kanjeevaram
New member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 7
ஆகாயம் - 1
"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள"
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.
நேற்று இரவு நடந்த நிகழ்வுகள் பயங்கர கோவத்தையும், அடக்க முடியா அழுகையையும் கொடுக்க, கண்களை இறுக்க மூடி கொண்டு காதில் ப்ளூடூத் வழியாக வரும் பாடல்களை கேட்ட படி செல்லும் முக்கால் மணி நேர அலுவலக பயணம், பழைய ஞாபகங்களுக்கு இட்டு சென்றது நம் நாயகி ஜானகியை, ஜானகி நாற்பதின் துவக்கத்தில் இருக்கும் அழகி, பூசலான உடம்புடன், பார்க்க ஆளுமையுடன் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் மேனேஜர்.
தன் மகள் தர்ஷி கல்லூரி படிப்பிற்காக கோவை சென்று இன்றுடன் இரு மாதம் முடிகிறது என்று நினைக்கும் போதே லேசானா ஒரு முறுவல், ஜானகியிடம்.
சிலருக்கு வாழ்க்கை நீரோடை போல் செல்லும் அல்லது அவர்கள் அப்படி நீரோடும் வழியில் வாழ்வர். இரண்டாவது வகை நம் ஜானகி, வாழ்வின் நீரோட்டத்தில் சில பல பெரிய சலசலசப்புகள் எழுந்தாலும், அதன் போக்கில் வாழ்வை ரசித்து ருசித்து வாழும் வித்தைகாரி.
Commute (தினம் வேலைக்கு செல்லும் பயணம்) என்று ஒரு சொல் உண்டு ஆங்கிலத்தில், அதற்கு ஏற்ற தமிழ் பதத்தை இந்த பயணத்தில் யோசிக்கும் அளவு, சிறு சிறு விஷயங்களால் மகிழ்ச்சி கொள்ளும் அரிய வகை ஜீவி.
பள்ளி கல்லூரி அனைத்திலும் நல்ல மதிப்பெண் பெற்று, கல்லூரி முடிந்ததும், பெற்றோர் பார்த்த மாப்பிளை மனம் முடித்து, ஒரு அழகிய பெண் குழந்தை பெற்று வளர்த்து, தனக்கும் ஒரு நல்ல வேலையை தேடி என்று திரும்பி பார்த்தால் திருமணம் முடிந்து இந்த பதினெட்டு வருடத்தில் ஜானகி கடந்து வந்த பாதை நிறைய வீழ்ச்சிகளையும் வலையங்களையும் ஏற்றங்களையும் கொண்டு இருந்தாலும், அதில் உள்ள அழகையும் அவ்வப்போது அசை போட்டு பார்த்து தனக்குள் சிரித்து மகிழும் ஜானகி, நேற்று நடந்த அந்த விசயத்தை கடக்க மிக சிரமப்பட வேண்டி இருந்தது.
ஜானகியின் கணவன் ராமநாதன், தன் கணவனை பற்றி நினைத்தால், ஜானகிக்கு விஸ்வரூபம் படத்தில் வரும் நாயகி, நாயகனை பற்றி தன் செல்லும் மனவியல் டாக்டரிடம் சொல்லும் அழகு தான் ஞாபகம் வரும்.
அப்படி இப்படி என்று எந்த வகையில் ராமநாதனை சேர்க்க, பதினெட்டு வருடத்தில் இதை மட்டும் அவளால் ரிசர்ச் செய்ய முடியவில்லை, அவளுக்கு ஒரு முடியும் கிட்டவில்லை.
பெண் பார்க்கும் படலத்தில் இருந்து இருவரின் பெயர் காரணத்தை கொண்டும் ஜோடி பொருத்தம் அழகு என்று அழகான ஒரு திருமணம் தான்.
ராமநாதன் இரு அக்காளுக்கு ஒரு தம்பியாய், நடுத்தர வர்க்கத்துக்கும் சற்று கீழ் இருக்கும் குமாஸ்தா அப்பாவுக்கும் வெகுளி அம்மாவுக்கும் பிறந்த அறிவாளி, ஆம் அறிவாளி தான், அக்கௌன்ட்ஸ் இளங்கலை படித்தவுடன் தேர்வெழுதி
அரசாங்க வங்கியில் பணி பெற்ற அறிவாளி.
இன்று அதே அரசாங்க வங்கியின் முதல் நிலை மேலாளர்.
அரசாங்க வங்கி பணியின் வழியாக ராமநாதன் பெற்றவை அதிகம்,ஜானகி உட்பட, ஜானகியின் தந்தை ஒரு தனியார் அலுவலகத்தில் நல்ல வேலை தாயும் ஆசிரியர் நடுத்தர வர்க்கத்தின் மேலடுக்கு வாழ்கை, ஜானகியை ராமநாதன் பார்த்து சென்ற பின்
"மாப்பிளை ரொம்ப நல்ல மாறி தெரியுது ஜானு, ரொம்ப அமைதியும் கூட, உன் வாழ்க்கை ரொம்ப அமைதியா இருக்கும்"
ஜானகியின் அப்பா சொன்னது இன்றும் அவளின் நினைவில்,
நேற்று வரை அமைதியாக தான் இருந்தது ஜானகியின் மனம் ஆனால் நேற்று இரவு நடந்த அந்த நிகழ்வு, ஜானகியை அவளின் மனதை புயல் அடிக்கும் இடமாக்கியது.
அப்படி என்ன தான் நடந்தது நேற்று இரவு.
வழக்கம் போல் வீடு வந்த பின் ஜானகி இரவு உணவுக்காக, வேலைகளை செய்ய ஆரம்பிக்க, ராமநாதனும் வீடு வந்தார்.
இருவரும் இட்லியும் பச்சை பாசி பருப்பு குருமாவும் சாப்பிட்ட பின், தங்கள் மகள் தர்ஷிக்கு அழைத்தனர்.
"தங்கம் இன்னைக்கு பச்சை பயறு குருமா டா, நீ என்ன சாப்பிட்ட"
"தோசை மா, சிக்கன் கிரேவி, அப்பா எத்தனை இட்லி இன்னைக்கு"
ராமநாதனுக்கு இட்லி என்றால் அத்தனை இஷ்டம்,
"எட்டு டா " - சின்ன சிரிப்புடன் ராமநாதன்.
பின் ஹாஸ்டல் கதை எல்லாம் பேசி கிட்சென் ஒதுக்கி, படுக்க வரும் வரை நாதன் டிவியும் செல்லும் பார்த்து இருக்க, வேலை முடித்து ஜானகி குளித்து ஏசி ஆன் செய்து படுக்க, பக்கத்தில் வந்து எப்போதும் படுப்பது போல் படுத்த ராமநாதன், எப்போதும் படுத்து சில நிமிடங்களில் தூங்கிவிடும் நாதன், அன்று உறக்கம் பிடிக்காமல் எதோ எதோ யோசிப்பதும் அசைவதுமாக இருக்க ஜானகி
" என்ன ஆச்சுங்க, தூங்கலையா? "
மனைவின் முகத்தை சஞ்சலமும் பிரியமுமாக பார்த்து கொண்டே, அவளை அணைக்க வர, ஜானகிக்கு ஒன்றும் புரியவில்லை,
"என்ன ஆச்சுங்க"
"ஜானு ம்ம்ம்" என்று சொல்லி கொண்டு அவளை நெற்றியில் முத்தமிட முயல, ஜானகிக்கு கண்ணை கட்டி கொண்டு வந்தது,
ஜானகி எழுந்து அமர முயல, நாதன் அவளை திரும்ப அணைக்க வர, ஜானகி படுக்கையை விட்டு இறங்கி, அறையின் மின் விளைக்கை போட்டு நதானின் முகம் பார்த்தாள்.
நாதன் அவளை பார்க்க முடியாமல் குனிந்து இருக்க,
" நான் வேற ரூம்ல படுக்குறேன்"
சொல்லிவிட்டு வெளியே வந்த ஜானகிக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை, கிட்ட தட்ட பதினேழு வருடத்திற்கு பிறகான இந்த சிறு தொடுகையும் அணைப்பும், நாற்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் அவளுக்கு பயத்தையும் சிலிர்ப்பையும் கோபத்தையும் கொடுத்தது.
நாதனுக்கு ஜானகி எழுந்து வெளியே சென்றது அதிர்ச்சி தான், சண்டை எதிர்பார்த்து தான் இருந்தார் ஆனால் இந்த வெளியிடல் அவருக்கு நாளை காலை ஜானகியிடம் பேச வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்தது.
காலை எழுந்து நாதன் பேச முயல
"எனக்கு முக்கியமான வேலை இருக்கு, சீக்கிரம் கிளம்பனும்"
என்று சொல்லி கிளம்பிய ஜானகிக்கு அப்படி ஒன்றும் பெரிய வேலை எல்லாம் இல்லை அலுவலகத்தில், நாதனை அவரின் பக்கத்தை கேக்க விருப்பம் இல்லை.
பேசுவார்களா!?
"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள"
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.
நேற்று இரவு நடந்த நிகழ்வுகள் பயங்கர கோவத்தையும், அடக்க முடியா அழுகையையும் கொடுக்க, கண்களை இறுக்க மூடி கொண்டு காதில் ப்ளூடூத் வழியாக வரும் பாடல்களை கேட்ட படி செல்லும் முக்கால் மணி நேர அலுவலக பயணம், பழைய ஞாபகங்களுக்கு இட்டு சென்றது நம் நாயகி ஜானகியை, ஜானகி நாற்பதின் துவக்கத்தில் இருக்கும் அழகி, பூசலான உடம்புடன், பார்க்க ஆளுமையுடன் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் மேனேஜர்.
தன் மகள் தர்ஷி கல்லூரி படிப்பிற்காக கோவை சென்று இன்றுடன் இரு மாதம் முடிகிறது என்று நினைக்கும் போதே லேசானா ஒரு முறுவல், ஜானகியிடம்.
சிலருக்கு வாழ்க்கை நீரோடை போல் செல்லும் அல்லது அவர்கள் அப்படி நீரோடும் வழியில் வாழ்வர். இரண்டாவது வகை நம் ஜானகி, வாழ்வின் நீரோட்டத்தில் சில பல பெரிய சலசலசப்புகள் எழுந்தாலும், அதன் போக்கில் வாழ்வை ரசித்து ருசித்து வாழும் வித்தைகாரி.
Commute (தினம் வேலைக்கு செல்லும் பயணம்) என்று ஒரு சொல் உண்டு ஆங்கிலத்தில், அதற்கு ஏற்ற தமிழ் பதத்தை இந்த பயணத்தில் யோசிக்கும் அளவு, சிறு சிறு விஷயங்களால் மகிழ்ச்சி கொள்ளும் அரிய வகை ஜீவி.
பள்ளி கல்லூரி அனைத்திலும் நல்ல மதிப்பெண் பெற்று, கல்லூரி முடிந்ததும், பெற்றோர் பார்த்த மாப்பிளை மனம் முடித்து, ஒரு அழகிய பெண் குழந்தை பெற்று வளர்த்து, தனக்கும் ஒரு நல்ல வேலையை தேடி என்று திரும்பி பார்த்தால் திருமணம் முடிந்து இந்த பதினெட்டு வருடத்தில் ஜானகி கடந்து வந்த பாதை நிறைய வீழ்ச்சிகளையும் வலையங்களையும் ஏற்றங்களையும் கொண்டு இருந்தாலும், அதில் உள்ள அழகையும் அவ்வப்போது அசை போட்டு பார்த்து தனக்குள் சிரித்து மகிழும் ஜானகி, நேற்று நடந்த அந்த விசயத்தை கடக்க மிக சிரமப்பட வேண்டி இருந்தது.
ஜானகியின் கணவன் ராமநாதன், தன் கணவனை பற்றி நினைத்தால், ஜானகிக்கு விஸ்வரூபம் படத்தில் வரும் நாயகி, நாயகனை பற்றி தன் செல்லும் மனவியல் டாக்டரிடம் சொல்லும் அழகு தான் ஞாபகம் வரும்.
அப்படி இப்படி என்று எந்த வகையில் ராமநாதனை சேர்க்க, பதினெட்டு வருடத்தில் இதை மட்டும் அவளால் ரிசர்ச் செய்ய முடியவில்லை, அவளுக்கு ஒரு முடியும் கிட்டவில்லை.
பெண் பார்க்கும் படலத்தில் இருந்து இருவரின் பெயர் காரணத்தை கொண்டும் ஜோடி பொருத்தம் அழகு என்று அழகான ஒரு திருமணம் தான்.
ராமநாதன் இரு அக்காளுக்கு ஒரு தம்பியாய், நடுத்தர வர்க்கத்துக்கும் சற்று கீழ் இருக்கும் குமாஸ்தா அப்பாவுக்கும் வெகுளி அம்மாவுக்கும் பிறந்த அறிவாளி, ஆம் அறிவாளி தான், அக்கௌன்ட்ஸ் இளங்கலை படித்தவுடன் தேர்வெழுதி
அரசாங்க வங்கியில் பணி பெற்ற அறிவாளி.
இன்று அதே அரசாங்க வங்கியின் முதல் நிலை மேலாளர்.
அரசாங்க வங்கி பணியின் வழியாக ராமநாதன் பெற்றவை அதிகம்,ஜானகி உட்பட, ஜானகியின் தந்தை ஒரு தனியார் அலுவலகத்தில் நல்ல வேலை தாயும் ஆசிரியர் நடுத்தர வர்க்கத்தின் மேலடுக்கு வாழ்கை, ஜானகியை ராமநாதன் பார்த்து சென்ற பின்
"மாப்பிளை ரொம்ப நல்ல மாறி தெரியுது ஜானு, ரொம்ப அமைதியும் கூட, உன் வாழ்க்கை ரொம்ப அமைதியா இருக்கும்"
ஜானகியின் அப்பா சொன்னது இன்றும் அவளின் நினைவில்,
நேற்று வரை அமைதியாக தான் இருந்தது ஜானகியின் மனம் ஆனால் நேற்று இரவு நடந்த அந்த நிகழ்வு, ஜானகியை அவளின் மனதை புயல் அடிக்கும் இடமாக்கியது.
அப்படி என்ன தான் நடந்தது நேற்று இரவு.
வழக்கம் போல் வீடு வந்த பின் ஜானகி இரவு உணவுக்காக, வேலைகளை செய்ய ஆரம்பிக்க, ராமநாதனும் வீடு வந்தார்.
இருவரும் இட்லியும் பச்சை பாசி பருப்பு குருமாவும் சாப்பிட்ட பின், தங்கள் மகள் தர்ஷிக்கு அழைத்தனர்.
"தங்கம் இன்னைக்கு பச்சை பயறு குருமா டா, நீ என்ன சாப்பிட்ட"
"தோசை மா, சிக்கன் கிரேவி, அப்பா எத்தனை இட்லி இன்னைக்கு"
ராமநாதனுக்கு இட்லி என்றால் அத்தனை இஷ்டம்,
"எட்டு டா " - சின்ன சிரிப்புடன் ராமநாதன்.
பின் ஹாஸ்டல் கதை எல்லாம் பேசி கிட்சென் ஒதுக்கி, படுக்க வரும் வரை நாதன் டிவியும் செல்லும் பார்த்து இருக்க, வேலை முடித்து ஜானகி குளித்து ஏசி ஆன் செய்து படுக்க, பக்கத்தில் வந்து எப்போதும் படுப்பது போல் படுத்த ராமநாதன், எப்போதும் படுத்து சில நிமிடங்களில் தூங்கிவிடும் நாதன், அன்று உறக்கம் பிடிக்காமல் எதோ எதோ யோசிப்பதும் அசைவதுமாக இருக்க ஜானகி
" என்ன ஆச்சுங்க, தூங்கலையா? "
மனைவின் முகத்தை சஞ்சலமும் பிரியமுமாக பார்த்து கொண்டே, அவளை அணைக்க வர, ஜானகிக்கு ஒன்றும் புரியவில்லை,
"என்ன ஆச்சுங்க"
"ஜானு ம்ம்ம்" என்று சொல்லி கொண்டு அவளை நெற்றியில் முத்தமிட முயல, ஜானகிக்கு கண்ணை கட்டி கொண்டு வந்தது,
ஜானகி எழுந்து அமர முயல, நாதன் அவளை திரும்ப அணைக்க வர, ஜானகி படுக்கையை விட்டு இறங்கி, அறையின் மின் விளைக்கை போட்டு நதானின் முகம் பார்த்தாள்.
நாதன் அவளை பார்க்க முடியாமல் குனிந்து இருக்க,
" நான் வேற ரூம்ல படுக்குறேன்"
சொல்லிவிட்டு வெளியே வந்த ஜானகிக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை, கிட்ட தட்ட பதினேழு வருடத்திற்கு பிறகான இந்த சிறு தொடுகையும் அணைப்பும், நாற்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் அவளுக்கு பயத்தையும் சிலிர்ப்பையும் கோபத்தையும் கொடுத்தது.
நாதனுக்கு ஜானகி எழுந்து வெளியே சென்றது அதிர்ச்சி தான், சண்டை எதிர்பார்த்து தான் இருந்தார் ஆனால் இந்த வெளியிடல் அவருக்கு நாளை காலை ஜானகியிடம் பேச வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்தது.
காலை எழுந்து நாதன் பேச முயல
"எனக்கு முக்கியமான வேலை இருக்கு, சீக்கிரம் கிளம்பனும்"
என்று சொல்லி கிளம்பிய ஜானகிக்கு அப்படி ஒன்றும் பெரிய வேலை எல்லாம் இல்லை அலுவலகத்தில், நாதனை அவரின் பக்கத்தை கேக்க விருப்பம் இல்லை.
பேசுவார்களா!?
Attachments
Author: kanjeevaram
Article Title: மனசுல என்ன ஆகாயம் - 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: மனசுல என்ன ஆகாயம் - 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.