12. உள்ளத்தில் நல்ல உள்ளம்
“தெய்வத்திரு வடிவேலன்- திருமதி சுப்பம்மாள் அவர்களின் மகளான சித்திரை வடிவுக்கும், தெய்வத்திரு சந்திரசேகரன்- தெய்வத் திருமதி மலர்விழி இவர்களின் மகனான ராமச்சந்திர பூபதிக்கும் வைகாசி மாதம் ஐந்தாம் தேதி காலை 9. 30 முதல் 10.30 மணி முகூர்த்தத்தில் திருமணம் செய்ய, பெரியோர்கள் நிச்சயம் செய்யப் படுகிறது” என்று பெரியவர் ஒருவர் நிச்சயதார்த்த ஓலையை வாசித்து முடிக்கவும், அனிதா, நர்மதா இருவரும் தத்த்தம் ஜோடியுடன் தாம்பூலப் பொருட்கள் நிரம்பியிருந்த பெரிய தாம்பாளத்தை எடுத்து எதிரில் அமர்ந்திருந்த சத்தியபாமா மற்றும் சுப்பம்மாளிடம் கொடுத்தார்கள்.
சுப்பம்மாள் “நீங்க வாங்குங்க” என்று தன் இரு சகோதரர்களையும் பார்த்துக் கூற, “தாய்க்குத் தாயா, தந்தைக்குத் தந்தையா, இரண்டு அம்மாக்கள் இருக்கீங்க. உங்களைவிட பொண்ணு வீட்டு சார்பா வாங்குறதுக்குப் பொருத்தமான ஆள் உண்டா” என்று சுப்பம்மாளின் இளைய சகோதரர் கூற,
மூத்த சகோதரரும், “அக்கா! வாங்குங்களேன்” என்றார்.
சுப்பம்மாள் சத்தியபாமாவிடம், “வாங்க அண்ணி, நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாங்குவோம்” என்றார். அதன்படியே செய்தார்கள்.
இரண்டு மாமாக்களுமே சித்ராவின் முதல் திருமணத்திற்குத் தாங்கள் இல்லாத குறையை தீர்க்கவென இப்பொழுது ஆரம்பம் முதல் அனைத்து நிகழ்வுகளுக்கும் வந்தேயாக வேண்டும் என்று முடிவு செய்து குடும்பத்தினருடன் வந்திறங்கிவிட்டனர். சித்ரா சொல்லாமல் காதல் திருமணம் செய்த போதே அவர்களுக்கு மனவருத்தம் இருந்திருக்கும், அந்தத் திருமணம் முறிந்து விட்டது, இப்பொழுது மறுதிருமணம் என்று சொல்லும் போது என்ன சொல்வார்கள் என்று பயந்து பயந்துதான் அவர்களிடம் பூபதி வீட்டுச் சம்பந்தம் பற்றிச் சொன்னார் சுப்பம்மாள். ‘எல்லாரும் நல்லா இருக்கணும்’ என்ற எண்ணம் கொண்ட அவரது தம்பிகள், “அவள் வாழ்க்கை செட்டிலான நல்லது தானே! அடுத்தும் ரெண்டு பிள்ளைங்க இருக்குதுல்ல?” என்று பரந்த மனப்பான்மையுடன் அந்த விஷயத்தை அணுகினர்.
இந்தத் திருமணத்திற்கும் அதை வாங்கித் தருகிறோம், இதை வாங்கித் தருகிறோம் என்று அவர்கள் சொன்ன போது, “மாமா! நாங்க தான் உங்க குடும்பத்துல எல்லாருக்கும் டிரஸ் எடுத்துத் தருவோம். நீங்க ஏற்கனவே சீராக் குடுத்த நகைகளை அடகு வச்சு தான் நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கேன். லோன்ல வச்சிருந்த நகைகளை எல்லாம் திருப்பியாச்சு. அதையே நீங்க மறுபடி சபையில் வச்சு எனக்குப் போடணும்” என்றாள் சித்ரா.
முந்தைய வரவேற்புக்கான ஆலோசனையின் போது மாமாக்களுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்துப் பேச தைரியம் இல்லாமல், தயங்கித் தயங்கி அவர்களது முகபாவனைகளைப் பார்த்தது சித்ராவுக்குத் தானாகவே நினைவுக்கு வந்தது. ‘உழைச்சு முன்னேறி ஒரு நிலைமைக்கு வந்தப்புறம் ஒருத்தர் கிட்டப் பேசுறது எவ்வளவு நல்லா இருக்கு? துணிஞ்சு நம்ம மனசுல இருக்கிறதைச் சொல்ல முடியுது. இதுவே பழைய சித்ராவா நான் இருந்திருந்தா இப்பவும் தலையைக் குனிஞ்சு தான் உட்கார்ந்திருப்பேன். நம்மளோட சொந்த உழைப்பும் சம்பாத்தியமும் தர்ற நம்பிக்கையே தனி தான்’ என்று நினைத்தாள்.
“சித்ரா இப்போ முப்பது பேருக்கு மேல சம்பளம் கொடுக்கிற முதலாளி.. அவ சொன்னால் சரியாத்தான் இருக்கும்” என்றார்கள் மாமாக்கள். ‘எங்க ஊர்ல நாங்க இதே மாதிரி யூனிட் போட வாய்ப்பு இருக்கா, எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்டார்கள் அத்தைமார்கள். புகுந்த வீடு பற்றித் தெளிவாகக் கேட்டுக் கொண்டார்கள். “அந்தக் கல்யாணத்துல புருஷன் சரியில்லைன்னாலும், அவங்க அம்மா தங்கமானவங்க.. இப்படி நல்ல குணம் இருந்துட்டா பிரச்சனையே இல்லை” என்றும் மாமா வீட்டினர் சொன்னார்கள்.
நடக்கவிருக்கும் திருமணத்தின் அனைத்து அம்சங்களும் முதல் திருமணத்துடன் ஒப்பிடப்பட்டு பார்க்கப்பட்டன. அப்படித்தான் நடக்கும் என்று சுப்பம்மாளுக்கும், சத்தியபாமாவுக்கும் தெரியும். இருந்தாலும் அதை எல்லாம் விவாதித்து அவர்கள் இருக்கும் நல்ல மனநிலையைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. சித்ராவும் அதே ரீதியில் தான் சிந்தித்தாள். எவ்வளவு முயன்றும் ஒப்பு நோக்குதலை அவளால் தவிர்க்க முடியவில்லை.
பழைய சம்பவங்களை மட்டும் தான் நினைக்கிறோமே ஒழிய, முகுந்தன் தன் வாழ்வில் இருந்து விலகியது வருத்தத்தைத் தரவில்லை, மாறாக நிம்மதியையே தந்திருக்கிறது என்றும் உணர்ந்தாள் சித்ரா. ஒருசில நாட்கள், ‘அப்ப நாம முன்னாடி பண்ணினது லவ்வே இல்லையா? எந்த தைரியத்துல அப்ப அவனை நம்பி கழுத்தை நீட்டினோம். இப்ப எல்லாரும் சப்போர்ட் பண்றாங்கன்னு சொன்னவுடனே வெட்கமே இல்லாம அடுத்த கல்யாணத்துக்கும் தயாராயிட்டேன்’ என்று தன்னைத் தானே தலையில் கொட்டிக் கொண்டாள்.
பூபதி வீட்டிலிருந்து கொடுத்த தாம்பாளத்தில் அழகிய பச்சை நிறப் புடவை இருந்தது. சித்ராவிடம் கொடுத்து உடுத்தி விட்டு வரச் சொன்னார் சத்தியபாமா. சுப்பம்மாள் மகளுக்கு உதவுவதற்காக எழுந்திருக்க முயல, “நீங்க உட்காருங்க ஆன்ட்டி, அண்ணிக்கு நான் ஹெல்ப் பண்றேன்..” என்று கிளம்பினாள் நர்மதா.
“அவ புது சேலை கட்டினா, நுனில காசு வச்சுக் கட்டிக்குவா, இதையும் மறக்காமல் குடும்மா” என்று இடுப்பிலிருந்த சுருக்குப்பையிலிருந்து கையில் அக்கப்பட்ட நாணயத்தை எடுத்துக் கொடுத்தனுப்பினார் சுப்பம்மாள். பூபதி வெள்ளை வேஷ்டி சட்டையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு நினைவு தெரிந்ததிலிருந்து வேஷ்டி அணிந்ததில்லை. மிஞ்சிப் போனால் வெள்ளை சட்டை, காக்கி நிற பேண்ட். இப்போது பட்டுச்சட்டை வாங்கச் சொன்னதை மறுத்து விட்டு வெறும் வெள்ளை நிற வேஷ்டி சட்டை வாங்கியிருந்தான். அதுவே அவனைக் கம்பீரமாகக் காட்டியது.
மனம் நிறைய மகிழ்ச்சியுடன் அங்குமிங்கும் வளைய வந்து வேலை செய்து கொண்டிருந்த மணிமேகலை அங்கிருந்த மௌனத்தைக் கலைக்க, “தம்பி! நீங்களாவது சொல்லுங்களேன்.. இது அரேஞ்ச்ட் மேரேஜா? லவ் மேரேஜா?” என்று கேட்க,
“ஐயோ! லவ் மேரேஜெல்லாம் இல்ல.. இவங்க தான் பொண்ணு கேட்டு வந்தாங்க” என்று பதட்டமானார் சுப்பம்மாள். “அட லவ் பண்ணினா என்னங்க தப்பு? எனக்கு சித்ராவைப் பிடிச்சிருந்தது. அதை என் தங்கச்சிங்க கண்டுபிடிச்சு பொண்ணு கேட்டாங்க. எனக்கு லவ் கம் அரேஞ்ச்ட் மேரேஜ். இனிமேல் தான் சித்ராவுக்கு லவ் வரும்.. அப்ப அவங்களுக்கு அது அரேஞ்ச்ட் கம் லவ் மேரேஜ்” என்று சீரியஸாக, அதே சமயம் சிரித்த முகத்துடன் சொன்னான் பூபதி. அவன் பேசிய விதம் அனைவருக்கும் பிடித்திருந்தது.
“அப்பாடி! நீங்களாவது உண்மையை ஒத்துக்கிட்டீங்களே.. நானும் சித்ரா கிட்ட கேட்டுக் கேட்டுப் பார்க்கிறேன்.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்னுட்டா”
“அட, நான் மனசுக்குள்ள லவ் பண்ண விஷயத்தை அவங்க கிட்ட இதுவரைக்கும் சொல்லவே இல்லைங்க” என்றான் பூபதி.
அப்போது புதிய சேலையைக் கட்டிக் கொண்டு அழகே உருவாக சித்ரா வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்ல, அனைவரும் ஆசி வழங்கினர். “பொண்ணு கூட கொஞ்ச நேரம் தனியா பேசலாம்ங்களா, இதுவரை பேசினதே இல்லை” என்றான் பூபதி.
“பேசினதே இல்லையா.. நம்பிட்டோம்!” என்றார்கள் அனிதாவும் நர்மதாவும்.
“பொறுப்பான புள்ளைங்க, அண்ணன் கல்யாணத்தை எடுத்து நடத்துறாங்கன்னு சந்தோஷப்பட்டா, என்ன இப்படி கலாய்ச்சிட்டு இருக்கீங்க.. போங்க அந்தப் பக்கம். மாப்பிள்ளையும் பொண்ணும் தனியா பேசிக்கட்டும்” என்று சத்தியபாமா அனுப்பி வைத்தார்.
.
முறைத்துக் கொண்டே பூபதியுடன் உள் அறைக்கு வந்தாள் சித்ரா. “தனியா என்ன பேசப் போறீங்க? எதுவும் வரதட்சணை, சீர் செனத்தி, இந்த மாதிரி விஷயமா?” என்றாள் அறைக்குள் நுழைந்தவுடன்.
“ஏங்க இப்பவே மிரட்டுறீங்க? கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க.. குழந்தைப் பிள்ளைங்க நானு.. அப்புறம் ராத்திரி பயந்துக்குவேன்” என்றான்.
இப்போது அடிக்கடி இப்படித்தான் எடக்கு மடக்காகப் பேசுகிறான். கையில் கிடைத்த எதையாவது எடுத்து அடிக்கலாமா என்று தேடினாள் சித்ரா. பின் திரும்பி நின்று கொண்டாள்.
யோசித்துப் பார்த்தால் ஆரம்பத்திலிருந்தே விளையாட்டாக உரிமை எடுத்துக் கொண்டுதான் பேசுகிறான் பூபதி. தனக்குத் தான் நிறைய நாட்கள் புரியவில்லை. கோபம் தணிந்தவுடன் திரும்பி, “என்ன பேசணும்? சொல்லுங்க” என்றாள்.
அன்றொரு நாள் தெருவில் வைத்து ஆட்டோவுக்கு அருகில் தான் தேடிப் போய் பேசிய போது இவன் பேசவே விடாமல் ஏதேதோ மடைமாற்றி விட்டது நினைவுக்கு வந்தது. ‘இவங்ககிட்ட எல்லாம் எப்படிப் பேசி, குப்பை கொட்டி, குடும்பம் நடத்தி..’ என்று சலித்துக் கொண்டாள்
“சொல்றதுக்கெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. இது அரேஞ்ச்ட் மேரேஜ் தான் அப்படின்னு சபையில் சொல்லியாச்சு.. இப்பதான் முதல்முறையா தனியா பேசப் போறேன் அப்படி இப்படின்னு பில்டப் பண்ணினாத் தானே எல்லாரும் அதை நம்புவாங்க.. அதான் சும்மா அப்படியே வந்தேன்” என்றான்.
“அப்படியா எல்லாரும் நம்பிடுவாங்கன்னு நினைக்கிறீங்களா?”
“நம்ப மாட்டாங்களா? ஏன்? இது நிஜமாகவே அரேஞ்ச் மேரேஜ் தானே? அதான் உண்மை? பொண்ணு பாக்கப் போகும்போது கண்டிப்பா பொண்ணு கிட்ட தனியா பேசணும். அதான் நடைமுறை. அன்னைக்கு என் தங்கச்சிங்க மட்டும் தானே வந்தாங்க. மறந்துட்டீங்களா?”
“என்னமோ பிளான் பண்றீங்க.. ம்ஹ்ம்.. எனக்கும் சிலது சொல்ல வேண்டியது இருக்கு..” என்ற சித்ரா, “எங்க வீட்ல கொஞ்சம் கிராண்டா கல்யாணத்தைப் பண்ணனும்னு நினைக்கிறாங்க.. ஆனா எனக்கு அதுல இஷ்டம் இல்லை.. சிம்பிளாவே பண்ணிக்கலாம், அடுத்து தம்பி தங்கச்சிங்களுக்கு செட்டில் பண்ணனும்.. அவங்க லைஃப் செட்டில் ஆகுற வரைக்கும் நான் தான் கொஞ்சம் குடும்பத்தையும் பாக்கணும், அப்புறம் சத்தியபாமா அத்தை வேற இருக்காங்க”
“எனக்கு எல்லாமே ஓகே தான். இதெல்லாம் நாம ஏற்கனவே பேசியிருக்கிறதா ஞாபகம்.. இப்ப வேற பேசலாமா?” சித்ரா பூபதியுடன் வேலைக்கென ஆட்டோவில் பயணிக்கும் போதே குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும், நிறைய உழைக்க வேண்டும், அம்மாவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று நிறைய பேசுவாள்.
“வேற என்ன பேசுறது?”
“நீங்க அன்னைக்கே கேட்டீங்க.. நான் பதில் சொல்லிட்டேன். இப்போ உங்க முறை சித்ரா! நீங்க சொல்லுங்க.. என்னைப் புடிச்சிருக்கா? பிடிச்சு தானே கல்யாணத்துக்குச் சம்மதிச்சீங்க? இல்ல எல்லாரும் உங்களை கட்டாயப்படுத்தறாங்களா?”
இதுவரை பூபதியைக் கல்யாணம் செய்துகொண்டால் உன் வாழ்க்கை எப்படி எல்லாம் நல்ல விதமாக அமையும் என்று மாறி மாறி விளக்கினார்கள், ஏற்கனவே அவள் பெயரில் படிந்த கறையை எப்படி நீக்குவது என்று வகுப்பு எடுத்தார்கள். ஆனால், “உனக்கு புடிச்சிருக்கா?” என்று யாரும் கேட்கவில்லை. தம்பி தங்கை கூட, “அக்கா! பழைய மாமாவை விட புது மாமா தான் எனக்குப் புடிச்சிருக்கு. அவர் உன்னை நன்றாக வச்சுக்குவார்.. உன்னைப் பார்க்கும் போதே பாசமா பாக்குறார்..” என்றெல்லாம் சொன்னார்களே தவிர தன் மனதைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை என்பது அவளுடைய சுயமரியாதையைத் தீண்டிய விஷயமாக இருந்தது.
ஒரு முறை தவறு செய்து விட்டேன் என்பதற்காக, அதற்குத் தண்டனையாக இந்த சமூகம் என்ன சொன்னாலும் அதன்படி செய்ய வேண்டுமா? என்ன நியாயம் இது என்று பொருமினாள் அவளுள் இருந்த பெண்ணியவாதி. இப்போது அந்த மனக்குறை முற்றிலுமாக நீங்கியது. தான் கேட்கக் கேட்க, சித்ராவின் முகத்தில் ஒரு நிம்மதியும் சந்தோஷமாக வருவதையும் பூபதியும் பார்த்தான்.
“முன்னாடியே கேட்டிருக்கணுமோ?” என்றான்.
இல்லை என்று சொல்ல வந்துவிட்டு, ஆம் என்று தலையாட்டினாள் சித்ரா. பின் பெரிய பெருமூச்சு விட்டவள், “எனக்கு பிடிச்சிருக்கு தான். அதுவும் போக வேற ஆப்ஷனும் எனக்கு இல்லேல்ல.. ஆனா என்னைக் கேட்காமலேயே எல்லாரும் முடிவு பண்றப்ப, ஏன் நம்ம கிட்ட கருத்து கேட்கல, பழைய தப்புக்கான தண்டனையா இது அப்படின்னு தோணுச்சு தெரியுமா?” என்றாள். கண்களில் நீர் நிறைந்தது.
பூபதி அவளைத் தேற்ற வேண்டும் என்று கைக்குட்டையைத் தேடினான், கிடைக்கவில்லை. அருகில் இருந்த கொடியில் தொங்கிக் கொண்டிருந்த துண்டை எடுத்து அவளிடம் நீட்டினான். அதை வாங்கி கண்ணைத் துடைத்த பின்னர் தான் அதை கவனித்த சித்ரா, “என்னது இது?” என்றாள் சிரிப்புடன். கண்களில் நீர் மின்ன கன்னத்தில் கண்ணீர் துடைத்த தடம் தெரிய, அவள் சிரித்தது பூபதியின் மனதைக் கொள்ளை கொண்டது.
“உங்க துண்டு தானே? இல்லையா? வேற யார் துண்டையும் மாத்திக் கொடுத்துட்டேனா? மத்தவங்க துண்டை யூஸ் பண்ண மாட்டீங்களா?” என்றான் பூபதி அடுக்கடுக்காக.
“ஐயோ கேள்வியா கேட்டு கொல்றீங்களே பதில் எதிர்பார்க்க மாட்டீங்களா.. அதெல்லாம் இல்ல.. என்னோட துண்டு தான்” என்று சித்ரா சொல்ல,
“அப்போ உனக்கு மனப்பூர்வமான சம்மதம் எடுத்துக்கலாமா?”
“எல்லாரும் ரோஜாப் பூ குடுத்து கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேப்பாங்க.. நீங்க என்ன அழுக்குத் துண்டைக் குடுத்துட்டுக் கேக்குறீங்க?” சித்ராவும் அவனுக்கு ஈடாகப் பேச முயன்றாள்.
இடது கையால் வாயை மூடிக்கொண்டான் பூபதி. மறுகையால் நான் பேசமாட்டேன், நீயே பேசு என்று சைகை செய்தான்.
“சம்மதம் தான். மனப்பூர்வமான சம்மதமா, பிடிச்சிருக்கா அப்படிங்கறதைக் கொஞ்ச நாள் கழிச்சு சொல்றேன். பிடிக்காமப் போகாதுன்னு நினைக்கிறேன்” என்றாள் சித்ரா.
“டேய் பூபதி, இருந்தாலும் உனக்கு ஜாதகத்துல ஏதோ ஒரு இடத்துல இடிக்குதுடா.. இத்தனை வயசுக்கு மேலயும் ஒரு பொண்ணு வந்து நேரா உன்னைப் பிடிக்குதுன்னு வாயார சொல்ல மாட்டேங்குது பாத்தியா? அதுவும் அடுத்த வாரம் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு..” என்று அவனையே நோக்கி ஒரு விரலை நீட்டிச் சொல்ல,
“பொய் சொல்லாதீங்க, எனக்குத் தெரியும், இதுவரைக்கும் மூணு நாலு பொண்ணுங்க உங்ககிட்ட புடிச்சிருக்குன்னு சொல்லி இருக்காங்க.. கடலை போட ட்ரை பண்ணி இருக்காங்க” என்றாள் சித்ரா.
“அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”
“உங்க தங்கச்சிங்க தான் சொன்னாங்க”
“என்கிட்ட பேசாம அவங்க கிட்ட தொடர்ந்து பேசுறியா நீ?” திடீரென்று ஒருமைக்கு தாவியிருந்தான் பூபதி. அந்த வித்தியாசம் சித்ராவுக்கும் சட்டென்று பிடிபட்டு விட்டது.
“என்ன திடீர்னு நீன்னு சொல்றீங்க?”
“உன்னை விட ஏழு வயசு பெரியவன் நான். கல்யாணம் பேசியாச்சு. இப்பவும் நீங்கன்னு சொன்னா வெளியே தப்பா நினைக்க மாட்டாங்க? என் மனசுக்குள்ள உன்கிட்ட நீ, வா, போன்னு தான் உன்னைப் பத்திப் பேசுறேன். மனசுல ஒண்ணு வச்சு வெளில ஒண்ணு பேசற பழக்கம் எனக்குக் கிடையாது”
“மறுபடியும் பொய் சொல்றீங்க”
“எப்ப பொய் சொன்னேன்?”
“என்னை பார்த்தவுடனே பிடிச்சிருச்சு, கட்டினா என்னைத்தான் கட்டிக்குவேன்னு மனசுல என்னை வச்சுட்டு சுத்தியிருக்கீங்க. ஆனா அதைச் சொல்லாம மறைச்சுட்டு என்கிட்ட வேற என்னல்லாம் பேசி இருக்கீங்க?”
“அது வேற இது வேற.. அப்பவே நான் கேட்டிருந்தா நீ ஒத்துகிட்டு இருப்பியா?”
சற்று யோசித்து ஒத்துக் கொண்டிருந்திருக்க மாட்டேன் என்று தலையை அசைத்தாள். ‘கையில் விவாகரத்து ஆணை வந்தால் தானே நான் ஒற்றைப் பெண், single woman? அதுவரைக்கும் இன்னொருவனின் மனைவி தானே? எப்படி ஏற்றுக் கொண்டிருப்பேன்?’
“இப்ப நீ கூடத் தான் என்னை மனசுல நினைக்கிற, என்னை ரொம்ப பிடிச்சிருக்கு.. அதை வெளியே சொல்றியா என்ன? அப்புறம் சொல்றேன், அப்புறம் சொல்றேன்ங்குற.. சாக்குப் போக்கு தானே சொல்ற?”
கண்டுபிடித்து விட்டானே என்ற நினைப்பில் வெட்கம் வந்தது. நாக்கைக் கடித்துக் கொண்டாள் சித்ரா. இன்னும் திருமணம் தொடர்பான வேறு சில விஷயங்களைப் பேசிவிட்டு இருவரும் வெளியில் வந்த போது
மணிமேகலை சித்ராவின் தங்கையிடம், “எப்படியாவது நல்லா படிச்சு முடிச்சு ஒரு வேலைக்குப் போயிரு டி.. என்னை எல்லாம் காலேஜ்ல முதல் வருஷம் சேர்த்து விட்டாங்க.. அப்புறம் மாப்பிள்ளை வந்துச்சுன்னு சொல்லி கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க. அந்த மாப்பிள்ளையும் விட்ட படிப்பை தொடர்ந்து முடி அப்படின்னு தான் சொன்னாரு.. நான் சோம்பேறித்தனத்தில் விட்டுட்டேன்”
“மணி அக்கா.. எங்க சின்னக்காவுக்கு கேம்பஸ் இன்டர்வியூல வேலையே கிடைச்சிருச்சு.. அவதான் காலேஜ்ல முதல் மார்க். அவகிட்ட போய் சொல்றீங்களே?” என்று சித்ராவின் தம்பி கூற,
“இது அடுத்த குட் நியூஸா இருக்கே.. வாழ்த்துக்கள்! அப்ப உனக்கும் சட்டுபுட்டுன்னு மாப்பிள்ளை பார்த்துட வேண்டியது தான்” என்று மணிமேகலை சொல்ல,
“அக்கா அவளும் என்னை மாதிரி நல்ல சொந்த காலில் நின்னு, உலக அனுபவமும் படிச்ச பிறகு தான் கல்யாணம்” என்றாள் சித்ரா அழுத்தம் திருத்தமாக.
“சரிங்க முதலாளியம்மா, நீங்க சொன்னா சரிதான்!” கலகலவென்று சிரித்தாள் மணிமேகலை.
நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இருந்தனர். சுப்பம்மாள் மனதில் சித்ரா மீதான உரிமையுணர்வு முளை விட்டிருப்பதை சத்தியபாமா உணர்ந்திருந்தார். அதனால் சுந்பம்மாளின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தது. மிகச்சில விருந்தானர்களே வந்திருந்தனர். அங்கு வேறு யாரோ இருப்பது போல சத்தியபாமாவுக்கு உள்ளுணர்வு இருந்து கொண்டே இருந்தது. வந்தவர்கள் ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்தார்.
சுப்பம்மாளின் உறவினர்கள், பூபதிக்குத் தெரிந்தவர்கள் என்று சுமார் இருபது பேர் வந்திருப்பார்கள். சத்தியபாமாவுக்குப் பெரிதாக உறவு என்று ஒருவரும் இல்லை. அவரது வீட்டின் அருகில் வசிக்கும், சித்ராவின் மேலும் பிரியம் வைத்திருந்த ஒரு சிலரை அழைத்திருந்தார். சத்தியபாமாவின் மேல் பலருக்கும் நல்ல மதிப்பு இருந்தது. இருந்தாலும் ஒருவரின் வீழ்ச்சியில் ஆறுதல் அடைபவர்கள் தானே இங்கே நிறைய பேர். முகுந்தனின் செயல்பாடுகளால் அந்தக் குடும்பத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சியில் மகிழ்ந்திருந்தவர்களால், சித்ராவை அரவணைத்து, தன் வீட்டிலேயே சிறிய நிறுவனம் தொடங்கிக் கொடுத்த சத்தியபாமாவின் பெருந்தன்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனதில் கசப்போடே சுற்றிக் கொண்டிருந்தனர். அதனை உணர்ந்த சத்தியபாமாவுக்கு அவர்களை அழைக்க மனம் வரவில்லை.
தன் தூரத்து உறவினர்களில் ஒருவனும் அத்தை, அத்தை என்று பாசமாக சுற்றி வருபவனுமான பரமுவை மட்டும் அழைத்திருந்தார். பரமு முகுந்தனுக்கும் நண்பன். இவன் தான் முதன் முதலில் சித்ராவும் முகுந்தனும் திருமணம் செய்து கொள்ளப் போகும் தகவலை சத்தியபாமாவிடம் சொல்லியவன். அனைவரும் கலகலப்பாகப் பேசி கொண்டிருக்க, பரமு மட்டும் இறுக்கமாக அமர்ந்திருப்பதைப் போல் சத்தியபாமாவுக்குத் தோன்றியது
மெல்ல எழுந்து துணைக்கு இன்னொரு பெண்ணை அழைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்காக சிற்றுண்டி கொடுத்துக் கொண்டே வர, பரமுவின் அருகில் செல்லும் போது மட்டும் அவனுக்குள் ஒரு சின்ன சலனம். அவனையே கூர்ந்து கவனித்தார். அவனுடைய சட்டைப் பையில் இருந்த கேமரா அங்கு நடப்பதைப் படம்பிடித்துக் கொண்டிருந்தது. இன்னும் கூர்ந்து கவனித்தார்.
சத்தியமா தன்னை உற்றுப்பார்ப்பதைப் பார்த்து விட்டான் பரமு. தன் அலைபேசியை எடுத்து அதைப் பிறர் கவனம் தவறாதவாறு அணைத்து வைத்தான். திரையில் ஒஙமுகம் தெரிந்தது. ஒரு வினாடிக்கும் குறைவாக இருந்தாலும், சத்தியபாமா தான் பெற்று, வளர்த்த மகனின் முகத்தைக் கண்டுகொண்டு விட்டார். இங்கே நடக்கும் நிகழ்வுகளை முகுந்தனுக்கு ஒளிபரப்புகிறான் என்பது புரிந்தது.
வாசலுக்குச் சென்று, “பரமு.. இங்கே வாப்பா.. டீ காலி ஆயிடுச்சு.. எல்லாருக்கும் இன்னொரு ரவுண்டு கொடுக்கலாம்.. போய் வாங்கிட்டு வாப்பா” என்று அவனை சத்தமாக அழைத்தார்.
அருகில் வந்தவனிடம், “என்ன, என் மகன் கூட இன்னும் பேசிட்டு தான் இருக்கியா? இங்க நடக்கிறது எல்லாம் அவனுக்கு ஃபோன்ல போட்டு காட்டிட்டு இருக்கியா?” என்று நேரடியாகவே கேட்டார்.
“ம்.. மாறி மாறி கேட்டுகிட்டே இருந்தான்.. மறுக்க முடியலை”
“அதான் ஏதோ ஹைதராபாத்ல இருக்கேன். எனக்கு ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க.. அப்படி இப்படின்னானே.. இப்ப டைவர்ஸ் வேற ஆயிடுச்சு.. இனிமேல் அவனுக்கு இங்கே உரிமையே இல்ல.. அது தெரியுமா தெரியாதா உன் ஃபிரண்டுக்கு?”
“அத்தை.. உங்க மகன்கிறதுனால தான் அவன்கிட்ட பழகுறேன்.. பழகின பாவத்திற்காக இதோ இப்பவும் அவன் என்ன பண்றான், ஏது பண்றான்னு தெரிஞ்சுக்கறதுக்காகவே பேசுவேன்.. பெரிய பிரியம்லாம் எனக்கு இல்ல.. இன்னமும் அவன் முழுசா என் கிட்ட எதுவும் சொல்லல.. ஆனா அங்கேயும் போய் ஏதோ சிக்கல்ல தான் மாட்டிருக்கான்.. ஊருக்கு வந்துடவா, அம்மா சேத்துக்குவாங்களா, சித்ரா எங்கே இருக்கான்னு கேட்டு இப்ப ரெண்டு வாரமா ஒரே டார்ச்சர்.. அதான் உன்னை விட்டு விலகி அவங்க எவ்வளவோ தூரம் வந்துட்டாங்க அப்படின்னு சொல்றதுக்காக இப்போ இதெல்லாம் போட்டுக் காட்டுறேன். சித்ரா அவ்வளவு சந்தோஷமா இருக்கிறதை கண்ணால பார்த்துட்டான். அருமையான வாழ்க்கையைத் தவற விட்டுட்டோமேன்னு அவனுக்கும் புரிஞ்சிருக்கும்.. அருமை பெருமையா பூபதி அவங்களை வச்சுக்கப் போறான் அதுவும் புரிஞ்சிருக்கும்.. நல்லது தான் நடக்கும் அத்தை” என்றான் பரமு.
அவன் சொன்னது ஏற்புடையதாகத் தான் இருந்தது. இருந்தாலும் பின்னாளில் செயல்படுத்த எண்ணியிருந்ததை இப்பொழுதே செயல்படுத்தி விட வேண்டியது தான் என்று தன் மனதில் உறுதி செய்து கொண்டார் சத்தியபாமா. அன்றும் அவரது தூக்கம் பறிபோனது.
தொடரும்.
“தெய்வத்திரு வடிவேலன்- திருமதி சுப்பம்மாள் அவர்களின் மகளான சித்திரை வடிவுக்கும், தெய்வத்திரு சந்திரசேகரன்- தெய்வத் திருமதி மலர்விழி இவர்களின் மகனான ராமச்சந்திர பூபதிக்கும் வைகாசி மாதம் ஐந்தாம் தேதி காலை 9. 30 முதல் 10.30 மணி முகூர்த்தத்தில் திருமணம் செய்ய, பெரியோர்கள் நிச்சயம் செய்யப் படுகிறது” என்று பெரியவர் ஒருவர் நிச்சயதார்த்த ஓலையை வாசித்து முடிக்கவும், அனிதா, நர்மதா இருவரும் தத்த்தம் ஜோடியுடன் தாம்பூலப் பொருட்கள் நிரம்பியிருந்த பெரிய தாம்பாளத்தை எடுத்து எதிரில் அமர்ந்திருந்த சத்தியபாமா மற்றும் சுப்பம்மாளிடம் கொடுத்தார்கள்.
சுப்பம்மாள் “நீங்க வாங்குங்க” என்று தன் இரு சகோதரர்களையும் பார்த்துக் கூற, “தாய்க்குத் தாயா, தந்தைக்குத் தந்தையா, இரண்டு அம்மாக்கள் இருக்கீங்க. உங்களைவிட பொண்ணு வீட்டு சார்பா வாங்குறதுக்குப் பொருத்தமான ஆள் உண்டா” என்று சுப்பம்மாளின் இளைய சகோதரர் கூற,
மூத்த சகோதரரும், “அக்கா! வாங்குங்களேன்” என்றார்.
சுப்பம்மாள் சத்தியபாமாவிடம், “வாங்க அண்ணி, நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாங்குவோம்” என்றார். அதன்படியே செய்தார்கள்.
இரண்டு மாமாக்களுமே சித்ராவின் முதல் திருமணத்திற்குத் தாங்கள் இல்லாத குறையை தீர்க்கவென இப்பொழுது ஆரம்பம் முதல் அனைத்து நிகழ்வுகளுக்கும் வந்தேயாக வேண்டும் என்று முடிவு செய்து குடும்பத்தினருடன் வந்திறங்கிவிட்டனர். சித்ரா சொல்லாமல் காதல் திருமணம் செய்த போதே அவர்களுக்கு மனவருத்தம் இருந்திருக்கும், அந்தத் திருமணம் முறிந்து விட்டது, இப்பொழுது மறுதிருமணம் என்று சொல்லும் போது என்ன சொல்வார்கள் என்று பயந்து பயந்துதான் அவர்களிடம் பூபதி வீட்டுச் சம்பந்தம் பற்றிச் சொன்னார் சுப்பம்மாள். ‘எல்லாரும் நல்லா இருக்கணும்’ என்ற எண்ணம் கொண்ட அவரது தம்பிகள், “அவள் வாழ்க்கை செட்டிலான நல்லது தானே! அடுத்தும் ரெண்டு பிள்ளைங்க இருக்குதுல்ல?” என்று பரந்த மனப்பான்மையுடன் அந்த விஷயத்தை அணுகினர்.
இந்தத் திருமணத்திற்கும் அதை வாங்கித் தருகிறோம், இதை வாங்கித் தருகிறோம் என்று அவர்கள் சொன்ன போது, “மாமா! நாங்க தான் உங்க குடும்பத்துல எல்லாருக்கும் டிரஸ் எடுத்துத் தருவோம். நீங்க ஏற்கனவே சீராக் குடுத்த நகைகளை அடகு வச்சு தான் நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கேன். லோன்ல வச்சிருந்த நகைகளை எல்லாம் திருப்பியாச்சு. அதையே நீங்க மறுபடி சபையில் வச்சு எனக்குப் போடணும்” என்றாள் சித்ரா.
முந்தைய வரவேற்புக்கான ஆலோசனையின் போது மாமாக்களுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்துப் பேச தைரியம் இல்லாமல், தயங்கித் தயங்கி அவர்களது முகபாவனைகளைப் பார்த்தது சித்ராவுக்குத் தானாகவே நினைவுக்கு வந்தது. ‘உழைச்சு முன்னேறி ஒரு நிலைமைக்கு வந்தப்புறம் ஒருத்தர் கிட்டப் பேசுறது எவ்வளவு நல்லா இருக்கு? துணிஞ்சு நம்ம மனசுல இருக்கிறதைச் சொல்ல முடியுது. இதுவே பழைய சித்ராவா நான் இருந்திருந்தா இப்பவும் தலையைக் குனிஞ்சு தான் உட்கார்ந்திருப்பேன். நம்மளோட சொந்த உழைப்பும் சம்பாத்தியமும் தர்ற நம்பிக்கையே தனி தான்’ என்று நினைத்தாள்.
“சித்ரா இப்போ முப்பது பேருக்கு மேல சம்பளம் கொடுக்கிற முதலாளி.. அவ சொன்னால் சரியாத்தான் இருக்கும்” என்றார்கள் மாமாக்கள். ‘எங்க ஊர்ல நாங்க இதே மாதிரி யூனிட் போட வாய்ப்பு இருக்கா, எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்டார்கள் அத்தைமார்கள். புகுந்த வீடு பற்றித் தெளிவாகக் கேட்டுக் கொண்டார்கள். “அந்தக் கல்யாணத்துல புருஷன் சரியில்லைன்னாலும், அவங்க அம்மா தங்கமானவங்க.. இப்படி நல்ல குணம் இருந்துட்டா பிரச்சனையே இல்லை” என்றும் மாமா வீட்டினர் சொன்னார்கள்.
நடக்கவிருக்கும் திருமணத்தின் அனைத்து அம்சங்களும் முதல் திருமணத்துடன் ஒப்பிடப்பட்டு பார்க்கப்பட்டன. அப்படித்தான் நடக்கும் என்று சுப்பம்மாளுக்கும், சத்தியபாமாவுக்கும் தெரியும். இருந்தாலும் அதை எல்லாம் விவாதித்து அவர்கள் இருக்கும் நல்ல மனநிலையைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. சித்ராவும் அதே ரீதியில் தான் சிந்தித்தாள். எவ்வளவு முயன்றும் ஒப்பு நோக்குதலை அவளால் தவிர்க்க முடியவில்லை.
பழைய சம்பவங்களை மட்டும் தான் நினைக்கிறோமே ஒழிய, முகுந்தன் தன் வாழ்வில் இருந்து விலகியது வருத்தத்தைத் தரவில்லை, மாறாக நிம்மதியையே தந்திருக்கிறது என்றும் உணர்ந்தாள் சித்ரா. ஒருசில நாட்கள், ‘அப்ப நாம முன்னாடி பண்ணினது லவ்வே இல்லையா? எந்த தைரியத்துல அப்ப அவனை நம்பி கழுத்தை நீட்டினோம். இப்ப எல்லாரும் சப்போர்ட் பண்றாங்கன்னு சொன்னவுடனே வெட்கமே இல்லாம அடுத்த கல்யாணத்துக்கும் தயாராயிட்டேன்’ என்று தன்னைத் தானே தலையில் கொட்டிக் கொண்டாள்.
பூபதி வீட்டிலிருந்து கொடுத்த தாம்பாளத்தில் அழகிய பச்சை நிறப் புடவை இருந்தது. சித்ராவிடம் கொடுத்து உடுத்தி விட்டு வரச் சொன்னார் சத்தியபாமா. சுப்பம்மாள் மகளுக்கு உதவுவதற்காக எழுந்திருக்க முயல, “நீங்க உட்காருங்க ஆன்ட்டி, அண்ணிக்கு நான் ஹெல்ப் பண்றேன்..” என்று கிளம்பினாள் நர்மதா.
“அவ புது சேலை கட்டினா, நுனில காசு வச்சுக் கட்டிக்குவா, இதையும் மறக்காமல் குடும்மா” என்று இடுப்பிலிருந்த சுருக்குப்பையிலிருந்து கையில் அக்கப்பட்ட நாணயத்தை எடுத்துக் கொடுத்தனுப்பினார் சுப்பம்மாள். பூபதி வெள்ளை வேஷ்டி சட்டையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு நினைவு தெரிந்ததிலிருந்து வேஷ்டி அணிந்ததில்லை. மிஞ்சிப் போனால் வெள்ளை சட்டை, காக்கி நிற பேண்ட். இப்போது பட்டுச்சட்டை வாங்கச் சொன்னதை மறுத்து விட்டு வெறும் வெள்ளை நிற வேஷ்டி சட்டை வாங்கியிருந்தான். அதுவே அவனைக் கம்பீரமாகக் காட்டியது.
மனம் நிறைய மகிழ்ச்சியுடன் அங்குமிங்கும் வளைய வந்து வேலை செய்து கொண்டிருந்த மணிமேகலை அங்கிருந்த மௌனத்தைக் கலைக்க, “தம்பி! நீங்களாவது சொல்லுங்களேன்.. இது அரேஞ்ச்ட் மேரேஜா? லவ் மேரேஜா?” என்று கேட்க,
“ஐயோ! லவ் மேரேஜெல்லாம் இல்ல.. இவங்க தான் பொண்ணு கேட்டு வந்தாங்க” என்று பதட்டமானார் சுப்பம்மாள். “அட லவ் பண்ணினா என்னங்க தப்பு? எனக்கு சித்ராவைப் பிடிச்சிருந்தது. அதை என் தங்கச்சிங்க கண்டுபிடிச்சு பொண்ணு கேட்டாங்க. எனக்கு லவ் கம் அரேஞ்ச்ட் மேரேஜ். இனிமேல் தான் சித்ராவுக்கு லவ் வரும்.. அப்ப அவங்களுக்கு அது அரேஞ்ச்ட் கம் லவ் மேரேஜ்” என்று சீரியஸாக, அதே சமயம் சிரித்த முகத்துடன் சொன்னான் பூபதி. அவன் பேசிய விதம் அனைவருக்கும் பிடித்திருந்தது.
“அப்பாடி! நீங்களாவது உண்மையை ஒத்துக்கிட்டீங்களே.. நானும் சித்ரா கிட்ட கேட்டுக் கேட்டுப் பார்க்கிறேன்.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்னுட்டா”
“அட, நான் மனசுக்குள்ள லவ் பண்ண விஷயத்தை அவங்க கிட்ட இதுவரைக்கும் சொல்லவே இல்லைங்க” என்றான் பூபதி.
அப்போது புதிய சேலையைக் கட்டிக் கொண்டு அழகே உருவாக சித்ரா வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்ல, அனைவரும் ஆசி வழங்கினர். “பொண்ணு கூட கொஞ்ச நேரம் தனியா பேசலாம்ங்களா, இதுவரை பேசினதே இல்லை” என்றான் பூபதி.
“பேசினதே இல்லையா.. நம்பிட்டோம்!” என்றார்கள் அனிதாவும் நர்மதாவும்.
“பொறுப்பான புள்ளைங்க, அண்ணன் கல்யாணத்தை எடுத்து நடத்துறாங்கன்னு சந்தோஷப்பட்டா, என்ன இப்படி கலாய்ச்சிட்டு இருக்கீங்க.. போங்க அந்தப் பக்கம். மாப்பிள்ளையும் பொண்ணும் தனியா பேசிக்கட்டும்” என்று சத்தியபாமா அனுப்பி வைத்தார்.
.
முறைத்துக் கொண்டே பூபதியுடன் உள் அறைக்கு வந்தாள் சித்ரா. “தனியா என்ன பேசப் போறீங்க? எதுவும் வரதட்சணை, சீர் செனத்தி, இந்த மாதிரி விஷயமா?” என்றாள் அறைக்குள் நுழைந்தவுடன்.
“ஏங்க இப்பவே மிரட்டுறீங்க? கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க.. குழந்தைப் பிள்ளைங்க நானு.. அப்புறம் ராத்திரி பயந்துக்குவேன்” என்றான்.
இப்போது அடிக்கடி இப்படித்தான் எடக்கு மடக்காகப் பேசுகிறான். கையில் கிடைத்த எதையாவது எடுத்து அடிக்கலாமா என்று தேடினாள் சித்ரா. பின் திரும்பி நின்று கொண்டாள்.
யோசித்துப் பார்த்தால் ஆரம்பத்திலிருந்தே விளையாட்டாக உரிமை எடுத்துக் கொண்டுதான் பேசுகிறான் பூபதி. தனக்குத் தான் நிறைய நாட்கள் புரியவில்லை. கோபம் தணிந்தவுடன் திரும்பி, “என்ன பேசணும்? சொல்லுங்க” என்றாள்.
அன்றொரு நாள் தெருவில் வைத்து ஆட்டோவுக்கு அருகில் தான் தேடிப் போய் பேசிய போது இவன் பேசவே விடாமல் ஏதேதோ மடைமாற்றி விட்டது நினைவுக்கு வந்தது. ‘இவங்ககிட்ட எல்லாம் எப்படிப் பேசி, குப்பை கொட்டி, குடும்பம் நடத்தி..’ என்று சலித்துக் கொண்டாள்
“சொல்றதுக்கெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. இது அரேஞ்ச்ட் மேரேஜ் தான் அப்படின்னு சபையில் சொல்லியாச்சு.. இப்பதான் முதல்முறையா தனியா பேசப் போறேன் அப்படி இப்படின்னு பில்டப் பண்ணினாத் தானே எல்லாரும் அதை நம்புவாங்க.. அதான் சும்மா அப்படியே வந்தேன்” என்றான்.
“அப்படியா எல்லாரும் நம்பிடுவாங்கன்னு நினைக்கிறீங்களா?”
“நம்ப மாட்டாங்களா? ஏன்? இது நிஜமாகவே அரேஞ்ச் மேரேஜ் தானே? அதான் உண்மை? பொண்ணு பாக்கப் போகும்போது கண்டிப்பா பொண்ணு கிட்ட தனியா பேசணும். அதான் நடைமுறை. அன்னைக்கு என் தங்கச்சிங்க மட்டும் தானே வந்தாங்க. மறந்துட்டீங்களா?”
“என்னமோ பிளான் பண்றீங்க.. ம்ஹ்ம்.. எனக்கும் சிலது சொல்ல வேண்டியது இருக்கு..” என்ற சித்ரா, “எங்க வீட்ல கொஞ்சம் கிராண்டா கல்யாணத்தைப் பண்ணனும்னு நினைக்கிறாங்க.. ஆனா எனக்கு அதுல இஷ்டம் இல்லை.. சிம்பிளாவே பண்ணிக்கலாம், அடுத்து தம்பி தங்கச்சிங்களுக்கு செட்டில் பண்ணனும்.. அவங்க லைஃப் செட்டில் ஆகுற வரைக்கும் நான் தான் கொஞ்சம் குடும்பத்தையும் பாக்கணும், அப்புறம் சத்தியபாமா அத்தை வேற இருக்காங்க”
“எனக்கு எல்லாமே ஓகே தான். இதெல்லாம் நாம ஏற்கனவே பேசியிருக்கிறதா ஞாபகம்.. இப்ப வேற பேசலாமா?” சித்ரா பூபதியுடன் வேலைக்கென ஆட்டோவில் பயணிக்கும் போதே குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும், நிறைய உழைக்க வேண்டும், அம்மாவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று நிறைய பேசுவாள்.
“வேற என்ன பேசுறது?”
“நீங்க அன்னைக்கே கேட்டீங்க.. நான் பதில் சொல்லிட்டேன். இப்போ உங்க முறை சித்ரா! நீங்க சொல்லுங்க.. என்னைப் புடிச்சிருக்கா? பிடிச்சு தானே கல்யாணத்துக்குச் சம்மதிச்சீங்க? இல்ல எல்லாரும் உங்களை கட்டாயப்படுத்தறாங்களா?”
இதுவரை பூபதியைக் கல்யாணம் செய்துகொண்டால் உன் வாழ்க்கை எப்படி எல்லாம் நல்ல விதமாக அமையும் என்று மாறி மாறி விளக்கினார்கள், ஏற்கனவே அவள் பெயரில் படிந்த கறையை எப்படி நீக்குவது என்று வகுப்பு எடுத்தார்கள். ஆனால், “உனக்கு புடிச்சிருக்கா?” என்று யாரும் கேட்கவில்லை. தம்பி தங்கை கூட, “அக்கா! பழைய மாமாவை விட புது மாமா தான் எனக்குப் புடிச்சிருக்கு. அவர் உன்னை நன்றாக வச்சுக்குவார்.. உன்னைப் பார்க்கும் போதே பாசமா பாக்குறார்..” என்றெல்லாம் சொன்னார்களே தவிர தன் மனதைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை என்பது அவளுடைய சுயமரியாதையைத் தீண்டிய விஷயமாக இருந்தது.
ஒரு முறை தவறு செய்து விட்டேன் என்பதற்காக, அதற்குத் தண்டனையாக இந்த சமூகம் என்ன சொன்னாலும் அதன்படி செய்ய வேண்டுமா? என்ன நியாயம் இது என்று பொருமினாள் அவளுள் இருந்த பெண்ணியவாதி. இப்போது அந்த மனக்குறை முற்றிலுமாக நீங்கியது. தான் கேட்கக் கேட்க, சித்ராவின் முகத்தில் ஒரு நிம்மதியும் சந்தோஷமாக வருவதையும் பூபதியும் பார்த்தான்.
“முன்னாடியே கேட்டிருக்கணுமோ?” என்றான்.
இல்லை என்று சொல்ல வந்துவிட்டு, ஆம் என்று தலையாட்டினாள் சித்ரா. பின் பெரிய பெருமூச்சு விட்டவள், “எனக்கு பிடிச்சிருக்கு தான். அதுவும் போக வேற ஆப்ஷனும் எனக்கு இல்லேல்ல.. ஆனா என்னைக் கேட்காமலேயே எல்லாரும் முடிவு பண்றப்ப, ஏன் நம்ம கிட்ட கருத்து கேட்கல, பழைய தப்புக்கான தண்டனையா இது அப்படின்னு தோணுச்சு தெரியுமா?” என்றாள். கண்களில் நீர் நிறைந்தது.
பூபதி அவளைத் தேற்ற வேண்டும் என்று கைக்குட்டையைத் தேடினான், கிடைக்கவில்லை. அருகில் இருந்த கொடியில் தொங்கிக் கொண்டிருந்த துண்டை எடுத்து அவளிடம் நீட்டினான். அதை வாங்கி கண்ணைத் துடைத்த பின்னர் தான் அதை கவனித்த சித்ரா, “என்னது இது?” என்றாள் சிரிப்புடன். கண்களில் நீர் மின்ன கன்னத்தில் கண்ணீர் துடைத்த தடம் தெரிய, அவள் சிரித்தது பூபதியின் மனதைக் கொள்ளை கொண்டது.
“உங்க துண்டு தானே? இல்லையா? வேற யார் துண்டையும் மாத்திக் கொடுத்துட்டேனா? மத்தவங்க துண்டை யூஸ் பண்ண மாட்டீங்களா?” என்றான் பூபதி அடுக்கடுக்காக.
“ஐயோ கேள்வியா கேட்டு கொல்றீங்களே பதில் எதிர்பார்க்க மாட்டீங்களா.. அதெல்லாம் இல்ல.. என்னோட துண்டு தான்” என்று சித்ரா சொல்ல,
“அப்போ உனக்கு மனப்பூர்வமான சம்மதம் எடுத்துக்கலாமா?”
“எல்லாரும் ரோஜாப் பூ குடுத்து கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேப்பாங்க.. நீங்க என்ன அழுக்குத் துண்டைக் குடுத்துட்டுக் கேக்குறீங்க?” சித்ராவும் அவனுக்கு ஈடாகப் பேச முயன்றாள்.
இடது கையால் வாயை மூடிக்கொண்டான் பூபதி. மறுகையால் நான் பேசமாட்டேன், நீயே பேசு என்று சைகை செய்தான்.
“சம்மதம் தான். மனப்பூர்வமான சம்மதமா, பிடிச்சிருக்கா அப்படிங்கறதைக் கொஞ்ச நாள் கழிச்சு சொல்றேன். பிடிக்காமப் போகாதுன்னு நினைக்கிறேன்” என்றாள் சித்ரா.
“டேய் பூபதி, இருந்தாலும் உனக்கு ஜாதகத்துல ஏதோ ஒரு இடத்துல இடிக்குதுடா.. இத்தனை வயசுக்கு மேலயும் ஒரு பொண்ணு வந்து நேரா உன்னைப் பிடிக்குதுன்னு வாயார சொல்ல மாட்டேங்குது பாத்தியா? அதுவும் அடுத்த வாரம் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு..” என்று அவனையே நோக்கி ஒரு விரலை நீட்டிச் சொல்ல,
“பொய் சொல்லாதீங்க, எனக்குத் தெரியும், இதுவரைக்கும் மூணு நாலு பொண்ணுங்க உங்ககிட்ட புடிச்சிருக்குன்னு சொல்லி இருக்காங்க.. கடலை போட ட்ரை பண்ணி இருக்காங்க” என்றாள் சித்ரா.
“அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”
“உங்க தங்கச்சிங்க தான் சொன்னாங்க”
“என்கிட்ட பேசாம அவங்க கிட்ட தொடர்ந்து பேசுறியா நீ?” திடீரென்று ஒருமைக்கு தாவியிருந்தான் பூபதி. அந்த வித்தியாசம் சித்ராவுக்கும் சட்டென்று பிடிபட்டு விட்டது.
“என்ன திடீர்னு நீன்னு சொல்றீங்க?”
“உன்னை விட ஏழு வயசு பெரியவன் நான். கல்யாணம் பேசியாச்சு. இப்பவும் நீங்கன்னு சொன்னா வெளியே தப்பா நினைக்க மாட்டாங்க? என் மனசுக்குள்ள உன்கிட்ட நீ, வா, போன்னு தான் உன்னைப் பத்திப் பேசுறேன். மனசுல ஒண்ணு வச்சு வெளில ஒண்ணு பேசற பழக்கம் எனக்குக் கிடையாது”
“மறுபடியும் பொய் சொல்றீங்க”
“எப்ப பொய் சொன்னேன்?”
“என்னை பார்த்தவுடனே பிடிச்சிருச்சு, கட்டினா என்னைத்தான் கட்டிக்குவேன்னு மனசுல என்னை வச்சுட்டு சுத்தியிருக்கீங்க. ஆனா அதைச் சொல்லாம மறைச்சுட்டு என்கிட்ட வேற என்னல்லாம் பேசி இருக்கீங்க?”
“அது வேற இது வேற.. அப்பவே நான் கேட்டிருந்தா நீ ஒத்துகிட்டு இருப்பியா?”
சற்று யோசித்து ஒத்துக் கொண்டிருந்திருக்க மாட்டேன் என்று தலையை அசைத்தாள். ‘கையில் விவாகரத்து ஆணை வந்தால் தானே நான் ஒற்றைப் பெண், single woman? அதுவரைக்கும் இன்னொருவனின் மனைவி தானே? எப்படி ஏற்றுக் கொண்டிருப்பேன்?’
“இப்ப நீ கூடத் தான் என்னை மனசுல நினைக்கிற, என்னை ரொம்ப பிடிச்சிருக்கு.. அதை வெளியே சொல்றியா என்ன? அப்புறம் சொல்றேன், அப்புறம் சொல்றேன்ங்குற.. சாக்குப் போக்கு தானே சொல்ற?”
கண்டுபிடித்து விட்டானே என்ற நினைப்பில் வெட்கம் வந்தது. நாக்கைக் கடித்துக் கொண்டாள் சித்ரா. இன்னும் திருமணம் தொடர்பான வேறு சில விஷயங்களைப் பேசிவிட்டு இருவரும் வெளியில் வந்த போது
மணிமேகலை சித்ராவின் தங்கையிடம், “எப்படியாவது நல்லா படிச்சு முடிச்சு ஒரு வேலைக்குப் போயிரு டி.. என்னை எல்லாம் காலேஜ்ல முதல் வருஷம் சேர்த்து விட்டாங்க.. அப்புறம் மாப்பிள்ளை வந்துச்சுன்னு சொல்லி கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க. அந்த மாப்பிள்ளையும் விட்ட படிப்பை தொடர்ந்து முடி அப்படின்னு தான் சொன்னாரு.. நான் சோம்பேறித்தனத்தில் விட்டுட்டேன்”
“மணி அக்கா.. எங்க சின்னக்காவுக்கு கேம்பஸ் இன்டர்வியூல வேலையே கிடைச்சிருச்சு.. அவதான் காலேஜ்ல முதல் மார்க். அவகிட்ட போய் சொல்றீங்களே?” என்று சித்ராவின் தம்பி கூற,
“இது அடுத்த குட் நியூஸா இருக்கே.. வாழ்த்துக்கள்! அப்ப உனக்கும் சட்டுபுட்டுன்னு மாப்பிள்ளை பார்த்துட வேண்டியது தான்” என்று மணிமேகலை சொல்ல,
“அக்கா அவளும் என்னை மாதிரி நல்ல சொந்த காலில் நின்னு, உலக அனுபவமும் படிச்ச பிறகு தான் கல்யாணம்” என்றாள் சித்ரா அழுத்தம் திருத்தமாக.
“சரிங்க முதலாளியம்மா, நீங்க சொன்னா சரிதான்!” கலகலவென்று சிரித்தாள் மணிமேகலை.
நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இருந்தனர். சுப்பம்மாள் மனதில் சித்ரா மீதான உரிமையுணர்வு முளை விட்டிருப்பதை சத்தியபாமா உணர்ந்திருந்தார். அதனால் சுந்பம்மாளின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தது. மிகச்சில விருந்தானர்களே வந்திருந்தனர். அங்கு வேறு யாரோ இருப்பது போல சத்தியபாமாவுக்கு உள்ளுணர்வு இருந்து கொண்டே இருந்தது. வந்தவர்கள் ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்தார்.
சுப்பம்மாளின் உறவினர்கள், பூபதிக்குத் தெரிந்தவர்கள் என்று சுமார் இருபது பேர் வந்திருப்பார்கள். சத்தியபாமாவுக்குப் பெரிதாக உறவு என்று ஒருவரும் இல்லை. அவரது வீட்டின் அருகில் வசிக்கும், சித்ராவின் மேலும் பிரியம் வைத்திருந்த ஒரு சிலரை அழைத்திருந்தார். சத்தியபாமாவின் மேல் பலருக்கும் நல்ல மதிப்பு இருந்தது. இருந்தாலும் ஒருவரின் வீழ்ச்சியில் ஆறுதல் அடைபவர்கள் தானே இங்கே நிறைய பேர். முகுந்தனின் செயல்பாடுகளால் அந்தக் குடும்பத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சியில் மகிழ்ந்திருந்தவர்களால், சித்ராவை அரவணைத்து, தன் வீட்டிலேயே சிறிய நிறுவனம் தொடங்கிக் கொடுத்த சத்தியபாமாவின் பெருந்தன்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனதில் கசப்போடே சுற்றிக் கொண்டிருந்தனர். அதனை உணர்ந்த சத்தியபாமாவுக்கு அவர்களை அழைக்க மனம் வரவில்லை.
தன் தூரத்து உறவினர்களில் ஒருவனும் அத்தை, அத்தை என்று பாசமாக சுற்றி வருபவனுமான பரமுவை மட்டும் அழைத்திருந்தார். பரமு முகுந்தனுக்கும் நண்பன். இவன் தான் முதன் முதலில் சித்ராவும் முகுந்தனும் திருமணம் செய்து கொள்ளப் போகும் தகவலை சத்தியபாமாவிடம் சொல்லியவன். அனைவரும் கலகலப்பாகப் பேசி கொண்டிருக்க, பரமு மட்டும் இறுக்கமாக அமர்ந்திருப்பதைப் போல் சத்தியபாமாவுக்குத் தோன்றியது
மெல்ல எழுந்து துணைக்கு இன்னொரு பெண்ணை அழைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்காக சிற்றுண்டி கொடுத்துக் கொண்டே வர, பரமுவின் அருகில் செல்லும் போது மட்டும் அவனுக்குள் ஒரு சின்ன சலனம். அவனையே கூர்ந்து கவனித்தார். அவனுடைய சட்டைப் பையில் இருந்த கேமரா அங்கு நடப்பதைப் படம்பிடித்துக் கொண்டிருந்தது. இன்னும் கூர்ந்து கவனித்தார்.
சத்தியமா தன்னை உற்றுப்பார்ப்பதைப் பார்த்து விட்டான் பரமு. தன் அலைபேசியை எடுத்து அதைப் பிறர் கவனம் தவறாதவாறு அணைத்து வைத்தான். திரையில் ஒஙமுகம் தெரிந்தது. ஒரு வினாடிக்கும் குறைவாக இருந்தாலும், சத்தியபாமா தான் பெற்று, வளர்த்த மகனின் முகத்தைக் கண்டுகொண்டு விட்டார். இங்கே நடக்கும் நிகழ்வுகளை முகுந்தனுக்கு ஒளிபரப்புகிறான் என்பது புரிந்தது.
வாசலுக்குச் சென்று, “பரமு.. இங்கே வாப்பா.. டீ காலி ஆயிடுச்சு.. எல்லாருக்கும் இன்னொரு ரவுண்டு கொடுக்கலாம்.. போய் வாங்கிட்டு வாப்பா” என்று அவனை சத்தமாக அழைத்தார்.
அருகில் வந்தவனிடம், “என்ன, என் மகன் கூட இன்னும் பேசிட்டு தான் இருக்கியா? இங்க நடக்கிறது எல்லாம் அவனுக்கு ஃபோன்ல போட்டு காட்டிட்டு இருக்கியா?” என்று நேரடியாகவே கேட்டார்.
“ம்.. மாறி மாறி கேட்டுகிட்டே இருந்தான்.. மறுக்க முடியலை”
“அதான் ஏதோ ஹைதராபாத்ல இருக்கேன். எனக்கு ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க.. அப்படி இப்படின்னானே.. இப்ப டைவர்ஸ் வேற ஆயிடுச்சு.. இனிமேல் அவனுக்கு இங்கே உரிமையே இல்ல.. அது தெரியுமா தெரியாதா உன் ஃபிரண்டுக்கு?”
“அத்தை.. உங்க மகன்கிறதுனால தான் அவன்கிட்ட பழகுறேன்.. பழகின பாவத்திற்காக இதோ இப்பவும் அவன் என்ன பண்றான், ஏது பண்றான்னு தெரிஞ்சுக்கறதுக்காகவே பேசுவேன்.. பெரிய பிரியம்லாம் எனக்கு இல்ல.. இன்னமும் அவன் முழுசா என் கிட்ட எதுவும் சொல்லல.. ஆனா அங்கேயும் போய் ஏதோ சிக்கல்ல தான் மாட்டிருக்கான்.. ஊருக்கு வந்துடவா, அம்மா சேத்துக்குவாங்களா, சித்ரா எங்கே இருக்கான்னு கேட்டு இப்ப ரெண்டு வாரமா ஒரே டார்ச்சர்.. அதான் உன்னை விட்டு விலகி அவங்க எவ்வளவோ தூரம் வந்துட்டாங்க அப்படின்னு சொல்றதுக்காக இப்போ இதெல்லாம் போட்டுக் காட்டுறேன். சித்ரா அவ்வளவு சந்தோஷமா இருக்கிறதை கண்ணால பார்த்துட்டான். அருமையான வாழ்க்கையைத் தவற விட்டுட்டோமேன்னு அவனுக்கும் புரிஞ்சிருக்கும்.. அருமை பெருமையா பூபதி அவங்களை வச்சுக்கப் போறான் அதுவும் புரிஞ்சிருக்கும்.. நல்லது தான் நடக்கும் அத்தை” என்றான் பரமு.
அவன் சொன்னது ஏற்புடையதாகத் தான் இருந்தது. இருந்தாலும் பின்னாளில் செயல்படுத்த எண்ணியிருந்ததை இப்பொழுதே செயல்படுத்தி விட வேண்டியது தான் என்று தன் மனதில் உறுதி செய்து கொண்டார் சத்தியபாமா. அன்றும் அவரது தூக்கம் பறிபோனது.
தொடரும்.
Author: Sungudi
Article Title: உருகியோடும் 12 (PRE FINAL)
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உருகியோடும் 12 (PRE FINAL)
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.