அத்தியாயம் 2
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
"போதும், நிறுத்துங்க மிஸ்டர் சர்வா..." என்ற இயலின் குரல் ஒட்டுமொத்த அமைதியையும் கிழித்தெறிந்தது. நொடி நேரம் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பாலகிருஷ்ணன் மெல்ல இயலின் பக்கம் திரும்பினார். அவளோ நிதானமாக சர்வாவை நோக்கி நடந்தாள். மங்கையின் காலடிச் சத்தம் அந்த இடத்தின் அமைதியை மெல்ல உடைத்தது.
நேராக சர்வாவின் முன் சென்று நின்றவள், "நீங்க இந்தக் குருடியை தான் கல்யாணம் பண்ணிக்க வேணும்னு எந்த வித கட்டாயமும் இல்லை, மிஸ்டர் சர்வா. தாராளமா நீங்க வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்..."
என்றவளாக, சற்று முன்னர் ஆடவன் அணிவித்த மோதிரத்தை அவனது உள்ளங்கையில் திணித்து,
"இப்போ நீங்க இங்கிருந்து கிளம்பலாம்..." என வாசலைக் கைக் காட்டினாள்.
காரிகையின் வார்த்தைகள், மழை மேகங்களுக்கு இடையே பிளந்து செல்லும் மின்னலாய், அவனது மனதைக் கடந்து சென்றன. ஆனால் அதை அவன் அப்பொழுது உணரவில்லை.
அர்ஜுனனுக்குப் பறவையின் கண்கள் மட்டுமே இலக்காக இருந்தது போல, சர்வாவின் எண்ணங்கள் அனைத்தும் நாகலட்சுமி என்ற நல்ல பாம்பைச் சுற்றியே வளம் வந்தது.
இயலை ஒரு பார்வை பார்த்துவிட்டு விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தான்.
தற்போது இயலின் பார்வை நாகலட்சுமியை தீண்டியது.
அவரது முகம் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டிக்
கொள்ளவில்லை
என்றாலும், அவரது கண்கள் ஆனந்தத்தில் மிளிர்ந்தன.
புருவங்களை உயர்த்தி
"உங்களுக்கு தனியா சொல்லனுமா..." எனக் கேட்க,
இதழ்களை வளைத்து ஏளனமாக சிரித்தவரின் சிரிப்பே
‘இதுக்கு மேலே நான் இங்கிருந்து என்ன பண்ண போறேன்’ என்று சொன்னது.
அவரை அழுத்தமாக பார்த்தாள்.
அந்த பார்வையே, ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தேன்னு வையேன், சிரிக்கிற வாயை ஒடிச்சிடுவேன்’ என்ற செய்தியை கூறியது.
அது பெரியவளுக்கு புரிந்தது போல "குருடிக்கு இருக்கிற ஏத்தத்தை பாரேன்..." என முனகிவிட்டு நகர, அவரின் பின்னால் வந்த மூர்த்தியோ பாவையின் தலையில் கைவைத்து
"மன்னிச்சிடு மா..." என்றார். அதற்கு பதில் சொல்லாமல் சிரித்தாள்.
அந்த சிரிப்பில் வலி இல்லை, வேதனை இல்லை, வெறுமை மட்டும் இருந்தது.
இளையவளின் தலையில் அழுத்தத்தை கூட்டி "போயிட்டு வரேன் மா..." என்றவர் விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தார்.
மெல்ல மெல்ல மொத்தக் கூட்டம் களைந்தது.மொத்த ஆற்றலும் வடிந்து, சோர்ந்து நின்றாள் பாவை. அவளை ஓடி வந்து தாங்கினார் பாலகிருஷ்ணன்.
"ப்பா..." என்றபடி அவரின் தோளில் சாய்ந்து கதறிவிட்டாள்.
மகளின் கதறலுக்குக் காரணமானவர்களின் மீது கொலைவெறியே வந்தது பாலகிருஷ்ணனுக்கு.
இப்படியான பிரச்சனைகள் வரக் கூடாதென்று தான், திருமணப் பேச்சு ஆரம்பித்தவுடன் மகளின் பார்வை குறைபாட்டை கூறிவிட்டார்.
அப்பொழுது ‘இதெல்லாம் ஒரு பிரச்சனையா?’ என்று கூறிவிட்டு, இப்போது அதனை பெரிதுப் படுத்தி திருமணத்தை நிறுத்திவிட்டது மட்டுமல்லாமல் மகளை வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு சென்றதில், அத்தனை கோபம் வந்தது அவருக்கு.
அதே நேரத்தில், மகளின் கதறலில் உள்ளுக்குள் தவித்து போனார் பாலகிருஷ்ணன். தாயைப் போலவே தனது மகளுக்கும் வண்ணப் பார்வையின்மை (முழுமையான நிறக்குருட்டு) இருப்பதை அறிந்த கணமே, துடித்து போனார்.
அவளும் தாயைப் போலவே இந்த உலகை கருப்பு, வெள்ளை மற்றும் சாய்வான சாம்பல் நிறங்களில் மட்டுமே காண்பாள் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
பரம்பரை நிறக் குறைபாடுகளுக்கு எந்த சிகிச்சையும் இல்லையென்று மருத்துவம் கைவிட, அவளுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டனர் அனைவரும்.
நிற வேறுபாடுகள் தான் அவளுக்கு தெரியாதே தவிர, பார்வை நன்றாகவே தெரியும். அதே நேரம், அவள் வண்ணங்களை அறிய இன்றைய தொழில்நுட்பம் அவளுக்கு உதவிக் கொண்டுதான் இருக்கிறது.
ஒரு பக்கம் கோபம், ஒரு பக்கம் துக்கமென அமர்ந்திருந்தவர்,
மகளின் கேசத்தை மெதுவாக கோதிக்கொண்டே, "மன்னிச்சிடு டா பொன்னம்மா... மனுஷத்தனமே இல்லாத ஒருத்தனை உனக்கு பார்த்திருக்கவே கூடாது..." என்றார்.
கண்ணீர் துளிர்த்த கண்களுடன்,
"அவர் அப்படியானவர் இல்லப்பா. ரொம்ப நல்லவர். என்னை, உங்களை மாதிரி பார்த்துக்கிட்டார் ப்பா..." என்றாள்.
அவளது வார்த்தைகள், ஆழமாக
பாலகிருஷ்ணனின் உள்ளத்தை தொட்டன. மகளின் கண்களில் தெரிந்தது வெறும் நம்பிக்கை அல்ல காதல் என்று உணர முடியாதளவிற்கு விவரம் இல்லாதவர் இல்லையே அவர்.
"நான் வேணும்னா அந்த பையன்கிட்ட பேசி பார்க்கவா?"
எனக் கேட்டார் மென்மையாக.
மாயோளோ பட்டென நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். "அவர் தான் இந்தக் குருடியை வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாரே ப்பா. எனக்கும் அவர் வேண்டாம்..." என்றாள், கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுத்தித் துடைத்து கொண்டவள் எழுந்து நடக்க, செல்லும் மகளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் பாலகிருஷ்ணன்.
மகளின் மனக் காயத்திற்கு ஆகச்சிறந்த மருந்து காலம் தான் என்று நினைத்தவர் கலங்கிய கண்களுடன் தங்களையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்தார்.
"மைதிலி, பாப்பாவை பார்த்துக்க, தோட்டத்து பக்கம் போயிட்டு வந்துடறேன்..." என்றவர் வாசலை நோக்கி நடந்தார்.
****
நிலவின் ஒளியில் ஊர் இன்னும் கனவுக்குள் மிதந்து கொண்டிருந்தது. மேகங்கள், விளையாடும் சிறாரைப் போல, நிலவின் மெல்லிய ஒளியை மறைக்க பாய்ந்து கொண்டிருந்தன.
சர்வா ஓட்டிய கார் கடற்கரைச் சாலையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. சேலத்திலிருந்து கிளம்பிய போது இருந்த அதிவேகம், சென்னையை நெருங்க நெருங்க குறைந்திருந்தது.
அதைப் போலவே, அவனுள் புயலாகச் சுழன்ற கோபம் குறைந்திருந்தாலும், மனம் மட்டும் அமைதியடைய மறுத்தது. சாலையோரம் காரை நிறுத்தியவன் கண்களை இறுக மூடி அமர்ந்து விட்டான்.
'இவனோட அம்மா அப்பா நல்ல நிறம். இவன் மட்டும் கருப்பா இருக்க, மூர்த்தி அம்மாவுக்கு மருமக மேல சந்தேகம் வந்து "என் மகனுக்கு பிறந்தவன் தானே இவன்?"னு கேட்டுட்டாங்களாம். அந்தத் துக்கத்தை தாங்க முடியாம தூக்கு மாட்டிக்கிட்டு செத்துட்டாளாம் இவன் அம்மா. அதுக்கு அப்புறம் இவனை வளர்த்தது எல்லாம் என் மருமகன் தான். என் மகளை கல்யாணம் பண்ணினதுக்குப் பிறகு, இவனோட பொறுப்பு என் மவ தலையில விழுந்துருச்சு...' என்று நாகலட்சுமியின் தாய் ஆரம்பித்த இவ்வகை பேச்சுக்கள், சர்வா வளர வளர, அதே சொற்கள் நாகலட்சுமியின் வாயிலிருந்து வளர்ந்துகொண்டே போனது.
"அதே நேரம் இவன் வேறுதான், அவர் பெற்ற பிள்ளைகள் வேறுதான்" என்பதை வெளிப்படையாகச் சொன்னதில்லை என்றாலும் அவனை உணர வைத்திருக்கிறார். விவரம் தெரியாத வயதில் அழுது இருக்கிறான். விவரம் தெரிய ஆரம்பித்ததும், நாகலட்சுமியின் பேச்சுகளை கேட்டு அழ வரவில்லை அடிக்க தான் வந்தது.
அப்படியான ஒரு நாளில், "நான் பெத்த புள்ளைங்க என் புருசனுக்குத்தான் பிறந்ததுன்னு டெஸ்ட் எடுக்க வேண்டிய அவசியமில்லை; அவங்க நிறத்தை பார்த்தாலே சொல்லிடலாம். ஆனால் இவனைப் பாருங்க அவருக்கு பிறக்காத" அடுத்த வார்த்தை பேசும் முன்பே அவரது மண்டையை அடித்து உடைத்திருந்தான்.
இதுதான் சாக்கென்று அவனை விடுதியில் சேர்த்துவிட்டாள் நாகலட்சுமி. பதிமூன்று வயதில் ஆரம்பித்த தனிமை, இதோ, முப்பது வயது வரைக்கும் தொடர்கிறது.
எப்பொழுதாவது ஈரோடு செல்வதும் உண்டு. அப்போது நாகலட்சுமியின் பேச்சுகளை மீண்டும் கேட்க நேரிடும்.
பொதுவாக அவன், தலையாட்டி அலட்சியமாக கடந்து விடுவான்.
ஆனால் சில வார்த்தைகள் மட்டும் அப்படிச் சாதாரணமாக கடக்க முடிவதில்லை.
அதில் ஒன்றுதான் "இவனோட கலருக்கு, கண்ணு தெரியாத பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணா தான் உண்டு... இல்லைன்னா யார் இவனை சீண்டுவா?" என்ற வார்த்தைகள்.
முதலில் இது போன்ற வார்த்தைகள் கேட்கும் போதெல்லாம் நக்கலாகவும், சீண்டலாகவும் மட்டுமே தோன்றியது. இதோ,காலம் கடந்த பின்னர் தான் இதனை உண்மையாக்கவே பேசி இருக்கிறார் என்பது புரிந்தது அவனுக்கு...
ஒருவேளை மூர்த்தி தலையிடாமல் இருந்திருந்தால் நன்றாக விசாரித்து பெண்ணைப் பார்க்க சென்றிருப்பானோ என்னவோ? மூர்த்தி தலையிட்டு அவர் பெண் நன்றாக இருக்கிறாள் உனக்கு நிகரான படிப்பு, வேலை என்றதும் தான் இந்த திருமணத்திற்கே சம்மதம் சொன்னான். அதிலும் இப்படியொரு குளறுபடியை நாகலட்சுமி செய்து இருப்பாரென்று துளியும் எண்ணவில்லை அவன்.
"எதில் நான் குறைந்து போய் விட்டேன்" என்ற எண்ணம் தான் முதலில் எழுந்தது.
அவரது வயிற்றில் பிறந்திருந்தால் இப்படியான பெண்ணை பார்த்திருப்பாரா? இல்லை கட்டி வைக்க தான் நினைத்து வைத்திருப்பாரா? எந்த விதத்தில் நான் குறைந்து விட்டேன்? இப்படியான பல கேள்விகள் மீண்டும் மீண்டும் அவனுள் எழுந்து கொண்டே இருந்தது.
மனதின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல்
வாகனத்திலிருந்து இறங்கி நின்றான். தூரத்திலிருந்த கடல் அலைகளின் ஓசை அமைதியை உடைத்துக் கொண்டிருந்தது. கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டே கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
நிலவின் வெளிச்சத்தில் கடலலைகள் சாம்பல் நிறத்தில் மிளிர, கடலின் மேற்பரப்பு கருநீல நிறத்தில் தெரிந்தது. வானம், கடலின் நிறத்தை அப்படியே பிரதிபலித்து கொண்டிருந்தது.
கடற்கரை மணலில் அமர்ந்தவாறே, அந்தக் கடலும் வானமும் ஒன்றாக கலக்கும் வரம்பற்ற இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே தான் எல்லாம் ஆரம்பிப்பது போலவும், முடிவடைவது போலவும் அவனுக்குத் தோன்றியது.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அக்கணம் அவனது அலைபேசி சத்தமிட்டு கத்தியது. பேண்ட் பாக்கெட்டிலிருந்து அலைபேசியை எடுக்கும் போது, கைகளில் தட்டுப்பட்டது இயல் கொடுத்த மோதிரம். அலைபேசியை கீழே வைத்துவிட்டு மோதிரத்தை எடுத்து பார்த்தான்.
இத்தனை நேரமும் நாகலட்சுமியின் மீதிருந்த கோபத்தால்,
தன் காதலையே மறந்திருந்தான். இதோ, மண்ணைத் துளைத்து வெளிவரும் விதையைப் போல,
அவளது நினைவுகள் அவனது உள்ளத்துக்குள் ஊடுருவி, மெதுவாக மேலெழுந்தது.
"சர்வா..." என்று காரிகையின் அழைப்பு, சிணுங்கலோடு மனக்கண்ணில் மின்னியது. நாணத்தில் சிவந்த அவளது முகம் ஒரு நொடி தோன்றி மறைந்தது.
"லவ் யூ சொல்லனுமா? நம்ம என்ன சின்ன பசங்களா?" என்றவளிடம் "நீ வேணும்னா சொல்ல வேண்டாம் நான் சொல்வேன்..." என்று விட்டு அவசரமாக கன்னத்தில் இதழ் பதித்தது, நினைவு வந்து அவனைக் கொன்றது. கண்களை இறுக மூடிக் கொண்டான்.
‘நீங்க இந்தக் குருடியை தான் கல்யாணம் பண்ணிக்க வேணும்னு எந்த வித கட்டாயமும் இல்லை, மிஸ்டர் சர்வா. தாராளமா நீங்க வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்’ என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவனது மனதில் ஓங்கி முழங்கின.
அவன் கையிலிருந்த மோதிரத்தை இறுக்கிப் பிடித்தான். பின் மெதுவாக, மனதில் நிறைந்திருந்தவளை மெல்ல அழைத்தான் “இயலா…”
அந்த அழைப்பு, சேலத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இயலுக்குக் கேட்டது போல, "ம்ம்..." என்ற மெல்லிய பதில் அங்கிருந்து வந்தது.
"நான் வேண்டாமா உனக்கு?" காதல் கலந்த வலியோடு கேட்டான்.
"நீங்க தானே வேண்டாம்னு சொன்னீங்க..." தூக்கத்திலும் அவள் உதடுகள் அழுகையில் துடித்தன.
"நான் வேண்டாம்னு சொன்னா? போயிடுவீயா டி? மறுபடியும் என்னைத் தேடி வர மாட்டியா?" என அவன் மனதுக்குள் கேட்ட போது, அவளிடத்தில் பதிலில்லை.
ஆனால் அவனது உள்ளம் "எப்படி வருவாள்? அத்தனை பேர் முன்னாடி இந்தக் ‘குருடியை’ கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிவிட்டு வந்தவனை, எப்படி தேடி வருவா? அவள் உன்னைத் தேடி வரவும் மாட்டாள். உனக்காக காத்திருக்கவும் மாட்டாள்," என பதிலளித்தது
அக்கணம் அவளை இழக்கக் கூடாது என்ற பயமும், அவளே தான் வேண்டும் என்ற உறுதியும் உருவெடுத்தது. கையில் உறைந்திருந்த மோதிரத்தை சற்று மேலும் இறுக்கிப் பிடித்தான்.
வீட்டில் பார்த்த பெண்ணாக அவள் அவனுக்கு வேண்டாம் தான்
ஆனால் காதலியாக அவள் அவனுக்கே வேண்டும்.
ஆம், காதலிக்கிறான்.
எப்போது அவளிடம் அந்த உணர்வு தோன்றியது என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது அது வேரூன்றியிருக்கிறது
அவள் வேண்டும்..
அவள் எப்படியிருந்தாலும்
அவனுக்கு அவள் வேண்டும் என்ற உணர்வு அவனுள் ஆழமாய் ஊடுருவியது.
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
"போதும், நிறுத்துங்க மிஸ்டர் சர்வா..." என்ற இயலின் குரல் ஒட்டுமொத்த அமைதியையும் கிழித்தெறிந்தது. நொடி நேரம் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பாலகிருஷ்ணன் மெல்ல இயலின் பக்கம் திரும்பினார். அவளோ நிதானமாக சர்வாவை நோக்கி நடந்தாள். மங்கையின் காலடிச் சத்தம் அந்த இடத்தின் அமைதியை மெல்ல உடைத்தது.
நேராக சர்வாவின் முன் சென்று நின்றவள், "நீங்க இந்தக் குருடியை தான் கல்யாணம் பண்ணிக்க வேணும்னு எந்த வித கட்டாயமும் இல்லை, மிஸ்டர் சர்வா. தாராளமா நீங்க வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்..."
என்றவளாக, சற்று முன்னர் ஆடவன் அணிவித்த மோதிரத்தை அவனது உள்ளங்கையில் திணித்து,
"இப்போ நீங்க இங்கிருந்து கிளம்பலாம்..." என வாசலைக் கைக் காட்டினாள்.
காரிகையின் வார்த்தைகள், மழை மேகங்களுக்கு இடையே பிளந்து செல்லும் மின்னலாய், அவனது மனதைக் கடந்து சென்றன. ஆனால் அதை அவன் அப்பொழுது உணரவில்லை.
அர்ஜுனனுக்குப் பறவையின் கண்கள் மட்டுமே இலக்காக இருந்தது போல, சர்வாவின் எண்ணங்கள் அனைத்தும் நாகலட்சுமி என்ற நல்ல பாம்பைச் சுற்றியே வளம் வந்தது.
இயலை ஒரு பார்வை பார்த்துவிட்டு விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தான்.
தற்போது இயலின் பார்வை நாகலட்சுமியை தீண்டியது.
அவரது முகம் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டிக்
கொள்ளவில்லை
என்றாலும், அவரது கண்கள் ஆனந்தத்தில் மிளிர்ந்தன.
புருவங்களை உயர்த்தி
"உங்களுக்கு தனியா சொல்லனுமா..." எனக் கேட்க,
இதழ்களை வளைத்து ஏளனமாக சிரித்தவரின் சிரிப்பே
‘இதுக்கு மேலே நான் இங்கிருந்து என்ன பண்ண போறேன்’ என்று சொன்னது.
அவரை அழுத்தமாக பார்த்தாள்.
அந்த பார்வையே, ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தேன்னு வையேன், சிரிக்கிற வாயை ஒடிச்சிடுவேன்’ என்ற செய்தியை கூறியது.
அது பெரியவளுக்கு புரிந்தது போல "குருடிக்கு இருக்கிற ஏத்தத்தை பாரேன்..." என முனகிவிட்டு நகர, அவரின் பின்னால் வந்த மூர்த்தியோ பாவையின் தலையில் கைவைத்து
"மன்னிச்சிடு மா..." என்றார். அதற்கு பதில் சொல்லாமல் சிரித்தாள்.
அந்த சிரிப்பில் வலி இல்லை, வேதனை இல்லை, வெறுமை மட்டும் இருந்தது.
இளையவளின் தலையில் அழுத்தத்தை கூட்டி "போயிட்டு வரேன் மா..." என்றவர் விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தார்.
மெல்ல மெல்ல மொத்தக் கூட்டம் களைந்தது.மொத்த ஆற்றலும் வடிந்து, சோர்ந்து நின்றாள் பாவை. அவளை ஓடி வந்து தாங்கினார் பாலகிருஷ்ணன்.
"ப்பா..." என்றபடி அவரின் தோளில் சாய்ந்து கதறிவிட்டாள்.
மகளின் கதறலுக்குக் காரணமானவர்களின் மீது கொலைவெறியே வந்தது பாலகிருஷ்ணனுக்கு.
இப்படியான பிரச்சனைகள் வரக் கூடாதென்று தான், திருமணப் பேச்சு ஆரம்பித்தவுடன் மகளின் பார்வை குறைபாட்டை கூறிவிட்டார்.
அப்பொழுது ‘இதெல்லாம் ஒரு பிரச்சனையா?’ என்று கூறிவிட்டு, இப்போது அதனை பெரிதுப் படுத்தி திருமணத்தை நிறுத்திவிட்டது மட்டுமல்லாமல் மகளை வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு சென்றதில், அத்தனை கோபம் வந்தது அவருக்கு.
அதே நேரத்தில், மகளின் கதறலில் உள்ளுக்குள் தவித்து போனார் பாலகிருஷ்ணன். தாயைப் போலவே தனது மகளுக்கும் வண்ணப் பார்வையின்மை (முழுமையான நிறக்குருட்டு) இருப்பதை அறிந்த கணமே, துடித்து போனார்.
அவளும் தாயைப் போலவே இந்த உலகை கருப்பு, வெள்ளை மற்றும் சாய்வான சாம்பல் நிறங்களில் மட்டுமே காண்பாள் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
பரம்பரை நிறக் குறைபாடுகளுக்கு எந்த சிகிச்சையும் இல்லையென்று மருத்துவம் கைவிட, அவளுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டனர் அனைவரும்.
நிற வேறுபாடுகள் தான் அவளுக்கு தெரியாதே தவிர, பார்வை நன்றாகவே தெரியும். அதே நேரம், அவள் வண்ணங்களை அறிய இன்றைய தொழில்நுட்பம் அவளுக்கு உதவிக் கொண்டுதான் இருக்கிறது.
ஒரு பக்கம் கோபம், ஒரு பக்கம் துக்கமென அமர்ந்திருந்தவர்,
மகளின் கேசத்தை மெதுவாக கோதிக்கொண்டே, "மன்னிச்சிடு டா பொன்னம்மா... மனுஷத்தனமே இல்லாத ஒருத்தனை உனக்கு பார்த்திருக்கவே கூடாது..." என்றார்.
கண்ணீர் துளிர்த்த கண்களுடன்,
"அவர் அப்படியானவர் இல்லப்பா. ரொம்ப நல்லவர். என்னை, உங்களை மாதிரி பார்த்துக்கிட்டார் ப்பா..." என்றாள்.
அவளது வார்த்தைகள், ஆழமாக
பாலகிருஷ்ணனின் உள்ளத்தை தொட்டன. மகளின் கண்களில் தெரிந்தது வெறும் நம்பிக்கை அல்ல காதல் என்று உணர முடியாதளவிற்கு விவரம் இல்லாதவர் இல்லையே அவர்.
"நான் வேணும்னா அந்த பையன்கிட்ட பேசி பார்க்கவா?"
எனக் கேட்டார் மென்மையாக.
மாயோளோ பட்டென நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். "அவர் தான் இந்தக் குருடியை வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாரே ப்பா. எனக்கும் அவர் வேண்டாம்..." என்றாள், கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுத்தித் துடைத்து கொண்டவள் எழுந்து நடக்க, செல்லும் மகளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் பாலகிருஷ்ணன்.
மகளின் மனக் காயத்திற்கு ஆகச்சிறந்த மருந்து காலம் தான் என்று நினைத்தவர் கலங்கிய கண்களுடன் தங்களையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்தார்.
"மைதிலி, பாப்பாவை பார்த்துக்க, தோட்டத்து பக்கம் போயிட்டு வந்துடறேன்..." என்றவர் வாசலை நோக்கி நடந்தார்.
****
நிலவின் ஒளியில் ஊர் இன்னும் கனவுக்குள் மிதந்து கொண்டிருந்தது. மேகங்கள், விளையாடும் சிறாரைப் போல, நிலவின் மெல்லிய ஒளியை மறைக்க பாய்ந்து கொண்டிருந்தன.
சர்வா ஓட்டிய கார் கடற்கரைச் சாலையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. சேலத்திலிருந்து கிளம்பிய போது இருந்த அதிவேகம், சென்னையை நெருங்க நெருங்க குறைந்திருந்தது.
அதைப் போலவே, அவனுள் புயலாகச் சுழன்ற கோபம் குறைந்திருந்தாலும், மனம் மட்டும் அமைதியடைய மறுத்தது. சாலையோரம் காரை நிறுத்தியவன் கண்களை இறுக மூடி அமர்ந்து விட்டான்.
'இவனோட அம்மா அப்பா நல்ல நிறம். இவன் மட்டும் கருப்பா இருக்க, மூர்த்தி அம்மாவுக்கு மருமக மேல சந்தேகம் வந்து "என் மகனுக்கு பிறந்தவன் தானே இவன்?"னு கேட்டுட்டாங்களாம். அந்தத் துக்கத்தை தாங்க முடியாம தூக்கு மாட்டிக்கிட்டு செத்துட்டாளாம் இவன் அம்மா. அதுக்கு அப்புறம் இவனை வளர்த்தது எல்லாம் என் மருமகன் தான். என் மகளை கல்யாணம் பண்ணினதுக்குப் பிறகு, இவனோட பொறுப்பு என் மவ தலையில விழுந்துருச்சு...' என்று நாகலட்சுமியின் தாய் ஆரம்பித்த இவ்வகை பேச்சுக்கள், சர்வா வளர வளர, அதே சொற்கள் நாகலட்சுமியின் வாயிலிருந்து வளர்ந்துகொண்டே போனது.
"அதே நேரம் இவன் வேறுதான், அவர் பெற்ற பிள்ளைகள் வேறுதான்" என்பதை வெளிப்படையாகச் சொன்னதில்லை என்றாலும் அவனை உணர வைத்திருக்கிறார். விவரம் தெரியாத வயதில் அழுது இருக்கிறான். விவரம் தெரிய ஆரம்பித்ததும், நாகலட்சுமியின் பேச்சுகளை கேட்டு அழ வரவில்லை அடிக்க தான் வந்தது.
அப்படியான ஒரு நாளில், "நான் பெத்த புள்ளைங்க என் புருசனுக்குத்தான் பிறந்ததுன்னு டெஸ்ட் எடுக்க வேண்டிய அவசியமில்லை; அவங்க நிறத்தை பார்த்தாலே சொல்லிடலாம். ஆனால் இவனைப் பாருங்க அவருக்கு பிறக்காத" அடுத்த வார்த்தை பேசும் முன்பே அவரது மண்டையை அடித்து உடைத்திருந்தான்.
இதுதான் சாக்கென்று அவனை விடுதியில் சேர்த்துவிட்டாள் நாகலட்சுமி. பதிமூன்று வயதில் ஆரம்பித்த தனிமை, இதோ, முப்பது வயது வரைக்கும் தொடர்கிறது.
எப்பொழுதாவது ஈரோடு செல்வதும் உண்டு. அப்போது நாகலட்சுமியின் பேச்சுகளை மீண்டும் கேட்க நேரிடும்.
பொதுவாக அவன், தலையாட்டி அலட்சியமாக கடந்து விடுவான்.
ஆனால் சில வார்த்தைகள் மட்டும் அப்படிச் சாதாரணமாக கடக்க முடிவதில்லை.
அதில் ஒன்றுதான் "இவனோட கலருக்கு, கண்ணு தெரியாத பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணா தான் உண்டு... இல்லைன்னா யார் இவனை சீண்டுவா?" என்ற வார்த்தைகள்.
முதலில் இது போன்ற வார்த்தைகள் கேட்கும் போதெல்லாம் நக்கலாகவும், சீண்டலாகவும் மட்டுமே தோன்றியது. இதோ,காலம் கடந்த பின்னர் தான் இதனை உண்மையாக்கவே பேசி இருக்கிறார் என்பது புரிந்தது அவனுக்கு...
ஒருவேளை மூர்த்தி தலையிடாமல் இருந்திருந்தால் நன்றாக விசாரித்து பெண்ணைப் பார்க்க சென்றிருப்பானோ என்னவோ? மூர்த்தி தலையிட்டு அவர் பெண் நன்றாக இருக்கிறாள் உனக்கு நிகரான படிப்பு, வேலை என்றதும் தான் இந்த திருமணத்திற்கே சம்மதம் சொன்னான். அதிலும் இப்படியொரு குளறுபடியை நாகலட்சுமி செய்து இருப்பாரென்று துளியும் எண்ணவில்லை அவன்.
"எதில் நான் குறைந்து போய் விட்டேன்" என்ற எண்ணம் தான் முதலில் எழுந்தது.
அவரது வயிற்றில் பிறந்திருந்தால் இப்படியான பெண்ணை பார்த்திருப்பாரா? இல்லை கட்டி வைக்க தான் நினைத்து வைத்திருப்பாரா? எந்த விதத்தில் நான் குறைந்து விட்டேன்? இப்படியான பல கேள்விகள் மீண்டும் மீண்டும் அவனுள் எழுந்து கொண்டே இருந்தது.
மனதின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல்
வாகனத்திலிருந்து இறங்கி நின்றான். தூரத்திலிருந்த கடல் அலைகளின் ஓசை அமைதியை உடைத்துக் கொண்டிருந்தது. கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டே கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
நிலவின் வெளிச்சத்தில் கடலலைகள் சாம்பல் நிறத்தில் மிளிர, கடலின் மேற்பரப்பு கருநீல நிறத்தில் தெரிந்தது. வானம், கடலின் நிறத்தை அப்படியே பிரதிபலித்து கொண்டிருந்தது.
கடற்கரை மணலில் அமர்ந்தவாறே, அந்தக் கடலும் வானமும் ஒன்றாக கலக்கும் வரம்பற்ற இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே தான் எல்லாம் ஆரம்பிப்பது போலவும், முடிவடைவது போலவும் அவனுக்குத் தோன்றியது.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அக்கணம் அவனது அலைபேசி சத்தமிட்டு கத்தியது. பேண்ட் பாக்கெட்டிலிருந்து அலைபேசியை எடுக்கும் போது, கைகளில் தட்டுப்பட்டது இயல் கொடுத்த மோதிரம். அலைபேசியை கீழே வைத்துவிட்டு மோதிரத்தை எடுத்து பார்த்தான்.
இத்தனை நேரமும் நாகலட்சுமியின் மீதிருந்த கோபத்தால்,
தன் காதலையே மறந்திருந்தான். இதோ, மண்ணைத் துளைத்து வெளிவரும் விதையைப் போல,
அவளது நினைவுகள் அவனது உள்ளத்துக்குள் ஊடுருவி, மெதுவாக மேலெழுந்தது.
"சர்வா..." என்று காரிகையின் அழைப்பு, சிணுங்கலோடு மனக்கண்ணில் மின்னியது. நாணத்தில் சிவந்த அவளது முகம் ஒரு நொடி தோன்றி மறைந்தது.
"லவ் யூ சொல்லனுமா? நம்ம என்ன சின்ன பசங்களா?" என்றவளிடம் "நீ வேணும்னா சொல்ல வேண்டாம் நான் சொல்வேன்..." என்று விட்டு அவசரமாக கன்னத்தில் இதழ் பதித்தது, நினைவு வந்து அவனைக் கொன்றது. கண்களை இறுக மூடிக் கொண்டான்.
‘நீங்க இந்தக் குருடியை தான் கல்யாணம் பண்ணிக்க வேணும்னு எந்த வித கட்டாயமும் இல்லை, மிஸ்டர் சர்வா. தாராளமா நீங்க வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்’ என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவனது மனதில் ஓங்கி முழங்கின.
அவன் கையிலிருந்த மோதிரத்தை இறுக்கிப் பிடித்தான். பின் மெதுவாக, மனதில் நிறைந்திருந்தவளை மெல்ல அழைத்தான் “இயலா…”
அந்த அழைப்பு, சேலத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இயலுக்குக் கேட்டது போல, "ம்ம்..." என்ற மெல்லிய பதில் அங்கிருந்து வந்தது.
"நான் வேண்டாமா உனக்கு?" காதல் கலந்த வலியோடு கேட்டான்.
"நீங்க தானே வேண்டாம்னு சொன்னீங்க..." தூக்கத்திலும் அவள் உதடுகள் அழுகையில் துடித்தன.
"நான் வேண்டாம்னு சொன்னா? போயிடுவீயா டி? மறுபடியும் என்னைத் தேடி வர மாட்டியா?" என அவன் மனதுக்குள் கேட்ட போது, அவளிடத்தில் பதிலில்லை.
ஆனால் அவனது உள்ளம் "எப்படி வருவாள்? அத்தனை பேர் முன்னாடி இந்தக் ‘குருடியை’ கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிவிட்டு வந்தவனை, எப்படி தேடி வருவா? அவள் உன்னைத் தேடி வரவும் மாட்டாள். உனக்காக காத்திருக்கவும் மாட்டாள்," என பதிலளித்தது
அக்கணம் அவளை இழக்கக் கூடாது என்ற பயமும், அவளே தான் வேண்டும் என்ற உறுதியும் உருவெடுத்தது. கையில் உறைந்திருந்த மோதிரத்தை சற்று மேலும் இறுக்கிப் பிடித்தான்.
வீட்டில் பார்த்த பெண்ணாக அவள் அவனுக்கு வேண்டாம் தான்
ஆனால் காதலியாக அவள் அவனுக்கே வேண்டும்.
ஆம், காதலிக்கிறான்.
எப்போது அவளிடம் அந்த உணர்வு தோன்றியது என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது அது வேரூன்றியிருக்கிறது
அவள் வேண்டும்..
அவள் எப்படியிருந்தாலும்
அவனுக்கு அவள் வேண்டும் என்ற உணர்வு அவனுள் ஆழமாய் ஊடுருவியது.
Last edited:
Author: Mysore
Article Title: இரு வண்ண வானவில் அத்தியாயம் 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: இரு வண்ண வானவில் அத்தியாயம் 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.