இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்
வந்திருந் தென்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
“டேய் ஆகாஷ்! என்னடா நீ ரொம்ப பின்னால் போயிட்ட? கொஞ்சம் முன்னால் வா. இப்போ பாரு. நான் ஹெல்ப் பண்றேன் உனக்கு. எவ்ரிபடி ஜாயின் மீ”
“கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா வா அய்வா அய்வா அய்வா அழகே வா வா”
அங்கு வந்த ஸ்ரீநிதி அனைவரையும் சேர்த்துக் கொண்டு கோரஸ் பாடியதில் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தவர்கள் திடுக்கிட்டு விழித்தார்கள். அபிமன்யு, ஸ்ரீநிதி, சரண், ராகவி என அனைவரும் அவர்களைச் சுற்றி நின்று பாடிக்கொண்டு இருப்பதைக் கண்ட பார்கவி, வத்ஸனின் பின்னே ஒளிய அவனோ மூஞ்சியை எங்கே கொண்டு வைப்பது என்று தெரியாமல் தலைகோதியபடி நின்றான்.
“இந்தாடா, டவல் இல்லை அட்ஜெஸ்ட் பண்ணித் துடைச்சுக்கோ” என்று ராகவி கைக்குட்டையை நீட்ட, “ஆமான்டா, மாப் எங்க இருக்குன்னு சர்வீஸ் பீப்பிள் கிட்ட கேட்கணும். இல்லேன்னா எல்லாரும் வழுக்கி விழவேண்டியது தான்” என்று அவளுக்கு ஒத்து ஊதினான் சரண்.
“டேய் அண்ணா! நீ தானா இது? கொஞ்சம் இரு நான் கிள்ளிப் பாத்துக்கிறேன்” என்று பார்கவியை நறுக்கென்று கிள்ளினாள் ஸ்ரீநிதி.
“ஆ! ஆ!, ம்ச் வலிக்குது நிதி” என்று அலறியவளைக் கண்டு, “இப்படியா கிள்ளுவ. பிசாசு செக் பண்ணனும்னா உன்னையே கிள்ளிப் பார்க்க வேண்டியது தானே” என்று அதட்டினான் வத்ஸன்.
“அட அட! அபி இங்க பாரு உன் ஃப்ரண்ட? இந்தப் பூனையும் மில்க் குடிக்குமா என்று இருந்தானே இப்போ பாரு. அங்க அடிச்சா இங்க வலிக்குது. அம்மா, அப்பா, மாமி, மாமா எல்லாரும் நல்லா கவனிச்சீங்களா? எங்க வேலை முடிஞ்சதுப்பா. சட்டு புட்டுன்னு அடுத்த வேலைய பாருங்க” என்று பெரிய மனுஷியாக பேசினாள் ஸ்ரீநிதி.
“அது அப்படி இல்லை ஸ்ரீ, பிடிக்காதது மாதிரி என்ன ஆக்டிங்? டாக்டர் நாலு கோட்டுக்கு போடற கஞ்சிய ஒன்னா குடிச்சது மாதிரி விரைப்பாவே அலைஞ்சார் (போலீஸ் டிரஸ்ஸூக்கு மட்டும் தான் கஞ்சி போடணுமா என்ன, டாக்டர் கோட்டுக்கும் போடலாமே!!)
இப்போ சாயம் வெளுத்துப் போச்சு சார். கண் இமைக்காமல் பாத்துட்டு இருந்தீங்களே? எங்களையும் நிமிர்ந்து பாருங்க சார். அந்த மில்க் வடியற மூஞ்சிய கொஞ்சம் பார்ப்போம்.
மேடம் பார்கவி! நீங்க முன்னாடி வாங்க பார்ப்போம். ஓ நீங்க வெட்கப் படறீங்களா? நாங்க எல்லாரும் நம்பிட்டோம். என்ன கைஸ் பாத்திட்டீங்க தானே, பார்கவி வெட்கப் படுகிறாள், ஏதோ பழைய சினிமா பேர் மாதிரி இருக்குல்ல” என்று அவன் பங்குக்கு மச்சானையும் அவன் மனைவியாக வரித்தவளையும் சேர்த்தே ஓட்டினான் அபிமன்யு.
பார்கவி இன்னமும் நாட்டிய உடையிலேயே இருக்க, சிறியவர்கள் அனைவரும் அங்கே கலகலத்துக் கொண்டிருக்க, பெரியவர்கள் அதை ரசித்துக் கொண்டு இருந்தார்கள்.
“என்னப்பா, விட்டா எல்லோரும் ரொம்ப பேசிட்டே போறீங்க? என் பையனையும் மருமகளையும் இப்படியா கேலி பண்ணுவீங்க? அப்படி நீங்க எல்லாரும் செய்யாத எதை அவங்க செஞ்சுட்டாங்க? கவி நீயே டிரஸ் சேஞ்ச் பண்ணிப்பியா இல்லை நான் ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று பேசிய கௌசல்யாவைப் பார்த்து அனைவரும் வாயில் ஈ நுழைவது தெரியாமல் பார்த்து இருக்க,
“வாட் எ கிரேட் இன்சல்ட் மம்மி? இப்பவே இப்படியா? இதெல்லாம் ரொம்பவே ஓவர் சொல்லிட்டேன்” என்றாள் ஸ்ரீநிதி.
“அதெல்லாம் ஒரு ஓவரும் இல்லை. எல்லாரும் கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்” என்று சிரித்தபடியே கௌசல்யா சொல்ல, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஸ்ரீநிதி அபிமன்யுவை நோக்கிப் பாய்ந்து அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
அனைவரும் என்னவோ என்று பதற, “ஒன்னும் இல்லை கைஸ். கொஞ்சம் இமோஷனல் ஆகிட்டா. அவ்வளவே தான்” என்று அனைவரையும், மனைவியையும் சேர்த்தே சமாதானப் படுத்திய அபிமன்யு
“அப்புறம் என்ன பிளான் அத்தை? நாங்க எல்லாம் கிளம்பித் தான் ஆகனுமா?” என்று கௌசல்யாவிடம் கேள்வி கேட்டு அவரை சகஜமாக்கினான். “பின்ன நீங்களே சொல்லுங்க மாப்பிள்ளை, உங்க நாலு பேருக்கும் ஒரே வயசு தான். அதது காலாகாலத்தில நடக்க வேண்டாமா?”
“என்ன தான் சரணோட பெஸ்ட் ஃப்ரண்ட்னு இருந்தாலும் சில விஷயத்தில நீங்களும் ஸ்லோ தான் மாப்பிள்ளை. சரண் ஸ்பீடு உங்களுக்கு வரலை”
“நீங்க தான் அப்படின்னா என் பிள்ளை இருக்கானே, ஆமை கூட அவன் கிட்ட ஜெயிச்சிடும் போல இருக்கே. நாம தான் ஏதாவது பண்ணனும் போல”
“அதான் அவனுக்காக நானே களத்தில் குதிச்சிட்டேன். சரிதானே” என்று அவனுக்குச் சரியாகப் பகடி பேசினார் கௌசல்யா.
கூடவே, “என் பையன் அவங்க அப்பா மாதிரி, ஆனால் என் மருமகளை பாத்தீங்களா? அவள் ஸ்பீடு எப்படி?” என்றார்.
அவரது மாற்றம் இயல்பாகவே நடந்தது குறித்து சந்தோஷம் அடைந்தார்கள். அவர் இவ்வளவு பேசுவாரா என்று அனைவரும் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, “என்னை இப்படி சொல்லிட்டியே கௌசி? நானும் இதுல ஹெல்ப் பண்றேன்” என்ற ஸ்ரீதரன், ரவீந்திரனிடம் நேரடியாகவே கேட்டு விட்டார்.
“ரவி! ஆரம்பத்தில இருந்தே இந்த வீட்டுல எங்களை சொந்தமா நீ ஒருத்தன் தான் மதிச்சு இருக்க. இன்னைக்கு எல்லாரும் சேர்ந்து இருக்கோம்னா அதுக்கு நீ எங்களை எப்பவும் விடாமல் இருந்ததும் ஒரு காரணம்
இந்த சொந்தம் நம்ம பசங்களுக்கு இடையிலும் கன்டிநியூ ஆகனும். இதெல்லாம் பேசற இடம் இது இல்லைன்னாலும் கேட்க வேண்டியதைக் கேட்கிறோம். அப்புறம் வீட்டுக்கு வந்து முறையா பேசறோம். உங்க எல்லோருக்கும் சம்மதமான்னு சொல்லு” என்று நீண்ட உரை ஆற்றினார்.
“மாமா, இந்தாங்க ஜூஸ். இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா?” என்று வந்து நின்ற ஆகாஷைப் பார்த்து அவர் முழிக்க, “அதான் மாமா, இந்த சம்மதமான்னு ஏதோ கேட்டீங்களே, அது தான். விட்டா என் தங்கச்சி இப்போவே அத்தான் கூட வந்திடுவா. அத்தை தான் கரெக்டா ஸ்பீடு பத்தி சொன்னாங்களே. நீங்க தான் சரியா கவனிக்கலை போல” என்று தங்கள் சம்மதத்தைத் தன் பாணியில் சொன்னான்
“ஓகே ஓகே..அப்போ சபை கலையட்டும். தாத்தா பாட்டி கிட்ட பேசி நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தம் ஃபிக்ஸ் பண்ணலாம். எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்கு போகலாம்”
“கிளம்புங்க. கிளம்புங்க. அண்ணா! உன்னையும் தான். அங்க என்ன பார்வை, இப்படியே திரும்பிப் போயிடு” என்று விரட்டினாள் ஸ்ரீநிதி.
“ஷ்ஷ் ஸ்ரீ கொஞ்சம் சும்மா இரு” என்ற அபிமன்யு “பார்கவி நான் இரண்டு பேரன்ட்ஸ் கிட்டயும் பேசிட்டேன். பார்க்கிங்ல வெயிட் பண்ணுவான். நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. எங்கேயாவது போய் பேசிட்டு வாங்க. நாங்க கிளம்பறோம்” என்றான்.
வத்ஸனும் அவர்களுடன் பார்க்கிங் நோக்கி நடந்தான். “வத்ஸ்! நிதானமா பேசு. வீட்டுக்கு போய் பேசினாலும் பிரச்சினை இல்லை. ஆனால் பேச வேண்டிய உங்களைப்பத்தி மட்டுமே பேசு. அம்மா ஆட்டுக்குட்டின்னு பேசினேன்னு தெரிஞ்சது, மகனே இந்த ஜென்மத்தில உனக்கு கல்யாணம் கிடையாது ஞாபகம் வச்சுக்கோ” என்று அவன் காதோரம் மிரட்டி விட்டு ஸ்ரீநிதியுடன் கிளம்பி விட்டான்.
சரணும் ராகவியும் கௌசல்யா மற்றும் ஸ்ரீதரனை தங்கள் காரில் அழைத்துச் செல்ல காத்திருந்தனர். அடுத்த பதினைந்து நிமிடத்தில் பார்கவி தாயுடன் வந்து சேர்ந்தாள். அவசரமாக அலங்காரங்களைக் களைந்து வந்திருக்கிறாள் என்பது பார்த்தாலே தெரிந்தது.
“உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை மாப்பிள்ளை. இன்னைக்கு ப்ரோகிராமும் இருந்ததால டயர்டா இருப்பா. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வரப் பாருங்க. டின்னர் முடிச்சுட்டு பேசுங்க” என்று சொல்லி அனுப்பினார் பெண்ணின் தாய்.
“இரண்டு பேரும் நல்லா தூங்கறாங்களே. எப்படி எழுப்பறது கவி?” கார் தங்கள் வீட்டு வாசலில் நின்றது கூடத் தெரியாமல் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த கௌசல்யாவும் ஸ்ரீதரனும் இவர்களின் பேச்சு சத்தம் கேட்டுக் கண் விழித்தனர்.
“சாரிப்பா! ரொம்ப நாளாச்சு இப்படி குட்டி தூக்கம் போட்டு” என்று இருவரும் ஒரே மாதிரியாகச் சொன்னபடி காரை விட்டு இறங்கி வீட்டின் கதவைத் திறந்தனர்.
இன்னமும் இறங்காமல் இருந்தவர்களைக் கண்டு “உள்ள வாங்க இரண்டு பேரும். சாப்பிட்டு தான் போகணும். நானும் உங்க அம்மா மாதிரி நல்லா சமைப்பேன் தெரியுமில்ல” என்று அவர்களை உள்ளே அழைத்தார்.
“அத்தான் என்ன பாத்துட்டு இருக்கீங்க. கூப்பிடுங்க பசங்களை” என்று கணவரையும் துணைக்கு அழைத்தார்.
“ஆமாம் பா. சமர்த்தா வந்துடுங்க. இன்னைக்கு வேற நான் தனியா மாட்டி இருக்கேன். அம்மா அப்பா வேற பேத்தி கூட ஒரு மாசம் இருந்துட்டு வரோம்னு சொல்லிட்டாங்க. வத்ஸனும் இல்லை. சிக்கின எலிகளை எப்படி விடறது? வந்துடுங்க ப்ளீஸ்!” என்று கிடைத்த வாய்ப்பில் மனைவியை நையாண்டி செய்தார் ஸ்ரீதரன்.
“ரொம்பத் தான். உங்க அங்கிளை பாரு கவி. பாவம் கஷ்டப் பட்டு நான் செஞ்சதை சாப்பிடறார்னு அவரைப் பார்த்தாலே தெரியுமே. நீ உள்ள வா. உனக்கும் அபி மாதிரி காரச் சட்னி பிடிக்குமா? செய்யட்டுமா?” என்றபடி உள்ளே போனார் கௌசல்யா.
“இதை சொன்னா நீங்க, அபி எல்லாருமே கோபப்படுவீங்க. ஆனாலும் என்னால சொல்லாமல் இருக்க முடியலை. ரொம்ப தேங்க்ஸ் பா உங்க எல்லோருக்கும்”
“போன காலம் திரும்பக் கிடைக்காது தான். ஆனாலும் மிச்ச வாழ்க்கையாவது சந்தோஷமா இருக்கப் போறோம்னு நினைச்சாலே மனசு நிறைஞ்சு இருக்கிற மாதிரி எப்படி சொல்றது, ஒரு இனந் தெரியாத ஒரு ஹேப்பி ஃபீல்” என்று மனதில் இருந்து பேசினார் ஸ்ரீதரன்.
கவியுடன் பேசிக் கொண்டே சமையல் அறையில் அவர்களுக்கான டின்னரைத் தயாரித்துக் கொண்டு இருந்த கௌசல்யாவும் கிட்டத்தட்ட இதே போன்ற விஷயங்களை தான் பேசிக் கொண்டு இருந்தார்.
கைகள் தன் போக்கில் வேலைகளைச் செய்து கொண்டு இருக்க, அவரது மனமோ தான் கடந்து வந்த பாதையின் பின்னே சென்று விடத் துடித்தது. மிகவும் பிரயத்தனப் பட்டு பழைய நினைவுகளில் இருந்து மீண்டவர், “நீயும் நிதி மாதிரி தானா, சாப்பிட மட்டுமே கிச்சனுக்கு வருவியா இல்லை…?” என்று இழுக்க.
“நானும் அப்படி தான் ஆனால் அப்படி இல்லை ஆன்ட்டி” என்று அவரைக் குழப்பியவள், சரண் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தனது குரலைத் தாழ்த்தி,
தொட்டுத் தொடரும் -28
“பிரமாதமான டேஸ்ட் எல்லாம் எதிர் பார்க்கமுடியாது. ஏதோ செய்வேன். என்னைத் தவிர நான் செய்யறத எல்லோரும் சாப்பிடுவாங்கன்னா என் சமையல் திறமை எப்படி, என் நாக்கு எப்படின்னு நீங்களே தெரிஞ்சுக்கோங்க” என்றாள்.
“ஆமா, பசி ருசியறியாதுன்னு சொல்வாங்களே அதே தான் சித்தி, அப்புறம் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு வேற சொல்லிடுவாங்க. அதான் வேற வழியில்லாமல் முழுங்கிட வேண்டியதா இருக்கு” என்று கரெக்டாக ஆஜரானான் சரண்.
இவ்வாறு கலகலப்பான அரைமணி நேரம் கழித்து அவர்கள் கிளம்ப, “கிரிஜா கிட்ட நாளைக்கு பேசணும் கவி. எப்போ ஃப்ரீயா இருப்பாங்கன்னு கேட்டு சொல்லு” என்ற கேள்வியோடு விடை கொடுத்து அனுப்பினார் கௌசல்யா.
வந்திருந் தென்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
“டேய் ஆகாஷ்! என்னடா நீ ரொம்ப பின்னால் போயிட்ட? கொஞ்சம் முன்னால் வா. இப்போ பாரு. நான் ஹெல்ப் பண்றேன் உனக்கு. எவ்ரிபடி ஜாயின் மீ”
“கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா வா அய்வா அய்வா அய்வா அழகே வா வா”
அங்கு வந்த ஸ்ரீநிதி அனைவரையும் சேர்த்துக் கொண்டு கோரஸ் பாடியதில் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தவர்கள் திடுக்கிட்டு விழித்தார்கள். அபிமன்யு, ஸ்ரீநிதி, சரண், ராகவி என அனைவரும் அவர்களைச் சுற்றி நின்று பாடிக்கொண்டு இருப்பதைக் கண்ட பார்கவி, வத்ஸனின் பின்னே ஒளிய அவனோ மூஞ்சியை எங்கே கொண்டு வைப்பது என்று தெரியாமல் தலைகோதியபடி நின்றான்.
“இந்தாடா, டவல் இல்லை அட்ஜெஸ்ட் பண்ணித் துடைச்சுக்கோ” என்று ராகவி கைக்குட்டையை நீட்ட, “ஆமான்டா, மாப் எங்க இருக்குன்னு சர்வீஸ் பீப்பிள் கிட்ட கேட்கணும். இல்லேன்னா எல்லாரும் வழுக்கி விழவேண்டியது தான்” என்று அவளுக்கு ஒத்து ஊதினான் சரண்.
“டேய் அண்ணா! நீ தானா இது? கொஞ்சம் இரு நான் கிள்ளிப் பாத்துக்கிறேன்” என்று பார்கவியை நறுக்கென்று கிள்ளினாள் ஸ்ரீநிதி.
“ஆ! ஆ!, ம்ச் வலிக்குது நிதி” என்று அலறியவளைக் கண்டு, “இப்படியா கிள்ளுவ. பிசாசு செக் பண்ணனும்னா உன்னையே கிள்ளிப் பார்க்க வேண்டியது தானே” என்று அதட்டினான் வத்ஸன்.
“அட அட! அபி இங்க பாரு உன் ஃப்ரண்ட? இந்தப் பூனையும் மில்க் குடிக்குமா என்று இருந்தானே இப்போ பாரு. அங்க அடிச்சா இங்க வலிக்குது. அம்மா, அப்பா, மாமி, மாமா எல்லாரும் நல்லா கவனிச்சீங்களா? எங்க வேலை முடிஞ்சதுப்பா. சட்டு புட்டுன்னு அடுத்த வேலைய பாருங்க” என்று பெரிய மனுஷியாக பேசினாள் ஸ்ரீநிதி.
“அது அப்படி இல்லை ஸ்ரீ, பிடிக்காதது மாதிரி என்ன ஆக்டிங்? டாக்டர் நாலு கோட்டுக்கு போடற கஞ்சிய ஒன்னா குடிச்சது மாதிரி விரைப்பாவே அலைஞ்சார் (போலீஸ் டிரஸ்ஸூக்கு மட்டும் தான் கஞ்சி போடணுமா என்ன, டாக்டர் கோட்டுக்கும் போடலாமே!!)
இப்போ சாயம் வெளுத்துப் போச்சு சார். கண் இமைக்காமல் பாத்துட்டு இருந்தீங்களே? எங்களையும் நிமிர்ந்து பாருங்க சார். அந்த மில்க் வடியற மூஞ்சிய கொஞ்சம் பார்ப்போம்.
மேடம் பார்கவி! நீங்க முன்னாடி வாங்க பார்ப்போம். ஓ நீங்க வெட்கப் படறீங்களா? நாங்க எல்லாரும் நம்பிட்டோம். என்ன கைஸ் பாத்திட்டீங்க தானே, பார்கவி வெட்கப் படுகிறாள், ஏதோ பழைய சினிமா பேர் மாதிரி இருக்குல்ல” என்று அவன் பங்குக்கு மச்சானையும் அவன் மனைவியாக வரித்தவளையும் சேர்த்தே ஓட்டினான் அபிமன்யு.
பார்கவி இன்னமும் நாட்டிய உடையிலேயே இருக்க, சிறியவர்கள் அனைவரும் அங்கே கலகலத்துக் கொண்டிருக்க, பெரியவர்கள் அதை ரசித்துக் கொண்டு இருந்தார்கள்.
“என்னப்பா, விட்டா எல்லோரும் ரொம்ப பேசிட்டே போறீங்க? என் பையனையும் மருமகளையும் இப்படியா கேலி பண்ணுவீங்க? அப்படி நீங்க எல்லாரும் செய்யாத எதை அவங்க செஞ்சுட்டாங்க? கவி நீயே டிரஸ் சேஞ்ச் பண்ணிப்பியா இல்லை நான் ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று பேசிய கௌசல்யாவைப் பார்த்து அனைவரும் வாயில் ஈ நுழைவது தெரியாமல் பார்த்து இருக்க,
“வாட் எ கிரேட் இன்சல்ட் மம்மி? இப்பவே இப்படியா? இதெல்லாம் ரொம்பவே ஓவர் சொல்லிட்டேன்” என்றாள் ஸ்ரீநிதி.
“அதெல்லாம் ஒரு ஓவரும் இல்லை. எல்லாரும் கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்” என்று சிரித்தபடியே கௌசல்யா சொல்ல, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஸ்ரீநிதி அபிமன்யுவை நோக்கிப் பாய்ந்து அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
அனைவரும் என்னவோ என்று பதற, “ஒன்னும் இல்லை கைஸ். கொஞ்சம் இமோஷனல் ஆகிட்டா. அவ்வளவே தான்” என்று அனைவரையும், மனைவியையும் சேர்த்தே சமாதானப் படுத்திய அபிமன்யு
“அப்புறம் என்ன பிளான் அத்தை? நாங்க எல்லாம் கிளம்பித் தான் ஆகனுமா?” என்று கௌசல்யாவிடம் கேள்வி கேட்டு அவரை சகஜமாக்கினான். “பின்ன நீங்களே சொல்லுங்க மாப்பிள்ளை, உங்க நாலு பேருக்கும் ஒரே வயசு தான். அதது காலாகாலத்தில நடக்க வேண்டாமா?”
“என்ன தான் சரணோட பெஸ்ட் ஃப்ரண்ட்னு இருந்தாலும் சில விஷயத்தில நீங்களும் ஸ்லோ தான் மாப்பிள்ளை. சரண் ஸ்பீடு உங்களுக்கு வரலை”
“நீங்க தான் அப்படின்னா என் பிள்ளை இருக்கானே, ஆமை கூட அவன் கிட்ட ஜெயிச்சிடும் போல இருக்கே. நாம தான் ஏதாவது பண்ணனும் போல”
“அதான் அவனுக்காக நானே களத்தில் குதிச்சிட்டேன். சரிதானே” என்று அவனுக்குச் சரியாகப் பகடி பேசினார் கௌசல்யா.
கூடவே, “என் பையன் அவங்க அப்பா மாதிரி, ஆனால் என் மருமகளை பாத்தீங்களா? அவள் ஸ்பீடு எப்படி?” என்றார்.
அவரது மாற்றம் இயல்பாகவே நடந்தது குறித்து சந்தோஷம் அடைந்தார்கள். அவர் இவ்வளவு பேசுவாரா என்று அனைவரும் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, “என்னை இப்படி சொல்லிட்டியே கௌசி? நானும் இதுல ஹெல்ப் பண்றேன்” என்ற ஸ்ரீதரன், ரவீந்திரனிடம் நேரடியாகவே கேட்டு விட்டார்.
“ரவி! ஆரம்பத்தில இருந்தே இந்த வீட்டுல எங்களை சொந்தமா நீ ஒருத்தன் தான் மதிச்சு இருக்க. இன்னைக்கு எல்லாரும் சேர்ந்து இருக்கோம்னா அதுக்கு நீ எங்களை எப்பவும் விடாமல் இருந்ததும் ஒரு காரணம்
இந்த சொந்தம் நம்ம பசங்களுக்கு இடையிலும் கன்டிநியூ ஆகனும். இதெல்லாம் பேசற இடம் இது இல்லைன்னாலும் கேட்க வேண்டியதைக் கேட்கிறோம். அப்புறம் வீட்டுக்கு வந்து முறையா பேசறோம். உங்க எல்லோருக்கும் சம்மதமான்னு சொல்லு” என்று நீண்ட உரை ஆற்றினார்.
“மாமா, இந்தாங்க ஜூஸ். இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா?” என்று வந்து நின்ற ஆகாஷைப் பார்த்து அவர் முழிக்க, “அதான் மாமா, இந்த சம்மதமான்னு ஏதோ கேட்டீங்களே, அது தான். விட்டா என் தங்கச்சி இப்போவே அத்தான் கூட வந்திடுவா. அத்தை தான் கரெக்டா ஸ்பீடு பத்தி சொன்னாங்களே. நீங்க தான் சரியா கவனிக்கலை போல” என்று தங்கள் சம்மதத்தைத் தன் பாணியில் சொன்னான்
“ஓகே ஓகே..அப்போ சபை கலையட்டும். தாத்தா பாட்டி கிட்ட பேசி நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தம் ஃபிக்ஸ் பண்ணலாம். எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்கு போகலாம்”
“கிளம்புங்க. கிளம்புங்க. அண்ணா! உன்னையும் தான். அங்க என்ன பார்வை, இப்படியே திரும்பிப் போயிடு” என்று விரட்டினாள் ஸ்ரீநிதி.
“ஷ்ஷ் ஸ்ரீ கொஞ்சம் சும்மா இரு” என்ற அபிமன்யு “பார்கவி நான் இரண்டு பேரன்ட்ஸ் கிட்டயும் பேசிட்டேன். பார்க்கிங்ல வெயிட் பண்ணுவான். நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. எங்கேயாவது போய் பேசிட்டு வாங்க. நாங்க கிளம்பறோம்” என்றான்.
வத்ஸனும் அவர்களுடன் பார்க்கிங் நோக்கி நடந்தான். “வத்ஸ்! நிதானமா பேசு. வீட்டுக்கு போய் பேசினாலும் பிரச்சினை இல்லை. ஆனால் பேச வேண்டிய உங்களைப்பத்தி மட்டுமே பேசு. அம்மா ஆட்டுக்குட்டின்னு பேசினேன்னு தெரிஞ்சது, மகனே இந்த ஜென்மத்தில உனக்கு கல்யாணம் கிடையாது ஞாபகம் வச்சுக்கோ” என்று அவன் காதோரம் மிரட்டி விட்டு ஸ்ரீநிதியுடன் கிளம்பி விட்டான்.
சரணும் ராகவியும் கௌசல்யா மற்றும் ஸ்ரீதரனை தங்கள் காரில் அழைத்துச் செல்ல காத்திருந்தனர். அடுத்த பதினைந்து நிமிடத்தில் பார்கவி தாயுடன் வந்து சேர்ந்தாள். அவசரமாக அலங்காரங்களைக் களைந்து வந்திருக்கிறாள் என்பது பார்த்தாலே தெரிந்தது.
“உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை மாப்பிள்ளை. இன்னைக்கு ப்ரோகிராமும் இருந்ததால டயர்டா இருப்பா. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வரப் பாருங்க. டின்னர் முடிச்சுட்டு பேசுங்க” என்று சொல்லி அனுப்பினார் பெண்ணின் தாய்.
“இரண்டு பேரும் நல்லா தூங்கறாங்களே. எப்படி எழுப்பறது கவி?” கார் தங்கள் வீட்டு வாசலில் நின்றது கூடத் தெரியாமல் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த கௌசல்யாவும் ஸ்ரீதரனும் இவர்களின் பேச்சு சத்தம் கேட்டுக் கண் விழித்தனர்.
“சாரிப்பா! ரொம்ப நாளாச்சு இப்படி குட்டி தூக்கம் போட்டு” என்று இருவரும் ஒரே மாதிரியாகச் சொன்னபடி காரை விட்டு இறங்கி வீட்டின் கதவைத் திறந்தனர்.
இன்னமும் இறங்காமல் இருந்தவர்களைக் கண்டு “உள்ள வாங்க இரண்டு பேரும். சாப்பிட்டு தான் போகணும். நானும் உங்க அம்மா மாதிரி நல்லா சமைப்பேன் தெரியுமில்ல” என்று அவர்களை உள்ளே அழைத்தார்.
“அத்தான் என்ன பாத்துட்டு இருக்கீங்க. கூப்பிடுங்க பசங்களை” என்று கணவரையும் துணைக்கு அழைத்தார்.
“ஆமாம் பா. சமர்த்தா வந்துடுங்க. இன்னைக்கு வேற நான் தனியா மாட்டி இருக்கேன். அம்மா அப்பா வேற பேத்தி கூட ஒரு மாசம் இருந்துட்டு வரோம்னு சொல்லிட்டாங்க. வத்ஸனும் இல்லை. சிக்கின எலிகளை எப்படி விடறது? வந்துடுங்க ப்ளீஸ்!” என்று கிடைத்த வாய்ப்பில் மனைவியை நையாண்டி செய்தார் ஸ்ரீதரன்.
“ரொம்பத் தான். உங்க அங்கிளை பாரு கவி. பாவம் கஷ்டப் பட்டு நான் செஞ்சதை சாப்பிடறார்னு அவரைப் பார்த்தாலே தெரியுமே. நீ உள்ள வா. உனக்கும் அபி மாதிரி காரச் சட்னி பிடிக்குமா? செய்யட்டுமா?” என்றபடி உள்ளே போனார் கௌசல்யா.
“இதை சொன்னா நீங்க, அபி எல்லாருமே கோபப்படுவீங்க. ஆனாலும் என்னால சொல்லாமல் இருக்க முடியலை. ரொம்ப தேங்க்ஸ் பா உங்க எல்லோருக்கும்”
“போன காலம் திரும்பக் கிடைக்காது தான். ஆனாலும் மிச்ச வாழ்க்கையாவது சந்தோஷமா இருக்கப் போறோம்னு நினைச்சாலே மனசு நிறைஞ்சு இருக்கிற மாதிரி எப்படி சொல்றது, ஒரு இனந் தெரியாத ஒரு ஹேப்பி ஃபீல்” என்று மனதில் இருந்து பேசினார் ஸ்ரீதரன்.
கவியுடன் பேசிக் கொண்டே சமையல் அறையில் அவர்களுக்கான டின்னரைத் தயாரித்துக் கொண்டு இருந்த கௌசல்யாவும் கிட்டத்தட்ட இதே போன்ற விஷயங்களை தான் பேசிக் கொண்டு இருந்தார்.
கைகள் தன் போக்கில் வேலைகளைச் செய்து கொண்டு இருக்க, அவரது மனமோ தான் கடந்து வந்த பாதையின் பின்னே சென்று விடத் துடித்தது. மிகவும் பிரயத்தனப் பட்டு பழைய நினைவுகளில் இருந்து மீண்டவர், “நீயும் நிதி மாதிரி தானா, சாப்பிட மட்டுமே கிச்சனுக்கு வருவியா இல்லை…?” என்று இழுக்க.
“நானும் அப்படி தான் ஆனால் அப்படி இல்லை ஆன்ட்டி” என்று அவரைக் குழப்பியவள், சரண் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தனது குரலைத் தாழ்த்தி,
தொட்டுத் தொடரும் -28
“பிரமாதமான டேஸ்ட் எல்லாம் எதிர் பார்க்கமுடியாது. ஏதோ செய்வேன். என்னைத் தவிர நான் செய்யறத எல்லோரும் சாப்பிடுவாங்கன்னா என் சமையல் திறமை எப்படி, என் நாக்கு எப்படின்னு நீங்களே தெரிஞ்சுக்கோங்க” என்றாள்.
“ஆமா, பசி ருசியறியாதுன்னு சொல்வாங்களே அதே தான் சித்தி, அப்புறம் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு வேற சொல்லிடுவாங்க. அதான் வேற வழியில்லாமல் முழுங்கிட வேண்டியதா இருக்கு” என்று கரெக்டாக ஆஜரானான் சரண்.
இவ்வாறு கலகலப்பான அரைமணி நேரம் கழித்து அவர்கள் கிளம்ப, “கிரிஜா கிட்ட நாளைக்கு பேசணும் கவி. எப்போ ஃப்ரீயா இருப்பாங்கன்னு கேட்டு சொல்லு” என்ற கேள்வியோடு விடை கொடுத்து அனுப்பினார் கௌசல்யா.
Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் - 28
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தொட்டுத் தொடரும் - 28
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.