அத்தியாயம் 1
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
சரியாக சேலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள சீலநாயக்கன்பட்டியில் அமைந்துள்ளது அந்த இரண்டடுக்கு மாடி வீடு.
அந்த வீடு முழுவதும் குட்டி குட்டி மின் விளக்குகளால் மிளிர்ந்துக் கொண்டிருந்தது. சொந்த பந்தங்களின் ஆர்ப்பரிப்பும், குழந்தைகளின் சந்தோசக் கூச்சலும் அந்த வீட்டை நிறைத்தது. அதுவே கூறியது வீட்டின் விசேஷத்திற்கு அனைவரும் கூடியிருக்கிறார்கள் என்று.
ஆம், இன்று அந்த வீட்டின் இளவரசிக்கு நிச்சயதார்த்தம்.
நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகான விசேஷம் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடனே கலந்து கொண்டனர்.
குட்டி தேவதைகள் காலில் வெள்ளிக் கொலுசுகள் சிணுங்க அந்த வீட்டை சுற்றி சுற்றி வளம் வந்து கொண்டிருக்க, பெரியவர்களோ முடிந்த நிச்சியத்தை பற்றியும், இரண்டு மாதங்களில் நடக்கவிருக்கும் திருமணத்தை பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.
அதே சமயம் அன்றைய நாளுக்கான நாயகியோ அந்த வீட்டின் மாடியில் நின்றிருந்தாள். சீதை இருக்குமிடம் தானே ராமனுக்கு மிதிலை. இதோ அன்றைய நாளுக்கான நாயகனும் அவளைத் தேடி சென்றிருந்தான்.
அங்கே மாடியில்...
கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்றபடி சாம்பல் நிற மேகத்தினுள் புதையும் வெண்ணிற சூரியனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். அவளது முகம் எத்தனைக்கு எத்தனை அமைதியாக இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை அவளது மனம் நிலைக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது.
"தீப் பிழம்பாக் கொதிச்சிட்டு இருக்கிற மேகத்துக்குள்ள சூரியன் போய் மறைஞ்சுக்கிறது கூட அழகு தான்ல..." என்ற குரலில் தன்னிலைக்கு திரும்பியவள் குரல் வந்த திசையைப் பார்த்தாள்.
ஆறடி உயரத்தில் கம்பீரம் குறையாமல் வந்து கொண்டிருந்தான் அவன். சாம்பல் நிறத்தில் மேல் சட்டையும், அடர்ந்த கருப்பு நிற கால் சட்டையும் அணிருந்தான். அலையலையான கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே வந்தவனின் முகத்தில் அத்தனை புன்னகை. அந்த புன்னகையே கூறியது அவனுக்கு இந்த திருமணத்தில் மட்டுமல்ல அவள் மீதும் விருப்பம் தான் என்று.
அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இத்தனை நேரமிருந்த தவிப்பும், துடிப்பும் மாயமாய் மறைந்துப் போனது.
அதே நேரம் பாவையை நோக்கி வந்து கொண்டிருந்தவனின் பார்வை முழுக்க அவள் மீது மட்டுமே இருந்தது. கருணீர் நிறத்தில் புடவை அணிந்திருந்தவள் முகம் நிலவாய் ஜொலித்தது. பிறை நெற்றியை நிறைத்த கேசமும்,நாசியை அலங்கரித்த மூக்குத்தியும்,கருமை திட்டிய நயனங்களும், உதட்டு சாயமா இல்லை இயற்கையிலயே சிவந்த இதழ்களா என ஆராயும் அளவிற்கு சிவந்திருந்த திருத்தமான இதழ்களும், இடைத் தாண்டி வளர்ந்திருந்த கேசமும் அவனைக் கொள்ளைக் கொண்டது.
கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே மாயோளை நெருங்கியவன் "கொஞ்சமாச்சும் உனக்கு செட்டாவேனா?..." குறும்பு சிரிப்போடு கேட்டான். அவனது குரலில் தன்னிலைக்கு மீண்டவள் அவனது கேள்வி புரிந்து சட்டென பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.
"எத்தனை மார்க்?" அடுத்த கேள்வி அவனிடத்தில் வர, இதழ்களை அழுத்திக் கடித்துக் கொண்டாள்.
"மார்க் போடற அளவுக்கு நீங்க இல்லைன்னு சொல்றயோ?" கன்னக் கதுப்புக்களை அழுத்தி கடித்து கொண்டே கேட்டான். அதற்கு பதில் சொல்லாமல் விழிகளை உருட்டி அவனைப் பார்த்தாள்.
காரிகையின் முறைப்பை ரசித்து கொண்டே "ரொம்ப அழகா இருக்க இயலா..." ஆழ்ந்த குரலில் கூறினான்.
அந்த வார்த்தைகள் அவளுள் ஆயிரம் மாயம் செய்ய, புது அனுபவமாக இருந்தது. மெல்லிய வெட்கம் கூட வந்தது இயலாவிற்கு. பார்வையை சுழல விட்டபடி நெற்றியை முத்தமிட்டு கொண்டிருந்த கேசத்தை செவியோரம் ஒதுக்கி விட்டவள் "உங்க அளவுக்கு நான் அழகு இல்லை..." என்றாள் மெல்லிய குரலில்.
அய்யனாரின் கையிலிருக்கும் அருவாள் கலரில் பிறந்தவனுக்கு இப்படியான ஸ்டேட்மெண்ட் கேட்பது இதுவே முதல்முறை என்பதால் மெல்லிய வெட்கம் வந்தது. இப்பொழுது இதழ்களை அழுத்தி கடித்து பார்வையை சுழல விடுவது அவன் முறையாகி போனது.
இருவருக்குமிடையில் நீண்ட நெடிய அழகிய மெளனம். அந்த மௌனத்தை அவனே கலைத்தான். "இந்த ஒயின் கலர் புடவை உனக்கு பொருத்தமா இருக்கு. ஆனால் அதுக்கு மேட்ச்சா சட்டை எடுக்க தான் எனக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு" என்கவும் சிறி யாழியிலுள்ள கம்பிகள் பட்டென்ற சத்தத்தோடு அறுபட்டு விழுவது போல, மங்கையின் மொத்த உணர்வுகளும் அறுபட்டு விழுந்தது.
இத்தனை நேரம் அவளது மனம் தவித்தது இதற்கு தானே? வீட்டில் பேசி முடித்த சம்பந்தம் தான்
தன்னைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் கூறிய பின்னர் தான் இந்த நிச்சியமே. ஆனாலும் அவளது மனம் அவன் இதனைப் பற்றி ஒரு வார்த்தைக் கேட்கவில்லையே என்றெண்ணி தவித்தது.
"எனக்கு உன்னைப் பத்தி எல்லாமே தெரியும். இதெல்லாம் ஒரு விஷயமா? எனக்கு உன்னோட குறை ஒரு குறையாவே தெரியல..." இப்படியான வார்த்தைகளை கேட்டுவிட மாட்டோமா என்று துடித்த மனதை அடக்க முடியவில்லை...
நேரடியாக அவனிடமே கேட்டுவிட்டால் தான் என்ன? கேட்டு விடலாமா? அனைத்தும் தெரிந்து தான் என்னை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டாயா என்று கேட்டு விடுவோமா? என நினைத்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
பெண்ணவளின் உள்ளக் கொதிப்பை அறியாதவனோ "நான் வாங்கி தர நிச்சய புடவையை தான் நீ கட்டணும்னு நினைச்சேன். அதான் உனக்கு பொருத்தமா நானே தேடிப் பிடிச்சு வாங்கினேன்..." என்றவன் கைகள் இரண்டையும் விரித்து காட்டி
"சரி சொல்லு, எனக்கு இந்த ஓய்ன் கலர் செட்டாகுதா?..." எனக் கேட்டான். அதற்கு பதில் சொல்லாமல் திகைத்து நின்றாள்.
அவளது திகைத்தப் பார்வை ரசிக்கும் பார்வையாக தெரிந்து தொலைத்தது அவனுக்கு. சிறு வயதிலிருந்தே நிற வேறுபாட்டால் ஒதுக்கப்பட்டவன். இப்போது அவளால் ரசிக்கப்படுவது இதயத்தில் ஓர் இனிமையான சுகத்தைக் கொடுத்தது. பெருவிரலால் நெஞ்சைத் தடவிக் கொண்டே பெண்ணைப் பார்த்தான்.
அவளோ பார்வையை மாற்றாமல் அப்படியே பார்த்து வைக்க, புருவத்தை உயர்த்தி ' என்ன...' என்பதை போல் கேட்டான். அவனது புருவத் தூக்களில் பொத்தென்று விழ துடித்தது அவளது பொல்லாத மனம்.
அக்கணம் 'இயல்... என்ன பண்ற? உன்னை பத்தி அவருக்கு தெரியுமான்னு கேளு..." என்றது அவளது புத்தி
' தெரியாம தான் நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்தாரா? அதெல்லாம் அவங்க வீட்டுல சொல்லி இருப்பாங்க? நீ சும்மா இரு..' அவளது மனம் புத்தியை அடக்கியது.
'தெரிஞ்சிருந்தா ஏன் இந்த கலர் நல்லா இருக்கான்னு கேட்கணும். என்னவோ தப்பா தோணுது. இப்பவே இதைப் பத்தி பேசு...' என்றது அவளது புத்தி.
நொடியில் இருமனமும் ஒன்றையொன்று முட்டி மோதி கொள்ள, அங்கே வென்றது என்னவோ மங்கையின் புத்தி தான்.
"அது வந்து நான்...எனக்கு" அதற்கு மேல் வார்த்தைகள் துளியும் வரவில்லை. மனம் பட்பட்டென அடித்துக் கொண்டது. கண்கள் கலங்கும் போலிருந்தது. கண்களை சிமிட்டி அவனைப் பார்த்தாள்.
அவனுக்கு ‘உன்னை பற்றிய உண்மை துளியும் தெரியாது’ என்று புத்தி கூறியது உண்மையாக இருக்கக் கூடாதென மனம் அடித்துக் கொண்டது. அவளுக்கு அவனை அத்தனை பிடித்தது. முதல்முறை அவனைப் பார்த்ததும் மனதில் ஆழமாய் பதிந்து விட்டான். அதற்கு பிறகு எப்பொழுது காதலிக்க ஆரம்பித்தாள் என்று துளியும் தெரியவில்லை.
மாயோளின் அமைதியை பார்த்தவன்
"என்னவாம்..." எனக் கேட்டான். ஒன்னுமில்லை என்பதைப் போல் தலையாட்டியவள் நொடி நேர அமைதிக்கு பிறகு "ஒன்னு சொல்லணும்..." என்றாள். அந்த குரலில் மெல்லிய தடுமாற்றம் தெரிந்தது.
அந்த தடுமாற்றம் இவனை யோசிக்க வைத்தது. அப்பொழுது அவன் அறிந்திருக்கவில்லை அந்த தடுமாற்றம் இவன் திருமணத்தை வேண்டாமென்று கூறிவிடுவானோ என்ற பயத்தினால் உண்டானதென்று.
புருவங்கள் சுருங்க "ஏதாவது பிரச்சனையா?..." என்று கேட்டான். அவனது கேள்வியை புரிந்து அதற்கு பதில் சொல்ல மாயோள் எடுத்துக் கொண்டே ஒவ்வொரு விநாடியும் இவனது மனம் ஏனென்றே தெரியாமல் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. அது, அவள் இல்லையென்று தலையாட்டும் வரை தொடர்ந்தது.
"உப்ஸ்..." வாயில் காற்றை நிரப்பி வெளியிட்டவன் "வேற என்ன இயல்"அத்தனை மென்மை அவனிடத்தில். அந்த மென்மை இயலை ஏதோ செய்தது. கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அவனிடம் இதைப் பற்றி பேசாதே என்றது மனம். அதையும் மீறி பேச ஆரம்பித்தாள். "ஆல்ரெடி இதைப்பத்தி உங்க வீட்டுல பேசிட்டதா அம்மா சொன்னாங்க. இருந்தாலும், உங்ககிட்ட இதைப்பத்தி பேசிடனும்னு தோணுச்சு. எனக்கு கலர் பிளைண்ட் இருக்குன்னு உங்களுக்கு தெரியும் தானே. தெரிஞ்சு தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கீங்க?..." தவிக்கும் இதயத்தோடு கேட்டாள்.
காரிகையின் வார்த்தைகளை உள் வாங்கவே நொடிகள் தேவைப்பட்டது. அது புரிந்ததும் அத்தனைக் கோபம் வந்தது அவனது குடும்பத்தார் மீது.
மனதின் கோபத்தைத் துளியும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கண்களை இறுக மூடிக் கொண்டவன் காதில் 'இவனோட கலருக்கு, கண்ணு தெரியாத பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணா தான் உண்டு. இல்லைன்னா யார் இவனை சீண்டுவா?' அவனது சித்தியான நாகலட்சுமியின் குரல் கேட்டது.
பட்டென கண்களை திறந்தவன்
தன்னையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் "எனக்கு இதைப்பத்தி தெரியாது. தெரிஞ்சிருந்தா நிச்சியதார்த்தம் வரைக்கும் கொண்டு வந்திருக்க மாட்டேன்..." என்றவன் வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.
ஆடவனின் பேச்சில் விக்கித்து நின்றாள் பாவை. காலம் முழுக்க தன்னுடன் ஆதரவாக, ஆறுதலாக இருப்பான் என்று நம்பியவன் நொடியில் தூக்கி எறிந்து விட்டு செல்ல, மனம் கல்லாய் இறுகி போனது. கண்களை இறுக மூடிக் கொண்டாள். கண்களுக்குள் சூடான நீர் சுழன்றது.
"ரொம்ப அழகா இருக்க இயலா..." சற்று முன்னர் குழைந்து ஒலித்த குரல் காதில் கேட்டது. பட்டென கண்களை திறந்தாள். கண்களில் சூழ்ந்திருந்த கண்ணீர் பட்டென வெளிவந்தது. அதனை அழுத்தித் துடைத்துக் கொண்டாள்.
சற்று முன்னர் அவன் மீதெழுந்த மொத்த உணர்வுகளையும் சேர்த்தே துடைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அதே நேரம்... இங்கு, இரண்டு படிகளாக தாவி இறங்கிக் கொண்டிருந்தவன் மனம் முழுக்க கோபம் மட்டுமே ஆட்சி செய்தது.
முன்னமே இயலைப் பற்றி கூறியிருந்தால் இத்தனை கோபம் வந்திருக்காதோ என்னவோ ஆனால் இதனைப் பற்றி துளியும் கூறாமல் நிச்சியம் வரைக்கும் கொண்டு வந்தது அத்தனை கோபத்தை கொடுத்தது.
குருட்டு பெண்ணை மனம் முடிக்கும் அளவிற்கு தான் உன் தகுதி இருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறாரா இவர்? அந்தளவிற்கு தாழ்ந்து போயிருக்கிறேனா நான்? அவரது வயிற்றில் பிறந்தவனுக்கு இப்படியான ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு இருப்பாரா? இப்படியான பல கேள்விகள் அவனைப் புயல் போல் சூழ்ந்து கொண்டது.
மாடியிலிருந்து கீழிறங்கி, நேராக அவனது சித்தியான நாகலட்சுமியிடம் வந்து நின்றவன் "நீங்க பார்த்த பொண்ணை எனக்கு பிடிக்கல. இந்த கல்யாணம் நடக்காது..." என்றான் . அவனது பேச்சில் அதிர்ந்து எழுந்து நின்றார் நாகலட்சுமி. கூடவே அவனது தந்தையான மூர்த்தியும், இயலின் பெற்றார்களும் எழுந்து நின்றனர். இத்தனை நேரமிருந்த ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் அப்படியே அடங்கி போனது.
அனைவரின் பார்வையும் அவன் மீது மட்டுமே நிலைத்தது. அவர்களின் பார்வையை துளியும் கண்டுகொள்ளாமல்
வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அக்கணம் "சர்வா நில்லு" என்ற கர்ஜனை குரல் கேட்க, திரும்பி பார்த்தான்.அங்கே அவனது தந்தை மூர்த்தி ருத்ரதாண்டவமாடாத குறையாக நின்றார். அவரது கோபத்தை அலட்சியம் செய்தபடி பார்த்தான் இவன்.
"அந்த புள்ளைக்கு என்ன டா குறைச்சல்?" பல்லைக் கடித்தபடி கேட்டார்.
"என்ன குறைச்சலா? ஏன் என்ன குறைச்சல்ன்னு உங்களுக்கு தெரியாதா?..." என்றவன் கண்களை இறுக மூடித் திறந்து "எனக்கு பிடிக்கல..." என்றான்.
"ஏன் துரைக்கு வேற எந்த பொண்ணை பிடிக்குமாம்" அத்தனை நக்கலாக கேட்டார் நாகலட்சுமி. அவரை அழுத்தமாக பார்த்தான் அந்த பார்வை அவரைப் பயமுறுத்தியது.
"பாருங்க மாமா, எப்படி பார்க்குகாறான் பாருங்க... விட்டா அடிச்சிடுவான் போலிருக்கு உங்க பையன்..." மூர்த்தியின் பின்னே சென்று நின்றபடி கூறினார்.
மனைவியின் பேச்சைக் காதில் வாங்கி கொள்ளாமல் "அந்த பொண்ணுகிட்ட என்ன குறை இருக்குன்னு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ற" அழுத்திக் கேட்டார்.
கண்களை இறுக மூடித் திறந்தவன் இறுகிய குரலில் "அவளுக்கு கலர் பிளைண்ட்டாம்..." என்றான். அவருக்கும் இது புதிய செய்தி ‘என்ன சொல்றான் இவன்’ என்பது போல மனைவியை பார்த்தார்.
"ஏன் அதுக்கு என்ன? புள்ளை நல்லா இருந்தா போதாதா அவனுக்கு"
"ஓ...அப்படியா? அப்ப சரி, உங்க பையனுக்கே இந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுடுவோம்" சுருக்கென்று தைய்த்த மனதினை அடக்கியப்படி கேட்டான்.
"என் பையனுக்கென்ன வேண்டுதலா இந்த குருடியை கட்டிக்க" பட்டென வெளிவந்தது அவரது வார்த்தைகள்.
அவரை அழுத்தமாக பார்த்தவன் "அப்ப நான் இந்த குருடியை கட்டிக்கலாமா?..." எனக் கேட்க, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தார் நாகலட்சுமி.
நொடியில் நடந்துவிட்ட வாக்குவாதத்தில் திகைத்து நின்றிருந்த இயலின் பெற்றார்கள். ஆடவனின் பேச்சில் தன்னிலைக்கு திரும்பினர்.
அதுவும் இயலாவின் தந்தையான பாலகிருஷ்ணனுக்கு அத்தனை கோபம் வந்தது. அப்படியென்ன குறைந்து போய் விட்டாள் என் மகள். பார்வை குறைபாட்டை தவிர, அவளை குறை சொல்ல எதுவுமே இல்லை. அப்படியிருக்க ஆளுக்கு ஆள் அவளை குறை சொல்வதென்ன! இப்படியான பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்கிறீர்களா என்று குமுறுவதென்ன! வேண்டாம் என் பெண்ணைக் கட்டிக் கொள்ளவும் வேண்டாம், இப்படி குமுறவும் வேண்டாம். என்று நினைத்தவர்
"நீங்க என் பொண்ணை கட்டிக்க வேணும்னு இங்க யாரும் அழல, தயவு செஞ்சு இங்கிருந்து எல்லாரும் கிளம்புங்க சார்.." என்றார் பாலகிருஷ்ணன்.
அக்கணம் அவரது குரலையும் தாண்டி ஒலித்தது "போதும் நிறுத்துங்க மிஸ்டர்..." என்ற இயலின் குரல்.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
சரியாக சேலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள சீலநாயக்கன்பட்டியில் அமைந்துள்ளது அந்த இரண்டடுக்கு மாடி வீடு.
அந்த வீடு முழுவதும் குட்டி குட்டி மின் விளக்குகளால் மிளிர்ந்துக் கொண்டிருந்தது. சொந்த பந்தங்களின் ஆர்ப்பரிப்பும், குழந்தைகளின் சந்தோசக் கூச்சலும் அந்த வீட்டை நிறைத்தது. அதுவே கூறியது வீட்டின் விசேஷத்திற்கு அனைவரும் கூடியிருக்கிறார்கள் என்று.
ஆம், இன்று அந்த வீட்டின் இளவரசிக்கு நிச்சயதார்த்தம்.
நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகான விசேஷம் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடனே கலந்து கொண்டனர்.
குட்டி தேவதைகள் காலில் வெள்ளிக் கொலுசுகள் சிணுங்க அந்த வீட்டை சுற்றி சுற்றி வளம் வந்து கொண்டிருக்க, பெரியவர்களோ முடிந்த நிச்சியத்தை பற்றியும், இரண்டு மாதங்களில் நடக்கவிருக்கும் திருமணத்தை பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.
அதே சமயம் அன்றைய நாளுக்கான நாயகியோ அந்த வீட்டின் மாடியில் நின்றிருந்தாள். சீதை இருக்குமிடம் தானே ராமனுக்கு மிதிலை. இதோ அன்றைய நாளுக்கான நாயகனும் அவளைத் தேடி சென்றிருந்தான்.
அங்கே மாடியில்...
கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்றபடி சாம்பல் நிற மேகத்தினுள் புதையும் வெண்ணிற சூரியனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். அவளது முகம் எத்தனைக்கு எத்தனை அமைதியாக இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை அவளது மனம் நிலைக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது.
"தீப் பிழம்பாக் கொதிச்சிட்டு இருக்கிற மேகத்துக்குள்ள சூரியன் போய் மறைஞ்சுக்கிறது கூட அழகு தான்ல..." என்ற குரலில் தன்னிலைக்கு திரும்பியவள் குரல் வந்த திசையைப் பார்த்தாள்.
ஆறடி உயரத்தில் கம்பீரம் குறையாமல் வந்து கொண்டிருந்தான் அவன். சாம்பல் நிறத்தில் மேல் சட்டையும், அடர்ந்த கருப்பு நிற கால் சட்டையும் அணிருந்தான். அலையலையான கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே வந்தவனின் முகத்தில் அத்தனை புன்னகை. அந்த புன்னகையே கூறியது அவனுக்கு இந்த திருமணத்தில் மட்டுமல்ல அவள் மீதும் விருப்பம் தான் என்று.
அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இத்தனை நேரமிருந்த தவிப்பும், துடிப்பும் மாயமாய் மறைந்துப் போனது.
அதே நேரம் பாவையை நோக்கி வந்து கொண்டிருந்தவனின் பார்வை முழுக்க அவள் மீது மட்டுமே இருந்தது. கருணீர் நிறத்தில் புடவை அணிந்திருந்தவள் முகம் நிலவாய் ஜொலித்தது. பிறை நெற்றியை நிறைத்த கேசமும்,நாசியை அலங்கரித்த மூக்குத்தியும்,கருமை திட்டிய நயனங்களும், உதட்டு சாயமா இல்லை இயற்கையிலயே சிவந்த இதழ்களா என ஆராயும் அளவிற்கு சிவந்திருந்த திருத்தமான இதழ்களும், இடைத் தாண்டி வளர்ந்திருந்த கேசமும் அவனைக் கொள்ளைக் கொண்டது.
கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே மாயோளை நெருங்கியவன் "கொஞ்சமாச்சும் உனக்கு செட்டாவேனா?..." குறும்பு சிரிப்போடு கேட்டான். அவனது குரலில் தன்னிலைக்கு மீண்டவள் அவனது கேள்வி புரிந்து சட்டென பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.
"எத்தனை மார்க்?" அடுத்த கேள்வி அவனிடத்தில் வர, இதழ்களை அழுத்திக் கடித்துக் கொண்டாள்.
"மார்க் போடற அளவுக்கு நீங்க இல்லைன்னு சொல்றயோ?" கன்னக் கதுப்புக்களை அழுத்தி கடித்து கொண்டே கேட்டான். அதற்கு பதில் சொல்லாமல் விழிகளை உருட்டி அவனைப் பார்த்தாள்.
காரிகையின் முறைப்பை ரசித்து கொண்டே "ரொம்ப அழகா இருக்க இயலா..." ஆழ்ந்த குரலில் கூறினான்.
அந்த வார்த்தைகள் அவளுள் ஆயிரம் மாயம் செய்ய, புது அனுபவமாக இருந்தது. மெல்லிய வெட்கம் கூட வந்தது இயலாவிற்கு. பார்வையை சுழல விட்டபடி நெற்றியை முத்தமிட்டு கொண்டிருந்த கேசத்தை செவியோரம் ஒதுக்கி விட்டவள் "உங்க அளவுக்கு நான் அழகு இல்லை..." என்றாள் மெல்லிய குரலில்.
அய்யனாரின் கையிலிருக்கும் அருவாள் கலரில் பிறந்தவனுக்கு இப்படியான ஸ்டேட்மெண்ட் கேட்பது இதுவே முதல்முறை என்பதால் மெல்லிய வெட்கம் வந்தது. இப்பொழுது இதழ்களை அழுத்தி கடித்து பார்வையை சுழல விடுவது அவன் முறையாகி போனது.
இருவருக்குமிடையில் நீண்ட நெடிய அழகிய மெளனம். அந்த மௌனத்தை அவனே கலைத்தான். "இந்த ஒயின் கலர் புடவை உனக்கு பொருத்தமா இருக்கு. ஆனால் அதுக்கு மேட்ச்சா சட்டை எடுக்க தான் எனக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு" என்கவும் சிறி யாழியிலுள்ள கம்பிகள் பட்டென்ற சத்தத்தோடு அறுபட்டு விழுவது போல, மங்கையின் மொத்த உணர்வுகளும் அறுபட்டு விழுந்தது.
இத்தனை நேரம் அவளது மனம் தவித்தது இதற்கு தானே? வீட்டில் பேசி முடித்த சம்பந்தம் தான்
தன்னைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் கூறிய பின்னர் தான் இந்த நிச்சியமே. ஆனாலும் அவளது மனம் அவன் இதனைப் பற்றி ஒரு வார்த்தைக் கேட்கவில்லையே என்றெண்ணி தவித்தது.
"எனக்கு உன்னைப் பத்தி எல்லாமே தெரியும். இதெல்லாம் ஒரு விஷயமா? எனக்கு உன்னோட குறை ஒரு குறையாவே தெரியல..." இப்படியான வார்த்தைகளை கேட்டுவிட மாட்டோமா என்று துடித்த மனதை அடக்க முடியவில்லை...
நேரடியாக அவனிடமே கேட்டுவிட்டால் தான் என்ன? கேட்டு விடலாமா? அனைத்தும் தெரிந்து தான் என்னை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டாயா என்று கேட்டு விடுவோமா? என நினைத்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
பெண்ணவளின் உள்ளக் கொதிப்பை அறியாதவனோ "நான் வாங்கி தர நிச்சய புடவையை தான் நீ கட்டணும்னு நினைச்சேன். அதான் உனக்கு பொருத்தமா நானே தேடிப் பிடிச்சு வாங்கினேன்..." என்றவன் கைகள் இரண்டையும் விரித்து காட்டி
"சரி சொல்லு, எனக்கு இந்த ஓய்ன் கலர் செட்டாகுதா?..." எனக் கேட்டான். அதற்கு பதில் சொல்லாமல் திகைத்து நின்றாள்.
அவளது திகைத்தப் பார்வை ரசிக்கும் பார்வையாக தெரிந்து தொலைத்தது அவனுக்கு. சிறு வயதிலிருந்தே நிற வேறுபாட்டால் ஒதுக்கப்பட்டவன். இப்போது அவளால் ரசிக்கப்படுவது இதயத்தில் ஓர் இனிமையான சுகத்தைக் கொடுத்தது. பெருவிரலால் நெஞ்சைத் தடவிக் கொண்டே பெண்ணைப் பார்த்தான்.
அவளோ பார்வையை மாற்றாமல் அப்படியே பார்த்து வைக்க, புருவத்தை உயர்த்தி ' என்ன...' என்பதை போல் கேட்டான். அவனது புருவத் தூக்களில் பொத்தென்று விழ துடித்தது அவளது பொல்லாத மனம்.
அக்கணம் 'இயல்... என்ன பண்ற? உன்னை பத்தி அவருக்கு தெரியுமான்னு கேளு..." என்றது அவளது புத்தி
' தெரியாம தான் நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்தாரா? அதெல்லாம் அவங்க வீட்டுல சொல்லி இருப்பாங்க? நீ சும்மா இரு..' அவளது மனம் புத்தியை அடக்கியது.
'தெரிஞ்சிருந்தா ஏன் இந்த கலர் நல்லா இருக்கான்னு கேட்கணும். என்னவோ தப்பா தோணுது. இப்பவே இதைப் பத்தி பேசு...' என்றது அவளது புத்தி.
நொடியில் இருமனமும் ஒன்றையொன்று முட்டி மோதி கொள்ள, அங்கே வென்றது என்னவோ மங்கையின் புத்தி தான்.
"அது வந்து நான்...எனக்கு" அதற்கு மேல் வார்த்தைகள் துளியும் வரவில்லை. மனம் பட்பட்டென அடித்துக் கொண்டது. கண்கள் கலங்கும் போலிருந்தது. கண்களை சிமிட்டி அவனைப் பார்த்தாள்.
அவனுக்கு ‘உன்னை பற்றிய உண்மை துளியும் தெரியாது’ என்று புத்தி கூறியது உண்மையாக இருக்கக் கூடாதென மனம் அடித்துக் கொண்டது. அவளுக்கு அவனை அத்தனை பிடித்தது. முதல்முறை அவனைப் பார்த்ததும் மனதில் ஆழமாய் பதிந்து விட்டான். அதற்கு பிறகு எப்பொழுது காதலிக்க ஆரம்பித்தாள் என்று துளியும் தெரியவில்லை.
மாயோளின் அமைதியை பார்த்தவன்
"என்னவாம்..." எனக் கேட்டான். ஒன்னுமில்லை என்பதைப் போல் தலையாட்டியவள் நொடி நேர அமைதிக்கு பிறகு "ஒன்னு சொல்லணும்..." என்றாள். அந்த குரலில் மெல்லிய தடுமாற்றம் தெரிந்தது.
அந்த தடுமாற்றம் இவனை யோசிக்க வைத்தது. அப்பொழுது அவன் அறிந்திருக்கவில்லை அந்த தடுமாற்றம் இவன் திருமணத்தை வேண்டாமென்று கூறிவிடுவானோ என்ற பயத்தினால் உண்டானதென்று.
புருவங்கள் சுருங்க "ஏதாவது பிரச்சனையா?..." என்று கேட்டான். அவனது கேள்வியை புரிந்து அதற்கு பதில் சொல்ல மாயோள் எடுத்துக் கொண்டே ஒவ்வொரு விநாடியும் இவனது மனம் ஏனென்றே தெரியாமல் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. அது, அவள் இல்லையென்று தலையாட்டும் வரை தொடர்ந்தது.
"உப்ஸ்..." வாயில் காற்றை நிரப்பி வெளியிட்டவன் "வேற என்ன இயல்"அத்தனை மென்மை அவனிடத்தில். அந்த மென்மை இயலை ஏதோ செய்தது. கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அவனிடம் இதைப் பற்றி பேசாதே என்றது மனம். அதையும் மீறி பேச ஆரம்பித்தாள். "ஆல்ரெடி இதைப்பத்தி உங்க வீட்டுல பேசிட்டதா அம்மா சொன்னாங்க. இருந்தாலும், உங்ககிட்ட இதைப்பத்தி பேசிடனும்னு தோணுச்சு. எனக்கு கலர் பிளைண்ட் இருக்குன்னு உங்களுக்கு தெரியும் தானே. தெரிஞ்சு தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கீங்க?..." தவிக்கும் இதயத்தோடு கேட்டாள்.
காரிகையின் வார்த்தைகளை உள் வாங்கவே நொடிகள் தேவைப்பட்டது. அது புரிந்ததும் அத்தனைக் கோபம் வந்தது அவனது குடும்பத்தார் மீது.
மனதின் கோபத்தைத் துளியும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கண்களை இறுக மூடிக் கொண்டவன் காதில் 'இவனோட கலருக்கு, கண்ணு தெரியாத பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணா தான் உண்டு. இல்லைன்னா யார் இவனை சீண்டுவா?' அவனது சித்தியான நாகலட்சுமியின் குரல் கேட்டது.
பட்டென கண்களை திறந்தவன்
தன்னையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் "எனக்கு இதைப்பத்தி தெரியாது. தெரிஞ்சிருந்தா நிச்சியதார்த்தம் வரைக்கும் கொண்டு வந்திருக்க மாட்டேன்..." என்றவன் வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.
ஆடவனின் பேச்சில் விக்கித்து நின்றாள் பாவை. காலம் முழுக்க தன்னுடன் ஆதரவாக, ஆறுதலாக இருப்பான் என்று நம்பியவன் நொடியில் தூக்கி எறிந்து விட்டு செல்ல, மனம் கல்லாய் இறுகி போனது. கண்களை இறுக மூடிக் கொண்டாள். கண்களுக்குள் சூடான நீர் சுழன்றது.
"ரொம்ப அழகா இருக்க இயலா..." சற்று முன்னர் குழைந்து ஒலித்த குரல் காதில் கேட்டது. பட்டென கண்களை திறந்தாள். கண்களில் சூழ்ந்திருந்த கண்ணீர் பட்டென வெளிவந்தது. அதனை அழுத்தித் துடைத்துக் கொண்டாள்.
சற்று முன்னர் அவன் மீதெழுந்த மொத்த உணர்வுகளையும் சேர்த்தே துடைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அதே நேரம்... இங்கு, இரண்டு படிகளாக தாவி இறங்கிக் கொண்டிருந்தவன் மனம் முழுக்க கோபம் மட்டுமே ஆட்சி செய்தது.
முன்னமே இயலைப் பற்றி கூறியிருந்தால் இத்தனை கோபம் வந்திருக்காதோ என்னவோ ஆனால் இதனைப் பற்றி துளியும் கூறாமல் நிச்சியம் வரைக்கும் கொண்டு வந்தது அத்தனை கோபத்தை கொடுத்தது.
குருட்டு பெண்ணை மனம் முடிக்கும் அளவிற்கு தான் உன் தகுதி இருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறாரா இவர்? அந்தளவிற்கு தாழ்ந்து போயிருக்கிறேனா நான்? அவரது வயிற்றில் பிறந்தவனுக்கு இப்படியான ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு இருப்பாரா? இப்படியான பல கேள்விகள் அவனைப் புயல் போல் சூழ்ந்து கொண்டது.
மாடியிலிருந்து கீழிறங்கி, நேராக அவனது சித்தியான நாகலட்சுமியிடம் வந்து நின்றவன் "நீங்க பார்த்த பொண்ணை எனக்கு பிடிக்கல. இந்த கல்யாணம் நடக்காது..." என்றான் . அவனது பேச்சில் அதிர்ந்து எழுந்து நின்றார் நாகலட்சுமி. கூடவே அவனது தந்தையான மூர்த்தியும், இயலின் பெற்றார்களும் எழுந்து நின்றனர். இத்தனை நேரமிருந்த ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் அப்படியே அடங்கி போனது.
அனைவரின் பார்வையும் அவன் மீது மட்டுமே நிலைத்தது. அவர்களின் பார்வையை துளியும் கண்டுகொள்ளாமல்
வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அக்கணம் "சர்வா நில்லு" என்ற கர்ஜனை குரல் கேட்க, திரும்பி பார்த்தான்.அங்கே அவனது தந்தை மூர்த்தி ருத்ரதாண்டவமாடாத குறையாக நின்றார். அவரது கோபத்தை அலட்சியம் செய்தபடி பார்த்தான் இவன்.
"அந்த புள்ளைக்கு என்ன டா குறைச்சல்?" பல்லைக் கடித்தபடி கேட்டார்.
"என்ன குறைச்சலா? ஏன் என்ன குறைச்சல்ன்னு உங்களுக்கு தெரியாதா?..." என்றவன் கண்களை இறுக மூடித் திறந்து "எனக்கு பிடிக்கல..." என்றான்.
"ஏன் துரைக்கு வேற எந்த பொண்ணை பிடிக்குமாம்" அத்தனை நக்கலாக கேட்டார் நாகலட்சுமி. அவரை அழுத்தமாக பார்த்தான் அந்த பார்வை அவரைப் பயமுறுத்தியது.
"பாருங்க மாமா, எப்படி பார்க்குகாறான் பாருங்க... விட்டா அடிச்சிடுவான் போலிருக்கு உங்க பையன்..." மூர்த்தியின் பின்னே சென்று நின்றபடி கூறினார்.
மனைவியின் பேச்சைக் காதில் வாங்கி கொள்ளாமல் "அந்த பொண்ணுகிட்ட என்ன குறை இருக்குன்னு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ற" அழுத்திக் கேட்டார்.
கண்களை இறுக மூடித் திறந்தவன் இறுகிய குரலில் "அவளுக்கு கலர் பிளைண்ட்டாம்..." என்றான். அவருக்கும் இது புதிய செய்தி ‘என்ன சொல்றான் இவன்’ என்பது போல மனைவியை பார்த்தார்.
"ஏன் அதுக்கு என்ன? புள்ளை நல்லா இருந்தா போதாதா அவனுக்கு"
"ஓ...அப்படியா? அப்ப சரி, உங்க பையனுக்கே இந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுடுவோம்" சுருக்கென்று தைய்த்த மனதினை அடக்கியப்படி கேட்டான்.
"என் பையனுக்கென்ன வேண்டுதலா இந்த குருடியை கட்டிக்க" பட்டென வெளிவந்தது அவரது வார்த்தைகள்.
அவரை அழுத்தமாக பார்த்தவன் "அப்ப நான் இந்த குருடியை கட்டிக்கலாமா?..." எனக் கேட்க, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தார் நாகலட்சுமி.
நொடியில் நடந்துவிட்ட வாக்குவாதத்தில் திகைத்து நின்றிருந்த இயலின் பெற்றார்கள். ஆடவனின் பேச்சில் தன்னிலைக்கு திரும்பினர்.
அதுவும் இயலாவின் தந்தையான பாலகிருஷ்ணனுக்கு அத்தனை கோபம் வந்தது. அப்படியென்ன குறைந்து போய் விட்டாள் என் மகள். பார்வை குறைபாட்டை தவிர, அவளை குறை சொல்ல எதுவுமே இல்லை. அப்படியிருக்க ஆளுக்கு ஆள் அவளை குறை சொல்வதென்ன! இப்படியான பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்கிறீர்களா என்று குமுறுவதென்ன! வேண்டாம் என் பெண்ணைக் கட்டிக் கொள்ளவும் வேண்டாம், இப்படி குமுறவும் வேண்டாம். என்று நினைத்தவர்
"நீங்க என் பொண்ணை கட்டிக்க வேணும்னு இங்க யாரும் அழல, தயவு செஞ்சு இங்கிருந்து எல்லாரும் கிளம்புங்க சார்.." என்றார் பாலகிருஷ்ணன்.
அக்கணம் அவரது குரலையும் தாண்டி ஒலித்தது "போதும் நிறுத்துங்க மிஸ்டர்..." என்ற இயலின் குரல்.
Author: Mysore
Article Title: இரு வண்ண வானவில் அத்தியாயம் 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: இரு வண்ண வானவில் அத்தியாயம் 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.