• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Aranggam 14

Paithani

New member
Joined
Jun 19, 2024
Messages
23
அரங்கம் 14

திரும்ப அமெரிக்கா வந்தவனுக்கு தன்னை சேர்ந்தவர்கள் இங்கே வரப்போகிறார்கள் என்று பெருமகிழ்ச்சி. அதை அவனால் வார்த்தைகளை கோர்த்து நிச்சயம் சொல்ல முடியாது. அதே சமயம் தனது அப்பாவின் மன நலம் பற்றியும் மனதுக்குள் பயம். அவருக்கு இங்கே மனதுக்கு பிடிக்காத விஷயங்கள் ஞாபகம் வந்தால் என்று யோசித்தான்.அவனது பயம் அவசியமற்றது என்று எளிதில் ஒதுக்கிவிடவே முடியாது. சுந்தரத்திற்கு நடந்த கசப்பான நிகழ்வுகள் யாவும் இதே வீட்டில்தான் நிகழ்ந்தது. அப்படியிருக்கும் பொழுது இந்த விஷயம் ஒரு சோதனை ஓட்டம் போலத்தான்.

அப்பா இன்னமும் மருந்துகள் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். அது அவருக்கு தவிர்க்கமுடியாத ஒன்றாகிப்போனது.அதற்க்கான பக்கவிளைவுகளை சேர்த்தே அனுபவிக்கிறார்.இந்த முறை சென்ற பொழுது அவர் சொன்னது,"பசி குறைஞ்சு போச்சு ரங்கா. ட்ரை ஐஸ் வந்திருக்கு. டாக்டர் கிட்டே காண்பிச்சேன். நா எடுத்துக்குற மெடிசின் காரணம்னு சொல்றர். எல்லாம் என்னோட விதி என்று அலுத்துக்கொண்டார்.

வெகுநேரம் அப்பாவைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு ஹாரியின் ஞாபகம் வந்தது. அப்பாவின் மருத்துவ அறிக்கைகளின் நகல் இவனிடம் உண்டு. கொஞ்சமும் யோசிக்காமல் ஹாரியை அழைத்தும் விட்டார். இவனது குரலை இரண்டு மாதங்களுக்கு பிறகு கேட்டவருக்கும் மகிழ்ச்சி. இவன் எப்படி நினைத்தாலும் அவரை பொறுத்தவரை இவனும் அவருக்கு ஒரு மகன் தான்.

அன்று மாலையில் ஹாரி ரங்கனை பார்க்கவென்று அவனது வீட்டுக்கு வந்து விட்டார். அவருக்கு பிடித்தவாறு பால் கலக்காத சூடான காபியை கலந்து கொடுத்தான் ரங்கன்.கொஞ்சநேரம் அவனது இந்திய பயணம்,வேலை பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்த இருவரும் வெகு நிதானமாக சுந்தரம் பற்றி பேசத்தொடங்கினார்கள். சுந்தரத்தின் மருத்துவ அறிக்கைகளை படித்தவருக்கு சுந்தரம் வெகுவாக மனதளவில் அடி வாங்கியிருப்பது புரிந்தது.

"ம்ம்ம்.. உங்கப்பாவை மீட் பண்ணாமே என்னால எதுவும் சொல்ல முடியாது ரங்கன். என்னை ஒரு டாக்டராகவோ,உன்னோட அம்மாவோட கணவராகவோ இல்லாம பொதுவான நண்பரா அறிமுகம் செஞ்சு வை. ஹாண்டில் பண்ணிக்கலாம். ஒண்ணும் இஸ்யூஸ் iஇல்ல "என்றுவிட்டு கிளம்பினார். அவரது பக்குவம் கொண்ட மனமோ அப்பா -மகன் இருவருக்காகவும் வருத்தம் கொண்டது. ரங்கனை நினைத்து அவருக்கு வியப்பாகவும் இருந்தது. இப்பேற்பட்ட பிள்ளை கிடைக்க நிச்சயம் சுந்தரம் அதிர்ஷ்டம் செய்தவர் என்று நினைத்தவாறே காரை தனது மருத்துவமனை நோக்கி செலுத்தினார்.


அதே சமயம் ஹாரியின் பண்பட்ட மனமும், அவர் தனக்கு கொடுக்கும் தைரியமும் இதுவரை ரங்கன் அனுபவித்திராத ஒன்று. புரிந்து கொள்ளும் வயது தொடங்கி இதுவரை யாரும் அவனிடம் 'பார்த்துக்கலாம்,கவலை படாதே' என்று சொல்லி அவன் கேட்டதில்லை. ஹாரியின் வார்த்தைகளில் தான்தான் அதிகமாக அப்பா பற்றி யோசித்துக் கவலை கொள்கிறோமோ என்ற எண்ணம் கூட வந்துவிட்டிருந்தது.

வீட்டுக்குள் சென்று தனது உடைகளை மாற்றிக்கொண்டு மாடியில் அமைத்துக்கொண்டிருக்கும் தனக்கான பிரத்யேக ஜிம்முக்குள் நுழைந்தான். எது எப்படி ஆனாலும் உடலும் மனமும் முக்கியம் என்ற கொள்கையை வளர்த்துக்கொண்டிருந்தான். சிக்ஸ் பாக்கெல்லாம் கிடையாது. பார்க்க தொப்பை சரிந்து விழாமல் அப்யாசங்களில் பழகிய தேகம் என்று தெரியும். அவ்வளவுதான்.

இரண்டு மணி நேர உடற்பயிற்சியை முடித்துவிட்டு ,ஜன்னல் வழியாக வெளியே பார்க்க தொடங்கினான் ரங்கன்.அவன் வீட்டு தோட்டம் மாடி வழியாக பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.முன்பு இங்கே சியாடல் வீட்டுக்கு வந்த பொழுது அம்மா ஆசையாக அமைத்தது என்று அப்பா கூறி கேட்டதுண்டு. இங்கே வந்த சமயங்களில் அவ்வளவு உன்னிப்பாய் பார்க்கவில்லை. ருக்மிணியின் பாட்டி ஒருதரம் வீட்டில் பறித்தது என்று கிறீன் அப்பிள்களும்,ஆரஞ்சும் தர தோட்டத்தை சுற்றிப் பார்க்கலாமா.."என்று பாட்டியிடம் கேட்டான்.

சந்தோசம் கொண்ட பாட்டியோ அவனை தோட்டம் முழுவதும் சுற்றிக்காட்டினாள். என் வீட்டு தோட்டத்தை எனக்கேயா !என்று தோன்றியதை சற்று நேரத்தில் அவன் மாற்றிக்கொள்ளவேண்டியதாக இருந்தது. தோட்டம் அவ்வளவு நேர்த்தி. அதிகமாக காய்கறிகளும்,பழங்களுமாக அசத்தியது. 'யார் இதை இவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் பராமரிக்கிறார்கள ?என்ற இவனது மனதின் கேள்விக்கு "இவ்வளவும் ருக்மிணியின் உழைப்பு "என்று பெருமையும் பட்டுக்கொண்டாள் அந்த முதியவள்.

அவர்கள் இப்போது வாங்கியிருக்கும் பங்களாவில் பெரிய தோட்டம் உண்டு.ருக்மிணியின் வேலையாக இருக்கும் என்று நினைத்துக்கொள்வான். இவன் இங்கே வந்த பிறகு தோட்ட பராமரிப்புக்கென தனியாக நேரம் ஒதுக்க முடியாமல் அருகே இருக்கும் நர்சரி மூலமாக பார்க்கிறான். மனதுக்கு இதம் . சமயத்தில் தோட்டத்தில் இருக்கும் உள்பெஞ்சில் போய் அமர்ந்துகொள்வதும் உண்டு.


எதையெதையோ யோசித்தவாறே ஜன்னலில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு யாரோ தன்னையே பார்ப்பது போல ஒரு உணர்வு. கொஞ்சம் உற்றுப்பார்த்தால் அங்கே யாரும் இல்லை.என்னவாக இருக்கும் என்று அவன் மனம் சிந்தனை செய்ய ஆரம்பித்தது. அதற்க்கு விடையாக கீழே காலிங் பெல்லின் சப்தம். இறங்கி சென்றவன் கதவை திறந்தால் அவன் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு நபர். இன்று வரை அவன் பார்த்திராத ,வேறு பெயர் வழியாகவே தன்னை அறிமுகம் செய்து கொண்டிருந்த ஒருவர். அவனுக்கு யாரென்று புரியவில்லை. அந்த நபருக்கு சராசரியாக இருபத்தைந்தில் வயது இருக்கலாம்.

நீங்கள் யோசிப்பது சரிதான்.'சாக்ஷாத் ருக்மிணி அம்மையார் ' தான் வந்திருந்தது. ரங்கனின் தோள் அளவிற்க்கான உயரம். ஹீல்ஸ் எதுவும் அணிந்திருக்கவில்லை.சாதாரணமாக வீட்டில் அணியும் ஷூ அணிந்துகொண்டிருந்தாள். பழுப்பு நிற கண்கள்.அதே வண்ணத்தில் தலைமுடி. ஒற்றை பின்னல் போட்டிருந்தாள். காதுகளில் மின்னும் ஒற்றைக்கல் தோடு வைரம் என்று சொல்ல தனி அறிவு தேவையில்லை. அமெரிக்க நிறம். அவளது கூர் மூக்கு ஏனோ ரங்கனுக்கு ஸ்டெபி கிராப்பை நினைவு படுத்தியது.

அவளது வெண்மையும் பிங்க் நிறமும் சேர்ந்த கைகளில் பழக்கூடை. முகத்தில் இன்ஸ்டன்ட் சிரிப்பு.உற்றுப்பார்த்தால் அவளது கண்கள் கேலி செய்து சிரிப்பது போல தோன்றும். பேரழகி என்றெல்லாம் வருணிக்க முடியாவிட்டாலும் அழகியே! சிரிக்கும் கண்களை கொண்டவர்கள் நிச்சயம் அழகானவர்கள் தாமே!

ரங்கனின் கண்கள் கேட்ட கேள்வி அவளுக்கு சற்றே வியப்பாக இருந்திருக்க வேண்டும் .ஆனாலும் வெகுகாலம் பழகியவன் போல இருந்தது அவளது பதில்.

"ஹே, என்னை தெரியாதா? நா இங்கே முன்னாடி குடியிருந்தார்களே ...அவர்கள் வீட்டு பெண் ருக்மிணி ."

அவள் சொன்னதும் ரங்கனுக்கு ஆச்சர்யமாகி விட்டது.அந்த பெண்ணுக்கு இங்கே என்ன வேலை?இதுவரை இவளை சந்தித்தது இல்லை.இன்று என்ன இங்கே திடீரென்று என்று நினைத்துக்கொண்டான். அவன் மனதை படித்தவள் போல ," சாரி,நாம முதல்முறையா மீட் பண்றோம் இல்ல.அதான் உங்களுக்கு என்னை அடையாளம் தெரியல ".

அவள் குரல் மனதை ஊடுருவி செல்வதைப்போல உணர்ந்தான் ரங்கன். சுதாரித்துக்கொண்டு 'வெல்கம் ' என்று அவள் உள்ளே வர வழிவிட்டவன் அங்கிருந்த ஒற்றை சோபாவில் அவளை அமரச் செய்தான். இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

நீடித்த மௌனத்தை விரும்பாதவளாக "”வீட்டுல பழம் பறிச்சோம் .உங்களுக்கு கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்'.” தயங்கி அவள் பேசியது இன்னமும் அவள் இந்த நாட்டு கலாச்சாரத்துடன் ஒன்றவில்லை என்று சொன்னது. அவர்கள் வீட்டில் இன்னமும் மேற்கத்திய கலாச்சாரம் நுழையவில்லை என்று ரங்கன் ஏற்கனவே நினைத்திருக்கிறான். அனிருத் விளையாடும் பொழுது அதை உணரவும் செய்திருக்கிறான்..கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு அவள் பேசுவதையே உன்னிப்பாக கேட்டான் ரங்கன். அவள் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அவளை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உந்துதல் வந்தது. "இன்னிக்கு வேலைக்கு போகலையா?" சம்மந்தமில்லாமல் ஒரு கேள்வி.

"ம்ஹும், இன்னிக்கு லீவு எடுத்திருக்கேன். அது சரி ,இவ்வளவு நாளா உங்களை காணுமே ! நீங்க இங்கிருந்து கிளம்பிட்டீங்க ன்னு நினைத்து வருத்தப்பட்டேன் "என்றாள் திடீரென்று. அவளது வார்த்தைகள் தமிழில் வந்தாலும் அமெரிக்க உச்சரிப்பில் தமிழை கேட்பது அவனுக்கு வித்தியாசமாகவே இருந்தது. அதோடு ,தான் இங்கே இல்லை என்று இவள் எதற்க்காக வருத்தப்பட வேண்டும் என்றும் கூடவே தோன்றியது.

ருக்மிணியின் கண்கள் இவனை நேராக பார்க்க இயலாமல் அலைப்புறுவதை கண்டவனுக்கு ஏதோ தோன்றியது.அதற்க்கு வார்த்தைகளால் வடிவம் கொடுக்க அவன் விரும்பவில்லை. "நா மேலே ஜிம்மில் இருந்த பொழுது தோட்டத்துலேந்து பார்த்தது நீதானே?"

ரங்கனிடமிருந்து இந்த கேள்வியை ருக்மிணி எதிர்பார்த்திருக்கவில்லை போலும்..அவள் முகம் வெளிறியது. " ஆமாம். நா தோட்டத்துல இருந்தேன்.சாரி.சும்மாதான் பார்த்தேன் "என்றாள் தயங்கியபடியே. அவளது தன்மீதான ஆர்வத்தை புரிந்துகொண்டான் ரங்கன். அவன்மீதான பெண்களின் ஆர்வம் அவனுக்கு புதியது அல்ல.நாசூக்காக மறுத்துவிடுவான்.i


இப்போதும் அவள் ஏதாவது இதைப் பற்றி பேசினால் மறுத்துவிடும் எண்ணம் தான். ஆனால் அவளோ வேறேதேதோ பேசினாளேயன்றி தவறியும் இவன் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை. இவன் தான் குழம்பினான்.தான் யோசித்தது தவறோ? இல்லை இவளிடமிருந்து தான் எதை எதிர்பார்க்கிறோம்?"

இருவருமாக கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். இவன் இருவருக்குமான காபியை வார்த்துக்கொடுக்க அவள் ஆர்வமாக அதை சுவைத்தாள்."ம்ம்... நல்ல பில்டர் காபி. பாட்டி இங்கே வந்தாளேயானால் இப்படித்தான் அகத்தில் காபி மணக்கும். மத்தபடிக்கு சொல்லிக்கிறமாதிரி இருக்காது "என்று அவள் சொல்லிவிட்டு சிரிக்கும்பொழுது அவள் சிரிப்பு இவனையும் தொற்றிக்கொண்டதில் ஆச்சர்யமில்லை.

அதற்குப்பிறகு அவள் யோசிக்காமல் இவன் இருக்கும் நேரங்களில் இங்கே வந்து பேசிக்கொண்டிருப்பதை தனது வழக்கமாக்கிக்கொண்டாள். ருக்மிணியிடம் அதிகம் யோசிக்காமல் ரங்கராஜனால் பேச முடிந்தது.இத்தனை நாட்களாக அவன் தனக்கென போட்டுக்கொண்டிருந்த ஒரு மாயக்கோட்டை கண்ணுக்கே தெரியாமல் ஊடுருவிக்கொண்டு உள்நுழைந்திருந்தாள் ருக்மிணி. அவளுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தது. அவளிடம் ஒருவித கம்பீரம் தெரிந்தது. எவ்வளவு சிரித்து பேசினாலும் தனக்கென ஒரு எல்லை வைத்திருந்தாள். அதை மீறி அவள் நடந்து கொள்ளவில்லை.

இரண்டு மாதங்களில் ரங்கராஜனின் குடும்பம் இங்கே சியாடல் வந்து இறங்கியது. சுந்தரத்திற்கு சியாடலில் தட்பவெப்பம் இன்னமும் ஞாபகம் இருந்ததால் அவனால் தேவையானவற்றை சரியாக எடுத்துக்கொண்டு வரமுடிந்தது.ஆனாலும் வந்து உள்நுழைந்தவுடனேயே கோதை பாட்டிக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது.

"இதென்னடா இது, இங்கேயே எப்படிடா இருந்துண்டு வேலைக்கும் போய் சம்பாதிக்கிறேள்?" என்றவாறே தனக்கும் தனது கணவருக்குமாக ரங்கன் ஒதுங்கியிருந்த அறைக்குள் சென்றுவிட்டாள்.திருவேங்கடத்திற்கு மனம் கொள்ளா பூரிப்பு.பின்னே இருக்காதா..எத்தனையோ வருஷங்கள் இங்கே இருந்து பணம் சம்பாதித்து ,ஒன்றிற்கு இரண்டு வீடுகள் வாங்கி நன்றாக வாழ்ந்த மகன் படிக்கும் காலத்தில் தொட்டு திரும்ப இந்தியாவுக்கே வரும் வரை ஒரு முறை கூட அமெரிக்காவுக்கு தங்களை ஒருமுறை கூட அழைத்து வந்தது இல்லை.பேரனோ," தாத்தா நா இங்கே இருக்கும் வரைக்கும் இனிமே நீங்க மூணு பேரும் வருஷத்துல நாலுமாசம் இங்கேதான் " என்ற பொழுது அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று சொல்வது கடினம்.

யாராக இருந்தாலும் மனிதர்கள் தாமே? அவர்களுக்கு மட்டும் அமெரிக்காவில் இருக்க ஆசை இருக்காதா? இதில் தவறு என்ன? மனதில் எழுந்த சந்தோஷத்தில் பேரனை இறுக்க அணைத்து உச்சி முகர்ந்தார் திருவேங்கடம். அப்பாவின் மனா ஓட்டம் புரிந்த சுந்தரத்திற்கு மனதில் பெரு வலி.தான் தன்னை பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்.அவர்களுக்கும் இங்கே வந்து இருக்க ஆசையாய் இருந்திருக்கும். அவர்களை ஒதுக்கி மனைவி சொன்னதெற்கெல்லம் சரி என்று நின்றதால் தானோ தனக்கு இவ்வளவு அடிகள் என்று சென்றது அவன் மனம். கையில் இருக்கும் சந்தோஷத்தை விடுத்து எதையெதையோ யோசிப்பதால் தான் மனம் ஒரு குரங்கு என்கிறோமோ?
 

Author: Paithani
Article Title: Aranggam 14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom