• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கவிக்குயிலின்_கவி_விமர்சனம்

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
#கதை_உருகியோடும்_மெழுகு_போல

#சுங்குடி

#கதைத்தறி_போட்டிக்கதை

#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்

#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்


சின்ன சின்ன விஷயங்கள்
சிறுபிள்ளைதனம் கொண்ட
செல்லம் கொஞ்சி
சிரித்து பேசி
சந்தோஷமாக சுற்றிய
சித்திரை செய்த செயலில்
சீரழிந்த வாழ்வு.....

தாய்க்கு தெரியாமல்
திருமணமா....
திருட்டு கல்யாணம் ஏன்
தவறு எங்கு நடக்கிறது
தாயின் வளர்ப்பிலா???
தாய்மார்களின்
தவிப்பு எதார்த்தம்....

ஜாதகம் வைத்து தனக்கு
சாதகமாக மாற்றி
சூதனமாக இருந்து
நூதனமாக ஏமாற்றி
பாதகமாய் ஒரு பெண்ணின் வாழ்வை
புதைத்து விட்டாயே...
பெண் பாவம் பொல்லாதது முகுந்தன்....


மகன் தவறு செய்ததை
மறைக்காமல்
மருமகளுக்கு சொல்லி
மறுகி அழும்
மாமியார்....அற்புதம்....
மருமகளை
மகளாக என்னும்
மாமியார் சத்யபாமா
சத்தியத்தின் சக்தி....


தந்தையில்லாமல்
தாயின் வளர்ப்பில்
தவறிய தருணம்
தேடிய துணை
தவறானவன்
தவிக்கும் தாய்மார்கள்
தடுமாறும் சித்திரை.....


வீட்டை விட்டு வெளியேறிய பல வஞ்சிகளின்
வாழ்வு இப்படித்தான்
வீணாகி போகிறது....
வாழ்வின் பிடிப்பாக
வாழ்ந்து முடிந்த
வாழ்ந்து கொண்டிருக்கும்
தாயும் அத்தையும்
தரும் தன்னம்பிக்கை வார்த்தைகள்
வாழ்விற்கு அடுத்த படி...



முதல் வாழ்க்கை
முடிந்து போனாலும்
முற்றுப்புள்ளி அல்ல
முயன்றால் முடியாது இல்லை....


பார்த்து பார்த்து உதவும்
பூபதியின் மனதில்
பயந்து போன சித்திரை
பாவமான பெண் இன்று
புது தெம்பாய் வலம்வர
பாவை மனதில்
பதிந்துவிட
பெண்களின் சக்தி
படிக்கும் போது பிரமாதம்....

மங்கையின் மனதை
மறைமுகமாக ரசிக்கும்
மன்னவன்
மகிழ்ச்சி மீண்டும்
மங்கை வாழ்வில்
மண வாழ்க்கையில்
முடிந்தது....

தவறிய வாழ்க்கை
துவண்டு போகாமல்
தன்னம்பிக்கையுடன்
துணை நிற்கும் உறவுகள்
தூண் போல
தாங்கும் நட்புகள்
தடைகளை நீக்கி
தீர்க்கமாக உழைத்த
தன்னலமற்ற ஜீவன்கள் இருந்தால்....


உருகி ஓடும் மெழுகு போல
உருகிடும் அன்பில்
உயிர் ஒளி தரும் மெழுகாய் உயிர்த்து உயர்ந்து நிற்கும்
சத்யபாமா
சுப்பம்மா
சித்திரைவடிவு போல வாழும்
உயிர் சித்திரங்ககள் உடன் இருந்தால்
வாழ்வில் வசந்தமே......


அருமையான கதை....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 👏🏻👏🏻👏🏻💐💐👍🏻👍🏻🤩🤩❤️❤️😘😘
 

Author: Mrs Beenaloganathan
Article Title: கவிக்குயிலின்_கவி_விமர்சனம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sungudi

Moderator
Joined
Apr 6, 2025
Messages
20
#கதை_உருகியோடும்_மெழுகு_போல

#சுங்குடி

#கதைத்தறி_போட்டிக்கதை

#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்

#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்


சின்ன சின்ன விஷயங்கள்
சிறுபிள்ளைதனம் கொண்ட
செல்லம் கொஞ்சி
சிரித்து பேசி
சந்தோஷமாக சுற்றிய
சித்திரை செய்த செயலில்
சீரழிந்த வாழ்வு.....

தாய்க்கு தெரியாமல்
திருமணமா....
திருட்டு கல்யாணம் ஏன்
தவறு எங்கு நடக்கிறது
தாயின் வளர்ப்பிலா???
தாய்மார்களின்
தவிப்பு எதார்த்தம்....

ஜாதகம் வைத்து தனக்கு
சாதகமாக மாற்றி
சூதனமாக இருந்து
நூதனமாக ஏமாற்றி
பாதகமாய் ஒரு பெண்ணின் வாழ்வை
புதைத்து விட்டாயே...
பெண் பாவம் பொல்லாதது முகுந்தன்....


மகன் தவறு செய்ததை
மறைக்காமல்
மருமகளுக்கு சொல்லி
மறுகி அழும்
மாமியார்....அற்புதம்....
மருமகளை
மகளாக என்னும்
மாமியார் சத்யபாமா
சத்தியத்தின் சக்தி....


தந்தையில்லாமல்
தாயின் வளர்ப்பில்
தவறிய தருணம்
தேடிய துணை
தவறானவன்
தவிக்கும் தாய்மார்கள்
தடுமாறும் சித்திரை.....


வீட்டை விட்டு வெளியேறிய பல வஞ்சிகளின்
வாழ்வு இப்படித்தான்
வீணாகி போகிறது....
வாழ்வின் பிடிப்பாக
வாழ்ந்து முடிந்த
வாழ்ந்து கொண்டிருக்கும்
தாயும் அத்தையும்
தரும் தன்னம்பிக்கை வார்த்தைகள்
வாழ்விற்கு அடுத்த படி...



முதல் வாழ்க்கை
முடிந்து போனாலும்
முற்றுப்புள்ளி அல்ல
முயன்றால் முடியாது இல்லை....


பார்த்து பார்த்து உதவும்
பூபதியின் மனதில்
பயந்து போன சித்திரை
பாவமான பெண் இன்று
புது தெம்பாய் வலம்வர
பாவை மனதில்
பதிந்துவிட
பெண்களின் சக்தி
படிக்கும் போது பிரமாதம்....

மங்கையின் மனதை
மறைமுகமாக ரசிக்கும்
மன்னவன்
மகிழ்ச்சி மீண்டும்
மங்கை வாழ்வில்
மண வாழ்க்கையில்
முடிந்தது....

தவறிய வாழ்க்கை
துவண்டு போகாமல்
தன்னம்பிக்கையுடன்
துணை நிற்கும் உறவுகள்
தூண் போல
தாங்கும் நட்புகள்
தடைகளை நீக்கி
தீர்க்கமாக உழைத்த
தன்னலமற்ற ஜீவன்கள் இருந்தால்....


உருகி ஓடும் மெழுகு போல
உருகிடும் அன்பில்
உயிர் ஒளி தரும் மெழுகாய் உயிர்த்து உயர்ந்து நிற்கும்
சத்யபாமா
சுப்பம்மா
சித்திரைவடிவு போல வாழும்
உயிர் சித்திரங்ககள் உடன் இருந்தால்
வாழ்வில் வசந்தமே......


அருமையான கதை....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 👏🏻👏🏻👏🏻💐💐👍🏻👍🏻🤩🤩❤️❤️😘😘
Thank you very much ma..

உங்கள் ஊக்கமும் பாராட்டும் மிகுந்த உற்சாகத்தையும் மனநிறைவையும் தருகிறது❤️❤️❤️💃
 
Top Bottom