Dhakai
Member
- Joined
- Mar 23, 2025
- Messages
- 69
"ஏன்டா கல்யாணம் செஞ்சோம்னு இருக்குடா சரவணா" சோர்வும் கவலையுமாய் வந்த செந்திலின் குரலைக் கேட்டு,
"என்னடா என்னாச்சு?" எனக் கேட்டான் சரவணன்.
நடந்தவற்றைகளை உரைத்தவன், "அம்மாவும் சுந்தரியும் ரெண்டு பேருமே என்னைப் புரிஞ்சிக்காம அவங்க இஷ்டப்படி ஆடுறாங்கடா. கொஞ்சம் பொறுத்துப் போனா தான் என்ன? இப்ப நான் அம்மாகிட்டயும் பேசுறது இல்ல. சுந்தரிக்கிட்டயும் பேசுறது இல்ல. வாழ்க்கையே வெறுப்பா இருக்குடா" என்றான்.
"விடுடா! ரொம்ப யோசிக்காத! வீடு கட்டுற வேலையைத் தான் ஆரம்பிச்சிட்டல! அம்மாவையும் பொண்டாட்டியையும் தனித்தனியா வைக்கும் போது பிரச்சனையும் தானா சரியாகிடும்" என்று ஆறுதல் உரைத்தான் சரவணன்.
"நாம அன்பும் பாசமும் வச்சிருக்கிறவங்க சந்தோஷமா இருந்தா தானே நாம சந்தோஷமா இருக்க முடியும். அம்மாவைப் பார்த்தா பாவமா இருக்குடா. நாங்க வாழ்ந்த வாழ்க்கை உனக்குத் தெரியும் தானே. அம்மா எனக்காக எவ்ளோலாம் கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்களுக்காகனு இது வரைக்கும் வாழவே இல்லை" வருத்தமான குரலில் அவன் பேசிக் கொண்டே போகவும்,
"சீக்கிரம் குழந்தையைப் பெத்து அவங்க கைல கொடு. அது தான் அவங்களுக்கு இப்போதைக்கான சந்தோஷம். வயசானவங்களுக்குப் பேரன் பேத்தியை கொஞ்சி வளர்க்கிறதை விடப் பெரிய சந்தோஷம் இல்லடா" என்றான் சரவணன்.
"ம்க்கும். அதுக்கு என் பொண்டாட்டி என்கூட இருக்கனுமே" என்று அவன் கூறிய தினுசில் வாய்விட்டுச் சிரித்திருந்தான் சரவணன்.
"அடேய் அதான் வீட்டு வேலை முடிஞ்சதும் வந்துடுவாங்கல! வந்ததும் மொதல்ல குழந்தைக்குப் பிளான் பண்ணு. ஆட்டோமேட்டிக்கா உன் அம்மாவும் மனைவியும் ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருந்துக்குவாங்க. அதுவே பல பிரச்சனைகனை சரி செஞ்சிடும்" என்றான்.
இப்படியே நாள்கள் செல்ல, கணவனைக் காணாது முழுதாய் ஒரு மாதத்தைக் கடத்தியிருந்தாள் சுந்தரலட்சுமி.
கணவனின் கோபத்திலும் பாராமுகத்திலும் தவித்துத் தான் போனாள். அன்றாடம் அவனிடம் இருந்து வரும் நல விசாரிப்புகளில் மனத்தைத் தேற்றிக் கொண்ட போதும், அவனது அண்மைக்காக ஏங்கியது மனம்.
தனக்காகச் சிந்திக்காத கணவனுக்கு இப்பிரிவு தனது மனநிலையை உணர்த்தும் என்று நம்பி அமைதிக் காத்தாள்.
ஆனால் இந்தப் பிரிவு மேலும் அவனிடம் கோபத்தைத் தூண்டி விடுவதை உணரவில்லை அவள்.
தங்களது வீட்டிற்கு வர மாட்டேனெனச் சுந்தரலட்சுமி உரைத்ததில் கோபம் கொண்டவனாய் அவளாகவே வரட்டுமெனக் காத்திருந்தான் செந்தில்.
அவனுமே அவளின் பிரிவில் உடல் இளைத்து எதிலும் பிடிப்புமின்றித் தாடியுடன் சோர்வாகவே தான் அலைந்தான்.
மகனின் இந்நிலைக் கண்டு எந்தத் தாயிற்குத் தான் மனம் வலிக்காமல் இருக்கும். அதிலும் மகனை நல்லபடியாக வளர்ப்பதே வாழ்வின் லட்சியமும் பிடிப்புமென வாழ்ந்த மீனாவிற்குச் செந்திலின் புறக்கணிப்பும் விரக்தியான முகமும் பெருங்கவலையை அளித்தது. அதன் பொருட்டே சுந்தரலட்சுமியிடம் பேச முடிவு செய்தார் மீனா.
மகளின் வாழ்வை எண்ணி கவலைக் கொண்டனர் சுந்தரலட்சுமியின் பெற்றோர்.
அவளின் கை சரியானதும் இதைப்பற்றி அவளிடம் பேசலாம் என்று விட்டார் முகுந்தன். அதனால் செல்வராணியும் அவளிடம் இதனைப் பற்றி எதுவும் பேசவில்லை.
வாரயிறுதியான ஞாயிற்றுக் கிழமையில் தான் மருமகள் வேலைக்குச் செல்லாது வீட்டில் இருப்பாள் என்று கணித்தவராய் ஒரு நாள் ஞாயிற்றின் மாலைப் பொழுதில் அங்குச் சென்றிருந்தார் மீனா.
தனது வீட்டிற்குத் திடீரென்று வந்து நின்ற மாமியாரைப் பார்த்து திகைத்து நின்றாள் சுந்தரலட்சுமி.
முகுந்தனும் செல்வராணியும் சம்பந்திக்குரிய மரியாதையுடன் அவரை வரவேற்று முகப்பறையில் வைத்துப் பேசியிருக்க, தான் சுந்தரலட்சுமியிடம் தனியாகப் பேச வந்திருப்பதாகக் கூறி அவளது அறைக்குச் சென்று அமர்ந்தார் மீனா.
அந்த அறையின் நீளமும் அகலமும் அதைக் கலைநயத்துடன் வடிவமைத்திருந்த பாங்கையும் சுற்றிப் பார்த்தவராய் அமர்ந்திருந்த மீனாவிற்கு மகன் அவளது வீட்டிற்கும் தங்களது வீட்டிற்குமான வித்தியாசத்தைக் கூறியது நினைவிற்கு வந்து போனது.
"உனக்குக் கை அடிப்பட்டிருக்கு, அது வரைக்கும் உன் அம்மா வீட்டுல தான் இருப்பனு சொன்னானே செந்தில்? இன்னுமா சரியாகலை?" என்று வினவினார்.
"வெள்ளிக்கிழமை தான் கட்டு பிரிச்சாங்க அத்தை. இப்ப முழுசா குணமாகிடுச்சு" என்றவள் சொன்னதும்,
"அப்புறம் ஏன் இன்னும் அங்கே வராம இருக்க? என் மகனை அங்கே தனியா தவிக்க விட்டுட்டு இங்கே நீ சந்தோஷமா இருக்கியா?" என்று கேட்டார்.
"அத்தை" என்று சற்றுக் கோபக்குரலில் அவள் கூற,
"கல்யாணம் செஞ்சி வைக்கிறது புருஷனோட வாழத் தானே! உன் அம்மா அப்பா உனக்குப் புத்திமதி சொல்லி அனுப்பி வைப்பாங்கனு பார்த்தா, இப்படி உன்னை உட்கார வச்சி சோறு போட்டா, நீ எப்படி அங்கே வருவ?" என்று கேட்டார்.
கைகளைப் பிசைந்தவளாய் எதுவும் பேச முடியாமல் கோபமும் தயக்கமுமாய் அவள் அமர்ந்திருக்க, அது வரை அவளின் எதிரே அமர்ந்திருந்தவர் அவளருகில் அமர்ந்து அவளின் கையினைப் பற்றினார். அதிர்வுடன் அவரைப் பார்த்தாள் சுந்தரலட்சுமி.
"நீ சந்தோஷமா வாழாம போனா உங்க அப்பா அம்மா சந்தோஷப்படுவாங்களா சுந்தரி?" எனக் கேட்டார்.
இல்லை என அவள் தலையசைக்க, "அப்படித் தான் என் புள்ள சந்தோஷமா வாழலைனா நானும் சந்தோஷமா இருக்க முடியாதுமா" என்றவர்,
"எங்க வீட்டுக்கு வந்துடுமா. இனி நான் உன்னை எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன். நீ சமையலறைல இருக்கும் போது நான் அந்தப் பக்கமே வர மாட்டேன். நீ உன் விருப்பம் போல அங்கே வாழலாம்" என்றார்.
'என்ன இந்தத் திடீர் மாற்றம்' என்று யோசித்தவளாய் ஆச்சரியப் பாவனையில் அவரை அவள் பார்க்க,
"என்னாச்சு இந்தக் கிழவிக்கு! திடீர்னு இப்படி வந்து பேசுதுனு யோசிக்கிறியா?" என்றவர் கேட்டதும் விறுவிறுவென இல்லை எனத் தலை அசைத்தாள்.
பற்றியிருந்த அவளின் கையை விட்டு எழுந்தவராய் எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவர், "அப்பா அம்மா சொல்பேச்சை மீறி செயல்படத் தெரியாத பொண்ணா தான் என்னை வளர்த்தாங்க. கல்யாணத்துக்குப் பிறகும் என் புருஷன் பேச்சை மீறி நான் நடந்துக்கிட்டது இல்ல. அவர் இறந்த பிறகு இங்கே என் அண்ணன் குடும்பத்தை நம்பி தான் வந்தேன். அதுக்குப் பிறகு அண்ணா அண்ணி பேச்சை மீறி நான் நடந்துக்கிட்டது இல்லை.
செந்திலுக்குப் படிப்புல பெரிசா நாட்டம் இல்லாதனால சின்னதுலயே அவங்க கடைல வேலை செய்வான். அப்படியே வேலையாளா ஆயுசுக்கும் அவனை வச்சிக்கிட்டா கூட ஏதோ சம்பாத்தியம் அவனுக்கு வந்துடும். அதை வச்சி வாழ்ந்துடலாம்னு தான் நான் நினைச்சிருந்தேன். ஆனா என் அண்ணன் அவனுக்குத் தனியா கடை வச்சி வியாபாரத்தைக் கத்துக் கொடுத்து அவனை மொதலாளி ஆக்கினாரு. அப்படிப்பட்டவங்களை நான் எப்படிக் கெட்டவங்கனு நினைப்பேன்.
செந்திலுக்குப் படிக்காத பொண்ணா, வீட்டு வேலைச் செஞ்சிக்கிட்டு எங்களைக் கவனிச்சிக்கிற பொண்ணா அமைஞ்சா போதும்னு தான் நான் அண்ணிக்கிட்ட சொன்னேன்.
செந்தில் தான் உன்னைத் தான் கல்யாணம் செஞ்சிப்பேன்னு சொல்லி அடம்பிடிச்சி கல்யாணம் செஞ்சான். எனக்கு உன்னோட படிப்பும் வேலையும் உன்னோட தைரியமான பேச்சும் நீ பேசுற இங்கிலீஷூம் மிரட்சியைக் கொடுத்துச்சு. நம்ம குடும்பத்துக்கும் இவளுக்கும் சம்பந்தமே இல்லையேனு பயந்துட்டு இருந்த நேரத்துல, அண்ணி வந்து இப்படிப் படிச்சி வேலைச் செய்ற புள்ளையைக் கட்டி வச்சா குடும்பத்தைப் பிரிச்சிடுவா, கடைசிக்காலத்துல என்னை முதியோர் இல்லத்துல விட்டுருவானு சொல்லி, உன்கிட்ட எப்படிலாம் நான் நடந்துக்கனும்னு சொல்லிக் கொடுத்தாங்க.
அவங்க சொல்லிக் கொடுத்தப்படி தான் நான் நடந்தேனே தவிர, நானா எதையும் செய்யலை. இனி நான் அப்படி நடந்துக்க மாட்டேன்.
அவன் வாழ்க்கை கெட்டுக் போக நான் தான் காரணம்னு சொல்லிட்டான் என் மவன்" எனும் போது அவரின் குரல் கமறியது.
கண்களில் சூழ்ந்த நீரைத் துடைத்தவராய், "இந்த உலகத்துல வாழவே வேண்டாம்னு நினைச்சப்ப அவனுக்காகவே உசுரை வச்சிக்கிட்டு அவனை வளர்த்துவ நானு. நான் போய் அவன் வாழ்க்கையைக் கெடுப்பேனாமா?" என்றவர் அழுகைக்குரலில் கேட்கவும்,
"அத்தை.. இல்ல அத்தை.. அவர் ஏதோ கோபத்துல" என்று சுந்தரலட்சுமி கூற,
"என்கிட்ட பேசுறதையே நிறுத்திட்டான்மா. என்னமோ வாழ்க்கையே முடிஞ்சிபோனா மாதிரி சுத்துறான். சீக்கிரம் வீட்டுக்கு வா மா. நான் அவன் சந்தோஷமா இருக்கிறதைப் பார்க்கனும். என் பிள்ளையோட சந்தோஷத்தை விட எனக்கு வேற எதுவுமே முக்கியமில்லை. நான் இப்ப என் அண்ணன் அண்ணி யார்கிட்டயும் பேசுறது இல்லை. இனி என்னால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராதுமா. வீட்டுக்கு வா மா" கெஞ்சல் குரலில் உரைத்திருந்தார் மீனா.
அவரின் மகன் மீதான பாசமும் கண்ணீரும் பரிதவிப்பும் அவளின் நெஞ்சை நெகிழ்த்தின.
"நான் உங்களைக் கஷ்டப்படுத்தியிருந்தா மன்னிச்சிடுங்க அத்தை" உணர்ந்து உரைத்தாள் சுந்தரலட்சுமி.
தனது தாயிடம் மன்னிப்பைக் கேட்கச் சொல்லி செந்தில் சொன்ன பொழுதில் எல்லாம் கேட்காதவள் இப்பொழுது தானாக முன்வந்து கேட்டிருந்தாள்.
இப்பொழுது இவர் அவளை ஆச்சரிய அதிர்ச்சியுடன் பார்த்தவராய், "எப்ப வீட்டுக்கு வரனு சொல்லு" எனக் கேட்டார்.
"கைக்கட்டு பிரிச்சதும் நானே வரனும்னு தான் நினைச்சிட்டு இருந்தேன் அத்தை" என்றவள் தயக்கத்துடன் உரைக்க,
"அப்ப நாளைக்கே வந்துடு. நான் உனக்காகக் காத்துட்டு இருப்பேன்" என்றவராய் கிளம்பிச் சென்றிருந்தார் மீனா.
ஏதோ பெருத்த யோசனையுடன் அமர்ந்திருந்த மகளின் அருகில் அமர்ந்தவராய், "நீ நினைக்கிற மாதிரி உன் அத்தை டாக்சிக் பெர்சன் இல்ல லட்சுமி" என்றார் செல்வராணி.
"எதை வச்சி சொல்ற மா?" 'நாங்க பேசினதைத் தான் அம்மா கேட்கவே இல்லையே. அப்புறம் எதை வச்சி சொல்றாங்க' என்று சிந்தித்தவளாய் கேட்டிருந்தாள்.
"அவங்க முழுக்கக் கெட்ட குணங்கள் நிறைஞ்சவங்களா இருந்திருந்தா இப்படி உன்கிட்ட வந்து பொறுமையா பேசிக்கிட்டு இருக்க மாட்டாங்க" என்றார்.
"அம்மா டாக்சிக் பெர்சன் எல்லாரும் முழுக்கக் கெட்டவங்க இல்லமா. டாக்சிக் பெர்சன்றவங்க யாருனா, நாம அவங்களைக் கெட்டவங்கனு நினைக்கும் போது நல்லவங்க மாதிரி தெரிவாங்க. நல்லவங்கனு நினைக்கும் போது கெட்டவங்களா தெரிவாங்க. இவங்க நல்லவங்களா கெட்டவங்களானு புரியாம மண்டை குழம்பி போய் ஸ்ட்ரெஸ் ஆகி நம்மளை அலைய விட்டுருவாங்க. இப்படி ஆளுங்ககிட்ட இருந்து தான்மா நாம முக்கியமா ஒதுங்கி இருக்கனும்" என்றவள் பாடம் எடுப்பது போல் கூறவும்,
"குடும்பம் நடத்துறதுக்கு அதிமேதாவித்தனம் தேவையில்ல. கொஞ்சம் அன்பும் அட்ஜஸ்ட்மெண்ட்டும் இருந்தா போதும்னு போன வாரம் தான் நீயா நானால ஒரு பொண்ணு சொல்லுச்சு. அது எவ்ளோ சரினு நிரூபிக்கிற லட்சுமி. உன்னோட அதிமேதாவித்தனத்தை மூட்டைக் கட்டி வச்சிட்டு ஒழுங்கா போய் வாழுற வழியைப் பாருடி" என்றார் செல்வராணி.
அவள் தாயை முறைக்க, "எல்லாருக்குமே கண்ணாடி காட்டுற முகம் தாண்டி பல முகங்கள் அவங்களுக்குள்ள புதைஞ்சி இருக்கும் சுந்தரி. யார் யார்கிட்ட என்னென்ன முகத்தை வெளிப்படுத்தனும்ங்கிறதை அவங்கத் தான் தீர்மானிக்குறாங்க. அந்த மாதிரி தான் உன் மாமியார் செந்தில்கிட்ட தாயாகக் காட்டிய முகம் வேற, மாமியாராக உன்கிட்ட காட்டின முகம் வேற! இனி உன்கிட்ட செந்தில்கிட்ட காட்டின தாய் முகத்தைக் கொஞ்சமா காட்டுவாங்கனு நம்பி கிளம்புற வழியைப் பாரு லட்சுமி" என்றார் செல்வராணி.
பெருமூச்சுவிட்டவளாய் கலவையான உணர்வுடன் மறுநாள் புகுந்த வீட்டிற்குச் செல்வதற்காகத் தன் மனத்தைத் தயார்படுத்தினாள் சுந்தரலட்சுமி.
"என்னடா என்னாச்சு?" எனக் கேட்டான் சரவணன்.
நடந்தவற்றைகளை உரைத்தவன், "அம்மாவும் சுந்தரியும் ரெண்டு பேருமே என்னைப் புரிஞ்சிக்காம அவங்க இஷ்டப்படி ஆடுறாங்கடா. கொஞ்சம் பொறுத்துப் போனா தான் என்ன? இப்ப நான் அம்மாகிட்டயும் பேசுறது இல்ல. சுந்தரிக்கிட்டயும் பேசுறது இல்ல. வாழ்க்கையே வெறுப்பா இருக்குடா" என்றான்.
"விடுடா! ரொம்ப யோசிக்காத! வீடு கட்டுற வேலையைத் தான் ஆரம்பிச்சிட்டல! அம்மாவையும் பொண்டாட்டியையும் தனித்தனியா வைக்கும் போது பிரச்சனையும் தானா சரியாகிடும்" என்று ஆறுதல் உரைத்தான் சரவணன்.
"நாம அன்பும் பாசமும் வச்சிருக்கிறவங்க சந்தோஷமா இருந்தா தானே நாம சந்தோஷமா இருக்க முடியும். அம்மாவைப் பார்த்தா பாவமா இருக்குடா. நாங்க வாழ்ந்த வாழ்க்கை உனக்குத் தெரியும் தானே. அம்மா எனக்காக எவ்ளோலாம் கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்களுக்காகனு இது வரைக்கும் வாழவே இல்லை" வருத்தமான குரலில் அவன் பேசிக் கொண்டே போகவும்,
"சீக்கிரம் குழந்தையைப் பெத்து அவங்க கைல கொடு. அது தான் அவங்களுக்கு இப்போதைக்கான சந்தோஷம். வயசானவங்களுக்குப் பேரன் பேத்தியை கொஞ்சி வளர்க்கிறதை விடப் பெரிய சந்தோஷம் இல்லடா" என்றான் சரவணன்.
"ம்க்கும். அதுக்கு என் பொண்டாட்டி என்கூட இருக்கனுமே" என்று அவன் கூறிய தினுசில் வாய்விட்டுச் சிரித்திருந்தான் சரவணன்.
"அடேய் அதான் வீட்டு வேலை முடிஞ்சதும் வந்துடுவாங்கல! வந்ததும் மொதல்ல குழந்தைக்குப் பிளான் பண்ணு. ஆட்டோமேட்டிக்கா உன் அம்மாவும் மனைவியும் ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருந்துக்குவாங்க. அதுவே பல பிரச்சனைகனை சரி செஞ்சிடும்" என்றான்.
இப்படியே நாள்கள் செல்ல, கணவனைக் காணாது முழுதாய் ஒரு மாதத்தைக் கடத்தியிருந்தாள் சுந்தரலட்சுமி.
கணவனின் கோபத்திலும் பாராமுகத்திலும் தவித்துத் தான் போனாள். அன்றாடம் அவனிடம் இருந்து வரும் நல விசாரிப்புகளில் மனத்தைத் தேற்றிக் கொண்ட போதும், அவனது அண்மைக்காக ஏங்கியது மனம்.
தனக்காகச் சிந்திக்காத கணவனுக்கு இப்பிரிவு தனது மனநிலையை உணர்த்தும் என்று நம்பி அமைதிக் காத்தாள்.
ஆனால் இந்தப் பிரிவு மேலும் அவனிடம் கோபத்தைத் தூண்டி விடுவதை உணரவில்லை அவள்.
தங்களது வீட்டிற்கு வர மாட்டேனெனச் சுந்தரலட்சுமி உரைத்ததில் கோபம் கொண்டவனாய் அவளாகவே வரட்டுமெனக் காத்திருந்தான் செந்தில்.
அவனுமே அவளின் பிரிவில் உடல் இளைத்து எதிலும் பிடிப்புமின்றித் தாடியுடன் சோர்வாகவே தான் அலைந்தான்.
மகனின் இந்நிலைக் கண்டு எந்தத் தாயிற்குத் தான் மனம் வலிக்காமல் இருக்கும். அதிலும் மகனை நல்லபடியாக வளர்ப்பதே வாழ்வின் லட்சியமும் பிடிப்புமென வாழ்ந்த மீனாவிற்குச் செந்திலின் புறக்கணிப்பும் விரக்தியான முகமும் பெருங்கவலையை அளித்தது. அதன் பொருட்டே சுந்தரலட்சுமியிடம் பேச முடிவு செய்தார் மீனா.
மகளின் வாழ்வை எண்ணி கவலைக் கொண்டனர் சுந்தரலட்சுமியின் பெற்றோர்.
அவளின் கை சரியானதும் இதைப்பற்றி அவளிடம் பேசலாம் என்று விட்டார் முகுந்தன். அதனால் செல்வராணியும் அவளிடம் இதனைப் பற்றி எதுவும் பேசவில்லை.
வாரயிறுதியான ஞாயிற்றுக் கிழமையில் தான் மருமகள் வேலைக்குச் செல்லாது வீட்டில் இருப்பாள் என்று கணித்தவராய் ஒரு நாள் ஞாயிற்றின் மாலைப் பொழுதில் அங்குச் சென்றிருந்தார் மீனா.
தனது வீட்டிற்குத் திடீரென்று வந்து நின்ற மாமியாரைப் பார்த்து திகைத்து நின்றாள் சுந்தரலட்சுமி.
முகுந்தனும் செல்வராணியும் சம்பந்திக்குரிய மரியாதையுடன் அவரை வரவேற்று முகப்பறையில் வைத்துப் பேசியிருக்க, தான் சுந்தரலட்சுமியிடம் தனியாகப் பேச வந்திருப்பதாகக் கூறி அவளது அறைக்குச் சென்று அமர்ந்தார் மீனா.
அந்த அறையின் நீளமும் அகலமும் அதைக் கலைநயத்துடன் வடிவமைத்திருந்த பாங்கையும் சுற்றிப் பார்த்தவராய் அமர்ந்திருந்த மீனாவிற்கு மகன் அவளது வீட்டிற்கும் தங்களது வீட்டிற்குமான வித்தியாசத்தைக் கூறியது நினைவிற்கு வந்து போனது.
"உனக்குக் கை அடிப்பட்டிருக்கு, அது வரைக்கும் உன் அம்மா வீட்டுல தான் இருப்பனு சொன்னானே செந்தில்? இன்னுமா சரியாகலை?" என்று வினவினார்.
"வெள்ளிக்கிழமை தான் கட்டு பிரிச்சாங்க அத்தை. இப்ப முழுசா குணமாகிடுச்சு" என்றவள் சொன்னதும்,
"அப்புறம் ஏன் இன்னும் அங்கே வராம இருக்க? என் மகனை அங்கே தனியா தவிக்க விட்டுட்டு இங்கே நீ சந்தோஷமா இருக்கியா?" என்று கேட்டார்.
"அத்தை" என்று சற்றுக் கோபக்குரலில் அவள் கூற,
"கல்யாணம் செஞ்சி வைக்கிறது புருஷனோட வாழத் தானே! உன் அம்மா அப்பா உனக்குப் புத்திமதி சொல்லி அனுப்பி வைப்பாங்கனு பார்த்தா, இப்படி உன்னை உட்கார வச்சி சோறு போட்டா, நீ எப்படி அங்கே வருவ?" என்று கேட்டார்.
கைகளைப் பிசைந்தவளாய் எதுவும் பேச முடியாமல் கோபமும் தயக்கமுமாய் அவள் அமர்ந்திருக்க, அது வரை அவளின் எதிரே அமர்ந்திருந்தவர் அவளருகில் அமர்ந்து அவளின் கையினைப் பற்றினார். அதிர்வுடன் அவரைப் பார்த்தாள் சுந்தரலட்சுமி.
"நீ சந்தோஷமா வாழாம போனா உங்க அப்பா அம்மா சந்தோஷப்படுவாங்களா சுந்தரி?" எனக் கேட்டார்.
இல்லை என அவள் தலையசைக்க, "அப்படித் தான் என் புள்ள சந்தோஷமா வாழலைனா நானும் சந்தோஷமா இருக்க முடியாதுமா" என்றவர்,
"எங்க வீட்டுக்கு வந்துடுமா. இனி நான் உன்னை எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன். நீ சமையலறைல இருக்கும் போது நான் அந்தப் பக்கமே வர மாட்டேன். நீ உன் விருப்பம் போல அங்கே வாழலாம்" என்றார்.
'என்ன இந்தத் திடீர் மாற்றம்' என்று யோசித்தவளாய் ஆச்சரியப் பாவனையில் அவரை அவள் பார்க்க,
"என்னாச்சு இந்தக் கிழவிக்கு! திடீர்னு இப்படி வந்து பேசுதுனு யோசிக்கிறியா?" என்றவர் கேட்டதும் விறுவிறுவென இல்லை எனத் தலை அசைத்தாள்.
பற்றியிருந்த அவளின் கையை விட்டு எழுந்தவராய் எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவர், "அப்பா அம்மா சொல்பேச்சை மீறி செயல்படத் தெரியாத பொண்ணா தான் என்னை வளர்த்தாங்க. கல்யாணத்துக்குப் பிறகும் என் புருஷன் பேச்சை மீறி நான் நடந்துக்கிட்டது இல்ல. அவர் இறந்த பிறகு இங்கே என் அண்ணன் குடும்பத்தை நம்பி தான் வந்தேன். அதுக்குப் பிறகு அண்ணா அண்ணி பேச்சை மீறி நான் நடந்துக்கிட்டது இல்லை.
செந்திலுக்குப் படிப்புல பெரிசா நாட்டம் இல்லாதனால சின்னதுலயே அவங்க கடைல வேலை செய்வான். அப்படியே வேலையாளா ஆயுசுக்கும் அவனை வச்சிக்கிட்டா கூட ஏதோ சம்பாத்தியம் அவனுக்கு வந்துடும். அதை வச்சி வாழ்ந்துடலாம்னு தான் நான் நினைச்சிருந்தேன். ஆனா என் அண்ணன் அவனுக்குத் தனியா கடை வச்சி வியாபாரத்தைக் கத்துக் கொடுத்து அவனை மொதலாளி ஆக்கினாரு. அப்படிப்பட்டவங்களை நான் எப்படிக் கெட்டவங்கனு நினைப்பேன்.
செந்திலுக்குப் படிக்காத பொண்ணா, வீட்டு வேலைச் செஞ்சிக்கிட்டு எங்களைக் கவனிச்சிக்கிற பொண்ணா அமைஞ்சா போதும்னு தான் நான் அண்ணிக்கிட்ட சொன்னேன்.
செந்தில் தான் உன்னைத் தான் கல்யாணம் செஞ்சிப்பேன்னு சொல்லி அடம்பிடிச்சி கல்யாணம் செஞ்சான். எனக்கு உன்னோட படிப்பும் வேலையும் உன்னோட தைரியமான பேச்சும் நீ பேசுற இங்கிலீஷூம் மிரட்சியைக் கொடுத்துச்சு. நம்ம குடும்பத்துக்கும் இவளுக்கும் சம்பந்தமே இல்லையேனு பயந்துட்டு இருந்த நேரத்துல, அண்ணி வந்து இப்படிப் படிச்சி வேலைச் செய்ற புள்ளையைக் கட்டி வச்சா குடும்பத்தைப் பிரிச்சிடுவா, கடைசிக்காலத்துல என்னை முதியோர் இல்லத்துல விட்டுருவானு சொல்லி, உன்கிட்ட எப்படிலாம் நான் நடந்துக்கனும்னு சொல்லிக் கொடுத்தாங்க.
அவங்க சொல்லிக் கொடுத்தப்படி தான் நான் நடந்தேனே தவிர, நானா எதையும் செய்யலை. இனி நான் அப்படி நடந்துக்க மாட்டேன்.
அவன் வாழ்க்கை கெட்டுக் போக நான் தான் காரணம்னு சொல்லிட்டான் என் மவன்" எனும் போது அவரின் குரல் கமறியது.
கண்களில் சூழ்ந்த நீரைத் துடைத்தவராய், "இந்த உலகத்துல வாழவே வேண்டாம்னு நினைச்சப்ப அவனுக்காகவே உசுரை வச்சிக்கிட்டு அவனை வளர்த்துவ நானு. நான் போய் அவன் வாழ்க்கையைக் கெடுப்பேனாமா?" என்றவர் அழுகைக்குரலில் கேட்கவும்,
"அத்தை.. இல்ல அத்தை.. அவர் ஏதோ கோபத்துல" என்று சுந்தரலட்சுமி கூற,
"என்கிட்ட பேசுறதையே நிறுத்திட்டான்மா. என்னமோ வாழ்க்கையே முடிஞ்சிபோனா மாதிரி சுத்துறான். சீக்கிரம் வீட்டுக்கு வா மா. நான் அவன் சந்தோஷமா இருக்கிறதைப் பார்க்கனும். என் பிள்ளையோட சந்தோஷத்தை விட எனக்கு வேற எதுவுமே முக்கியமில்லை. நான் இப்ப என் அண்ணன் அண்ணி யார்கிட்டயும் பேசுறது இல்லை. இனி என்னால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராதுமா. வீட்டுக்கு வா மா" கெஞ்சல் குரலில் உரைத்திருந்தார் மீனா.
அவரின் மகன் மீதான பாசமும் கண்ணீரும் பரிதவிப்பும் அவளின் நெஞ்சை நெகிழ்த்தின.
"நான் உங்களைக் கஷ்டப்படுத்தியிருந்தா மன்னிச்சிடுங்க அத்தை" உணர்ந்து உரைத்தாள் சுந்தரலட்சுமி.
தனது தாயிடம் மன்னிப்பைக் கேட்கச் சொல்லி செந்தில் சொன்ன பொழுதில் எல்லாம் கேட்காதவள் இப்பொழுது தானாக முன்வந்து கேட்டிருந்தாள்.
இப்பொழுது இவர் அவளை ஆச்சரிய அதிர்ச்சியுடன் பார்த்தவராய், "எப்ப வீட்டுக்கு வரனு சொல்லு" எனக் கேட்டார்.
"கைக்கட்டு பிரிச்சதும் நானே வரனும்னு தான் நினைச்சிட்டு இருந்தேன் அத்தை" என்றவள் தயக்கத்துடன் உரைக்க,
"அப்ப நாளைக்கே வந்துடு. நான் உனக்காகக் காத்துட்டு இருப்பேன்" என்றவராய் கிளம்பிச் சென்றிருந்தார் மீனா.
ஏதோ பெருத்த யோசனையுடன் அமர்ந்திருந்த மகளின் அருகில் அமர்ந்தவராய், "நீ நினைக்கிற மாதிரி உன் அத்தை டாக்சிக் பெர்சன் இல்ல லட்சுமி" என்றார் செல்வராணி.
"எதை வச்சி சொல்ற மா?" 'நாங்க பேசினதைத் தான் அம்மா கேட்கவே இல்லையே. அப்புறம் எதை வச்சி சொல்றாங்க' என்று சிந்தித்தவளாய் கேட்டிருந்தாள்.
"அவங்க முழுக்கக் கெட்ட குணங்கள் நிறைஞ்சவங்களா இருந்திருந்தா இப்படி உன்கிட்ட வந்து பொறுமையா பேசிக்கிட்டு இருக்க மாட்டாங்க" என்றார்.
"அம்மா டாக்சிக் பெர்சன் எல்லாரும் முழுக்கக் கெட்டவங்க இல்லமா. டாக்சிக் பெர்சன்றவங்க யாருனா, நாம அவங்களைக் கெட்டவங்கனு நினைக்கும் போது நல்லவங்க மாதிரி தெரிவாங்க. நல்லவங்கனு நினைக்கும் போது கெட்டவங்களா தெரிவாங்க. இவங்க நல்லவங்களா கெட்டவங்களானு புரியாம மண்டை குழம்பி போய் ஸ்ட்ரெஸ் ஆகி நம்மளை அலைய விட்டுருவாங்க. இப்படி ஆளுங்ககிட்ட இருந்து தான்மா நாம முக்கியமா ஒதுங்கி இருக்கனும்" என்றவள் பாடம் எடுப்பது போல் கூறவும்,
"குடும்பம் நடத்துறதுக்கு அதிமேதாவித்தனம் தேவையில்ல. கொஞ்சம் அன்பும் அட்ஜஸ்ட்மெண்ட்டும் இருந்தா போதும்னு போன வாரம் தான் நீயா நானால ஒரு பொண்ணு சொல்லுச்சு. அது எவ்ளோ சரினு நிரூபிக்கிற லட்சுமி. உன்னோட அதிமேதாவித்தனத்தை மூட்டைக் கட்டி வச்சிட்டு ஒழுங்கா போய் வாழுற வழியைப் பாருடி" என்றார் செல்வராணி.
அவள் தாயை முறைக்க, "எல்லாருக்குமே கண்ணாடி காட்டுற முகம் தாண்டி பல முகங்கள் அவங்களுக்குள்ள புதைஞ்சி இருக்கும் சுந்தரி. யார் யார்கிட்ட என்னென்ன முகத்தை வெளிப்படுத்தனும்ங்கிறதை அவங்கத் தான் தீர்மானிக்குறாங்க. அந்த மாதிரி தான் உன் மாமியார் செந்தில்கிட்ட தாயாகக் காட்டிய முகம் வேற, மாமியாராக உன்கிட்ட காட்டின முகம் வேற! இனி உன்கிட்ட செந்தில்கிட்ட காட்டின தாய் முகத்தைக் கொஞ்சமா காட்டுவாங்கனு நம்பி கிளம்புற வழியைப் பாரு லட்சுமி" என்றார் செல்வராணி.
பெருமூச்சுவிட்டவளாய் கலவையான உணர்வுடன் மறுநாள் புகுந்த வீட்டிற்குச் செல்வதற்காகத் தன் மனத்தைத் தயார்படுத்தினாள் சுந்தரலட்சுமி.
Author: Dhakai
Article Title: உனதன்பின் கதகதப்பில் 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உனதன்பின் கதகதப்பில் 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.