Ilampillai
New member
- Joined
- Mar 27, 2025
- Messages
- 22
கடல் தேடும் மீன்கள் -14
"நாம ரெண்டு பேருமே க்ளோஸ் ப்ரண்ட்ஸா இருந்துக் கூட ஒருத்தருக்கொருத்தர் கல்யாணத்துக்கு வர முடியாமலே போச்சுல்ல?"
குழலியின் குரலில் இருந்த வருத்தம் வெளிப்படையாகவே காட்டியது.
"ம் ! எல்லாத்துக்கும் நாந்தான் காரணம். வயசு திமிறுல எவ்ளோ ஆட்டம் ஆடினேன். ஆறு மாசம் கூட எங்களோட காதல் நிக்கல. காமமும் கூடத் தான். நிறைய நாட்கள் எங்க இருக்கான்னு கூடாது தெரியாது . இந்த குழந்தை உருவானதுக் கூட அவனுக்குத் தெரியாது.
"சாரி டீ! நான் கூட உன்கிட்ட ரொம்ப கடுமாய்யா நடந்துக்கிட்டேன் "
"உங்க யார் மேலையும் தப்பில்லடி. என்ன பெத்தவ ஆஸ்பத்திரில கிடக்கும்போது நான் அயோக்கியத்தனமா நடந்துக்கிட்டேன். அதுக்குத்தான் இன்னிக்கு நான் அனாதையா ஆஸ்பத்திரில கிடக்கறேன். இது கலி காலம் டி. "இட்டார்க்கு இட்ட பலன்" பண்ண தப்புக்கு கடவுள் ஒடனே பலன் குடுத்துடுவார்.
"அவனை விட்டுட்டு வந்துருடி" மனம் தோழிக்காக வருந்தினாலும் சட்டென அந்த வார்த்தையைக் கூறி விட முடியவில்லை.
"எப்ப எது வேணுன்னாலும் கூப்பிடுடி. யாரும் இல்லன்னு நினைக்காத. இன்னொரு தடவை உங்க வீட்டு ஆளுங்களை பார்த்து பேசறதை பத்தி யோசி. எனக்கு என்னவோ உங்க அம்மா அப்பா அப்படியே விட்டுட மாட்டாங்கன்னு தோணுது . எதுக்கும் ஒரு தடவ தீபக் அண்ணாகிட்ட பேசி பாக்கட்டுமா? என்னதான் இருந்தாலும் நம்ம அம்மா அப்பா அண்ணன் உறவை விட்டா வேற யாருடி இருக்கா ?"
"இல்லடி. அது சரிப் பட்டு வராது. அவங்களே இப்பதான் கொஞ்சமா சிரிக்க ஆரம்பிச்சுருக்காங்க . என்னோட அழுது வடியற மூஞ்சிய பார்த்துகிட்டு., போதுண்டி! இதுக்கு மேலையும் எங்க அத்தையோட கொடுமையை எங்க அம்மா அனுபவிக்கக் கூடாது. அவங்க பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் நானும் ஒரு முக்கிய காரணமா இருந்திருக்கேன்னு நினைக்கும்போது என்னை நினச்சா எனக்கே அசிங்கமா இருக்குடி . இனிமேலாவது அவங்க சந்தோஷமா இருக்கட்டும். அவங்க நிம்மதியும் சந்தோஷமும் தான் எனக்கு முக்கியம்"
"அதுக்குன்னு உன்ன நீயே அழிச்சுக்க வேண்டாண்டி "
"என்னால எத்தனை தூரம் சமாளிக்க முடியுமோ சமாளிக்கறேன் . எல்லாத்துக்கும் மேல என்னோட அம்மா கிட்ட மடி சேரணுன்னு தோணும்போது நிச்சயம் அவங்களை தேடித் போவேன். உனக்கு தான் தெரியுமே . நான் எவ்ளோ சுயநலவாதின்னு! எனக்கு என்னோட விஷயங்கள் தான் முக்கியம். மத்தபடி நான் யாருக்காகவும் யோசிக்க மாட்டேன் ஸகாத் கிடந்தாலும் ." விரக்தியான சிரிப்பு வந்தது.
" நீ முன்னாடி அந்த நல்லியா இருந்திருக்கலாம். பிள்ளை பிறப்புங்கறது ஒரு பொண்ணுக்கு மறு ஜென்மம்னு சொல்லுவாங்க. ஒரு வேளை அந்த நல்லி செத்துப் போய் இப்ப எங்க இனியா தான் வந்திருக்கான்னு எனக்கு தோணுது. இந்த இனியா எங்க அருணா அம்மாவோட பொறப்பு. தீபக் அண்ணாவோட வளர்ப்பு . அது என்னிக்கும் தப்பாகாது."
"தேங்ஸ் டீ. இனிமேலாவது உன் நம்பிக்கையை நான் காப்பாத்தறேன்."
பிரிய மனமில்லாமல் பிரியா விடை பெற்றுக் கொண்டார்கள் தோழிகள்.
இதோ இப்போது நம் குழலி வீட்டில் தான் இருக்கிறாள்., பாதுகாப்பாக.
வினய் வேறு ஒரு கல்லூரியில் சேரவும் வேலைப் பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே வீட்டை மாற்றிக் கொண்டான். வாடகை வீடுதான். இருந்தாலும் திருவான்மியூரில் இருந்து ரெட் ஹில்ஸ் வரை தினமும் சென்று வருவது நடக்காத காரியம். தேவையும் இல்லை. மனைவி சொல்வதும் சரிதான் . வீட்டை மாற்றிக் கொண்டார்கள்.
தான் எடுத்த முடிவு. நல்லவனை விட்டு வீடக் கூடாது. என் மாமா. எப்படியாவது அவனை தன்னுடைய காதலால் அன்பால் திருத்தி விட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் போராடிப் பார்த்தாள் இனியா. அவளை விடவும் அவனின் தலை எழுத்தா அல்லது நரிகள் கூட்டமா அதுதாம்ப்பா நண்பர்கள் சேர்க்கை, எதுவோ ஒன்று அவனை இவள் பக்கம் செல்ல விடாமல் தடுத்தது.
இவள் மருத்துவமனையில் இருந்த சமயம் நண்பர்கள் குழாம் வீட்டுக்கும் உரிமையாக வர ஆரம்பித்தார்கள். இவள் டிஸ்சார்ஜ் ஆகி வந்தப் பிறகு பெரிய சண்டை வந்து தான் அவர்கள் வருவது குறைத்துப் போனது. மொத்தமாக எல்லாம் யாரும் நிறுத்திவிடவில்லை. அவர்களுக்கு அவனைப் பார்க்கவில்லை என்றாலும் நல்லியைப் பார்க்காமல் முடியாது.
ஒருநாள் ஒருவன் வந்தான். அண்ணி நல்லவன் இல்லை? குடிக்க தண்ணி தாங்களேன் வாங்கி குடித்து விட்டு இவள் ஷாலில் முகம் துடைத்து விட்டுப் போனான்.
இன்னொருவன், "அண்ணன் இல்லையா. நான் துணைக்கு இருக்கவா?" கண்ணடித்தான். வேறு ஒருவன் "பின்னாடி கரையா இருக்கு" பொய் சொல்லி கலாய்த்தான்.
எத்தனை தான் கணவனிடம் அழ முடியும் அல்லது சண்டை போட முடியும்? அவனின் நண்பர்கள் கூட்டம் நாள் ஆக ஆக இனியவை கடித்துக் குதறும் வெறியோடு இருந்தார்கள். அது மட்டுமில்லாமல் நல்லவனை ஏதாவது கேசில் மாட்டி விட்டு இனியாவை தாங்கள் பதம் பார்த்து பிறகு தலைவரிடம் அனுப்பி விடலாம் என்றும் நினைத்தார்கள்.
அவர்களின் திட்டம் நிறைவேறியதா? இனியா தப்பிக்க முடியுமா? இனி அவளுக்கு யார் காவல்?
மாறனும் தீபக்கும் பெரியவர்களை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார்கள். இதற்கு நடுவில் தேவேந்திரன் கால் எலும்புகள் முழுவதும் தேய்ந்து விட்டன. முட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இனி வாழ் நாள் முழுவதும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெளிவாக சொல்லி விட்டார்கள்.
ஈஸி சேரில் சாய்ந்து கண் மூடி அமர்ந்தவர் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டார்கள் மகனும் மகளும். இந்த கால்கள் என் இப்படி ஆகி விட்டன? எங்களுக்கு உழைத்து உழைத்து இதற்கு மேல் முடியாது என்று சொல்லி விட்டதா? மெதுவாக இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்து அப்பாவின் கால்களை பிடித்து விட ஆரம்பித்தார்கள்.
"வலிக்குதாப்பா ?" மகளின் கண்களில் தந்தைக்கான வருத்தம் அப்பட்டமாக தெரிந்தது.
வலி இல்லாமலா இருக்கும். தசைகள் இறுக்கிப் பிடித்து எந்நேரமும் கிடுக்கி பிடி போட்டது போற ஒரு வலி இருந்து கொண்டே தான் இருக்கும். மனைவி தான் ஏதோ என்னை தேய்ப்பாள். வேண்டாம் என்று சொன்னாலும் இது என்னோட கடமை. அவலது தான் செய்வாள். தான் இருக்க வேண்டிய விதத்தில் இருந்திருந்தால் அருணாவும் காதல் மனைவியாக இருந்து எல்லாம் செய்வாள் அவருக்குத் தன் தவறு தெரிந்தது.
தான் எத்தனை முறை அவளை அடித்திருப்பேன் கொடுமைகள் செய்திருக்கிறேன். இருந்ததாலும் என் மீது வெறுப்பை உமிழாதவள். அந்த அளவிலாவது இனி தான் நின்றுக் கொள்ள வேண்டும்.
வருத்தத்துடன் கேட்ட மகளுக்கு இல்லை என்றுபி பொய் சொல்ல முடியாது. இருக்கு. ஆனா அம்மா எண்ணெய் தடவினா இருக்கறதில்ல. உண்மையைச் சொன்னார்.
மகனின் என்னமோ தந்தையை தான் சுற்றிக் கொண்டிருந்தது.
"எத்தனை தூரம் எங்களுக்காக மிதிவண்டி மீது மிதித்து வேலைக்குச் சென்றிருப்பார்? காலை வேளையில் மூன்று பிள்ளைகளையும் அந்த சைக்கிளில் அமர்த்தி ஆயிரம் கதை பேசி பள்ளிக்கு அழைத்துச் செல்வார். ரொம்பவும் சின்னதா இருந்த போதும் தீபக்குக்கு நன்றாகவே அந்த மலரும் நினைவுகள் நினைவில் இருந்தன. அம்மாவை அடிக்கக் கூடாது என்பதைத் தவிர அவனுக்கு அவன் அப்பாவை மிகவும் பிடிக்கும். தந்தை என்ற கடமையில் இருந்து அவர் ஒரு போதும் தவறியதில்லை. தனக்கென்று சரியாக செருப்புகே கூட வாங்கிக் கொள்ளாமல் குழந்தைங்களை பார்த்து பார்த்து வளர்த்த நம் வீட்டு அப்பாக்களை போலத் தான் தேவேந்திரனும்.
தங்கை மீது அளவு கடந்த பாசம், கண் மூடித் தனமான அன்பு வைக்கும் நம் வீட்டு அண்ணன்கள் போலத் தான் அவரும். அவரை குறை சொல்வதென்றால் நாம் பெரும்பாலான ஆண்களை குறை சொல்வதுப் போலத் தான்.
மெதுவாக தீபா தந்தையின் மாடி சாய்ந்தாள். எப்போதுமே இனியா தான் உரிமையாக தந்தியின் மடி சாய்வாள். அவள் என்றுமே அப்பாவை தங்கைக்கு விட்டுக் கொடுத்ததில்லை. இப்பபோது அவள் இல்லாததால் தான் தந்தையின் மடி சுகம் தீபாவுக்கு கிடைக்கிறது. என்ன ஒன்று, திண்ணென்று இருந்த அப்பாவின் தொடையுm காலும் இப்போது இழைத்துப் போய் எலும்பு மகளின் கன்னத்தை குத்தியது. அதனால் என்ன தந்தையின் மடி சுகம் தானே? அமைதியாக சாய்ந்துக் கொண்டாள்.
"என்ன தீபக்? இப்படி இருந்தா எப்படி? இனி நம்ம அப்பாவுக்கு என்ன செய்யணுமோ அதைப் பார்த்து செய்ங்க "
அருணா சொல்லி விட்டு சென்றாள் . அப்போது தான் மனதில் ஒரு முடிவெடுத்தவனாக கார் வாங்கலாம் என்று அன்னையிடம் சொன்னான்.
"நான் நினைச்சேன். இந்த வார்த்தை உன் வாயிலிருந்து வரணுன்னு ஆசைப்பட்டேன் கண்ணா"
மகனிடம் முகம் வழித்து ஆசையா மனைவி பேசிக் கொண்டிருந்தது கணவன் கண்ணில் படாமலா இருக்கும்?
அருணாவின் வளர்ப்பு என்ன என்பது அவருக்குப் புரிந்தது.
அப்போது தான் இனியா அவர்களை பார்த்தது.
==============================================================================
பின் இரவு ஆரம்பிக்கும் வேளை. குழலியின் வீடு தேடி ஆட்டோவில் வந்தாள் இனியா. ஏதோ பிரச்சனை. ஆட்டோ நடு வழியில் நின்று விட்டது. மகளையும் கையில் தூக்கிக் கொண்டு கண்களில் நீர் வழிய வழிய அருகில் இருந்த பேருந்து நிலையம் வந்தடைந்தாள். அவளுக்கு வேண்டியப் பேருந்து எதுவும் வரவில்லை. நமக்கு நடக்கும் அதே கதை தான். அவளுக்கு வேண்டியது எல்லாம் எதிர் திசையில் தான் சென்றது. நேரம் ஆக ஆக இவளுக்கு பயம் வந்தது. இன்பாவும் அழ ஆரம்பித்து விட்டாள் . அருகில் இருந்த கடையில் ஏதோ ஒரு பிஸ்கட்டை வாங்கி கொடுத்தாள். அது பிடிக்காத குழந்தை தூக்கி எறியவும் இவளுக்கு கோபம் வந்து விட்டது. இவளோ வந்த கோபத்தில் மகளை அடித்து விட்டாள்.
குழந்தை இடம் பொருள் தெரியாமல் வீல் என்று கத்தி அழ ஆரம்பித்து விட்டாள் .
இவளுக்கும் சொல்ல முடியாத துக்கம் வேதனை. அழாதடி. அழுது தொலையாத ஆங்காரமாக குழந்தையைக் கத்திக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து உயரமாக கட்டுமஸ்தான ஒரு ஆள் வந்தான். திரும்பி நின்று குழந்தையை அடித்தவளை பிடித்தவள் தோள் தொட்டான். இந்த நேரத்துல யார்? பயத்துடனே திரும்பியவள் பார்த்தது
யார் ?
மீன் துடிக்கும் .........
"நாம ரெண்டு பேருமே க்ளோஸ் ப்ரண்ட்ஸா இருந்துக் கூட ஒருத்தருக்கொருத்தர் கல்யாணத்துக்கு வர முடியாமலே போச்சுல்ல?"
குழலியின் குரலில் இருந்த வருத்தம் வெளிப்படையாகவே காட்டியது.
"ம் ! எல்லாத்துக்கும் நாந்தான் காரணம். வயசு திமிறுல எவ்ளோ ஆட்டம் ஆடினேன். ஆறு மாசம் கூட எங்களோட காதல் நிக்கல. காமமும் கூடத் தான். நிறைய நாட்கள் எங்க இருக்கான்னு கூடாது தெரியாது . இந்த குழந்தை உருவானதுக் கூட அவனுக்குத் தெரியாது.
"சாரி டீ! நான் கூட உன்கிட்ட ரொம்ப கடுமாய்யா நடந்துக்கிட்டேன் "
"உங்க யார் மேலையும் தப்பில்லடி. என்ன பெத்தவ ஆஸ்பத்திரில கிடக்கும்போது நான் அயோக்கியத்தனமா நடந்துக்கிட்டேன். அதுக்குத்தான் இன்னிக்கு நான் அனாதையா ஆஸ்பத்திரில கிடக்கறேன். இது கலி காலம் டி. "இட்டார்க்கு இட்ட பலன்" பண்ண தப்புக்கு கடவுள் ஒடனே பலன் குடுத்துடுவார்.
"அவனை விட்டுட்டு வந்துருடி" மனம் தோழிக்காக வருந்தினாலும் சட்டென அந்த வார்த்தையைக் கூறி விட முடியவில்லை.
"எப்ப எது வேணுன்னாலும் கூப்பிடுடி. யாரும் இல்லன்னு நினைக்காத. இன்னொரு தடவை உங்க வீட்டு ஆளுங்களை பார்த்து பேசறதை பத்தி யோசி. எனக்கு என்னவோ உங்க அம்மா அப்பா அப்படியே விட்டுட மாட்டாங்கன்னு தோணுது . எதுக்கும் ஒரு தடவ தீபக் அண்ணாகிட்ட பேசி பாக்கட்டுமா? என்னதான் இருந்தாலும் நம்ம அம்மா அப்பா அண்ணன் உறவை விட்டா வேற யாருடி இருக்கா ?"
"இல்லடி. அது சரிப் பட்டு வராது. அவங்களே இப்பதான் கொஞ்சமா சிரிக்க ஆரம்பிச்சுருக்காங்க . என்னோட அழுது வடியற மூஞ்சிய பார்த்துகிட்டு., போதுண்டி! இதுக்கு மேலையும் எங்க அத்தையோட கொடுமையை எங்க அம்மா அனுபவிக்கக் கூடாது. அவங்க பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் நானும் ஒரு முக்கிய காரணமா இருந்திருக்கேன்னு நினைக்கும்போது என்னை நினச்சா எனக்கே அசிங்கமா இருக்குடி . இனிமேலாவது அவங்க சந்தோஷமா இருக்கட்டும். அவங்க நிம்மதியும் சந்தோஷமும் தான் எனக்கு முக்கியம்"
"அதுக்குன்னு உன்ன நீயே அழிச்சுக்க வேண்டாண்டி "
"என்னால எத்தனை தூரம் சமாளிக்க முடியுமோ சமாளிக்கறேன் . எல்லாத்துக்கும் மேல என்னோட அம்மா கிட்ட மடி சேரணுன்னு தோணும்போது நிச்சயம் அவங்களை தேடித் போவேன். உனக்கு தான் தெரியுமே . நான் எவ்ளோ சுயநலவாதின்னு! எனக்கு என்னோட விஷயங்கள் தான் முக்கியம். மத்தபடி நான் யாருக்காகவும் யோசிக்க மாட்டேன் ஸகாத் கிடந்தாலும் ." விரக்தியான சிரிப்பு வந்தது.
" நீ முன்னாடி அந்த நல்லியா இருந்திருக்கலாம். பிள்ளை பிறப்புங்கறது ஒரு பொண்ணுக்கு மறு ஜென்மம்னு சொல்லுவாங்க. ஒரு வேளை அந்த நல்லி செத்துப் போய் இப்ப எங்க இனியா தான் வந்திருக்கான்னு எனக்கு தோணுது. இந்த இனியா எங்க அருணா அம்மாவோட பொறப்பு. தீபக் அண்ணாவோட வளர்ப்பு . அது என்னிக்கும் தப்பாகாது."
"தேங்ஸ் டீ. இனிமேலாவது உன் நம்பிக்கையை நான் காப்பாத்தறேன்."
பிரிய மனமில்லாமல் பிரியா விடை பெற்றுக் கொண்டார்கள் தோழிகள்.
இதோ இப்போது நம் குழலி வீட்டில் தான் இருக்கிறாள்., பாதுகாப்பாக.
வினய் வேறு ஒரு கல்லூரியில் சேரவும் வேலைப் பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே வீட்டை மாற்றிக் கொண்டான். வாடகை வீடுதான். இருந்தாலும் திருவான்மியூரில் இருந்து ரெட் ஹில்ஸ் வரை தினமும் சென்று வருவது நடக்காத காரியம். தேவையும் இல்லை. மனைவி சொல்வதும் சரிதான் . வீட்டை மாற்றிக் கொண்டார்கள்.
தான் எடுத்த முடிவு. நல்லவனை விட்டு வீடக் கூடாது. என் மாமா. எப்படியாவது அவனை தன்னுடைய காதலால் அன்பால் திருத்தி விட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் போராடிப் பார்த்தாள் இனியா. அவளை விடவும் அவனின் தலை எழுத்தா அல்லது நரிகள் கூட்டமா அதுதாம்ப்பா நண்பர்கள் சேர்க்கை, எதுவோ ஒன்று அவனை இவள் பக்கம் செல்ல விடாமல் தடுத்தது.
இவள் மருத்துவமனையில் இருந்த சமயம் நண்பர்கள் குழாம் வீட்டுக்கும் உரிமையாக வர ஆரம்பித்தார்கள். இவள் டிஸ்சார்ஜ் ஆகி வந்தப் பிறகு பெரிய சண்டை வந்து தான் அவர்கள் வருவது குறைத்துப் போனது. மொத்தமாக எல்லாம் யாரும் நிறுத்திவிடவில்லை. அவர்களுக்கு அவனைப் பார்க்கவில்லை என்றாலும் நல்லியைப் பார்க்காமல் முடியாது.
ஒருநாள் ஒருவன் வந்தான். அண்ணி நல்லவன் இல்லை? குடிக்க தண்ணி தாங்களேன் வாங்கி குடித்து விட்டு இவள் ஷாலில் முகம் துடைத்து விட்டுப் போனான்.
இன்னொருவன், "அண்ணன் இல்லையா. நான் துணைக்கு இருக்கவா?" கண்ணடித்தான். வேறு ஒருவன் "பின்னாடி கரையா இருக்கு" பொய் சொல்லி கலாய்த்தான்.
எத்தனை தான் கணவனிடம் அழ முடியும் அல்லது சண்டை போட முடியும்? அவனின் நண்பர்கள் கூட்டம் நாள் ஆக ஆக இனியவை கடித்துக் குதறும் வெறியோடு இருந்தார்கள். அது மட்டுமில்லாமல் நல்லவனை ஏதாவது கேசில் மாட்டி விட்டு இனியாவை தாங்கள் பதம் பார்த்து பிறகு தலைவரிடம் அனுப்பி விடலாம் என்றும் நினைத்தார்கள்.
அவர்களின் திட்டம் நிறைவேறியதா? இனியா தப்பிக்க முடியுமா? இனி அவளுக்கு யார் காவல்?
மாறனும் தீபக்கும் பெரியவர்களை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார்கள். இதற்கு நடுவில் தேவேந்திரன் கால் எலும்புகள் முழுவதும் தேய்ந்து விட்டன. முட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இனி வாழ் நாள் முழுவதும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெளிவாக சொல்லி விட்டார்கள்.
ஈஸி சேரில் சாய்ந்து கண் மூடி அமர்ந்தவர் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டார்கள் மகனும் மகளும். இந்த கால்கள் என் இப்படி ஆகி விட்டன? எங்களுக்கு உழைத்து உழைத்து இதற்கு மேல் முடியாது என்று சொல்லி விட்டதா? மெதுவாக இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்து அப்பாவின் கால்களை பிடித்து விட ஆரம்பித்தார்கள்.
"வலிக்குதாப்பா ?" மகளின் கண்களில் தந்தைக்கான வருத்தம் அப்பட்டமாக தெரிந்தது.
வலி இல்லாமலா இருக்கும். தசைகள் இறுக்கிப் பிடித்து எந்நேரமும் கிடுக்கி பிடி போட்டது போற ஒரு வலி இருந்து கொண்டே தான் இருக்கும். மனைவி தான் ஏதோ என்னை தேய்ப்பாள். வேண்டாம் என்று சொன்னாலும் இது என்னோட கடமை. அவலது தான் செய்வாள். தான் இருக்க வேண்டிய விதத்தில் இருந்திருந்தால் அருணாவும் காதல் மனைவியாக இருந்து எல்லாம் செய்வாள் அவருக்குத் தன் தவறு தெரிந்தது.
தான் எத்தனை முறை அவளை அடித்திருப்பேன் கொடுமைகள் செய்திருக்கிறேன். இருந்ததாலும் என் மீது வெறுப்பை உமிழாதவள். அந்த அளவிலாவது இனி தான் நின்றுக் கொள்ள வேண்டும்.
வருத்தத்துடன் கேட்ட மகளுக்கு இல்லை என்றுபி பொய் சொல்ல முடியாது. இருக்கு. ஆனா அம்மா எண்ணெய் தடவினா இருக்கறதில்ல. உண்மையைச் சொன்னார்.
மகனின் என்னமோ தந்தையை தான் சுற்றிக் கொண்டிருந்தது.
"எத்தனை தூரம் எங்களுக்காக மிதிவண்டி மீது மிதித்து வேலைக்குச் சென்றிருப்பார்? காலை வேளையில் மூன்று பிள்ளைகளையும் அந்த சைக்கிளில் அமர்த்தி ஆயிரம் கதை பேசி பள்ளிக்கு அழைத்துச் செல்வார். ரொம்பவும் சின்னதா இருந்த போதும் தீபக்குக்கு நன்றாகவே அந்த மலரும் நினைவுகள் நினைவில் இருந்தன. அம்மாவை அடிக்கக் கூடாது என்பதைத் தவிர அவனுக்கு அவன் அப்பாவை மிகவும் பிடிக்கும். தந்தை என்ற கடமையில் இருந்து அவர் ஒரு போதும் தவறியதில்லை. தனக்கென்று சரியாக செருப்புகே கூட வாங்கிக் கொள்ளாமல் குழந்தைங்களை பார்த்து பார்த்து வளர்த்த நம் வீட்டு அப்பாக்களை போலத் தான் தேவேந்திரனும்.
தங்கை மீது அளவு கடந்த பாசம், கண் மூடித் தனமான அன்பு வைக்கும் நம் வீட்டு அண்ணன்கள் போலத் தான் அவரும். அவரை குறை சொல்வதென்றால் நாம் பெரும்பாலான ஆண்களை குறை சொல்வதுப் போலத் தான்.
மெதுவாக தீபா தந்தையின் மாடி சாய்ந்தாள். எப்போதுமே இனியா தான் உரிமையாக தந்தியின் மடி சாய்வாள். அவள் என்றுமே அப்பாவை தங்கைக்கு விட்டுக் கொடுத்ததில்லை. இப்பபோது அவள் இல்லாததால் தான் தந்தையின் மடி சுகம் தீபாவுக்கு கிடைக்கிறது. என்ன ஒன்று, திண்ணென்று இருந்த அப்பாவின் தொடையுm காலும் இப்போது இழைத்துப் போய் எலும்பு மகளின் கன்னத்தை குத்தியது. அதனால் என்ன தந்தையின் மடி சுகம் தானே? அமைதியாக சாய்ந்துக் கொண்டாள்.
"என்ன தீபக்? இப்படி இருந்தா எப்படி? இனி நம்ம அப்பாவுக்கு என்ன செய்யணுமோ அதைப் பார்த்து செய்ங்க "
அருணா சொல்லி விட்டு சென்றாள் . அப்போது தான் மனதில் ஒரு முடிவெடுத்தவனாக கார் வாங்கலாம் என்று அன்னையிடம் சொன்னான்.
"நான் நினைச்சேன். இந்த வார்த்தை உன் வாயிலிருந்து வரணுன்னு ஆசைப்பட்டேன் கண்ணா"
மகனிடம் முகம் வழித்து ஆசையா மனைவி பேசிக் கொண்டிருந்தது கணவன் கண்ணில் படாமலா இருக்கும்?
அருணாவின் வளர்ப்பு என்ன என்பது அவருக்குப் புரிந்தது.
அப்போது தான் இனியா அவர்களை பார்த்தது.
==============================================================================
பின் இரவு ஆரம்பிக்கும் வேளை. குழலியின் வீடு தேடி ஆட்டோவில் வந்தாள் இனியா. ஏதோ பிரச்சனை. ஆட்டோ நடு வழியில் நின்று விட்டது. மகளையும் கையில் தூக்கிக் கொண்டு கண்களில் நீர் வழிய வழிய அருகில் இருந்த பேருந்து நிலையம் வந்தடைந்தாள். அவளுக்கு வேண்டியப் பேருந்து எதுவும் வரவில்லை. நமக்கு நடக்கும் அதே கதை தான். அவளுக்கு வேண்டியது எல்லாம் எதிர் திசையில் தான் சென்றது. நேரம் ஆக ஆக இவளுக்கு பயம் வந்தது. இன்பாவும் அழ ஆரம்பித்து விட்டாள் . அருகில் இருந்த கடையில் ஏதோ ஒரு பிஸ்கட்டை வாங்கி கொடுத்தாள். அது பிடிக்காத குழந்தை தூக்கி எறியவும் இவளுக்கு கோபம் வந்து விட்டது. இவளோ வந்த கோபத்தில் மகளை அடித்து விட்டாள்.
குழந்தை இடம் பொருள் தெரியாமல் வீல் என்று கத்தி அழ ஆரம்பித்து விட்டாள் .
இவளுக்கும் சொல்ல முடியாத துக்கம் வேதனை. அழாதடி. அழுது தொலையாத ஆங்காரமாக குழந்தையைக் கத்திக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து உயரமாக கட்டுமஸ்தான ஒரு ஆள் வந்தான். திரும்பி நின்று குழந்தையை அடித்தவளை பிடித்தவள் தோள் தொட்டான். இந்த நேரத்துல யார்? பயத்துடனே திரும்பியவள் பார்த்தது
யார் ?
மீன் துடிக்கும் .........
Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் -14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கடல் தேடும் மீன்கள் -14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.