Kasavu
Member
- Joined
- Apr 29, 2025
- Messages
- 45
துள்ளி குதிக்குது நெஞ்சம்
கவர் பிச்சர் பார்க்கவுமே புரிஞ்சு இருக்கும். மிடில் ஏஜ் நாயகனின் வாழ்க்கையை பற்றிய கதை தான்.
தன் வாழ்க்கையை புறம் தள்ளி, குடும்பத்துக்காக உழைச்ச ஒருத்தனோட கதை.
நவரசங்களும் இருக்கும். இந்த மாதத்துக்குள் முடிக்கணும்.
முடிச்சுடுவோம் எனும் நம்பிக்கையோட ஆரம்பிக்கிறேன்.
(அதென்ன முடிச்சுடுவோம்? இலக்கண பிழையோ? என என்ன வேண்டாம்,
வாசர்களும் சேர்ந்து கதைக்குள் பயணிச்சு முடிச்சுடுவோம்னு சொல்றேன்.)
நெஞ்சம்-1
“சந்துரு, நம்ம படிச்ச ஒட்டு பள்ளிக்கூடத்தில் ரீ யூனியன் நடக்குது. வாட்ஸ்சப் க்ரூப் ஆரம்பிச்சு இருக்காங்க. நம்ம கூட படிச்சாலே சாரு , அவளோட கடைசி தங்கை , பொழுதுக்கும் மூக்கு ஒழுக்கிட்டே இருப்பாலே, பில்லாக்குனு பட்ட பேர் வச்சமே, அந்த பொண்ணு யமுனா, அவ தான் அந்த ஸ்கூல் ஹெட் மிஸ்ட்ரெஸ்ஸா இருக்கா. பழைய ஸ்டுடன்சை தேடி, தேடி சேர்க்குறா. ஜூன் ஒன்னு கெட்டு டு கெதர்க்கு ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம். நீயும் வர்றியா, ஒரு நடை ஊருக்கு போயிட்டு வருவோம்” அவனின் இரட்டை சந்திரா மூச்சு விடாமல் பேசி கேட்க, சந்துருவாகப் பட்டவனிடம் மௌனம்.
“டேய் அண்ணா, உடன் பிறப்பே லையன்லே இருக்கியா. நான் சொல்றது காதில விழுதா “ எனக் கேட்க, தொண்டையை செருமிக் கொண்டு,
“நீ கேப் விட்டா தானடி நான் பதில் சொல்ல முடியும்” என்றான்.
“இப்ப தான் கேப் கிடைச்சதுல்ல ? ஓகே, எஸ் னு சொல்ல வேண்டியது தானே”
“ம்ப்ச். எல்லாத்தையும் முடுச்சிட்டு வரணும்டி, நோட்டீஸ் பீரியட் இருக்கு, முடியுமான்னு தெரியலை”
“இந்த கதை தானே வேணாங்குறது . மே இருபதே நீ வந்துடுவேன்னு அம்மாவும், சரயுவும் சொன்னாங்க.” கிடுக்கிப்பிடி போட
“ அதுங்க அன்புத் தொல்லை தாங்காமல் தான் மொத்தமா முடுச்சுட்டு வர்றேன். டிக்கெட் போட்டேன், ஆனாலும் வேலை இழுக்கும் போல” என்றான்.
“வந்தேன்னா, ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” அவள் க்' கு வைக்க,
“ஆமாம், அரை கிழவனுக்கு இனிமேல் வாழ்க்கையில் என்ன பெரிய சர்ப்ரைஸ். சரயுவுக்கு ஏத்த வரன் வந்தா சொல்லு.” எனவும்,
“அதுவும் தான். கெட் டு கெதர் போனா, மாப்பிள்ளையும் பார்த்துட்டு வரலாம்” என்றாள்.
“ தாத்தாவும், பேரனும் உன்னை வர விடுவாங்களா”
“அச்சோ, நான் என்ன உன்னை மாதிரி சுதந்திர பறவையா, இதுங்க தொல்லையிலிருந்து தப்பிச்சு இரண்டு நாள் ஜாலியா இருக்கலாம்னு தான், உன்னை பிடிச்சு இழுக்குறேன். நீ படுத்தாமல் வந்து சேரு”
“இவ்வளவு தைரியமா பேசுறா, அத்தான் பக்கத்தில் இல்லையா” எனச் சிரிக்க,
“ஏன் இல்லாமல், முறைச்சுகிட்டே உட்கார்ந்து இருக்கார், இந்தா பேசு” எனக் கொடுக்க,
“இவளுக்கு ஏற்றதை பார்த்தியா மாப்பிள்ளை” எடுத்தவுடன் அவர் குறை வாசிக்க, “நீங்கக் கொடுத்த இடம், அது ஏறி நிக்கிது,” எனத் தயாளனிடம் சகஜமாகப் பேசியவன், மற்றவர்களையும் விசாரித்தான். சந்திராவுக்கு இரண்டு மகள்கள், நான்கு வருடத்தில் அடுத்தடுத்து மகள்களுக்குத் திருமணம் முடித்து, பிரசவம் பார்த்து, மூச்சு விட நேரம் இல்லாமல் இருக்கிறாள்.
“உன் புண்ணியத்தில் எல்லாரும் சௌவுக்யம். சீக்கிரம் இந்தியா வந்து சேரு மாப்பிள்ளை. உனக்கு ஒரு நல்லது செஞ்சு பார்க்கலேங்குறது தான் அத்தையோட வருத்தம். அவங்க கண்ணை மூடும் முன்ன, உனக்கு ஒரு துணை தேடி வைக்கணும்னு புலம்புறாங்க” அவர் சொல்ல,
“காக்கைக்கும் தன் குஞ்சு, பொன் குஞ்சு. அம்மாக்கு என்ன வேலை” எனவும்,
“ ஏஜ் இஸ் ல நம்பர். நீ இன்னும் எலிஜிபிள் பேச்சுலர், அதை மறந்துடாதே” என்றார்.
ஹாஹாவெனச் சிரித்தவன், “ பேச்சுலர் ஓகே. எலிஜிபிள் சொல்லாதீங்க, கேட்குறவங்க சிரிச்சிடுவாங்க. ஏன் அத்தான், சந்திரா என்னோட ரெட்டை, வயசை மறந்துட்டீங்களா. ஆச்சு, சரயு கடமையும் முடிச்சுட்டேன்னா, அம்மாவை பார்த்துகிட்டு , நீங்க எல்லாரும் பக்கத்தில் இருக்கீங்களே, சுதந்திர பறவையா காலத்தை ஓட்டிடுவேன்” என்றான்.
“எப்போ பேசினாலும், எதையோ ஒன்னை சொல்லி எங்க வாயை அடைச்சுடு. ஊருக்கு வந்து சேரு, பார்த்துக்கலாம்” என்றார்.
“நீங்க பார்த்துக்கலாம்னு சொல்றது தான் பயமா இருக்கு.” எனப் பேசி சிரித்து போனை வைக்க, சந்திரா அந்த பக்கம் கண்ணீரை சேலையில் துடைத்தார்.
“ கூட பொறந்தவங்களுக்காக ஓடி, ஓடி உழைச்சே, அவன் தனியா நின்னுட்டான். நம்ம பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி பேரன் எடுத்துட்டோம், இப்போ திரும்பிப் பார்க்கும் போது , எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு” என்றாள்.
“ அஞ்சை பெத்தா, அரசனும் ஆண்டிம்பாங்க. உங்க அப்பா, அவன் தலையில பொறுப்பை சுமத்திட்டு பாதியில போயிட்டார். எந்த சாமி புண்ணியமோ, ராஜாத்தியம்மா பெத்த மக்களை கரையேற்ற, சந்திரா சேகரன் கிடைச்சான்.இருபத்தெட்டு வருஷமா ஓடுறான். பாவம் ” என்றார்.
“பாவம் தான், யார் இல்லைனு சொன்னா? அப்பா சுமையை சுமத்திட்டு போயிட்டாரேன்னு ஒரு நாள் புலம்பினது இல்லை. முகத்தை சுழிச்சது இல்லை. போதும், போதும்னு சொல்ற அளவு நிறைவா தான் செஞ்சான்.
பாரதிக்கு முடியவுமே அவனுக்கு பொண்ணு பார்க்கத் தான் செஞ்சோம். பாரதி அல்பாயிசுல சரயுவை விட்டுட்டு போகவும், அப்படியே போயிடுச்சு, அடுத்து மாலதி லவ் மேரேஜ், பிரச்சனை , கடைக்குட்டி ரதிக்கு முடிக்கும் போது, அவனுக்கு நாற்பது ஆயிடுச்சு. அப்புறம் எவ்வளவோ சொன்னோம்.
பானு, மூத்த மகளைக் கட்டி கொடுக்கிறேன்னு தான் சொன்னா. மாட்டேன்னுட்டானே” என வழக்கமான புலம்பலைப் புலம்ப,
“ அக்கா பிள்ளைகளைத் தான் பிள்ளைகள் மாதிரி வளர்கிறவன், எப்படி அதுல ஒன்னை கல்யாணம் பண்ணுவான். வயசு காலத்தில் யாரையும் மனசில நினைச்சு இருந்திருப்பானோ?” அவர் வினவ,
“ அப்படி தான் போல, ஸ்கூல் ரீ யுனியன் போனா, ஏதாவது செட் ஆகுமான்னு பார்க்கனும்” என்றாள்.
“ அறிவு இருக்கா உனக்கு, எல்லாம் உன்னை மாதிரி கிழவிகளா இருக்கும்” தயாளன் ஒரு ப்லோவில் வாயை விட
“ என்னைப் பார்த்தா கிழவி மாதிரி இருக்கா” என்ற சண்டையை ஆரம்பித்து விட, “ உனக்கு நாக்கில் சனிடா” தன்னை தானே சொல்லிக் கொள்ள, சந்திரா அர்ச்சனையை தொடர்ந்தார்.
துபாயில் தனது அப்பார்ட்மென்டில் சுய நளபாகமாகத் தோசையை வார்த்து, இரண்டு வகை இன்ஸ்டன்ட் தொக்கு, பொடியோடு சாப்பிட அமர்ந்தவனுக்கு, சந்திராவின் வார்த்தைகள் செவியில் எதிரொலித்தன.
“ நம்ம கூட படிச்சாலே சாரு , அவளோட கடைசி தங்கை , பொழுதிக்கும் மூக்கு ஒழுக்கிட்டே இருப்பாலே, பில்லாக்குனு பட்ட பேர் வச்சமே, அந்த பொண்ணு யமுனா…” என்ற அக்காள் தங்கைகளின் பெயர் அவரை கடந்த காலத்துக்கு இழுத்துச் சென்றது.
“ காதலின் தீபம் ஒன்று, ஏற்றினாலே என் நெஞ்சில்…”
தம்பிக்கு எந்த ஊரில், ரஜினிகாந்த் படு ஸ்டைலாக நடந்து வந்து பாடுவது நினைவில் வர, யூடியுபில் அந்த பாடலை ஓட விட்டு கனவுலகில் லயித்திருந்தான்.
“ நேற்று போல் இன்று இல்லை.
இன்று போல் நாளை இல்லை…
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே!...
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவுதான் ராகமே!
எண்ணம் யாவும் சொல்ல வா…” தன்னை அறியாமல் தலையைச் சிலுப்பினான், அந்த சூப்பர் ஸ்டார் ரசிகர் மன்ற தலைவன்.ஒவ்வொரு வரியும் உள்ளார்ந்து உணர்ந்து அவனில் கலந்து இருந்தது, பசுமரத்து ஆணியாய்.
கண்ணில் நீர் பளபளக்க, காய்ந்த தோசை தொண்டையில் முள்ளாய் குத்தியது. விழுங்க முடியாமல் உணவு குழாய் விட்டு இடம் மாறிய சிறு பொறி சுவாச குழாயை அடைக்க, பொறை ஏறி, கதி கலங்கிக் கண்ணும் கலங்கியது.
“ இப்படி அவசரமா திண்ணாட்டி என்னவாம்” எனக் கடிந்தபடி வளைக்கரம் அவன் தலையில் தட்டியது ஆசுவாசம் செய்ய, மூச்சு சீரானது. அன்று போல் அனிச்சையாக அவனே தலையில் தட்டிக் கொண்டான்.
அலைபேசி மணி அடித்து, புலனத்தில் செய்தி வந்திருப்பதைத் தெரிவிக்க, அவசரமாய் எடுத்துப் பார்க்க, “ஓட்டுப் பள்ளிக் கூடம் “ கருப்பில் அவனை இணைத்து விட்டிருந்தாள் அவனின் சகோதரி.
கை நடுங்க, க்ரூப் இன்பர்மேசனை பார்க்க, சந்திராவைத் தவிர எந்த எண்ணும் தெரியவில்லை.
சாட்டிங்கிற்கு வர, சந்திரா சின்ன அறிமுகத்தோடு அவனின் படத்தை புலனத்தில் பகிர்ந்திருதாள்.
“ வெல்கம் டு த க்ரூப்” அண்ணா, ப்ரோ , சகோ, டூட், பார்ட்னர் , தோழா, நண்பா, மாமா, மச்சான் என கமெண்டுகள் வரவர , பெயரும் காட்டியது.
யார் யார் என அறியும் ஆவல். தொடக்கப்பள்ளி காலத்துக்கே சென்ற உணர்வு.
அவன் போட்டோவுக்கும் நிறைய ஹார்ட்டின்.
"வயசே தெரியலை."
"சின்ன பையனாட்டம் இருக்க."
"உண்மையை சொல்லு டை தானே. என்ன ப்ராண்டு” விதவிதமாய் கமெண்டுகள்.
சந்துருவுக்கு, வெகு நாள் கழித்து
துள்ளிக் குதித்தது நெஞ்சம்!
ஒரு நயிண்டி சிக்ஸ் ,
பள்ளிக் கூடம் படம் போல்,
முதல் நீ. முடிவும் நீ! என்பது போல்
சந்துருவின் வாழ்வில் …
இளமை திரும்புமா?
மலரும் நினைவுகளாய் தொடர்வோம்.
Last edited:
Author: Kasavu
Article Title: நெஞ்சம்-1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நெஞ்சம்-1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.