Ilampillai
New member
- Joined
- Mar 27, 2025
- Messages
- 22
கடல் தேடும் மீன்கள் -10
புதுப் பெண் விடியலில் எழுந்து சமைத்தால் தான் அலுவலகத்திற்கு நேரத்திற்கு செல்ல முடியும். நேரத்துக்கு முன்பே எழுந்து கோலம் போட்டு வீட்டை சுத்தப்படுத்தி எல்லாம் முடித்து அவசரமாக கிளம்பினாள் . அதற்க்கு அவள் எழுந்த நேர விடியற் காலை 4.30. இரவெல்லாம் கணவனுக்கு ஒத்துழைத்து , பிறகு விடியலில் எழுந்து , முதல் சில வாரங்கள் உற்சாகமாகத் தான் இருந்து. பிறகு வந்த நாட்கள் உடல் கெஞ்ச ஆரம்பித்து விட்டது .
அவர்கள் வீட்டில் அருணா தான் எல்லாமே பார்த்துக் கொண்டிருந்தார். திமிராக கால் மேல் கால் போட்டு இவள் அமர்ந்திருக்க அன்னைதான் குடிக்க தண்ணீர் கூட கொண்டு வந்து கொடுப்பார். இல்லையில்லை, கொடுக்க வேண்டும்.
அன்னையின் அன்பைத்
தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும்போது,குழந்தைகளை திருத்த வேண்டியதும் வீட்டில் இருக்கும் பெரியவர்களின் பொறுப்புதான் . தேவேந்திரன் பொறுத்தவரை அங்கே இனியா தான் மகாராணி. அது சரி தான். நம் வீட்டுப் பெண் பிள்ளைகளை மஹாராணியாகப் பார்ப்பதில் தவறில்லை . அதற்காக வேறு வீட்டில் இருந்து நம்மை நம்பி வரும் பெண்ணை வேலைகாரிப் போல நடத்துவது எப்படி ஏற்க முடியும்?
இனியா அதிகாரம் செய்தால் அதற்கு அருணா அடங்கி நடக்க வேண்டும். அது வெளிப்டையாகவேச் சொல்லப் பட்ட விதி.
"ஏ இனியா! எதுக்கு இப்படி அம்மாவை அதிகாரம் பண்ணற?"
"நான் எங்க அம்மாகிட்ட கேக்கறேன். உனக்கு என்னென்ணா ?"
"முதல்ல அவங்க எனக்குத் தான் அம்மா. "
குழந்தைகளாக சண்டை போட்டுக் கொண்ட போது "ரெண்டுப் பேருக்கும் நான் அம்மா தான்." சமாதானம் செய்வாள் அம்மா. இனியா பெரியவள் ஆன போதும் அதேக் கதை தான். அதனால் தானோ என்னவோ நான் பெரிய பிள்ளையாகிட்டேன் என்று தெரிந்து கொள்ளும் குழந்தைகளுக்கு பெற்றவர்களுக்கும் வயதாகி விட்டது என்பது தெரிவதில்லை.
நான் பெரியவளாகி விட்டேன் இனிய தெரிந்துக் கொண்ட போது, தயங்காமல்
மாமாவுக்கு இது பிடிக்கும் அத்தைக்கு அது வேணுமாம். ஒரு நாளைக்கு உனக்கு என்னம்மா வேணும்? கேட்டிருக்கலாம். அன்னையின் மனம் குளிர்வதைத் தவிர வேறு என்ன பெரிய ஆசீர்வாதம் இருக்கும் இந்த உலகத்தில்? கேட்டு கேட்டு பிடிவாதமாக நிறைய சமைக்க கற்றுக் கொண்டு விட்டாள். என்னதான் செய்தாலும் அருணாவின் கைப் பக்குவம் ஏனோ வருவதில்லை. அது மட்டுமா? வேகம், விவேகம் பொறுமை எதுவுமேத் தான் அருணாவைப் போல இனியாவுக்கு வரவில்லை. அன்னையின் அத்தனை நல்ல குணங்களையும் தீபாவும் தீபக்கும் எடுத்துக் கொண்டார்கள். பங்குப் போட்டு இவளுக்கு கொடுத்த போது எனக்கு எந்த நல்ல குணமும் வேண்டாம் என்று பிடிவாதமாக இவள் தான் மறுத்துவிட்டாளே . பதிலாக தந்தையிடமிருந்து எப்படி மூஞ்சியில் அடித்தது போல பேச வேண்டும் என்று கற்றுக் கொண்டாள். பேராசை, சுயநலம் இத்யாதிகளை சொத்துக்களாக எடுத்துக் கொண்டுவிட்டாள்.
"இட்டார்க்கு இட்ட பலன் "
என்னதான் இன்னும் சீக்கிரம் இன்னும் சீக்கிரம் என்று எழுந்து வேலைகளை அவசர அவசரமாகச் செய்தாலும் அருணா அளவுக்கு வேகமாக செய்ய முடிவதில்லை. பயிற்சியும் அனுபவமும் காரணமாக இருக்கலாம்.
"காலைல கொஞ்சம் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க மாமா. பகல்லையும் வேலை செஞ்சு ராத்திரியும் செய்ய முடியல" மஞ்சத்தில் அவள் கொஞ்சினாள்.
"நம்ம வீட்டுல ஆம்பிள எவனும் வேலை செய்ய மாட்டான் தெரியாதா உனக்கு?"
அவனின் குரல் மாறி விட்டது. அதற்கு மேல் பேசி அவனை கோபப் படுத்த விரும்பாதவள் அமைதியாகி விட்டாள்.
அடுத்த சில மாதங்களுக்கு இது பற்றி எதுவும் பேச்சு வரவில்லை என்றாலும் இனியாவுக்கு அவ்வப்போது கண்களின் ஓரம் நீர் துளிர்க்க ஆரம்பித்துவிட்டது. அதிலும் மாதாந்திர நாட்களில் வயிற்றுவலியும் உதிரப் போக்கும் அவளுக்கு அதிகமாகவே இருந்தது. நிக்க முடியாது. தொடைகள் வலி கடுக்கும். அலுவகத்திற்கு அருகில் இருக்கும் மருத்துவமனையிலேயே காட்டி விட்டாள். கவலைப்பட ஒன்றும் இல்லை. இருப்பினும் கர்ப்பப்பை சற்று பலவீனமாக இருப்பதால் சில மருந்துகளை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். அதேப் போல அந்த நேரத்தில் கணவன் மனைவி இருவருமே குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இன்பெக்ஷன் ஆகி விடும் என்று சற்று கடினமாகவே சொல்லி விட்டார் மருத்துவர்.
வரும் வழி எல்லாம் மருத்துவர் சொன்னதுதான் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
"வாசனை திரவியம் இல்லாமல் சுத்தமான சோப்பு வாசனையுடன் தன்னிடம் நல்லவன் வருவானா? இதைப் பற்றி எப்படி மாமாவிடம் சொல்வது? '
அவனின் மேனி வாசனையும் செயற்கை திரவியங்கள் வாசனையும் இவள் ரசித்தது கூடாதாம். சுத்தமும் சோப்பு வாசனையும் தான் வேண்டுமாம். நினைக்க நினைக்க தலை வலிப்பதுப் போல இருந்தது. வேண்டாம் எதுவும் நினைக்க வேணாம்.
"நீ சொல்லறது எல்லாம் கேக்க நான் என்ன உங்க அம்மாவா? ஜிங்கிலக்கா பிளாப்பி " வேற யாரு மனசாட்சிதான்.
"பொம்பளை புள்ளை வீடு வாசல்ல கொஞ்சம் பெரிசாத்தான் கோலத்தை போடேன். குனிந்து கோலம் போட்டா கர்ப்பப்பைக்கு நல்லது" பேருந்தில் வந்துக் கொண்டிருந்தவளுக்கு அன்னையின் குரல் காதில் கேட்டது.
அருணா அந்த காலத்திலேயே கல்லூரிக்குச் சென்று படித்தவள். அதிலும் அவள் இயற்பியல் மாணவி. கைப் பேசி இல்லாத போதே ஆயிரம் விஷயங்கள் சொல்வாள்.
'இப்போது ஒவ்வொரு விஷயமாக யோசிக்க யோசிக்க அன்னை எத்தனை புத்திசாலி. அவளை தானும் தகப்பனும் சேர்ந்து எத்தனை எல்லாம் கேவலப் படுத்தி இருக்கிறோம் ?'
மண்டையில் உறைக்க ஆரம்பித்தது.
ஏதேதோ யோசனைகளுடன் வீடு வந்து சேர்ந்தாள்.
மருந்துப் பையுடன் உள்ளே நுழைந்தவளை வா என்ற ஒற்றைச் சொல்லோடு ஏறெடுத்தும் பார்க்காமல் டிவி சீரியலை பார்க்க ஆரம்பித்தாள் பார்வதி.
இதுவே அம்மாவா இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?
குளிக்கப் போனவளுக்கு பொங்கி பொங்கி அழுகை வந்தது. விலைக் குறைந்த நாப்கின் பயன் படுத்தியதில் அந்தரங்கமான சில இடங்களில் ராஷஸ் வந்திருந்தன. குளித்து விட்டு புதியது மாட்டிக் கொண்ட போதும் அத்தனை எரிச்சல்.
"இதெல்லாம் உபயோகப் படுத்தாதீங்க. துணி இல்ல ஆர்கனிக் உபயோகப் படுத்துங்க." துணி சாத்தியமில்லை. ஆர்கானிக் வாங்க கையில் பணம் இல்லை. என்ன அழுது என்ன?
தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும். கணவன் எப்போது வீட்டுக்கு வருவான் என்றுத் தெரியாது.
உரிமையாக அவனிடம் சென்று தனக்குத் தேவையான அந்தப் பொருளை கூட கேட்டு வாங்கிக் கொள்ள முடியாது. இதற்குத் தானே அன்னையும் தீபக்கும் அத்தனை தூரம் போராடினார்கள். மாமாவுக்கும் சேர்த்து நான் சம்பாதிக்கறேன். திமிராகச் சொன்னவளுக்கு , இனி காலம் பூராவும் அவனுக்கும் சேர்த்து தான்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற தன்னுடைய அவல நிலை புரியும்போது என்ன செய்வாள்?
அனுபவிக்கட்டும். நல்லா வேணும் என்று என்னாலும் சொல்ல முடியவில்லை. பாவமாகத் தான் இருக்கிறது.
எத்தனை நேரம் தான் அழுதுக் கொண்டே இருக்க முடியும் அடுத்தது அடுத்தது வேலைகள் இருக்கின்றவே. நல்லவன் அடுத்த அரை மணி நேரத்திலும் வரலாம். அரை நாள் கழித்தும் வரலாம். வேலைக்குப் போயிருந்தால் இத்தனை மணிக்கு வருவேன் என்று சொல்ல முடியும். அது தான் இல்லையே. எப்படி இருந்தாலும் அவன் வருவதற்குள் இரவு உணவு செய்து முடித்திருக்க வேண்டும். இல்லை என்றால் சத்தம் போடுவான். அவன் ஒரு உணவுப் பிரியன் என்று அறிந்தவள் அதையும் இன்பமாகவே ஏற்றுக் கொண்டாள்.
ஒரு நாள் காலை நல்லவன் கருவாடு வாங்கி வந்தான். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு குளித்து உடை மாற்றி தலை சீவிக் கொண்டிருந்தவளிடம்,
" இந்தா இதை மட்டும் ஆக்கி வச்சுட்டு கிளம்பு" அதிகாரமாகச் சொன்னான்.
"என்ன மாமா இது ஏற்கனவே நான் லேட்டு. இப்ப கொண்டாந்து நீட்டுற?"
"என்னையே கேள்வி கேக்குற நீ? அடிச்சு பல்லை பேத்துருவேன் பார்த்துக்க "
இப்போதெல்லாம் வார்த்தைகள் இப்படித் தான் வருகின்றன. கை ஓங்கினாலும் அடிக்க மாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.
"அதில்ல மாமா! ஏற்கனவே நான் பஸ்ஸு புடிச்சு போகணும். அதுக்கே லேட் ஆகிடும். அதுக்கு மேல அந்த எச் ஆர் வேற. ரொம்ப திட்டுவாரு மாமா. உனக்கு எங்க இதெல்லாம் தெரியும் ?"
அவள் சாதாரணகச் சொல்வதாக நினைத்து எதையோ வாய் விட்டாள்.
"ஓ! நான் வேலைக்குப் போகலைன்னு குத்தி காட்டறியா? நான் இப்படித்தான். வேணுன்னா இரு. இல்ல உங்க அப்பா வீட்டுக்கு போடி."
கத்தி விட்டு வாங்கி வந்த கருவாட்டை தூக்கி விட்டெறிந்து விட்டுச் சென்றான்.
என்ன நடக்கிறது? அவளுக்கு யோசிக்க எல்லாம் நேரமில்லை. அவசரமாக கீழே இருந்தவற்றை எடுத்து வைத்து விட்டு கிளம்பி விட்டாள்.
மாலையில் வந்த போது கூட அதை பார்வதி செய்திருப்பாள் என்று நினைத்தாள். அது வைத்த இடத்தில அப்படி இருந்தது.
"ஏன் அத்தை அவரு ரொம்ப அசையா வாங்கிட்டு வந்தாரு. எனக்குத்தான் நேரமாச்சுன்னு கிளம்பிட்டேன். நீங்களாவது மாமாவுக்கு செய்துருக்கலாமில்லை?"
"என்ன அருணா? பேச்செல்லாம் வேற ரூட்டுல போகுது. என்னையே வேலை சொல்லற அளவுக்கு நீ பெரிய ஆளா?"
மதியம் வந்த மகனிடம் அவன் மனைவிப் பற்றி தப்பு தப்பாக வத்தி வைத்துவிட்டாள். பெரிய காரணம் எல்லாம் அவளின் செயலுக்கு இல்லை. தான் ஒரு மாமியார். அப்படித் தான் இருக்க வேண்டும். சொல்லித் தர எத்தனை சீரியல்கள் இருக்கிறன. அதை தவிரவும் அவள் பார்வதி. அவளுக்கு யாரும் சொல்லித் தர வேண்டிய அவசியமே இல்லை.
இனியாவின் செயலுக்கு கர்மா திருப்பி அடிக்க ஆரம்பித்து விட்டது. அது அவளுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.
யாராவது ஒற்றை வாய் காபி தருவார்களா?
உடல் கெஞ்சியது. வாய்பில்லை மேடம் வாய்ப்பில்லை. தானே காபி கலந்து அத்தைக்கும் கொடுத்து விட்டு அவளும் குடித்தாள். கணவன் மனைவி போட்டோ ஒட்டிய காபி கோப்பை. அதை பார்த்ததும் அவன் நினைவு வந்தது. நல்லவனுக்கு அழைத்தாள். அவன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தான்.
இனி இந்த மாதிரி தாண்டி( சொன்னது உங்களுடன் சேர்ந்து நான்தான்) அன்று இரவு தாமதமாக தான் வந்தான். அதற்குள் அவள் உறங்கி விட்டாள். கணவன் வந்ததும் அவளை அறியாமலேயே அவனை அணைத்துக் கொண்டாள். பிறகு இத்யாதி இத்யாதி..
மறு நாள் காலை இன்னும் கொஞ்சம் சீக்கிரமே எழுந்து அவனுக்காக அந்த கருவாடு செய்திருந்தாள்.
மாலையில் வந்து பார்த்தபோது அவன் உண்ணவில்லை என்பது தெரிந்தது.
"என்ன மாமா! கருவாடு ஆக்கி வச்சுருந்தேனே சாப்பிடல? இப்ப சாப்பிட வைக்கவா?"
"வேலைக்குப் போகாத வெட்டிப் பயதானே. அதனால பழசை கொட்டினாலும் கொட்டிக்குவான்னு பார்த்தியா?"
"இன்னிக்கு காலைல உங்களுக்காக செஞ்சேன். பழசு இல்லை." அவனை ஒட்டி அமர்ந்து தோளில் கை வைத்து கொஞ்சல் மொழியில் கூறினாள்.
அவனோ அவளை நகர்த்தி விட்டு ,
"அது நான் நேத்து சாப்பிட வாங்கினது. ஒனக்கு **** ஆசை வரும்போது நானும் வந்து ஓ *** அந்த மாதிரி தான் எப்ப ஆசை வருதோ அப்ப தான் சாப்பிடனும். பே ! "அருவறுப்பாகச் சொன்னான். அந்த அதிரிச்சியில் இருந்து அவளால் மீள முடியவிலை. அவன் அத்தனை கேவலமாக பேசினாலும் இரவில் அவனை அணைத்துக் கொண்டு மார்பில் இருந்த முடிகளை கையை சுருட்டி சுருட்டி மனதிற்குள் ஆயிரம் வார்த்தைகள் பேசினாள் .அவனுக்கு கேட்காது. அவனோ இந்தக் கவலையும் இல்லாமல் உறங்கி இருந்தான்.
"உனக்கு என்னடா மச்சான் ? கடைங்க இருக்கு. வாடகை வருது. பொண்டாட்டி பெரிய இடத்துல வேலை பாக்குறா? எங்களை மாதிரியா? "
நண்பர்கள் என்று தானே சொல்லி இருந்தேன். அவர்களைப் பற்றி வர்ணிக்க வேண்டாம்? "கூடா நட்பு கேடாய் முடியும்"
வாசகர்கள் புத்திசாலிகள். நொடியில் கண் காது மூக்கு தலை வைத்து அற்புதமாக ஆட்கள் ரெடி பண்ணிவிடுவார்கள் கற்பனையில்.
ஏற்கனவே நல்லவன் அப்படி இப்படித் தான். இன்னும் இவர்களை போன்ற நல்லவர்களுடன் சேர்ந்தால் ?
இனியா அலுவலகத்திற்கு புது மேனேஜர் வந்திருந்தார் . இதற்கு முன்பு இராணுவத்தில் இருந்தவர். பிறகு விருப்ப ஓய்வு வாங்கி கொண்டு மேற்கொண்டு எம் பீ ஏ படித்து இங்கு வேலைக்கு சேர்ந்திருக்கிறார். விமானப் படையில் இருந்தவர் நல்ல உயரம். அவரை விட உயர்ந்த மகள் இருக்கிறாள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவளும் அவள் வருங்கால கணவன் இருவருமே பள்ளி நாளில் இருந்து காதல் கொண்டவர்கள். அவர்களும் இப்போது இந்திய விமானப் படையில் தேர்வாகி விட்டார்களாம். சந்தோஷ செய்தியை பகிர்ந்துக் கொண்டவர் அனைவருக்கும் அவர் வீட்டிலேயே ஒரு பார்ட்டி கொடுத்தார். இவளும் சென்றாள். அங்கே இருந்த ஆண்கள் எல்லாம் அத்தனை ஸ்மார்ட்டாக இருந்தார்கள். நடை உடை பேச்சு எல்லாமே மெத்த படித்தவர்கள் என்று காண்பித்தது. இவளுக்கு வீடு சற்று தொலைவு என்பதால் மேனேஜர் காரில் அவரே கொண்டு வந்து விட்டார்.
அசதி இருந்தாலும் முகத்தில் புன்னகையுடன் வந்தவளை முதலில் பார்த்தது நல்லவன்தான்.
"யாரு கூட காருல வந்து இறங்கற?"
"மானேஜர் சார் தான் நேரமாச்சு. தனியா போக வேண்டான்னு வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டு போறாரு."
இப்போதும் அவளுக்கு மெல்லிய புன்னைகை இருந்தது. அது அவரை நினைத்த மாத்திரத்தில் வந்தமதிப்பான எண்ணம் தான் காரணம்.
"அப்ப வீட்டுலையும் தனியா இருந்தா வந்து தங்கிடுவாரா?"
நேரடியாக அவன் தப்பான வார்த்தைகளை சொல்லவில்லை என்றாலும் அவன் கேட்ட அர்த்தம் அவளுக்குப் புரிந்தது.
"என்னை பத்தி இப்படி பேச உங்களுக்கு எப்படி மாமா மனசு வந்தது?"
"ஒனக்குத் தான் ஒருத்தன் போதாதே ! " அவன் நமுட்டு சிரிப்பு சிரிக்க அவள்
வேதனையுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.
வேகமாக குளித்துவிட்டு அவனுக்கும் அத்தைக்கும் சட்னியும் தோசையும் தயார் செய்தாள்.
முறுவலாக அவள் செய்ய செய்ய அருகிலேயே அமர்ந்து வயிறு முட்ட தின்றான். அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை . எந்தக் காரணத்துக்காகவும் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு விடக் கூடாது.
திருமணத்துக்கு முன்பு "நல்லி! நல்லி!" என்று பின்னாடியே சுற்றியவன் இப்போது அழுத்தமாக வாயை மூடிக் கொண்டான்.
கண்களில் கண்ணீர் வந்தாலும் கேடு கெட்ட உடம்புக்கு அவன் தேவை இருக்கிறதே. அவளின் தேவை அவனுக்கும் தெரியுமே. முன்பெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி கொண்டாடியவன் இப்போதெல்லாம் அவள் தேவை மட்டுமே தீர்த்து வைக்கிறான். அதில் அவன் தேவையும் அடக்கம்.
அப்போதளவில் அவள் எதுவும் பேசவில்லை என்றாலும் அவனின் வார்த்தை அவளுக்கு ஆறாத ரணமாகவே இருந்தது. அதை அதிகப் படுத்தும் விதமாகவே இனி வரும் சம்பவங்கள் இருக்கும்.
"நல்லி அர்ஜன்ட்டா எனக்கு ஒரு அஞ்சாயிரம் கொடு "
"அவ்ளோ இருக்காது" என்று மூவாயிரம் கொடுத்தாள்.
இனி என்ன?
என் ஆசைப்படி இனியா கன்னம் சிவக்க வேண்டியதுதான்.
தொடரும்...........
புதுப் பெண் விடியலில் எழுந்து சமைத்தால் தான் அலுவலகத்திற்கு நேரத்திற்கு செல்ல முடியும். நேரத்துக்கு முன்பே எழுந்து கோலம் போட்டு வீட்டை சுத்தப்படுத்தி எல்லாம் முடித்து அவசரமாக கிளம்பினாள் . அதற்க்கு அவள் எழுந்த நேர விடியற் காலை 4.30. இரவெல்லாம் கணவனுக்கு ஒத்துழைத்து , பிறகு விடியலில் எழுந்து , முதல் சில வாரங்கள் உற்சாகமாகத் தான் இருந்து. பிறகு வந்த நாட்கள் உடல் கெஞ்ச ஆரம்பித்து விட்டது .
அவர்கள் வீட்டில் அருணா தான் எல்லாமே பார்த்துக் கொண்டிருந்தார். திமிராக கால் மேல் கால் போட்டு இவள் அமர்ந்திருக்க அன்னைதான் குடிக்க தண்ணீர் கூட கொண்டு வந்து கொடுப்பார். இல்லையில்லை, கொடுக்க வேண்டும்.
அன்னையின் அன்பைத்
தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும்போது,குழந்தைகளை திருத்த வேண்டியதும் வீட்டில் இருக்கும் பெரியவர்களின் பொறுப்புதான் . தேவேந்திரன் பொறுத்தவரை அங்கே இனியா தான் மகாராணி. அது சரி தான். நம் வீட்டுப் பெண் பிள்ளைகளை மஹாராணியாகப் பார்ப்பதில் தவறில்லை . அதற்காக வேறு வீட்டில் இருந்து நம்மை நம்பி வரும் பெண்ணை வேலைகாரிப் போல நடத்துவது எப்படி ஏற்க முடியும்?
இனியா அதிகாரம் செய்தால் அதற்கு அருணா அடங்கி நடக்க வேண்டும். அது வெளிப்டையாகவேச் சொல்லப் பட்ட விதி.
"ஏ இனியா! எதுக்கு இப்படி அம்மாவை அதிகாரம் பண்ணற?"
"நான் எங்க அம்மாகிட்ட கேக்கறேன். உனக்கு என்னென்ணா ?"
"முதல்ல அவங்க எனக்குத் தான் அம்மா. "
குழந்தைகளாக சண்டை போட்டுக் கொண்ட போது "ரெண்டுப் பேருக்கும் நான் அம்மா தான்." சமாதானம் செய்வாள் அம்மா. இனியா பெரியவள் ஆன போதும் அதேக் கதை தான். அதனால் தானோ என்னவோ நான் பெரிய பிள்ளையாகிட்டேன் என்று தெரிந்து கொள்ளும் குழந்தைகளுக்கு பெற்றவர்களுக்கும் வயதாகி விட்டது என்பது தெரிவதில்லை.
நான் பெரியவளாகி விட்டேன் இனிய தெரிந்துக் கொண்ட போது, தயங்காமல்
மாமாவுக்கு இது பிடிக்கும் அத்தைக்கு அது வேணுமாம். ஒரு நாளைக்கு உனக்கு என்னம்மா வேணும்? கேட்டிருக்கலாம். அன்னையின் மனம் குளிர்வதைத் தவிர வேறு என்ன பெரிய ஆசீர்வாதம் இருக்கும் இந்த உலகத்தில்? கேட்டு கேட்டு பிடிவாதமாக நிறைய சமைக்க கற்றுக் கொண்டு விட்டாள். என்னதான் செய்தாலும் அருணாவின் கைப் பக்குவம் ஏனோ வருவதில்லை. அது மட்டுமா? வேகம், விவேகம் பொறுமை எதுவுமேத் தான் அருணாவைப் போல இனியாவுக்கு வரவில்லை. அன்னையின் அத்தனை நல்ல குணங்களையும் தீபாவும் தீபக்கும் எடுத்துக் கொண்டார்கள். பங்குப் போட்டு இவளுக்கு கொடுத்த போது எனக்கு எந்த நல்ல குணமும் வேண்டாம் என்று பிடிவாதமாக இவள் தான் மறுத்துவிட்டாளே . பதிலாக தந்தையிடமிருந்து எப்படி மூஞ்சியில் அடித்தது போல பேச வேண்டும் என்று கற்றுக் கொண்டாள். பேராசை, சுயநலம் இத்யாதிகளை சொத்துக்களாக எடுத்துக் கொண்டுவிட்டாள்.
"இட்டார்க்கு இட்ட பலன் "
என்னதான் இன்னும் சீக்கிரம் இன்னும் சீக்கிரம் என்று எழுந்து வேலைகளை அவசர அவசரமாகச் செய்தாலும் அருணா அளவுக்கு வேகமாக செய்ய முடிவதில்லை. பயிற்சியும் அனுபவமும் காரணமாக இருக்கலாம்.
"காலைல கொஞ்சம் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க மாமா. பகல்லையும் வேலை செஞ்சு ராத்திரியும் செய்ய முடியல" மஞ்சத்தில் அவள் கொஞ்சினாள்.
"நம்ம வீட்டுல ஆம்பிள எவனும் வேலை செய்ய மாட்டான் தெரியாதா உனக்கு?"
அவனின் குரல் மாறி விட்டது. அதற்கு மேல் பேசி அவனை கோபப் படுத்த விரும்பாதவள் அமைதியாகி விட்டாள்.
அடுத்த சில மாதங்களுக்கு இது பற்றி எதுவும் பேச்சு வரவில்லை என்றாலும் இனியாவுக்கு அவ்வப்போது கண்களின் ஓரம் நீர் துளிர்க்க ஆரம்பித்துவிட்டது. அதிலும் மாதாந்திர நாட்களில் வயிற்றுவலியும் உதிரப் போக்கும் அவளுக்கு அதிகமாகவே இருந்தது. நிக்க முடியாது. தொடைகள் வலி கடுக்கும். அலுவகத்திற்கு அருகில் இருக்கும் மருத்துவமனையிலேயே காட்டி விட்டாள். கவலைப்பட ஒன்றும் இல்லை. இருப்பினும் கர்ப்பப்பை சற்று பலவீனமாக இருப்பதால் சில மருந்துகளை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். அதேப் போல அந்த நேரத்தில் கணவன் மனைவி இருவருமே குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இன்பெக்ஷன் ஆகி விடும் என்று சற்று கடினமாகவே சொல்லி விட்டார் மருத்துவர்.
வரும் வழி எல்லாம் மருத்துவர் சொன்னதுதான் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
"வாசனை திரவியம் இல்லாமல் சுத்தமான சோப்பு வாசனையுடன் தன்னிடம் நல்லவன் வருவானா? இதைப் பற்றி எப்படி மாமாவிடம் சொல்வது? '
அவனின் மேனி வாசனையும் செயற்கை திரவியங்கள் வாசனையும் இவள் ரசித்தது கூடாதாம். சுத்தமும் சோப்பு வாசனையும் தான் வேண்டுமாம். நினைக்க நினைக்க தலை வலிப்பதுப் போல இருந்தது. வேண்டாம் எதுவும் நினைக்க வேணாம்.
"நீ சொல்லறது எல்லாம் கேக்க நான் என்ன உங்க அம்மாவா? ஜிங்கிலக்கா பிளாப்பி " வேற யாரு மனசாட்சிதான்.
"பொம்பளை புள்ளை வீடு வாசல்ல கொஞ்சம் பெரிசாத்தான் கோலத்தை போடேன். குனிந்து கோலம் போட்டா கர்ப்பப்பைக்கு நல்லது" பேருந்தில் வந்துக் கொண்டிருந்தவளுக்கு அன்னையின் குரல் காதில் கேட்டது.
அருணா அந்த காலத்திலேயே கல்லூரிக்குச் சென்று படித்தவள். அதிலும் அவள் இயற்பியல் மாணவி. கைப் பேசி இல்லாத போதே ஆயிரம் விஷயங்கள் சொல்வாள்.
'இப்போது ஒவ்வொரு விஷயமாக யோசிக்க யோசிக்க அன்னை எத்தனை புத்திசாலி. அவளை தானும் தகப்பனும் சேர்ந்து எத்தனை எல்லாம் கேவலப் படுத்தி இருக்கிறோம் ?'
மண்டையில் உறைக்க ஆரம்பித்தது.
ஏதேதோ யோசனைகளுடன் வீடு வந்து சேர்ந்தாள்.
மருந்துப் பையுடன் உள்ளே நுழைந்தவளை வா என்ற ஒற்றைச் சொல்லோடு ஏறெடுத்தும் பார்க்காமல் டிவி சீரியலை பார்க்க ஆரம்பித்தாள் பார்வதி.
இதுவே அம்மாவா இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?
குளிக்கப் போனவளுக்கு பொங்கி பொங்கி அழுகை வந்தது. விலைக் குறைந்த நாப்கின் பயன் படுத்தியதில் அந்தரங்கமான சில இடங்களில் ராஷஸ் வந்திருந்தன. குளித்து விட்டு புதியது மாட்டிக் கொண்ட போதும் அத்தனை எரிச்சல்.
"இதெல்லாம் உபயோகப் படுத்தாதீங்க. துணி இல்ல ஆர்கனிக் உபயோகப் படுத்துங்க." துணி சாத்தியமில்லை. ஆர்கானிக் வாங்க கையில் பணம் இல்லை. என்ன அழுது என்ன?
தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும். கணவன் எப்போது வீட்டுக்கு வருவான் என்றுத் தெரியாது.
உரிமையாக அவனிடம் சென்று தனக்குத் தேவையான அந்தப் பொருளை கூட கேட்டு வாங்கிக் கொள்ள முடியாது. இதற்குத் தானே அன்னையும் தீபக்கும் அத்தனை தூரம் போராடினார்கள். மாமாவுக்கும் சேர்த்து நான் சம்பாதிக்கறேன். திமிராகச் சொன்னவளுக்கு , இனி காலம் பூராவும் அவனுக்கும் சேர்த்து தான்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற தன்னுடைய அவல நிலை புரியும்போது என்ன செய்வாள்?
அனுபவிக்கட்டும். நல்லா வேணும் என்று என்னாலும் சொல்ல முடியவில்லை. பாவமாகத் தான் இருக்கிறது.
எத்தனை நேரம் தான் அழுதுக் கொண்டே இருக்க முடியும் அடுத்தது அடுத்தது வேலைகள் இருக்கின்றவே. நல்லவன் அடுத்த அரை மணி நேரத்திலும் வரலாம். அரை நாள் கழித்தும் வரலாம். வேலைக்குப் போயிருந்தால் இத்தனை மணிக்கு வருவேன் என்று சொல்ல முடியும். அது தான் இல்லையே. எப்படி இருந்தாலும் அவன் வருவதற்குள் இரவு உணவு செய்து முடித்திருக்க வேண்டும். இல்லை என்றால் சத்தம் போடுவான். அவன் ஒரு உணவுப் பிரியன் என்று அறிந்தவள் அதையும் இன்பமாகவே ஏற்றுக் கொண்டாள்.
ஒரு நாள் காலை நல்லவன் கருவாடு வாங்கி வந்தான். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு குளித்து உடை மாற்றி தலை சீவிக் கொண்டிருந்தவளிடம்,
" இந்தா இதை மட்டும் ஆக்கி வச்சுட்டு கிளம்பு" அதிகாரமாகச் சொன்னான்.
"என்ன மாமா இது ஏற்கனவே நான் லேட்டு. இப்ப கொண்டாந்து நீட்டுற?"
"என்னையே கேள்வி கேக்குற நீ? அடிச்சு பல்லை பேத்துருவேன் பார்த்துக்க "
இப்போதெல்லாம் வார்த்தைகள் இப்படித் தான் வருகின்றன. கை ஓங்கினாலும் அடிக்க மாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.
"அதில்ல மாமா! ஏற்கனவே நான் பஸ்ஸு புடிச்சு போகணும். அதுக்கே லேட் ஆகிடும். அதுக்கு மேல அந்த எச் ஆர் வேற. ரொம்ப திட்டுவாரு மாமா. உனக்கு எங்க இதெல்லாம் தெரியும் ?"
அவள் சாதாரணகச் சொல்வதாக நினைத்து எதையோ வாய் விட்டாள்.
"ஓ! நான் வேலைக்குப் போகலைன்னு குத்தி காட்டறியா? நான் இப்படித்தான். வேணுன்னா இரு. இல்ல உங்க அப்பா வீட்டுக்கு போடி."
கத்தி விட்டு வாங்கி வந்த கருவாட்டை தூக்கி விட்டெறிந்து விட்டுச் சென்றான்.
என்ன நடக்கிறது? அவளுக்கு யோசிக்க எல்லாம் நேரமில்லை. அவசரமாக கீழே இருந்தவற்றை எடுத்து வைத்து விட்டு கிளம்பி விட்டாள்.
மாலையில் வந்த போது கூட அதை பார்வதி செய்திருப்பாள் என்று நினைத்தாள். அது வைத்த இடத்தில அப்படி இருந்தது.
"ஏன் அத்தை அவரு ரொம்ப அசையா வாங்கிட்டு வந்தாரு. எனக்குத்தான் நேரமாச்சுன்னு கிளம்பிட்டேன். நீங்களாவது மாமாவுக்கு செய்துருக்கலாமில்லை?"
"என்ன அருணா? பேச்செல்லாம் வேற ரூட்டுல போகுது. என்னையே வேலை சொல்லற அளவுக்கு நீ பெரிய ஆளா?"
மதியம் வந்த மகனிடம் அவன் மனைவிப் பற்றி தப்பு தப்பாக வத்தி வைத்துவிட்டாள். பெரிய காரணம் எல்லாம் அவளின் செயலுக்கு இல்லை. தான் ஒரு மாமியார். அப்படித் தான் இருக்க வேண்டும். சொல்லித் தர எத்தனை சீரியல்கள் இருக்கிறன. அதை தவிரவும் அவள் பார்வதி. அவளுக்கு யாரும் சொல்லித் தர வேண்டிய அவசியமே இல்லை.
இனியாவின் செயலுக்கு கர்மா திருப்பி அடிக்க ஆரம்பித்து விட்டது. அது அவளுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.
யாராவது ஒற்றை வாய் காபி தருவார்களா?
உடல் கெஞ்சியது. வாய்பில்லை மேடம் வாய்ப்பில்லை. தானே காபி கலந்து அத்தைக்கும் கொடுத்து விட்டு அவளும் குடித்தாள். கணவன் மனைவி போட்டோ ஒட்டிய காபி கோப்பை. அதை பார்த்ததும் அவன் நினைவு வந்தது. நல்லவனுக்கு அழைத்தாள். அவன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தான்.
இனி இந்த மாதிரி தாண்டி( சொன்னது உங்களுடன் சேர்ந்து நான்தான்) அன்று இரவு தாமதமாக தான் வந்தான். அதற்குள் அவள் உறங்கி விட்டாள். கணவன் வந்ததும் அவளை அறியாமலேயே அவனை அணைத்துக் கொண்டாள். பிறகு இத்யாதி இத்யாதி..
மறு நாள் காலை இன்னும் கொஞ்சம் சீக்கிரமே எழுந்து அவனுக்காக அந்த கருவாடு செய்திருந்தாள்.
மாலையில் வந்து பார்த்தபோது அவன் உண்ணவில்லை என்பது தெரிந்தது.
"என்ன மாமா! கருவாடு ஆக்கி வச்சுருந்தேனே சாப்பிடல? இப்ப சாப்பிட வைக்கவா?"
"வேலைக்குப் போகாத வெட்டிப் பயதானே. அதனால பழசை கொட்டினாலும் கொட்டிக்குவான்னு பார்த்தியா?"
"இன்னிக்கு காலைல உங்களுக்காக செஞ்சேன். பழசு இல்லை." அவனை ஒட்டி அமர்ந்து தோளில் கை வைத்து கொஞ்சல் மொழியில் கூறினாள்.
அவனோ அவளை நகர்த்தி விட்டு ,
"அது நான் நேத்து சாப்பிட வாங்கினது. ஒனக்கு **** ஆசை வரும்போது நானும் வந்து ஓ *** அந்த மாதிரி தான் எப்ப ஆசை வருதோ அப்ப தான் சாப்பிடனும். பே ! "அருவறுப்பாகச் சொன்னான். அந்த அதிரிச்சியில் இருந்து அவளால் மீள முடியவிலை. அவன் அத்தனை கேவலமாக பேசினாலும் இரவில் அவனை அணைத்துக் கொண்டு மார்பில் இருந்த முடிகளை கையை சுருட்டி சுருட்டி மனதிற்குள் ஆயிரம் வார்த்தைகள் பேசினாள் .அவனுக்கு கேட்காது. அவனோ இந்தக் கவலையும் இல்லாமல் உறங்கி இருந்தான்.
"உனக்கு என்னடா மச்சான் ? கடைங்க இருக்கு. வாடகை வருது. பொண்டாட்டி பெரிய இடத்துல வேலை பாக்குறா? எங்களை மாதிரியா? "
நண்பர்கள் என்று தானே சொல்லி இருந்தேன். அவர்களைப் பற்றி வர்ணிக்க வேண்டாம்? "கூடா நட்பு கேடாய் முடியும்"
வாசகர்கள் புத்திசாலிகள். நொடியில் கண் காது மூக்கு தலை வைத்து அற்புதமாக ஆட்கள் ரெடி பண்ணிவிடுவார்கள் கற்பனையில்.
ஏற்கனவே நல்லவன் அப்படி இப்படித் தான். இன்னும் இவர்களை போன்ற நல்லவர்களுடன் சேர்ந்தால் ?
இனியா அலுவலகத்திற்கு புது மேனேஜர் வந்திருந்தார் . இதற்கு முன்பு இராணுவத்தில் இருந்தவர். பிறகு விருப்ப ஓய்வு வாங்கி கொண்டு மேற்கொண்டு எம் பீ ஏ படித்து இங்கு வேலைக்கு சேர்ந்திருக்கிறார். விமானப் படையில் இருந்தவர் நல்ல உயரம். அவரை விட உயர்ந்த மகள் இருக்கிறாள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவளும் அவள் வருங்கால கணவன் இருவருமே பள்ளி நாளில் இருந்து காதல் கொண்டவர்கள். அவர்களும் இப்போது இந்திய விமானப் படையில் தேர்வாகி விட்டார்களாம். சந்தோஷ செய்தியை பகிர்ந்துக் கொண்டவர் அனைவருக்கும் அவர் வீட்டிலேயே ஒரு பார்ட்டி கொடுத்தார். இவளும் சென்றாள். அங்கே இருந்த ஆண்கள் எல்லாம் அத்தனை ஸ்மார்ட்டாக இருந்தார்கள். நடை உடை பேச்சு எல்லாமே மெத்த படித்தவர்கள் என்று காண்பித்தது. இவளுக்கு வீடு சற்று தொலைவு என்பதால் மேனேஜர் காரில் அவரே கொண்டு வந்து விட்டார்.
அசதி இருந்தாலும் முகத்தில் புன்னகையுடன் வந்தவளை முதலில் பார்த்தது நல்லவன்தான்.
"யாரு கூட காருல வந்து இறங்கற?"
"மானேஜர் சார் தான் நேரமாச்சு. தனியா போக வேண்டான்னு வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டு போறாரு."
இப்போதும் அவளுக்கு மெல்லிய புன்னைகை இருந்தது. அது அவரை நினைத்த மாத்திரத்தில் வந்தமதிப்பான எண்ணம் தான் காரணம்.
"அப்ப வீட்டுலையும் தனியா இருந்தா வந்து தங்கிடுவாரா?"
நேரடியாக அவன் தப்பான வார்த்தைகளை சொல்லவில்லை என்றாலும் அவன் கேட்ட அர்த்தம் அவளுக்குப் புரிந்தது.
"என்னை பத்தி இப்படி பேச உங்களுக்கு எப்படி மாமா மனசு வந்தது?"
"ஒனக்குத் தான் ஒருத்தன் போதாதே ! " அவன் நமுட்டு சிரிப்பு சிரிக்க அவள்
வேதனையுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.
வேகமாக குளித்துவிட்டு அவனுக்கும் அத்தைக்கும் சட்னியும் தோசையும் தயார் செய்தாள்.
முறுவலாக அவள் செய்ய செய்ய அருகிலேயே அமர்ந்து வயிறு முட்ட தின்றான். அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை . எந்தக் காரணத்துக்காகவும் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு விடக் கூடாது.
திருமணத்துக்கு முன்பு "நல்லி! நல்லி!" என்று பின்னாடியே சுற்றியவன் இப்போது அழுத்தமாக வாயை மூடிக் கொண்டான்.
கண்களில் கண்ணீர் வந்தாலும் கேடு கெட்ட உடம்புக்கு அவன் தேவை இருக்கிறதே. அவளின் தேவை அவனுக்கும் தெரியுமே. முன்பெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி கொண்டாடியவன் இப்போதெல்லாம் அவள் தேவை மட்டுமே தீர்த்து வைக்கிறான். அதில் அவன் தேவையும் அடக்கம்.
அப்போதளவில் அவள் எதுவும் பேசவில்லை என்றாலும் அவனின் வார்த்தை அவளுக்கு ஆறாத ரணமாகவே இருந்தது. அதை அதிகப் படுத்தும் விதமாகவே இனி வரும் சம்பவங்கள் இருக்கும்.
"நல்லி அர்ஜன்ட்டா எனக்கு ஒரு அஞ்சாயிரம் கொடு "
"அவ்ளோ இருக்காது" என்று மூவாயிரம் கொடுத்தாள்.
இனி என்ன?
என் ஆசைப்படி இனியா கன்னம் சிவக்க வேண்டியதுதான்.
தொடரும்...........
Last edited:
Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் -10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கடல் தேடும் மீன்கள் -10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.