தொட்டுத் தொடரும் -29
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்
மியூசிக் அகாடமியில் இருந்து கிளம்பிய வத்ஸன்- பார்கவி ஜோடி மணி இரவு ஏழு தான் ஆகி இருக்க முதலில் கோவிலுக்குச் செல்வது என்று முடிவெடுத்தார்கள். தங்களது வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என்று கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் உளமார வேண்டிக் கொண்டவர்கள், எங்கே சென்று பேசுவது என்று தெரியாமல் முழித்தார்கள்.
மிக அருகிலேயே உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை இருக்க, அவர்களுக்கு கூட்டத்தின் நடுவே அமர்ந்து பேச இஷ்டமில்லை. அடுத்து வத்ஸனின் கார் சென்ற இடம் “கைதி கிச்சன்” என்ற சிறைச்சாலை போன்ற அமைப்பில் செய்யப்பட்ட வெஜிடேரியன் ரெஸ்டாரன்ட். நீயும் நானும் கல்யாணத்தில் கைதிகளாவோம் என்று மறைமுகமாக பார்கவியிடம் சொல்ல நினைத்தானோ?
அந்த ரெஸ்டாரன்ட்டுக்கு நண்பர்களுடன் அடிக்கடி வந்த பழக்கம் இருவருக்கும் இருக்க, உணவும் பிடித்தமானதாகவே இருந்தது.
அமைதியாக மெனுகார்டை அவளிடம் தள்ளிவிட்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனிடம், “என்ன அத்தான்? நீங்க கைதியாக ரெடின்னு சொல்றீங்களா? இல்லை என்னைக் கைது செய்ய ரெடின்னு சொல்றீங்களா?” பார்கவியால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
வத்ஸன் பதில் எதுவும் பேசாமல் புன்னகைத்தான். சற்று நேரம் கழித்து, “நீ என்ன நினைக்கிற?” என்றான் மொட்டையாக.
“என்னத்த நினைக்கறதுன்னு தெரியலையே, திடீர்னு அபி அண்ணாவும் அண்ணியும் வந்து ப்ரோகிராம் ஃபிக்ஸ் பண்ணலாம்னு சொன்னாங்க. அத்தையப் பத்தி சில விஷயங்களை சொன்னாங்க. இது தான் ரைட் டைம் எல்லாரையும் கூப்பிடலாம்னு சொல்லி அவங்களே எல்லாத்தையும் பிளான் பண்ணி, ஹப்பா எல்லாம் ஏதோ மேஜிக் மாதிரி இருக்கு.
நாங்க எல்லாரும் ஃபங்ஷனுக்கு வந்தது, அப்புறம் அத்தை என் ப்ரோகிராமுக்கு வந்தது. அவங்க ரியாக்ஷன். இப்பவும் எனக்கு ஒன்னும் புரியலை. இப்போ இந்த நிமிஷம் நிஜமான்னு இருக்கு” என்றாள்.
“எல்லாமே நிஜம் தான் டா நம்பு. நீ நம்பற மாதிரி நான் என்ன தான் செய்யறது” என்று யோசித்தவன், அருகில் அமர்ந்து இருந்தவளின் கன்னத்தில் தன் முதல் முத்திரையை அழுத்தமாகப் பதித்தான்.
இப்போது பார்கவி மயக்க நிலைக்கே சென்று விட்டாள். அவளது வெட்கம் ததும்பிய முகத்தை வைத்த கண் வாங்காமல் இவன் பார்த்துக் கொண்டு இருந்த வேளையில், பேரர் வந்து மோன நிலையில் இருந்த அவர்களை நனைவுக்குக் கொண்டு வந்தார்.
உணவுக்காகக் காத்திருக்கும் போதும் எதுவும் பேசிக் கொள்ளத் தோன்றவில்லை. இருவரது உள்ளத்திலும் ஓர் உற்சாகம் ததும்பி வழிந்தது. அமைதியாக உண்டு முடித்த பின், டி.நகரில் இருந்த பார்கவியின் வீடு நோக்கி பயணம் தொடங்கியது.
காரை மெதுவாகவே செலுத்திய வத்ஸன், “நாம எதைப் பற்றியும் யோசிக்காமல் நம்ம வாழ்க்கையை ஆரம்பிப்போம் பவி. கொஞ்சம் கொஞ்சமா நம்மளை புரிஞ்சிப்போம்”
“லைஃப் நமக்கு இதுவரை நிறைய சொல்லிக் கொடுத்து இருக்கு. அதையெல்லாம் நம்ம அந்தந்த டைம் வரும் போது யோசிச்சால் போதும்னு நான் நினைக்கிறேன். இப்போவே திங்க் பண்ண ஆரம்பிச்சா குழப்பம் தான் மிஞ்சும். வாட் டு யூ சே?”
தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டவன் அவளது அபிப்பிராயத்தையும் கேட்கத் தவறவில்லை. இது தானே வாழ்க்கையின் வெற்றிக்கு முதல் படி. தந்தையைப் போல் அல்லாது, அந்த முதல் படியை, வெற்றிகரமாகவே எடுத்து வைத்தான் ஸ்ரீவத்ஸன்.
“நீங்க சொல்றது ரொம்பவே கரெக்ட் அத்தான். எல்லாமே ப்ரீ ப்ளான்டா இருந்தா நல்லாவே இருக்காது. லைஃப அது போற போக்கில தெரிஞ்சிக்கலாம்” என்று அவனது கருத்தை ஆமோதித்தாள் பார்கவி.
வத்ஸன் இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை. வெகு காலத்திற்கு பிறகு தனித்து விடப்பட்ட ஸ்ரீதரன், கௌசல்யா இருவரையும் ஒரு கனத்த அமைதி சூழ்ந்து கொண்டது. யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சில ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், சந்தோஷமாகவே ஆரம்பித்தது அவர்களது வாழ்க்கை. இருவருக்கும் இடையே ஏதோ ஒரு திரை, எங்கே எப்படி, எப்போது விழுந்தது என்பதே புரியவில்லை. “எப்போ இருந்து இப்படி பேசா மடந்தை ஆன கௌசி?” என்று ஸ்ரீதரனும், “என் கூட என்ன பேசறதுன்னு கூட யோசிக்க வேண்டியது இருக்கா அத்தான்?” என்று கௌசல்யாவும் ஒரே நேரத்தில் பேச்சை ஆரம்பித்தனர்.
“சின்னப் பசங்க பாடம் சொல்லிக் கொடுத்து நிறையவே கத்துக்க வேண்டியது ஆகிடுச்சு எனக்கு” என்ற கௌசல்யா,
கூடவே, “உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும். இதை எல்லாம் வேற யாருக்கும் சொல்லக் கூட எனக்கு அசிங்கமா இருக்கு. நானா இப்படி செஞ்சேன்னு நினைச்சாலே கூசுது” என்றார்.
ஏதோ பெரியதாக வரப் போகிறது என்று யூகித்த ஸ்ரீதரன், மனைவியின் வாக்குமூலத்தைக் கேட்கத் தயாரானார்.
கூடவே “நானும் கூட உன் கிட்ட சாரி கேட்கணும் கௌசி. நான் நினைச்சு இருந்தா, நம்ம லைஃப இன்னும் கொஞ்சம் பேலன்ஸ்ட்டா வாழ்ந்திருக்கலாம்னு தோணுது. பசங்க எல்லாம் எவ்வளவு மெச்சூர்டா இருக்காங்க.
படிச்சிருந்தும் எனக்கு அப்போ உன்னை பத்தி நினைக்கத் தோணலையே? எல்லாமே ரொம்பவே லேட்டா தான், அதுவும் பசங்க சொல்லித் தான் புரிஞ்சுது. இனிமேலாவது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுவோம். ரிடையர்ட் லைஃப் ஆவது பீஸ்ஃபுல்லா இருக்கட்டும்” என்று மனைவியிடம் மன்னிப்பை வேண்டிய கையோடு அடுத்த பிளானையும் போட்டார்.
“நான் பேசலாமா இப்போ?” என்று கேட்ட கௌசல்யா “ராதாவோட அம்மா இறந்த அன்னைக்கு ஊருக்குப் போனோம், ஞாபகம் இருக்கா? அன்னைக்கு தான் கிரிஜா & ராதாவோட பாஸ்ட் என்னை விட மோசம்னு தெரிஞ்சது. பெத்தவங்களே இல்லாமல் இரண்டு பேரும் எவ்வளவு கஷ்டப் பட்டு இருப்பாங்க.
எங்க அம்மாக்கு நான் செஞ்சதெல்லாம் பிடிக்கலை, ஆனாலும் அப்பா டான்ஸ், பாட்டுனு கத்துக்க ஹெல்ப் பண்ணினார் தானே. அவரும் என்னைப் படிக்க வைக்கலையேன்னு ஆத்திரமாக வந்தது நிஜம். என் மார்க் கம்மின்னு புரிய வச்சது நீங்க தான்.
சரி அது தான் இல்லை, கல்யாணத்திலயாவது படிச்ச, அழகான மாப்பிள்ளையை எதிர்பார்த்தா உங்களைக் கை காண்பிச்சாங்க” என்ற போது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் நேரிடையாகவே கேட்கும் போது ஸ்ரீதரனுக்கு வலித்தது.
“நீங்க என் திறமையெல்லாம் உற்சாகப் படுத்தினப்போ, அப்படி சந்தோஷமா இருந்தது. ஆண்டவன் நல்லவரைத் தான் எனக்கு அனுப்பி வச்சிருக்கான். எனக்கு கூட ஏதோ நல்லது நடக்கும் போலன்னு” என்று வலிக்கு அவரே மருந்தும் தடவினார்.
“ஆனால், வாழ்க்கை மண்டைல ஓங்கி அடிச்சு ஒரு விஷயத்தை தெளிய வச்ச போது நான் ஏன் தலைகீழா மாறிட்டேன். இது என் இயல்பே கிடையாதே. எப்பவும் கூடாதுன்னு சொன்னா அதைப் பிடிவாதமா செய்யற நான், அதையே நீங்க சொன்ன போது இனிமேல் எனக்குன்னு எதுவும் இல்லைன்னு தான் முடிவு செய்ய முடிஞ்சது
ஏன்னா, நீங்க தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தீங்க. அதை நீங்களே சுத்தமா அழிச்சிட்டீங்க. நீங்க எனக்கு புரிய வைக்கலையா இல்லை நான் புரிஞ்சிக்கலையா தெரியலை. ஆனால், அது எனக்குள்ள வீண் பிடிவாதங்களை வளர்த்து விட்டுடுச்சு
பசங்களோட சின்ன வயசுல செஞ்சதெல்லாம் அவங்க நல்லதுக்கு தான்னு இருந்தாலும், அப்புறமா நடந்தது எல்லாம், வத்ஸன் சாவையே பாத்துட்டு வரவேண்டியதா போயிடுச்சு. முதல் தடவையா எதிர்த்துப் பேசறானேன்னு தான் தோணிச்சு. திடீர்னு க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ்னு சொல்லவும், என்ன பேசறதுன்னு கூடத் தெரியலை. அவனுக்கு சப்போர்ட் பண்ண போறீங்கன்னு தான் உங்க ஃபோன் எடுக்கலை. ஆனால் நீங்க….” என்று சிறிது இடைவெளி விட்டவர்,
“எல்லோரும், அதுவும் நிதி என்னை கொலையாளி மாதிரி பார்த்தப் போ, நான் அப்படி இல்லைன்னு கத்தணும் போல இருந்தது. அவன் கோல்ட் மெடலை வாங்கிட்டு, எல்லாரையும் பத்தி பேசிட்டு என்னைப் பத்தி எதுவும் பேசலையேன்னு நினைக்கும் போது தான், நான் செஞ்ச தப்பு ஞாபகம் வந்தது.அத்தை மாமா மட்டும் இல்லேன்னா, அந்த ஆறு வருஷமும் நான் என்ன ஆகியிருப்பேன்னு தெரியலை.
சரணும் ராகவியும் பழகறாங்கன்னு தெரிஞ்சும் ராதா கிட்ட பொண்ணு கேட்டேன், அப்புறம் அபியை விட நல்ல மாப்பிள்ளை எங்கேயாவது கிடைப்பானா? எவனோ ஒரு ஜோசியன் அதுவும் அவன் அந்த ஸ்ரீராம் வீட்டு ஆஸ்தான ஜோசியன்னு தெரியாம, அவன் சொன்னான்னு உருப்படாத காரணம் காட்டி அபியை வேண்டாம்னு ஒதுக்கி,…
நான் செஞ்ச கிறுக்குத்தனத்தால என் பொண்ணு என்னென்ன அனுபவிச்சாளோ தேரியலையே? ஏதோ பெரிய விஷயம்னு தெரியும். நான் தாங்க மாட்டேன்னு தான் எல்லாரும் மறைக்கிறாங்கன்னும் தெரியும்,
நிதியோட குழந்தை விஷயம் அதிலே சம்பந்தப்பட்டு இருக்கோ? அதைத் தான் மூடி மறைக்கிறாங்களோ? அந்த நேரத்தில் நிதி இரண்டு மூன்று நாள் ஹாஸ்பிடல்ல கூட இருந்தாளே? இது தெரியாமல் நான் அபிமன்யுங்கிற பேரைப் பிடிச்சு தொங்கினேனே? என் பொண்ணுக்கு சொத்துல பங்கு வேணும், சேஃப்டி வேணும், ஆஃபீஸ்ல ஜி.எம் போஸ்ட் வேணும்னு இப்படி சின்னப் பிள்ளைத் தனமா! நிறைய பேசிட்டேன்” என்றவர்,
கடைசியாக, “ஆனால் இந்த அபி, சொத்துல பாதிய அவ பேர்ல தான் எழுதி இருக்கேன்னு ஒரு வார்த்தை இப்போ கூட சொல்லலை. நிதி கோபத்தில கத்தும் போது தான் எனக்குத் தெரியும். எனக்கேத்த மாப்பிள்ளை தான் போல” என்று முத்தாய்ப்பாக முடித்தார்.
அவரை அப்படியே ஆமோதித்த ஸ்ரீதரன், “கரெக்டா சொல்லி இருக்க கௌசி. உனக்கேத்த மாப்பிள்ளை தான். நம்ம ரூம்ல இருந்தது அந்த தொட்டில் பலகை எல்லாம். அதை எடுத்தது கூட நமக்குத் தெரியலை பாரேன். இன்னைக்கு பார்கவி ப்ரோகிராம் எல்லாம் கூட அபி வேலையாத் தான் இருக்கும்.
எப்படியோ என் கூட சண்டை போட்டு நீ இந்த ஊருக்கு வந்ததுக்கு உனக்கு நான் தாங்க்ஸ் சொல்லணும் போல இருக்கே. இவ்வளவு நல்ல சொந்தங்கள் கிடைச்சிருக்காங்க. அவங்க மூலமா பழைய சொந்தங்களும் சேர்ந்தாச்சு” என்றார் ஒரு பெருமூச்சுடன்.
“ஆமா, நாளைக்கே தம்பி வீட்டுக்கு போய் வத்ஸ் கல்யாண விஷயம் பேசிடணும். அத்தை மாமா கிட்ட பேசிட்டீங்களா? ராதா, எல்லோரும் ஃப்ரீயான்னு கேட்கணும். டைம் ஆச்சே! இன்னும் இவனைக் காணோமே?” என்று மகனைத் தேட ஆரம்பித்தவருக்கு ஸ்ரீதரன் கண்ணால் பதில் சொல்லும் முன்,
அவரது முன்னே ஆஜரான அவரது சீமந்த புத்திரன், இரண்டு காதுகளையும் பிடித்த படி “மா! வெரி வெரி சாரி! நான் சத்தியமா ஒட்டுக் கேட்கணும்னு நினைக்கவே இல்லை. நான் கதவைத் திறந்தது கூட தெரியாமல் பேசிக்கிட்டு இருந்தது உங்க தப்பு” என்று சொல்லி விட்டு ஓடத் தயாராக நின்றான்.
“கண்ணா! இப்போ ஹேப்பியா நீ? அம்மா மேல கோபம் எல்லாம் போயாச்சா? அப்புறம் டாக்டர்.வத்ஸன் கிட்ட எனக்கு எப்போ அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும்?” என்று உணர்ச்சி மயமான அம்மாவை அணைத்தபடி அருகில் அமர்ந்து சமாதானப் படுத்த முயன்றான்.
“மா! இப்போ எதுக்கு பழசெல்லாம்? வத்ஸன் ஹேப்பி! சோ அம்மா ஷூட் ஆல்சோ பி ஹேப்பி ஒன்லி. உங்களுக்கு டாக்டர்.வத்ஸன் எல்லாம் இனிமேல் தேவையே இல்லை” என்றவன்,
“அதான் புதுசா இன்ஜினியர் ஒருத்தர் டாக்டர் வேலை பார்க்க ஆரம்பிச்சு இருக்காரே நம்ம வீட்டுல, அவர் தான் வேணும் எல்லாருக்கும்” என்றான் சந்தோஷமாக.
புரியாமல் பார்த்த தாய்க்கு, “அதான் மா! உங்க அருமை மாப்பிள்ளை!” என்று சொன்னவன், அவர் எழுந்து அடிக்க வரவும், அவனது அறைக்கு ஓடிப் போனான்.
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்
மியூசிக் அகாடமியில் இருந்து கிளம்பிய வத்ஸன்- பார்கவி ஜோடி மணி இரவு ஏழு தான் ஆகி இருக்க முதலில் கோவிலுக்குச் செல்வது என்று முடிவெடுத்தார்கள். தங்களது வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என்று கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் உளமார வேண்டிக் கொண்டவர்கள், எங்கே சென்று பேசுவது என்று தெரியாமல் முழித்தார்கள்.
மிக அருகிலேயே உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை இருக்க, அவர்களுக்கு கூட்டத்தின் நடுவே அமர்ந்து பேச இஷ்டமில்லை. அடுத்து வத்ஸனின் கார் சென்ற இடம் “கைதி கிச்சன்” என்ற சிறைச்சாலை போன்ற அமைப்பில் செய்யப்பட்ட வெஜிடேரியன் ரெஸ்டாரன்ட். நீயும் நானும் கல்யாணத்தில் கைதிகளாவோம் என்று மறைமுகமாக பார்கவியிடம் சொல்ல நினைத்தானோ?
அந்த ரெஸ்டாரன்ட்டுக்கு நண்பர்களுடன் அடிக்கடி வந்த பழக்கம் இருவருக்கும் இருக்க, உணவும் பிடித்தமானதாகவே இருந்தது.
அமைதியாக மெனுகார்டை அவளிடம் தள்ளிவிட்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனிடம், “என்ன அத்தான்? நீங்க கைதியாக ரெடின்னு சொல்றீங்களா? இல்லை என்னைக் கைது செய்ய ரெடின்னு சொல்றீங்களா?” பார்கவியால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
வத்ஸன் பதில் எதுவும் பேசாமல் புன்னகைத்தான். சற்று நேரம் கழித்து, “நீ என்ன நினைக்கிற?” என்றான் மொட்டையாக.
“என்னத்த நினைக்கறதுன்னு தெரியலையே, திடீர்னு அபி அண்ணாவும் அண்ணியும் வந்து ப்ரோகிராம் ஃபிக்ஸ் பண்ணலாம்னு சொன்னாங்க. அத்தையப் பத்தி சில விஷயங்களை சொன்னாங்க. இது தான் ரைட் டைம் எல்லாரையும் கூப்பிடலாம்னு சொல்லி அவங்களே எல்லாத்தையும் பிளான் பண்ணி, ஹப்பா எல்லாம் ஏதோ மேஜிக் மாதிரி இருக்கு.
நாங்க எல்லாரும் ஃபங்ஷனுக்கு வந்தது, அப்புறம் அத்தை என் ப்ரோகிராமுக்கு வந்தது. அவங்க ரியாக்ஷன். இப்பவும் எனக்கு ஒன்னும் புரியலை. இப்போ இந்த நிமிஷம் நிஜமான்னு இருக்கு” என்றாள்.
“எல்லாமே நிஜம் தான் டா நம்பு. நீ நம்பற மாதிரி நான் என்ன தான் செய்யறது” என்று யோசித்தவன், அருகில் அமர்ந்து இருந்தவளின் கன்னத்தில் தன் முதல் முத்திரையை அழுத்தமாகப் பதித்தான்.
இப்போது பார்கவி மயக்க நிலைக்கே சென்று விட்டாள். அவளது வெட்கம் ததும்பிய முகத்தை வைத்த கண் வாங்காமல் இவன் பார்த்துக் கொண்டு இருந்த வேளையில், பேரர் வந்து மோன நிலையில் இருந்த அவர்களை நனைவுக்குக் கொண்டு வந்தார்.
உணவுக்காகக் காத்திருக்கும் போதும் எதுவும் பேசிக் கொள்ளத் தோன்றவில்லை. இருவரது உள்ளத்திலும் ஓர் உற்சாகம் ததும்பி வழிந்தது. அமைதியாக உண்டு முடித்த பின், டி.நகரில் இருந்த பார்கவியின் வீடு நோக்கி பயணம் தொடங்கியது.
காரை மெதுவாகவே செலுத்திய வத்ஸன், “நாம எதைப் பற்றியும் யோசிக்காமல் நம்ம வாழ்க்கையை ஆரம்பிப்போம் பவி. கொஞ்சம் கொஞ்சமா நம்மளை புரிஞ்சிப்போம்”
“லைஃப் நமக்கு இதுவரை நிறைய சொல்லிக் கொடுத்து இருக்கு. அதையெல்லாம் நம்ம அந்தந்த டைம் வரும் போது யோசிச்சால் போதும்னு நான் நினைக்கிறேன். இப்போவே திங்க் பண்ண ஆரம்பிச்சா குழப்பம் தான் மிஞ்சும். வாட் டு யூ சே?”
தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டவன் அவளது அபிப்பிராயத்தையும் கேட்கத் தவறவில்லை. இது தானே வாழ்க்கையின் வெற்றிக்கு முதல் படி. தந்தையைப் போல் அல்லாது, அந்த முதல் படியை, வெற்றிகரமாகவே எடுத்து வைத்தான் ஸ்ரீவத்ஸன்.
“நீங்க சொல்றது ரொம்பவே கரெக்ட் அத்தான். எல்லாமே ப்ரீ ப்ளான்டா இருந்தா நல்லாவே இருக்காது. லைஃப அது போற போக்கில தெரிஞ்சிக்கலாம்” என்று அவனது கருத்தை ஆமோதித்தாள் பார்கவி.
வத்ஸன் இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை. வெகு காலத்திற்கு பிறகு தனித்து விடப்பட்ட ஸ்ரீதரன், கௌசல்யா இருவரையும் ஒரு கனத்த அமைதி சூழ்ந்து கொண்டது. யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சில ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், சந்தோஷமாகவே ஆரம்பித்தது அவர்களது வாழ்க்கை. இருவருக்கும் இடையே ஏதோ ஒரு திரை, எங்கே எப்படி, எப்போது விழுந்தது என்பதே புரியவில்லை. “எப்போ இருந்து இப்படி பேசா மடந்தை ஆன கௌசி?” என்று ஸ்ரீதரனும், “என் கூட என்ன பேசறதுன்னு கூட யோசிக்க வேண்டியது இருக்கா அத்தான்?” என்று கௌசல்யாவும் ஒரே நேரத்தில் பேச்சை ஆரம்பித்தனர்.
“சின்னப் பசங்க பாடம் சொல்லிக் கொடுத்து நிறையவே கத்துக்க வேண்டியது ஆகிடுச்சு எனக்கு” என்ற கௌசல்யா,
கூடவே, “உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும். இதை எல்லாம் வேற யாருக்கும் சொல்லக் கூட எனக்கு அசிங்கமா இருக்கு. நானா இப்படி செஞ்சேன்னு நினைச்சாலே கூசுது” என்றார்.
ஏதோ பெரியதாக வரப் போகிறது என்று யூகித்த ஸ்ரீதரன், மனைவியின் வாக்குமூலத்தைக் கேட்கத் தயாரானார்.
கூடவே “நானும் கூட உன் கிட்ட சாரி கேட்கணும் கௌசி. நான் நினைச்சு இருந்தா, நம்ம லைஃப இன்னும் கொஞ்சம் பேலன்ஸ்ட்டா வாழ்ந்திருக்கலாம்னு தோணுது. பசங்க எல்லாம் எவ்வளவு மெச்சூர்டா இருக்காங்க.
படிச்சிருந்தும் எனக்கு அப்போ உன்னை பத்தி நினைக்கத் தோணலையே? எல்லாமே ரொம்பவே லேட்டா தான், அதுவும் பசங்க சொல்லித் தான் புரிஞ்சுது. இனிமேலாவது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுவோம். ரிடையர்ட் லைஃப் ஆவது பீஸ்ஃபுல்லா இருக்கட்டும்” என்று மனைவியிடம் மன்னிப்பை வேண்டிய கையோடு அடுத்த பிளானையும் போட்டார்.
“நான் பேசலாமா இப்போ?” என்று கேட்ட கௌசல்யா “ராதாவோட அம்மா இறந்த அன்னைக்கு ஊருக்குப் போனோம், ஞாபகம் இருக்கா? அன்னைக்கு தான் கிரிஜா & ராதாவோட பாஸ்ட் என்னை விட மோசம்னு தெரிஞ்சது. பெத்தவங்களே இல்லாமல் இரண்டு பேரும் எவ்வளவு கஷ்டப் பட்டு இருப்பாங்க.
எங்க அம்மாக்கு நான் செஞ்சதெல்லாம் பிடிக்கலை, ஆனாலும் அப்பா டான்ஸ், பாட்டுனு கத்துக்க ஹெல்ப் பண்ணினார் தானே. அவரும் என்னைப் படிக்க வைக்கலையேன்னு ஆத்திரமாக வந்தது நிஜம். என் மார்க் கம்மின்னு புரிய வச்சது நீங்க தான்.
சரி அது தான் இல்லை, கல்யாணத்திலயாவது படிச்ச, அழகான மாப்பிள்ளையை எதிர்பார்த்தா உங்களைக் கை காண்பிச்சாங்க” என்ற போது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் நேரிடையாகவே கேட்கும் போது ஸ்ரீதரனுக்கு வலித்தது.
“நீங்க என் திறமையெல்லாம் உற்சாகப் படுத்தினப்போ, அப்படி சந்தோஷமா இருந்தது. ஆண்டவன் நல்லவரைத் தான் எனக்கு அனுப்பி வச்சிருக்கான். எனக்கு கூட ஏதோ நல்லது நடக்கும் போலன்னு” என்று வலிக்கு அவரே மருந்தும் தடவினார்.
“ஆனால், வாழ்க்கை மண்டைல ஓங்கி அடிச்சு ஒரு விஷயத்தை தெளிய வச்ச போது நான் ஏன் தலைகீழா மாறிட்டேன். இது என் இயல்பே கிடையாதே. எப்பவும் கூடாதுன்னு சொன்னா அதைப் பிடிவாதமா செய்யற நான், அதையே நீங்க சொன்ன போது இனிமேல் எனக்குன்னு எதுவும் இல்லைன்னு தான் முடிவு செய்ய முடிஞ்சது
ஏன்னா, நீங்க தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தீங்க. அதை நீங்களே சுத்தமா அழிச்சிட்டீங்க. நீங்க எனக்கு புரிய வைக்கலையா இல்லை நான் புரிஞ்சிக்கலையா தெரியலை. ஆனால், அது எனக்குள்ள வீண் பிடிவாதங்களை வளர்த்து விட்டுடுச்சு
பசங்களோட சின்ன வயசுல செஞ்சதெல்லாம் அவங்க நல்லதுக்கு தான்னு இருந்தாலும், அப்புறமா நடந்தது எல்லாம், வத்ஸன் சாவையே பாத்துட்டு வரவேண்டியதா போயிடுச்சு. முதல் தடவையா எதிர்த்துப் பேசறானேன்னு தான் தோணிச்சு. திடீர்னு க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ்னு சொல்லவும், என்ன பேசறதுன்னு கூடத் தெரியலை. அவனுக்கு சப்போர்ட் பண்ண போறீங்கன்னு தான் உங்க ஃபோன் எடுக்கலை. ஆனால் நீங்க….” என்று சிறிது இடைவெளி விட்டவர்,
“எல்லோரும், அதுவும் நிதி என்னை கொலையாளி மாதிரி பார்த்தப் போ, நான் அப்படி இல்லைன்னு கத்தணும் போல இருந்தது. அவன் கோல்ட் மெடலை வாங்கிட்டு, எல்லாரையும் பத்தி பேசிட்டு என்னைப் பத்தி எதுவும் பேசலையேன்னு நினைக்கும் போது தான், நான் செஞ்ச தப்பு ஞாபகம் வந்தது.அத்தை மாமா மட்டும் இல்லேன்னா, அந்த ஆறு வருஷமும் நான் என்ன ஆகியிருப்பேன்னு தெரியலை.
சரணும் ராகவியும் பழகறாங்கன்னு தெரிஞ்சும் ராதா கிட்ட பொண்ணு கேட்டேன், அப்புறம் அபியை விட நல்ல மாப்பிள்ளை எங்கேயாவது கிடைப்பானா? எவனோ ஒரு ஜோசியன் அதுவும் அவன் அந்த ஸ்ரீராம் வீட்டு ஆஸ்தான ஜோசியன்னு தெரியாம, அவன் சொன்னான்னு உருப்படாத காரணம் காட்டி அபியை வேண்டாம்னு ஒதுக்கி,…
நான் செஞ்ச கிறுக்குத்தனத்தால என் பொண்ணு என்னென்ன அனுபவிச்சாளோ தேரியலையே? ஏதோ பெரிய விஷயம்னு தெரியும். நான் தாங்க மாட்டேன்னு தான் எல்லாரும் மறைக்கிறாங்கன்னும் தெரியும்,
நிதியோட குழந்தை விஷயம் அதிலே சம்பந்தப்பட்டு இருக்கோ? அதைத் தான் மூடி மறைக்கிறாங்களோ? அந்த நேரத்தில் நிதி இரண்டு மூன்று நாள் ஹாஸ்பிடல்ல கூட இருந்தாளே? இது தெரியாமல் நான் அபிமன்யுங்கிற பேரைப் பிடிச்சு தொங்கினேனே? என் பொண்ணுக்கு சொத்துல பங்கு வேணும், சேஃப்டி வேணும், ஆஃபீஸ்ல ஜி.எம் போஸ்ட் வேணும்னு இப்படி சின்னப் பிள்ளைத் தனமா! நிறைய பேசிட்டேன்” என்றவர்,
கடைசியாக, “ஆனால் இந்த அபி, சொத்துல பாதிய அவ பேர்ல தான் எழுதி இருக்கேன்னு ஒரு வார்த்தை இப்போ கூட சொல்லலை. நிதி கோபத்தில கத்தும் போது தான் எனக்குத் தெரியும். எனக்கேத்த மாப்பிள்ளை தான் போல” என்று முத்தாய்ப்பாக முடித்தார்.
அவரை அப்படியே ஆமோதித்த ஸ்ரீதரன், “கரெக்டா சொல்லி இருக்க கௌசி. உனக்கேத்த மாப்பிள்ளை தான். நம்ம ரூம்ல இருந்தது அந்த தொட்டில் பலகை எல்லாம். அதை எடுத்தது கூட நமக்குத் தெரியலை பாரேன். இன்னைக்கு பார்கவி ப்ரோகிராம் எல்லாம் கூட அபி வேலையாத் தான் இருக்கும்.
எப்படியோ என் கூட சண்டை போட்டு நீ இந்த ஊருக்கு வந்ததுக்கு உனக்கு நான் தாங்க்ஸ் சொல்லணும் போல இருக்கே. இவ்வளவு நல்ல சொந்தங்கள் கிடைச்சிருக்காங்க. அவங்க மூலமா பழைய சொந்தங்களும் சேர்ந்தாச்சு” என்றார் ஒரு பெருமூச்சுடன்.
“ஆமா, நாளைக்கே தம்பி வீட்டுக்கு போய் வத்ஸ் கல்யாண விஷயம் பேசிடணும். அத்தை மாமா கிட்ட பேசிட்டீங்களா? ராதா, எல்லோரும் ஃப்ரீயான்னு கேட்கணும். டைம் ஆச்சே! இன்னும் இவனைக் காணோமே?” என்று மகனைத் தேட ஆரம்பித்தவருக்கு ஸ்ரீதரன் கண்ணால் பதில் சொல்லும் முன்,
அவரது முன்னே ஆஜரான அவரது சீமந்த புத்திரன், இரண்டு காதுகளையும் பிடித்த படி “மா! வெரி வெரி சாரி! நான் சத்தியமா ஒட்டுக் கேட்கணும்னு நினைக்கவே இல்லை. நான் கதவைத் திறந்தது கூட தெரியாமல் பேசிக்கிட்டு இருந்தது உங்க தப்பு” என்று சொல்லி விட்டு ஓடத் தயாராக நின்றான்.
“கண்ணா! இப்போ ஹேப்பியா நீ? அம்மா மேல கோபம் எல்லாம் போயாச்சா? அப்புறம் டாக்டர்.வத்ஸன் கிட்ட எனக்கு எப்போ அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும்?” என்று உணர்ச்சி மயமான அம்மாவை அணைத்தபடி அருகில் அமர்ந்து சமாதானப் படுத்த முயன்றான்.
“மா! இப்போ எதுக்கு பழசெல்லாம்? வத்ஸன் ஹேப்பி! சோ அம்மா ஷூட் ஆல்சோ பி ஹேப்பி ஒன்லி. உங்களுக்கு டாக்டர்.வத்ஸன் எல்லாம் இனிமேல் தேவையே இல்லை” என்றவன்,
“அதான் புதுசா இன்ஜினியர் ஒருத்தர் டாக்டர் வேலை பார்க்க ஆரம்பிச்சு இருக்காரே நம்ம வீட்டுல, அவர் தான் வேணும் எல்லாருக்கும்” என்றான் சந்தோஷமாக.
புரியாமல் பார்த்த தாய்க்கு, “அதான் மா! உங்க அருமை மாப்பிள்ளை!” என்று சொன்னவன், அவர் எழுந்து அடிக்க வரவும், அவனது அறைக்கு ஓடிப் போனான்.
Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -29
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தொட்டுத் தொடரும் -29
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.