• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Arangam 15.2

Paithani

New member
Joined
Jun 19, 2024
Messages
26

சிலசமயங்களில் நாம் நினைக்கும் விஷயங்கள் அஸ்து தேவதையால் வாழ்த்தப்படும் என்று எனது பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.இதோ இப்போது அனிருத்தின் மனதில் ஒரு விஷயம் நினைத்திருக்கிறான். அதையும் கூட அஸ்து தேவதை வாழ்த்தியிருக்குமா என்று தெரியவில்லை. அவன் நினைப்பதிலும் அர்த்தமுண்டு.இருவரையும் ஒன்றாகப் பார்க்கும்பொழுது எனக்கும் கூட அவரகளது பொருத்தம் நன்றாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. ஏன் ,மாலதிக்கும் சுந்தரத்திற்கும் கூட அமோகமான ஜோடிப்பொருத்தம் அதோடு பத்துபொருத்தமும் கூடிய ஜாதக விசேஷம்.இதை திருவேங்கடமே பார்த்துதான் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஒத்துக்கொண்டார்!

வெறும் ஜாதகப்பொருத்தம் ,ஜோடிப்பொருத்தம் அந்தஸ்த்து பொருத்தம், உயரப் பொருத்தம்,படிப்பு இன்னும் எத்தனையோ இத்யாதிகளை வைத்துதான் இப்போதைய திருமணங்கள் பெரும்பாலும் நிகழ்கிறது. இருவரது குணநலன்களும் ஒத்துவருமா, இருவருக்கும் ஒருவருக்கொருவராக வாழ்நாள் முழுமைக்கும் துணை வர விருப்பம் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கிறோமா என்ன? இல்லை,மனப்பொருத்தம் பற்றிய அக்கறைதான் இருக்கிறதா?

அனிருத் நிச்சயம் தனது மனதில் இருப்பதை வெளியில் யாருக்கும் சொல்லப்போவது இல்லை. அனிருத், ரங்கராஜன் அவனுடன் ருக்மிணி மூவருமாக வாசல் தோட்டத்துக்கு போனார்கள்.அங்கிருந்த பெஞ்சில் உட்க்கார்ந்து பேச ஆரம்பித்தவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. ரங்கராஜன் மனதுக்குள் லேசாக உணர்ந்தான்.

இரவு தனது அறைக்குள் வந்த பிறகும் ருக்மிணியின் மனம் ரங்கராஜனையே சுற்றி வந்தது. மாலையில் இருவரும் சந்தித்தது தொடங்கி , மூவருமாக பேசிக்கொண்டிருந்தது வரையில் மனதில் படமாக ஓடியது.

ருக்மிணியை பொறுத்தவரையில் முதன்முதலில் ரங்கராஜன் அவர்கள் வீட்டுக்கு வந்த பொழுதே மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு சட்டென அவனது முகம் பதிந்து போனது. அதனாலேயே அவள் அவன் முன்னே வருவதை தவிர்த்தாள். பிறகு வீடு வாங்கி கொண்டு அருகேயே வந்த பிறகும் அவளால் அவனை பற்றிய நினைவுகளை தவிர்க்க முடியவில்லை.

பிறந்தது முதலே அமெரிக்கவாசி தான் என்றாலும் அவர்கள் குடும்பம் இந்திய பாரம்பரியத்திலிருந்து வெளியே வரவில்லை. குழந்தைகளை வளர்த்ததிலும் அளவுக்கு மீறிய சுதந்திரமெல்லாம் கிடையாது. ருக்மிணியை மட்டும் இல்லை,அனிருத்தையுமே கட்டுப்பாடாகத்தான் வளர்த்திருந்தார்கள். குழந்தைகளும் எல்லை மீற முயன்றது இல்லை.

இருவருக்குமே நிறைய நண்பர்கள் உண்டு .அதில் ஆண் - பெண் பேதமெல்லாம் கிடையாது.அந்த வகையில் ருக்மிணி தனக்கான ஆணாக உணர்ந்தது ரங்கராஜனை மட்டும்தான். அவனை பற்றிய எந்த தனிப்பட்ட விபரங்களும் அவளுக்குத் தெரியாது ஆனாலும் அவனை அவனுக்காக மட்டுமே காதலிக்கத் தொடங்கியிருந்தாள். அவன் அன்று அவளை ஒரு பார்வை பார்தானே !அப்பொழுதே தன்னை சுதாரித்துக்கொண்டுவிட்டாள். பார்வையாலும் தனது ஆர்வத்தை காண்பிக்காமல் இருப்பது எல்லாம் வேறு ரகம்.

இன்று நடந்த பார்வை பரிமாற்றம் நிச்சயமாக அவளுக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை நிகழ்த்தித்தான் இருக்கிறது. அவன் ரங்கராஜன் இதை எப்படி எடுத்துக்கொள்வானோ ? என்னதான் சகஜமாகப் பேசினாலும் யாரையும் நம்புவதற்கு இல்லை என்றது அவள் மனம்.

ருக்மிணியின் வீட்டில் தீபாவளிக்காக முதல்நாள் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.அதில் அங்கே உடன் வேலை பார்ப்பவர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள், பிள்ளைகளின் பட்டாளம் , என்று பெரிய அளவிலான ஏற்பாடுகள்.அந்த வழியில் ரங்கராஜனின் குடும்பத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

கோதையும் திருவேங்கடமும் சந்தோஷமாக கிளம்ப தயாராகி விட்டார்கள். ரங்கராஜனும் கிளம்ப , சுந்தரம் தனக்கு கிளம்ப விருப்பம் இல்லை என்றுவிட்டு தங்கிவிட்டார். அப்பாவை விட்டு வர மாட்டேன்.நீங்கள் இருவரும் போய் வாருங்கள் என்று அகத்திலேயே இருந்துவிட்டான் ரங்கராஜன். பெரியவர்களுக்கும் செல்லும் விருப்பம் குறைந்தது. கட்டாயப்படுத்தி அவர்களை அனுப்பிவைத்த ரங்கராஜன் மாடியில் இருக்கும் தனது உடற்பயிற்சி அறைக்கு சென்றுவிட்டான்.

அன்று அவர்கள் வீட்டு தோட்டத்திலிருந்து அவள் தன்னை பார்த்தது எதேச்சையாக ஞாபகம் வர ஜன்னல் அருகே வந்து நின்று கொண்டான்.இன்றும் அவர்கள் வீட்டு தோட்டம் நன்றாகவே தெரிந்தது. அங்கே நிறைய சிறிய மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ,தேவலோகம் போல் இருந்தது. அங்கங்கே வருபவர்கள் அமரவென்று இருக்கைகள் தருவிக்கப்பட்டிருந்தது. ஒருவரோடு ஒருவர் சிரித்துப்பேசிக்கொண்டிருப்பதை தனது வீட்டிலிருந்தே பார்த்துக்கொண்டிருந்தான். அனிருத் ஷர்வானி அணிந்துகொண்டிருந்தான். பார்க்க இன்னும் பெரியவனை போல இருக்கிறது என்று நினைத்தான் ரங்கராஜன்.அவன் மனமோ பெண்ணைத் தேடியது.

ருக்மிணி அவனது கண்களுக்கு புலப்படவே இல்லை. "இதென்ன ,எங்கே போனாளோ " என்று சலித்துக்கொண்டான். கீழே சுந்தரத்தின் அறையிலிருந்து ஏதோ விழும் சப்தம் கேட்க தன்னை மீட்டெடுத்தவனாக அவசரகதியில் கீழே ஓடினான். சுந்தரம் தான். தனது அறையில் இருக்கும் பொருட்களை கீழே தள்ளி உடைத்துக்கொண்டிருந்தார்.

விஷயம் ஒன்றும் பெரியது இல்லை.தாங்கள் முன்பு இந்த வீட்டுக்கு வந்த புதியதில் நடத்திய சிறு விழாக்களும் அது தொடர்பான நினைவுகளும்,அன்று இருந்த ஆடம்பரங்களும் கூடவே மாலதியும் சுந்தரத்தின் நினைவுகளை ஆக்கிரமிப்பு செய்ததன் எதிரொளி. அவரை சமாதானம் செய்து அவசரமாக அவர் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை கொடுத்து தூங்க செய்துவிட்டு நிமிர்வதற்குள் அவனுக்கு மனம் ஓய்ந்து போனது. ஒதுங்கக்கூட நிழல் இல்லாத பாலைவனத்துக்குள் தனியாக மாட்டிக்கொண்டதுபோன்ற உணர்வு!

சலித்துப்போன ரங்கராஜன் மாடியில் அவனது அறைக்குள் இருக்கும் பால்கனியில் நின்றுகொண்டு அகண்ட வானத்தை பார்த்துக்கொண்டிருந்தான். "எனது பிரச்சனைகளும் கூட இந்த முடிவில்லா வானம் போலத்தான் "என்று அவனது எண்ண ஓட்டம். வெளிப்புறமாக பார்க்கும் பொழுது அவன் வெகு கம்பீரமாக நின்று கொண்டிருப்பதை தோன்றினாலும் உள்ளுக்குள் நடக்கும் நிகழ்வுகள் முற்றிலும் வேறானது.

இறுகிப்போய் நின்றுகொண்டிருப்பது பாறை ஒன்று அசையாமல் நிற்பது போல் இருந்தது.ரங்கராஜன் நிச்சயம் ஆணழகன்தான். அதை அவன் இத்தனை வருஷங்களில் யோசித்தது கூட இல்லை. அவனது சூழ்நிலை அப்படி.

இலக்கின்றி வானத்தின் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தவனை பின்னிருந்து அணைத்தது ஒரு ஜோடி தளிர்க்காரங்கள். அவனுக்கு அந்த கைகள் யாருடையது என்று தெரிந்து போனது. கண்மூடி அதன் இதத்தை ஒரு நிமிஷம் அனுபவித்தான். சுகமாய் உணர்ந்தான். மெதுவே அந்த கரங்களை விலக்கிவிட்டவன் திரும்பும்பொழுது மீண்டும் ஒரு இறுக்கம் அவனை ஆக்கிரமிப்பு செய்திருந்தது. துணி கொண்டு துடைத்தது போல உணர்வற்ற முகம்.அதில் இன்னதென்று அறிய முடியாத கோவம்.

ரங்கனின் இந்த வடிவு பெண்ணவளை கிஞ்சித்தும் பாதித்ததாக தெரியவிலை. அவன் திரும்புவதற்காகவே காத்திருந்தது போல தனது கால்களின் நுனி விரலால் லேசாக எம்பி அவனது உதடுகளில் மென்மையாக முத்தமிட்டாள் பெண்ணவள். பாவாடை தாவணி அணிந்திருந்த பெண்ணவளின் தோற்றம் அவனை நிச்சயம் பாதித்தது. முத்தத்தின் வெம்மையை மென்மையாக அனுபவித்தவனின் கண்கள் இரண்டு சொட்டு கண்ணீரை வெளி சிந்தியது.

 

Author: Paithani
Article Title: Arangam 15.2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom