அரங்கம் 12
பெற்றவளை பார்க்க போகவில்லை என்றாலும் அப்பா கட்டிய சியாட்டல் வீட்டை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வந்தான்.இப்போது அங்கே ஒரு தமிழ் குடும்பம் குடியிருந்தது. அங்கே அந்த வீட்டின் தலைவர் பிரபலமான நிறுவனத்தில் வேலை . தலைவி நாட்டிய வகுப்புகள் நடத்துகிறார். இரண்டு குழந்தைகள். மூத்தவள் பெண்,இரண்டாவது ஆண் பிள்ளை என்று சொல்லியிருந்தார். அவர்களுடன் ரங்கனால் சுலபமாக பழக முடிந்தது. வீட்டு பெண்ணின் பெயர் ருக்மிணி. பையன் பெயர் அனிருத் என்றார்கள்.பெண்ணை ரங்கன் பார்த்ததே இல்லை. அவளது குரல் மட்டும் உள்ளிருந்து கேட்கும். ரங்கன் ஹால் விடுத்து மேற்கொண்டு சென்றது கிடையாது. அனிருத் ரங்கனுடன் கிரிக்கெட் அல்லது புட் பால் விளையாடுவான்.ரங்கனுக்கு தான் தனது நண்பர்களுடனும்,அப்பாவுடனும் விளையாடிய நிகழ்வுகள் மனதின் ஓரத்தில் மங்கலாக வந்து போகும். ருக்மிணியின் கைப்பக்குவம் என்று அவளது அம்மா ஏதாவது ஒன்றை சாப்பிட தரும்பொழுது அந்த பெண் பார்க்க எப்படி இருப்பாள் என்று மனதில் தோன்றாமல் இல்லை. இரண்டு குழந்தைகளும் பிறந்து வளர்ந்தது இங்கே அமெரிக்க மண்ணில்தான் என்றார்கள். ருக்மிணி இப்போது கல்லூரி மூன்றாவது ஆண்டு பொருளாதாரம் படிக்கிறாள். அனிருத் முதலாம் ஆண்டு கணிதம்.
ஏனோ அங்கே செல்வதும் அவர்களுடன் பழகுவதும் ரங்கனுக்கு பிடித்திருந்தது.அதை அவர்களிடம் வெளிப்படையாகவே சொல்லவும் செய்தான். ஒருவழியில் அவர்கள் திருவேங்கடத்திற்கு தூரத்து உறவு என்று பேசும்பொழுது தெரிந்து கொண்டான். அது இன்னமும் அவர்களுடன் இணக்கத்தை கொடுத்தது.
அவ்வளவு தூரம் செல்பவனுக்கு அங்கே இருக்கும் தனது அம்மாவை சென்று பார்க்கவேண்டும் என்று மட்டும் தோன்றவே இல்லை. அம்மாவுக்காக மனம் இளகியிருந்தது என்பது உண்மைதான். ஆனால், அது எவ்வளவு தூரம் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது.மாற்றங்கள் வெகு நிதானமாக தான் நிகழும்.
அந்த மாற்றம் அவனுக்கு நல்லதா இல்லையா என்று தெரியும் நாளும் வந்தது. ரங்கராஜனுக்கு கடுமையான காய்ச்சல் .எழுந்திருக்கவும் முடியாமல் சுருண்டு கிடந்தான்.நண்பர்கள் அவனுக்கு மருந்துகள் கொடுத்து பார்த்துக்கொண்டார்கள். மருத்துவரிடம் அப்பாயின்மென்ட் கிடைக்காமல் தாமதமாகிக் கொண்டிருந்தது.
அந்த நேரம் பார்த்து கடும் குளிர் வேறு வாட்டி எடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் நண்பர்கள் ரங்கனின் அம்மாவுக்கு அழைத்துவிட்டார்கள். தகவல் அறிந்ததும் அவசரமாக வந்து சேர்ந்தாள் மாலதி . அவளுடன் உதவிக்காக ஒருவரும் வந்திருந்தார்.இருவருமாக ரங்கனுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு அவனை ஒருவழியாக மாலதியின் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.
வீடு என்று என்னால் முடித்துவிட முடியவில்லை .எட்டாயிரம் சதுர அடிகளை கொண்ட ஒரு பங்களா.நம் ஊரில் அதை பங்களா என்று தானே சொல்லுவோம்! அதை தவிர வெளியே பரந்த புல்வெளியும் அதை ஒட்டிய நிலப்பரப்பில் ஒரு தோட்டமும் இருந்தது அங்கே . உறுதியாக சொல்லவேண்டுமேயானால் மாலதி இருக்க ஆசை கொண்டது இதுபோன்ற ஒரு இடத்த்தில் தான் எனும் அளவிற்க்கான அவர்களுக்கான பகுதி.
ரங்கனுக்காக முதல் தளத்தில் இருக்கும் ஒரு அறையை தெரிவு செய்திருந்தாள் மாலதி.அந்த அறையின் அடுத்தடுத்த அறைகளில் மாலதியின் மற்ற மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். குழந்தைகளா?என்று கேட்டீர்களேயானால் , எனது பதில் ஆம்! மூன்று குழந்தைகளின் அம்மாவாக இருக்கிறாள் மாலதி. ரங்கனை அழைத்துக்கொண்டு வர அவளுடன் வந்தவர் அவளது கணவர் மருத்துவர் ஹாரி.
இங்கே அமேரிக்கா வந்த பொழுது மாலதிக்கு அடிக்கடி மனசோர்வு ஏற்பட அதற்க்காக அவள் மருத்துவம் பார்த்துக்கொண்டது மருத்துவர் ஹாரியிடம் தான். பிறகு , அவளது அடுக்ககம் அருகிலேயே ஹாரியின் வீடும் அமைந்துவிடவும் முதலில் நட்பாக ஆரம்பித்தது பிறகு காதல் என்று ஆனது. நாற்பத்தைந்து வயதாகியும் ஏனோ ஹாரிக்கு திருமண உறவில் நாட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால் ,மாலதி எப்படியோ அவரது மனதிற்கு பிடித்தவளானாள். இப்போது பெரிய பெண்ணுக்கு ஏழு வயது,அடுத்தது இரட்டையர்கள் .அவர்களுக்கு வயது ஐந்து. இதுதான் இப்போது மாலதியின் கூடு. இருவருமாக இந்த பங்களாவை கட்டி இரண்டு வருஷங்கன்தான் ஆகிறது.
ஹாரி ,ரங்கனை வேறு நபராக பார்க்காமல் தனது மகனாகவே பார்த்தார். மாலதியின் மகன் தனக்கு அந்நியன் எனும் எண்ணம் அவருக்கு நிச்சயம் இல்லை. அற்புதமான மனிதர் அவர். அவரது வைத்தியத்தில் காய்ச்சல் குறைந்து இரண்டு நாட்களில் ஓரளவு தேறிவிட்டான் ரங்கன்.
ஒருவாரம் அங்கேதான் ரங்கனின் வாசம் . உடம்பு தெளிந்ததும் அவன் செய்த முதல் வேலை இந்தியாவுக்கு அழைத்து பேசியதுதான். அவர்கள் கவலை படுவார்கள் என்று வெகுவாக யோசித்திருந்தான். மாலதிக்கு மனதில் தன்னை பற்றி என்றாவது ரங்கன் இவ்வளவு யோசித்திருப்பானா என்று தோன்றாமல் இல்லை. அதை வெளிப்படையாக சொல்லவும் செய்தாள். ரங்கனிடமிருந்து பதில் இல்லை.
இந்த ஒரு வாரத்தில் ரங்கனுக்கு நிறைய விஷயங்கள் புரிந்தது. ஹாரியுடன் ஒரு அழகிய நட்புக்கூட துளிர்த்தது. ஆனால் , அவரை தனது இரண்டாவது அப்பாவாக அவனால் ஏற்க முடியாது.இதை அவன் அவரிடமே சொல்லவும் செய்தான். " சுந்தரம் தவிர வேறு யாருக்கும் அந்த உரிமையை தரமாட்டான் " என்பதை ரங்கன் அழுத்தமாக பதிவு செய்த பொழுது ஹாரி அவனை அணைத்துக்கொண்டார்." உன்னோட அப்பா ரொம்பவே லக்கி "என்று முடித்து விட்டார்.
அவ்வளவு சிறிய குழந்தைகளுடன் பழகுவதுதான் ரங்கனுக்கு சவாலாக இருந்தது. அதோடு அவர்களுக்கு இவன் அண்ணா வேறு.அழகிய தமிழில் அந்த குழந்தைகள் மூவரும் இவனை ‘அண்ணா’ என்று அழைத்தது வித்தியாசமாகவும் இருந்தது. இந்த அனுபவங்களை அவன் எதிர்பார்க்கவில்லை.இவ்வளவு வருஷங்களில் மாலதி தன்னை பற்றி எதுவும் சொன்னதும் இல்லை.
சிரித்துக்கொண்டே சுற்றினாலும் மாலதியின் மனதில் குற்ற உணர்வு தலை தூக்காமல் இல்லை.இவ்வளவு காலமாக தவறாக தெரியாதது இப்போது திருமண வயதில் இருக்கும் தலை மகனை பார்க்கும் பொழுது வெகுவாக நிறம் மாறித் தெரிந்தது.
இருபத்தியாறு வயது முடிந்து இப்போது இருபத்தியேழு வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் மகன்.இன்றின்றைக்கு திருமணம் முடிந்திருந்தால் ஒரு குழந்தைக்காவது தகப்பன் ஆகியிருப்பான் ரங்கன்.அப்படி இருக்கும் பொழுது அவனுக்கு மகள் வயதில் இருப்பவளை உனது தங்கைகள் ,தம்பி எண்டு சொல்லவும் மாலதிக்கு மனம் தவித்தது. இப்படியொரு தருணம் தனது வாழ்வில் வரவும் கூடும் என்று அவள் என்ன கனவா கண்டாள்?
இத்தனை வருஷ அமெரிக்க வாழ்க்கையில் சில சமயங்களை கடக்கும் பொழுது மனம் இந்தியத்தனமாய் யோசிப்பதை தவிர்க்கவும் முடியவில்லை. உள்ளுக்குள் புழுங்கினாள் மாலதி. ஹாரியிடம் இரவுகளின் தனிமையில் புலம்பினாள். அவருக்கு புரிந்தது.ஒருவேளை சாதாரண மனிதனாக இருந்திருந்தால் அவளை புரிந்துகொள்வது கடினமாக இருந்திருக்கும். அவளுக்கு மனநல சிகிச்சை அளித்த மருத்துவர் என்பதாலோ என்னவோ அவளை ஹாரியால் சுலபமாக கையாள முடிந்தது.
ரங்கனிடம் பேசும் சமயத்தில் மாலதிக்கு தெரியாமல் அவளது மனம் என்ன யோசிக்கிறது என்பதை இலைமறைவு காயாக சொல்லவும் செய்தார். இப்போது ரங்கனுக்கு தான் மனது கஷ்டமானது. அம்மாவுக்கென்று தனியாக ஒரு வாழ்க்கை இருக்கக்கூடும் என்ற ஊகம் அவனுக்கு வெகு காலம் முன்பே உண்டு. அதை பற்றியெல்லாம் அவனுக்கு பெரியதாக அக்கறை இல்லை.அவனது உலகத்தில் அப்பா ,தாத்தா திருவேங்கடம்,பாட்டி கோதை. அவ்வளவுதான்.
இங்கே அம்மாவை வந்து அவளது வீட்டில் பார்க்கவும் தவிர்த்ததற்கு காரணமும் இதுதான்.யாரிடமும் அவன் இதைப்பற்றியெல்லாம் வெளிப்படையாக பேசியது இல்லை. ஒருவேளை அப்பாவுக்கும் இது தெரிந்திருக்கலாம்.அவர் அம்மாவை குற்றமாக ஒரு வார்த்தையும் சொன்னது இல்லை.
இப்போது அம்மாவின் மனநிலை மகனுக்கு சங்கடத்தை கொடுக்கிறது . என்ன செய்வது என்று தெரியவில்லை.அதையும் ஹாரியிடமே கேட்டான்,"இதுக்குதான் நா இவங்கள பாக்க வரதையே தவிர்த்தேன் ஹாரி. இப்போ பாருங்க . நா என்ன செஞ்சா அவங்க ரிலாக்ஸ் ஆவாங்க"?
ஹாரி சற்று நேரம் அமைதியாகி விட்டார். அவருக்கும் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருந்தது. இது நிஜமாகவே ஒரு சங்கடமான விஷயம் தான் என்றது அவர் மனம்.ரங்கனையே சற்று நேரம் பார்த்திருந்தவர்,"உனக்கு இந்த விஷயத்துனால ஏதாவது மனசு சங்கடம் இருக்கா ரங்கன்"? என்றார்.
வாய்விட்டே சிரித்துவிட்டான் ரங்கன். "என்னோட மனசுக்கு நெருங்கியவங்க பற்றி கேட்டா நிச்சயம் என்னோட பதில் வேறே தான்.பட், இவங்க என்னோட லைஃப் விட்டு போய் பல வருஷங்கள் கடந்தாச்சு.இவங்கள பாக்குற வரைக்கும் இவங்க முகம் கூட எனக்கு ஞாபகம் இல்ல.அப்படி இருக்கும் பொழுது நா எப்படி ரியாக்ட் பண்ணனும்னு சொல்லுங்க ஹாரி!"
ரங்கனிடமிருந்து ஹாரி நிச்சயம் இவ்வாறான பதிலை எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவரது முகத்திலேயே தெரிந்தது.அதோடு ஒரு அதிருப்தியும் பரவி இருப்பதை ரங்கன் உணர்ந்தான்.
"ஸாரி ஹாரி.என்ன இருந்தாலும் உங்க ஒய்ப் பத்தி இப்படி நா பேசியிருக்க கூடாது.பட், என்னோட ஸ்டாண்ட் இதுதான். இதுலேந்து மாறமாட்டேன்.இவங்களால எங்கப்பாவுக்கு என்ன மாதிரி பாதிப்பு வந்ததுன்னு எனக்கு தெரியும்.அதோட எல்லோரும் பேமிலியா இருக்கும் பொழுது இவங்களோட எதிர்பார்ப்புனால நா எவ்ளோ அஃபெக்ட் ஆனேன்னு அவங்களால கூட புரிஞ்சுக்க முடியாது.அஃப்கோர்ஸ் இது முழுக்க முழுக்க என்னோட அண்ட் என்னோட அப்பாவோட வலி.அஸ் எ தேர்ட் பெர்சன் உங்களாலயும் ஒரு கட்டத்துக்கு மேலே புரிஞ்சுக்க முடியாது என்றான்.
இவனது இழப்புகளுக்கு நிச்சயம் ஹாரியிடம் பதில் இல்லை. மாலதியின் மனா இறுக்கத்திற்கு மகன் அருகில் இல்லை என்பதும் ஒரு காரணமாக இருந்தது.அதை சொன்னால் இந்த சூழ்நிலையில் ரங்கனால் ஒத்துக்கொள்ளவும் முடியாது என்று ரங்கனின் வார்த்தைகளில் அமைதியாக தனது கவனத்தை பதித்தார்.
ரங்கன் தொடர்ந்தான்." என்னோட சின்ன வயசுல அவங்களோட பேரண்ட்ஸ்கிட்டே விட்டு என்னை வளர்த்தாங்க.அப்பாவோட தோல்விகளை வைத்து குடும்பமாக திட்டுவாங்க.இத்தனைக்கும் சொந்த மாமா மகன் தான் என்னோட அப்பா.அப்படியும் இவங்களால அட்ஜெட்ஸ் பண்ண முடியல.என்னோட டீன் ஏஜ் நரகமா கழிய இவங்க தானே காரணம்?
ஹாரிக்கு இப்போது ரங்கனின் மன நிலையும், தனது சகதர்மினி செய்த தவறுகளும் புரிந்தது. முடிவாக தனது கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ரங்கன் சொன்னான்,"அம் வெரி மச் ஹாபி போர் ஹெர். இப்போவாவது கமிட்மென்ட் ஓபெய் பண்ண தயாராக இருக்காங்களே!"
ரங்கனின் வார்த்தைகள் ஹாரியை சட்டென தாக்கியதில் முகம் சுருங்கித்தான் போனது. அமெரிக்காவில் வேண்டுமானால் விவாகரத்து சகஜமாக இருக்கலாம். பிள்ளைகள் அதை பற்றியெல்லாம் பெரியதாக வருத்தம் கொள்வதில்லை.பதின்ம வயதுகளில் தங்களின் வாழ்க்கையை தெரிவு செய்துகொள்ளும் நம்பிக்கை இங்குள்ள குழந்தைகளுக்கு உண்டு. இந்திய குழந்தைகள் முற்றிலும் வேறு வகையான மனது நிலையை கொண்டவர்கள் என்பது அவருக்கு புரிந்து போனது.
அவனுக்கு என்ன ஆறுதல் மொழிகளை சொல்வது என்று தெரியாமல் சட்டென எழுந்து அமர்ந்திருக்கும் ரங்கனை ஆரத்தழுவி கொண்டார்.ரங்கனின் கண்ணீரே அவனது மனம் கொண்ட வேதனைகளுக்கு சாட்சி.
பெற்றவளை பார்க்க போகவில்லை என்றாலும் அப்பா கட்டிய சியாட்டல் வீட்டை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வந்தான்.இப்போது அங்கே ஒரு தமிழ் குடும்பம் குடியிருந்தது. அங்கே அந்த வீட்டின் தலைவர் பிரபலமான நிறுவனத்தில் வேலை . தலைவி நாட்டிய வகுப்புகள் நடத்துகிறார். இரண்டு குழந்தைகள். மூத்தவள் பெண்,இரண்டாவது ஆண் பிள்ளை என்று சொல்லியிருந்தார். அவர்களுடன் ரங்கனால் சுலபமாக பழக முடிந்தது. வீட்டு பெண்ணின் பெயர் ருக்மிணி. பையன் பெயர் அனிருத் என்றார்கள்.பெண்ணை ரங்கன் பார்த்ததே இல்லை. அவளது குரல் மட்டும் உள்ளிருந்து கேட்கும். ரங்கன் ஹால் விடுத்து மேற்கொண்டு சென்றது கிடையாது. அனிருத் ரங்கனுடன் கிரிக்கெட் அல்லது புட் பால் விளையாடுவான்.ரங்கனுக்கு தான் தனது நண்பர்களுடனும்,அப்பாவுடனும் விளையாடிய நிகழ்வுகள் மனதின் ஓரத்தில் மங்கலாக வந்து போகும். ருக்மிணியின் கைப்பக்குவம் என்று அவளது அம்மா ஏதாவது ஒன்றை சாப்பிட தரும்பொழுது அந்த பெண் பார்க்க எப்படி இருப்பாள் என்று மனதில் தோன்றாமல் இல்லை. இரண்டு குழந்தைகளும் பிறந்து வளர்ந்தது இங்கே அமெரிக்க மண்ணில்தான் என்றார்கள். ருக்மிணி இப்போது கல்லூரி மூன்றாவது ஆண்டு பொருளாதாரம் படிக்கிறாள். அனிருத் முதலாம் ஆண்டு கணிதம்.
ஏனோ அங்கே செல்வதும் அவர்களுடன் பழகுவதும் ரங்கனுக்கு பிடித்திருந்தது.அதை அவர்களிடம் வெளிப்படையாகவே சொல்லவும் செய்தான். ஒருவழியில் அவர்கள் திருவேங்கடத்திற்கு தூரத்து உறவு என்று பேசும்பொழுது தெரிந்து கொண்டான். அது இன்னமும் அவர்களுடன் இணக்கத்தை கொடுத்தது.
அவ்வளவு தூரம் செல்பவனுக்கு அங்கே இருக்கும் தனது அம்மாவை சென்று பார்க்கவேண்டும் என்று மட்டும் தோன்றவே இல்லை. அம்மாவுக்காக மனம் இளகியிருந்தது என்பது உண்மைதான். ஆனால், அது எவ்வளவு தூரம் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது.மாற்றங்கள் வெகு நிதானமாக தான் நிகழும்.
அந்த மாற்றம் அவனுக்கு நல்லதா இல்லையா என்று தெரியும் நாளும் வந்தது. ரங்கராஜனுக்கு கடுமையான காய்ச்சல் .எழுந்திருக்கவும் முடியாமல் சுருண்டு கிடந்தான்.நண்பர்கள் அவனுக்கு மருந்துகள் கொடுத்து பார்த்துக்கொண்டார்கள். மருத்துவரிடம் அப்பாயின்மென்ட் கிடைக்காமல் தாமதமாகிக் கொண்டிருந்தது.
அந்த நேரம் பார்த்து கடும் குளிர் வேறு வாட்டி எடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் நண்பர்கள் ரங்கனின் அம்மாவுக்கு அழைத்துவிட்டார்கள். தகவல் அறிந்ததும் அவசரமாக வந்து சேர்ந்தாள் மாலதி . அவளுடன் உதவிக்காக ஒருவரும் வந்திருந்தார்.இருவருமாக ரங்கனுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு அவனை ஒருவழியாக மாலதியின் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.
வீடு என்று என்னால் முடித்துவிட முடியவில்லை .எட்டாயிரம் சதுர அடிகளை கொண்ட ஒரு பங்களா.நம் ஊரில் அதை பங்களா என்று தானே சொல்லுவோம்! அதை தவிர வெளியே பரந்த புல்வெளியும் அதை ஒட்டிய நிலப்பரப்பில் ஒரு தோட்டமும் இருந்தது அங்கே . உறுதியாக சொல்லவேண்டுமேயானால் மாலதி இருக்க ஆசை கொண்டது இதுபோன்ற ஒரு இடத்த்தில் தான் எனும் அளவிற்க்கான அவர்களுக்கான பகுதி.
ரங்கனுக்காக முதல் தளத்தில் இருக்கும் ஒரு அறையை தெரிவு செய்திருந்தாள் மாலதி.அந்த அறையின் அடுத்தடுத்த அறைகளில் மாலதியின் மற்ற மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். குழந்தைகளா?என்று கேட்டீர்களேயானால் , எனது பதில் ஆம்! மூன்று குழந்தைகளின் அம்மாவாக இருக்கிறாள் மாலதி. ரங்கனை அழைத்துக்கொண்டு வர அவளுடன் வந்தவர் அவளது கணவர் மருத்துவர் ஹாரி.
இங்கே அமேரிக்கா வந்த பொழுது மாலதிக்கு அடிக்கடி மனசோர்வு ஏற்பட அதற்க்காக அவள் மருத்துவம் பார்த்துக்கொண்டது மருத்துவர் ஹாரியிடம் தான். பிறகு , அவளது அடுக்ககம் அருகிலேயே ஹாரியின் வீடும் அமைந்துவிடவும் முதலில் நட்பாக ஆரம்பித்தது பிறகு காதல் என்று ஆனது. நாற்பத்தைந்து வயதாகியும் ஏனோ ஹாரிக்கு திருமண உறவில் நாட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால் ,மாலதி எப்படியோ அவரது மனதிற்கு பிடித்தவளானாள். இப்போது பெரிய பெண்ணுக்கு ஏழு வயது,அடுத்தது இரட்டையர்கள் .அவர்களுக்கு வயது ஐந்து. இதுதான் இப்போது மாலதியின் கூடு. இருவருமாக இந்த பங்களாவை கட்டி இரண்டு வருஷங்கன்தான் ஆகிறது.
ஹாரி ,ரங்கனை வேறு நபராக பார்க்காமல் தனது மகனாகவே பார்த்தார். மாலதியின் மகன் தனக்கு அந்நியன் எனும் எண்ணம் அவருக்கு நிச்சயம் இல்லை. அற்புதமான மனிதர் அவர். அவரது வைத்தியத்தில் காய்ச்சல் குறைந்து இரண்டு நாட்களில் ஓரளவு தேறிவிட்டான் ரங்கன்.
ஒருவாரம் அங்கேதான் ரங்கனின் வாசம் . உடம்பு தெளிந்ததும் அவன் செய்த முதல் வேலை இந்தியாவுக்கு அழைத்து பேசியதுதான். அவர்கள் கவலை படுவார்கள் என்று வெகுவாக யோசித்திருந்தான். மாலதிக்கு மனதில் தன்னை பற்றி என்றாவது ரங்கன் இவ்வளவு யோசித்திருப்பானா என்று தோன்றாமல் இல்லை. அதை வெளிப்படையாக சொல்லவும் செய்தாள். ரங்கனிடமிருந்து பதில் இல்லை.
இந்த ஒரு வாரத்தில் ரங்கனுக்கு நிறைய விஷயங்கள் புரிந்தது. ஹாரியுடன் ஒரு அழகிய நட்புக்கூட துளிர்த்தது. ஆனால் , அவரை தனது இரண்டாவது அப்பாவாக அவனால் ஏற்க முடியாது.இதை அவன் அவரிடமே சொல்லவும் செய்தான். " சுந்தரம் தவிர வேறு யாருக்கும் அந்த உரிமையை தரமாட்டான் " என்பதை ரங்கன் அழுத்தமாக பதிவு செய்த பொழுது ஹாரி அவனை அணைத்துக்கொண்டார்." உன்னோட அப்பா ரொம்பவே லக்கி "என்று முடித்து விட்டார்.
அவ்வளவு சிறிய குழந்தைகளுடன் பழகுவதுதான் ரங்கனுக்கு சவாலாக இருந்தது. அதோடு அவர்களுக்கு இவன் அண்ணா வேறு.அழகிய தமிழில் அந்த குழந்தைகள் மூவரும் இவனை ‘அண்ணா’ என்று அழைத்தது வித்தியாசமாகவும் இருந்தது. இந்த அனுபவங்களை அவன் எதிர்பார்க்கவில்லை.இவ்வளவு வருஷங்களில் மாலதி தன்னை பற்றி எதுவும் சொன்னதும் இல்லை.
சிரித்துக்கொண்டே சுற்றினாலும் மாலதியின் மனதில் குற்ற உணர்வு தலை தூக்காமல் இல்லை.இவ்வளவு காலமாக தவறாக தெரியாதது இப்போது திருமண வயதில் இருக்கும் தலை மகனை பார்க்கும் பொழுது வெகுவாக நிறம் மாறித் தெரிந்தது.
இருபத்தியாறு வயது முடிந்து இப்போது இருபத்தியேழு வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் மகன்.இன்றின்றைக்கு திருமணம் முடிந்திருந்தால் ஒரு குழந்தைக்காவது தகப்பன் ஆகியிருப்பான் ரங்கன்.அப்படி இருக்கும் பொழுது அவனுக்கு மகள் வயதில் இருப்பவளை உனது தங்கைகள் ,தம்பி எண்டு சொல்லவும் மாலதிக்கு மனம் தவித்தது. இப்படியொரு தருணம் தனது வாழ்வில் வரவும் கூடும் என்று அவள் என்ன கனவா கண்டாள்?
இத்தனை வருஷ அமெரிக்க வாழ்க்கையில் சில சமயங்களை கடக்கும் பொழுது மனம் இந்தியத்தனமாய் யோசிப்பதை தவிர்க்கவும் முடியவில்லை. உள்ளுக்குள் புழுங்கினாள் மாலதி. ஹாரியிடம் இரவுகளின் தனிமையில் புலம்பினாள். அவருக்கு புரிந்தது.ஒருவேளை சாதாரண மனிதனாக இருந்திருந்தால் அவளை புரிந்துகொள்வது கடினமாக இருந்திருக்கும். அவளுக்கு மனநல சிகிச்சை அளித்த மருத்துவர் என்பதாலோ என்னவோ அவளை ஹாரியால் சுலபமாக கையாள முடிந்தது.
ரங்கனிடம் பேசும் சமயத்தில் மாலதிக்கு தெரியாமல் அவளது மனம் என்ன யோசிக்கிறது என்பதை இலைமறைவு காயாக சொல்லவும் செய்தார். இப்போது ரங்கனுக்கு தான் மனது கஷ்டமானது. அம்மாவுக்கென்று தனியாக ஒரு வாழ்க்கை இருக்கக்கூடும் என்ற ஊகம் அவனுக்கு வெகு காலம் முன்பே உண்டு. அதை பற்றியெல்லாம் அவனுக்கு பெரியதாக அக்கறை இல்லை.அவனது உலகத்தில் அப்பா ,தாத்தா திருவேங்கடம்,பாட்டி கோதை. அவ்வளவுதான்.
இங்கே அம்மாவை வந்து அவளது வீட்டில் பார்க்கவும் தவிர்த்ததற்கு காரணமும் இதுதான்.யாரிடமும் அவன் இதைப்பற்றியெல்லாம் வெளிப்படையாக பேசியது இல்லை. ஒருவேளை அப்பாவுக்கும் இது தெரிந்திருக்கலாம்.அவர் அம்மாவை குற்றமாக ஒரு வார்த்தையும் சொன்னது இல்லை.
இப்போது அம்மாவின் மனநிலை மகனுக்கு சங்கடத்தை கொடுக்கிறது . என்ன செய்வது என்று தெரியவில்லை.அதையும் ஹாரியிடமே கேட்டான்,"இதுக்குதான் நா இவங்கள பாக்க வரதையே தவிர்த்தேன் ஹாரி. இப்போ பாருங்க . நா என்ன செஞ்சா அவங்க ரிலாக்ஸ் ஆவாங்க"?
ஹாரி சற்று நேரம் அமைதியாகி விட்டார். அவருக்கும் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருந்தது. இது நிஜமாகவே ஒரு சங்கடமான விஷயம் தான் என்றது அவர் மனம்.ரங்கனையே சற்று நேரம் பார்த்திருந்தவர்,"உனக்கு இந்த விஷயத்துனால ஏதாவது மனசு சங்கடம் இருக்கா ரங்கன்"? என்றார்.
வாய்விட்டே சிரித்துவிட்டான் ரங்கன். "என்னோட மனசுக்கு நெருங்கியவங்க பற்றி கேட்டா நிச்சயம் என்னோட பதில் வேறே தான்.பட், இவங்க என்னோட லைஃப் விட்டு போய் பல வருஷங்கள் கடந்தாச்சு.இவங்கள பாக்குற வரைக்கும் இவங்க முகம் கூட எனக்கு ஞாபகம் இல்ல.அப்படி இருக்கும் பொழுது நா எப்படி ரியாக்ட் பண்ணனும்னு சொல்லுங்க ஹாரி!"
ரங்கனிடமிருந்து ஹாரி நிச்சயம் இவ்வாறான பதிலை எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவரது முகத்திலேயே தெரிந்தது.அதோடு ஒரு அதிருப்தியும் பரவி இருப்பதை ரங்கன் உணர்ந்தான்.
"ஸாரி ஹாரி.என்ன இருந்தாலும் உங்க ஒய்ப் பத்தி இப்படி நா பேசியிருக்க கூடாது.பட், என்னோட ஸ்டாண்ட் இதுதான். இதுலேந்து மாறமாட்டேன்.இவங்களால எங்கப்பாவுக்கு என்ன மாதிரி பாதிப்பு வந்ததுன்னு எனக்கு தெரியும்.அதோட எல்லோரும் பேமிலியா இருக்கும் பொழுது இவங்களோட எதிர்பார்ப்புனால நா எவ்ளோ அஃபெக்ட் ஆனேன்னு அவங்களால கூட புரிஞ்சுக்க முடியாது.அஃப்கோர்ஸ் இது முழுக்க முழுக்க என்னோட அண்ட் என்னோட அப்பாவோட வலி.அஸ் எ தேர்ட் பெர்சன் உங்களாலயும் ஒரு கட்டத்துக்கு மேலே புரிஞ்சுக்க முடியாது என்றான்.
இவனது இழப்புகளுக்கு நிச்சயம் ஹாரியிடம் பதில் இல்லை. மாலதியின் மனா இறுக்கத்திற்கு மகன் அருகில் இல்லை என்பதும் ஒரு காரணமாக இருந்தது.அதை சொன்னால் இந்த சூழ்நிலையில் ரங்கனால் ஒத்துக்கொள்ளவும் முடியாது என்று ரங்கனின் வார்த்தைகளில் அமைதியாக தனது கவனத்தை பதித்தார்.
ரங்கன் தொடர்ந்தான்." என்னோட சின்ன வயசுல அவங்களோட பேரண்ட்ஸ்கிட்டே விட்டு என்னை வளர்த்தாங்க.அப்பாவோட தோல்விகளை வைத்து குடும்பமாக திட்டுவாங்க.இத்தனைக்கும் சொந்த மாமா மகன் தான் என்னோட அப்பா.அப்படியும் இவங்களால அட்ஜெட்ஸ் பண்ண முடியல.என்னோட டீன் ஏஜ் நரகமா கழிய இவங்க தானே காரணம்?
ஹாரிக்கு இப்போது ரங்கனின் மன நிலையும், தனது சகதர்மினி செய்த தவறுகளும் புரிந்தது. முடிவாக தனது கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ரங்கன் சொன்னான்,"அம் வெரி மச் ஹாபி போர் ஹெர். இப்போவாவது கமிட்மென்ட் ஓபெய் பண்ண தயாராக இருக்காங்களே!"
ரங்கனின் வார்த்தைகள் ஹாரியை சட்டென தாக்கியதில் முகம் சுருங்கித்தான் போனது. அமெரிக்காவில் வேண்டுமானால் விவாகரத்து சகஜமாக இருக்கலாம். பிள்ளைகள் அதை பற்றியெல்லாம் பெரியதாக வருத்தம் கொள்வதில்லை.பதின்ம வயதுகளில் தங்களின் வாழ்க்கையை தெரிவு செய்துகொள்ளும் நம்பிக்கை இங்குள்ள குழந்தைகளுக்கு உண்டு. இந்திய குழந்தைகள் முற்றிலும் வேறு வகையான மனது நிலையை கொண்டவர்கள் என்பது அவருக்கு புரிந்து போனது.
அவனுக்கு என்ன ஆறுதல் மொழிகளை சொல்வது என்று தெரியாமல் சட்டென எழுந்து அமர்ந்திருக்கும் ரங்கனை ஆரத்தழுவி கொண்டார்.ரங்கனின் கண்ணீரே அவனது மனம் கொண்ட வேதனைகளுக்கு சாட்சி.
Author: Paithani
Article Title: Arangam 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Arangam 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.