பாவை - 12
"நம்மளால முடிஞ்ச அளவுக்கு எல்லாம் பண்ணலாம்டா.. அப்பறம் கடவுள் விட்ட வழி தான்.. வேறென்ன பண்ண முடியும்.?" என்ற அதிரனுக்கும் கவலையே.
"ஹேமா ஏன் இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க.? அவங்க அப்படித்தானு தெரிஞ்சும் அவங்ககிட்ட கத்தறதுல என்ன பலன்.?" என்று அவளைச் சமாதானப்படுத்த முயன்றாள் காவ்யா.
அழுகையுடன் அவளோ நானும் இத்தனை வருசம் பொறுமையா தான் இருந்தேன்.. ஆனா இவங்க திருந்தற மாதிரியே இல்ல.. இருபது வருசத்துக்கு முன்னாடி நடந்ததுக்கு இப்ப என்ன பண்ண முடியும்.? நடந்ததை மறந்து தான் ஆகணும்.. கடந்த காலத்துக்குப் போய் நடந்ததை மாத்தி விட்டுட்டா வர முடியும்.?
இவரு கல்யாணமானவருனு தெரிஞ்சும் என் அம்மா இவருகிட்ட எனத்தைப் பார்த்து மயங்கி தொலைஞ்சு இப்படி பண்ணி தொலைஞ்சாங்கனு எனக்கு தெரியல.. அவங்க பண்ணுன தப்புக்கு அவங்க சீக்கிரமே போய் சேர்ந்துட்டாங்க.. ஆனா நான் அனுபவிக்கறேன்.. என்னால அப்பாவை விட்டும் குடுக்க முடியல..சரி திட்டு வாங்குங்கனு விட்டுட்டு அமைதியா நிற்கவும் முடியல..
இத்தனை நாள் எனக்கு ஆதரவா யாருமில்லை.. இப்ப என் புருசன் இருக்கறானு தைரியத்துல தான் என்னால பேசவே முடியுது.. ஆனா அவரும் மாறன் அண்ணனை மீறி எதுவும் பண்ண மாட்டாங்கனு எனக்கு நல்லாவே தெரியும்" என்றாள் விரக்தியுடன்.
காயப்பட்ட மனது இன்னும் இன்னும் காயமாகியே போகிறது. அதற்கான மருந்தைக் காலம் தான் இவளுக்குத் தர வேண்டும். தந்தைக்கு பிறகு பிறந்த வீடு என்ற ஒன்றே இவளுக்கு இருக்குமா.? இருக்காதா.? என்பதே சந்தேகம் தான். இவளின் வாழ்வு இப்படித்தான் என்றிருக்கும் போது எப்படி மாற்றிட முடியும்.?
"ப்ச் அழுகாதீங்க ஹேமா.. அவங்க குணம் அப்படித்தானு தெரிஞ்சும் நம்ம வருத்தப்பட்டு என்னவாக போகுது.? ஒருத்தரோட பிறவிக்குணத்தை அவ்ளோ சீக்கிரம் மாத்த முடியாது.. நம்ம பக்கம் பக்கமா வசனம் பேசுனா உடனே இவரு திருந்தக்கூடிய ஆளா.? அதுக்கும் நம்மளைய தான் கத்துவாரு..
ஒருத்தரோட குணம் இதுதானு புரிஞ்சுட்டா ஒன்னு ஏத்துக்க பழகிக்கணும்.. இல்ல அவங்கள விட்டு விலகிரணும்.. உங்க உறவு விலகி போற உறவு கிடையாது.. என்ன தான் இவங்க உங்களைய பேசுனாலும் உங்க அண்ணன் இல்லைனு ஆகிடுமா.? அதே மாதிரி உங்களுக்கு தேவையானதை செய்யாம இவரும் விட்டுருவாரா.?
இத்தனை வருசம் உங்களுக்கு தேவையானதை பண்ணுனாரு.. அதே சமயம் இனி உங்க குழந்தைகளுக்குத் தாய்மாமனா அத்தனையும் சரியா செய்வாரு.. இதுவும் அவரோட குணம் தான்.. அடுத்தவங்ககிட்ட இருக்கற குறையைக் கண்டுக்காம இருக்க பழகிட்டா நமக்கு எதுவும் பெரிய பிரச்சனையாகவே தெரியாது..
முதல்ல அழுகறதை நிறுத்துங்க.. இப்ப உங்க அப்பாவைப் அப்படி பேசுனவரு தான் கொஞ்ச நேரத்துல அந்த மனுசனுக்கு இன்னும் சாப்பாடு போடாம இருக்கேனு என்னைய திட்டுவாரு.. நம்மகிட்டயும் பல குறைகள் இருக்கும் ஹேமா.. அது நமக்கு தெரியாது..
மத்தவங்க எப்படி நம்மளைய அட்ஜஸ்ட் பண்ணி போறாங்களோ அதே மாதிரி நம்மளும் அவங்களோட குறையை பெரிசா நினைக்காம அட்ஜஸ்ட் பண்ணி வாழ்றதுல தான் வாழ்க்கையே அடங்கி இருக்கு.." என்று அவளைத் தேற்றி ஒரு தெளிவையும் அளித்தாள்.
"இவரைத் தான் கல்யாணம் பண்ணுவேனு அடம்பிடிச்சு கல்யாணம் பண்ணுன உங்க மனதைரியத்தைப் பாராட்டியே ஆகணும்.. இவரை எப்படி உங்களுக்கு பிடிச்சுது.?" என்று விளையாட்டாக வினவினாள் ஹேமா.
சிரிப்புடன் காவ்யாவும் "தெரியலயே.. ஆனா பிடிச்சுருச்சு.. அதான் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்" என்றிட, ரொம்ப தைரியம் தான் அண்ணி என்றவளுக்கு இப்போது மனம் நிறைந்த புன்னகையே.
இனி அவளின் தந்தையைப் பற்றி கவலையில்லை. என்ன தான் அவரின் மேல் கோவமிருந்தாலும் நிச்சயம் அவரை தன் அண்ணன் விட்டு விட மாட்டான் என்பது மட்டும் காவ்யாவின் பேச்சில் உணர்ந்தாள். இவளால் வாய் வார்த்தைக்காக மட்டும் வேணுடுமானால் 'உங்கள என்னுடன் அழைத்துச் செல்கிறேன்' என்று இவளால் கூறிட முடியும்.
உண்மையில் அழைத்துச் சென்று வைத்துக் கொள்ள முடியுமா.? அப்படி மருமகனின் வீட்டில் வந்திருந்து இவர் பேச்சு வாங்குவதை விட மகனுடன் இருப்பதே நல்லது. அதிரன் நல்லவன் தான். ஆனால் அவனும் சராசரி ஆண்மகன் தானே.? அவனின் அன்னையின் பேச்சைக் கேட்பதிலும் தவறில்லையே..
பார்க்க யாருமில்லை என்றால் இவன் பார்க்கலாம்.. மகனிருக்கும் போது அவனின் அன்னை எப்படி விடுவார்.? அன்னை கூறுவது தவறாகவே இருந்தாலும் அவரை மீறி அவன் எப்படி எந்த செயலை செய்வான்.? பெற்ற அன்னையை விட்டு விட்டு மனைவியின் தந்தையை மட்டும் இவனால் பார்க்க இயலுமா.?
அப்படி ஓரிருவர்கள் இருக்கலாம்.. ஆனால் அனைவரும் அப்படியே இருப்பார்களா என்ன.? இது தான் நிதர்சனமும் உண்மையும் கூட. இதை நிச்சயம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
வீட்டிற்கு வந்ததும் வராததுமாக "நீயும் அடங்க மாட்ட.. உன் அண்ணனும் அடங்க மாட்டான்.. உங்களுக்கு பஞ்சாயத்து பண்ணவே எனக்கும் காவ்யாவுக்கும் நேரம் சரியா இருக்கும் போல.?" என்று அதிரன் வினவினான் விளையாட்டாக.
அவனை முறைத்த ஹேமா "நான் என்ன எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுட்டு இருக்கனா.? இத்தனை வருசம் அவங்க பேசறதை கேட்டுட்டும் அமைதியா தானே இருந்தேன்.. அப்பவும் என்னைய குறை சொல்லுவீங்களா.?"
"ப்ச் குறை சொல்லலம்மா.. அவன்கிட்ட சண்டை போட்டா உடனே எல்லாம் மாறிருமா.?"
"மாறாது தான்.. ஆனா கேட்காம இருக்க முடியாதே" என்றவளுக்கு தந்தையை நினைத்து கண்ணீர் சுரந்தது.
அவளின் அழுகையில் கரைந்தவன் அவளை லேசாக அணைத்து "நடந்தது நடந்தது தான்.. இனி எதையும் மாத்த முடியாது.. அதே மாதிரி மாறனோட குணமும் மாற போறது இல்லை.. அதுக்காக நம்ம வருந்திட்டு இருந்தா எல்லாம் சரியாகிருமா.? அவனும் கஷ்டப்பட்டுருக்கான்..
சின்ன வயசுல அப்பாங்கற ஒருத்தர் நமக்கு சொந்தமில்லைனு தெரியறப்ப அவன் மனசு என்ன பாடுபட்டிருக்கும்.. வளர வளர மத்தவங்க பேசறதை கேட்டுட்டு வளர்ந்தா அவனோட மனசும் எப்படி வலிக்கும்.? உனக்கும் காயம் இருக்கும்டா.. நான் இல்லைனு சொல்ல மாட்டேன்.. ஆனா மாறனோட குணம் இதுதானு ஆகிருச்சு..
அவன் மாற போறது இல்ல.. சோ அவன் பேச்சைக் கண்டுக்காம இருக்கறது தான் நமக்கு நல்லதுனு தோணுது.. நானே அவன்கிட்ட எத்தனை பேச்சு வாங்கறேனு தெரியுமா.? அதைய எல்லாம் வெளில சொன்னா என் வேலைக்கே அசிங்கம்.. அதுக்காக அவனை விட்டுவிட்டு போக மாட்டேன்.. ஏன்டா இப்படி பண்றேனு கேட்க தான் முடியும்.. அப்படி கேட்டாலும் உன் நொண்ணன் பதில் சொல்லிருவானா என்ன.?
அதுக்கும் கத்துவான்.. நானெல்லாம் அவனோட பேச்சுல தேவையானதை எடுத்துட்டு தேவையில்லாததை அப்பவே குப்பைல தூக்கி போட்டுருவேன்.. இனி நீயும் அப்படியே பழகிக்கோ..
உன் அப்பா திட்டு வாங்கறதும் புதுசு இல்ல.. அவருக்குப் பழகிருக்கும்.. செஞ்ச தப்புக்கு எதிர்வினைனு ஒன்னு இருக்கும்ல.? அது இது தான்.." என்று அவளைத் தேற்றினான்.
ஹேமாவுக்கும் புரிய தான் செய்தது. ஆனாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அமைதியாகவே இருந்தாள்.
"சரி அவங்க பேச்சை விடு.. அடுத்து நீ என்ன பண்ணலாம்னு இருக்க.?" என்று அவளின் எதிர்காலத்தைப் பற்றி கேட்டான். அவளுக்கென்று ஒரு அடையாளம் இருக்க வேண்டும் என்று விரும்புபவன் இவன். திருமணத்திற்கு பின்பும் வீட்டிலே அடைந்து விடக்கூடாது என்று எண்ணினான்.
"ம்ம்ம்ம்ம் நமக்குனு ஒரு குழந்தை.. நம்ம குடும்பம்னு சந்தோசமா இருக்கணும்னு நினைக்கறேன்.. வேற என்னத்த நினைக்க போறேன்.?" என்றவளை இவன் முறைத்துப் பார்த்தான்.
அதில் பெண்ணவள் முகத்தைச் சுருக்கிட,
"அப்படியே ஒன்னு விட்டனா வெய்யு எல்லாம் சரியாகிரும்.. கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்குப் போயே ஆகணும்னு ரோடுரோடா வேலைத் தேடி அலைஞ்சுட்டு இருந்த.. அதெல்லாம் மறந்துருச்சா.?"
"அது அப்ப.. இப்ப நான் ஏன் வேலைக்குப் போகணும்.? என்னைய நீங்க பார்த்துக்க மாட்டிங்களா.?"
"ஹேமா விளையாடாத.. உனக்குனு ஒரு அடையாளம் இருக்கணும்னு நான் நினைக்கறேன்.. உனக்குப் புடிச்ச வேலையை தொடர்ந்து செஞ்சா கூட போதும்.."
ஹேமாவிற்கு மனது ஒப்பவில்லை. அதிரனின் அன்னை திருமணத்திற்கு முன்பே இவளிடம் கூறி விட்டார் திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்ல கூடாது.. குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டு வீட்டில் தான் இருக்க வேண்டுமென்று.. அவளும் இதற்கு சம்மதம் என்றே கூறினாள்.
இப்போது அவரின் பேச்சை மீறி எங்ஙனம் வேலைக்குச் செல்ல முடியும்.? அவர் பேசியதை இவனிடம் கூறினால் இருவருக்கும் சண்டை வந்து விட்டால்..? வந்த கொஞ்ச நாளிலே என் மகனை என்னிடம் இருந்து பிரித்து எனக்கு எதிராக மாற்றி விட்டாயா.? என்ற வார்த்தையை இவள் கேட்க விரும்பவில்லை.
அதனால் தான் என்ன என்னமோ கூறி அதிரனைச் சமாதானப்படுத்த முயல்கறாள். இவளுக்கும் வேலைக்குச் செல்ல வேண்டும்.. தன் சம்பாதியத்தில் தன் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை தான்.
மாமியாரின் பேச்சை மீறி சென்றால் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ.? என்ற அச்சமே அவளைச் சம்மதிக்க விடவில்லை. ஆசைகளை விட வாழ்வு முக்கியமாயிற்றே.
இப்போதும் கணவனைத் தான் சமாளிக்க முயன்றாள்.
"எனக்கும் வேலைக்கு போகணும்னு ஆசை தான்.. ஆனா அதைய விட நம்ம புள்ளைகளை கூட இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.. இப்ப வேலைக்குப் போக தொடங்கி அப்பறம் மாசமான என்னால எப்படி லீவ் போட முடியும்.? லீவு முடிஞ்சதும் வேலைக்கு அரக்கபரக்க ஓடணும்.. புள்ளைகளை பார்த்துக்க நேரமும் இருக்காது..
அவங்களோட ஒவ்வொரு அசைவையும் பார்க்கவும் குடுத்து வெக்காம போயிரும்.. கண்டிப்பா எனக்குனு ஒரு அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன் தான்.. ஆனா இப்ப இல்லை.. நம்ம புள்ளைக ஒரு குறிப்பிட்ட வயசு வந்ததும்.. சாதிக்கறதுக்கு வயசு முக்கியமில்லை அதிரன்.. கண்டிப்பா உங்க ஆசையை நான் நிறைவேத்துவேன்.." என்று இப்போதைக்கு அவனைப் பேச விடாமல் செய்திருந்தாள்.
அவளின் கூற்றிலும் ஒரு வகை நியாயம் இருப்பதால் அதிரனால் பேச முடியவில்லை. சரியென்பதைப் போல் அமைதியாகி விட்டான்.
இவர்கள் எவ்வளவு முயன்றும் திருநீலகண்டன் எந்த தவறும் செய்யவில்லை என்றே தீர்ப்பு வர, எள்ளல் சிரிப்புடன் அவர் கிளம்பியும் விட்டார்.
பத்திரிகையாளர்கள் மாறனைச் சூழ்ந்துக் கொண்டு "நீங்க தப்பு செஞ்சவங்களுக்குத் தண்டனை வாங்கி தருவீங்கனு நினைச்சோம்.. ஆனா அப்படி எதுவும் நடக்கலயே.?" என்று கேட்க, "தண்டனையை நானா குடுக்க முடியும்.? அப்படி குடுக்கறதா இருந்தா எப்பவே நான் குடுத்துருப்பேன்.. என் வேலையை நான் சரியா செஞ்சுட்டேன்.. அதே மாதிரி நீங்களும் இனி உங்க வேலையைச் சரியா செஞ்சுருங்க" என்று அவர்கள் நடக்காதது எல்லாம் நடந்தது போல் எழுதுவதைச் சுட்டிக்காட்டி கூறினான்.
"சார் நாங்க எங்க வேலையைத் தான் செய்யறோம்.."
"நானும் அதைய தான் செய்ய சொல்றேன்.. என்னைய என்னம்மா பண்ண சொல்றீங்க.? என் வேலை முடிஞ்சுது.. அந்த பொண்ணுகளோட சாவு தற்கொலைனு தீர்ப்பும் வந்துருச்சு.. இனி அந்த வழக்கைக் கையில் எடுத்து என்ன பண்ண முடியும்.?"
"உங்ககிட்ட இருந்து இப்படியொரு பதில் வரும்னு நாங்க நினைக்கல சார்.."
"வேறெப்படி பதில் வரும்னு நினைச்சீங்க.?" என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகவே மாறனின் பதில் இருக்க, பாவம் அவர்களால் தான் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
அவனின் மொத்த கடுப்பையும் அவர்களின் மேல் இறக்கி வைத்தான். உண்மையும் அது தான். தவறுக்கான நீதி கிடைத்தே ஆக வேண்டும் என்றெண்ணியவன் இவன். ஆனால் வழக்கு திசைமாறி இப்போது ஒன்றுமில்லாமல் போனதை இவனால் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியவில்லை.
அந்த மீனவக்குப்பமே என்னை நம்பினார்கள்.. அவர்களின் நம்பிக்கைக்கு நான் செய்த கைம்மாறு இதுவா.? என்று அவனுக்கே அவனை நினைத்து கோவமெழுந்தது.
கமிஷ்னர் தான் அதிரனுக்கு அழைத்து மாறனை அழைத்துச் செல்ல கூறினார். இழுக்காத குறையாக அதிரனும் நண்பனை இழுத்துச் செல்ல, "ப்ச் விடுடா அவங்க கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு தான் வர முடியும்.. இப்படி பாதில வந்தா நல்லாவா இருக்கும்.?" என்று கடிந்தான்.
"நீ பதில் சொன்ன வரைக்கும் போதும் ராசா.. நீ முதல்ல வீட்டுக்குக் கிளம்புனு கமிஷ்னரே சொல்லிட்டாரு" என்றவனும் அவனைத் தனியே விடாமல் அவனுடனே கிளம்பினான்.
காசிக்கும் இது தான் நடக்கும் என்று முன்னரே தெரியும்.. அவனின் தந்தையின் மூலம் அரசியலைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் முன்னரே அறிந்து வைத்திருந்தானே.. அதனால் தான் எதிலும் அவ்வளவு ஈடுபாடுடன் கலந்துக் கொள்ளவில்லை. இவன் போராடுனாலும் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும்.
அதனால் தான் எதையும் கண்டு கொள்ளவில்லை. மாறனிடம் வேலன் பேசும்போது கூட அப்படி என்ன இவன் பேச போகிறான்.? என்ற ஆவலில் தான் மறைந்திருந்து ஒட்டுக் கேட்டான். அதுவும் தவறாகவே காணப்பட்டது.
இன்றைய காலத்தில் தவறு செய்பவர்களுக்குத் தண்டனை கிடைப்பது அரிதாக இருக்கும் போது எங்ஙனம் அதில் நம்பிக்கை வைத்து காத்திருக்க முடியும்.?
மாறனுடன் பேசியதோடு வேலன் எதுவும் செய்யவில்லை. அவனுக்குச் சற்று பயமெழுந்ததில் அமைதியாக இருந்து விட்டான் எனலாம். வள்ளியை நினைத்து வருந்தினான்.. அழுதான்.. துடித்தான்.. அது மட்டும் தான் அவனால் செய்ய முடிந்ததும். இப்போது கூட வள்ளியின் புகைப்படத்தின் அருகில் அமர்ந்து தான் புலம்பிக் கொண்டிருக்கிறான்.
"அப்படி என்ன தான் நடந்துச்சு.? ஏன் அப்படி பண்ணுனீங்க.? எல்லாம் தெரிஞ்சாலும் என்னால என்ன பண்ண முடியும்.? உங்க சாவுக்கான காரணமே வெளில வராம அப்படியே மறைஞ்சும் போயிரும் போல.? இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாதுனு புரிஞ்சுருச்சு.. என்னால தைரியமா சாகவும் முடியல.. வாழவும் மனசில்லாம இருக்கு.. எனக்கு என்ன பண்றதுனு சுத்தமா புரியல.. வள்ளி வள்ளி" என்று ஓயாமல் புலம்பி அரற்றினான்.
இனி இவர்களின் சாவும் பத்தோடு பதினொன்று தான். இரண்டு வாரங்களுக்கு இதைப் பற்றி பேசுபவர்கள் வேறொரு பிரச்சனை வந்ததும் இதை மறந்தும் விடுவார்கள். எப்படி பிறப்பு ஒரு சாதாரண நிகழ்வோ இறப்பும் அப்படியே மாறி விடுகிறது.
காலப்போக்கில் மீனவக்குப்பத்தில் மூன்று பெண்கள் இறந்தார்கள்.. அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.. இறுதியில் தற்கொலை என்று முடித்து விட்டார்கள் என்ற பேச்சு மட்டும் தலை தலைமுறையாக தொடர்ந்து பின்பு காணாமலும் போய் விடும்.
அவ்வளவுதான் இவர்களின் சாவிற்கான நீதியும். அவர்களின் பிறப்பிற்கான அர்த்தமும். முடிந்தது அவர்களின் அத்தியாயமும். இனி அதைப்பற்றி பேசினாலும் என்ன பலன்.?
இதோ ஆளும்கட்சியின் மூலம் மாறனுக்கு வேலை மாற்றலும் வந்து விட்டது. வேலையில் நேர்மையாக இருப்பவர்கள் இதை அனைத்தையும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டுமே.? கமிஷ்னரே இதை எதிர்பார்க்கவில்லை. ஆளுங்கட்சியைப் பகைத்து கொள்ள விரும்பாமல் மாறனை வேறொரு இடத்திற்கு இடமாற்றமும் செய்து அனுப்பி வைத்தார். அதில் அதிரனுக்கு பெரும் வருத்தம். இவனாலும் எதுவும் செய்ய முடியாத நிலை.
எடுத்த வழக்குகள் அனைத்தையும் திறன்பட மாறன் முடித்திருந்தாலும் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கான தண்டனை என்பது மட்டும் கேள்விக்குறியே. அதில் மட்டும் இவனின் வருத்தம் ஓய்ந்தபாடில்லை. இனியும் தீருமா.? என்பதே சந்தேகம் தான்.
வேலை மாற்றம் காரணமாக காவ்யாவும் அவனும் வேறொரு ஊருக்கு இடம் பெயர்ந்திருந்தனர். காவ்யாவின் தந்தை தான் இப்போது மாறனின் தந்தைக்குத் துணையாக இருப்பது. ஹேமாவும் அடிக்கடி வந்து விடுவதால் ஒன்றும் பெரியதாக பிரச்சனை இல்லை.
இப்போது தான் காவ்யாவும் மாறனும் பேசவே ஆரம்பித்திருந்தனர்.. அவனின் தவறுகளைச் சுட்டிக் காட்ட இவள் மறந்ததே இல்லை. அதில் சண்டை வந்தாலும் இவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து விடுவாள்.
உடனே மாறன் இறங்கி வந்து விடுவான் என்று நினைப்பது உங்களின் தவறு. இவள் தான் இறங்கி போக வேண்டியதாக இருக்கும்.
பெண்ணவளின் மூலம் இவன் சிறிது சிறிதாக மாறி விட்டான். ஆனால் தவறுக்கான தண்டனை கிடைப்பதில் நம் நாடு மாறுமா.? என்பது கேள்விக்கு
றியே.
இத்துடன் நாமும் இவர்களிடம் இருந்து விடைபெறுவோம்..
முற்றும்..
"நம்மளால முடிஞ்ச அளவுக்கு எல்லாம் பண்ணலாம்டா.. அப்பறம் கடவுள் விட்ட வழி தான்.. வேறென்ன பண்ண முடியும்.?" என்ற அதிரனுக்கும் கவலையே.
"ஹேமா ஏன் இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க.? அவங்க அப்படித்தானு தெரிஞ்சும் அவங்ககிட்ட கத்தறதுல என்ன பலன்.?" என்று அவளைச் சமாதானப்படுத்த முயன்றாள் காவ்யா.
அழுகையுடன் அவளோ நானும் இத்தனை வருசம் பொறுமையா தான் இருந்தேன்.. ஆனா இவங்க திருந்தற மாதிரியே இல்ல.. இருபது வருசத்துக்கு முன்னாடி நடந்ததுக்கு இப்ப என்ன பண்ண முடியும்.? நடந்ததை மறந்து தான் ஆகணும்.. கடந்த காலத்துக்குப் போய் நடந்ததை மாத்தி விட்டுட்டா வர முடியும்.?
இவரு கல்யாணமானவருனு தெரிஞ்சும் என் அம்மா இவருகிட்ட எனத்தைப் பார்த்து மயங்கி தொலைஞ்சு இப்படி பண்ணி தொலைஞ்சாங்கனு எனக்கு தெரியல.. அவங்க பண்ணுன தப்புக்கு அவங்க சீக்கிரமே போய் சேர்ந்துட்டாங்க.. ஆனா நான் அனுபவிக்கறேன்.. என்னால அப்பாவை விட்டும் குடுக்க முடியல..சரி திட்டு வாங்குங்கனு விட்டுட்டு அமைதியா நிற்கவும் முடியல..
இத்தனை நாள் எனக்கு ஆதரவா யாருமில்லை.. இப்ப என் புருசன் இருக்கறானு தைரியத்துல தான் என்னால பேசவே முடியுது.. ஆனா அவரும் மாறன் அண்ணனை மீறி எதுவும் பண்ண மாட்டாங்கனு எனக்கு நல்லாவே தெரியும்" என்றாள் விரக்தியுடன்.
காயப்பட்ட மனது இன்னும் இன்னும் காயமாகியே போகிறது. அதற்கான மருந்தைக் காலம் தான் இவளுக்குத் தர வேண்டும். தந்தைக்கு பிறகு பிறந்த வீடு என்ற ஒன்றே இவளுக்கு இருக்குமா.? இருக்காதா.? என்பதே சந்தேகம் தான். இவளின் வாழ்வு இப்படித்தான் என்றிருக்கும் போது எப்படி மாற்றிட முடியும்.?
"ப்ச் அழுகாதீங்க ஹேமா.. அவங்க குணம் அப்படித்தானு தெரிஞ்சும் நம்ம வருத்தப்பட்டு என்னவாக போகுது.? ஒருத்தரோட பிறவிக்குணத்தை அவ்ளோ சீக்கிரம் மாத்த முடியாது.. நம்ம பக்கம் பக்கமா வசனம் பேசுனா உடனே இவரு திருந்தக்கூடிய ஆளா.? அதுக்கும் நம்மளைய தான் கத்துவாரு..
ஒருத்தரோட குணம் இதுதானு புரிஞ்சுட்டா ஒன்னு ஏத்துக்க பழகிக்கணும்.. இல்ல அவங்கள விட்டு விலகிரணும்.. உங்க உறவு விலகி போற உறவு கிடையாது.. என்ன தான் இவங்க உங்களைய பேசுனாலும் உங்க அண்ணன் இல்லைனு ஆகிடுமா.? அதே மாதிரி உங்களுக்கு தேவையானதை செய்யாம இவரும் விட்டுருவாரா.?
இத்தனை வருசம் உங்களுக்கு தேவையானதை பண்ணுனாரு.. அதே சமயம் இனி உங்க குழந்தைகளுக்குத் தாய்மாமனா அத்தனையும் சரியா செய்வாரு.. இதுவும் அவரோட குணம் தான்.. அடுத்தவங்ககிட்ட இருக்கற குறையைக் கண்டுக்காம இருக்க பழகிட்டா நமக்கு எதுவும் பெரிய பிரச்சனையாகவே தெரியாது..
முதல்ல அழுகறதை நிறுத்துங்க.. இப்ப உங்க அப்பாவைப் அப்படி பேசுனவரு தான் கொஞ்ச நேரத்துல அந்த மனுசனுக்கு இன்னும் சாப்பாடு போடாம இருக்கேனு என்னைய திட்டுவாரு.. நம்மகிட்டயும் பல குறைகள் இருக்கும் ஹேமா.. அது நமக்கு தெரியாது..
மத்தவங்க எப்படி நம்மளைய அட்ஜஸ்ட் பண்ணி போறாங்களோ அதே மாதிரி நம்மளும் அவங்களோட குறையை பெரிசா நினைக்காம அட்ஜஸ்ட் பண்ணி வாழ்றதுல தான் வாழ்க்கையே அடங்கி இருக்கு.." என்று அவளைத் தேற்றி ஒரு தெளிவையும் அளித்தாள்.
"இவரைத் தான் கல்யாணம் பண்ணுவேனு அடம்பிடிச்சு கல்யாணம் பண்ணுன உங்க மனதைரியத்தைப் பாராட்டியே ஆகணும்.. இவரை எப்படி உங்களுக்கு பிடிச்சுது.?" என்று விளையாட்டாக வினவினாள் ஹேமா.
சிரிப்புடன் காவ்யாவும் "தெரியலயே.. ஆனா பிடிச்சுருச்சு.. அதான் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்" என்றிட, ரொம்ப தைரியம் தான் அண்ணி என்றவளுக்கு இப்போது மனம் நிறைந்த புன்னகையே.
இனி அவளின் தந்தையைப் பற்றி கவலையில்லை. என்ன தான் அவரின் மேல் கோவமிருந்தாலும் நிச்சயம் அவரை தன் அண்ணன் விட்டு விட மாட்டான் என்பது மட்டும் காவ்யாவின் பேச்சில் உணர்ந்தாள். இவளால் வாய் வார்த்தைக்காக மட்டும் வேணுடுமானால் 'உங்கள என்னுடன் அழைத்துச் செல்கிறேன்' என்று இவளால் கூறிட முடியும்.
உண்மையில் அழைத்துச் சென்று வைத்துக் கொள்ள முடியுமா.? அப்படி மருமகனின் வீட்டில் வந்திருந்து இவர் பேச்சு வாங்குவதை விட மகனுடன் இருப்பதே நல்லது. அதிரன் நல்லவன் தான். ஆனால் அவனும் சராசரி ஆண்மகன் தானே.? அவனின் அன்னையின் பேச்சைக் கேட்பதிலும் தவறில்லையே..
பார்க்க யாருமில்லை என்றால் இவன் பார்க்கலாம்.. மகனிருக்கும் போது அவனின் அன்னை எப்படி விடுவார்.? அன்னை கூறுவது தவறாகவே இருந்தாலும் அவரை மீறி அவன் எப்படி எந்த செயலை செய்வான்.? பெற்ற அன்னையை விட்டு விட்டு மனைவியின் தந்தையை மட்டும் இவனால் பார்க்க இயலுமா.?
அப்படி ஓரிருவர்கள் இருக்கலாம்.. ஆனால் அனைவரும் அப்படியே இருப்பார்களா என்ன.? இது தான் நிதர்சனமும் உண்மையும் கூட. இதை நிச்சயம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
வீட்டிற்கு வந்ததும் வராததுமாக "நீயும் அடங்க மாட்ட.. உன் அண்ணனும் அடங்க மாட்டான்.. உங்களுக்கு பஞ்சாயத்து பண்ணவே எனக்கும் காவ்யாவுக்கும் நேரம் சரியா இருக்கும் போல.?" என்று அதிரன் வினவினான் விளையாட்டாக.
அவனை முறைத்த ஹேமா "நான் என்ன எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுட்டு இருக்கனா.? இத்தனை வருசம் அவங்க பேசறதை கேட்டுட்டும் அமைதியா தானே இருந்தேன்.. அப்பவும் என்னைய குறை சொல்லுவீங்களா.?"
"ப்ச் குறை சொல்லலம்மா.. அவன்கிட்ட சண்டை போட்டா உடனே எல்லாம் மாறிருமா.?"
"மாறாது தான்.. ஆனா கேட்காம இருக்க முடியாதே" என்றவளுக்கு தந்தையை நினைத்து கண்ணீர் சுரந்தது.
அவளின் அழுகையில் கரைந்தவன் அவளை லேசாக அணைத்து "நடந்தது நடந்தது தான்.. இனி எதையும் மாத்த முடியாது.. அதே மாதிரி மாறனோட குணமும் மாற போறது இல்லை.. அதுக்காக நம்ம வருந்திட்டு இருந்தா எல்லாம் சரியாகிருமா.? அவனும் கஷ்டப்பட்டுருக்கான்..
சின்ன வயசுல அப்பாங்கற ஒருத்தர் நமக்கு சொந்தமில்லைனு தெரியறப்ப அவன் மனசு என்ன பாடுபட்டிருக்கும்.. வளர வளர மத்தவங்க பேசறதை கேட்டுட்டு வளர்ந்தா அவனோட மனசும் எப்படி வலிக்கும்.? உனக்கும் காயம் இருக்கும்டா.. நான் இல்லைனு சொல்ல மாட்டேன்.. ஆனா மாறனோட குணம் இதுதானு ஆகிருச்சு..
அவன் மாற போறது இல்ல.. சோ அவன் பேச்சைக் கண்டுக்காம இருக்கறது தான் நமக்கு நல்லதுனு தோணுது.. நானே அவன்கிட்ட எத்தனை பேச்சு வாங்கறேனு தெரியுமா.? அதைய எல்லாம் வெளில சொன்னா என் வேலைக்கே அசிங்கம்.. அதுக்காக அவனை விட்டுவிட்டு போக மாட்டேன்.. ஏன்டா இப்படி பண்றேனு கேட்க தான் முடியும்.. அப்படி கேட்டாலும் உன் நொண்ணன் பதில் சொல்லிருவானா என்ன.?
அதுக்கும் கத்துவான்.. நானெல்லாம் அவனோட பேச்சுல தேவையானதை எடுத்துட்டு தேவையில்லாததை அப்பவே குப்பைல தூக்கி போட்டுருவேன்.. இனி நீயும் அப்படியே பழகிக்கோ..
உன் அப்பா திட்டு வாங்கறதும் புதுசு இல்ல.. அவருக்குப் பழகிருக்கும்.. செஞ்ச தப்புக்கு எதிர்வினைனு ஒன்னு இருக்கும்ல.? அது இது தான்.." என்று அவளைத் தேற்றினான்.
ஹேமாவுக்கும் புரிய தான் செய்தது. ஆனாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அமைதியாகவே இருந்தாள்.
"சரி அவங்க பேச்சை விடு.. அடுத்து நீ என்ன பண்ணலாம்னு இருக்க.?" என்று அவளின் எதிர்காலத்தைப் பற்றி கேட்டான். அவளுக்கென்று ஒரு அடையாளம் இருக்க வேண்டும் என்று விரும்புபவன் இவன். திருமணத்திற்கு பின்பும் வீட்டிலே அடைந்து விடக்கூடாது என்று எண்ணினான்.
"ம்ம்ம்ம்ம் நமக்குனு ஒரு குழந்தை.. நம்ம குடும்பம்னு சந்தோசமா இருக்கணும்னு நினைக்கறேன்.. வேற என்னத்த நினைக்க போறேன்.?" என்றவளை இவன் முறைத்துப் பார்த்தான்.
அதில் பெண்ணவள் முகத்தைச் சுருக்கிட,
"அப்படியே ஒன்னு விட்டனா வெய்யு எல்லாம் சரியாகிரும்.. கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்குப் போயே ஆகணும்னு ரோடுரோடா வேலைத் தேடி அலைஞ்சுட்டு இருந்த.. அதெல்லாம் மறந்துருச்சா.?"
"அது அப்ப.. இப்ப நான் ஏன் வேலைக்குப் போகணும்.? என்னைய நீங்க பார்த்துக்க மாட்டிங்களா.?"
"ஹேமா விளையாடாத.. உனக்குனு ஒரு அடையாளம் இருக்கணும்னு நான் நினைக்கறேன்.. உனக்குப் புடிச்ச வேலையை தொடர்ந்து செஞ்சா கூட போதும்.."
ஹேமாவிற்கு மனது ஒப்பவில்லை. அதிரனின் அன்னை திருமணத்திற்கு முன்பே இவளிடம் கூறி விட்டார் திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்ல கூடாது.. குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டு வீட்டில் தான் இருக்க வேண்டுமென்று.. அவளும் இதற்கு சம்மதம் என்றே கூறினாள்.
இப்போது அவரின் பேச்சை மீறி எங்ஙனம் வேலைக்குச் செல்ல முடியும்.? அவர் பேசியதை இவனிடம் கூறினால் இருவருக்கும் சண்டை வந்து விட்டால்..? வந்த கொஞ்ச நாளிலே என் மகனை என்னிடம் இருந்து பிரித்து எனக்கு எதிராக மாற்றி விட்டாயா.? என்ற வார்த்தையை இவள் கேட்க விரும்பவில்லை.
அதனால் தான் என்ன என்னமோ கூறி அதிரனைச் சமாதானப்படுத்த முயல்கறாள். இவளுக்கும் வேலைக்குச் செல்ல வேண்டும்.. தன் சம்பாதியத்தில் தன் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை தான்.
மாமியாரின் பேச்சை மீறி சென்றால் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ.? என்ற அச்சமே அவளைச் சம்மதிக்க விடவில்லை. ஆசைகளை விட வாழ்வு முக்கியமாயிற்றே.
இப்போதும் கணவனைத் தான் சமாளிக்க முயன்றாள்.
"எனக்கும் வேலைக்கு போகணும்னு ஆசை தான்.. ஆனா அதைய விட நம்ம புள்ளைகளை கூட இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.. இப்ப வேலைக்குப் போக தொடங்கி அப்பறம் மாசமான என்னால எப்படி லீவ் போட முடியும்.? லீவு முடிஞ்சதும் வேலைக்கு அரக்கபரக்க ஓடணும்.. புள்ளைகளை பார்த்துக்க நேரமும் இருக்காது..
அவங்களோட ஒவ்வொரு அசைவையும் பார்க்கவும் குடுத்து வெக்காம போயிரும்.. கண்டிப்பா எனக்குனு ஒரு அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன் தான்.. ஆனா இப்ப இல்லை.. நம்ம புள்ளைக ஒரு குறிப்பிட்ட வயசு வந்ததும்.. சாதிக்கறதுக்கு வயசு முக்கியமில்லை அதிரன்.. கண்டிப்பா உங்க ஆசையை நான் நிறைவேத்துவேன்.." என்று இப்போதைக்கு அவனைப் பேச விடாமல் செய்திருந்தாள்.
அவளின் கூற்றிலும் ஒரு வகை நியாயம் இருப்பதால் அதிரனால் பேச முடியவில்லை. சரியென்பதைப் போல் அமைதியாகி விட்டான்.
இவர்கள் எவ்வளவு முயன்றும் திருநீலகண்டன் எந்த தவறும் செய்யவில்லை என்றே தீர்ப்பு வர, எள்ளல் சிரிப்புடன் அவர் கிளம்பியும் விட்டார்.
பத்திரிகையாளர்கள் மாறனைச் சூழ்ந்துக் கொண்டு "நீங்க தப்பு செஞ்சவங்களுக்குத் தண்டனை வாங்கி தருவீங்கனு நினைச்சோம்.. ஆனா அப்படி எதுவும் நடக்கலயே.?" என்று கேட்க, "தண்டனையை நானா குடுக்க முடியும்.? அப்படி குடுக்கறதா இருந்தா எப்பவே நான் குடுத்துருப்பேன்.. என் வேலையை நான் சரியா செஞ்சுட்டேன்.. அதே மாதிரி நீங்களும் இனி உங்க வேலையைச் சரியா செஞ்சுருங்க" என்று அவர்கள் நடக்காதது எல்லாம் நடந்தது போல் எழுதுவதைச் சுட்டிக்காட்டி கூறினான்.
"சார் நாங்க எங்க வேலையைத் தான் செய்யறோம்.."
"நானும் அதைய தான் செய்ய சொல்றேன்.. என்னைய என்னம்மா பண்ண சொல்றீங்க.? என் வேலை முடிஞ்சுது.. அந்த பொண்ணுகளோட சாவு தற்கொலைனு தீர்ப்பும் வந்துருச்சு.. இனி அந்த வழக்கைக் கையில் எடுத்து என்ன பண்ண முடியும்.?"
"உங்ககிட்ட இருந்து இப்படியொரு பதில் வரும்னு நாங்க நினைக்கல சார்.."
"வேறெப்படி பதில் வரும்னு நினைச்சீங்க.?" என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகவே மாறனின் பதில் இருக்க, பாவம் அவர்களால் தான் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
அவனின் மொத்த கடுப்பையும் அவர்களின் மேல் இறக்கி வைத்தான். உண்மையும் அது தான். தவறுக்கான நீதி கிடைத்தே ஆக வேண்டும் என்றெண்ணியவன் இவன். ஆனால் வழக்கு திசைமாறி இப்போது ஒன்றுமில்லாமல் போனதை இவனால் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியவில்லை.
அந்த மீனவக்குப்பமே என்னை நம்பினார்கள்.. அவர்களின் நம்பிக்கைக்கு நான் செய்த கைம்மாறு இதுவா.? என்று அவனுக்கே அவனை நினைத்து கோவமெழுந்தது.
கமிஷ்னர் தான் அதிரனுக்கு அழைத்து மாறனை அழைத்துச் செல்ல கூறினார். இழுக்காத குறையாக அதிரனும் நண்பனை இழுத்துச் செல்ல, "ப்ச் விடுடா அவங்க கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு தான் வர முடியும்.. இப்படி பாதில வந்தா நல்லாவா இருக்கும்.?" என்று கடிந்தான்.
"நீ பதில் சொன்ன வரைக்கும் போதும் ராசா.. நீ முதல்ல வீட்டுக்குக் கிளம்புனு கமிஷ்னரே சொல்லிட்டாரு" என்றவனும் அவனைத் தனியே விடாமல் அவனுடனே கிளம்பினான்.
காசிக்கும் இது தான் நடக்கும் என்று முன்னரே தெரியும்.. அவனின் தந்தையின் மூலம் அரசியலைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் முன்னரே அறிந்து வைத்திருந்தானே.. அதனால் தான் எதிலும் அவ்வளவு ஈடுபாடுடன் கலந்துக் கொள்ளவில்லை. இவன் போராடுனாலும் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும்.
அதனால் தான் எதையும் கண்டு கொள்ளவில்லை. மாறனிடம் வேலன் பேசும்போது கூட அப்படி என்ன இவன் பேச போகிறான்.? என்ற ஆவலில் தான் மறைந்திருந்து ஒட்டுக் கேட்டான். அதுவும் தவறாகவே காணப்பட்டது.
இன்றைய காலத்தில் தவறு செய்பவர்களுக்குத் தண்டனை கிடைப்பது அரிதாக இருக்கும் போது எங்ஙனம் அதில் நம்பிக்கை வைத்து காத்திருக்க முடியும்.?
மாறனுடன் பேசியதோடு வேலன் எதுவும் செய்யவில்லை. அவனுக்குச் சற்று பயமெழுந்ததில் அமைதியாக இருந்து விட்டான் எனலாம். வள்ளியை நினைத்து வருந்தினான்.. அழுதான்.. துடித்தான்.. அது மட்டும் தான் அவனால் செய்ய முடிந்ததும். இப்போது கூட வள்ளியின் புகைப்படத்தின் அருகில் அமர்ந்து தான் புலம்பிக் கொண்டிருக்கிறான்.
"அப்படி என்ன தான் நடந்துச்சு.? ஏன் அப்படி பண்ணுனீங்க.? எல்லாம் தெரிஞ்சாலும் என்னால என்ன பண்ண முடியும்.? உங்க சாவுக்கான காரணமே வெளில வராம அப்படியே மறைஞ்சும் போயிரும் போல.? இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாதுனு புரிஞ்சுருச்சு.. என்னால தைரியமா சாகவும் முடியல.. வாழவும் மனசில்லாம இருக்கு.. எனக்கு என்ன பண்றதுனு சுத்தமா புரியல.. வள்ளி வள்ளி" என்று ஓயாமல் புலம்பி அரற்றினான்.
இனி இவர்களின் சாவும் பத்தோடு பதினொன்று தான். இரண்டு வாரங்களுக்கு இதைப் பற்றி பேசுபவர்கள் வேறொரு பிரச்சனை வந்ததும் இதை மறந்தும் விடுவார்கள். எப்படி பிறப்பு ஒரு சாதாரண நிகழ்வோ இறப்பும் அப்படியே மாறி விடுகிறது.
காலப்போக்கில் மீனவக்குப்பத்தில் மூன்று பெண்கள் இறந்தார்கள்.. அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.. இறுதியில் தற்கொலை என்று முடித்து விட்டார்கள் என்ற பேச்சு மட்டும் தலை தலைமுறையாக தொடர்ந்து பின்பு காணாமலும் போய் விடும்.
அவ்வளவுதான் இவர்களின் சாவிற்கான நீதியும். அவர்களின் பிறப்பிற்கான அர்த்தமும். முடிந்தது அவர்களின் அத்தியாயமும். இனி அதைப்பற்றி பேசினாலும் என்ன பலன்.?
இதோ ஆளும்கட்சியின் மூலம் மாறனுக்கு வேலை மாற்றலும் வந்து விட்டது. வேலையில் நேர்மையாக இருப்பவர்கள் இதை அனைத்தையும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டுமே.? கமிஷ்னரே இதை எதிர்பார்க்கவில்லை. ஆளுங்கட்சியைப் பகைத்து கொள்ள விரும்பாமல் மாறனை வேறொரு இடத்திற்கு இடமாற்றமும் செய்து அனுப்பி வைத்தார். அதில் அதிரனுக்கு பெரும் வருத்தம். இவனாலும் எதுவும் செய்ய முடியாத நிலை.
எடுத்த வழக்குகள் அனைத்தையும் திறன்பட மாறன் முடித்திருந்தாலும் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கான தண்டனை என்பது மட்டும் கேள்விக்குறியே. அதில் மட்டும் இவனின் வருத்தம் ஓய்ந்தபாடில்லை. இனியும் தீருமா.? என்பதே சந்தேகம் தான்.
வேலை மாற்றம் காரணமாக காவ்யாவும் அவனும் வேறொரு ஊருக்கு இடம் பெயர்ந்திருந்தனர். காவ்யாவின் தந்தை தான் இப்போது மாறனின் தந்தைக்குத் துணையாக இருப்பது. ஹேமாவும் அடிக்கடி வந்து விடுவதால் ஒன்றும் பெரியதாக பிரச்சனை இல்லை.
இப்போது தான் காவ்யாவும் மாறனும் பேசவே ஆரம்பித்திருந்தனர்.. அவனின் தவறுகளைச் சுட்டிக் காட்ட இவள் மறந்ததே இல்லை. அதில் சண்டை வந்தாலும் இவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து விடுவாள்.
உடனே மாறன் இறங்கி வந்து விடுவான் என்று நினைப்பது உங்களின் தவறு. இவள் தான் இறங்கி போக வேண்டியதாக இருக்கும்.
பெண்ணவளின் மூலம் இவன் சிறிது சிறிதாக மாறி விட்டான். ஆனால் தவறுக்கான தண்டனை கிடைப்பதில் நம் நாடு மாறுமா.? என்பது கேள்விக்கு
றியே.
இத்துடன் நாமும் இவர்களிடம் இருந்து விடைபெறுவோம்..
முற்றும்..
Last edited:
Author: AArani
Article Title: பாவை - 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: பாவை - 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.