தொட்டுத் தொடரும் -23
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்
(*திருமணத்தை நினைதுக் கனா காணுதல்)
“நம்ம சரண் & கவி நிச்சயத்தை வர இருபதாம் தேதி வச்சிருக்கோம். கண்டிப்பா எல்லாரும் முன்னாடியே வந்துடணும்” என்று பத்திரிக்கையை நீட்டியபடி ராகவன் அழைக்க, “ஆமா, ஸ்ரீதரன், நிதி இல்லாமல் எப்படி வீட்டில ஒரு ஃபங்ஷன் நடத்தறதுன்னு யோசிச்சோம். வேற வழி இல்லையே, அவளோட எக்ஸாம் டைம் வந்தாச்சு, இந்த மாதிரி சின்ன ஃபங்ஷனுக்கு எல்லாம் லீவ் போடக் கூடாது, கல்யாணம் அவ இருக்கும் போது பண்ணிக்கலாம். நீங்க எல்லாரும் கண்டிப்பா காலைலயே வீட்டுக்கே வந்துடணும். சேர்ந்தே மண்டபத்துக்கு போயிடலாம்” என்று மகிழ்ச்சியுடன் அழைத்த கிருஷ்ணனின் அழைப்பில் ஸ்ரீதரன், பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றார்.
திட்டம்போட்டு செய்யவில்லை என்றாலும், அதே நாளில் அதே ஊரில் வேறு இடத்தில் ஸ்ரீநிதியின் நிச்சயதார்த்தம் கௌசல்யா தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையுடன் நடக்க இருக்கிறது என்று அவர்களிடம் எப்படி சொல்வது என்பதை அனைவரும் மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர்.
மணப் பெண் என்றாலும் நண்பர்கள் வீடு என்ற சலுகையில் தானும் வந்திருந்த ராகவி, “வத்ஸ்! நீ எனக்கு தான் பெஸ்ட் ஃப்ரண்ட். ஸோ, எங்க வீட்டுக்கு தான் நீ வரணும்” என்று தனது நட்பின் உறுதியை சரண் முன் நிலை நாட்ட முயன்றாள். புன்னகை மன்னனாகக் காட்சி அளித்த சரண், வத்ஸனின் பதிலுக்காகக் காத்திருந்தான்.
ஹாலில் இருந்த பெரியவர்கள் அனைவரும் ஊமையாக நிற்க, உள்ளறையில் இருந்து வந்த ஸ்ரீநிதி அனைவரையும் பார்த்து உற்சாகமானாள்.
“ஹேய்! அங்கிள், ஆன்ட்டி, அபி, சரண், கவி எல்லோரும் வாங்க! வாங்க! என் எங்கேஜ்மென்ட்க்கு எல்லாரும் இப்போவே வந்துட்டீங்களா? பாத்தீங்களா பாட்டி? தாட்ஸ் மை ஃப்ரண்ட்ஸ். லவ் யூ ஸோ மச்! நல்ல வேளை நீங்களே வந்தீங்க. இந்த பாட்டி என்னை வெளியே போகவே கூடாதுன்னு ஒரே தொல்லை. கங்கிராட்ஸ் கவி & சரண்! உங்க எங்கேஜ்மென்ட் எப்போ?
க்ருஷ் அங்கிள் உங்க வீட்டுக்கு பெர்மனன்ட்டா கூப்பிடறேன்னு சொன்னீங்க தானே. பட், இட்ஸ் ஓகே. என் ஹெட் ரைட்டிங் வேறயா இருந்திருக்கு. அப்பா ஏன் ஷாக் அடிச்ச மாதிரி நிக்கறாங்க? அண்ணா! நீயுமா? என்ன தான் ஆச்சு? ஏதாவது பேசு” என்று வந்தவர்கள் தன்னைப் பார்த்து அதிர்ச்சியில் நிற்கிறார்கள் என்பதையும், அவர்கள் தலையில் தன் பேச்சினால் பெரிய நியூக்ளியர் குண்டைப் போட்டதையும் தெரியாமல் பேசிக்கொண்டே போனாள்.
பேச்சினூடே, தந்தையின் கையில் இருந்த அழைப்பிதழைக் கண்டவள், “ஓ, இன்விடேஷன் வந்தாச்சாப்பா?” என்று அவசரமாகப் பிடுங்கி அதைப் பார்வையிட்டாள். அதை முழுமையாகப் படித்தவள், அதிர்ந்து போய் அழைப்பிதழைத் தவற விட்டாள்.
“ஸ்ரீ” “நிதி!” “நிதிமா” என்று மாறி மாறிப் பதறிய குரல்களால் ஒரு கசந்த முறுவல் அவளது இதழ்க்கடையில் தோன்றியது. கையால் யாரையும் அருகில் வர வேண்டாம் என்று தடுத்தவள், குனிந்து அழைப்பிதழைக் கையில் எடுத்துத் தந்தையின் கையில் வைத்து விட்டு, தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தாள். “நீங்களுமா?” என்று கேட்டதோ அந்தப் பார்வை??
பொங்கி வந்த அழுகையை அடக்கிய படி, சரண் மற்றும் ராகவியின் அருகில் சென்று, ஒரு கையால் சரணின் கையைப் பிடித்து கொண்டு, மறு கையால் ராகவியைக் கட்டி அணைத்து “ஆல் தி பெஸ்ட்! இரண்டு பேரும் எப்போதும் போல நல்லா இருங்க!” என்றவள்,
கௌசல்யாவை நேராக நோக்கி “கல்யாணமும் இவங்க எப்போ ஃபிக்ஸ் பண்றாங்களோ, தெரிஞ்சுகிட்டு அதே தேதில வச்சிடுங்கம்மா. உங்க பிடிவாதம் தானே ரொம்ப முக்கியம்” என்று யாரையும் திரும்பியும் பாராது அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டாள்.
அவளைத் தொடர்ந்து சென்று, பேச முயன்ற ராகவிக்குத் தோல்வியே மிஞ்சியது. தற்செயலாக நிகழ்ந்ததா, திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்று யாரும் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. ஆனாலும், நிச்சயதார்த்தம் வரை முடிவு செய்து இருப்பதைக் கூட, ஏன் நிதி வந்திருப்பதைக் கூடச் சொல்லவில்லையே என்ற வருத்தம் ஒவ்வொருவர் மனதிலும் எழாமல் இல்லை.
இத்தனைக்கும், ராகவி வத்ஸனிடம் கூட கேட்டு தான் தனது நிச்சயதார்த்த நாளைக் குறித்தாள். ஸ்ரீநிதி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் அவளிடம் கூறி வருத்தப் பட வைக்க வேண்டாம் என்று, தெளிவாக எதையும் கூறவில்லை. மற்றபடி தனது வாழ்க்கையின் முக்கிய நாளில், தனக்கு நெருக்கமான அனைவரும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மனித மனம் நினைப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையே!
வழக்கம் போலவே கிருஷ்ணன் சூழ்நிலையைக் கையில் எடுத்து, சாதாரணம் போலப் பேசி, நிலைமையையும் பிள்ளைகளின் மனதையும் ஓரளவு சமாதானப் படுத்தினார். “ஆல் தி பெஸ்ட், ஸ்ரீதரன். அப்போ… நீங்களும் பிஸியா இருப்பீங்க. நாங்க கிளம்பறோம். நிதியை சமாதானப் படுத்துங்க. அப்புறமா ஒரு நாள் எல்லாரும் மீட் பண்ணலாம்” என்று அனைவரையும் கிளப்பி விட்டார்.
அவர்கள் இருந்த மனநிலையில் மாப்பிள்ளை பற்றிய விவரங்களைக் கூடக் கேட்கத் தோன்றவில்லை. கேட்டிருந்தால், அந்த மாப்பிள்ளையின் லட்சணத்தை அப்போதே சரணும், அபியும் ஏன் ராகவனும் கூட சொல்லி இருப்பார்கள். பள்ளிக் காலத்திலேயே அவ்வளவு நல்ல பெயர் வாங்கியவன் அவன். பல வருடங்களாக சரணின் பக்கத்து வீட்டுக்காரனாக இருந்தவன்.
அனைவருக்கும் இடையே ஸ்ரீவத்ஸன் தான் நொந்து நூலாகப் போனான். தாயிடம் தேதிக்காக, எவ்வளவோ வாதாடி இருந்தவன், அவரது பிடிவாதம் உணர்ந்து நேரத்தை மாற்றிச் சொல்லி இருந்தான். அதாவது, மாலையில் நடக்க இருந்த கவி-சரண் நிச்சயதார்த்தம், காலையில் நடக்க இருப்பதாகச் சொல்லி இருந்தான். அப்போது தான் தாய் அதே நேரத்தில் தங்கையின் நிச்சயத்தை உறுதி செய்வார்.
இந்த விழா முடிந்தவுடன் நண்பர்கள் வீடு சென்று விடலாம் என்று இவன் மாஸ்டர் பிளான் போட, அவர்கள் முதல் அழைப்பை இவர்களுக்கு வைப்பார்கள் என்று கனவா கண்டான்? அதுவும் கௌசல்யா இன்னும் காலையா? மாலையா? என்று பூவா தலையா போட்டுக் கொண்டு இருந்த நேரத்தில்??
அப்போதும் அவர்களின் பெருந்தன்மையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த குற்ற உணர்வு நிச்சயதார்த்த விழாவை ஆனந்தமாக அனுபவிக்க விடவே இல்லை. அதற்கு ஏற்றாற் போல், அந்த அருமை மாப்பிள்ளை, விமானம் கிட்டத்தட்ட பத்து மணி நேரம் தாமதமானதால், கடைசி நேரத்தில் வந்து சேர, ஏனோ தானோ என்று உற்சாகமே இன்றி நிச்சயம் நடந்து முடிந்தது.
“அண்ணனும் தங்கையும் கொஞ்சம் அழுகாச்சி காவியத்த நிப்பாட்டிட்டு கிளம்பினா நல்லா இருக்கும். பசங்க தூங்குற கேப்புல ஏர்போர்ட் போறோம்னு, ஹோட்டலுக்கு வந்து இருக்கோம் ஞாபகம் இருக்கட்டும். ஏண்டா வத்ஸ், வீட்டுக்கு தானே வரப்போற இல்ல, அப்படியே திரும்பி அமெரிக்கா போயிட போறியா?” என்று ஸ்ரீநிதியின் அழுகையைக் காணப் பிடிக்காத கோபத்தை வார்த்தைகளில் காட்டினான் அபிமன்யு.
கண்களில் நீர் வழிய, பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த அண்ணன் தங்கை இருவருமே, கண்களைத் துடைத்து அழுகையை அடக்க முயற்சி செய்தனர். தனது வாழ்க்கையின் மறக்க முடியாத கருமையான பக்கங்களை அண்ணன் இப்போதாவது கேட்டானே என்று ஸ்ரீநிதியால் சந்தோஷப் பட முடியவில்லை, இத்தனை நாளும் கேட்கவில்லையே என்று தான் தோன்றியது.
“அபி செஞ்ச ஹெல்ப் எல்லாம் தெரிஞ்சிருந்தா அபி கிட்ட அம்மா நல்லா நடந்திருப்பாங்க அண்ணா” என்று ஆரம்பித்தவளை,
“ஸ்ரீ! நீ ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ. எனக்கு அப்படித் தான் மரியாதை கிடைக்கணும்னு இல்லை. அப்புறம், உங்க அம்மாவுக்கு எவ்வளவு விஷயம் தெரியும்னு நம்ம யாருக்கும் இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் தெரியாது. இதைப் பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்”
“ஒன் மோர் டைம், எங்கேயாவது இந்த பேச்சு வந்தால் யு வில் சீ எ டோட்டலி டிஃபரன்ட் அபிமன்யு. எவனோ சம்பந்தமே இல்லாத ஒருத்தன் லூசுத்தனமா செஞ்சத நினைச்சு நம்ம ப்ரசன்ட் வாழ்க்கைய குழப்பிக்கிறது போதும். அதையே நினைச்சிட்டு இருந்தா, நம்ம லைஃபோட சந்தோஷங்களை எப்போ அனுபவிக்கறது. ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட்!” என்று அவளை மேலே பேச விடாமல் செய்தான்.
அவனே தொடர்ந்து, “ஆனால், எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு வத்ஸ், உனக்கு கேட்க பிடிக்காத, நீ காதால் கேட்கக் கூடாத கேள்விகள். ஆனா, என்னால இப்போ கேட்காமல் இருக்க முடியாது. ஒரு பத்தே நிமிஷம்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தவன், அடுத்த பத்து நிமிடங்களுக்கு பேசிய பேச்சு வத்ஸனை ஊமையாக்கி விட்டது. அவன் பேச்சில் இருந்த உண்மை நெருப்பாக சுட்டது.
“அவசரமா அருமையா மாப்பிள்ளை பார்த்தீங்க ஓகே. அதுவும் நானிருந்த இத்தாலியிலேயே ஆளைப் புடிச்சீங்க, அதுவும் கூட ஓகே. தெரியாமல் தான் கேட்கிறேன், உங்க அம்மா தான் எல்லாமே செய்யறாங்கன்னா, நீயும் உங்கப்பாவும் எதுக்கு அந்த வீட்டில?
மண்ணையும் கல்லையும் தோண்டி பல ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாங்கன்னு கரெக்டா சொல்ற உங்க அப்பா, கூட இருக்கிற மனைவியோட மனசுலயே என்ன இருக்கு, என்ன தான் செய்யறாங்கன்னு தெரிஞ்சுக்க இப்போ வரைக்குமே நினைக்கிறது மாதிரி தெரியலை.
உங்க அம்மா இது என் வீடு, இங்க நான் தான் எல்லாருக்கும், எல்லாமே செய்வேன்னு இருந்ததால தான் உங்க அப்பா வீட்டுக் கவலையை மறந்து தன் கெரியர்ல இவ்ளோ தூரம் வளர்ந்து இருக்கார். வீட்டைத் தான் மனைவி பாத்துக்கிறாளே, நாம வேற எதுக்கு அப்படின்ற மனோபாவம்.
அதே அம்மா தனக்குக் கிடைக்காத எல்லாம் என் பசங்க அனுபவிச்சே ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சு, பெஸ்ட் பெஸ்ட்டுனு தேடி அலைஞ்சு கஷ்டப் பட்டதால தான் நீங்க இரண்டு பேரும் எதற்குமே கவலைப் படாமல் சொகுசான வாழ்க்கை வாழ்ந்தீங்க. இல்லேன்னு சொல்ல முடியுமா உங்களால?
மே பி, ஃப்ரண்ட்ஸே இல்லை, ஊர் சுத்த முடியலை, இப்படி எல்லாம் நீ எப்பயாச்சும் ப்ரோடெஸ்ட் பண்ணி இருந்தா உங்க அம்மா யோசிச்சு இருக்கலாம். ஆனால் நீ கம்ஃபோர்ட் ஜோன்ல இருந்து வெளியே வர இஷ்டப்படவே இல்லை அது தான் உண்மை.
இப்போ இந்த டாக்டர் படிப்பு, வெளிநாட்டு வாசம் இதெல்லாம் உன் கிட்ட கொஞ்சம் மாற்றங்களை கொண்டு வந்து இருக்கலாம். இப்போ நீயா ஒரு முயற்சி எடுக்கற. குட். வி ஆர் வெரி ஹேப்பி அன்ட் ப்ரௌட் ஆஃப் யூ.
ஆனா, இப்போ கூட அம்மாவோட மனசு சரியாகனும்னு தான் இந்த விஷயங்களை கேட்கறியே தவிர ஒரு அண்ணனா அவ வாழ்க்கையில என்ன நடந்தது, எவ்வளவு வலியும் வேதனையும் தனியா அனுபவிச்சா, எப்படி வெளியே வந்தான்னு கேட்கக் தோணிச்சா? கல்யாணம் நின்ன கையோட அடுத்து பக்கத்திலயே இருக்கிறவனை மாப்பிள்ளையா பார்க்கத் தோணிச்சே, அவ மனசில என்ன பிரச்சினை இருந்ததுன்னு தெரியுமா? சாரி டு ஸே திஸ். இது ஒரு வகையான எஸ்கேபிஸம் வத்ஸ். நீயும் உங்க அப்பா மாதிரி தான், எல்லாத்துக்கும் உங்க அம்மா பக்கம் கை காண்பிச்சிட்டு ஈஸியா தப்பிச்சிட்டு இருந்திருக்க.
நல்ல வேளை, ஸ்ரீ இந்த விஷயத்தில உங்க அம்மா மாதிரி பிடிவாதத்தோட பிறந்ததால ஆட்டோ கரெக்ட் பண்ணிகிட்டு தெளிவாகிட்டா. குடும்பம் ஹெல்ப் பண்ணும்னு வெயிட் பண்ற பொண்ணா இருந்தா, காணாமலே போயிருப்பா.
அப்படி என்ன, ஸ்ரீராம்கிற பேரே அவனோட கேரக்டரை சர்ட்டிஃபை பண்ணிடுச்சா? நாம எல்லாம் புராண காலத்திலேயா இருக்கோம்? நம்ம பேருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நம்ம பேரன்ட்ஸ், ஏதோ அவங்களுக்கு புடிச்ச பேரை வச்சிருக்காங்க.
சில நேரங்கள்ல அந்த கேரக்டர் மாதிரி நாம இருக்கணும்னு ஆசையில வைச்சிருக்கலாம்? எல்லாமே அப்படியே இருக்கணும்னோ இல்லை நடக்கணும்னோ என்ன அவசியம்? அபிமன்யுனு பேர் இருந்தா தைரியசாலியாய், புத்திசாலியாய் இருக்கிறதோட சீக்கிரம் செத்துப் போயிடுவேன்னும் யாராவது சொன்னால் பைத்தியக்காரத்தனமா இல்ல?
இடியாடிக் சென்ட்டிமென்ட்ஸ்! அத்தையும் யாரோ ஒரு அரைவேக்காடு ஜோசியர் சொன்னதை நம்பி என்னை வேண்டாம்னு ஒதுக்கி, அந்த மடையனை மாப்பிள்ளையா செலக்ட் பண்ணியதை என்னன்னு சொல்றது” என்று பொரிந்தவனை, அபிமன்யு என்ற பெயர் விளக்கத்தில் அதிர்ந்து, “அபி!” என்ற அலறலோடு வந்து அவனைக் கட்டிக் கொண்டாள் ஸ்ரீநிதி.
மற்றவர்களோ, அவனது கடைசி வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து உறைந்து போய் நின்றிருந்தனர்.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்
(*திருமணத்தை நினைதுக் கனா காணுதல்)
“நம்ம சரண் & கவி நிச்சயத்தை வர இருபதாம் தேதி வச்சிருக்கோம். கண்டிப்பா எல்லாரும் முன்னாடியே வந்துடணும்” என்று பத்திரிக்கையை நீட்டியபடி ராகவன் அழைக்க, “ஆமா, ஸ்ரீதரன், நிதி இல்லாமல் எப்படி வீட்டில ஒரு ஃபங்ஷன் நடத்தறதுன்னு யோசிச்சோம். வேற வழி இல்லையே, அவளோட எக்ஸாம் டைம் வந்தாச்சு, இந்த மாதிரி சின்ன ஃபங்ஷனுக்கு எல்லாம் லீவ் போடக் கூடாது, கல்யாணம் அவ இருக்கும் போது பண்ணிக்கலாம். நீங்க எல்லாரும் கண்டிப்பா காலைலயே வீட்டுக்கே வந்துடணும். சேர்ந்தே மண்டபத்துக்கு போயிடலாம்” என்று மகிழ்ச்சியுடன் அழைத்த கிருஷ்ணனின் அழைப்பில் ஸ்ரீதரன், பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றார்.
திட்டம்போட்டு செய்யவில்லை என்றாலும், அதே நாளில் அதே ஊரில் வேறு இடத்தில் ஸ்ரீநிதியின் நிச்சயதார்த்தம் கௌசல்யா தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையுடன் நடக்க இருக்கிறது என்று அவர்களிடம் எப்படி சொல்வது என்பதை அனைவரும் மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர்.
மணப் பெண் என்றாலும் நண்பர்கள் வீடு என்ற சலுகையில் தானும் வந்திருந்த ராகவி, “வத்ஸ்! நீ எனக்கு தான் பெஸ்ட் ஃப்ரண்ட். ஸோ, எங்க வீட்டுக்கு தான் நீ வரணும்” என்று தனது நட்பின் உறுதியை சரண் முன் நிலை நாட்ட முயன்றாள். புன்னகை மன்னனாகக் காட்சி அளித்த சரண், வத்ஸனின் பதிலுக்காகக் காத்திருந்தான்.
ஹாலில் இருந்த பெரியவர்கள் அனைவரும் ஊமையாக நிற்க, உள்ளறையில் இருந்து வந்த ஸ்ரீநிதி அனைவரையும் பார்த்து உற்சாகமானாள்.
“ஹேய்! அங்கிள், ஆன்ட்டி, அபி, சரண், கவி எல்லோரும் வாங்க! வாங்க! என் எங்கேஜ்மென்ட்க்கு எல்லாரும் இப்போவே வந்துட்டீங்களா? பாத்தீங்களா பாட்டி? தாட்ஸ் மை ஃப்ரண்ட்ஸ். லவ் யூ ஸோ மச்! நல்ல வேளை நீங்களே வந்தீங்க. இந்த பாட்டி என்னை வெளியே போகவே கூடாதுன்னு ஒரே தொல்லை. கங்கிராட்ஸ் கவி & சரண்! உங்க எங்கேஜ்மென்ட் எப்போ?
க்ருஷ் அங்கிள் உங்க வீட்டுக்கு பெர்மனன்ட்டா கூப்பிடறேன்னு சொன்னீங்க தானே. பட், இட்ஸ் ஓகே. என் ஹெட் ரைட்டிங் வேறயா இருந்திருக்கு. அப்பா ஏன் ஷாக் அடிச்ச மாதிரி நிக்கறாங்க? அண்ணா! நீயுமா? என்ன தான் ஆச்சு? ஏதாவது பேசு” என்று வந்தவர்கள் தன்னைப் பார்த்து அதிர்ச்சியில் நிற்கிறார்கள் என்பதையும், அவர்கள் தலையில் தன் பேச்சினால் பெரிய நியூக்ளியர் குண்டைப் போட்டதையும் தெரியாமல் பேசிக்கொண்டே போனாள்.
பேச்சினூடே, தந்தையின் கையில் இருந்த அழைப்பிதழைக் கண்டவள், “ஓ, இன்விடேஷன் வந்தாச்சாப்பா?” என்று அவசரமாகப் பிடுங்கி அதைப் பார்வையிட்டாள். அதை முழுமையாகப் படித்தவள், அதிர்ந்து போய் அழைப்பிதழைத் தவற விட்டாள்.
“ஸ்ரீ” “நிதி!” “நிதிமா” என்று மாறி மாறிப் பதறிய குரல்களால் ஒரு கசந்த முறுவல் அவளது இதழ்க்கடையில் தோன்றியது. கையால் யாரையும் அருகில் வர வேண்டாம் என்று தடுத்தவள், குனிந்து அழைப்பிதழைக் கையில் எடுத்துத் தந்தையின் கையில் வைத்து விட்டு, தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தாள். “நீங்களுமா?” என்று கேட்டதோ அந்தப் பார்வை??
பொங்கி வந்த அழுகையை அடக்கிய படி, சரண் மற்றும் ராகவியின் அருகில் சென்று, ஒரு கையால் சரணின் கையைப் பிடித்து கொண்டு, மறு கையால் ராகவியைக் கட்டி அணைத்து “ஆல் தி பெஸ்ட்! இரண்டு பேரும் எப்போதும் போல நல்லா இருங்க!” என்றவள்,
கௌசல்யாவை நேராக நோக்கி “கல்யாணமும் இவங்க எப்போ ஃபிக்ஸ் பண்றாங்களோ, தெரிஞ்சுகிட்டு அதே தேதில வச்சிடுங்கம்மா. உங்க பிடிவாதம் தானே ரொம்ப முக்கியம்” என்று யாரையும் திரும்பியும் பாராது அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டாள்.
அவளைத் தொடர்ந்து சென்று, பேச முயன்ற ராகவிக்குத் தோல்வியே மிஞ்சியது. தற்செயலாக நிகழ்ந்ததா, திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்று யாரும் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. ஆனாலும், நிச்சயதார்த்தம் வரை முடிவு செய்து இருப்பதைக் கூட, ஏன் நிதி வந்திருப்பதைக் கூடச் சொல்லவில்லையே என்ற வருத்தம் ஒவ்வொருவர் மனதிலும் எழாமல் இல்லை.
இத்தனைக்கும், ராகவி வத்ஸனிடம் கூட கேட்டு தான் தனது நிச்சயதார்த்த நாளைக் குறித்தாள். ஸ்ரீநிதி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் அவளிடம் கூறி வருத்தப் பட வைக்க வேண்டாம் என்று, தெளிவாக எதையும் கூறவில்லை. மற்றபடி தனது வாழ்க்கையின் முக்கிய நாளில், தனக்கு நெருக்கமான அனைவரும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மனித மனம் நினைப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையே!
வழக்கம் போலவே கிருஷ்ணன் சூழ்நிலையைக் கையில் எடுத்து, சாதாரணம் போலப் பேசி, நிலைமையையும் பிள்ளைகளின் மனதையும் ஓரளவு சமாதானப் படுத்தினார். “ஆல் தி பெஸ்ட், ஸ்ரீதரன். அப்போ… நீங்களும் பிஸியா இருப்பீங்க. நாங்க கிளம்பறோம். நிதியை சமாதானப் படுத்துங்க. அப்புறமா ஒரு நாள் எல்லாரும் மீட் பண்ணலாம்” என்று அனைவரையும் கிளப்பி விட்டார்.
அவர்கள் இருந்த மனநிலையில் மாப்பிள்ளை பற்றிய விவரங்களைக் கூடக் கேட்கத் தோன்றவில்லை. கேட்டிருந்தால், அந்த மாப்பிள்ளையின் லட்சணத்தை அப்போதே சரணும், அபியும் ஏன் ராகவனும் கூட சொல்லி இருப்பார்கள். பள்ளிக் காலத்திலேயே அவ்வளவு நல்ல பெயர் வாங்கியவன் அவன். பல வருடங்களாக சரணின் பக்கத்து வீட்டுக்காரனாக இருந்தவன்.
அனைவருக்கும் இடையே ஸ்ரீவத்ஸன் தான் நொந்து நூலாகப் போனான். தாயிடம் தேதிக்காக, எவ்வளவோ வாதாடி இருந்தவன், அவரது பிடிவாதம் உணர்ந்து நேரத்தை மாற்றிச் சொல்லி இருந்தான். அதாவது, மாலையில் நடக்க இருந்த கவி-சரண் நிச்சயதார்த்தம், காலையில் நடக்க இருப்பதாகச் சொல்லி இருந்தான். அப்போது தான் தாய் அதே நேரத்தில் தங்கையின் நிச்சயத்தை உறுதி செய்வார்.
இந்த விழா முடிந்தவுடன் நண்பர்கள் வீடு சென்று விடலாம் என்று இவன் மாஸ்டர் பிளான் போட, அவர்கள் முதல் அழைப்பை இவர்களுக்கு வைப்பார்கள் என்று கனவா கண்டான்? அதுவும் கௌசல்யா இன்னும் காலையா? மாலையா? என்று பூவா தலையா போட்டுக் கொண்டு இருந்த நேரத்தில்??
அப்போதும் அவர்களின் பெருந்தன்மையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த குற்ற உணர்வு நிச்சயதார்த்த விழாவை ஆனந்தமாக அனுபவிக்க விடவே இல்லை. அதற்கு ஏற்றாற் போல், அந்த அருமை மாப்பிள்ளை, விமானம் கிட்டத்தட்ட பத்து மணி நேரம் தாமதமானதால், கடைசி நேரத்தில் வந்து சேர, ஏனோ தானோ என்று உற்சாகமே இன்றி நிச்சயம் நடந்து முடிந்தது.
“அண்ணனும் தங்கையும் கொஞ்சம் அழுகாச்சி காவியத்த நிப்பாட்டிட்டு கிளம்பினா நல்லா இருக்கும். பசங்க தூங்குற கேப்புல ஏர்போர்ட் போறோம்னு, ஹோட்டலுக்கு வந்து இருக்கோம் ஞாபகம் இருக்கட்டும். ஏண்டா வத்ஸ், வீட்டுக்கு தானே வரப்போற இல்ல, அப்படியே திரும்பி அமெரிக்கா போயிட போறியா?” என்று ஸ்ரீநிதியின் அழுகையைக் காணப் பிடிக்காத கோபத்தை வார்த்தைகளில் காட்டினான் அபிமன்யு.
கண்களில் நீர் வழிய, பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த அண்ணன் தங்கை இருவருமே, கண்களைத் துடைத்து அழுகையை அடக்க முயற்சி செய்தனர். தனது வாழ்க்கையின் மறக்க முடியாத கருமையான பக்கங்களை அண்ணன் இப்போதாவது கேட்டானே என்று ஸ்ரீநிதியால் சந்தோஷப் பட முடியவில்லை, இத்தனை நாளும் கேட்கவில்லையே என்று தான் தோன்றியது.
“அபி செஞ்ச ஹெல்ப் எல்லாம் தெரிஞ்சிருந்தா அபி கிட்ட அம்மா நல்லா நடந்திருப்பாங்க அண்ணா” என்று ஆரம்பித்தவளை,
“ஸ்ரீ! நீ ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ. எனக்கு அப்படித் தான் மரியாதை கிடைக்கணும்னு இல்லை. அப்புறம், உங்க அம்மாவுக்கு எவ்வளவு விஷயம் தெரியும்னு நம்ம யாருக்கும் இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் தெரியாது. இதைப் பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்”
“ஒன் மோர் டைம், எங்கேயாவது இந்த பேச்சு வந்தால் யு வில் சீ எ டோட்டலி டிஃபரன்ட் அபிமன்யு. எவனோ சம்பந்தமே இல்லாத ஒருத்தன் லூசுத்தனமா செஞ்சத நினைச்சு நம்ம ப்ரசன்ட் வாழ்க்கைய குழப்பிக்கிறது போதும். அதையே நினைச்சிட்டு இருந்தா, நம்ம லைஃபோட சந்தோஷங்களை எப்போ அனுபவிக்கறது. ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட்!” என்று அவளை மேலே பேச விடாமல் செய்தான்.
அவனே தொடர்ந்து, “ஆனால், எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு வத்ஸ், உனக்கு கேட்க பிடிக்காத, நீ காதால் கேட்கக் கூடாத கேள்விகள். ஆனா, என்னால இப்போ கேட்காமல் இருக்க முடியாது. ஒரு பத்தே நிமிஷம்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தவன், அடுத்த பத்து நிமிடங்களுக்கு பேசிய பேச்சு வத்ஸனை ஊமையாக்கி விட்டது. அவன் பேச்சில் இருந்த உண்மை நெருப்பாக சுட்டது.
“அவசரமா அருமையா மாப்பிள்ளை பார்த்தீங்க ஓகே. அதுவும் நானிருந்த இத்தாலியிலேயே ஆளைப் புடிச்சீங்க, அதுவும் கூட ஓகே. தெரியாமல் தான் கேட்கிறேன், உங்க அம்மா தான் எல்லாமே செய்யறாங்கன்னா, நீயும் உங்கப்பாவும் எதுக்கு அந்த வீட்டில?
மண்ணையும் கல்லையும் தோண்டி பல ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாங்கன்னு கரெக்டா சொல்ற உங்க அப்பா, கூட இருக்கிற மனைவியோட மனசுலயே என்ன இருக்கு, என்ன தான் செய்யறாங்கன்னு தெரிஞ்சுக்க இப்போ வரைக்குமே நினைக்கிறது மாதிரி தெரியலை.
உங்க அம்மா இது என் வீடு, இங்க நான் தான் எல்லாருக்கும், எல்லாமே செய்வேன்னு இருந்ததால தான் உங்க அப்பா வீட்டுக் கவலையை மறந்து தன் கெரியர்ல இவ்ளோ தூரம் வளர்ந்து இருக்கார். வீட்டைத் தான் மனைவி பாத்துக்கிறாளே, நாம வேற எதுக்கு அப்படின்ற மனோபாவம்.
அதே அம்மா தனக்குக் கிடைக்காத எல்லாம் என் பசங்க அனுபவிச்சே ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சு, பெஸ்ட் பெஸ்ட்டுனு தேடி அலைஞ்சு கஷ்டப் பட்டதால தான் நீங்க இரண்டு பேரும் எதற்குமே கவலைப் படாமல் சொகுசான வாழ்க்கை வாழ்ந்தீங்க. இல்லேன்னு சொல்ல முடியுமா உங்களால?
மே பி, ஃப்ரண்ட்ஸே இல்லை, ஊர் சுத்த முடியலை, இப்படி எல்லாம் நீ எப்பயாச்சும் ப்ரோடெஸ்ட் பண்ணி இருந்தா உங்க அம்மா யோசிச்சு இருக்கலாம். ஆனால் நீ கம்ஃபோர்ட் ஜோன்ல இருந்து வெளியே வர இஷ்டப்படவே இல்லை அது தான் உண்மை.
இப்போ இந்த டாக்டர் படிப்பு, வெளிநாட்டு வாசம் இதெல்லாம் உன் கிட்ட கொஞ்சம் மாற்றங்களை கொண்டு வந்து இருக்கலாம். இப்போ நீயா ஒரு முயற்சி எடுக்கற. குட். வி ஆர் வெரி ஹேப்பி அன்ட் ப்ரௌட் ஆஃப் யூ.
ஆனா, இப்போ கூட அம்மாவோட மனசு சரியாகனும்னு தான் இந்த விஷயங்களை கேட்கறியே தவிர ஒரு அண்ணனா அவ வாழ்க்கையில என்ன நடந்தது, எவ்வளவு வலியும் வேதனையும் தனியா அனுபவிச்சா, எப்படி வெளியே வந்தான்னு கேட்கக் தோணிச்சா? கல்யாணம் நின்ன கையோட அடுத்து பக்கத்திலயே இருக்கிறவனை மாப்பிள்ளையா பார்க்கத் தோணிச்சே, அவ மனசில என்ன பிரச்சினை இருந்ததுன்னு தெரியுமா? சாரி டு ஸே திஸ். இது ஒரு வகையான எஸ்கேபிஸம் வத்ஸ். நீயும் உங்க அப்பா மாதிரி தான், எல்லாத்துக்கும் உங்க அம்மா பக்கம் கை காண்பிச்சிட்டு ஈஸியா தப்பிச்சிட்டு இருந்திருக்க.
நல்ல வேளை, ஸ்ரீ இந்த விஷயத்தில உங்க அம்மா மாதிரி பிடிவாதத்தோட பிறந்ததால ஆட்டோ கரெக்ட் பண்ணிகிட்டு தெளிவாகிட்டா. குடும்பம் ஹெல்ப் பண்ணும்னு வெயிட் பண்ற பொண்ணா இருந்தா, காணாமலே போயிருப்பா.
அப்படி என்ன, ஸ்ரீராம்கிற பேரே அவனோட கேரக்டரை சர்ட்டிஃபை பண்ணிடுச்சா? நாம எல்லாம் புராண காலத்திலேயா இருக்கோம்? நம்ம பேருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நம்ம பேரன்ட்ஸ், ஏதோ அவங்களுக்கு புடிச்ச பேரை வச்சிருக்காங்க.
சில நேரங்கள்ல அந்த கேரக்டர் மாதிரி நாம இருக்கணும்னு ஆசையில வைச்சிருக்கலாம்? எல்லாமே அப்படியே இருக்கணும்னோ இல்லை நடக்கணும்னோ என்ன அவசியம்? அபிமன்யுனு பேர் இருந்தா தைரியசாலியாய், புத்திசாலியாய் இருக்கிறதோட சீக்கிரம் செத்துப் போயிடுவேன்னும் யாராவது சொன்னால் பைத்தியக்காரத்தனமா இல்ல?
இடியாடிக் சென்ட்டிமென்ட்ஸ்! அத்தையும் யாரோ ஒரு அரைவேக்காடு ஜோசியர் சொன்னதை நம்பி என்னை வேண்டாம்னு ஒதுக்கி, அந்த மடையனை மாப்பிள்ளையா செலக்ட் பண்ணியதை என்னன்னு சொல்றது” என்று பொரிந்தவனை, அபிமன்யு என்ற பெயர் விளக்கத்தில் அதிர்ந்து, “அபி!” என்ற அலறலோடு வந்து அவனைக் கட்டிக் கொண்டாள் ஸ்ரீநிதி.
மற்றவர்களோ, அவனது கடைசி வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து உறைந்து போய் நின்றிருந்தனர்.
Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -23
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தொட்டுத் தொடரும் -23
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.