நீருக்குள் பூத்த நெருப்பு
அத்தியாயம் 4
கண்ணெதிரே இருக்கின்ற
கண்ணாடிகள் எல்லாமே
முகத்தை மட்டுமே பிரதிபலிக்கும்!
அம்மா என்கிற
அன்புக் கண்ணாடி மட்டும் நம்மை
அகத்திலும் புறத்திலும்
அழகுபடுத்திக் காட்டி நிற்கும்!
அடுத்த நாள் பொழுது விடிந்தது. நிறைய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் மனதில் சுமந்து கொண்டு கண்விழித்தாள் மணிமேகலை.
மாதவி வழக்கம் போலப் பரபரவென்று வேலைகளை முடித்துவிட்டுப் பள்ளிக்குக் கிளம்பினாள்.
“ அக்கா, நிதானமாக் குளிச்சுட்டுச் சாப்பிடுங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க. சாயந்திரம் நான் வந்ததும் டீ குடிச்சுட்டு முதலில் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போறேன். அதிலருந்து ஆரம்பிச்சு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாப் பாக்கலாம். இப்ப ஆக்சுவலி ஸ்கூல் லீவு. பிளஸ் டூ பசங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கிளாஸ் நடக்குது. அதுனால நானும் சீக்கிரம் வந்துருவேன். அடுத்த மாதம் ரெகுலர் ஸ்கூல் டயம் ஆரம்பிக்கறதுக்குள்ள எல்லா இடமும் பாத்துரலாம்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள்.
“ அப்புறம் கிச்சனில் சப்பாத்தி, குருமா, தக்காளி சாதம் செஞ்சு வச்சிருக்கேன். எது பிடிக்குதோ சாப்பிடுங்க. தயிர் ஃப்ரிட்ஜில் இருக்கு. சாப்பிடும்போது எடுத்துக்கோங்க. போரடிச்சாப் பழம் நறுக்கிச் சாப்பிடுங்க” என்று கட்டளையிட்டாள்.
“ இப்படி ஒரு வேலையும் செய்யாமல் உக்காந்து உக்காந்து சாப்பிட்டுக்கிட்டே இருந்தேன்னா வெயிட் கூடிடும். நாளையில் இருந்து நானே சமைக்கறேன்”
“ போங்கக்கா, சமையல்லாம் நான்தான் செய்வேன். வந்து ஒரு நாள் கூட ஆலை. நான் சமைக்கறதைச் சாப்பிட ஆளில்லைன்னு நானே ஏங்கிட்டு இருந்தேன். நீங்க இப்போ வசமா மாட்டிருக்கீங்க. அவ்வளவு ஈஸியாத் தப்பிக்க விட்டுருவேனா உங்களை? ” என்று கேட்டுவிட்டு மணிமேகலையைப் பார்த்துக் கண்ணடிக்கத் தவறவில்லை அவள்.
காலை உணவை முடித்துக்கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்று உட்கார்ந்தாள். முதலில் செய்திகளைப் பார்த்தபோது சென்னை, திருச்சி, மதுரை பகுதிகளில் வெயிலின் கடுமை மிகவும் அதிகமாக இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. கோடைக்காலத்தில் இது மாதிரியான மலை வாசஸ்தலத்தில் தங்கியிருப்பது மிகப்பெரிய வரம் என்று நினைத்துப் பார்த்தபோது மகிழ்ச்சியாகவே இருந்தது. வாழ்க்கையில் திடீரென வந்த இந்த மாற்றம் இனிமையாகவே தொடங்கியுள்ளது.
சிறிது நேரத்தில் மாதவியிடம் இருந்து அழைப்பு வந்தது. மகிழ்ச்சியின் துள்ளல் தெரிந்தது பேச்சில்.
“ அக்கா, நீங்க ரொம்ப லக்கி தான். இங்கே ஸ்கூல் ஆஃபீஸில திடீர்னு ஒரு வேகன்ஸி வருது. இங்கே வேலை பாக்கற பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்காம். வேலையை ரிஸைன் பண்ணிட்டுப் போகப் போறாளாம். அவளோட எடத்துல உங்களால சமாளிக்க முடியுமான்னு பிரின்ஸிபல் கேக்கறாங்க. உங்களை இண்டர்வியூ எடுத்துட்டு முடிவு பண்ணுவாங்களாம். இன்னைக்கு உங்களுக்கு இண்டர்வியூ. மத்தியானம் கொஞ்சம் சீக்கிரமா லஞ்ச் சாப்பிட்டுட்டு ரெடியா இருங்க. நான் வந்து கூட்டிட்டு வரேன்” என்று படபடவென்று பொரிந்து தள்ளித் தகவல்களை அள்ளி வழங்கினாள் வள்ளலாக.
“ நல்ல விஷயம்தான். நான் ரெடியா இருக்கேன். எப்போ முடியுதோ அப்போ வா நீ” என்று கூறியபோது ஆனந்தத்தால் மனம் துள்ளியது. ஆனாலும் கூடவே, இண்டர்வியூ பற்றிய சிறிய கலக்கமும் மனதில் எழுந்தது.
‘ இளைய தலைமுறை போல சுறுசுறுப்பாக என்னால் இந்த வேலையைச் செய்ய முடியுமா? ஸ்கூலின் இண்டர்வியூ கமிட்டிக்கு அந்த உத்தரவாதத்தை எப்படி அளிக்கப் போகிறேன்? ” என்று மனதிற்குள் குமைந்தாலும்,
“ எல்லாம் பாத்துக்கலாம். மனசில் நம்பிக்கை இருந்தால் ஒவ்வொரு தடையும் பாதையில் கிடக்கும் முள் அல்லவா? எளிதாக அகற்றிவிட்டு மேலே நடக்கலாம்” என்று முடிவு செய்து பதட்டத்தைக் குறைத்துக் கொண்டாள்.
ஆனால், அங்கே இண்டர்வியூவில் மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது அவளுக்கு. மணிமேகலையை இண்டர்வியூ செய்தது அந்தப் பள்ளியின் முதல்வர் மட்டுமே. தன்னுடைய கல்விச் சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை முதல்வரிடம் காட்டினாள். அவரும் அதை வாங்கிப் பார்த்தபோது அவருடைய முகத்தில் ஏனோ ஆச்சரியம் பளிச்சிட்டது.
“ உங்களைப் பத்தி மாதவி நிறையச் சொல்லிருக்கா. பி. காம் படிச்சுட்டுக் கொஞ்ச நாட்கள் ஆடிட்டர் கிட்டப் பயிற்சி எடுத்ததாகக் கேள்விப்பட்டேன். உங்களுக்கு கம்ப்யூட்டர் அறிவு எவ்வளவு தூரம் இருக்கு? சரியானபடி கையாளத் தெரியுமா? எங்க ஸ்கூலோட கணக்கு சம்பந்தமான தகவல்களை கம்ப்யூட்டரில் ஏத்தணும். வரவு, செலவு கணக்கை மேனேஜ் பண்ணனும். பேங்க் அக்கவுண்டோட அப்ப்ப ரெகன்ஸைல் ( reconcile) பண்ணனும். இந்த வேலைகளை எவ்வளவு தூரம் உங்களால் சமாளிக்க முடியும்? தயங்காமல் சொன்னால் அதுக்கேத்தபடி உங்களுக்கு டிரெயினிங் தரலாம்”
“ நீங்க சொல்வது எல்லாமே எனக்குப் பழக்கமானது தான். ஆனால், ஒவ்வொரு ஒடத்திலயும் மெதட் சில சமயம் மாறும். அதுக்கேத்த டிரெயினிங் கெடைச்சா மேனேஜ் பண்ணிடுவேன்”
“ நல்லது. எங்க ஸ்கூலில் அக்கவுண்ட் செக்ஷனில இதையெல்லாம் பாத்துக்கற பொண்ணு வேலையை ரிஸைன் பண்ணிட்டுப் போகப்போறா. அவ போறதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு. அவ போறதுக்குள்ள நீங்க அவ கிட்டேயிருந்தே கத்துக்கலாம். அடுத்த மாசம் ஸம்மர் லீவ் முடிஞ்சு ஸ்கூல் திறக்கும்போது இங்க வேலை அதிகமாயிடும். அதுக்குள்ள வேலையை நல்லாக் கத்துக்கிட்டா நல்லது”
“ நல்லது மேடம். கண்டிப்பாக் கத்துக்கறேன். ஒரு மாசத்துல நிச்சயமாக என்னால முடியும்”
“ சரி, இன்னொரு விஷயம். கஷ்டப்பட்டு டிரெயினிங் கொடுத்து வேலையில் சேத்துகிட்டோம்னா தொடர்ந்து வேலை செய்வீங்களா? பொறுப்பை எடுத்துக்கிட்டு ரெண்டு மாசம் கழிச்சு வேலையை விடறதாச் சொன்னா நமக்கு சரிவராது. புது ஆள் தேடற அவசியம் ஏற்பட்டா ரொம்பக் கஷ்டமாயிடும் எங்களுக்கு. இந்த வேலையில் சேர்ந்தால் கொறைஞ்சது ரெண்டு வருஷமாவது இங்கே வேலை செய்வேன்னு உத்தரவாதம் தரணும். பாண்ட்( bond] எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தரணும். சம்மதமா? ”
“ சம்மதம் மேடம். இப்போ வேலையில் சேந்தா நீங்களா என்னை அனுப்பற வரைக்கும் இங்கயே இருப்பேன் ” என்று நம்பிக்கை தெறிக்கும் சொற்களைக் கூறிய மணிமேகலையைப் பார்த்துப் புன்னகை புரிந்தார் முதல்வர்.
“ சரி சரி, உங்களை நான் நம்பறேன். நம்ம அஃபிஷியல் இண்டர்வியூ முடிஞ்சது. இனிமேல் ஃப்ரண்ட்ஸாப் பேசலாமா கலை? ” என்ற முதல்வரை ஆச்சரியத்துடன் பார்த்தாள் மணிமேகலை. அவளை கலை என்று கூப்பிடுவது அவளுடன் பள்ளியில் படித்த தோழிகள் மட்டுமே. பாட்டியும், அப்பாவும் எப்போதும், “கண்ணம்மா” என்றே கூப்பிடுவார்கள். மாமனார், மாமியார் அவளை, “மேகலா” என்று கூப்பிடுவார்கள். கணவனோ, ஆசையோடு அவள் பேரைச் சொல்லி எங்கே கூப்பிட்டான்! எப்போதும்,” ஏய், இங்கே வா, போ” என்று அதிகாரத் தொனியுடன்தான் அழைப்பான். தன் நண்பர்கள் எதிரில் மட்டும், “மணிமேகலை” என்று முழுப் பெயரைச் சொல்லி அழைப்பதுண்டு. இப்போது, இந்த கலை என்கிற அழைப்பு அவளுக்குள் ஏதேதோ உணர்வுகளைக் கிளப்பியது. சிறுமியாகத் தன்னுடைய பள்ளி வளாகத்தில் சுற்ற ஆரம்பித்துவிட்டாள். எதிரில் இருந்த முதல்வர் தன்னுடைய மூக்குக் கண்ணாடியைக் கழற்றி முகத்தை முழுமையாக அவளிடம் காட்டினார்.
“ நீ, நீங்க பூரணி தானே? ” வியப்பில் விரிந்தன மணிமேகலையின் விழிகள்.
“ ஆமாம் கலை, நான் உன்னோட பூரணியே தான்” என்று சொல்லிக் கொண்டே எழுந்து வந்து தன் இரு கைகளையும் விரித்து அவளை அணைத்துக் கொண்டாள்.
“ எப்படி பூரணி, எப்படி? இத்தனை வருஷங்கள் கழிச்சு உன்னை ஸாரி உங்களை இப்படி ஒரு ஸ்கூல் பிரின்ஸிபலாச் சந்திப்பேன்னு எதிர்பாக்கவேயில்லை”
“ நீன்னே சொல்லு. நான் எல்லார் கிட்டயும் என் ஸ்கூல்மேட்னு அறிமுகம் செஞ்சு வைக்கிறேன். உன் முகத்தைப் பாத்ததும் எனக்கு சந்தேகமா இருந்தது. ஸ்கூல் சர்ட்டிஃபிகேட் பாத்ததும் உறுதியாயிடுச்சு. மாதவி என்னிடம் பேசினபோது கூட நீயா இருப்பேன்னு நான் நினைக்கவேயில்லை. எனக்குக் கீழே வேலை செய்யறதுல உனக்கு எந்த ஆக்ஷேபணையும் இல்லையே? இஷ்டம் இல்லைன்னாச் சொல்லிடு. வேற இடத்துல வேலை ஏற்பாடு பண்ணறேன்”
“ எனக்கு ஆக்ஷேபணை எதுக்கு இருக்கணும் பூரணி? என்னோட ஃப்ரண்ட் இவ்வளவு கம்பீரமா இந்த இருக்கையில் உக்காந்து இந்தப் புகழ்பெற்ற ஸ்கூலை நடத்தறான்னு நெனைச்சுப் பாக்கவே பெருமையா இருக்கு எனக்கு. உனக்குக் கீழே வேலை பாக்கற வாய்ப்பு கெடைச்சதைப் பெருமையா நெனைக்கறேன் பூரணி. மத்தவங்க எதிரில மேடம்னே கூப்பிடறேன். நாம ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது பூரணின்னு கூப்பிடறேன். அதுதான் சரி”
“ ஓகே, ஓகே, எனக்கு மனசுல பொங்கற சந்தோஷத்துல வேற எதுவும் யோசிக்கவே தோணலலை. நீ என்ன முடிவெடுத்தாலும் சரியாத்தான் எடுப்பே. எனக்குத்தான் உன்னைப் பத்தி ஸ்கூல் டேஸ்லேருந்து நல்லாத் தெரியுமே? ஆமாம், நீ எப்படி இங்கே? நீ நல்ல இடத்துல வாழ்க்கைப்பட்டுப் பணத்துல கொழிக்கறதா இல்லை கேள்விப்பட்டேன் நான்? நீ என்னடான்னா வேலை தேடிக்கிட்டு இந்த ஊருக்கு வந்துருக்கே? உன்னோட குடும்பத்தைப் பத்திச் சொல்லு” என்று கேட்டாள் பூரணி.
“ கொஞ்சம் பொறுமை காப்பாயாக பூரணி தேவி! நிதானமாப் பேசலாம். எல்லா விஷயங்களையும் உனக்கு எடுத்துச் சொல்லறேன். இப்போ இந்த நிமிஷமே என்னோட டிரெயினிங் ஆரம்பம். என்னோட குரு கிட்ட என்னைக் கூட்டிட்டுப் போய்விடு”
“ அப்படியே ஆகட்டும் தோழி” என்ற பூரணி, தனது மேசையில் இருந்த இண்டர்காமில் யாரிடமோ பேசினாள். சிறிது நேரத்தில் அங்கே நுழைந்தாள் இனியா என்கிற அந்த இளம் பெண்.
“ இனியா, இவங்க தான் மணிமேகலை. உன்னோட இடத்துல அடுத்த மாசத்துல இருந்து வேலை பாக்கப் போறாங்க. கூட்டிட்டுப் போயி உன்னோட வேலை எல்லாம் தரோவாக் கத்துக் குடும்மா” என்று சொல்ல, இனியாவும் உற்சாகத்துடன் தன்னுடைய அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றாள்.
கற்பூர புத்தியுடைய மணிமேகலை, கப்பென்று பிடித்துக் கொண்டாள். எல்லா வேலைகளும் புரிபட ஆரம்பித்தன. கற்றுக் கொள்பவர் நேர்த்தியாகக் கற்றுக் கொள்ளும் போது கற்றுக் கொடுப்பவருக்கும் ஒரு தனி உற்சாகம் கிளம்பிவிடுகிறதல்லவா? இனியாவுக்கும் மணிமேகலைக்குள் நடுவில் நல்லதொரு நட்பு உருவாகத் தொடங்கியது அன்று.
பள்ளியில் இருந்து கிளம்பும்போது பூரணியிடம் விடை பெறுவதற்காக அவளுடைய அறைக்குச் சென்றாள் மணிமேகலை.
“ கலை, இன்னைக்கு நைட் டின்னர் எங்க வீட்டுல தான் உங்க ரெண்டு பேருக்கும். நீயும், மாதவியும் ஏழு மணிக்கு வந்துடுங்க. அரட்டை அடிக்கலாம். டின்னரை முடிச்சுட்டுப் பழைய கதையெல்லாம் பேசலாம். என்னைப் பத்தியும் உங்கிட்ட நிறையச் சொல்லணும்” என்று பூரணி கூறியபோது சிறிது நேரம் தயங்கினாள் மணிமேகலை. ஆனால் உடனேயே தலையாட்டி சம்மதம் தெரிவித்துவிட்டு வெளியே வந்தாள். அன்போடு கூப்பிட்ட தோழியின் அழைப்பை மறுக்க முடியவில்லை மணிமேகலையால்.
“ பரவாயில்லையே அக்கா. நான் உங்களுக்கு ரெகமண்ட் பண்ணப் போய் இப்ப நீங்க எனக்கு ரெகமண்ட் பண்ணறமாதிரி ஸீன் மாறிப் போயிடுச்சே! உங்க கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு. மந்திரவாதி மந்திரக்கோலைச் சுத்தறமாதிரி நீங்க அப்படி, இப்படித் திரும்பினாலே மேஜிக் மாதிரி எல்லாம் தானாவே பொலபொலன்னு மழையாக் கொட்டுது. பிடிச்சாலும் பிடிச்சீங்க, புளியங்கொம்பா இல்லை பிடிச்சிருக்கீங்க! வந்த அன்னைக்கே ஸ்கூல் பிரின்ஸிபல் டின்னருக்குக் கூப்பிட்டுருக்காங்க. கூடத்துக்கு விடிஞ்சாத் தாழ்வாரத்துக்கும் விடியுங்கற மாதிரி உங்க டின்னரில் நானும் கலந்துக்கப் போறேன்” என்று கலாய்த்தாள் மாதவி.
“ அட போடி போ, பூரணி என்னோட ஸ்கூல் ஃப்ரண்டா வந்து மாட்டுவான்னு எனக்கென்ன ஜோசியமாத் தெரியும்? நல்லதாப் போச்சு ஒரு விதத்தில். வேற வேலைக்கு அலையவேணாம் பிளஸ் என்னோட பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேப்பா பூரணி. புரிஞ்சுக்க முயற்சி செய்வா. நீ என்னை கொடைக்கானல் கூட்டிட்டு வந்தது ஒரு விதத்தில் நல்லதாவே முடிஞ்சிருக்கு. எத்தனையோ வருஷங்கள் கழிச்சு என் ஃப்ரண்டைச் சந்திக்கற வாய்ப்பு உன்னால தானே எனக்குக் கிடைச்சிருக்கு? நீ தான் எனக்கு அதிர்ஷ்ட தேவதை மாதவி” என்று மணிமேகலை உருக, இரண்டு பேரும் நெகிழ்ந்துபோய் நின்றார்கள்.
வீட்டில் தேநீர் அருந்தி விட்டுக் கடைக்குப் போய் மணிமேகலைக்குத் தேவையான ஸ்வெட்டர்கள், ஷால், காலுக்கு ஷு, ஸாக்ஸ் எல்லாம் வாங்கிக் கொண்டார்கள். அப்போது அவ்வளவாகக் குளிர் இல்லை என்றாலும் இரவிலும், அதிகாலையிலும் வாக்கிங் போனால் வேண்டியிருக்கும் என்று வற்புறுத்தி வாங்க வைத்தாள் மாதவி. பணம் தர விடவில்லை மணிமேகலையை. தானே கடைகளில் பணத்தைக் கொடுத்துவிட்டாள்.
மணிமேகலையும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தத் தயங்கினாள். அதை வைத்துத் தன்னைத் தேடிக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று அஞ்சினாள். மொபைலையும் வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தாள். மாதவி வாங்கிக் கொடுத்த புதிய மொபைலைத் தான் இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள். கணவனைக் கண்டு பயப்படவில்லை மணிமேகலை. ஆனால் தன்னுடைய நடவடிக்கைகளை அவனிடமிருந்து சிறிது காலத்திற்கு மறைக்க நினைத்தாள்.
கணவனைச் சாராமல் தன்னால் சுதந்திரமாக வாழ்க்கையில் காலூன்றி நின்று ஜெயிக்க முடியும் என்று அவனிடம் நிரூபிக்க நினைத்தாள். அவ்வளவுதான். அங்கிருந்து குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குப் போய் முருகனைத் தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்கள் இருவரும்.
பூரணியின் வீடு சற்றே பெரியதாகவும் வசதியாகவும் இருந்தது. அவளுக்கென்று சமையல்காரர் இருந்தார். வீட்டில் இருந்த கராஜில் வெள்ளை நிற இன்னோவா கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. டிரைவரும் நியமிக்கப் பட்டிருந்தார்.
இரவு நேரத்திற்கேற்ற எளிமையான உணவு. சப்பாத்தி, தால் மற்றும் ஒரு சப்ஜியுடன் சிறிதளவு சாதம், தயிர், பழங்கள் என்று அனைத்து வகைகளும் சாப்பாட்டு மேசையை அலங்கரித்தன. சாப்பிட்டு முடித்ததும் வெளியே இருந்த புல்வெளியில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் மாதவி கிளம்பி விட்டாள். அடுத்த நாள் வகுப்பில் நடத்த வேண்டிய தேர்விற்காக வினாத்தாளைத் தயார் செய்ய வேண்டும் என்று அவள் வைத்த நியாயமான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டது.
வேண்டுமென்றே ஒரு காரணத்தை முன்வைத்து அதே சாக்காக அங்கிருந்து கிளம்ப நினைத்தாள் மாதவி. தோழிகளுக்குத் தனிமையைத் தரவே விரும்பினாள். மற்ற இருவருக்கும் அது புரிந்து தானிருந்தது.
“ நானே கொஞ்ச நேரம் கழிச்சு உன்னோட அக்காவை வீட்டில் கொண்டு வந்து விட்டுடறேன். கவலைப்படாமல் போயிட்டு வா மாதவி” என்று புன்னகையுடன் விடை கொடுத்தாள் பூரணி.
இரண்டு பேரும் மனம் விட்டுப் பேச ஆரம்பித்தார்கள். நேரம் நீண்டுகொண்டே சென்றது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு விடைகள் என்னவோ முழுமையாகக் கிடைக்கவில்லை.
“ பூரணி, உன் சித்தியோட கொடுமையில் இருந்து எப்படித் தப்பிச்சே நீ? எப்படி இந்த உயரத்தை அடைய முடிஞ்சது? கல்யாணம், குடும்பம்லாம் வேண்டாம்னு முடிவெடுத்துட்டயா என்ன ? ” என்று கேள்விகளை அடுக்கினாள் மணிமேகலை.
அந்தக் கேள்விகளின் பதில்களில் பூரணியின் கடந்தகாலம் ம
ணிமேகலையின் கண் முன்னே விரிந்தது.
தொடரும்,
திருபுவனம் நெசவாளி.
அத்தியாயம் 4
கண்ணெதிரே இருக்கின்ற
கண்ணாடிகள் எல்லாமே
முகத்தை மட்டுமே பிரதிபலிக்கும்!
அம்மா என்கிற
அன்புக் கண்ணாடி மட்டும் நம்மை
அகத்திலும் புறத்திலும்
அழகுபடுத்திக் காட்டி நிற்கும்!
அடுத்த நாள் பொழுது விடிந்தது. நிறைய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் மனதில் சுமந்து கொண்டு கண்விழித்தாள் மணிமேகலை.
மாதவி வழக்கம் போலப் பரபரவென்று வேலைகளை முடித்துவிட்டுப் பள்ளிக்குக் கிளம்பினாள்.
“ அக்கா, நிதானமாக் குளிச்சுட்டுச் சாப்பிடுங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க. சாயந்திரம் நான் வந்ததும் டீ குடிச்சுட்டு முதலில் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போறேன். அதிலருந்து ஆரம்பிச்சு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாப் பாக்கலாம். இப்ப ஆக்சுவலி ஸ்கூல் லீவு. பிளஸ் டூ பசங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கிளாஸ் நடக்குது. அதுனால நானும் சீக்கிரம் வந்துருவேன். அடுத்த மாதம் ரெகுலர் ஸ்கூல் டயம் ஆரம்பிக்கறதுக்குள்ள எல்லா இடமும் பாத்துரலாம்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள்.
“ அப்புறம் கிச்சனில் சப்பாத்தி, குருமா, தக்காளி சாதம் செஞ்சு வச்சிருக்கேன். எது பிடிக்குதோ சாப்பிடுங்க. தயிர் ஃப்ரிட்ஜில் இருக்கு. சாப்பிடும்போது எடுத்துக்கோங்க. போரடிச்சாப் பழம் நறுக்கிச் சாப்பிடுங்க” என்று கட்டளையிட்டாள்.
“ இப்படி ஒரு வேலையும் செய்யாமல் உக்காந்து உக்காந்து சாப்பிட்டுக்கிட்டே இருந்தேன்னா வெயிட் கூடிடும். நாளையில் இருந்து நானே சமைக்கறேன்”
“ போங்கக்கா, சமையல்லாம் நான்தான் செய்வேன். வந்து ஒரு நாள் கூட ஆலை. நான் சமைக்கறதைச் சாப்பிட ஆளில்லைன்னு நானே ஏங்கிட்டு இருந்தேன். நீங்க இப்போ வசமா மாட்டிருக்கீங்க. அவ்வளவு ஈஸியாத் தப்பிக்க விட்டுருவேனா உங்களை? ” என்று கேட்டுவிட்டு மணிமேகலையைப் பார்த்துக் கண்ணடிக்கத் தவறவில்லை அவள்.
காலை உணவை முடித்துக்கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்று உட்கார்ந்தாள். முதலில் செய்திகளைப் பார்த்தபோது சென்னை, திருச்சி, மதுரை பகுதிகளில் வெயிலின் கடுமை மிகவும் அதிகமாக இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. கோடைக்காலத்தில் இது மாதிரியான மலை வாசஸ்தலத்தில் தங்கியிருப்பது மிகப்பெரிய வரம் என்று நினைத்துப் பார்த்தபோது மகிழ்ச்சியாகவே இருந்தது. வாழ்க்கையில் திடீரென வந்த இந்த மாற்றம் இனிமையாகவே தொடங்கியுள்ளது.
சிறிது நேரத்தில் மாதவியிடம் இருந்து அழைப்பு வந்தது. மகிழ்ச்சியின் துள்ளல் தெரிந்தது பேச்சில்.
“ அக்கா, நீங்க ரொம்ப லக்கி தான். இங்கே ஸ்கூல் ஆஃபீஸில திடீர்னு ஒரு வேகன்ஸி வருது. இங்கே வேலை பாக்கற பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்காம். வேலையை ரிஸைன் பண்ணிட்டுப் போகப் போறாளாம். அவளோட எடத்துல உங்களால சமாளிக்க முடியுமான்னு பிரின்ஸிபல் கேக்கறாங்க. உங்களை இண்டர்வியூ எடுத்துட்டு முடிவு பண்ணுவாங்களாம். இன்னைக்கு உங்களுக்கு இண்டர்வியூ. மத்தியானம் கொஞ்சம் சீக்கிரமா லஞ்ச் சாப்பிட்டுட்டு ரெடியா இருங்க. நான் வந்து கூட்டிட்டு வரேன்” என்று படபடவென்று பொரிந்து தள்ளித் தகவல்களை அள்ளி வழங்கினாள் வள்ளலாக.
“ நல்ல விஷயம்தான். நான் ரெடியா இருக்கேன். எப்போ முடியுதோ அப்போ வா நீ” என்று கூறியபோது ஆனந்தத்தால் மனம் துள்ளியது. ஆனாலும் கூடவே, இண்டர்வியூ பற்றிய சிறிய கலக்கமும் மனதில் எழுந்தது.
‘ இளைய தலைமுறை போல சுறுசுறுப்பாக என்னால் இந்த வேலையைச் செய்ய முடியுமா? ஸ்கூலின் இண்டர்வியூ கமிட்டிக்கு அந்த உத்தரவாதத்தை எப்படி அளிக்கப் போகிறேன்? ” என்று மனதிற்குள் குமைந்தாலும்,
“ எல்லாம் பாத்துக்கலாம். மனசில் நம்பிக்கை இருந்தால் ஒவ்வொரு தடையும் பாதையில் கிடக்கும் முள் அல்லவா? எளிதாக அகற்றிவிட்டு மேலே நடக்கலாம்” என்று முடிவு செய்து பதட்டத்தைக் குறைத்துக் கொண்டாள்.
ஆனால், அங்கே இண்டர்வியூவில் மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது அவளுக்கு. மணிமேகலையை இண்டர்வியூ செய்தது அந்தப் பள்ளியின் முதல்வர் மட்டுமே. தன்னுடைய கல்விச் சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை முதல்வரிடம் காட்டினாள். அவரும் அதை வாங்கிப் பார்த்தபோது அவருடைய முகத்தில் ஏனோ ஆச்சரியம் பளிச்சிட்டது.
“ உங்களைப் பத்தி மாதவி நிறையச் சொல்லிருக்கா. பி. காம் படிச்சுட்டுக் கொஞ்ச நாட்கள் ஆடிட்டர் கிட்டப் பயிற்சி எடுத்ததாகக் கேள்விப்பட்டேன். உங்களுக்கு கம்ப்யூட்டர் அறிவு எவ்வளவு தூரம் இருக்கு? சரியானபடி கையாளத் தெரியுமா? எங்க ஸ்கூலோட கணக்கு சம்பந்தமான தகவல்களை கம்ப்யூட்டரில் ஏத்தணும். வரவு, செலவு கணக்கை மேனேஜ் பண்ணனும். பேங்க் அக்கவுண்டோட அப்ப்ப ரெகன்ஸைல் ( reconcile) பண்ணனும். இந்த வேலைகளை எவ்வளவு தூரம் உங்களால் சமாளிக்க முடியும்? தயங்காமல் சொன்னால் அதுக்கேத்தபடி உங்களுக்கு டிரெயினிங் தரலாம்”
“ நீங்க சொல்வது எல்லாமே எனக்குப் பழக்கமானது தான். ஆனால், ஒவ்வொரு ஒடத்திலயும் மெதட் சில சமயம் மாறும். அதுக்கேத்த டிரெயினிங் கெடைச்சா மேனேஜ் பண்ணிடுவேன்”
“ நல்லது. எங்க ஸ்கூலில் அக்கவுண்ட் செக்ஷனில இதையெல்லாம் பாத்துக்கற பொண்ணு வேலையை ரிஸைன் பண்ணிட்டுப் போகப்போறா. அவ போறதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு. அவ போறதுக்குள்ள நீங்க அவ கிட்டேயிருந்தே கத்துக்கலாம். அடுத்த மாசம் ஸம்மர் லீவ் முடிஞ்சு ஸ்கூல் திறக்கும்போது இங்க வேலை அதிகமாயிடும். அதுக்குள்ள வேலையை நல்லாக் கத்துக்கிட்டா நல்லது”
“ நல்லது மேடம். கண்டிப்பாக் கத்துக்கறேன். ஒரு மாசத்துல நிச்சயமாக என்னால முடியும்”
“ சரி, இன்னொரு விஷயம். கஷ்டப்பட்டு டிரெயினிங் கொடுத்து வேலையில் சேத்துகிட்டோம்னா தொடர்ந்து வேலை செய்வீங்களா? பொறுப்பை எடுத்துக்கிட்டு ரெண்டு மாசம் கழிச்சு வேலையை விடறதாச் சொன்னா நமக்கு சரிவராது. புது ஆள் தேடற அவசியம் ஏற்பட்டா ரொம்பக் கஷ்டமாயிடும் எங்களுக்கு. இந்த வேலையில் சேர்ந்தால் கொறைஞ்சது ரெண்டு வருஷமாவது இங்கே வேலை செய்வேன்னு உத்தரவாதம் தரணும். பாண்ட்( bond] எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தரணும். சம்மதமா? ”
“ சம்மதம் மேடம். இப்போ வேலையில் சேந்தா நீங்களா என்னை அனுப்பற வரைக்கும் இங்கயே இருப்பேன் ” என்று நம்பிக்கை தெறிக்கும் சொற்களைக் கூறிய மணிமேகலையைப் பார்த்துப் புன்னகை புரிந்தார் முதல்வர்.
“ சரி சரி, உங்களை நான் நம்பறேன். நம்ம அஃபிஷியல் இண்டர்வியூ முடிஞ்சது. இனிமேல் ஃப்ரண்ட்ஸாப் பேசலாமா கலை? ” என்ற முதல்வரை ஆச்சரியத்துடன் பார்த்தாள் மணிமேகலை. அவளை கலை என்று கூப்பிடுவது அவளுடன் பள்ளியில் படித்த தோழிகள் மட்டுமே. பாட்டியும், அப்பாவும் எப்போதும், “கண்ணம்மா” என்றே கூப்பிடுவார்கள். மாமனார், மாமியார் அவளை, “மேகலா” என்று கூப்பிடுவார்கள். கணவனோ, ஆசையோடு அவள் பேரைச் சொல்லி எங்கே கூப்பிட்டான்! எப்போதும்,” ஏய், இங்கே வா, போ” என்று அதிகாரத் தொனியுடன்தான் அழைப்பான். தன் நண்பர்கள் எதிரில் மட்டும், “மணிமேகலை” என்று முழுப் பெயரைச் சொல்லி அழைப்பதுண்டு. இப்போது, இந்த கலை என்கிற அழைப்பு அவளுக்குள் ஏதேதோ உணர்வுகளைக் கிளப்பியது. சிறுமியாகத் தன்னுடைய பள்ளி வளாகத்தில் சுற்ற ஆரம்பித்துவிட்டாள். எதிரில் இருந்த முதல்வர் தன்னுடைய மூக்குக் கண்ணாடியைக் கழற்றி முகத்தை முழுமையாக அவளிடம் காட்டினார்.
“ நீ, நீங்க பூரணி தானே? ” வியப்பில் விரிந்தன மணிமேகலையின் விழிகள்.
“ ஆமாம் கலை, நான் உன்னோட பூரணியே தான்” என்று சொல்லிக் கொண்டே எழுந்து வந்து தன் இரு கைகளையும் விரித்து அவளை அணைத்துக் கொண்டாள்.
“ எப்படி பூரணி, எப்படி? இத்தனை வருஷங்கள் கழிச்சு உன்னை ஸாரி உங்களை இப்படி ஒரு ஸ்கூல் பிரின்ஸிபலாச் சந்திப்பேன்னு எதிர்பாக்கவேயில்லை”
“ நீன்னே சொல்லு. நான் எல்லார் கிட்டயும் என் ஸ்கூல்மேட்னு அறிமுகம் செஞ்சு வைக்கிறேன். உன் முகத்தைப் பாத்ததும் எனக்கு சந்தேகமா இருந்தது. ஸ்கூல் சர்ட்டிஃபிகேட் பாத்ததும் உறுதியாயிடுச்சு. மாதவி என்னிடம் பேசினபோது கூட நீயா இருப்பேன்னு நான் நினைக்கவேயில்லை. எனக்குக் கீழே வேலை செய்யறதுல உனக்கு எந்த ஆக்ஷேபணையும் இல்லையே? இஷ்டம் இல்லைன்னாச் சொல்லிடு. வேற இடத்துல வேலை ஏற்பாடு பண்ணறேன்”
“ எனக்கு ஆக்ஷேபணை எதுக்கு இருக்கணும் பூரணி? என்னோட ஃப்ரண்ட் இவ்வளவு கம்பீரமா இந்த இருக்கையில் உக்காந்து இந்தப் புகழ்பெற்ற ஸ்கூலை நடத்தறான்னு நெனைச்சுப் பாக்கவே பெருமையா இருக்கு எனக்கு. உனக்குக் கீழே வேலை பாக்கற வாய்ப்பு கெடைச்சதைப் பெருமையா நெனைக்கறேன் பூரணி. மத்தவங்க எதிரில மேடம்னே கூப்பிடறேன். நாம ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது பூரணின்னு கூப்பிடறேன். அதுதான் சரி”
“ ஓகே, ஓகே, எனக்கு மனசுல பொங்கற சந்தோஷத்துல வேற எதுவும் யோசிக்கவே தோணலலை. நீ என்ன முடிவெடுத்தாலும் சரியாத்தான் எடுப்பே. எனக்குத்தான் உன்னைப் பத்தி ஸ்கூல் டேஸ்லேருந்து நல்லாத் தெரியுமே? ஆமாம், நீ எப்படி இங்கே? நீ நல்ல இடத்துல வாழ்க்கைப்பட்டுப் பணத்துல கொழிக்கறதா இல்லை கேள்விப்பட்டேன் நான்? நீ என்னடான்னா வேலை தேடிக்கிட்டு இந்த ஊருக்கு வந்துருக்கே? உன்னோட குடும்பத்தைப் பத்திச் சொல்லு” என்று கேட்டாள் பூரணி.
“ கொஞ்சம் பொறுமை காப்பாயாக பூரணி தேவி! நிதானமாப் பேசலாம். எல்லா விஷயங்களையும் உனக்கு எடுத்துச் சொல்லறேன். இப்போ இந்த நிமிஷமே என்னோட டிரெயினிங் ஆரம்பம். என்னோட குரு கிட்ட என்னைக் கூட்டிட்டுப் போய்விடு”
“ அப்படியே ஆகட்டும் தோழி” என்ற பூரணி, தனது மேசையில் இருந்த இண்டர்காமில் யாரிடமோ பேசினாள். சிறிது நேரத்தில் அங்கே நுழைந்தாள் இனியா என்கிற அந்த இளம் பெண்.
“ இனியா, இவங்க தான் மணிமேகலை. உன்னோட இடத்துல அடுத்த மாசத்துல இருந்து வேலை பாக்கப் போறாங்க. கூட்டிட்டுப் போயி உன்னோட வேலை எல்லாம் தரோவாக் கத்துக் குடும்மா” என்று சொல்ல, இனியாவும் உற்சாகத்துடன் தன்னுடைய அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றாள்.
கற்பூர புத்தியுடைய மணிமேகலை, கப்பென்று பிடித்துக் கொண்டாள். எல்லா வேலைகளும் புரிபட ஆரம்பித்தன. கற்றுக் கொள்பவர் நேர்த்தியாகக் கற்றுக் கொள்ளும் போது கற்றுக் கொடுப்பவருக்கும் ஒரு தனி உற்சாகம் கிளம்பிவிடுகிறதல்லவா? இனியாவுக்கும் மணிமேகலைக்குள் நடுவில் நல்லதொரு நட்பு உருவாகத் தொடங்கியது அன்று.
பள்ளியில் இருந்து கிளம்பும்போது பூரணியிடம் விடை பெறுவதற்காக அவளுடைய அறைக்குச் சென்றாள் மணிமேகலை.
“ கலை, இன்னைக்கு நைட் டின்னர் எங்க வீட்டுல தான் உங்க ரெண்டு பேருக்கும். நீயும், மாதவியும் ஏழு மணிக்கு வந்துடுங்க. அரட்டை அடிக்கலாம். டின்னரை முடிச்சுட்டுப் பழைய கதையெல்லாம் பேசலாம். என்னைப் பத்தியும் உங்கிட்ட நிறையச் சொல்லணும்” என்று பூரணி கூறியபோது சிறிது நேரம் தயங்கினாள் மணிமேகலை. ஆனால் உடனேயே தலையாட்டி சம்மதம் தெரிவித்துவிட்டு வெளியே வந்தாள். அன்போடு கூப்பிட்ட தோழியின் அழைப்பை மறுக்க முடியவில்லை மணிமேகலையால்.
“ பரவாயில்லையே அக்கா. நான் உங்களுக்கு ரெகமண்ட் பண்ணப் போய் இப்ப நீங்க எனக்கு ரெகமண்ட் பண்ணறமாதிரி ஸீன் மாறிப் போயிடுச்சே! உங்க கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு. மந்திரவாதி மந்திரக்கோலைச் சுத்தறமாதிரி நீங்க அப்படி, இப்படித் திரும்பினாலே மேஜிக் மாதிரி எல்லாம் தானாவே பொலபொலன்னு மழையாக் கொட்டுது. பிடிச்சாலும் பிடிச்சீங்க, புளியங்கொம்பா இல்லை பிடிச்சிருக்கீங்க! வந்த அன்னைக்கே ஸ்கூல் பிரின்ஸிபல் டின்னருக்குக் கூப்பிட்டுருக்காங்க. கூடத்துக்கு விடிஞ்சாத் தாழ்வாரத்துக்கும் விடியுங்கற மாதிரி உங்க டின்னரில் நானும் கலந்துக்கப் போறேன்” என்று கலாய்த்தாள் மாதவி.
“ அட போடி போ, பூரணி என்னோட ஸ்கூல் ஃப்ரண்டா வந்து மாட்டுவான்னு எனக்கென்ன ஜோசியமாத் தெரியும்? நல்லதாப் போச்சு ஒரு விதத்தில். வேற வேலைக்கு அலையவேணாம் பிளஸ் என்னோட பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேப்பா பூரணி. புரிஞ்சுக்க முயற்சி செய்வா. நீ என்னை கொடைக்கானல் கூட்டிட்டு வந்தது ஒரு விதத்தில் நல்லதாவே முடிஞ்சிருக்கு. எத்தனையோ வருஷங்கள் கழிச்சு என் ஃப்ரண்டைச் சந்திக்கற வாய்ப்பு உன்னால தானே எனக்குக் கிடைச்சிருக்கு? நீ தான் எனக்கு அதிர்ஷ்ட தேவதை மாதவி” என்று மணிமேகலை உருக, இரண்டு பேரும் நெகிழ்ந்துபோய் நின்றார்கள்.
வீட்டில் தேநீர் அருந்தி விட்டுக் கடைக்குப் போய் மணிமேகலைக்குத் தேவையான ஸ்வெட்டர்கள், ஷால், காலுக்கு ஷு, ஸாக்ஸ் எல்லாம் வாங்கிக் கொண்டார்கள். அப்போது அவ்வளவாகக் குளிர் இல்லை என்றாலும் இரவிலும், அதிகாலையிலும் வாக்கிங் போனால் வேண்டியிருக்கும் என்று வற்புறுத்தி வாங்க வைத்தாள் மாதவி. பணம் தர விடவில்லை மணிமேகலையை. தானே கடைகளில் பணத்தைக் கொடுத்துவிட்டாள்.
மணிமேகலையும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தத் தயங்கினாள். அதை வைத்துத் தன்னைத் தேடிக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று அஞ்சினாள். மொபைலையும் வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தாள். மாதவி வாங்கிக் கொடுத்த புதிய மொபைலைத் தான் இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள். கணவனைக் கண்டு பயப்படவில்லை மணிமேகலை. ஆனால் தன்னுடைய நடவடிக்கைகளை அவனிடமிருந்து சிறிது காலத்திற்கு மறைக்க நினைத்தாள்.
கணவனைச் சாராமல் தன்னால் சுதந்திரமாக வாழ்க்கையில் காலூன்றி நின்று ஜெயிக்க முடியும் என்று அவனிடம் நிரூபிக்க நினைத்தாள். அவ்வளவுதான். அங்கிருந்து குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குப் போய் முருகனைத் தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்கள் இருவரும்.
பூரணியின் வீடு சற்றே பெரியதாகவும் வசதியாகவும் இருந்தது. அவளுக்கென்று சமையல்காரர் இருந்தார். வீட்டில் இருந்த கராஜில் வெள்ளை நிற இன்னோவா கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. டிரைவரும் நியமிக்கப் பட்டிருந்தார்.
இரவு நேரத்திற்கேற்ற எளிமையான உணவு. சப்பாத்தி, தால் மற்றும் ஒரு சப்ஜியுடன் சிறிதளவு சாதம், தயிர், பழங்கள் என்று அனைத்து வகைகளும் சாப்பாட்டு மேசையை அலங்கரித்தன. சாப்பிட்டு முடித்ததும் வெளியே இருந்த புல்வெளியில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் மாதவி கிளம்பி விட்டாள். அடுத்த நாள் வகுப்பில் நடத்த வேண்டிய தேர்விற்காக வினாத்தாளைத் தயார் செய்ய வேண்டும் என்று அவள் வைத்த நியாயமான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டது.
வேண்டுமென்றே ஒரு காரணத்தை முன்வைத்து அதே சாக்காக அங்கிருந்து கிளம்ப நினைத்தாள் மாதவி. தோழிகளுக்குத் தனிமையைத் தரவே விரும்பினாள். மற்ற இருவருக்கும் அது புரிந்து தானிருந்தது.
“ நானே கொஞ்ச நேரம் கழிச்சு உன்னோட அக்காவை வீட்டில் கொண்டு வந்து விட்டுடறேன். கவலைப்படாமல் போயிட்டு வா மாதவி” என்று புன்னகையுடன் விடை கொடுத்தாள் பூரணி.
இரண்டு பேரும் மனம் விட்டுப் பேச ஆரம்பித்தார்கள். நேரம் நீண்டுகொண்டே சென்றது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு விடைகள் என்னவோ முழுமையாகக் கிடைக்கவில்லை.
“ பூரணி, உன் சித்தியோட கொடுமையில் இருந்து எப்படித் தப்பிச்சே நீ? எப்படி இந்த உயரத்தை அடைய முடிஞ்சது? கல்யாணம், குடும்பம்லாம் வேண்டாம்னு முடிவெடுத்துட்டயா என்ன ? ” என்று கேள்விகளை அடுக்கினாள் மணிமேகலை.
அந்தக் கேள்விகளின் பதில்களில் பூரணியின் கடந்தகாலம் ம
ணிமேகலையின் கண் முன்னே விரிந்தது.
தொடரும்,
திருபுவனம் நெசவாளி.
Author: SudhaSri
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு -4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு -4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.