ரத்னா "மாமா..அப்பா.. மணி ஆச்சு சாப்பிட வாங்க.."

"வா..பரமசிவம்..வாங்க தம்பி சாப்பிடலாம்.."

எல்லாரும் வர அனைவருக்கும் தட்டு வைத்து ரத்னா வேகமாக பரிமாறினாள்.

அவர்கள் சாப்பிடுவதற்குள் டீ போட்டு அதை அம்மா, பிருந்தா துர்காவுக்கு குடுத்தாள்.

"நல்ல வேளை டி..நீ வந்தே..காலைல இருந்து பல்லுல பச்சை தண்ணி கூட படல.."

"நம்ம வீட்டு தேவதையும் அதை பெத்த மகராசியும் நான் கீழே விழுந்தது தெரிஞ்சதுமே உள்ளே போய் அடைஞ்சவங்க தான்..தூக்கி விட கூட மனசில்ல.."

"பாவம் மாமா தான் என்னை தூக்கி விட்டு என்னை ஹாஸ்பிடல்க்கு கூப்பிட்டு போனாங்க..இப்படி இருக்கும் போதே உங்க அத்தானுக்கு அவங்க அம்மா தெய்வம்..தங்கச்சி அப்பாவினு நெனப்புல இருக்காரு.."

"விடுங்க கா..அவங்களை பத்தி தெரிஞ்சது தானே..எதையும் யோசிக்காம இருங்க..சாப்பிட
கொண்டு வரேன் சாப்பிட்டு மாத்திரை போட்டு தூங்குங்க.."

"மா..பிருந்தா வாங்க சாப்பிடலாம்.."

அவள் வெளியே போவதற்கு சாப்பிட்டு எழுந்த விக்ரமன் டீ போட்டு எல்லாருக்கும் கொடுத்தான்.

அப்போது வேகமாக அங்கே வந்த செண்பகம் "இந்த வீட்டுல நாங்களும் இருக்கோம்..
மரியாதைப்பட்ட மனுஷன் நம்ம வீட்டு மாப்பிள்ளை இருக்காரு..
கொஞ்சம் கூட மரியாதை தெரியல உனக்கு.."

"ஆனா உன் மாமியார் வீட்டு ஆளுங்க வந்ததும் வந்தவங்களை மட்டும் பாத்து பாத்து கவனிக்கற..
ஏன் டா எங்களுக்கு டீ தரணும்னு உனக்கு தோணலையா.."

"மா..ரத்னா அண்ணியை கவனிக்க போயிருக்கா..அதால நான் டீ போட்டேன்.."

"நீங்க டீ குடிச்சீங்களா இல்லையானு எனக்கு எப்படி தெரியும்..ஒண்ணு நீங்க சொல்லணும்..இல்லை நீங்களே உங்களுக்கு வேண்டிய டீ போட்டுக்க வேண்டியது தான்.."

பேசி விட்டு அங்கிருந்து நகர்ந்து ஹாலுக்கு போய் உட்கார்ந்து ஈஸ்வரனோடு பேச ஆரம்பித்தான்.

அதற்குள் வேகமாக சமையலறைக்குள் நுழைந்த செண்பகம் என்ன செய்தாரோ..
சில நிமிடங்களில் வத்சலாவும் அவள் கணவனும் யாரிடமும் சொல்லாமல் தங்களது வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்.

அம்மாவின் வேகமான செயல்களால் குழம்பிய விக்ரமன் சமையலறைக்குள் போனான்.

"என்ன மா..செஞ்சே..அவங்க சாப்பிட்டாமலே போயிட்டாங்களே.."

"அது எப்படி சாப்பிடாம போவாங்க..எனக்கு நாலு இட்லி எடுத்து வெச்சுக்கிட்டு மீதியை அவளுக்கு குடுத்திட்டேனே.."

"ரத்னா, அண்ணிங்க அவ அம்மா எல்லாம் இன்னும் சாப்பிடலயே மா..சரி விடு..சாப்பாடு இருக்கு..மாவு இருக்கு..ரத்னா ஏதாவது செஞ்சுப்பா.."

"சாப்பாடா..மதியம், ராத்திரிக்கு எல்லாம் என் பொண்ணு பட்டினியாவா இருப்பா.."

மதியத்துக்கு எனக்கு வேண்டியதை மட்டும் எடுத்து வெச்சுக்கிட்டு எல்லாத்தையும் அவளுக்கு கொடுத்து அனுப்பியாச்சு.."

"மா..நீ என்ன பண்ணி இருக்கேனு உனக்கு புரியலயா" விக்ரமனிடம் கத்தலால் எல்லாருமே அங்கு ஓடி வந்தவர்களில் தணிகாசலம், ரத்னா தவிர மற்றவர்கள் அமைதியாக வாசலில் போய் தங்களது காரில் உட்கார்ந்து கொண்டனர்.

"என்ன டா..என்னாச்சு..எதுக்கு கத்தின"

"பா..பாரு..பா..காலைலேந்து ஒண்ணும் சாப்பிட பண்ணல..டீ கூட போட்டு குடிக்கல..இப்ப அத்தை கொண்டு வந்ததை எல்லாம் இவங்க பொண்ணுக்கு கட்டி குடுத்து அனுப்பி இருக்காங்க.."

"ஏன் செண்பகம்..உனக்கு இந்த ஈன புத்தி..ஏன் எல்லாத்தையும் குடுத்த..இங்க மத்தவங்க சாப்பிட வேணாமா.."

"குடுத்து அனுப்பினா என்ன..சாப்பாடு தானே..வந்தவங்க போனவங்க எதிர்ல எல்லாம் என்னை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தணும் அதானே..உங்களுக்கு.."

"உங்களுக்கு என் பொண்ணு மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல.. அவ பட்டினி கெடக்கணும்..அது தான் உங்களுக்கு வேணும்..அவளே பாவம்..புருஷன்..குழந்தைனு கஷ்டப்படறா.."

"கஷ்டப்படறாளா..நல்ல கதையா இருக்கு..ஏன் உன் பொண்ணுக்கு சமைக்க தெரியாதா..இல்ல வாங்கி சாப்பிட வக்கில்லையா.."

"எப்படி அவ மேல பாசம் இருக்கும்..சொல்லு..அவ உரிமையா தினமும் இங்க வந்து வேளா வேளைக்கு சாப்பிட்டு போவா.."

"செலவை சமாளிக்க முடியாம நான் திணறினப்ப...பாவம் அப்பா அவரால செலவு செய்ய முடியல.. நீயும் மாசம் எதாவது பணம் குடுனு சொன்னவன் கிட்ட அதுக்கு நான் ஹோட்டல்ல சாப்பிட்டுப்பேன்னு திமிரா சொன்னாளே.."

"அது கூட ஒழியட்டும்..ஆனா கூட பிறந்த அண்ணனை அவன் வீட்டுல வந்து உக்காந்துக்கிட்டு நீ சம்பாதிச்சு வீட்டுக்கு குடுக்கறியா..அப்பறம் எப்டி இந்த வீட்டுல மானமில்லாம சாப்பிடறனு உன் மாப்பிள்ளை கேட்ட போது உன் பொண்ணு என் அண்ணனை எப்படி பேசலாம்னு கேட்டாளா.."

"இல்ல நீ தான் வாயை திறந்தியா
என் பிள்ளையை நீங்க எப்படி பேசலாம்னு கேட்டியா..இல்லை அவனை சொல்ல உங்களுக்கு உரிமை இல்லைனு பளிச்சுனு சொன்னியா.."

"எதுவுமே நீ அம்மாவா அவனுக்கு பண்ணாத போது எனக்கு மட்டும் அவங்க மேல பாசமா வரும்..
அவங்களை பாக்க பாக்க வெறுப்பு தான் அதிகமா வருது.."

"இனி உன் கிட்ட நான் வந்து பேசினா ஏன்டா உனக்கு ரோஷமே இல்லாயா கேளு..ரத்னா போ மா...போய் உங்களுக்கு சாப்பிட ஏதாவது செய் மா.."

பேசி விட்டு ஹாலுக்கு வர அங்கு யாரும் இல்லாமல் போக அதிர்ந்து தணிகாசலமும் விக்ரமனும் வாசலுக்கு வர காரில் உட்கார்ந்து இருந்தவர்களை தர்ம சங்கடமாக பார்க்க..
"அத்தான் ஒரு விசேஷ வீட்டுக்கு போகணும்.. இப்ப தான் நியாபகத்துல வந்தது..நாங்க கிளம்பறோம்..தப்பா நெனச்சுக்காதீங்க..ரத்னாவுக்கு நான் அப்பறமா பேசறேன்னு சொல்லுங்க.." என சொல்லி மறுபடியும் உள்ளே கூட வராமல் மரியாதையாக கை கூப்பி வணங்கி விட்டு அவர்கள் கிளம்பி போனார்கள்.

தன் கணவன் தான் சமைத்ததால் தான் வீட்டில் சாப்பிடுவதே இல்லை என நினைத்து வருந்தி கொண்டு இருந்த ரத்னாவுக்கு உண்மை அறிந்து பேரதிர்ச்சி ஏற்பட அப்படியே சிலையாக உறைந்து போனாள். (தொடரும்)
 

Author: Uppada
Article Title: காண்பது எல்லாம் உனது உருவம் 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
214
நல்ல அம்மா
நல்ல மகள்
நல்ல மருமகன்.....

மருமகள் கீழ விழுந்தும்
மாமியார் வன்மம்....
மகனின் பேச்சில்
மீண்டும் வேதாளம்
மரம் ஏறி அமர்ந்து கொள்ள...
மாறாத மனைவி
மடை திறந்த வெள்ளம் போல
மனதில் உள்ளதை கொட்டி தீர்த்தது எல்லாம் வீணாகி தான் போனது....
 
Top Bottom