Dhakai
Member
- Joined
- Mar 23, 2025
- Messages
- 69
அந்தக் குளம்பிக் கடையின் கண்ணாடிச் சுவற்றின் வழியாக வெளியே இருக்கும் வாகன நெரிசல் கொண்ட உலகைப் பார்த்தவளாய் மெதுவாய் ரசித்து ருசித்தவாறு இஞ்சித் தேநீரைப் பருகிக் கொண்டிருந்த சுந்தரலட்சுமியின் மனதை ஆட்கொண்டிருந்தது பேரமைதி.
கண்களை மூடியவாறு தேநீருடன் உள்ளிறங்கும் இஞ்சியின் காரத்தை உமிழ்நீரில் ருசித்தவளாய் லயித்து ரசித்துப் பருகியவளைக் கலைத்தது அவளின் கைப்பேசி அழைப்பு.
"ம்ப்ச்" கடுப்புடன் உச்சரித்தவளாய் தேநீரின் மாய உலகை விட்டு வெளி வந்து கைப்பேசியில் யார் அழைப்பது என்று பார்க்காமலே அழைப்பைத் துண்டித்து விட்டு மீண்டுமாய்த் தேநீருக்குள் மூழ்கப் போக, மீண்டுமாய் ஒலித்தது கைப்பேசி.
'அட யாருடா அது' என்று மனதோடு புலம்பியவளாய் கைப்பேசியை எடுத்துப் பார்த்தவள் அதில் தெரிந்த அன்னையின் எண்ணைக் கண்டு அழைப்பையேற்று, "ஏன்மா ஒரு டீயை நிம்மதியா குடிக்க விட மாட்டியா நீ" எனக் கேட்டாள்.
"அடியேய் காபி ஷாப்க்கு மாப்பிள்ளை பார்க்க போனீயா இல்ல டீயை ரசிச்சுக் குடிக்கப் போனீயா?" எனக் கேட்டிருந்தார் செல்வராணி.
"எந்த டைமா இருந்தாலும் டீ குடிச்சிட்டு இருக்கும் போது என்னை டிஸ்டர்ப் செஞ்சா எனக்குப் பிடிக்காதுனு உனக்குத் தெரியும்லமா" என்று கடுப்புடன் இவள் கேட்க,
"உன்னை யாரு இப்ப டீ குடிக்கச் சொன்னதுனு தானே நான் கேட்கிறேன். மாப்பிள்ளையைப் பார்த்து பேசுடினு அனுப்பி வச்சா டீயை குடிச்சிட்டு இருக்காளாம்! கேட்டீங்களா கதைய" என்று அவளிடம் பேசியவாறு கணவரிடமும் புகார் வாசித்தார்.
"அந்த மாப்ள எனக்கு முன்னாடியே இங்கே வந்திருந்தா நான் ஏன் இப்படி டீ குடிச்சிட்டு உட்கார்ந்துட்டு இருக்கப் போறேன். அந்தாளுக்கே அவர் கல்யாணத்துல பெரிசா ஈடுபாடு இல்லைனும் போது எனக்கு என்ன வந்துச்சு? நான் டீயைக் குடிச்சிட்டுக் கிளம்புறேன்" உதட்டைச் சுழித்தவளாய் உரைத்த நொடி அவள் முன்பு வந்து நின்றார் தரகர் பாலமுருகன்.
பாலமுருகன் இந்தச் சம்பந்தத்தைப் பேசி ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் இரு தரப்பினரிடமிருந்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் போக, அவரே சென்று மீண்டுமாய்ச் சுந்தரலட்சுமியின் தந்தையிடம் பேசி இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
செந்திலின் மாமாவிற்குத் தெரியாமல் அவனை வரவழைத்துப் பெண்ணைச் சந்திக்க வைத்து விட வேண்டுமென எண்ணியவராய், அரை மணி நேரம் முன்பாகச் செந்திலுக்கு அழைத்தவர் உடனே தாம்பரத்தில் இருக்கும் குளம்பிக் கடைக்குத் தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்திருந்தார். அச்சமயம் வேறு அவசர வேலையில் இருந்தவன் ஒரு மணி நேரத்தில் வருவதாக உரைத்திருந்தான். ஆகத் தான் பெண் பார்க்கப் போகிறோம் என்பதை அறியாமலேயே இக்கடை நோக்கிப் பயணித்திருந்தான் செந்தில்.
"ஒரு அஞ்சு நிமிஷம் இருமா. செந்தில் வந்துடுவாரு" என்று பாலமுருகன் உரைத்ததைக் கேட்டு கேள்வியுடன் அவரைப் பார்த்தவளாய், "நீங்க யாரு?" எனக் கேட்டாள் சுந்தரலட்சுமி.
கைப்பேசியில் மறுமுனையில் இருந்த செல்வராணி, "என்னடி பையன் வந்துட்டாரா?" எனக் கேட்டார்.
"நான் புரோக்கர் மா! செந்தில் பத்து நிமிஷத்துல வந்துடுவாரு" என்று பாலமுருகன் சுந்தரலட்சுமியிடம் கூற,
அதைக் கேட்டவளாய் கைப்பேசி இணைப்பில் இருந்த தாயிடம், "இல்லமா தரகர் தான் வந்திருக்காரு! இன்னும் பத்து நிமிஷத்துல செந்தில் வந்துடுவாராம். ஆனா அவ்ளோ நேரமெல்லாம் என்னால வெயிட்...." செய்ய முடியாது என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்,
"சரி அப்ப நீ இருந்து பார்த்துட்டு வாடி" என்றவராய் அவள் பேச்சைத் துண்டித்து விட்டு இணைப்பையும் துண்டித்தார் செல்வராணி.
"ம்மாஆஆஆ" என்று பல்லைக் கடித்தவளாய் கைப்பேசியைப் பார்த்து உரைத்தவள் எதிரில் இருந்த தரகரைப் பார்த்தாள்.
"உட்காருங்க! என்ன சாப்பிடுறீங்க?" என்று சம்பிரதாயமாகக் கேட்டும் வைத்தாள்.
"இல்லமா எதுவும் வேண்டாம்" என்றவர்,
"உங்களுக்கு இந்தப் பையனைப் பார்க்கிறதுல விருப்பமில்லையாமா" எனக் கேட்டார்.
தாயிடம் அவள் பேசிய விதத்தை வைத்து யூகித்தவராய் இதனைக் கேட்டிருந்தார் பாலமுருகன்.
எதற்காக இவர் இதைக் கேட்கிறார் என்று அவரின் முகப்பாவங்களை ஆராய்ந்தவளாய், "ஆமானு சொன்னா நீங்க என்ன செய்வீங்க? செந்திலை வர வேண்டாம்னு சொல்லிடுவீங்களா?" அழுத்தமான பார்வையுடன் கேட்டிருந்தாள்.
"ஏன் விருப்பமில்லைனு தெரிஞ்சிக்கலாமா? சொல்ல விருப்பமிருந்தா சொல்லுமா" அவரும் விடாகண்டனாய்க் கேட்டிருந்தார்.
"நான் எதிர்பார்க்கிற வகைல அவரோட புரொபைல் இல்ல" என்று முடித்துக் கொண்டாள் சுந்தரலட்சுமி.
அவள் கூற வருவதன் பொருள் அவருக்கு விளங்கவில்லை ஆயினும் தனக்கு இணையானவனாய் அவன் இல்லை எனும் பொருளில் அவள் உரைக்கிறாளோ என்று யோசித்தவராய் அமைதிக் காத்தார் பாலமுருகன்.
அச்சமயம் அவரின் கைப்பேசி ஒலிக்க, காதில் ப்ளூடூத் ஹெட்செட்டில் பேசியவாறு அந்தக் கடையின் உள்ளே வந்தான் செந்தில்.
கைப்பேசி அழைப்பையேற்று, தான் அமர்ந்திருக்கும் இருக்கையைக் குறிப்பிட்டு அங்கே அவனை வரச் சொன்னார் பாலமுருகன். அந்த இருக்கையை நோக்கி அவனது கால்கள் செல்ல, கண்கள் அவளைக் கண்டு கொண்ட நொடி, கால்கள் அப்படியே ஸ்தம்பித்து நின்றன.
அன்றொரு நாள் கனவில் கண்டப் பிறகு அவளை மறந்தே விட்டிருந்தவனுக்கு இன்று நேரில் கண்டதும் பேரதிர்ச்சி.
'இந்தப் பொண்ணு எப்படி இங்கே?' என்று சிந்தித்தவனாய் அரை டவுசரும் அதர பழசான டீசர்ட்டுமாய் இருக்கும் தனது உடையைப் பார்த்து சற்று சங்கோஜப்பட்டவனாய் அவர்களை நோக்கிச் சென்றவனின் கைகள் தனது கலைந்த தலைமுடியைச் சீராக்கி, கைக்குட்டையைக் கொண்டு வியர்த்திருந்த முகத்தைத் துடைத்தன.
இவனைக் கண்டதும் எழுந்து நின்ற பாலமுருகனைப் பார்த்தவளாய் அவனை நோக்கித் திரும்பியவள், தன்னைச் சீர்ப்படுத்திய அவனின் செயலில் மென்னகைப் புரிந்தாள்.
"அட நேர்ல ஆளே பார்க்க வேற மாதிரி இருக்காரே" மனதோடு நினைத்துக் கொண்டாள்.
"செந்திலு! இந்தப் பொண்ணு வீட்டுல உன்னை நேர்ல பார்க்கனும்னு சொன்னாங்க. அதான்" என்று அவர் இழுக்கவும்,
"அதை முன்னாடியே சொல்ல மாட்டீங்களா? நான் உங்களைப் பார்க்க வரதா நினைச்சு கஸ்டமர் வீட்டுல அரிசி மூட்டையை இறக்கி வச்சிட்டு அழுக்கு மூட்டை மாதிரி வந்து நிக்கிறேன்" பற்களைக் கடித்தவாறு கோபத்துடன் அவருக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்தவனின் குரல் அவளின் செவியையும் தீண்டி இதழில் புன்னகையைத் தருவித்திருந்தது.
அவனிடமிருந்து தப்பிக்க, "சரி நீங்க இரண்டு பேரும் பேசிட்டு இருங்க" என்றவராய் அங்கிருந்து அவர் விலகிச் செல்ல, படபடத்த நெஞ்சத்துடன் அவளைப் பார்த்தான் செந்தில்.
கருப்புப் பேண்ட் வெள்ளை சட்டை கருப்புக் கோட், தோள் வரை விரிந்த கூந்தல், அயர்வுடன் சோர்ந்திருந்த கண்கள், லிப்ஸ்டிக் கரைந்து காய்ந்திருந்த இதழ்கள் என அவளைப் பார்த்தவன், "ஆபிஸ்லருந்து அப்படியே வந்துட்டீங்களா?" இயல்பாய் பேச்சைத் தொடங்கியவனாய் அவள் எதிரே அமர்ந்தான்.
தன்னை ஆர்வமுடன் அலசும் அவனின் பார்வையைக் கவனித்தவளாய், ஆமென அவள் தலையசைக்க, "சாரி உங்களைப் பார்க்க வரேன்னு தெரியாது! இல்லனா.." என்றவன் முடிக்கும் முன்பே,
"தெரிஞ்சிருந்தா வேஷ்டி சட்டை போட்டுக்கிட்டு நெத்தில பட்டை கழுத்துல கொட்டைனு ஃபார்மலா வந்திருப்பீங்களா?" எனப் புன்னகையுடன் கேட்டிருந்தாள்.
அவளின் கேலி முதலில் புரியாது புருவத்தை நெறித்தவன், பெண் பார்க்க தான் அனுப்பிய படத்தைத் தான் அவள் கேலி செய்கிறாள் என்று புரிந்த நொடி அவளை முறைத்தான்.
அவனின் முறைப்பில், "சாரி! சாரி! நான் சும்மா விளையாட்டா தான் சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க" 'முதல் முறையாகப் பார்க்கிறவங்கக்கிட்ட இப்படித் தான் பேசி வைப்பியா?' என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.
'எதுக்காக இந்தப் பாலாண்ணா என்னைக் கேட்காம இப்படிப் பொண்ணு பார்க்க ஏற்பாடு செஞ்சாரு' என்று அவரை மனதிற்குள் திட்டியவனாய் அமைதியாய் அமர்ந்திருந்தான் செந்தில்.
சில நிமிடங்கள் மௌனத்தில் கரைய, "எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லை" பேச்சைத் தொடங்கினாள்.
"சரி அதைப் புரோக்கர்கிட்ட சொல்ல வேண்டியது தானே! எதுக்காக என்னை நேர்ல கூப்பிட்டு சொல்றீங்க? என்னை மாதிரி பசங்களைக் கூப்பிட்டு இன்சல்ட் செய்றதை பொழுதுபோக்கா செஞ்சிட்டு இருக்கீங்களா?" எனக் கோபத்துடன் கேட்டிருந்தான்.
அவனின் தன்மானத்தை அவள் சீண்டுவது போல் உணர்ந்தான்.
"என்னைப் பார்த்தா அவ்ளோ சீப் மெண்டாலிட்டி உள்ள பொண்ணா தெரியுதாங்க?" கோபப் பார்வையுடன் அவளும் கேட்க,
பெருமூச்செடுத்துத் தன்னை நிதானப்படுத்தியவனாய், "சரிங்க! சொல்லிட்டீங்கல! நான் வரேன்" என்றவாறு எழுந்து நின்றான் செந்தில்.
இவளும் சற்று நேரத்தில் சமன்பட்டிருக்க, "செந்தில் ஒரு டீ குடிச்சிட்டு போங்க! உட்காருங்க" என்றாள்.
அவன் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டு செல்வது பிடிக்காமல் அவனை அமரப் பணித்தாள்.
அவள் முன்னே ஆறிப் போய்ப் பாதிக் காலியாகியிருந்த டீக்கப்பைப் பார்த்தவனாய் அமர்ந்தான் செந்தில்.
அவளின் பேச்சு அவனுக்குக் கடுப்பைக் கிளப்பினாலும் அவளின் அழகு கண்ணைக் குளிர்வித்தது.
'மொத முறையா ஒரு பொண்ணுக்கிட்ட நேரடியா பேசுற வாய்ப்புக் கிடைச்சிருக்குச் செந்தில். விட்டுடாத' என்று அவனின் மனம் கூக்குரலிட, 'என்னை இன்சல்ட் செய்ற பொண்ணுக்கிட்ட நான் இறங்கிப் போகனுமா' என்று மனதை அடக்கி வைத்தான்.
வெயிட்டரை அழைத்துத் தேநீர் ஆர்டர் கொடுத்தவனாய், "உங்களுக்கு எதுவும் வேணுமா?" என அவளிடம் கேட்டான்.
வேண்டாமென அவள் தலையசைத்தாலும், "இந்த டீ ஆறிப்போச்சே! சூடா இன்னொன்னு குடிங்க. அப்ப தான் இன்னும் தெம்பா என்னை இன்சல்ட் செய்யலாம்" என்றவனாய் இரண்டு டீ ஆர்டர் செய்தவனைக் கோபத்துடன் முறைத்த சுந்தரலட்சுமி, "என்னைப் பார்த்தா எப்படிங்க தெரியுது உங்களுக்கு? காரணமில்லாம யாரையும் காயப்படுத்துறது எனக்குப் பிடிக்காதுங்க. அதான் நானே உடனே சாரி கேட்டுட்டேன்ல. இன்னும் இன்சல்ட் செஞ்சேன்னு குத்திக் காட்டிட்டு இருக்கீங்க" என்று பொரிந்தாள்.
"சரிங்க! சாரிங்க! நான் தான் தப்பா தெரியாம பேசிட்டேன் விடுங்க" அவளை அமைதிப்படுத்த அவன் இறங்கி வர, வந்திருந்த தேநீரை அமைதியாய் பருகியிருந்தாள் அவள்.
கண்களை மூடியவாறு ஆழ்ந்து ரசித்து லயித்து அவள் தேநீர் பருகும் அழகை ரசித்திருந்தான் இவன்.
"டீ ரொம்பப் பிடிக்குமா?" மென்னகையுடன் அவன் கேட்கவும் கண்களைத் திறந்தவளாய்,
"ஆமாங்க டீ குடிக்கிற டைம் என்னை யாரு டிஸ்டர்ப் செஞ்சாலும் பிடிக்காது. கண்ணை மூடி தொண்டைக்குள்ள இறங்குற டீயை ரசிச்சுக் குடிக்கிற சுகம் இருக்கே. எனக்கு இந்த உலகத்துலேயே பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர் டீ குடிக்கிறது தான்ங்க" என்று நிறுத்தினாள்.
அவளைப் பிடித்தது அவனுக்கு. அவள் தனது மனைவியாக வந்தாள் நன்றாகயிருக்கும் என்று தோன்றியது.
"உங்களுக்குப் பொதுவாவே கல்யாணம் செஞ்சிக்கிறதுல விருப்பமில்லையா இல்ல என்னைக் கட்டிக்கிறதுல விருப்பம் இல்லையா?" எனக் கேட்டான்.
கல்யாணத்திற்குரிய தனது எதிர்பார்ப்புகளை அவள் உரைக்க, "அரிசி கடை வச்சிருக்கிறவன் பட்டிக்காட்டானா இருப்பான்னு எப்படி நினைச்சீங்க? நான் எலக்ட்ரிகல்ல டிப்ளமோ படிச்சேன். ஒரு லீடிங் எலக்ட்ரிகல் கம்பெனில இரண்டு மாசம் வேலைப் பார்த்துட்டு, அந்த அடிமை வேலைக்குச் சொந்த தொழில் செய்றது எவ்வளவோ மேல்னு இதுக்கு வந்தேன். எனக்கு இங்கிலீஷ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் எல்லாம் தெரியும். பிசினஸ்ஸை டெவலப் செய்யக் கத்துக்கிட்டேன். ஒரு ஆபிஸ்ல வேலை செய்றவனை விடச் சொந்த தொழில் செய்றவனுக்குத் தான்ங்க ஆளுமைத் திறன் அதிகமா இருக்கும். அக்கவுண்ட்ஸ், மேனேஜ்மெண்ட், கஸ்டமர் சர்வீஸ்னு எல்லாப் பக்கமும் நாலட்ஜ் இருந்தா மட்டும் தான் ஒருத்தனால ஒரு பிசினஸை வெற்றிகரமாக நடத்த முடியும். அதனால கடை வச்சிருக்கப் பையன் வேண்டாம்னு நினைக்காம, திறமையா பிசினஸ் செய்ற பையனா, அவனோட மன்த்லி டர்ன் ஓவர் எவ்ளோனுலாம் விசாரிச்சிட்டு வேணுமா வேண்டாமானு முடிவு சொல்லுங்க. இதை நான் எனக்காகச் சொல்லலை. கடை வச்சிருக்க மாப்பிள்ளையே வேண்டாம்னு நீங்க சொன்னதுனால சொல்றேன்" என்றவனாய் தேநீரைப் பருகி முடித்தான்.
'ஸ்மார்ட்' என்று தனக்குள்ளேயே அவனை மெச்சிக் கொண்டாள்.
அவள் ஏதும் பேசாது யோசனையுடன் தேநீர் அருந்துவதைப் பார்த்தவாறு எழுந்தவன், "சரிங்க நான் கிளம்புறேன்" என்று விலகப் போக,
தனது கையிலிருந்த தேநீரை மேஜை மீது வைத்தவளாய், "உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?" எனக் கேட்டாள்.
அவளின் கேள்வியில் தடுமாறித் தான் போனான் அவன்.
"உண்மையைச் சொல்லவா? பொய் சொல்லவா?" சிரித்தவாறு அவன் கேட்க,
"உங்களுக்கு என்ன சொல்லனும்னு தோணுதோ சொல்லுங்க" என்றாள்.
இருக்கையில் அமர்ந்து அவளைப் பார்த்தவன், "பிடிச்சிருக்குனு சொன்னா என்னைக் கட்டிக்கப் போறீங்களா என்ன?" அழுத்தமான பார்வையுடன் கேட்டிருந்தான்.
"ஹ்ம்ம் ஒரு வேளை நான் மனசு மாறி கட்டிக்கிறேன்னு சொன்னா உங்க விருப்பத்தைத் தெரிஞ்சிக்கத் தான் கேட்டேன்" என்றவள் சொன்னதும் இவனது கண்கள் மின்ன,
"உங்க முடிவை ரீகன்சிடர் செய்யலாம்னு தோணுதா?" எனக் கேட்டான்.
ஆமெனத் தலையசைத்தவளாய் புன்னகைத்தவள், "யு ஆர் ஸ்மார்ட். ரீகன்சிடர் செய்ய வச்சிட்டீங்க. நான் வீட்டுல பேசிட்டு சொல்றேன் செந்தில்" என்றவளாய் அவள் எழுந்து கொள்ள, புன்னகையுடன் அவனும் எழுந்தான்.
அடுத்து வந்த நாள்களில் இவளைத் தான் மணம் புரிவேன் என முதல் முறையாக மாமனை எதிர்த்து முடிவெடுத்திருந்தான் செந்தில்.
கண்களை மூடியவாறு தேநீருடன் உள்ளிறங்கும் இஞ்சியின் காரத்தை உமிழ்நீரில் ருசித்தவளாய் லயித்து ரசித்துப் பருகியவளைக் கலைத்தது அவளின் கைப்பேசி அழைப்பு.
"ம்ப்ச்" கடுப்புடன் உச்சரித்தவளாய் தேநீரின் மாய உலகை விட்டு வெளி வந்து கைப்பேசியில் யார் அழைப்பது என்று பார்க்காமலே அழைப்பைத் துண்டித்து விட்டு மீண்டுமாய்த் தேநீருக்குள் மூழ்கப் போக, மீண்டுமாய் ஒலித்தது கைப்பேசி.
'அட யாருடா அது' என்று மனதோடு புலம்பியவளாய் கைப்பேசியை எடுத்துப் பார்த்தவள் அதில் தெரிந்த அன்னையின் எண்ணைக் கண்டு அழைப்பையேற்று, "ஏன்மா ஒரு டீயை நிம்மதியா குடிக்க விட மாட்டியா நீ" எனக் கேட்டாள்.
"அடியேய் காபி ஷாப்க்கு மாப்பிள்ளை பார்க்க போனீயா இல்ல டீயை ரசிச்சுக் குடிக்கப் போனீயா?" எனக் கேட்டிருந்தார் செல்வராணி.
"எந்த டைமா இருந்தாலும் டீ குடிச்சிட்டு இருக்கும் போது என்னை டிஸ்டர்ப் செஞ்சா எனக்குப் பிடிக்காதுனு உனக்குத் தெரியும்லமா" என்று கடுப்புடன் இவள் கேட்க,
"உன்னை யாரு இப்ப டீ குடிக்கச் சொன்னதுனு தானே நான் கேட்கிறேன். மாப்பிள்ளையைப் பார்த்து பேசுடினு அனுப்பி வச்சா டீயை குடிச்சிட்டு இருக்காளாம்! கேட்டீங்களா கதைய" என்று அவளிடம் பேசியவாறு கணவரிடமும் புகார் வாசித்தார்.
"அந்த மாப்ள எனக்கு முன்னாடியே இங்கே வந்திருந்தா நான் ஏன் இப்படி டீ குடிச்சிட்டு உட்கார்ந்துட்டு இருக்கப் போறேன். அந்தாளுக்கே அவர் கல்யாணத்துல பெரிசா ஈடுபாடு இல்லைனும் போது எனக்கு என்ன வந்துச்சு? நான் டீயைக் குடிச்சிட்டுக் கிளம்புறேன்" உதட்டைச் சுழித்தவளாய் உரைத்த நொடி அவள் முன்பு வந்து நின்றார் தரகர் பாலமுருகன்.
பாலமுருகன் இந்தச் சம்பந்தத்தைப் பேசி ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் இரு தரப்பினரிடமிருந்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் போக, அவரே சென்று மீண்டுமாய்ச் சுந்தரலட்சுமியின் தந்தையிடம் பேசி இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
செந்திலின் மாமாவிற்குத் தெரியாமல் அவனை வரவழைத்துப் பெண்ணைச் சந்திக்க வைத்து விட வேண்டுமென எண்ணியவராய், அரை மணி நேரம் முன்பாகச் செந்திலுக்கு அழைத்தவர் உடனே தாம்பரத்தில் இருக்கும் குளம்பிக் கடைக்குத் தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்திருந்தார். அச்சமயம் வேறு அவசர வேலையில் இருந்தவன் ஒரு மணி நேரத்தில் வருவதாக உரைத்திருந்தான். ஆகத் தான் பெண் பார்க்கப் போகிறோம் என்பதை அறியாமலேயே இக்கடை நோக்கிப் பயணித்திருந்தான் செந்தில்.
"ஒரு அஞ்சு நிமிஷம் இருமா. செந்தில் வந்துடுவாரு" என்று பாலமுருகன் உரைத்ததைக் கேட்டு கேள்வியுடன் அவரைப் பார்த்தவளாய், "நீங்க யாரு?" எனக் கேட்டாள் சுந்தரலட்சுமி.
கைப்பேசியில் மறுமுனையில் இருந்த செல்வராணி, "என்னடி பையன் வந்துட்டாரா?" எனக் கேட்டார்.
"நான் புரோக்கர் மா! செந்தில் பத்து நிமிஷத்துல வந்துடுவாரு" என்று பாலமுருகன் சுந்தரலட்சுமியிடம் கூற,
அதைக் கேட்டவளாய் கைப்பேசி இணைப்பில் இருந்த தாயிடம், "இல்லமா தரகர் தான் வந்திருக்காரு! இன்னும் பத்து நிமிஷத்துல செந்தில் வந்துடுவாராம். ஆனா அவ்ளோ நேரமெல்லாம் என்னால வெயிட்...." செய்ய முடியாது என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்,
"சரி அப்ப நீ இருந்து பார்த்துட்டு வாடி" என்றவராய் அவள் பேச்சைத் துண்டித்து விட்டு இணைப்பையும் துண்டித்தார் செல்வராணி.
"ம்மாஆஆஆ" என்று பல்லைக் கடித்தவளாய் கைப்பேசியைப் பார்த்து உரைத்தவள் எதிரில் இருந்த தரகரைப் பார்த்தாள்.
"உட்காருங்க! என்ன சாப்பிடுறீங்க?" என்று சம்பிரதாயமாகக் கேட்டும் வைத்தாள்.
"இல்லமா எதுவும் வேண்டாம்" என்றவர்,
"உங்களுக்கு இந்தப் பையனைப் பார்க்கிறதுல விருப்பமில்லையாமா" எனக் கேட்டார்.
தாயிடம் அவள் பேசிய விதத்தை வைத்து யூகித்தவராய் இதனைக் கேட்டிருந்தார் பாலமுருகன்.
எதற்காக இவர் இதைக் கேட்கிறார் என்று அவரின் முகப்பாவங்களை ஆராய்ந்தவளாய், "ஆமானு சொன்னா நீங்க என்ன செய்வீங்க? செந்திலை வர வேண்டாம்னு சொல்லிடுவீங்களா?" அழுத்தமான பார்வையுடன் கேட்டிருந்தாள்.
"ஏன் விருப்பமில்லைனு தெரிஞ்சிக்கலாமா? சொல்ல விருப்பமிருந்தா சொல்லுமா" அவரும் விடாகண்டனாய்க் கேட்டிருந்தார்.
"நான் எதிர்பார்க்கிற வகைல அவரோட புரொபைல் இல்ல" என்று முடித்துக் கொண்டாள் சுந்தரலட்சுமி.
அவள் கூற வருவதன் பொருள் அவருக்கு விளங்கவில்லை ஆயினும் தனக்கு இணையானவனாய் அவன் இல்லை எனும் பொருளில் அவள் உரைக்கிறாளோ என்று யோசித்தவராய் அமைதிக் காத்தார் பாலமுருகன்.
அச்சமயம் அவரின் கைப்பேசி ஒலிக்க, காதில் ப்ளூடூத் ஹெட்செட்டில் பேசியவாறு அந்தக் கடையின் உள்ளே வந்தான் செந்தில்.
கைப்பேசி அழைப்பையேற்று, தான் அமர்ந்திருக்கும் இருக்கையைக் குறிப்பிட்டு அங்கே அவனை வரச் சொன்னார் பாலமுருகன். அந்த இருக்கையை நோக்கி அவனது கால்கள் செல்ல, கண்கள் அவளைக் கண்டு கொண்ட நொடி, கால்கள் அப்படியே ஸ்தம்பித்து நின்றன.
அன்றொரு நாள் கனவில் கண்டப் பிறகு அவளை மறந்தே விட்டிருந்தவனுக்கு இன்று நேரில் கண்டதும் பேரதிர்ச்சி.
'இந்தப் பொண்ணு எப்படி இங்கே?' என்று சிந்தித்தவனாய் அரை டவுசரும் அதர பழசான டீசர்ட்டுமாய் இருக்கும் தனது உடையைப் பார்த்து சற்று சங்கோஜப்பட்டவனாய் அவர்களை நோக்கிச் சென்றவனின் கைகள் தனது கலைந்த தலைமுடியைச் சீராக்கி, கைக்குட்டையைக் கொண்டு வியர்த்திருந்த முகத்தைத் துடைத்தன.
இவனைக் கண்டதும் எழுந்து நின்ற பாலமுருகனைப் பார்த்தவளாய் அவனை நோக்கித் திரும்பியவள், தன்னைச் சீர்ப்படுத்திய அவனின் செயலில் மென்னகைப் புரிந்தாள்.
"அட நேர்ல ஆளே பார்க்க வேற மாதிரி இருக்காரே" மனதோடு நினைத்துக் கொண்டாள்.
"செந்திலு! இந்தப் பொண்ணு வீட்டுல உன்னை நேர்ல பார்க்கனும்னு சொன்னாங்க. அதான்" என்று அவர் இழுக்கவும்,
"அதை முன்னாடியே சொல்ல மாட்டீங்களா? நான் உங்களைப் பார்க்க வரதா நினைச்சு கஸ்டமர் வீட்டுல அரிசி மூட்டையை இறக்கி வச்சிட்டு அழுக்கு மூட்டை மாதிரி வந்து நிக்கிறேன்" பற்களைக் கடித்தவாறு கோபத்துடன் அவருக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்தவனின் குரல் அவளின் செவியையும் தீண்டி இதழில் புன்னகையைத் தருவித்திருந்தது.
அவனிடமிருந்து தப்பிக்க, "சரி நீங்க இரண்டு பேரும் பேசிட்டு இருங்க" என்றவராய் அங்கிருந்து அவர் விலகிச் செல்ல, படபடத்த நெஞ்சத்துடன் அவளைப் பார்த்தான் செந்தில்.
கருப்புப் பேண்ட் வெள்ளை சட்டை கருப்புக் கோட், தோள் வரை விரிந்த கூந்தல், அயர்வுடன் சோர்ந்திருந்த கண்கள், லிப்ஸ்டிக் கரைந்து காய்ந்திருந்த இதழ்கள் என அவளைப் பார்த்தவன், "ஆபிஸ்லருந்து அப்படியே வந்துட்டீங்களா?" இயல்பாய் பேச்சைத் தொடங்கியவனாய் அவள் எதிரே அமர்ந்தான்.
தன்னை ஆர்வமுடன் அலசும் அவனின் பார்வையைக் கவனித்தவளாய், ஆமென அவள் தலையசைக்க, "சாரி உங்களைப் பார்க்க வரேன்னு தெரியாது! இல்லனா.." என்றவன் முடிக்கும் முன்பே,
"தெரிஞ்சிருந்தா வேஷ்டி சட்டை போட்டுக்கிட்டு நெத்தில பட்டை கழுத்துல கொட்டைனு ஃபார்மலா வந்திருப்பீங்களா?" எனப் புன்னகையுடன் கேட்டிருந்தாள்.
அவளின் கேலி முதலில் புரியாது புருவத்தை நெறித்தவன், பெண் பார்க்க தான் அனுப்பிய படத்தைத் தான் அவள் கேலி செய்கிறாள் என்று புரிந்த நொடி அவளை முறைத்தான்.
அவனின் முறைப்பில், "சாரி! சாரி! நான் சும்மா விளையாட்டா தான் சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க" 'முதல் முறையாகப் பார்க்கிறவங்கக்கிட்ட இப்படித் தான் பேசி வைப்பியா?' என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.
'எதுக்காக இந்தப் பாலாண்ணா என்னைக் கேட்காம இப்படிப் பொண்ணு பார்க்க ஏற்பாடு செஞ்சாரு' என்று அவரை மனதிற்குள் திட்டியவனாய் அமைதியாய் அமர்ந்திருந்தான் செந்தில்.
சில நிமிடங்கள் மௌனத்தில் கரைய, "எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லை" பேச்சைத் தொடங்கினாள்.
"சரி அதைப் புரோக்கர்கிட்ட சொல்ல வேண்டியது தானே! எதுக்காக என்னை நேர்ல கூப்பிட்டு சொல்றீங்க? என்னை மாதிரி பசங்களைக் கூப்பிட்டு இன்சல்ட் செய்றதை பொழுதுபோக்கா செஞ்சிட்டு இருக்கீங்களா?" எனக் கோபத்துடன் கேட்டிருந்தான்.
அவனின் தன்மானத்தை அவள் சீண்டுவது போல் உணர்ந்தான்.
"என்னைப் பார்த்தா அவ்ளோ சீப் மெண்டாலிட்டி உள்ள பொண்ணா தெரியுதாங்க?" கோபப் பார்வையுடன் அவளும் கேட்க,
பெருமூச்செடுத்துத் தன்னை நிதானப்படுத்தியவனாய், "சரிங்க! சொல்லிட்டீங்கல! நான் வரேன்" என்றவாறு எழுந்து நின்றான் செந்தில்.
இவளும் சற்று நேரத்தில் சமன்பட்டிருக்க, "செந்தில் ஒரு டீ குடிச்சிட்டு போங்க! உட்காருங்க" என்றாள்.
அவன் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டு செல்வது பிடிக்காமல் அவனை அமரப் பணித்தாள்.
அவள் முன்னே ஆறிப் போய்ப் பாதிக் காலியாகியிருந்த டீக்கப்பைப் பார்த்தவனாய் அமர்ந்தான் செந்தில்.
அவளின் பேச்சு அவனுக்குக் கடுப்பைக் கிளப்பினாலும் அவளின் அழகு கண்ணைக் குளிர்வித்தது.
'மொத முறையா ஒரு பொண்ணுக்கிட்ட நேரடியா பேசுற வாய்ப்புக் கிடைச்சிருக்குச் செந்தில். விட்டுடாத' என்று அவனின் மனம் கூக்குரலிட, 'என்னை இன்சல்ட் செய்ற பொண்ணுக்கிட்ட நான் இறங்கிப் போகனுமா' என்று மனதை அடக்கி வைத்தான்.
வெயிட்டரை அழைத்துத் தேநீர் ஆர்டர் கொடுத்தவனாய், "உங்களுக்கு எதுவும் வேணுமா?" என அவளிடம் கேட்டான்.
வேண்டாமென அவள் தலையசைத்தாலும், "இந்த டீ ஆறிப்போச்சே! சூடா இன்னொன்னு குடிங்க. அப்ப தான் இன்னும் தெம்பா என்னை இன்சல்ட் செய்யலாம்" என்றவனாய் இரண்டு டீ ஆர்டர் செய்தவனைக் கோபத்துடன் முறைத்த சுந்தரலட்சுமி, "என்னைப் பார்த்தா எப்படிங்க தெரியுது உங்களுக்கு? காரணமில்லாம யாரையும் காயப்படுத்துறது எனக்குப் பிடிக்காதுங்க. அதான் நானே உடனே சாரி கேட்டுட்டேன்ல. இன்னும் இன்சல்ட் செஞ்சேன்னு குத்திக் காட்டிட்டு இருக்கீங்க" என்று பொரிந்தாள்.
"சரிங்க! சாரிங்க! நான் தான் தப்பா தெரியாம பேசிட்டேன் விடுங்க" அவளை அமைதிப்படுத்த அவன் இறங்கி வர, வந்திருந்த தேநீரை அமைதியாய் பருகியிருந்தாள் அவள்.
கண்களை மூடியவாறு ஆழ்ந்து ரசித்து லயித்து அவள் தேநீர் பருகும் அழகை ரசித்திருந்தான் இவன்.
"டீ ரொம்பப் பிடிக்குமா?" மென்னகையுடன் அவன் கேட்கவும் கண்களைத் திறந்தவளாய்,
"ஆமாங்க டீ குடிக்கிற டைம் என்னை யாரு டிஸ்டர்ப் செஞ்சாலும் பிடிக்காது. கண்ணை மூடி தொண்டைக்குள்ள இறங்குற டீயை ரசிச்சுக் குடிக்கிற சுகம் இருக்கே. எனக்கு இந்த உலகத்துலேயே பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர் டீ குடிக்கிறது தான்ங்க" என்று நிறுத்தினாள்.
அவளைப் பிடித்தது அவனுக்கு. அவள் தனது மனைவியாக வந்தாள் நன்றாகயிருக்கும் என்று தோன்றியது.
"உங்களுக்குப் பொதுவாவே கல்யாணம் செஞ்சிக்கிறதுல விருப்பமில்லையா இல்ல என்னைக் கட்டிக்கிறதுல விருப்பம் இல்லையா?" எனக் கேட்டான்.
கல்யாணத்திற்குரிய தனது எதிர்பார்ப்புகளை அவள் உரைக்க, "அரிசி கடை வச்சிருக்கிறவன் பட்டிக்காட்டானா இருப்பான்னு எப்படி நினைச்சீங்க? நான் எலக்ட்ரிகல்ல டிப்ளமோ படிச்சேன். ஒரு லீடிங் எலக்ட்ரிகல் கம்பெனில இரண்டு மாசம் வேலைப் பார்த்துட்டு, அந்த அடிமை வேலைக்குச் சொந்த தொழில் செய்றது எவ்வளவோ மேல்னு இதுக்கு வந்தேன். எனக்கு இங்கிலீஷ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் எல்லாம் தெரியும். பிசினஸ்ஸை டெவலப் செய்யக் கத்துக்கிட்டேன். ஒரு ஆபிஸ்ல வேலை செய்றவனை விடச் சொந்த தொழில் செய்றவனுக்குத் தான்ங்க ஆளுமைத் திறன் அதிகமா இருக்கும். அக்கவுண்ட்ஸ், மேனேஜ்மெண்ட், கஸ்டமர் சர்வீஸ்னு எல்லாப் பக்கமும் நாலட்ஜ் இருந்தா மட்டும் தான் ஒருத்தனால ஒரு பிசினஸை வெற்றிகரமாக நடத்த முடியும். அதனால கடை வச்சிருக்கப் பையன் வேண்டாம்னு நினைக்காம, திறமையா பிசினஸ் செய்ற பையனா, அவனோட மன்த்லி டர்ன் ஓவர் எவ்ளோனுலாம் விசாரிச்சிட்டு வேணுமா வேண்டாமானு முடிவு சொல்லுங்க. இதை நான் எனக்காகச் சொல்லலை. கடை வச்சிருக்க மாப்பிள்ளையே வேண்டாம்னு நீங்க சொன்னதுனால சொல்றேன்" என்றவனாய் தேநீரைப் பருகி முடித்தான்.
'ஸ்மார்ட்' என்று தனக்குள்ளேயே அவனை மெச்சிக் கொண்டாள்.
அவள் ஏதும் பேசாது யோசனையுடன் தேநீர் அருந்துவதைப் பார்த்தவாறு எழுந்தவன், "சரிங்க நான் கிளம்புறேன்" என்று விலகப் போக,
தனது கையிலிருந்த தேநீரை மேஜை மீது வைத்தவளாய், "உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?" எனக் கேட்டாள்.
அவளின் கேள்வியில் தடுமாறித் தான் போனான் அவன்.
"உண்மையைச் சொல்லவா? பொய் சொல்லவா?" சிரித்தவாறு அவன் கேட்க,
"உங்களுக்கு என்ன சொல்லனும்னு தோணுதோ சொல்லுங்க" என்றாள்.
இருக்கையில் அமர்ந்து அவளைப் பார்த்தவன், "பிடிச்சிருக்குனு சொன்னா என்னைக் கட்டிக்கப் போறீங்களா என்ன?" அழுத்தமான பார்வையுடன் கேட்டிருந்தான்.
"ஹ்ம்ம் ஒரு வேளை நான் மனசு மாறி கட்டிக்கிறேன்னு சொன்னா உங்க விருப்பத்தைத் தெரிஞ்சிக்கத் தான் கேட்டேன்" என்றவள் சொன்னதும் இவனது கண்கள் மின்ன,
"உங்க முடிவை ரீகன்சிடர் செய்யலாம்னு தோணுதா?" எனக் கேட்டான்.
ஆமெனத் தலையசைத்தவளாய் புன்னகைத்தவள், "யு ஆர் ஸ்மார்ட். ரீகன்சிடர் செய்ய வச்சிட்டீங்க. நான் வீட்டுல பேசிட்டு சொல்றேன் செந்தில்" என்றவளாய் அவள் எழுந்து கொள்ள, புன்னகையுடன் அவனும் எழுந்தான்.
அடுத்து வந்த நாள்களில் இவளைத் தான் மணம் புரிவேன் என முதல் முறையாக மாமனை எதிர்த்து முடிவெடுத்திருந்தான் செந்தில்.
Last edited:
Author: Dhakai
Article Title: உனதன்பின் கதகதப்பில் 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உனதன்பின் கதகதப்பில் 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.