ஏகாதசி:
மருத்துவரீதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை உணவருந்தாமல் இருந்தால் நம்முடைய வயிறு, குடல் போன்ற பாகங்களுக்கு சற்று ஓய்வு கிட்டும். மேலும் அவை அதற்குப்பின்பு சுறுசுறுப்புடன் உண்மையை அறிந்துதான் நம் முன்னோர்கள் ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். உடலும் உள்ளமும் தூய்மைபெற ஏகாதசி விரதம் கடைப்பிடித்தல் வேண்டும்.
சந்திரன் பூமியை ஒருதடவை சுற்றிவர ஏறக்குறைய இருபத்து ஒன்பதறை நாட்கள் ஆகின்றன. ஒவ்வொருநாளும் ஒரு திதி எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரையில் உள்ள 15 திதிகள் சுக்லபட்சம். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரையில் உள்ள 15 திதிகள் கிருஷ்ணபட்சம். ஏகாதசியன்று விரதமிருந்தால், முதல் பத்து நாட்கள் உணவு உட்கொண்டு, அதனால் உள்ளே சேர்ந்துள்ள கழிவுப் பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன. பதினோராவது நாளான ஏகாதசியன்று வயிறு சுத்தமாகிறது. அன்று ஜீரணக் கருவிகளுக்கும் ஓய்வு கிடைக்கிறது. மறுநாள் துவாதசி தினத்தில் சத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடலாம். ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன
விரதத்தை எப்படி அனுசரிப்பது?
ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.அவ்வப்போது தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.
உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை அனுஷ்டிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது.
ஏகாதசி விரத பலன் என்பது எல்லோருக்கும் பெய்யும் பெருமழையைப் போன்றது. உலகம் முழுமைக்கும் மழை பெய்கிறபோது ஒவ்வொருவரும் அதனால் பயனடைகிறோம் அல்லவா, அதுபோன்று ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கும் நோக்கமே லோக க்ஷேமம்தான். ஆனால், அதன் உட்பலனாக ஒவ்வொருவருக்கும் பலன் உண்டு.
ஏகாதசிக்கு என்ன செய்ய வேண்டும்... ஏகாதச்யாம பூரார்த்தம் கர்த்தவ்யம் போஜனத்வயம்... என்று ச்லோகம் ஒன்று உண்டு.! ஏகாதசியன்று இரண்டு செயல்களைச் செய்ய வேண்டும்... இரவெல்லாம் கண்முழித்து இருக்க வேண்டும். பகலெல்லாம் கீர்த்தனம் பண்ண வேண்டும் என்பதே இந்த இரண்டு செயல்கள்
சாஸ்திரப்படி அன்று பகல் இரவு இருவேளையும் தூங்கக் கூடாது. கண்டிப்பாகப் பகலில் தூங்கவே கூடாது. தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்.
மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, விருந்தினருக்கு அன்னம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். இரவு பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்''
ஏகாதசி விரத மகிமை : "காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை” என்பது ஆன்றோரின் அருள்வாக்கு.
ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும்.
ஏகாதசி தோன்றினாள்
திதிகளில் பெருமாளுக்கு உகந்தது ஏகாதசி திதி. முன்னொருகாலத்தில் வாழ்ந்த முரன் என்னும் அசுரன் தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்திவந்தான். தேவர்கள் வேண்டிக்கொண்டதனால் மகாவிஷ்ணு முரனோடும் அவன் படைகளோடும் போரிட்டார். முரனின் படைகள் அனைத்தும் முற்றிலும் அழிந்தன. முரன் திருந்த ஒரு வாய்ப்பை நல்க விரும்பிய பெருமாள் சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சென்று ஒரு குகையில் சயனம் கொண்டார்.
ஆனால் அதைப் புரிந்துகொள்ளாத முரன் பெருமாளை வீழ்த்த வந்தான். அப்போது சயனித்துக்கொண்டிருந்த பெருமாளிடமிருந்து ஆயுதம் தாங்கிய பெண் தேவதை ஒருத்தி வெளிப்பட்டாள். அவள் முரனை தன் ஹூங்காரத்தினாலேயே சம்ஹாரம் செய்தாள். அப்போது கண்விழித்த பெருமாள் அவளை ஏகாதசி என்று பெயரிட்டு அழைத்தார். அவள் தோன்றிய நாள் தனக்கு உகந்தது என்றும் அன்று தன்னை விரதமிருந்து வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கும் என்றும் வரமளித்தார்.
அம்பரீஷன், ருக்மாங்கதன் போன்ற மன்னர்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டித்து நற்பலன்களைப் பெற்றனர்.....
`நாராயணீயம்’ முப்பத்து மூன்றாவது தசகம் அம்பரீஷ சரிதம், அம்பரீஷ மன்னரின் வரலாற்றைக் கூறுகிறது..
ஏழுகடல் சூழ்ந்த பரந்த நிலத்துக்கு அரசனாக இருந்தவன் அம்பரீஷன். நாராயணனின் பரம பக்தனாக இருந்தான். ஏகாதசி விரதத்தைக் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடித்து வந்தான். இறைவனின் கீர்த்தனைகளைக் கேட்பதிலும், அவன் நாமங்களைச் சொல்வதிலும் அவன் கவனம் இருந்தது. நாட்டை ஆள்வதில் அதிகமாக கவனம் செலுத்தவில்லை.
மன்னனின் பக்தியை உணர்ந்த மகாவிஷ்ணு, நம் மீதுள்ள பக்தியால் மன்னன் நாட்டையும், நாட்டு மக்களையும் கவனிக்கத் தவறிவிடுகிறானே என்ற எண்ணம் கொண்டார். மன்னன் இப்படியே தொடர்ந்தால், நாட்டின் நிலை மோசமாகிவிடும் என்பதற்காக, தன்னுடைய சுதர்சன சக்ரத்தையே, மன்னனின் அரண் மனையில் வைத்துவிட்டார் திருமால். அந்த சக்கரத்தின் சக்தியால் நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை.
மன்னனும் இறைவனின் நாமத்தைப் பாடுவதிலேயே கவனம் செலுத்தத் தொடங்கினான். ஒரு முறை ஏகாதசி விரதம் இருக்க முடிவு செய்தான் அம்பரீஷன். யமுனை நதிக்கரையோரம் ஒரு குடில் அமைத்து, அங்கேயே ஓராண்டு காலம் இருந்து ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தான். அதன்படி ஓராண்டு காலம், ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டித்து வந்தான்.
அந்த வருஷத்தின் கடைசி ஏகாதசி வந்தது. வழக்கம்போல் எல்லோருக்கும் போஜனம் செய்வித்து தானங்களை வழங்கி முடித்தான் அம்பரீஷன். அவனும் அவனுடைய மனைவியும் சாப்பிடவேண்டும்.
அந்த நேரத்தில் துர்வாச முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரை வணங்கிய அம்பரீஷன், ‘முனிவரே! தாங்கள் உணவருந்தி, எங்களுக்கும் பிரசாதத்தை வழங்க வேண்டும்’ என்றான்.
துர்வாசரோ, ‘நீராடி விட்டு வருகிறேன்’ என்று எழுந்து நடக்கத் தொடங்கினார். ஏகாதசி விரதத்தை முடிப்பதற்கு அரை நாழிகைதான் மீதம் இருக்கிறது. ஆனால் துர்வாசரோ, வேண்டுமென்றே மெதுவாக நடந்து சென்று அம்பரீஷனை சோதித்தார்.
ஏகாதசி விரத காலம் முடியும் நிலை வந்து விட்டது. ஆனாலும் நீராடச் சென்ற துர்வாச முனிவரைக் காணவில்லை. காலம் கடந்து விட்டால், ஓராண்டு காலமாக கடைப்பிடித்து வந்த விரதம் அனைத்தும் வீண் என்று உணர்ந்த அம்பரீஷன், இதுபற்றி அங்கிருந்து பெரியவர்களிடம் கேட்டான்.
‘நீரில் ஒரு துளசி இலையை போட்டு, உட்கொள்ளுங்கள். அது சாப்பிட்ட மாதிரியும் கணக்கு; சாப்பிடாத மாதிரியும் கணக்கு. ஏனென்றால் முனிவரை சாப்பிட அழைத்திருக்கிறீர்கள். அவரை விட்டுவிட்டு நீங்கள் சாப்பிடக்கூடாது. எனவே துவாதசி போவதற்குள்ளாக இதைச் செய்துவிடுங்கள். சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது என்றார்கள்
அம்பரீஷனும் அப்படியேச் செய்தான். ஆனால் அவன் துளசியை சாப்பிட்டது துர்வாசருக்குத் தெரிந்து விட்டது.
‘என்னுடன் அமர்ந்து உணவருந்துவதாகச் சொல்லிவிட்டு, இப்போது என்ன செய்திருக்கிறாய்? உனக்கு எவ்வளவு அகங்காரம்?’ என்றவர், தன் ஜடா முடியில் இருந்து ஒரு முடியை எடுத்துப் போட்டார். அதில் இருந்து புறப்பட்ட பூதம், அம்பரீஷனையும், அவனது குடும்பத்தையும் அழிக்க முற்பட்டது.
ஆனால் அம்பரீஷனின் பூஜை அறையில் இருந்த சுதர்சன சக்கரம் அங்கு வந்து, பூதத்தை வதம் செய்தது. பின்னர் அது துர்வாசரின் பக்கம் திரும்ப, அவர் தன்னை காத்துக் கொள்ள ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிந்தார். முதலில் பிரம்மனிடமும், பின்னர் சிவனிடமும் சென்று தஞ்சம் அடைந்தார். ஆனால் அவர்கள் இருவரும் கைவிரித்து விட, சுதர்சன சக்கரத்தை கையில் வைத்திருக்கும் திருமாலிடம் சென்றார்.
திருமாலோ, ‘துர்வாசரே! என் பக்தர்கள்தான் என்னுடைய எஜமானர்கள். அவர்களுக்குப் பிரச்சினை என்றால், அவர்களுக்காக நான் எதையும் செய்வேன். நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், அம்பரீஷனையே சரணடையுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
பகவானுடைய சொற்களைக் கேட்ட துர்வாச முனிவர் வேறு வழியின்றி அம்பரீஷனிடமே சென்று சரணடைய, மன்னன் முனிவரைக் காப்பாற்றுமாறு சுதர்சனிடம் பிரார்த்தித்தார். சக்கராயுதமும் அம்பரீஷன் பிரார்த்தனையை ஏற்று சாந்தமடைந்தது. முனிவர் வியந்து அம்பரீஷனைப் புகழ்ந்து கொண்டாடினார். பிறகு அரசன் முனிவரை வணங்கி போஜனமளித்து அவர் அனுமதியுடன் பாரணையை முடித்தார். அப்போது முனிவர் தான் திருப்தி அடைந்ததாகவும் மன்னனின் கீர்த்தியைத் தேவர்களும், மனிதர்களும் கானம் செய்வர் என்றும் கூறி ஆசிர்வதித்து சென்றார்.
இந்த நிகழ்ச்சி அம்பரீஷனின் பெருமையையும், ஏகாதசி விரதத்தின் புனிதத்தையும் எடுத்துக்கூறுகிறது.
ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது. இந்த நாளில் விரதம் ஆரம்பித்து தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்) விரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது. சரியான முதலீடாக தேர்ந்தெடுத்தால் பயன்பல மடங்கு கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் தானே நாம். எனவே ஏகாதசி விரதத்தில் முதலீடுசெய்வோம்.
* மார்கழி தேய்பிறை ஏகாதசி "உற்பத்தி ஏகாதசி"" எனப்படும். பகையை வெல்ல உதவும்.
* தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரா"" எனப்படும். இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும். வம்சாவளி பெருக்கம் தரும் சந்தான ஏகாதசி ஆகும்.
* தை தேய்பிறை ஏகாதசி "ஸபலா"" எனப்படும். இன்று பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.
* மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜயா"" எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.
* மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா"" எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும்.
மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் "ஷட்திலா"" என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.
* பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா"" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும். கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.
* பங்குனி வளர்பிறை ஏகாதசி "ஆமலகீ"" எனப்படும். இன்று நெல்லி மரத்தடியில் பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.
* சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி "காமதா"" எனப்படும். நமது விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும். திருமண யோகம் தரும்.
* சித்திரை தேய்பிறை ஏகாதசி "பாபமோசனிகா"" எனப்படும் பாபத்தை போக்கும். நல்ல பேற்றினை ஏற்படுத்தும். துரோகிகள் விலகுவர்.
* வைகாசி வளர்பிறை ஏகாதசி "மோஹினீ"" எனப்படும். உடல் சோர்வு நீக்கும். பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். ரத்த சோகை அகலும். வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும்.
* வைகாசி தேய்பிறை ஏகாதசி "வரூதினீ"" எனப்படும். உடல் ஆரோக்கியம் தரும். சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.
* ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "நிர்ஜனா"" என்று பெயர். பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வது ஆகும். எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஏனெனில் பீமன்வாயு அம்சம்.
* ஆனி மாத தேய்பிறை ஏகாதசி "அபரா"" எனப்பெயர்படும். இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால் ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும், கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும், பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.
* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி "தயினி"" எனப்படும். இஷ்ட நற்சக்திகளை தர வல்லது. முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும். ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
* ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "யோகினி"" என்று பெயர். இன்று வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு வசதி உள்ளவர்கள் வெள்ளி விளக்கு தானம் செய்ய கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.
* ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு "புத்ரதா"" என்று பெயர். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.
* ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "காமிகா"" எனப்படும். இன்று விரதம் இருந்து தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய சொர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும். ஆவணி மாத ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பழங்கள் மட்டுமே உண்டு விரதம் கடைபிடிக்க வேண்டும். காய்கறிகள் பயன்படுத்தக்கூடாது.
* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் "பத்மநாபா"" எனப்படும். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.
* புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா"" என்று பெயர். அரிச்சந்திரன் இந்த நாளில் விரதம் இருந்து இழந்த நாட்டையும், மனைவி மக்களையும் பெற்று பல்லாண்டுஅரசு செய்தான். எனவே, நாமும் இவ்விரத நாளில் விரதம் கடை பிடித்தால் குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில் கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது).
* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "பாபாங்குசா"" எனப்படும் வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.
* ஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு "இந்திரா"" எனப் பெயர் இன்று விரதம் இருந்து மூதாதயருக்கு சிரார்த்தம் செய்தால் அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால் நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள். ஐப்பசி மாத ஏகாதசி நாளில் பால் சாப்பிடக் கூடாது.
* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு "ப்ரமோதினீ"" என்று பெயர். கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.
* கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு "ரமா"" என்பர். இன்று இருக்கும் விரதம் இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது.
* வருடத்தில் கூடுதலாக வரும் 25தாவது ஏகாதசி "கமலா"" எனப்படும். கமலம் என்றாள் தாமரை. தாமரை மலரில் இருந்து அருள் தரும் அன்னை மகாலட்சுமியை இந்த நாளில் பூஜித்தால் நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும்.
ஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும் தனித்தனி விரதமாக இருப்பதும்,-(வைகுண்ட ஏகாதசியில்) "மோட்ச ஏகாதசியில்"" உண்ணாமல் அன்று முழுவதும் மட்டுமின்றி முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம். அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.
மருத்துவரீதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை உணவருந்தாமல் இருந்தால் நம்முடைய வயிறு, குடல் போன்ற பாகங்களுக்கு சற்று ஓய்வு கிட்டும். மேலும் அவை அதற்குப்பின்பு சுறுசுறுப்புடன் உண்மையை அறிந்துதான் நம் முன்னோர்கள் ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். உடலும் உள்ளமும் தூய்மைபெற ஏகாதசி விரதம் கடைப்பிடித்தல் வேண்டும்.
சந்திரன் பூமியை ஒருதடவை சுற்றிவர ஏறக்குறைய இருபத்து ஒன்பதறை நாட்கள் ஆகின்றன. ஒவ்வொருநாளும் ஒரு திதி எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரையில் உள்ள 15 திதிகள் சுக்லபட்சம். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரையில் உள்ள 15 திதிகள் கிருஷ்ணபட்சம். ஏகாதசியன்று விரதமிருந்தால், முதல் பத்து நாட்கள் உணவு உட்கொண்டு, அதனால் உள்ளே சேர்ந்துள்ள கழிவுப் பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன. பதினோராவது நாளான ஏகாதசியன்று வயிறு சுத்தமாகிறது. அன்று ஜீரணக் கருவிகளுக்கும் ஓய்வு கிடைக்கிறது. மறுநாள் துவாதசி தினத்தில் சத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடலாம். ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன
விரதத்தை எப்படி அனுசரிப்பது?
ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.அவ்வப்போது தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.
உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை அனுஷ்டிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது.
ஏகாதசி விரத பலன் என்பது எல்லோருக்கும் பெய்யும் பெருமழையைப் போன்றது. உலகம் முழுமைக்கும் மழை பெய்கிறபோது ஒவ்வொருவரும் அதனால் பயனடைகிறோம் அல்லவா, அதுபோன்று ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கும் நோக்கமே லோக க்ஷேமம்தான். ஆனால், அதன் உட்பலனாக ஒவ்வொருவருக்கும் பலன் உண்டு.
ஏகாதசிக்கு என்ன செய்ய வேண்டும்... ஏகாதச்யாம பூரார்த்தம் கர்த்தவ்யம் போஜனத்வயம்... என்று ச்லோகம் ஒன்று உண்டு.! ஏகாதசியன்று இரண்டு செயல்களைச் செய்ய வேண்டும்... இரவெல்லாம் கண்முழித்து இருக்க வேண்டும். பகலெல்லாம் கீர்த்தனம் பண்ண வேண்டும் என்பதே இந்த இரண்டு செயல்கள்
சாஸ்திரப்படி அன்று பகல் இரவு இருவேளையும் தூங்கக் கூடாது. கண்டிப்பாகப் பகலில் தூங்கவே கூடாது. தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்.
மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, விருந்தினருக்கு அன்னம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். இரவு பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்''
ஏகாதசி விரத மகிமை : "காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை” என்பது ஆன்றோரின் அருள்வாக்கு.
ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும்.
ஏகாதசி தோன்றினாள்
திதிகளில் பெருமாளுக்கு உகந்தது ஏகாதசி திதி. முன்னொருகாலத்தில் வாழ்ந்த முரன் என்னும் அசுரன் தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்திவந்தான். தேவர்கள் வேண்டிக்கொண்டதனால் மகாவிஷ்ணு முரனோடும் அவன் படைகளோடும் போரிட்டார். முரனின் படைகள் அனைத்தும் முற்றிலும் அழிந்தன. முரன் திருந்த ஒரு வாய்ப்பை நல்க விரும்பிய பெருமாள் சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சென்று ஒரு குகையில் சயனம் கொண்டார்.
ஆனால் அதைப் புரிந்துகொள்ளாத முரன் பெருமாளை வீழ்த்த வந்தான். அப்போது சயனித்துக்கொண்டிருந்த பெருமாளிடமிருந்து ஆயுதம் தாங்கிய பெண் தேவதை ஒருத்தி வெளிப்பட்டாள். அவள் முரனை தன் ஹூங்காரத்தினாலேயே சம்ஹாரம் செய்தாள். அப்போது கண்விழித்த பெருமாள் அவளை ஏகாதசி என்று பெயரிட்டு அழைத்தார். அவள் தோன்றிய நாள் தனக்கு உகந்தது என்றும் அன்று தன்னை விரதமிருந்து வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கும் என்றும் வரமளித்தார்.
அம்பரீஷன், ருக்மாங்கதன் போன்ற மன்னர்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டித்து நற்பலன்களைப் பெற்றனர்.....
`நாராயணீயம்’ முப்பத்து மூன்றாவது தசகம் அம்பரீஷ சரிதம், அம்பரீஷ மன்னரின் வரலாற்றைக் கூறுகிறது..
ஏழுகடல் சூழ்ந்த பரந்த நிலத்துக்கு அரசனாக இருந்தவன் அம்பரீஷன். நாராயணனின் பரம பக்தனாக இருந்தான். ஏகாதசி விரதத்தைக் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடித்து வந்தான். இறைவனின் கீர்த்தனைகளைக் கேட்பதிலும், அவன் நாமங்களைச் சொல்வதிலும் அவன் கவனம் இருந்தது. நாட்டை ஆள்வதில் அதிகமாக கவனம் செலுத்தவில்லை.
மன்னனின் பக்தியை உணர்ந்த மகாவிஷ்ணு, நம் மீதுள்ள பக்தியால் மன்னன் நாட்டையும், நாட்டு மக்களையும் கவனிக்கத் தவறிவிடுகிறானே என்ற எண்ணம் கொண்டார். மன்னன் இப்படியே தொடர்ந்தால், நாட்டின் நிலை மோசமாகிவிடும் என்பதற்காக, தன்னுடைய சுதர்சன சக்ரத்தையே, மன்னனின் அரண் மனையில் வைத்துவிட்டார் திருமால். அந்த சக்கரத்தின் சக்தியால் நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை.
மன்னனும் இறைவனின் நாமத்தைப் பாடுவதிலேயே கவனம் செலுத்தத் தொடங்கினான். ஒரு முறை ஏகாதசி விரதம் இருக்க முடிவு செய்தான் அம்பரீஷன். யமுனை நதிக்கரையோரம் ஒரு குடில் அமைத்து, அங்கேயே ஓராண்டு காலம் இருந்து ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தான். அதன்படி ஓராண்டு காலம், ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டித்து வந்தான்.
அந்த வருஷத்தின் கடைசி ஏகாதசி வந்தது. வழக்கம்போல் எல்லோருக்கும் போஜனம் செய்வித்து தானங்களை வழங்கி முடித்தான் அம்பரீஷன். அவனும் அவனுடைய மனைவியும் சாப்பிடவேண்டும்.
அந்த நேரத்தில் துர்வாச முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரை வணங்கிய அம்பரீஷன், ‘முனிவரே! தாங்கள் உணவருந்தி, எங்களுக்கும் பிரசாதத்தை வழங்க வேண்டும்’ என்றான்.
துர்வாசரோ, ‘நீராடி விட்டு வருகிறேன்’ என்று எழுந்து நடக்கத் தொடங்கினார். ஏகாதசி விரதத்தை முடிப்பதற்கு அரை நாழிகைதான் மீதம் இருக்கிறது. ஆனால் துர்வாசரோ, வேண்டுமென்றே மெதுவாக நடந்து சென்று அம்பரீஷனை சோதித்தார்.
ஏகாதசி விரத காலம் முடியும் நிலை வந்து விட்டது. ஆனாலும் நீராடச் சென்ற துர்வாச முனிவரைக் காணவில்லை. காலம் கடந்து விட்டால், ஓராண்டு காலமாக கடைப்பிடித்து வந்த விரதம் அனைத்தும் வீண் என்று உணர்ந்த அம்பரீஷன், இதுபற்றி அங்கிருந்து பெரியவர்களிடம் கேட்டான்.
‘நீரில் ஒரு துளசி இலையை போட்டு, உட்கொள்ளுங்கள். அது சாப்பிட்ட மாதிரியும் கணக்கு; சாப்பிடாத மாதிரியும் கணக்கு. ஏனென்றால் முனிவரை சாப்பிட அழைத்திருக்கிறீர்கள். அவரை விட்டுவிட்டு நீங்கள் சாப்பிடக்கூடாது. எனவே துவாதசி போவதற்குள்ளாக இதைச் செய்துவிடுங்கள். சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது என்றார்கள்
அம்பரீஷனும் அப்படியேச் செய்தான். ஆனால் அவன் துளசியை சாப்பிட்டது துர்வாசருக்குத் தெரிந்து விட்டது.
‘என்னுடன் அமர்ந்து உணவருந்துவதாகச் சொல்லிவிட்டு, இப்போது என்ன செய்திருக்கிறாய்? உனக்கு எவ்வளவு அகங்காரம்?’ என்றவர், தன் ஜடா முடியில் இருந்து ஒரு முடியை எடுத்துப் போட்டார். அதில் இருந்து புறப்பட்ட பூதம், அம்பரீஷனையும், அவனது குடும்பத்தையும் அழிக்க முற்பட்டது.
ஆனால் அம்பரீஷனின் பூஜை அறையில் இருந்த சுதர்சன சக்கரம் அங்கு வந்து, பூதத்தை வதம் செய்தது. பின்னர் அது துர்வாசரின் பக்கம் திரும்ப, அவர் தன்னை காத்துக் கொள்ள ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிந்தார். முதலில் பிரம்மனிடமும், பின்னர் சிவனிடமும் சென்று தஞ்சம் அடைந்தார். ஆனால் அவர்கள் இருவரும் கைவிரித்து விட, சுதர்சன சக்கரத்தை கையில் வைத்திருக்கும் திருமாலிடம் சென்றார்.
திருமாலோ, ‘துர்வாசரே! என் பக்தர்கள்தான் என்னுடைய எஜமானர்கள். அவர்களுக்குப் பிரச்சினை என்றால், அவர்களுக்காக நான் எதையும் செய்வேன். நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், அம்பரீஷனையே சரணடையுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
பகவானுடைய சொற்களைக் கேட்ட துர்வாச முனிவர் வேறு வழியின்றி அம்பரீஷனிடமே சென்று சரணடைய, மன்னன் முனிவரைக் காப்பாற்றுமாறு சுதர்சனிடம் பிரார்த்தித்தார். சக்கராயுதமும் அம்பரீஷன் பிரார்த்தனையை ஏற்று சாந்தமடைந்தது. முனிவர் வியந்து அம்பரீஷனைப் புகழ்ந்து கொண்டாடினார். பிறகு அரசன் முனிவரை வணங்கி போஜனமளித்து அவர் அனுமதியுடன் பாரணையை முடித்தார். அப்போது முனிவர் தான் திருப்தி அடைந்ததாகவும் மன்னனின் கீர்த்தியைத் தேவர்களும், மனிதர்களும் கானம் செய்வர் என்றும் கூறி ஆசிர்வதித்து சென்றார்.
இந்த நிகழ்ச்சி அம்பரீஷனின் பெருமையையும், ஏகாதசி விரதத்தின் புனிதத்தையும் எடுத்துக்கூறுகிறது.
ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது. இந்த நாளில் விரதம் ஆரம்பித்து தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்) விரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது. சரியான முதலீடாக தேர்ந்தெடுத்தால் பயன்பல மடங்கு கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் தானே நாம். எனவே ஏகாதசி விரதத்தில் முதலீடுசெய்வோம்.
* மார்கழி தேய்பிறை ஏகாதசி "உற்பத்தி ஏகாதசி"" எனப்படும். பகையை வெல்ல உதவும்.
* தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரா"" எனப்படும். இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும். வம்சாவளி பெருக்கம் தரும் சந்தான ஏகாதசி ஆகும்.
* தை தேய்பிறை ஏகாதசி "ஸபலா"" எனப்படும். இன்று பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.
* மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜயா"" எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.
* மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா"" எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும்.
மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் "ஷட்திலா"" என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.
* பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா"" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும். கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.
* பங்குனி வளர்பிறை ஏகாதசி "ஆமலகீ"" எனப்படும். இன்று நெல்லி மரத்தடியில் பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.
* சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி "காமதா"" எனப்படும். நமது விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும். திருமண யோகம் தரும்.
* சித்திரை தேய்பிறை ஏகாதசி "பாபமோசனிகா"" எனப்படும் பாபத்தை போக்கும். நல்ல பேற்றினை ஏற்படுத்தும். துரோகிகள் விலகுவர்.
* வைகாசி வளர்பிறை ஏகாதசி "மோஹினீ"" எனப்படும். உடல் சோர்வு நீக்கும். பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். ரத்த சோகை அகலும். வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும்.
* வைகாசி தேய்பிறை ஏகாதசி "வரூதினீ"" எனப்படும். உடல் ஆரோக்கியம் தரும். சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.
* ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "நிர்ஜனா"" என்று பெயர். பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வது ஆகும். எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஏனெனில் பீமன்வாயு அம்சம்.
* ஆனி மாத தேய்பிறை ஏகாதசி "அபரா"" எனப்பெயர்படும். இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால் ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும், கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும், பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.
* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி "தயினி"" எனப்படும். இஷ்ட நற்சக்திகளை தர வல்லது. முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும். ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
* ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "யோகினி"" என்று பெயர். இன்று வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு வசதி உள்ளவர்கள் வெள்ளி விளக்கு தானம் செய்ய கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.
* ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு "புத்ரதா"" என்று பெயர். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.
* ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "காமிகா"" எனப்படும். இன்று விரதம் இருந்து தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய சொர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும். ஆவணி மாத ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பழங்கள் மட்டுமே உண்டு விரதம் கடைபிடிக்க வேண்டும். காய்கறிகள் பயன்படுத்தக்கூடாது.
* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் "பத்மநாபா"" எனப்படும். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.
* புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா"" என்று பெயர். அரிச்சந்திரன் இந்த நாளில் விரதம் இருந்து இழந்த நாட்டையும், மனைவி மக்களையும் பெற்று பல்லாண்டுஅரசு செய்தான். எனவே, நாமும் இவ்விரத நாளில் விரதம் கடை பிடித்தால் குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில் கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது).
* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "பாபாங்குசா"" எனப்படும் வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.
* ஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு "இந்திரா"" எனப் பெயர் இன்று விரதம் இருந்து மூதாதயருக்கு சிரார்த்தம் செய்தால் அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால் நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள். ஐப்பசி மாத ஏகாதசி நாளில் பால் சாப்பிடக் கூடாது.
* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு "ப்ரமோதினீ"" என்று பெயர். கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.
* கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு "ரமா"" என்பர். இன்று இருக்கும் விரதம் இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது.
* வருடத்தில் கூடுதலாக வரும் 25தாவது ஏகாதசி "கமலா"" எனப்படும். கமலம் என்றாள் தாமரை. தாமரை மலரில் இருந்து அருள் தரும் அன்னை மகாலட்சுமியை இந்த நாளில் பூஜித்தால் நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும்.
ஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும் தனித்தனி விரதமாக இருப்பதும்,-(வைகுண்ட ஏகாதசியில்) "மோட்ச ஏகாதசியில்"" உண்ணாமல் அன்று முழுவதும் மட்டுமின்றி முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம். அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.
Author: siteadmin
Article Title: ஏகாதசி
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஏகாதசி
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.