Ilampillai
New member
- Joined
- Mar 27, 2025
- Messages
- 22
ஒரு நாள் ஒரு பேருந்தில் இறங்கி அடுத்த பேருந்துக்காக காத்திருந்தாள். அங்கே எதிரில் ஏதோ ஒரு கார் ஷோ ரூம் இருந்தது. அங்கே அவள் குடும்பம் தாய் தந்தை தீபக். 'தீபாவுடன் வருவது யாரு? மாறன் தானே? அத்தனை உரிமையாக அவன் கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறாள். திருமணம் ஆகி விட்டதா? ச! ச ! இருக்காது .நமக்கு சொல்லாமல்? எனக்கு இல்லையென்றாலும் அத்தைக்கு நிச்சயம் சொல்லாமல் அப்பா இருக்கா மாட்டார். ஆனால் அவள் உச்சி வகுட்டில் குங்குமம் தானே அது?அவர்களுக்கும் இவளுக்கும் பெரிய தூரமெல்லாம் இல்லை. வழியில் சென்ற வாகனங்களுக்கு நடுவில் உற்று நோக்கினால் தெரிந்தது. தனக்கான பேருந்து வரவும் ஏறிக் கொண்டாள்.
வீட்டுக்கு வந்து தன்னுடைய உருவத்தையும் தங்கையின் உருவத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாள்.
தங்கையோ தலையில் பூ வைத்து, குங்குமம் பளிச்சிட முகமெங்கும் பூரிப்புடன் இருந்தாள். அழகாக புடவை கட்டி பார்க்கவே அத்தனை ஆசையாக இருந்தது. அன்னை கூடத் தான். முன்பிருந்தது போல இல்லாமல் முகம் சற்றுத் தெளிவடைந்தது போல இருந்தது . அப்பா, தீபக் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. இப்போது தங்கை இருக்கும் கோலத்தில் தானே,தன்னையும் பார்க்க தன அன்னை அத்தனைப் போராடினாள்? கண் கெட்டப் பெண் சூர்யா நமஸ்காரம் செய்து தான் என்ன ?
பல வித யோசனைகளுடன் இரவு உணவு தயார் செய்து விட்டு ஏதோ சிறிது வாயில் போட்டுக் கொண்டாள். இப்போதெல்லாம் பெரியதாக பசி என்று சொல்லி விட முடியாது. இருந்தாலும் வாய் ஏதாவது வேண்டும் வேண்டும் என்றுக் கேட்கிறது. வாய்க்கு ருசியாக யாராவது ஆக்கிப் போட மாட்டார்களா என்று ஆசை வந்து விட்டது. இது தெரியாமலா ஐந்து மாதம் ஐந்து சாதம் ஏழு மாதம் ஏழு பண்டங்கள் என்று வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லாம் ஒருவர் மாற்றி ஒருவர் என்று வந்துப் பார்த்துக் கொள்வதும் வித விதமாக சாப்பிட வைப்பதும் .
இன்றைய காலத்தில் இளையவர்களுக்குத் தெரியாத விஷயம் என்று ஏதாவது இருக்கிறதா?
"சத்தான உணவுகள் சாப்பிடணும்" என்று மருத்துவரும் எத்தனையோ சொன்னார் தான். இவளுக்குத், "தானே செய்து தானே உண்ண வேண்டும் என்ற அலுப்பினாலேயே சரியாக சாப்பிடுவதில்லையே!' இவள் பிள்ளை உண்டான போதே பிள்ளை சிறைக்குச் சென்றதால் பார்வதிக்கும் பெரியதாக எல்லாம் இவள் மீதும் குழந்தை மீதும் எண்ணம் ஆசை எதுவும் இல்லை. ராசி கெட்டது என்ற எண்ணம் தான். அதே சமயம் "கலச்சுடு "சொல்லவும் வாய் வரவில்லை." இருக்கியா இரு " என்பது போலத் தான் நடந்துக் கொண்டாள்.
முதலில் எல்லாம் மருமகள் மீது ஆசையாக இருந்தவள் தான். ஆனால் திருமணம் ஆன அந்த புதிய நாட்களில் மகன் வெளிப்படையாகவே அவளிடம் கொஞ்சுவதை பார்த்தவளுக்கு எல்லா மாமியாருக்கும் வரும் அந்த பாதுகாப்பின்மை என்ற எண்ணம் தான் மருமகளிடமிருந்து ஒதுங்க வைத்தது.
பகலில் எல்லாம் எங்கு தான் போவாளோ. தெரியாது. இரவில் தான் வீடு திரும்புவாள். ஏதோ சில நாட்களில் மட்டும் கோவிலுக்குச் செல்வாள். மற்ற நேரங்களில் சினிமாவுக்குச் செல்வாள். வீட்டிலும் எந்த வேலையும் செய்வதில்லை. கணவன் இருந்த வரை ஏதோ செய்தாள். இப்போது அதற்கும் ஆள் வந்து விட்டது. வேறு என்ன?
இதோ அதோ என்று வாந்தி வர வர எடுப்பதும் தன் கையே தனக்கு உதவி என்று சுத்தம் செய்வதும், சத்து மருந்துகள் எடுத்துக் கொள்வதும் என்று ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. நல்லவன் திருந்தி வாழும் யோசனையில் இல்லை. பார்வதியும் மாறப் போவதில்லை. என்ன ஒரே ஒரு வேறுபாடு, நல்லவன் குடித்து விட்டு இவளை அடிக்கும் போதெல்லாம் நடுவில் வந்து தடுத்து விடுவாள். மனைவிக்கு மட்டும் அவன் உடல் சிவக்க வைக்கவில்லை. அன்னையும் சேர்த்து உடல் சிவக்க வைத்தான். அடடே ஆச்சர்யக் குறி !!!
ஒரு நாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்றாள்.
என்னோட சிறப்பு மீசை தானே! முறுக்கிக் கொண்டு நின்றார் கிருஷ்ணர். இவளுக்கு பார்க்க அய்யனார் போலத் தான் இருந்தது . அய்யனார் முகத்தில் தீயவர்களை அழிக்கும் ஒரு ஆக்ரோஷம் தெரியும். இவரோ, "போதும் . பகைவரை அழித்து விட்டேன். கீதை சொல்லி விட்டேன். இனி உங்கள் இந்திரியங்கள் தறி கேட்டு ஓடாமல் இருக்க என்னிடம் வாருங்கள். உங்களுக்கும் சாரதியாக இருப்பேன்" என்று வீட்டுக்கு ஒரு பெரியவர் அறிவுரை சொல்வதுப் போலவே இருந்தது. அருகில் ருக்மிணியும் ராமர் சன்னதியில் இருந்த சீதையும் அவரவர் கணவனுக்கு அருகில் முகம் சிவக்க நின்றிருந்தார்கள். வேதவல்லித் தாயாரோ ,
"வாடி குழந்தை! நன்னா இருக்கியா?"மூத்த சுமங்கலி அழைப்பது போல இருந்தது.
"பாரேன்! என்னை போலவே உனக்கும் ஒரு குட்டி தேவதை பிறக்க போறா" சொன்னாள் கோதை .
மனதுக்கு இதமாக இருந்தது. செருப்பு ஸ்டாண்டில் தீபக்கைப் பார்த்தாள்.
"அண்ணா ! குரல் தழு தழுக்க அவள் அழைத்ததில் கண்கள் விரிய அவளை பார்த்தான். என்ன தான் இருந்தாலும் உடன் பிறந்தவள். துரோகம் செய்தவள் தான் சட்டென காரி உமிழ வரவில்லை. அருணாவின் வளர்ப்பு அப்படித் தான் இருக்கும்.
"ஓ ! நீயா? எப்படி இருக்க ?"
தீபகின் குரல் ரொம்ப பார்மலாக இருந்தது.
"ஏதோ இருக்கேன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?"
"ம் ! இருக்கோம்"
"அம்மா?"
"ம் ! இருக்காங்க. உயிரோட தான் இருக்காங்க. தயவு செய்து அவங்க முன்னாடி உன்னோட முகத்தை காட்டிடாத . நானும் என்னோட தங்கச்சியும் அவங்களை ரொம்ப கஷ்டப பட்டு எமன் கிட்டேர்ந்து மீட்டு கொண்டு வந்திருக்கோம். உனக்கு அவங்க தேவை இல்லை. ஆனா எங்க ரெண்டுபேருக்கும் அவங்க தேவை. எங்களோட பிள்ளைங்களுக்கு அவங்க தேவை" அவள் வயிற்றைப் பார்த்து தான் கூறினான்.
இவள் மறு வார்த்தை பேசுவதற்கு முன்பு அவன் அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டான். அதிர்ச்சியில் கண்கள் நீரைக் கொட்ட அப்படியே சில நொடிகள் ஸ்தம்பித்து விட்டாள்.
அன்றைய தினமும் அடுத்து வந்த நாட்களும் தான் ஒரு அனாதை என்ற எண்ணம் மேலோங்க அழுதுக் கொண்டே இருந்தாள்.
யார் எப்படி இருந்தால் எனக்கென்ன? பல பகல் வந்தது. இருளும் வந்தது. இவளுக்கு வலை வந்தது. இவள் மீது இரக்கம் கொண்ட பக்கத்து வீட்டுப் பெண் தான் அடிக்கடி வந்து பார்த்து கொள்வாள். உதடு கடித்து வலிப் பொறுக்க முடியாமல் கதறியவளை அவசரமாக ஆட்டோவில் அள்ளிக் கொண்டு வந்து சேர்த்தாள்.
வந்து பார்த்த பார்வதி ஒரு நாள் இருந்தாள். பிறந்தது பெண்ணாகப் பிறக்கவே மறு நாள் முதல் ஆளைக் காணும். தன் மகனைப் பார்க்க சிறைக்குச் சென்று விட்டாள். ஏதோ கட்டப் பஞ்சாயத்து விஷயம். இவனும் இவனுடன் சேர்ந்து இன்னும் இருவர். சும்மா கண் துடைப்பு தான் இந்த கைது. இப்படி அடிக்கடி கைதாகி வெளியில் வந்தால் கெத்தாம். அவன் நலன் விரும்பிகள் சொல்லி இருந்தார்கள்.
அந்த ஊருக்கு உழைக்கும் தியாகியின் மனைவியோ இங்கே மருத்துவமனையில் உதவிக்கு கூட ஆள் இல்லாமல் தவித்துப் போனாள் . நார்மல் டெலிவரி தான். இருப்பினும் வயிற்றை சரியாக சுத்தப் படுத்தாமல் விட்டதில் இன்பெக்ஷன் வந்து ஆபரேஷன் செய்தார்கள். சரியாக பால் வரவில்லை . ஏதோ மருந்து கொடுத்தார்கள். நல்ல வேளை பிள்ளைக்கு எந்த குறையும் இல்லை. நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாகவே இருந்தது.
"உதவிக்கு கூட ஆள் இல்லாம அந்த பொண்ண அப்படியே அனாதையா விட்டுட்டு போய்டுச்சு அந்த அம்மா. பாவம் அந்தப் பொண்ணு. பிள்ளையை தூக்க கூட ஆளில்லாமல் தனியா கிடந்து அல்லாடுது.
நர்ஸுகள் பேசிக் கொண்டதை கேட்டு இவளை பார்க்க ஒரு பெண் வந்தாள் .
யார் அவள்? அருணாவா?
மீன் துடிக்கும்.....
வீட்டுக்கு வந்து தன்னுடைய உருவத்தையும் தங்கையின் உருவத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாள்.
தங்கையோ தலையில் பூ வைத்து, குங்குமம் பளிச்சிட முகமெங்கும் பூரிப்புடன் இருந்தாள். அழகாக புடவை கட்டி பார்க்கவே அத்தனை ஆசையாக இருந்தது. அன்னை கூடத் தான். முன்பிருந்தது போல இல்லாமல் முகம் சற்றுத் தெளிவடைந்தது போல இருந்தது . அப்பா, தீபக் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. இப்போது தங்கை இருக்கும் கோலத்தில் தானே,தன்னையும் பார்க்க தன அன்னை அத்தனைப் போராடினாள்? கண் கெட்டப் பெண் சூர்யா நமஸ்காரம் செய்து தான் என்ன ?
பல வித யோசனைகளுடன் இரவு உணவு தயார் செய்து விட்டு ஏதோ சிறிது வாயில் போட்டுக் கொண்டாள். இப்போதெல்லாம் பெரியதாக பசி என்று சொல்லி விட முடியாது. இருந்தாலும் வாய் ஏதாவது வேண்டும் வேண்டும் என்றுக் கேட்கிறது. வாய்க்கு ருசியாக யாராவது ஆக்கிப் போட மாட்டார்களா என்று ஆசை வந்து விட்டது. இது தெரியாமலா ஐந்து மாதம் ஐந்து சாதம் ஏழு மாதம் ஏழு பண்டங்கள் என்று வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லாம் ஒருவர் மாற்றி ஒருவர் என்று வந்துப் பார்த்துக் கொள்வதும் வித விதமாக சாப்பிட வைப்பதும் .
இன்றைய காலத்தில் இளையவர்களுக்குத் தெரியாத விஷயம் என்று ஏதாவது இருக்கிறதா?
"சத்தான உணவுகள் சாப்பிடணும்" என்று மருத்துவரும் எத்தனையோ சொன்னார் தான். இவளுக்குத், "தானே செய்து தானே உண்ண வேண்டும் என்ற அலுப்பினாலேயே சரியாக சாப்பிடுவதில்லையே!' இவள் பிள்ளை உண்டான போதே பிள்ளை சிறைக்குச் சென்றதால் பார்வதிக்கும் பெரியதாக எல்லாம் இவள் மீதும் குழந்தை மீதும் எண்ணம் ஆசை எதுவும் இல்லை. ராசி கெட்டது என்ற எண்ணம் தான். அதே சமயம் "கலச்சுடு "சொல்லவும் வாய் வரவில்லை." இருக்கியா இரு " என்பது போலத் தான் நடந்துக் கொண்டாள்.
முதலில் எல்லாம் மருமகள் மீது ஆசையாக இருந்தவள் தான். ஆனால் திருமணம் ஆன அந்த புதிய நாட்களில் மகன் வெளிப்படையாகவே அவளிடம் கொஞ்சுவதை பார்த்தவளுக்கு எல்லா மாமியாருக்கும் வரும் அந்த பாதுகாப்பின்மை என்ற எண்ணம் தான் மருமகளிடமிருந்து ஒதுங்க வைத்தது.
பகலில் எல்லாம் எங்கு தான் போவாளோ. தெரியாது. இரவில் தான் வீடு திரும்புவாள். ஏதோ சில நாட்களில் மட்டும் கோவிலுக்குச் செல்வாள். மற்ற நேரங்களில் சினிமாவுக்குச் செல்வாள். வீட்டிலும் எந்த வேலையும் செய்வதில்லை. கணவன் இருந்த வரை ஏதோ செய்தாள். இப்போது அதற்கும் ஆள் வந்து விட்டது. வேறு என்ன?
இதோ அதோ என்று வாந்தி வர வர எடுப்பதும் தன் கையே தனக்கு உதவி என்று சுத்தம் செய்வதும், சத்து மருந்துகள் எடுத்துக் கொள்வதும் என்று ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. நல்லவன் திருந்தி வாழும் யோசனையில் இல்லை. பார்வதியும் மாறப் போவதில்லை. என்ன ஒரே ஒரு வேறுபாடு, நல்லவன் குடித்து விட்டு இவளை அடிக்கும் போதெல்லாம் நடுவில் வந்து தடுத்து விடுவாள். மனைவிக்கு மட்டும் அவன் உடல் சிவக்க வைக்கவில்லை. அன்னையும் சேர்த்து உடல் சிவக்க வைத்தான். அடடே ஆச்சர்யக் குறி !!!
ஒரு நாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்றாள்.
என்னோட சிறப்பு மீசை தானே! முறுக்கிக் கொண்டு நின்றார் கிருஷ்ணர். இவளுக்கு பார்க்க அய்யனார் போலத் தான் இருந்தது . அய்யனார் முகத்தில் தீயவர்களை அழிக்கும் ஒரு ஆக்ரோஷம் தெரியும். இவரோ, "போதும் . பகைவரை அழித்து விட்டேன். கீதை சொல்லி விட்டேன். இனி உங்கள் இந்திரியங்கள் தறி கேட்டு ஓடாமல் இருக்க என்னிடம் வாருங்கள். உங்களுக்கும் சாரதியாக இருப்பேன்" என்று வீட்டுக்கு ஒரு பெரியவர் அறிவுரை சொல்வதுப் போலவே இருந்தது. அருகில் ருக்மிணியும் ராமர் சன்னதியில் இருந்த சீதையும் அவரவர் கணவனுக்கு அருகில் முகம் சிவக்க நின்றிருந்தார்கள். வேதவல்லித் தாயாரோ ,
"வாடி குழந்தை! நன்னா இருக்கியா?"மூத்த சுமங்கலி அழைப்பது போல இருந்தது.
"பாரேன்! என்னை போலவே உனக்கும் ஒரு குட்டி தேவதை பிறக்க போறா" சொன்னாள் கோதை .
மனதுக்கு இதமாக இருந்தது. செருப்பு ஸ்டாண்டில் தீபக்கைப் பார்த்தாள்.
"அண்ணா ! குரல் தழு தழுக்க அவள் அழைத்ததில் கண்கள் விரிய அவளை பார்த்தான். என்ன தான் இருந்தாலும் உடன் பிறந்தவள். துரோகம் செய்தவள் தான் சட்டென காரி உமிழ வரவில்லை. அருணாவின் வளர்ப்பு அப்படித் தான் இருக்கும்.
"ஓ ! நீயா? எப்படி இருக்க ?"
தீபகின் குரல் ரொம்ப பார்மலாக இருந்தது.
"ஏதோ இருக்கேன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?"
"ம் ! இருக்கோம்"
"அம்மா?"
"ம் ! இருக்காங்க. உயிரோட தான் இருக்காங்க. தயவு செய்து அவங்க முன்னாடி உன்னோட முகத்தை காட்டிடாத . நானும் என்னோட தங்கச்சியும் அவங்களை ரொம்ப கஷ்டப பட்டு எமன் கிட்டேர்ந்து மீட்டு கொண்டு வந்திருக்கோம். உனக்கு அவங்க தேவை இல்லை. ஆனா எங்க ரெண்டுபேருக்கும் அவங்க தேவை. எங்களோட பிள்ளைங்களுக்கு அவங்க தேவை" அவள் வயிற்றைப் பார்த்து தான் கூறினான்.
இவள் மறு வார்த்தை பேசுவதற்கு முன்பு அவன் அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டான். அதிர்ச்சியில் கண்கள் நீரைக் கொட்ட அப்படியே சில நொடிகள் ஸ்தம்பித்து விட்டாள்.
அன்றைய தினமும் அடுத்து வந்த நாட்களும் தான் ஒரு அனாதை என்ற எண்ணம் மேலோங்க அழுதுக் கொண்டே இருந்தாள்.
யார் எப்படி இருந்தால் எனக்கென்ன? பல பகல் வந்தது. இருளும் வந்தது. இவளுக்கு வலை வந்தது. இவள் மீது இரக்கம் கொண்ட பக்கத்து வீட்டுப் பெண் தான் அடிக்கடி வந்து பார்த்து கொள்வாள். உதடு கடித்து வலிப் பொறுக்க முடியாமல் கதறியவளை அவசரமாக ஆட்டோவில் அள்ளிக் கொண்டு வந்து சேர்த்தாள்.
வந்து பார்த்த பார்வதி ஒரு நாள் இருந்தாள். பிறந்தது பெண்ணாகப் பிறக்கவே மறு நாள் முதல் ஆளைக் காணும். தன் மகனைப் பார்க்க சிறைக்குச் சென்று விட்டாள். ஏதோ கட்டப் பஞ்சாயத்து விஷயம். இவனும் இவனுடன் சேர்ந்து இன்னும் இருவர். சும்மா கண் துடைப்பு தான் இந்த கைது. இப்படி அடிக்கடி கைதாகி வெளியில் வந்தால் கெத்தாம். அவன் நலன் விரும்பிகள் சொல்லி இருந்தார்கள்.
அந்த ஊருக்கு உழைக்கும் தியாகியின் மனைவியோ இங்கே மருத்துவமனையில் உதவிக்கு கூட ஆள் இல்லாமல் தவித்துப் போனாள் . நார்மல் டெலிவரி தான். இருப்பினும் வயிற்றை சரியாக சுத்தப் படுத்தாமல் விட்டதில் இன்பெக்ஷன் வந்து ஆபரேஷன் செய்தார்கள். சரியாக பால் வரவில்லை . ஏதோ மருந்து கொடுத்தார்கள். நல்ல வேளை பிள்ளைக்கு எந்த குறையும் இல்லை. நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாகவே இருந்தது.
"உதவிக்கு கூட ஆள் இல்லாம அந்த பொண்ண அப்படியே அனாதையா விட்டுட்டு போய்டுச்சு அந்த அம்மா. பாவம் அந்தப் பொண்ணு. பிள்ளையை தூக்க கூட ஆளில்லாமல் தனியா கிடந்து அல்லாடுது.
நர்ஸுகள் பேசிக் கொண்டதை கேட்டு இவளை பார்க்க ஒரு பெண் வந்தாள் .
யார் அவள்? அருணாவா?
மீன் துடிக்கும்.....
Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் -12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கடல் தேடும் மீன்கள் -12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.