• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இப்படிக்கு, காதல். 1

Adhithya

New member
Joined
May 23, 2025
Messages
3
திருப்பள்ளியெழுச்சி

காலை 6.45 மணி. சூர்யாவிற்கு கிட்சனுக்குள் செல்வதா, வேண்டாமா என்று தயக்கம். எழுந்து வரும்போதே காற்றில் மாமியாரின் கோபம் மணந்ததை அவளால் உணர முடிந்தது. ஒரு பெரிய மூச்செடுத்து உள்ளே சென்றாள்.

“இன்னிக்கு உன் ஆத்துக்காரனுக்கு நீ தா சமைக்கனும். டெய்லி நானே செய்வேன்னு நெனச்சுக்காத” மாமி ராஜி சுப்ரபாதம் வாசித்தார். மாமனார் மூர்த்தி மற்றும் குட்டி கொழுந்தன் குமார் அந்த ஸீனுக்கு ஆடியன்ஸ்.சூர்யா தர்மசங்கடத்துடன் கிட்சனுக்குள் சென்றாள் .

அவள் ,சூர்யாஸ்ரீ. தமன்னா கலரு, ஹன்ஸிகா சருமம், அனுஷ்கா ஹைட்டு, அமலா பால் கண்ணு,… நோ... நோ...!!

நம்ம சூர்யாஸ்ரீ கொஞ்ச காலமா தமிழ் சினிமால அழகுன்னு காட்டப்படும் எந்த மாதிரியும் இல்ல. ரொம்ப அதிசயமா “சித்தா” படத்தில் ஹீரோயினாக காட்டிய நிமிஷா சஜயன் மாதிரின்னு சொன்னா கரெக்டா இருக்கும்.

ஷ்…ஷ்ஷ்ஷ்…. மெதுவா சொல்லுங்கோ.

ராஜி மாமி காதுல விழுந்தா அவ்ளோதான். சூர்யாவின் மாமியாரான ராஜிக்கு அது ஒரு மனத்தாங்கல். ராஜா போல இருக்கும் தன் சீமந்த புத்ரன் ராதாகிருஷ்ணன் ( வீட்டில் கூப்பிடுவது அர்ஜுன், ஏன்னா அது மாமனாரோட அம்மா பேர் )இன்னும் கொஞ்சம் பெட்டரா பொண்ணு பார்த்திருக்கலாம்ங்குறது மாமியோட நெனப்பு.

கல்யாணம் முடிந்து இந்த மூன்று வாரத்தில் சூர்யா தனது மாமனாருக்கும் மாமியாருக்கும் எதனாலோ தன்னை பிடிக்கவில்லை என்று உணர்ந்திருந்தாள்.

கிட்சனில் கேஸ் மேலே கேவுரு (கேழ்வரகு) கஞ்சி மட்டும் வெல்லம் சேர்க்கப்பட்டு கொதித்துக் கொண்டிருந்தது.

“என்னம்மா செய்யட்டும்”, சூர்யா ராஜியிடம் கேட்டாள். “உன் ஆத்துக்காரன்ட்ட கேட்டுக்கோ” . இதுக்கு மேலே பேசினால் நன்றாக இருக்காது என்று சூர்யா பக்கத்து வீட்டுக்கு வந்தாள்.

யோகா முடித்து இன்னும் ராதாகிருஷ்ணன் எழவில்லை.

“ப்பா” என்று தான் வெயிட் செய்வதை அழைத்து உணர்த்தினாள்.பத்து நிமிடங்கள் கழித்து கண் திறந்தான் சூர்யாவின் நாயகன்.

"என்னப்பா ஆச்சு" கண் திறந்த அர்ஜுன்
( ராதாகிருஷ்ணனோட பாட்டி பெயரை மரியாதை நிமித்தம் நாமும் சொல்லாம இருப்போம்) சூர்யாவிடம் கேட்டான்.

" என்ன செய்யட்டும் lunch கொண்டு போக", சூர்யா

"அம்மா ட்ட கேளு ப்பா ", அர்ஜுன்

"அம்மா தா உங்ககிட்ட கேக்க சொன்னா"

அர்ஜுன் சூர்யாவையும் அழைத்து கொண்டு பக்கத்து வீட்டுக்கு சென்றான்.
அர்ஜுனும் சூர்யாவும் வீட்டினுள் வந்த போது அர்ஜுனின் கடைசி தம்பி குமார், லெவன்த் க்ளாஸ் , கிளம்பி வாசலில் சைக்கிளை எடுத்துக்கொண்டிருந்தான். அண்ணா அண்ணி வரவும் இருவருக்கும் 'பை' சொல்லி கிளம்பினான்.

உள்ளே ராஜி பூஜையறையில், மூர்த்தி வாஷிங் மெஷினில்(துணி துவைப்பது, காயப் போட்டு 'மடி' யா மடித்து வைப்பது அவரே வலிந்து செய்வது).மகனும் மருமகளும் வந்ததை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

அர்ஜுன் ஃப்ரிட்ஜ் திறந்து பீட்ரூட் எடுத்து மனைவியிடம் தந்து "கூட்டும் சாதமும் பண்ணிட்டு லன்ச் பாக்ஸ் ல வச்சிடு பா. நா 8 மணிக்கு ட்ரெய்ன புடிக்கனும், " என்று சொல்லிச் சென்றான்.

'கூட்டா...??? நா தீவாளிக்கு வேட்டு வெக்க கூட வெச்சதில்ல டா. என்ன போய் கூட்டு வெக்க சொல்லிட்டு போறாரே' சூர்யாவின் மைண்ட் வாய்ஸ்.

மாமி ராஜி கிட்ட கேக்கலாம் பட் உனக்கு இது கூட தெரியாதா னு ஆரம்பிக்கற ஜாடை பேச்சு சூர்யாவின் அம்மா விற்கு வளர்க்க தெரியவில்லை னு போய் முடியும்.

சூர்யா வேறு வழியின்றி யூடியுபிடம் சரண் அடைந்தாள்.
 

Author: Adhithya
Article Title: இப்படிக்கு, காதல். 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
ஏம்மா.... நோக்கே இது நியாயமா பட்ற்றதா சொல்லுங்கோ???
இத்துன்ண்டு epi....
பத்தலடியம்மா....
ராஜி மாமி போல கோச்சுண்டு போறேன்.....
 
Top Bottom