• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கவிக்குயிலின் கவி விமர்சனம் ❤️

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
221
#அரங்கமேறும்

#பைதானி

#கதைத்தறி_போட்டிக்_கதை

#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்

#கவிக்குயிலின்_கவி _ விமர்சனம்


திருவேங்கடம் கோதை
அன்பும் அரவணைப்பும் கள்ளம் கபடமற்ற
அந்த காலத்து தம்பதியர்...
அற்புதம்❤️❤️❤️

சுந்தரம் 💔 மாலதி
புரிதலும் இல்லை
பொறுமையும் இல்லை
பிரிந்து சென்றும்
புரியாத வாழ்க்கை
இன்றைய
நவீன தம்பதியர்😭🤧

தாய் தந்தை பிரிவு தாக்கினால்
தங்கள் பிள்ளையின்
துயரம்
தாயின் வாழ்வு
தந்தையின் பிறழ்வு
தீர்க்க முடியாத நிலை
திருத்தும் காலம்....

பணத்தை வைத்து
பாசம் என்ற பெயரில்
போலிவேடம் போட்டு
புருஷனை மதிக்காமல்
பிள்ளையை தவிக்கவிட்டு
பிரிந்து சென்றும்
பிழை எது என்பதை புரியாமல் வாழும்
பல நவீன பெண்களுக்கு பாடமாக
பிள்ளைகளின் வலியை
புரிய வைக்கிறது......

தன் ஆசை
தன் சுகத்தை பெரிதாக
தலை தூக்கி பார்க்கும்
தாய்களுக்கு புரிவதில்லை
தவறான புரிதலில்
தலைமுறை மாறுவது....

கடமை கண்ணியம் கட்டுப்பாடு
கல்யாணத்தில் அவசியம்
ஒருவர் மீறினால்
ஆட்டம் கண்டுவிடும் வாழ்க்கை...


ஆண் பெண் பேதமில்லை
அனைவரும் சமம் தான்
ஆனால்
தாய்மை என்ற
வரும் போது ஒரு
படி மேல் தான்
தாய் என்றும்...

தாய் மடியில்
சுமந்தால்
தந்தை தோலில் சுமக்கிரான்....

தாங்கும் இடம் தான் வேறு
தாங்குவது இருவருமே சமம் .....

தாய் தவறிய
தருணம்
தான் வாழ்க்கை
தன் சுதந்திரம்...

தந்தை தவறிய தருணம்
தன் இயலாமை
தன் குற்றவுணர்ச்சி...

தவறில் இருந்து
தவறு செய்வது அல்ல
தவறை திருத்திக் கொள்வது...

தன்னையே திருத்தி
தாயை தள்ளி வைத்தும்
தந்தையை காத்தும்
தாத்தா பாட்டியுடன்
தன் வாழ்வை திருத்தமாக மாற்றி
திருமணத்தில் தொடரட்டும் ரங்கன் வாழ்வு மலரட்டும்....


மனதில் அன்பும்
மற்றவரை புரிந்து
மதித்து நடக்கும் குணம்
மாறாத நம்பிக்கை
மரியாதையான வாழ்வு
மகிழ்ச்சியை தரும்....

அன்றைய
அன்பும் அரவணைப்பும் இன்றைய புரிதலும் நவீனமும் இருந்தாலும்
நம்பிக்கையும் காதலும்
குடும்பத்தை தழைக்க செய்யும்
ரங்கராஜன்💕ருக்மணி காதல் கல்யாணம் சூப்பர்...


அன்றோ இன்றோ
அன்பும் புரிதலும்
அழகு...என்றும்
அழியாது....
அரங்கமேறும்
அரங்கனின்
அன்பு வாழ்வு
அவன் ருக்மணியுடன்...

வாழ்த்துக்கள் மா 💐 👏🏻🤩👏🏻👏🏻👍🏻
 

Author: Mrs Beenaloganathan
Article Title: கவிக்குயிலின் கவி விமர்சனம் ❤️
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom