Ilampillai
New member
- Joined
- Mar 27, 2025
- Messages
- 22
கடல் தேடும் மீன்கள் -7
திருமணம் ஆன அடுத்த சில வாரங்கள் தாண்டி மாதங்கள் ஆனபோது இதோ வயிற்றில் பிள்ளையுடன் கணவனைக் காண காவல் நிலையத்தில் வந்து நிற்கிறாள் இனியா..
"நீ யாரும்மா?"
"நான் நல்லவனோட மனைவி."
"ஓ ! நீ தானா ? " நக்கலாக அந்த பெண் காவலதிகாரி இவளை ஏற இறங்கப் பார்த்தார். அவள் மீது படிந்த அவரின் பார்வை நிச்சயம் கேவலமாகத் தான் இருந்தது..
யாரோ ஒரு பெரியவர் வந்து இவளின் தோளைக் குலுக்கினார்.
'ஏம்மா? நீங்கல்லாம் நல்லா இருப்பீங்களா ? என்னோட வயிறு எரியுது. நான் பெத்த புள்ள மூஞ்சில இப்படி அசிட் அடிச்சுட்டாங்களே. *** !*** !"
என்று தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.
"அய்யா ப்ளீஸ் ! உங்க வாயால எதுவும் சொல்லாதீங்க. இப்ப நான் மாசமா இருக்கேன்."
இனிப்புடன், கொண்டவனிடம் சொல்ல வேண்டியவள் இப்போது அவனுக்காக யாரோ ஒருவரிடம் கையெடுத்துக் கும்பிட்டாள் . அதுவும் காவல் நிலையத்தில்.
"நாங்களும் புள்ளைய வலிக்கத்தானே பெத்தோம். இந்த மாதிரி ஜென்மத்துக்கெல்லாம் புள்ள ஒரு கேடா தூ !"
"சார் ! கொஞ்சம் பொறுமையா இருங்க. அவங்க என்ன பண்ணுவாங்க. நீங்க உக்காருங்க." யாரோ ஒரு இளைஞன் அவரை தோளில் சாய்த்து சமாதானம் செய்துக் கொண்டிருந்தான்.
அந்த இளைஞன் தான் இப்போது நாம் கோவிலில் பார்த்தவன்.
கரிகாலன் வெட்ஸ் ரூபாவதி என்ற பெரிய பேனர் வாயிலில் வைக்கப்பட்டிருந்தது . சற்று நேரத்துக்கு முன்புதான் மணமகனும் மணமகனும் ரிசப்ஷன் முடிந்து அவரவர் அறைக்கு சென்றிருந்தார்கள். இளவட்டங்கள் ஆண்களும் பெண்களும் விதவிதமான ஆடைகளுடன் சுற்றிக்கொண்டிருக்க பெரியவர்கள் வழக்கம்போல் புடவைகளில், வேட்டியில் சுற்றி வந்தார்கள் .
தனது அலங்காரம் எல்லாம் கலைத்து விட்டு படுத்துக் கொள்கிறேன் என்ற அவளை அதற்குப் பிறகு யாராலும் பார்க்க முடியவில்லை. கடிதம் எழுதிவிட்டு தன்னுடைய காதலனுடன் அவள் ஓடிப் போய் விட்டாள் ரூபாவதி.
கரிகாலன்! உங்கள மாதிரி உருவத்தில் இருக்கிற ஒருத்தருக்கு என்னைப் போன்ற அழகான பெண்ணுடன் திருமணங்கறது ரொம்ப சந்தோஷம் தரக்கூடிய விஷயம். ஆனால் உங்கள மாதிரி ஒருத்தருக்கு என்ன மாதிரி ஒரு பொண்ணு திருமணம் பண்ணா அந்த பொண்ணுக்கு அது நரகம் . நான் எனக்கு பிடிச்சவரோட சொர்க்கத்தை தேடி போறேன் ."
இதை முன்பே சொல்லி இருந்தால் கரிகாலன் ஏற்றுக் கொண்டிருப்பான். அருகில் நின்று கைப்பிடித்து சிரித்து பேசி இப்படி ஏமாற்றி இருக்க வேண்டாம். திருமணம் சுற்றி இருந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேச ஏதோ சுற்றிவர இருந்த பெண்கள் எல்லாம் இவனை ஏளனமாக பார்ப்பது போல அவனுக்கு தோன்றியது. அவன் அன்னைக்கு அளவிட முடியாது துக்கம் .
கரிகாலன் அவன் தந்தையைப் போல இருந்தான். அவன் தந்தைக்கு அவன் அன்னை கிடைத்தது போல தனக்கும் இந்த ரூபா கிடைத்திருக்கிறாள் என்று மிகவும் சந்தோஷமாக இருந்தான். அவனுக்கு அவன் அன்னை தந்தை என்றால் மிகவும் பிரியம் .
அவன் தந்தை எப்போதுமே நான் என் மனைவியை தான் சார்ந்து இருக்கிறேன் என்று வாயாரச் சொல்வார் . அது அவருக்குப் பெருமைதான். "கடைல என்ன அரிசி பருப்பு இருக்குன்னு தெரிஞ்ச எனக்கு வீட்டில் என்ன அரிசி பருப்பு இருக்குன்னு எனக்கு தெரியாது . அதே மாதிரி பொருளாதாரமும் தெரியாது" என்று கூறிக்கொண்டு கையில் கிடைக்கும் அத்தனை பணத்தையும் கொண்டு வந்து மனைவியிடம் ஒப்படைத்து விடுவார் . தினமும் வெளியில் செல்லும்போது அவருக்கு என்ன தேவையோ அதை மனைவியிடம் இருந்துதான் கேட்டு வாங்கிக் கொள்வார் .
இந்த பழக்கம் அவருக்கு அவர் தந்தையிடமிருந்து வந்தது. அவர்களைப் பொறுத்தவரையில் மனைவிதான் மகாலட்சுமி அந்த மகாலட்சுமி சிரிக்க சிரிக்க தான் வீட்டில் தனலட்சுமி பெருகுவாள் என்று அசாத்திய நம்பிக்கை கொண்டவர்கள். அதை வாழ்க்கை முழுவதும் செய்து காண்பித்தவர்கள் .
தன் தந்தையைப் போல தானும் இருக்க வேண்டும் என்று வாழ்ந்தவர் தன்மகன் தன்னைப் போல வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அதை பார்ப்பதற்கு அவர் உயிருடன் இல்லை . வேலைக்கு சென்று திரும்பும் வழியில் சிறு வீடு பற்றி கொண்டு எறிய அதில் இருந்த குழந்தையை காப்பாற்றி விட்டு தன் உயிரை இழந்து இருந்தார் .
அவர்கள் சொந்தமாக மளிகை கடை வைத்திருந்தார்கள் கணவனை இழந்த தாய் வளர்மதி தான் அந்த கடையை பார்த்துக்கொண்டார் . கணவன் அளவுக்கு இவரால் திறம்பட அந்த கடையை நடத்த முடியவில்லை என்றாலும் ஏதோ சமாளித்துக் கொண்டார்.
அவர்களை பொறுத்தவரை அந்த கடை தான் அவர்களுக்கு முதல் குழந்தை . வெளி உலகத்துக்கு கணவன் இறந்து இருந்தாலும் வளர்மதி பொருத்தவரை அவருடைய கணவனின் ஜீவன் அந்த கடையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் நிச்சயமாக நம்பினார்.
எந்த தவறும் செய்யாத தன்னுடைய மகன் வாழ்க்கை எப்படி ஆனதை நினைத்து அவரால் வாய் திறந்து எதுவும் சொல்ல முடியவில்லை .
இன்று கரிகாலன் தோற்றம் பற்றி தவறாக கடிதம் எழுதிவிட்டு சென்ற அந்த ரூபாவின் நிலை என்ன என்பது அங்கே திருமணத்திற்கு வந்த பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை . அதனால் தானோ என்னவோ வாய்க்கு வந்தபடி பேசி கரிகாலனை கிண்டல் அடித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள் .
இந்த ரூபா சில வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் போது யாரோ ஒருவன் தொடர்ந்து அவள் பின்னாடியே வந்து கொண்டிருந்தான் தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தினான் . இவள் முடியாது என்று கூறவும் ஒரு நாள் தன் நண்பன் நல்லவனுடன் சேர்ந்து இவள் முகத்தில் ஆசிட் அடித்து விட்டு சென்று விட்டான் .
அதே இடத்திலேயே துடிதுடித்துக் கொண்டிருந்த ரூபாவை அவசரமாக மருத்துவமனையில் சேர்த்து அவளுக்குத் தேவையானது எல்லாம் செய்தவன் இதே கரிகாலன் தான் . யாரோ ஒரு வழிப் போக்கனாக வந்தவன்.
பிறகு வந்த நாட்களில் இவன் மருத்துவமனையில் சென்று பார்த்தான் விசாரித்தான் . அப்படியே அது நட்பாகி குடும்ப முறையில் ஒரு உறவாகும் நிலைக்கு வந்து நின்றது . முகத்துக்கு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவளை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டது ரூபாவின் தந்தை தான் . அப்போதும் ரூபா எதைப் பற்றியும் வாயே திறக்கவில்லை .
ரூபாவின் அன்னையும் தந்தையும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு ரூபா மறுப்பு எதுவும் சொல்லி இருக்கவில்லை ரொம்ப நல்ல பையன் . நல்ல படிப்பு நல்ல வேலை காலேஜ்லையும் நிறைய விருதுகள் வாங்கி இருக்காரு . அப்பா இல்ல அம்மா தான் சொந்தமா ஏதோ கடை வச்சிருக்காங்களாம். அவங்களும் ரொம்ப நல்ல மாதிரியா தான் இருக்காங்க .
ஜாதகம் பார்த்தா என்ன ஜாதகம் பார்த்தார்கள் ஒன்பது பொருத்தம் இருந்தது. திருமணம் நிச்சயிககப்பட்டது . ரூபா இவர்களுடன் அதிகம் ஒட்டாமல் இருந்தது இவர்களுக்கு பெரியதாக தெரியவில்லை . முகூர்த்தப் புடவை எடுப்பதற்கு கூட அவள் வராதது பெரிய விஷயமாக தெரியவில்லை . கடைசி நேரத்தில் வீட்டுக்கு விலக்கு என்று வீட்டிலேயே அமர்ந்து விட்டாள்.
எல்லாம் முன்கூட்டியே பிளான் திட்டமிட்டு தான் அவள் செய்திருக்கிறாள் எல்லாம் இப்போது விளங்கியது . இதற்கு மேல் என்ன?
கரிகாலனின் முகம் போலவே திருமண மண்டபமும் இப்போது பொலிவில்லாமல் இருந்தது .மகள் செய்த அசிங்கம் தாங்காமல் அவள் தந்தை தான் அமர்ந்து அழுது கொண்டிருந்தார் .
எனக்கு இன்னொரு பொண்ணு இருந்திருந்தா உங்களுக்கு கட்டி வச்சிருப்பேன் என்று குழந்தைப் போல குலுங்கி அழும் அவரிடம் என்ன கேட்க முடியும்? யாரும் எதுவும் பேசவில்லை வந்துவிட்டார்கள். அதற்கு பிறகு பல நாட்கள் வளர்மதியாலும் கரிகாலன் ஆளும் அந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை.
அதிலும் கரிகாலனின் அலுவலகத்தில் இருந்தவர்கள் செய்த கேலியும் கிண்டலும் அதிகம் தான் . கரிகாலன் மாதிரி ஒருத்தனுக்கு ரூபா மாதிரி அழகியா ? வயிறு எரிந்தவர்களுக்கு ஏனோ அத்தனை நிம்மதியாக இருந்தது .
தோழர்கள் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் அவனை கிண்டல் அடிப்பதை வேலையாக வைத்துக் கொண்டு சுற்றியவர்கள் அருகில் இருக்கப் பிடிக்காமல் வேலையை விட்டு விட்டான் கரிகாலம். என்னைக் கேட்டால் அவன் எடுத்த முடிவு ஒரு விதத்தில் சரிதான். அவர்களுக்கு மத்தியில் இருந்தால் இன்னும் இன்னும் குத்தி கிழித்து தற்கொலை அளவுக்கு கொண்டு போய் விடுவார்கள். என்ன வேணா பேசிக்கோ எனக்கென்ன?"என்று எண்ணும் மனப் பக்குவம் அத்தனை பேருக்கும் வந்து விடுவதில்லை.
பிறகு அவனும் கடைக்கு வந்து அன்னையுடன் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தான் அவனுக்கு இது ஒன்றும் புதிது அல்ல. பொதுவாகவே வீட்டில் கடை வைத்திருப்பவர்கள் குழந்தைகள், ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அந்த வேலையை எடுத்து செய்வது வழக்கம் தான் .
சில நாட்கள் மதிய வெய்யிலில் நான் வெளியே செல்லும் பொழுது ஒரு சிறு பெண் வேர்க்கடலை வண்டியை தள்ளிக் கொண்டு வருவதை பார்க்க முடிகிறது. அதேபோல தான் காலை வேளைகளில் ஒரு பெண் தேனீர் விற்றுக் கொண்டுச் செல்வாள். அனேகமாக அவர்கள் இருவருமே கல்லூரி படிபவர்களாக இருக்கலாம் . அவர்களைப் போலத்தான் நம் கரிகாலனும். விடியலில் எழுந்து பால் வண்டியில் இருந்து பால் வாங்கி மார்கெட்டுக்குச் சென்று காய்கறி வாங்கி, வரும் பெண்களுக்கு தேங்காய் பத்தை போட்டு கருவேப்பிலை கொத்தமல்லி இலவசமாகக் கொடுத்து, ஆச்சி மசாலா பத்து மொளகா 20 மஞ்சத் தூள் முப்பத்து அஞ்சு மொத்தம் அறுபத்து அஞ்சு என்று வாயில் கணக்குப் போட்டு திறம்பட கடையை பார்த்து விட்டு , நாற்றம் இல்லாத சாக்ஸ், பளப்பளக்கும் ஷூ முழுக்க கை சட்டை நேர்த்தியான பேண்ட் நெற்றியில் விபூதிக் கீற்று மறக்காமல் எடுத்துக் கொள்ளும் லன்ச், தலைக்கு கவசம் என்று தோற்றமே வேறாக மாறிவிடும் ஆள்தான் கரிகாலன்.
அவனுக்கு கடையில் என்ன விலை ஏது எல்லாமே அத்துபடி . கடையில் ஒரு பையனை வேலைக்கு வைத்திருந்தாலும் விடியலில் வந்து கரிகாலன் தான் கடையை திறப்பான் . சமையல் வேலை எல்லாம் முடித்து வளர்மதி கடைக்கு வந்து விடுவார் இவன் அலுவலகம் செல்ல தயாராகி சென்று விடுவான். அதேபோலத்தான் இரவிலும் அவன் தான் வந்து கடையை மூடுவான். அதனால் அவன் இந்த வேலை அசிங்கம் என்று நினைத்ததில்லை . இப்போது ஐடியில் வேலை பார்க்கும் பலரும் மதியத்துக்கு உணவு கூட எடுத்துச் செல்வது அசிங்கம் என்று நினைத்த காலத்தில் இவனுக்கு இது தன்னுடைய சொந்த தொழில் என்ற பெருமிதம் தான் இருந்தது.
மற்றவர்கள் இவனை கிண்டல் செய்வதற்கு திருமணம் நின்றது மட்டுமோ அல்லது இவனது தோற்றமோக் கூட பெரிய காரணம் என்று சொல்லி விட முடியாது . ஆங்கிலம் தான் அவன் வாழ்க்கையை பாழடித்தது .
நான் சொல்வது சரியா ?
ஒரு வேளை ஆங்கிலம் என்பது அல்லது வேறு மொழி, வெறும் மொழி மட்டும்தான் என்ற புரிதல் இல்லாத பலராலும், பலர் தன்னம்பிக்கையை இழந்து வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர் . ஆங்கிலம் பேச தெரியாவிட்டால் எந்த பெண்களும் மதிப்பதில்லை .இவன் என்னதான் படிப்பில் முதலாக இருந்தாலும் இவனுக்கு ஆங்கிலம் பேச தெரியவில்லை என்பதே மற்றவர்கள் இவனை இளக்காரமாக பார்ப்பதற்கு முக்கிய காரணம். இவன் வேலை முன்னின்று ஆங்கிலம் பேசுவது அல்ல .இவன் ஒரு டெக்கி . இவன் படித்தது எல்லாம் சாதாரண அரசு உயர்நிலை பள்ளியில் தான் . அவனுடைய மதிப்பெண்கள் அவனை மதிப்பை கூட்டி இருந்தாலும் கல்லூரிக்கு சென்ற நாள் முதல் அவனுக்கு இந்த ஆங்கிலம் பேச வரவில்லை என்ற சிறு விஷயத்தை ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை பெரிய குற்றமாக எடுத்து காண்பிக்க ஆரம்பித்தார்கள் .
இருப்பினும் கரிகாலன் எப்போதும் தன்னுடைய தன்னம்பிக்கையை இழந்தவன் அல்ல அவனுடைய தாயும் தந்தையும் உன்னால் முடியும் உன்னால் முடியும் என்று அவனை ஊக்கப்படுத்தி ஊக்கப்படுத்தி கல்லூரி முடிக்க வைத்து நல்ல வேலையிலும் அவன் அமர்ந்து விட்டான் . அவன் தன்னம்பிக்கை தளறும்போதெல்லாம் மாறன் போன்ற நண்பர்கள் அவனை தளரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள் அவன் தோழர்களும் பேருந்தில் பார்த்து பழக்கமானவர்கள் . அதை வெறும் பேருந்து பழக்கம் என்று நம்மால் அலட்சியம் செய்து விட முடியாது. நெருங்கியப் பழக்கம் தான் . அவன் நண்பர்களை சைட் அடிக்கும் பெண்கள் கவனமாக கரிகாலனை அலட்சியம் செய்து விடுவார்கள். அதை பற்றி கரிகாலன் என்றுமே சட்டை செய்வதில்லை அவனுடைய குறிக்கோள் படிப்பு முடித்து நல்ல வேலையில் அமர வேண்டும் என்பதே தான் . மாறன் அவன் தோழன் என்றால் அதில் நம் தீபக்கும் அடக்கம் .
இரண்டு வருடங்கள் கழித்து...
தொடரும்......
திருமணம் ஆன அடுத்த சில வாரங்கள் தாண்டி மாதங்கள் ஆனபோது இதோ வயிற்றில் பிள்ளையுடன் கணவனைக் காண காவல் நிலையத்தில் வந்து நிற்கிறாள் இனியா..
"நீ யாரும்மா?"
"நான் நல்லவனோட மனைவி."
"ஓ ! நீ தானா ? " நக்கலாக அந்த பெண் காவலதிகாரி இவளை ஏற இறங்கப் பார்த்தார். அவள் மீது படிந்த அவரின் பார்வை நிச்சயம் கேவலமாகத் தான் இருந்தது..
யாரோ ஒரு பெரியவர் வந்து இவளின் தோளைக் குலுக்கினார்.
'ஏம்மா? நீங்கல்லாம் நல்லா இருப்பீங்களா ? என்னோட வயிறு எரியுது. நான் பெத்த புள்ள மூஞ்சில இப்படி அசிட் அடிச்சுட்டாங்களே. *** !*** !"
என்று தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.
"அய்யா ப்ளீஸ் ! உங்க வாயால எதுவும் சொல்லாதீங்க. இப்ப நான் மாசமா இருக்கேன்."
இனிப்புடன், கொண்டவனிடம் சொல்ல வேண்டியவள் இப்போது அவனுக்காக யாரோ ஒருவரிடம் கையெடுத்துக் கும்பிட்டாள் . அதுவும் காவல் நிலையத்தில்.
"நாங்களும் புள்ளைய வலிக்கத்தானே பெத்தோம். இந்த மாதிரி ஜென்மத்துக்கெல்லாம் புள்ள ஒரு கேடா தூ !"
"சார் ! கொஞ்சம் பொறுமையா இருங்க. அவங்க என்ன பண்ணுவாங்க. நீங்க உக்காருங்க." யாரோ ஒரு இளைஞன் அவரை தோளில் சாய்த்து சமாதானம் செய்துக் கொண்டிருந்தான்.
அந்த இளைஞன் தான் இப்போது நாம் கோவிலில் பார்த்தவன்.
கரிகாலன் வெட்ஸ் ரூபாவதி என்ற பெரிய பேனர் வாயிலில் வைக்கப்பட்டிருந்தது . சற்று நேரத்துக்கு முன்புதான் மணமகனும் மணமகனும் ரிசப்ஷன் முடிந்து அவரவர் அறைக்கு சென்றிருந்தார்கள். இளவட்டங்கள் ஆண்களும் பெண்களும் விதவிதமான ஆடைகளுடன் சுற்றிக்கொண்டிருக்க பெரியவர்கள் வழக்கம்போல் புடவைகளில், வேட்டியில் சுற்றி வந்தார்கள் .
தனது அலங்காரம் எல்லாம் கலைத்து விட்டு படுத்துக் கொள்கிறேன் என்ற அவளை அதற்குப் பிறகு யாராலும் பார்க்க முடியவில்லை. கடிதம் எழுதிவிட்டு தன்னுடைய காதலனுடன் அவள் ஓடிப் போய் விட்டாள் ரூபாவதி.
கரிகாலன்! உங்கள மாதிரி உருவத்தில் இருக்கிற ஒருத்தருக்கு என்னைப் போன்ற அழகான பெண்ணுடன் திருமணங்கறது ரொம்ப சந்தோஷம் தரக்கூடிய விஷயம். ஆனால் உங்கள மாதிரி ஒருத்தருக்கு என்ன மாதிரி ஒரு பொண்ணு திருமணம் பண்ணா அந்த பொண்ணுக்கு அது நரகம் . நான் எனக்கு பிடிச்சவரோட சொர்க்கத்தை தேடி போறேன் ."
இதை முன்பே சொல்லி இருந்தால் கரிகாலன் ஏற்றுக் கொண்டிருப்பான். அருகில் நின்று கைப்பிடித்து சிரித்து பேசி இப்படி ஏமாற்றி இருக்க வேண்டாம். திருமணம் சுற்றி இருந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேச ஏதோ சுற்றிவர இருந்த பெண்கள் எல்லாம் இவனை ஏளனமாக பார்ப்பது போல அவனுக்கு தோன்றியது. அவன் அன்னைக்கு அளவிட முடியாது துக்கம் .
கரிகாலன் அவன் தந்தையைப் போல இருந்தான். அவன் தந்தைக்கு அவன் அன்னை கிடைத்தது போல தனக்கும் இந்த ரூபா கிடைத்திருக்கிறாள் என்று மிகவும் சந்தோஷமாக இருந்தான். அவனுக்கு அவன் அன்னை தந்தை என்றால் மிகவும் பிரியம் .
அவன் தந்தை எப்போதுமே நான் என் மனைவியை தான் சார்ந்து இருக்கிறேன் என்று வாயாரச் சொல்வார் . அது அவருக்குப் பெருமைதான். "கடைல என்ன அரிசி பருப்பு இருக்குன்னு தெரிஞ்ச எனக்கு வீட்டில் என்ன அரிசி பருப்பு இருக்குன்னு எனக்கு தெரியாது . அதே மாதிரி பொருளாதாரமும் தெரியாது" என்று கூறிக்கொண்டு கையில் கிடைக்கும் அத்தனை பணத்தையும் கொண்டு வந்து மனைவியிடம் ஒப்படைத்து விடுவார் . தினமும் வெளியில் செல்லும்போது அவருக்கு என்ன தேவையோ அதை மனைவியிடம் இருந்துதான் கேட்டு வாங்கிக் கொள்வார் .
இந்த பழக்கம் அவருக்கு அவர் தந்தையிடமிருந்து வந்தது. அவர்களைப் பொறுத்தவரையில் மனைவிதான் மகாலட்சுமி அந்த மகாலட்சுமி சிரிக்க சிரிக்க தான் வீட்டில் தனலட்சுமி பெருகுவாள் என்று அசாத்திய நம்பிக்கை கொண்டவர்கள். அதை வாழ்க்கை முழுவதும் செய்து காண்பித்தவர்கள் .
தன் தந்தையைப் போல தானும் இருக்க வேண்டும் என்று வாழ்ந்தவர் தன்மகன் தன்னைப் போல வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அதை பார்ப்பதற்கு அவர் உயிருடன் இல்லை . வேலைக்கு சென்று திரும்பும் வழியில் சிறு வீடு பற்றி கொண்டு எறிய அதில் இருந்த குழந்தையை காப்பாற்றி விட்டு தன் உயிரை இழந்து இருந்தார் .
அவர்கள் சொந்தமாக மளிகை கடை வைத்திருந்தார்கள் கணவனை இழந்த தாய் வளர்மதி தான் அந்த கடையை பார்த்துக்கொண்டார் . கணவன் அளவுக்கு இவரால் திறம்பட அந்த கடையை நடத்த முடியவில்லை என்றாலும் ஏதோ சமாளித்துக் கொண்டார்.
அவர்களை பொறுத்தவரை அந்த கடை தான் அவர்களுக்கு முதல் குழந்தை . வெளி உலகத்துக்கு கணவன் இறந்து இருந்தாலும் வளர்மதி பொருத்தவரை அவருடைய கணவனின் ஜீவன் அந்த கடையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் நிச்சயமாக நம்பினார்.
எந்த தவறும் செய்யாத தன்னுடைய மகன் வாழ்க்கை எப்படி ஆனதை நினைத்து அவரால் வாய் திறந்து எதுவும் சொல்ல முடியவில்லை .
இன்று கரிகாலன் தோற்றம் பற்றி தவறாக கடிதம் எழுதிவிட்டு சென்ற அந்த ரூபாவின் நிலை என்ன என்பது அங்கே திருமணத்திற்கு வந்த பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை . அதனால் தானோ என்னவோ வாய்க்கு வந்தபடி பேசி கரிகாலனை கிண்டல் அடித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள் .
இந்த ரூபா சில வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் போது யாரோ ஒருவன் தொடர்ந்து அவள் பின்னாடியே வந்து கொண்டிருந்தான் தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தினான் . இவள் முடியாது என்று கூறவும் ஒரு நாள் தன் நண்பன் நல்லவனுடன் சேர்ந்து இவள் முகத்தில் ஆசிட் அடித்து விட்டு சென்று விட்டான் .
அதே இடத்திலேயே துடிதுடித்துக் கொண்டிருந்த ரூபாவை அவசரமாக மருத்துவமனையில் சேர்த்து அவளுக்குத் தேவையானது எல்லாம் செய்தவன் இதே கரிகாலன் தான் . யாரோ ஒரு வழிப் போக்கனாக வந்தவன்.
பிறகு வந்த நாட்களில் இவன் மருத்துவமனையில் சென்று பார்த்தான் விசாரித்தான் . அப்படியே அது நட்பாகி குடும்ப முறையில் ஒரு உறவாகும் நிலைக்கு வந்து நின்றது . முகத்துக்கு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவளை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டது ரூபாவின் தந்தை தான் . அப்போதும் ரூபா எதைப் பற்றியும் வாயே திறக்கவில்லை .
ரூபாவின் அன்னையும் தந்தையும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு ரூபா மறுப்பு எதுவும் சொல்லி இருக்கவில்லை ரொம்ப நல்ல பையன் . நல்ல படிப்பு நல்ல வேலை காலேஜ்லையும் நிறைய விருதுகள் வாங்கி இருக்காரு . அப்பா இல்ல அம்மா தான் சொந்தமா ஏதோ கடை வச்சிருக்காங்களாம். அவங்களும் ரொம்ப நல்ல மாதிரியா தான் இருக்காங்க .
ஜாதகம் பார்த்தா என்ன ஜாதகம் பார்த்தார்கள் ஒன்பது பொருத்தம் இருந்தது. திருமணம் நிச்சயிககப்பட்டது . ரூபா இவர்களுடன் அதிகம் ஒட்டாமல் இருந்தது இவர்களுக்கு பெரியதாக தெரியவில்லை . முகூர்த்தப் புடவை எடுப்பதற்கு கூட அவள் வராதது பெரிய விஷயமாக தெரியவில்லை . கடைசி நேரத்தில் வீட்டுக்கு விலக்கு என்று வீட்டிலேயே அமர்ந்து விட்டாள்.
எல்லாம் முன்கூட்டியே பிளான் திட்டமிட்டு தான் அவள் செய்திருக்கிறாள் எல்லாம் இப்போது விளங்கியது . இதற்கு மேல் என்ன?
கரிகாலனின் முகம் போலவே திருமண மண்டபமும் இப்போது பொலிவில்லாமல் இருந்தது .மகள் செய்த அசிங்கம் தாங்காமல் அவள் தந்தை தான் அமர்ந்து அழுது கொண்டிருந்தார் .
எனக்கு இன்னொரு பொண்ணு இருந்திருந்தா உங்களுக்கு கட்டி வச்சிருப்பேன் என்று குழந்தைப் போல குலுங்கி அழும் அவரிடம் என்ன கேட்க முடியும்? யாரும் எதுவும் பேசவில்லை வந்துவிட்டார்கள். அதற்கு பிறகு பல நாட்கள் வளர்மதியாலும் கரிகாலன் ஆளும் அந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை.
அதிலும் கரிகாலனின் அலுவலகத்தில் இருந்தவர்கள் செய்த கேலியும் கிண்டலும் அதிகம் தான் . கரிகாலன் மாதிரி ஒருத்தனுக்கு ரூபா மாதிரி அழகியா ? வயிறு எரிந்தவர்களுக்கு ஏனோ அத்தனை நிம்மதியாக இருந்தது .
தோழர்கள் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் அவனை கிண்டல் அடிப்பதை வேலையாக வைத்துக் கொண்டு சுற்றியவர்கள் அருகில் இருக்கப் பிடிக்காமல் வேலையை விட்டு விட்டான் கரிகாலம். என்னைக் கேட்டால் அவன் எடுத்த முடிவு ஒரு விதத்தில் சரிதான். அவர்களுக்கு மத்தியில் இருந்தால் இன்னும் இன்னும் குத்தி கிழித்து தற்கொலை அளவுக்கு கொண்டு போய் விடுவார்கள். என்ன வேணா பேசிக்கோ எனக்கென்ன?"என்று எண்ணும் மனப் பக்குவம் அத்தனை பேருக்கும் வந்து விடுவதில்லை.
பிறகு அவனும் கடைக்கு வந்து அன்னையுடன் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தான் அவனுக்கு இது ஒன்றும் புதிது அல்ல. பொதுவாகவே வீட்டில் கடை வைத்திருப்பவர்கள் குழந்தைகள், ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அந்த வேலையை எடுத்து செய்வது வழக்கம் தான் .
சில நாட்கள் மதிய வெய்யிலில் நான் வெளியே செல்லும் பொழுது ஒரு சிறு பெண் வேர்க்கடலை வண்டியை தள்ளிக் கொண்டு வருவதை பார்க்க முடிகிறது. அதேபோல தான் காலை வேளைகளில் ஒரு பெண் தேனீர் விற்றுக் கொண்டுச் செல்வாள். அனேகமாக அவர்கள் இருவருமே கல்லூரி படிபவர்களாக இருக்கலாம் . அவர்களைப் போலத்தான் நம் கரிகாலனும். விடியலில் எழுந்து பால் வண்டியில் இருந்து பால் வாங்கி மார்கெட்டுக்குச் சென்று காய்கறி வாங்கி, வரும் பெண்களுக்கு தேங்காய் பத்தை போட்டு கருவேப்பிலை கொத்தமல்லி இலவசமாகக் கொடுத்து, ஆச்சி மசாலா பத்து மொளகா 20 மஞ்சத் தூள் முப்பத்து அஞ்சு மொத்தம் அறுபத்து அஞ்சு என்று வாயில் கணக்குப் போட்டு திறம்பட கடையை பார்த்து விட்டு , நாற்றம் இல்லாத சாக்ஸ், பளப்பளக்கும் ஷூ முழுக்க கை சட்டை நேர்த்தியான பேண்ட் நெற்றியில் விபூதிக் கீற்று மறக்காமல் எடுத்துக் கொள்ளும் லன்ச், தலைக்கு கவசம் என்று தோற்றமே வேறாக மாறிவிடும் ஆள்தான் கரிகாலன்.
அவனுக்கு கடையில் என்ன விலை ஏது எல்லாமே அத்துபடி . கடையில் ஒரு பையனை வேலைக்கு வைத்திருந்தாலும் விடியலில் வந்து கரிகாலன் தான் கடையை திறப்பான் . சமையல் வேலை எல்லாம் முடித்து வளர்மதி கடைக்கு வந்து விடுவார் இவன் அலுவலகம் செல்ல தயாராகி சென்று விடுவான். அதேபோலத்தான் இரவிலும் அவன் தான் வந்து கடையை மூடுவான். அதனால் அவன் இந்த வேலை அசிங்கம் என்று நினைத்ததில்லை . இப்போது ஐடியில் வேலை பார்க்கும் பலரும் மதியத்துக்கு உணவு கூட எடுத்துச் செல்வது அசிங்கம் என்று நினைத்த காலத்தில் இவனுக்கு இது தன்னுடைய சொந்த தொழில் என்ற பெருமிதம் தான் இருந்தது.
மற்றவர்கள் இவனை கிண்டல் செய்வதற்கு திருமணம் நின்றது மட்டுமோ அல்லது இவனது தோற்றமோக் கூட பெரிய காரணம் என்று சொல்லி விட முடியாது . ஆங்கிலம் தான் அவன் வாழ்க்கையை பாழடித்தது .
நான் சொல்வது சரியா ?
ஒரு வேளை ஆங்கிலம் என்பது அல்லது வேறு மொழி, வெறும் மொழி மட்டும்தான் என்ற புரிதல் இல்லாத பலராலும், பலர் தன்னம்பிக்கையை இழந்து வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர் . ஆங்கிலம் பேச தெரியாவிட்டால் எந்த பெண்களும் மதிப்பதில்லை .இவன் என்னதான் படிப்பில் முதலாக இருந்தாலும் இவனுக்கு ஆங்கிலம் பேச தெரியவில்லை என்பதே மற்றவர்கள் இவனை இளக்காரமாக பார்ப்பதற்கு முக்கிய காரணம். இவன் வேலை முன்னின்று ஆங்கிலம் பேசுவது அல்ல .இவன் ஒரு டெக்கி . இவன் படித்தது எல்லாம் சாதாரண அரசு உயர்நிலை பள்ளியில் தான் . அவனுடைய மதிப்பெண்கள் அவனை மதிப்பை கூட்டி இருந்தாலும் கல்லூரிக்கு சென்ற நாள் முதல் அவனுக்கு இந்த ஆங்கிலம் பேச வரவில்லை என்ற சிறு விஷயத்தை ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை பெரிய குற்றமாக எடுத்து காண்பிக்க ஆரம்பித்தார்கள் .
இருப்பினும் கரிகாலன் எப்போதும் தன்னுடைய தன்னம்பிக்கையை இழந்தவன் அல்ல அவனுடைய தாயும் தந்தையும் உன்னால் முடியும் உன்னால் முடியும் என்று அவனை ஊக்கப்படுத்தி ஊக்கப்படுத்தி கல்லூரி முடிக்க வைத்து நல்ல வேலையிலும் அவன் அமர்ந்து விட்டான் . அவன் தன்னம்பிக்கை தளறும்போதெல்லாம் மாறன் போன்ற நண்பர்கள் அவனை தளரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள் அவன் தோழர்களும் பேருந்தில் பார்த்து பழக்கமானவர்கள் . அதை வெறும் பேருந்து பழக்கம் என்று நம்மால் அலட்சியம் செய்து விட முடியாது. நெருங்கியப் பழக்கம் தான் . அவன் நண்பர்களை சைட் அடிக்கும் பெண்கள் கவனமாக கரிகாலனை அலட்சியம் செய்து விடுவார்கள். அதை பற்றி கரிகாலன் என்றுமே சட்டை செய்வதில்லை அவனுடைய குறிக்கோள் படிப்பு முடித்து நல்ல வேலையில் அமர வேண்டும் என்பதே தான் . மாறன் அவன் தோழன் என்றால் அதில் நம் தீபக்கும் அடக்கம் .
இரண்டு வருடங்கள் கழித்து...
தொடரும்......
Last edited:
Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் -7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கடல் தேடும் மீன்கள் -7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.