அரங்கம் 10
தகுதித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்ததால் ரங்கனுக்கு அமெரிக்காவின் முதன்மை நிலையிலுள்ள பல்கலைக் கழகத்திலே மேலே எம் எஸ் படிக்கும் வாய்ப்பு பெற்றான் ரங்கராஜன். கிளம்புவதற்கு முன்னே மூன்று மாதங்களுக்கு முன்பே வேலையை விடுத்தான். இரன்டு வருஷங்களாக வேலை செய்ததில் ஓரளவுக்கு கையில் பணமும் சேர்ந்திருந்தது. சுந்தரம் தனது சீரங்கத்து வீட்டை சொத்து மதிப்பு ஆவணமாக காண்பித்திருந்தான். என்றோ வாங்கியது.இன்று தனது மகனின் வருங்காலத்திற்கு துணை செய்வதில் சுந்தரத்திற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
ஏனோ மாலதி தனது பெற்றவர்களுக்கென சென்னையில் வாங்கியிருந்த வீடு அசௌகரியமாக சுந்தரத்திற்கு ஞாபகம் வந்தது. மனைவியின் வீட்டில் கணவனுக்குத்தான் இடமில்லை என்று நினைத்தால் அவள் பெற்ற பிள்ளைக்குமாக இடமில்லை என்று விட்டார்கள் என்ற ஆயாசம் பொங்கியது. இப்போது மாலதி அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றுவிட்டதாக நெருங்கிய சொந்தத்தில் சொன்னார்கள்.சுந்தரத்திற்கு எல்லாம் வெறும் தகவல்கள் தான்.அவன் குடும்பங்களில் நடக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் செல்வது இல்லை.
மாலதி பற்றிய எண்ணங்கள் பொதுவாக சுந்தரத்திற்கு வருவதில்லை.அப்படி வரும்பொழுது வேறு வேலைகளில் தன்னை நுழைத்துக்கொள்வான். ஆனால்,இந்த தருணங்களில் அவளது ஞாபகங்கள் சுந்தரத்திற்கு கசந்து உள்நுழைந்தது. ரங்கனுக்குமே அவனது அம்மாவின் ஞாபகங்கள் வருவதை தவிர்க்க முடியவில்லை. இன்னமும் மாலதி இவனது செலவினங்களுக்காக பணத்தை அனுப்புவதை விடவில்லை. தனது மகன் என்ற பாசம் உண்டு.அதற்க்கு அவளிடம் அளவு கோளும் வைத்திருந்ததால் அம்மா பிள்ளை நெருக்கம் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.
ரங்கன் தனது அம்மாவுக்கு மெயில் அனுப்பினான். பல்கலை கழகத்தின் பெயரை குறிப்பிட்டு அவன் அனுப்பியிருந்த மெயிலுக்கு இரண்டு நாட்கள் கழித்து மாலதியிடமிருந்து பதில் வந்தது.
" ஆல் தி பெஸ்ட் ரங்கா..அம்மாவுக்கு போன் செஞ்சு சொல்லணும் னு உனக்கு தோணல. வாட்ஸாப்ப் ல கூப்பிட்டு இருக்கலாம்.வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்திருக்கலாம். இது எதுவுமே வேணாமுன்னு மெயில் அனுப்பி இருக்கற.அதாவது எனக்கு நீ சொல்றது ஒரு தகவல். அவ்ளோ தானே!"
அம்மாவின் பதில் மெயிலை படித்தவனுக்கு சிரிப்புதான் வந்தது.கடந்த ஏழு வருஷங்களில் அம்மாவுடன் ஏழுமுறை பேசியிருந்தால் அதிசயம். பத்தாம் வகுப்பில் அதிகமான மதிப்பெண்கள் எடுத்திருந்த பொழுதும் கூட அம்மாவிடமிருந்து நேரடி பேச்சுகள் எதுவும் இல்லை. பன்னிரண்டாம் வகுப்பு பொறியியல் படிப்பு வேலை என்று ரங்கனுக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு முக்கிய நிலையிலும் துணை இருந்தது அப்பாவும் தாத்தா பாட்டியும் தான். இன்று வரை அப்பா தனக்கென்று மனநிலை பிரச்சனைகள் இருக்கும்பொழுதும் கூட என்னை விட்டு கொடுக்கவில்லை.இவர்கள் என்னை தேற்றாவிட்டால் ,நான் இப்போது எந்த நிலையில் இருந்திருப்பேனோ "என்று நினைத்தவனுக்கு கண்களில் நீர் திரையிட்டது. அம்மாவிடம் அவனுக்கு பெரியதாக பாசமோ ஈடுபாடோ நிச்சயம் இல்லை.
மாலதி ரங்கனின் நட்பு வட்டத்தில் கூட இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை!
பாட்டி தாத்தா அப்பா என்று அவனது சீரங்கத்து உலகம் சந்தோஷமாக கழிந்தது.இப்போது அமேரிக்கா சென்றால் இருக்கும் நிலைக்கு எப்போது திரும்ப வருவானோ தெரியாது. தனது உலகத்து மனிதர்களுடன் சீரங்கத்தை சுற்றினான். அருகே இருக்கும் திருவானைக்காவல்,திருச்சி கும்பகோணம் என்று முடிவில்லாத பயணங்கள்.தாத்தா திருவேங்கடம் கூட சொன்னார்,"கண்ணா..இந்த வயசான கிழடுகளை கூட்டிண்டு,எங்களுக்கு தேவையானதை பார்த்துண்டு இப்படி கோவில் கோவிலா ஏண்டா அலையற?உன்னோட நண்பர்களோட வெளியே போய்ட்டு வா.. என்ஜோய் பண்ணு" என்று. ரங்கன் கேட்கவில்லை. அவனுக்குத்தான் தெரியும் அவனது வலி.இவர்களை விட்டு இருக்கவேண்டும் என்ற வார்த்தை கூட பிடிக்கவில்லை. ஆண்பிள்ளைகள் அழக்கூடாது என்று யாரோ என்றோ அகஸ்மாத்தமாக சொல்லியது.அதனால் அழாமல் சமாளிக்கிறான்.
மூன்று மாதங்கள் வேகமாக கற்பூரம் போல காற்றில் கரைந்து போனது. அவன் கிளம்பவேண்டிய நேரம் மணிக்கணக்கில் வந்து நின்றது.ஏற்கனவே ரங்கனுடன் கல்லூரியில் படித்த சில நண்பர்கள் அதே பல்கலைக்கழகத்தில் இரண்டாவது வருஷம் படிக்கிறார்கள். நியூ யார்க் நகர விமான நிலையத்தில் வந்து அழைத்து செல்வதாக சொல்லிவிட்டதால் அது பற்றிய பதட்டமெல்லாம் ரங்கனுக்கு இல்லை. பல்கலைக் கழகத்தின் அருகில் அவர்களுடனேயே ஜாகை.(தங்கிக்கொள்ளுவது )என்று ஏற்பாடாகிவிட்டது.கல்லூரி திறக்க இன்னும் முழுதாக இரண்டு வாரங்கள் உண்டு.
அப்பா சுந்தரம் தனது உழைப்பில் உருவாகியிருந்த சியாடல் வீட்டின் சாவிபிரதியை கொடுத்தனுப்பியிருந்தான். அந்த வீட்டுக்கு உண்மையில் கி நம்பர் உண்டு.அதெல்லாம் சுந்தரத்திற்கு ஞாபகம் இல்லை.இப்போது புதியதாக ஒரு பஞ்சாபிய குடும்பம் அங்கே குடியிருக்கிறார்கள் என்றும் அவர்களது விபரக் குறிப்புகளையும் சொல்லி அனுப்பியிருந்தான்.
திருச்சி விமான நிலையத்தில் சுந்தரத்துடன் kodhai-திருவேங்கடமும் வந்திருந்தார்கள். பேரன் படிப்பதற்காக வேறு தேசம் செல்கிறான். பல வருஷங்களுக்கு முன்பு மகனும் கூட படிக்க சென்றான். அன்று மகனை இஷ்டமில்லாமல் அனுப்பிவைத்த திருவேங்கடம் இன்று பேரனை முழு மனதுடன் ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்.சுந்தரம் ரங்கனை இறுக்கி அணைத்து கொண்டு உச்சி முகர்ந்தான். அவன் கண்களில் எதிர்பார்ப்புகள் வர்ணஜாலம் காட்டியது.ரங்கனும் அதை கண்டுகொண்டான்.இருவருக்குமான மௌனம் பல ஆயிரம் அர்த்தங்களை சுமந்து கொண்டிருந்தது. ரங்கன் விமானம் ஏறும்வரை அங்கே விமான நிலையத்தில் இருந்தவர்கள் அவர்களும் கிளம்பினார்கள்.
கோதை அகத்துக்குள் நுழைந்த வேகத்தில் சுவாமி அறையில் சென்று உட்கார்ந்துவிட்டார். அவரது கண்கள் மூடியிருந்த நிலையில் அவர் ஆழ்ந்த பிரார்த்தனையில் அமர்ந்திருப்பதை உணர முடிந்தது. பேரனுக்கான பிரார்த்தனை. விமானத்தில் அமர்ந்திருந்த ரங்கனுக்கு வீட்டின் ஞாபகங்கள். இதுதான் என்னுடைய தேசம்.நான் இந்தியன் என்று மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
லண்டன் வழியாக அமெரிக்க பயணம். சற்று வித்தியாசமான அனுபவமாக ரங்கனுக்கு இருந்தது.சிறு வயதில் பெற்றவர்களுடன் வந்தது. பிறகு எல்லோருமே இந்தியா வந்துவிட விமானத்தின் தேவை இருந்திருக்கவில்லை. தான் பிறந்து சில வருஷங்கள் தன்னை வளர்த்து தாங்கிக்கொண்ட தேசத்திற்கு செல்கிறான். மனம் மோன நிலையில் இருந்தது.
கோதையை நெருங்கி வந்த திருவேங்கடம் மனைவியின் தோளை லேசாக அழுத்தினார். கண்களை திறந்த கோதை கணவனை என்னவென்று பார்த்து வைத்தாள். வயது அதிகம் இல்லை ஆதலால் கோதையை பார்ப்பவர்கள் ரங்கனின் அம்மா என்று சில சமயங்களில் அடையாளப்படுத்துவது உண்டு. ரங்கனுக்கும் சில சமயங்களில் கோதையை அம்மா என்று அழைக்க பிடிக்கும்.மாலதிக்கு பிறகு முழுமையாக அம்மா என்ற ஸ்தானத்தை அலங்கரித்தது கோதைப்பாட்டி தான். ஒருவகையில் தனது சொந்த மகனை பிரிந்தது போல உணர்ந்தாள் கோதை பாட்டி.
"ரங்கனோட ஜாதகம் ரொம்ப விசேஷமானது கோதை. சாதாரணமானவன் இல்ல உம்பேரன். ராஜ்ஜியம் பண்ணுவான். பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவான். அவனை கூண்டுக்குள்ள அடைச்சு வைக்க கூடாதும்மா. அழாத.குழந்தை சாதிக்க பிறந்திருக்கான்" என்று ஆறுதல் சொன்ன கணவரை நிஜமாவா!என்று பார்த்தது பாட்டியின் விழிகள்.
நியூயார்க்கில் சொன்னபடிக்கு அவனது தோழமைகள் வந்து ரங்கனை அழைத்து சென்றார்கள். மொத்தம் நான்குபேர் ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தார்கள்.இப்போது ஐந்தாவதாக ரங்கன் வந்து அந்த ஜோதியில் ஐக்கியமாகிக்கொண்டான். ஜெட்லாக் படுத்த சமாளிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டான். மூன்று நாட்கள் ஆனது அவனுக்கு உடல்நிலை அங்கே பழக.அவனை யாரும் தொந்தரவு செய்யவில்லை. நான்குபேரும் கல்விக்கடனை வாங்கி இங்கே வந்தவர்கள் தான். படித்து நல்ல நிலைமையில் அமரவேண்டும்.நிறைய சம்பாதிக்க வேண்டும். பெற்றவர்களின் வாழ்க்கை தரத்தை இன்னமும் கொஞ்சம் உயர்த்த வேண்டும். டாலர்களில் பணம் வேண்டும் என்ற கனவுகளை சுமந்துகொண்டு இங்கே வந்திருப்பவர்கள்தான்.
அங்கே இருந்த நால்வருமே பகுதிநேர வேலை செய்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். ஒருவன் பெட்ரோல் பங்கில் வேலை.இன்னொருவன் ஹோட்டலில் வைட்டராக இருக்கிறான். ஒரு மாணவன் பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியருக்கு கீழே அவர் சொல்லும் வேலைகளை செய்கிறான்.இன்னொரு மாணவன் அருகில் இருக்கும் மருத்துவமனையின் பில்லிங் பிரிவில் வேலை செய்கிறான். இப்போது இருக்கும் உண்மை நிலைமையை சொல்லவேண்டும் என்றால் ரங்கனுக்கு எங்கும் வேலை செய்யவேண்டிய தேவை கிடையாது. சியாடல் வீட்டின் வாடகை பணத்தில் பாதி ரங்கனது செலவுக்கும்,பாதிப்பணம் அவனது அவனது கல்விக் கடனை கட்டவும் போதும். ஆனால், அவ்வாறு சும்மா அமர்ந்திருக்க ரங்கனுக்கு பிடித்தம் இல்லை.
இங்கே கிளம்பும்பொழுதே மாலதியிடம் ,"அப்பா என்னோட தேவைக்கு ஏத்த பணத்தை ஏற்பாடு பண்ணிட்டார். அதனால நீ.. நீங்க பணம் இனிமே எனக்கு அனுப்பவேண்டாம்."மாலதிக்கு முகத்தில் அறைவாங்கிய உணர்வு.ஆனாலும் காண்பித்துக்கொள்ளவில்லை.
ரங்கனது நண்பர்களுக்கு ரங்கனின் உண்மை நிலைமை தெரியாது .
"எனக்கும் ஏதாச்சும் வேலை இருந்தா பரவாயில்லடா.. நீங்க எல்லாருமே வெளியே கிளம்பி போயிடறீங்க.எனக்கு ரொம்ப போரா பீல் ஆகுதுடா " என்று ரங்கன் தனது நண்பனிடம் சொல்ல அவனோ,"கொஞ்சம் பொறுடா ரங்கா. இன்னும் உனக்கு முதல் வருஷமே ஆரம்பிக்கல. காலேஜ் ஆரம்பிக்கட்டும்.சூழ்நிலையை பழகு.பிறகு வேலை தேடிக்கலாம்.”yஎன்று பொதுவாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் நண்பர்கள். தினமும் வாட்டசாப் வீடியோ காலில் பாட்டி தாத்தா அப்பா மூவரிடமும் கொஞ்சநேரமேனும் பேசுவதை வழக்கமாக கொண்டான்.
சுந்தரம் பேசும்பொழுது கேட்டார்,"ஏண்டா , உங்க அம்மாவுக்கு போன் பண்ணி பேசினியா... அங்கே போய் பத்து நாள் ஆறதே ! என்று கேட்டதற்கு ரங்கனிடமிருந்து சத்தமே வரவில்லை .சுந்தரத்திற்கு ரங்கனின் மனம் புரிந்தது.ஆனாலும் விடவில்லை." ரங்கா..இந்த மாதிரி இருக்க கூடாதுடா. அம்மாவுக்கு போன் பண்ணி பேசு.முடிஞ்சா போய் அவளை பார்த்துட்டு வாடா. எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற பிரச்னைகள்ல உன்ன ட்ராப் பண்ணி இருந்திருக்க கூடாது. இப்போ.." என்று மேலும் ஏதோ சொல்ல வந்த அப்பாவை தடுத்து விட்டான் ரங்கன்.
"அப்பா ,நா எனக்குன்னு எப்போ தோன்றர்தோ அப்போ போய் பார்ப்பேன்.நிச்சயம் பாப்பேன். அதேமாதிரி நீங்க சொல்றேள்ன்னு என்னால அம்மாவுக்கு போன் செஞ்சு பேச முடியாதுப்பா. நீங்க உங்க பிரச்சனைல என்ன இழுத்து விடல.அம்மாவால என்னை பார்த்துக்க முடியல.அவாளோட ஆசை ,கனவுகளுக்கு நா நிச்சயம் தடை னு பீல் பண்ணி இருக்கலாம். தப்பு சரி பேச நா ஆள் இல்ல. பட் , எனக்குன்னு மனசு இருக்கு.நீங்க சொல்றா மாதிரி வேகமால்லாம் அது ரியாக்ட் பண்ணாது. ப்ளீஸ் ,புரிஞ்சுக்கோங்கோ ப்பா."
மகனது வார்த்தைகளில் இருந்த மனதின் தாக்கம் வெகுவாக சுந்தரத்தை சுட்டது. சரியான குடும்ப அமைப்பை,சூழ்நிலையை மகனுக்கு கொடுக்கவில்லையே !என்ற ஏக்கம் . வேறேதும் மேற்கொண்டு பேசுவதற்கு சுந்தரத்திற்கு நா எழவில்லை. சரி என்றுவிட்டு வைத்துவிட்டார். அப்பாவிடம் பேசியபிறகு ரங்கனுக்கு மனது சரியில்லை. அப்பாவின் மனநிலைமையும்,அதில் உள்ள அழுத்தமும் அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் அதில் அவருக்கு ஏற்படும் உடல் உபாதைகளும் எல்லாமே மற்றவர்களைவிட அதிகமாக தெரிந்து வைத்திருப்பவன் ரங்கராஜன்.தாத்தா பாட்டிக்கு கூட அவ்வளவு தூரம் தெரிந்திருக்காது. அப்படி இருக்கும் பொழுது இந்த மாதிரி பேசியிருக்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டான்.
திரும்பவும் வாட்சப்பில் அழைத்து ,அப்பாவிடம் பேசலாம் என்று நினைத்தால் சுந்தரம் இப்போது ஆன்லைனில் இல்லை. தாத்தா பாட்டியெல்லாம் இந்நேரத்தில் தூங்கி இருப்பார்கள்.அவர்களை கூப்பிட முடியாது என்று பெருமூச்சு விட்டு வேறு வேலைகளை கவனிக்கப் போனான்.
அடுத்து வந்த நாட்களில் சுந்தரத்துடன் ரங்கராஜனால் பேசவே முடியவில்லை.ரங்கனுக்கு மனம் தவித்தது. மருந்துகள் எடுத்துக்கொள்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் வேறு அலைக்கழிக்க தாத்தாவுக்கு அழைத்துவிட்டான். "தாத்தா ரெண்டு நாளா அப்பாட்ட பேசவே முடியல.அவர் நன்னா இருகாரோன்னோ... மருந்து எடுத்துக்கறாரா இல்லியா .."கேட்டவனின் குரலில் இருந்த பதட்டம் அப்பட்டமாக தெரிய,"ஷ்ஷ்... ரங்கா அப்பாவுக்கு ஒண்ணுமில்ல.ரெண்டு நாளா டிசென்ட்ரி. ஆஸ்படேல்ல சேர்த்திருக்கோம். ரொம்ப சோர்வா இருக்கான்.அதனாலதான் உன்னண்ட பேச முடியல. சொன்ன உன்னால தவிக்கறது தவிர ஏதானும் செய்ய முடியுமா? அதனாலதான் சொல்லல. இப்போ நன்னா இருக்கான்.ரெண்டு நாள் கழிச்சு அவனே உனக்கு கூப்பிடுவான் "என்று ஆறுதல் மொழிகள் சொன்னார் பெரியவர்.
ரங்கனுக்கு மனம் துடிக்க தொடங்கியது.தானும் அப்பாவின் பொறுப்பை எடுத்துக்கொள்ளாமல் வீட்டின் பெரியவர்களின் பேச்சை கேட்டு அவர்களிடமே பொறுப்பையும் விட்டு வந்தது தவறோ என்று யோசித்தான். மனம் குழம்பியது. வயதானவர்களை காபந்து பண்ணும் பொறுப்பை இளையவர்கள் கண்டிப்பாக ஏற்றாக வேண்டும். இங்கே படிப்பை முடித்த பிறகு பாட்டி தாத்தா அப்பா மூவரையும் எப்படியாவது தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் தீவிரமானான்.அவனால்,இப்படியெல்லாம் பயந்துகொண்டே இருக்க முடியாது.பொறுப்பை விட்டு ஓடவும் முடியாது.
தகுதித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்ததால் ரங்கனுக்கு அமெரிக்காவின் முதன்மை நிலையிலுள்ள பல்கலைக் கழகத்திலே மேலே எம் எஸ் படிக்கும் வாய்ப்பு பெற்றான் ரங்கராஜன். கிளம்புவதற்கு முன்னே மூன்று மாதங்களுக்கு முன்பே வேலையை விடுத்தான். இரன்டு வருஷங்களாக வேலை செய்ததில் ஓரளவுக்கு கையில் பணமும் சேர்ந்திருந்தது. சுந்தரம் தனது சீரங்கத்து வீட்டை சொத்து மதிப்பு ஆவணமாக காண்பித்திருந்தான். என்றோ வாங்கியது.இன்று தனது மகனின் வருங்காலத்திற்கு துணை செய்வதில் சுந்தரத்திற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
ஏனோ மாலதி தனது பெற்றவர்களுக்கென சென்னையில் வாங்கியிருந்த வீடு அசௌகரியமாக சுந்தரத்திற்கு ஞாபகம் வந்தது. மனைவியின் வீட்டில் கணவனுக்குத்தான் இடமில்லை என்று நினைத்தால் அவள் பெற்ற பிள்ளைக்குமாக இடமில்லை என்று விட்டார்கள் என்ற ஆயாசம் பொங்கியது. இப்போது மாலதி அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றுவிட்டதாக நெருங்கிய சொந்தத்தில் சொன்னார்கள்.சுந்தரத்திற்கு எல்லாம் வெறும் தகவல்கள் தான்.அவன் குடும்பங்களில் நடக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் செல்வது இல்லை.
மாலதி பற்றிய எண்ணங்கள் பொதுவாக சுந்தரத்திற்கு வருவதில்லை.அப்படி வரும்பொழுது வேறு வேலைகளில் தன்னை நுழைத்துக்கொள்வான். ஆனால்,இந்த தருணங்களில் அவளது ஞாபகங்கள் சுந்தரத்திற்கு கசந்து உள்நுழைந்தது. ரங்கனுக்குமே அவனது அம்மாவின் ஞாபகங்கள் வருவதை தவிர்க்க முடியவில்லை. இன்னமும் மாலதி இவனது செலவினங்களுக்காக பணத்தை அனுப்புவதை விடவில்லை. தனது மகன் என்ற பாசம் உண்டு.அதற்க்கு அவளிடம் அளவு கோளும் வைத்திருந்ததால் அம்மா பிள்ளை நெருக்கம் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.
ரங்கன் தனது அம்மாவுக்கு மெயில் அனுப்பினான். பல்கலை கழகத்தின் பெயரை குறிப்பிட்டு அவன் அனுப்பியிருந்த மெயிலுக்கு இரண்டு நாட்கள் கழித்து மாலதியிடமிருந்து பதில் வந்தது.
" ஆல் தி பெஸ்ட் ரங்கா..அம்மாவுக்கு போன் செஞ்சு சொல்லணும் னு உனக்கு தோணல. வாட்ஸாப்ப் ல கூப்பிட்டு இருக்கலாம்.வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்திருக்கலாம். இது எதுவுமே வேணாமுன்னு மெயில் அனுப்பி இருக்கற.அதாவது எனக்கு நீ சொல்றது ஒரு தகவல். அவ்ளோ தானே!"
அம்மாவின் பதில் மெயிலை படித்தவனுக்கு சிரிப்புதான் வந்தது.கடந்த ஏழு வருஷங்களில் அம்மாவுடன் ஏழுமுறை பேசியிருந்தால் அதிசயம். பத்தாம் வகுப்பில் அதிகமான மதிப்பெண்கள் எடுத்திருந்த பொழுதும் கூட அம்மாவிடமிருந்து நேரடி பேச்சுகள் எதுவும் இல்லை. பன்னிரண்டாம் வகுப்பு பொறியியல் படிப்பு வேலை என்று ரங்கனுக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு முக்கிய நிலையிலும் துணை இருந்தது அப்பாவும் தாத்தா பாட்டியும் தான். இன்று வரை அப்பா தனக்கென்று மனநிலை பிரச்சனைகள் இருக்கும்பொழுதும் கூட என்னை விட்டு கொடுக்கவில்லை.இவர்கள் என்னை தேற்றாவிட்டால் ,நான் இப்போது எந்த நிலையில் இருந்திருப்பேனோ "என்று நினைத்தவனுக்கு கண்களில் நீர் திரையிட்டது. அம்மாவிடம் அவனுக்கு பெரியதாக பாசமோ ஈடுபாடோ நிச்சயம் இல்லை.
மாலதி ரங்கனின் நட்பு வட்டத்தில் கூட இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை!
பாட்டி தாத்தா அப்பா என்று அவனது சீரங்கத்து உலகம் சந்தோஷமாக கழிந்தது.இப்போது அமேரிக்கா சென்றால் இருக்கும் நிலைக்கு எப்போது திரும்ப வருவானோ தெரியாது. தனது உலகத்து மனிதர்களுடன் சீரங்கத்தை சுற்றினான். அருகே இருக்கும் திருவானைக்காவல்,திருச்சி கும்பகோணம் என்று முடிவில்லாத பயணங்கள்.தாத்தா திருவேங்கடம் கூட சொன்னார்,"கண்ணா..இந்த வயசான கிழடுகளை கூட்டிண்டு,எங்களுக்கு தேவையானதை பார்த்துண்டு இப்படி கோவில் கோவிலா ஏண்டா அலையற?உன்னோட நண்பர்களோட வெளியே போய்ட்டு வா.. என்ஜோய் பண்ணு" என்று. ரங்கன் கேட்கவில்லை. அவனுக்குத்தான் தெரியும் அவனது வலி.இவர்களை விட்டு இருக்கவேண்டும் என்ற வார்த்தை கூட பிடிக்கவில்லை. ஆண்பிள்ளைகள் அழக்கூடாது என்று யாரோ என்றோ அகஸ்மாத்தமாக சொல்லியது.அதனால் அழாமல் சமாளிக்கிறான்.
மூன்று மாதங்கள் வேகமாக கற்பூரம் போல காற்றில் கரைந்து போனது. அவன் கிளம்பவேண்டிய நேரம் மணிக்கணக்கில் வந்து நின்றது.ஏற்கனவே ரங்கனுடன் கல்லூரியில் படித்த சில நண்பர்கள் அதே பல்கலைக்கழகத்தில் இரண்டாவது வருஷம் படிக்கிறார்கள். நியூ யார்க் நகர விமான நிலையத்தில் வந்து அழைத்து செல்வதாக சொல்லிவிட்டதால் அது பற்றிய பதட்டமெல்லாம் ரங்கனுக்கு இல்லை. பல்கலைக் கழகத்தின் அருகில் அவர்களுடனேயே ஜாகை.(தங்கிக்கொள்ளுவது )என்று ஏற்பாடாகிவிட்டது.கல்லூரி திறக்க இன்னும் முழுதாக இரண்டு வாரங்கள் உண்டு.
அப்பா சுந்தரம் தனது உழைப்பில் உருவாகியிருந்த சியாடல் வீட்டின் சாவிபிரதியை கொடுத்தனுப்பியிருந்தான். அந்த வீட்டுக்கு உண்மையில் கி நம்பர் உண்டு.அதெல்லாம் சுந்தரத்திற்கு ஞாபகம் இல்லை.இப்போது புதியதாக ஒரு பஞ்சாபிய குடும்பம் அங்கே குடியிருக்கிறார்கள் என்றும் அவர்களது விபரக் குறிப்புகளையும் சொல்லி அனுப்பியிருந்தான்.
திருச்சி விமான நிலையத்தில் சுந்தரத்துடன் kodhai-திருவேங்கடமும் வந்திருந்தார்கள். பேரன் படிப்பதற்காக வேறு தேசம் செல்கிறான். பல வருஷங்களுக்கு முன்பு மகனும் கூட படிக்க சென்றான். அன்று மகனை இஷ்டமில்லாமல் அனுப்பிவைத்த திருவேங்கடம் இன்று பேரனை முழு மனதுடன் ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்.சுந்தரம் ரங்கனை இறுக்கி அணைத்து கொண்டு உச்சி முகர்ந்தான். அவன் கண்களில் எதிர்பார்ப்புகள் வர்ணஜாலம் காட்டியது.ரங்கனும் அதை கண்டுகொண்டான்.இருவருக்குமான மௌனம் பல ஆயிரம் அர்த்தங்களை சுமந்து கொண்டிருந்தது. ரங்கன் விமானம் ஏறும்வரை அங்கே விமான நிலையத்தில் இருந்தவர்கள் அவர்களும் கிளம்பினார்கள்.
கோதை அகத்துக்குள் நுழைந்த வேகத்தில் சுவாமி அறையில் சென்று உட்கார்ந்துவிட்டார். அவரது கண்கள் மூடியிருந்த நிலையில் அவர் ஆழ்ந்த பிரார்த்தனையில் அமர்ந்திருப்பதை உணர முடிந்தது. பேரனுக்கான பிரார்த்தனை. விமானத்தில் அமர்ந்திருந்த ரங்கனுக்கு வீட்டின் ஞாபகங்கள். இதுதான் என்னுடைய தேசம்.நான் இந்தியன் என்று மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
லண்டன் வழியாக அமெரிக்க பயணம். சற்று வித்தியாசமான அனுபவமாக ரங்கனுக்கு இருந்தது.சிறு வயதில் பெற்றவர்களுடன் வந்தது. பிறகு எல்லோருமே இந்தியா வந்துவிட விமானத்தின் தேவை இருந்திருக்கவில்லை. தான் பிறந்து சில வருஷங்கள் தன்னை வளர்த்து தாங்கிக்கொண்ட தேசத்திற்கு செல்கிறான். மனம் மோன நிலையில் இருந்தது.
கோதையை நெருங்கி வந்த திருவேங்கடம் மனைவியின் தோளை லேசாக அழுத்தினார். கண்களை திறந்த கோதை கணவனை என்னவென்று பார்த்து வைத்தாள். வயது அதிகம் இல்லை ஆதலால் கோதையை பார்ப்பவர்கள் ரங்கனின் அம்மா என்று சில சமயங்களில் அடையாளப்படுத்துவது உண்டு. ரங்கனுக்கும் சில சமயங்களில் கோதையை அம்மா என்று அழைக்க பிடிக்கும்.மாலதிக்கு பிறகு முழுமையாக அம்மா என்ற ஸ்தானத்தை அலங்கரித்தது கோதைப்பாட்டி தான். ஒருவகையில் தனது சொந்த மகனை பிரிந்தது போல உணர்ந்தாள் கோதை பாட்டி.
"ரங்கனோட ஜாதகம் ரொம்ப விசேஷமானது கோதை. சாதாரணமானவன் இல்ல உம்பேரன். ராஜ்ஜியம் பண்ணுவான். பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவான். அவனை கூண்டுக்குள்ள அடைச்சு வைக்க கூடாதும்மா. அழாத.குழந்தை சாதிக்க பிறந்திருக்கான்" என்று ஆறுதல் சொன்ன கணவரை நிஜமாவா!என்று பார்த்தது பாட்டியின் விழிகள்.
நியூயார்க்கில் சொன்னபடிக்கு அவனது தோழமைகள் வந்து ரங்கனை அழைத்து சென்றார்கள். மொத்தம் நான்குபேர் ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தார்கள்.இப்போது ஐந்தாவதாக ரங்கன் வந்து அந்த ஜோதியில் ஐக்கியமாகிக்கொண்டான். ஜெட்லாக் படுத்த சமாளிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டான். மூன்று நாட்கள் ஆனது அவனுக்கு உடல்நிலை அங்கே பழக.அவனை யாரும் தொந்தரவு செய்யவில்லை. நான்குபேரும் கல்விக்கடனை வாங்கி இங்கே வந்தவர்கள் தான். படித்து நல்ல நிலைமையில் அமரவேண்டும்.நிறைய சம்பாதிக்க வேண்டும். பெற்றவர்களின் வாழ்க்கை தரத்தை இன்னமும் கொஞ்சம் உயர்த்த வேண்டும். டாலர்களில் பணம் வேண்டும் என்ற கனவுகளை சுமந்துகொண்டு இங்கே வந்திருப்பவர்கள்தான்.
அங்கே இருந்த நால்வருமே பகுதிநேர வேலை செய்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். ஒருவன் பெட்ரோல் பங்கில் வேலை.இன்னொருவன் ஹோட்டலில் வைட்டராக இருக்கிறான். ஒரு மாணவன் பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியருக்கு கீழே அவர் சொல்லும் வேலைகளை செய்கிறான்.இன்னொரு மாணவன் அருகில் இருக்கும் மருத்துவமனையின் பில்லிங் பிரிவில் வேலை செய்கிறான். இப்போது இருக்கும் உண்மை நிலைமையை சொல்லவேண்டும் என்றால் ரங்கனுக்கு எங்கும் வேலை செய்யவேண்டிய தேவை கிடையாது. சியாடல் வீட்டின் வாடகை பணத்தில் பாதி ரங்கனது செலவுக்கும்,பாதிப்பணம் அவனது அவனது கல்விக் கடனை கட்டவும் போதும். ஆனால், அவ்வாறு சும்மா அமர்ந்திருக்க ரங்கனுக்கு பிடித்தம் இல்லை.
இங்கே கிளம்பும்பொழுதே மாலதியிடம் ,"அப்பா என்னோட தேவைக்கு ஏத்த பணத்தை ஏற்பாடு பண்ணிட்டார். அதனால நீ.. நீங்க பணம் இனிமே எனக்கு அனுப்பவேண்டாம்."மாலதிக்கு முகத்தில் அறைவாங்கிய உணர்வு.ஆனாலும் காண்பித்துக்கொள்ளவில்லை.
ரங்கனது நண்பர்களுக்கு ரங்கனின் உண்மை நிலைமை தெரியாது .
"எனக்கும் ஏதாச்சும் வேலை இருந்தா பரவாயில்லடா.. நீங்க எல்லாருமே வெளியே கிளம்பி போயிடறீங்க.எனக்கு ரொம்ப போரா பீல் ஆகுதுடா " என்று ரங்கன் தனது நண்பனிடம் சொல்ல அவனோ,"கொஞ்சம் பொறுடா ரங்கா. இன்னும் உனக்கு முதல் வருஷமே ஆரம்பிக்கல. காலேஜ் ஆரம்பிக்கட்டும்.சூழ்நிலையை பழகு.பிறகு வேலை தேடிக்கலாம்.”yஎன்று பொதுவாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் நண்பர்கள். தினமும் வாட்டசாப் வீடியோ காலில் பாட்டி தாத்தா அப்பா மூவரிடமும் கொஞ்சநேரமேனும் பேசுவதை வழக்கமாக கொண்டான்.
சுந்தரம் பேசும்பொழுது கேட்டார்,"ஏண்டா , உங்க அம்மாவுக்கு போன் பண்ணி பேசினியா... அங்கே போய் பத்து நாள் ஆறதே ! என்று கேட்டதற்கு ரங்கனிடமிருந்து சத்தமே வரவில்லை .சுந்தரத்திற்கு ரங்கனின் மனம் புரிந்தது.ஆனாலும் விடவில்லை." ரங்கா..இந்த மாதிரி இருக்க கூடாதுடா. அம்மாவுக்கு போன் பண்ணி பேசு.முடிஞ்சா போய் அவளை பார்த்துட்டு வாடா. எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற பிரச்னைகள்ல உன்ன ட்ராப் பண்ணி இருந்திருக்க கூடாது. இப்போ.." என்று மேலும் ஏதோ சொல்ல வந்த அப்பாவை தடுத்து விட்டான் ரங்கன்.
"அப்பா ,நா எனக்குன்னு எப்போ தோன்றர்தோ அப்போ போய் பார்ப்பேன்.நிச்சயம் பாப்பேன். அதேமாதிரி நீங்க சொல்றேள்ன்னு என்னால அம்மாவுக்கு போன் செஞ்சு பேச முடியாதுப்பா. நீங்க உங்க பிரச்சனைல என்ன இழுத்து விடல.அம்மாவால என்னை பார்த்துக்க முடியல.அவாளோட ஆசை ,கனவுகளுக்கு நா நிச்சயம் தடை னு பீல் பண்ணி இருக்கலாம். தப்பு சரி பேச நா ஆள் இல்ல. பட் , எனக்குன்னு மனசு இருக்கு.நீங்க சொல்றா மாதிரி வேகமால்லாம் அது ரியாக்ட் பண்ணாது. ப்ளீஸ் ,புரிஞ்சுக்கோங்கோ ப்பா."
மகனது வார்த்தைகளில் இருந்த மனதின் தாக்கம் வெகுவாக சுந்தரத்தை சுட்டது. சரியான குடும்ப அமைப்பை,சூழ்நிலையை மகனுக்கு கொடுக்கவில்லையே !என்ற ஏக்கம் . வேறேதும் மேற்கொண்டு பேசுவதற்கு சுந்தரத்திற்கு நா எழவில்லை. சரி என்றுவிட்டு வைத்துவிட்டார். அப்பாவிடம் பேசியபிறகு ரங்கனுக்கு மனது சரியில்லை. அப்பாவின் மனநிலைமையும்,அதில் உள்ள அழுத்தமும் அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் அதில் அவருக்கு ஏற்படும் உடல் உபாதைகளும் எல்லாமே மற்றவர்களைவிட அதிகமாக தெரிந்து வைத்திருப்பவன் ரங்கராஜன்.தாத்தா பாட்டிக்கு கூட அவ்வளவு தூரம் தெரிந்திருக்காது. அப்படி இருக்கும் பொழுது இந்த மாதிரி பேசியிருக்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டான்.
திரும்பவும் வாட்சப்பில் அழைத்து ,அப்பாவிடம் பேசலாம் என்று நினைத்தால் சுந்தரம் இப்போது ஆன்லைனில் இல்லை. தாத்தா பாட்டியெல்லாம் இந்நேரத்தில் தூங்கி இருப்பார்கள்.அவர்களை கூப்பிட முடியாது என்று பெருமூச்சு விட்டு வேறு வேலைகளை கவனிக்கப் போனான்.
அடுத்து வந்த நாட்களில் சுந்தரத்துடன் ரங்கராஜனால் பேசவே முடியவில்லை.ரங்கனுக்கு மனம் தவித்தது. மருந்துகள் எடுத்துக்கொள்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் வேறு அலைக்கழிக்க தாத்தாவுக்கு அழைத்துவிட்டான். "தாத்தா ரெண்டு நாளா அப்பாட்ட பேசவே முடியல.அவர் நன்னா இருகாரோன்னோ... மருந்து எடுத்துக்கறாரா இல்லியா .."கேட்டவனின் குரலில் இருந்த பதட்டம் அப்பட்டமாக தெரிய,"ஷ்ஷ்... ரங்கா அப்பாவுக்கு ஒண்ணுமில்ல.ரெண்டு நாளா டிசென்ட்ரி. ஆஸ்படேல்ல சேர்த்திருக்கோம். ரொம்ப சோர்வா இருக்கான்.அதனாலதான் உன்னண்ட பேச முடியல. சொன்ன உன்னால தவிக்கறது தவிர ஏதானும் செய்ய முடியுமா? அதனாலதான் சொல்லல. இப்போ நன்னா இருக்கான்.ரெண்டு நாள் கழிச்சு அவனே உனக்கு கூப்பிடுவான் "என்று ஆறுதல் மொழிகள் சொன்னார் பெரியவர்.
ரங்கனுக்கு மனம் துடிக்க தொடங்கியது.தானும் அப்பாவின் பொறுப்பை எடுத்துக்கொள்ளாமல் வீட்டின் பெரியவர்களின் பேச்சை கேட்டு அவர்களிடமே பொறுப்பையும் விட்டு வந்தது தவறோ என்று யோசித்தான். மனம் குழம்பியது. வயதானவர்களை காபந்து பண்ணும் பொறுப்பை இளையவர்கள் கண்டிப்பாக ஏற்றாக வேண்டும். இங்கே படிப்பை முடித்த பிறகு பாட்டி தாத்தா அப்பா மூவரையும் எப்படியாவது தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் தீவிரமானான்.அவனால்,இப்படியெல்லாம் பயந்துகொண்டே இருக்க முடியாது.பொறுப்பை விட்டு ஓடவும் முடியாது.
Author: Paithani
Article Title: Arangam 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Arangam 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.