பகலிரவு பல கனவு - 16
“ஏன் சம்யூ? அப்பா பார்த்தாலும் பரவாயில்லைன்னு தானே நினைக்கிற, அப்புறம் எதுக்கு கொள்ளைக் கூட்டத்தில் இருக்கிற மாதிரி மூஞ்சிய மூடி வச்சிருக்க? காத்து எவ்வளவு ஜில்லுன்னு வீசுது பாரு. அதை என்ஜாய் பண்றத விட்டு இப்படி முகத்தை மூடியிருக்க, நீ கொடுத்து வச்சது அவ்வளவு தான்.”
பிரபாகரன் பேசியது காற்றில் தேய்ந்தே போனது. இல்லாவிட்டாலும் அவள் காதுகளில் விழுந்திருக்குமா என்பது சந்தேகம் தான். துப்பட்டாவை அப்படிச் சுற்றியிருந்தாள்.
இன்று காலை கிளம்பும் போது சம்யுக்தா மேகமலைக்குச் செல்லலாம் என்று சொல்வாள் என்று பிரபாகரன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மொத்த காடும் அவளது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரது கீழே வேலை செய்பவர்கள் யாராவது பார்த்தால் கூட அவருக்கு விஷயம் எளிதாகச் செல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில் முதல் முறையாக ஊரைச் சுற்ற ஆசைப்பட்டவளை ஏமாற்றவும் மனமில்லை.
ஏன், அவனுக்கே இப்படி ஒரு தனிமையான நேரம் தேவைப்பட்டது. முருகானந்தம் இப்போதெல்லாம் அடிக்கடி அவனது திருமணம் பற்றிப் பேசுகிறார். இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும் என்று சொன்னால் நிச்சயம் அவனது தாயே கூட இவனுக்கு எதிராகத் திரும்பி விடுவார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தவனுக்குப் பழம் நழுவி பாலில் விழுந்தது போல இருந்தது சம்யுக்தாவின் அழைப்பு.
ஆனால், முதல் நாளே அவளது தந்தையிடம் மாட்டிவிடுவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. எப்படியாவது திருமணத்தைப் பற்றிய ஒரு முடிவுக்கு வந்தால் சரி என்று நினைத்துக் கொண்டே புல்லட்டைச் செலுத்தினான்.
வழக்கமாக ஊருக்குள் முகத்தை மறைத்து ஹெல்மட் அணிபவன் இன்று அதைக் கழற்றி முன்னால் வைத்துக் கொண்டான். முதல் முறை அவனைப் பார்க்கும் யாருக்கும் அவனது கலர் கலரான முடி கண்ணில் பட்டு அவனைப் பற்றி ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கும். நிச்சயமாக அது நல்லவிதமாக இருக்காது என்று தெரிந்தே தான் அவன் அப்படி இருக்கிறான்.
பதினெட்டு வயதில் தந்தையை வெறுப்பேற்றுவதற்காகச் செய்தது. அதுவே பின்னர் அவனது ஸ்டைலாகிப் போனது. சம்யுக்தாவுக்கும் அது பிடித்துப் போகவே, யார் எப்படி நினைத்தாலும் கவலையில்லை என்று சுற்றிக் கொண்டிருக்கிறான்.
இதோ இப்போதும் காற்றில் பறந்த முடியைப் பின்னாலிருந்து கோதி விட்டாள் சம்யுக்தா. அவளை வம்பிழுக்க எண்ணிப் பேச்சை ஆரம்பித்தான் பிரபாகரன்.
“இவ்வளவு தூரம் வந்துட்டோம். உங்க டாடிய நேரில பார்த்து ஒரு ஹலோ சொல்லிட்டுப் போயிடுவோமா?” என்று ஆரம்பித்து ஏதோ சொன்னான்.
அவளுக்கோ, அவன் ஏதோ பேசுகிறான் என்று புரிந்தது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. அவன் முகத்தின் அருகே முகத்தை வைத்து, “ஏதாவது சொன்னீங்களா?” என்றாள்.
அவளது அந்தச் செயலில் சில நொடிகள் பிரபாகரனின் கைகளில் புல்லட் தடுமாறியது. சமாளித்துக் கொண்டு வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினான்.
இருவரும் இறங்கி பைக்கில் சாய்ந்து நின்றனர். அவன் என்ன சொன்னான் என்று கேட்டாள்.
“அதுவா… அது.. வந்து..” என்று ராகம் பாடியவனின் தோளில் செல்லமாக இடித்தவள், “இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா?” என்று சிணுங்கினாள்.
நெஞ்சில் கைவைத்து மயக்கம் வருவது போல நடித்தவன், “ஒரே நாளில் இத்தனை ஷாக் கொடுக்காத டார்லிங். என் பிஞ்சு மனசு தாங்காது” என்றான்.
“ச்சு.. போங்க.. நான் பேசவே போறதில்லை“
“அய்யோ! அப்படி சட்டுன்னு முடிவு பண்ணிடாதம்மா. அப்புறம் உனக்குத்தான் வாய் வலிக்கும்” என்று கேலியைத் தொடர்ந்தவனை முறைத்தவள் காட்டுப் பாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
“ஓ மை காட்! நில்லு சம்யூ. நோ கோபம் பர்த் டே பேபி. நான் தான் தப்பு. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நில்லு..” என்று அவள் பின்னால் கிட்டத்தட்ட ஓடினான். அவளோ அதைக் கண்டு கொள்ளாமல் நடைப் பயணத்தைத் தொடர்ந்தாள். அவன் மேலும் தொடராமல் நின்று விட்டான். ஆனால் அடுத்து அவன் பேசிய பேச்சில் வேகமாகத் திரும்பி வந்தவள் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
“யூ நோ சம்யூ. இந்தப் பாதை ஒன்லி ஃபார் அனிமல்ஸ். யானை, புலி, கரடின்னு ஏதாவது வந்து என் லவ்வரைப் பார்த்து மயங்கிட்டா என் நிலைமை என்ன ஆகும். எனக்கு இருக்கிறதே ஒன்றே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரேயொரு லவ்வர். அவளும் இல்லேன்னா இன்னொரு பொண்ண செட் பண்ற அளவுக்கு எனக்குத் திறமை கிடையாது. ப்ளீஸ்..”
தன்னை அணைத்துக் கொண்டவளை அவனும் அணைத்துக் கொண்டு நின்றான். ஆனால் அவனது உள்ளம் அவனை எச்சரிக்கை செய்தது. சம்யுக்தாவின் செய்கை என்னவோ யதார்த்தமாகவே இருந்தது. சில வருட பழக்கம் இருந்தது தான். ஆனாலும் இன்று ஒரே நாளில் இத்தனை நெருக்கம் காட்டுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. கல்லூரியில் சகஜமாகத் திரியும் ஜோடிகளால் அவள் படும் பாட்டை அவனெங்கே அறிவான்??
இந்த நாள் இதே இனிமையுடன் முடிவடைய வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுதல் பலிக்குமா?
நேரம் சென்றதே தவிர சம்யுக்தா அவளது இறுக்கத்தை தளர்த்தவில்லை. சூழல் உணர்ந்து பிரபாகரனே மெல்ல அவளிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அவளும் நிஜத்திற்கு வந்து அவனுடன் அடுத்த வாதத்திற்கு தயாராகி விட்டாள்.
“அதென்ன என்னைப் பார்த்து அப்படி சொல்றீங்க? அனிமல்ஸ் தான் மயங்கிப் போகும்னு சொல்றீங்களா?”
“சேச்சே.. உன்னைப் போய் அப்படிச் சொல்வேனா? அப்புறம் அனிமல்ஸ் எல்லாம் கோவிச்சுக்காது?”
“யூ.. யூ..”
“அட என்னடா இது சம்யுக்தாவுக்கு வந்த சோதனை? மேடம் பேச்சு வராமல் திக்குறாங்க?”
“போதும் மிஸ்டர்.பிரபாகரன்! ரொம்ப ஓவரா ஓட்டுறீங்க. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிட்டேன். மரியாதையா, வண்டி ஓட்டும் போது என்ன சொன்னீங்கன்னு சொல்லுங்க. இல்லேன்னா நான் பேசவே மாட்டேன்.”
“ஓகே.. ஓகே.. சீஸ்ஃபயர்!” என்று கையைத் தூக்கினான் பிரபாகரன்.
அவளோ கைகட்டி வேடிக்கை பார்த்தாள்.
“அது.. வேற ஒன்னும் இல்லை சம்யூ.. இவ்வளவு தூரம் வந்துட்டோமா.. போய் என் மாமனார் கிட்ட ஒரு ஹலோ சொல்லிட்டு வரலாமான்னு கேட்டேன்.” ஆனால் அவனது சிரிப்பு வேறு கதை சொன்னது.
“இவ்வளவு தானா? பொய் சொல்லாதீங்க. நீங்க நிறைய பேசுனீங்க? எல்லாத்தையும் சொல்லுங்க.”
“நீ இவ்வளவு கெஞ்சறதால சொல்றேன். அதாவது நான் பாட்டுக்கு நேரா போய் ஹலோ சொன்னால் மாமனாருக்கு என்னை யாருன்னு தெரியுமா? உன் ஃப்ரண்டுனு கூட நினைக்க சான்ஸ் இருக்கே. அதான், ஸ்ட்ரைட்டா மாமா! உன் பொண்ணைக் கொடுன்னு பாடிடலாமான்னு கேட்டேன்.”
“அடப்பாவி! அப்படி ஏதாவது செஞ்சுடாதீங்க. எங்க டாடி ரொம்ப டிஸிப்ளின் எதிர்பார்ப்பார்“ என்று படபடத்தவளுக்கு அவனது கலர் கலரான முடி கண்ணில் பட்டு கலக்கத்தை உண்டாக்கியது.
அவளது பார்வையை உணர்ந்து கொண்டவன், “என்ன சம்யூ, இத்தனை நாள் பிடிச்ச என் தலைமுடியைப் பார்த்து இன்னைக்கு பயமா இருக்கு போலருக்கு” என்றான் ஒரு மாதிரி குரலில்.
காதலிக்கும் போது அழகாகத் தெரிவதெல்லாம் கல்யாணம் என்று வரும் போது வேறு மாதிரி தோன்றுவது இயல்பு தானே. இத்தனை வருடமாக அவனது ஸ்டைலில் மயங்கி இருந்தவளின் மனதுக்குள் இப்போது தந்தை என்ன நினைப்பாரோ என்ற பயம் புகுந்து கொண்டு ஆட்டி வைத்தது.
அதைப் புரிந்து கொண்டாலும் இவளும் சராசரிப் பெண்களைப் போல யோசிக்கிறாளே என்று கஷ்டமாக இருந்தது பிரபாகரனுக்கு. ஆனால் அவளது பிறந்த நாளன்று அவள் கவலைப் படுவது போல் எதையும் பேசிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்ததால் அமைதியாகவே நின்றான்.
“சரி.. சரி.. மூஞ்சிய ஜெம் மாதிரி வைக்காதே. பார்க்க முடியல. இன்னைக்கு நான் நல்ல புள்ளையாவே இருப்பேன்னு என் மாமனார் மேல சத்தியம் செய்திடறேன்.” அவனது வார்த்தைகள் கோபம் வரவழைத்தாலும் காதுகளைப் பிடித்துப் பாவமாகப் பார்த்தவனைப் போனால் போகிறது என்று விட்டு விட்டாள். அவள் சமாதானத்துக்கு வந்து விட்டது கண்டு அவனும் பெருமூச்சு விட்டான்.
“நேரம் ஆயிடுச்சு சம்யூ. ஊருக்குத் திரும்பிடலாமா?”
“நோ.. நோ.. வியூ பாயிண்ட் வரைக்கும் போகலாம். இன்னும் இரண்டு மூணு கிலோமீட்டர் தான் இருக்கும்.”
“சரி, வா. அங்கே ரொம்ப நேரம் எடுத்துக்கக் கூடாது” என்ற நிபந்தனையுடன் இருவரும் கிளம்பினார்கள். போகும் வழியில் இவர்களுக்கு முன்னே சென்ற நிறைய வாகனங்கள் திரும்பி வருவதைப் பார்த்து புருவங்களை உயர்த்தினான் பிரபாகரன். காட்டின் நடுவே ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தவிர அந்தப் பாதையில் தடையின்றி அனைவரும் சென்று வரலாம். இப்படித் திருப்பி அனுப்புகிறார்கள் என்றால் ஏதோ காரணம் இருக்கும் என்று புரிந்தவன் ஒரு பைக்கை வழிமறித்துக் கேட்க அவர்கள் சொன்ன பதிலில் ஆடிப் போனான்.
“காலம் ரொம்ப கெட்டுப் போச்சு ப்ரோ. காட்டுக்குள்ள ஒரு சின்னப் பொண்ணோட உடம்பு கிடைச்சிருக்காம். உடம்பில துணியில்லாமல்.. சே.. சொல்லவே கஷ்டமா இருக்கு. ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் மொத்தமும் அங்கே தான் இருக்காங்க. போலீஸுக்காக வெயிட் பண்றாங்க போல. செக் பண்ணித் தான் எல்லாரையும் திருப்பி அனுப்பறாங்க. எதுக்கும் நீங்க இப்படியே ரிட்டர்ன் ஆயிடுங்க.”
அவன் சொன்னதைக் கேட்டு மனம் பதறினாலும் இருவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். வியூ பாயிண்ட் அருகில் புதிதாக செக் போஸ்ட் அமைத்திருக்க சம்யுக்தாவின் தந்தை கண்ணனின் தலைமையில் அங்கே வருவோரை எல்லாம் விசாரித்து அனுப்பி வைத்தனர். முகத்தை முழுமையாக மூடியிருந்தாலும் அவர் ஸ்பெஷலாக வரவழைத்த சுடிதாரில் இருந்த சம்யுக்தாவை எளிதாகக் கண்டுகொண்டார் அவளது தந்தை. அதற்குள் வேறொரு அலுவலர் அவளது முகத்தில் இருந்து துப்பட்டாவை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மெதுவாக அதை நீக்கியவள் தந்தையைத் தயக்கத்துடன் நோக்கினாள்.
மற்றவர்கள் முன்னிலையில் மகளைக் கேள்வி கேட்க விரும்பவில்லை. மேலும், ஆண் பெண் பேதமின்றி நட்பை மதிப்பவர் ஆதலால் இருவரையும் பார்த்தவுடன் சந்தேகம் கொள்ளவும் இல்லை. ஆனால் சம்யுக்தாவின் தயக்கமான பார்வை அவளைக் காட்டிக் கொடுத்துவிட்டது.
பிரபாகரனை மேலும் கீழும் பார்த்து முற்றிலும் ஸ்கேன் செய்தவர் சம்யுக்தாவிடம் பார்வையால் கண்டனம் தெரிவித்தார்.
அவர் பேச ஆரம்பிப்பதற்கு முன் விசாரணைக்கு வேண்டிய போலீஸ் அங்கே வந்து சேர வேறு வழியின்றி மகளையும் அவளுடன் வந்தவனையும் முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.
அப்போதைக்கு தப்பித்தோம் என்று நிம்மதியாக பெருமூச்சு விட்டாள் சம்யுக்தா. ஆனால் அவளது நிம்மதிக்கான ஆயுட்காலம் மிகக் குறைவாகவே இருந்தது.
மாலை ஆறு மணியளவில் பிரபாகரனுக்கு டாட்டா காட்டி விட்
டு வீட்டுக்குள் நுழைந்த சம்யுக்தாவை போர்டிகோவில் நின்ற அவளது தந்தையின் கார் வரவேற்றது.
“ஏன் சம்யூ? அப்பா பார்த்தாலும் பரவாயில்லைன்னு தானே நினைக்கிற, அப்புறம் எதுக்கு கொள்ளைக் கூட்டத்தில் இருக்கிற மாதிரி மூஞ்சிய மூடி வச்சிருக்க? காத்து எவ்வளவு ஜில்லுன்னு வீசுது பாரு. அதை என்ஜாய் பண்றத விட்டு இப்படி முகத்தை மூடியிருக்க, நீ கொடுத்து வச்சது அவ்வளவு தான்.”
பிரபாகரன் பேசியது காற்றில் தேய்ந்தே போனது. இல்லாவிட்டாலும் அவள் காதுகளில் விழுந்திருக்குமா என்பது சந்தேகம் தான். துப்பட்டாவை அப்படிச் சுற்றியிருந்தாள்.
இன்று காலை கிளம்பும் போது சம்யுக்தா மேகமலைக்குச் செல்லலாம் என்று சொல்வாள் என்று பிரபாகரன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மொத்த காடும் அவளது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரது கீழே வேலை செய்பவர்கள் யாராவது பார்த்தால் கூட அவருக்கு விஷயம் எளிதாகச் செல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில் முதல் முறையாக ஊரைச் சுற்ற ஆசைப்பட்டவளை ஏமாற்றவும் மனமில்லை.
ஏன், அவனுக்கே இப்படி ஒரு தனிமையான நேரம் தேவைப்பட்டது. முருகானந்தம் இப்போதெல்லாம் அடிக்கடி அவனது திருமணம் பற்றிப் பேசுகிறார். இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும் என்று சொன்னால் நிச்சயம் அவனது தாயே கூட இவனுக்கு எதிராகத் திரும்பி விடுவார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தவனுக்குப் பழம் நழுவி பாலில் விழுந்தது போல இருந்தது சம்யுக்தாவின் அழைப்பு.
ஆனால், முதல் நாளே அவளது தந்தையிடம் மாட்டிவிடுவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. எப்படியாவது திருமணத்தைப் பற்றிய ஒரு முடிவுக்கு வந்தால் சரி என்று நினைத்துக் கொண்டே புல்லட்டைச் செலுத்தினான்.
வழக்கமாக ஊருக்குள் முகத்தை மறைத்து ஹெல்மட் அணிபவன் இன்று அதைக் கழற்றி முன்னால் வைத்துக் கொண்டான். முதல் முறை அவனைப் பார்க்கும் யாருக்கும் அவனது கலர் கலரான முடி கண்ணில் பட்டு அவனைப் பற்றி ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கும். நிச்சயமாக அது நல்லவிதமாக இருக்காது என்று தெரிந்தே தான் அவன் அப்படி இருக்கிறான்.
பதினெட்டு வயதில் தந்தையை வெறுப்பேற்றுவதற்காகச் செய்தது. அதுவே பின்னர் அவனது ஸ்டைலாகிப் போனது. சம்யுக்தாவுக்கும் அது பிடித்துப் போகவே, யார் எப்படி நினைத்தாலும் கவலையில்லை என்று சுற்றிக் கொண்டிருக்கிறான்.
இதோ இப்போதும் காற்றில் பறந்த முடியைப் பின்னாலிருந்து கோதி விட்டாள் சம்யுக்தா. அவளை வம்பிழுக்க எண்ணிப் பேச்சை ஆரம்பித்தான் பிரபாகரன்.
“இவ்வளவு தூரம் வந்துட்டோம். உங்க டாடிய நேரில பார்த்து ஒரு ஹலோ சொல்லிட்டுப் போயிடுவோமா?” என்று ஆரம்பித்து ஏதோ சொன்னான்.
அவளுக்கோ, அவன் ஏதோ பேசுகிறான் என்று புரிந்தது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. அவன் முகத்தின் அருகே முகத்தை வைத்து, “ஏதாவது சொன்னீங்களா?” என்றாள்.
அவளது அந்தச் செயலில் சில நொடிகள் பிரபாகரனின் கைகளில் புல்லட் தடுமாறியது. சமாளித்துக் கொண்டு வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினான்.
இருவரும் இறங்கி பைக்கில் சாய்ந்து நின்றனர். அவன் என்ன சொன்னான் என்று கேட்டாள்.
“அதுவா… அது.. வந்து..” என்று ராகம் பாடியவனின் தோளில் செல்லமாக இடித்தவள், “இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா?” என்று சிணுங்கினாள்.
நெஞ்சில் கைவைத்து மயக்கம் வருவது போல நடித்தவன், “ஒரே நாளில் இத்தனை ஷாக் கொடுக்காத டார்லிங். என் பிஞ்சு மனசு தாங்காது” என்றான்.
“ச்சு.. போங்க.. நான் பேசவே போறதில்லை“
“அய்யோ! அப்படி சட்டுன்னு முடிவு பண்ணிடாதம்மா. அப்புறம் உனக்குத்தான் வாய் வலிக்கும்” என்று கேலியைத் தொடர்ந்தவனை முறைத்தவள் காட்டுப் பாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
“ஓ மை காட்! நில்லு சம்யூ. நோ கோபம் பர்த் டே பேபி. நான் தான் தப்பு. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நில்லு..” என்று அவள் பின்னால் கிட்டத்தட்ட ஓடினான். அவளோ அதைக் கண்டு கொள்ளாமல் நடைப் பயணத்தைத் தொடர்ந்தாள். அவன் மேலும் தொடராமல் நின்று விட்டான். ஆனால் அடுத்து அவன் பேசிய பேச்சில் வேகமாகத் திரும்பி வந்தவள் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
“யூ நோ சம்யூ. இந்தப் பாதை ஒன்லி ஃபார் அனிமல்ஸ். யானை, புலி, கரடின்னு ஏதாவது வந்து என் லவ்வரைப் பார்த்து மயங்கிட்டா என் நிலைமை என்ன ஆகும். எனக்கு இருக்கிறதே ஒன்றே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரேயொரு லவ்வர். அவளும் இல்லேன்னா இன்னொரு பொண்ண செட் பண்ற அளவுக்கு எனக்குத் திறமை கிடையாது. ப்ளீஸ்..”
தன்னை அணைத்துக் கொண்டவளை அவனும் அணைத்துக் கொண்டு நின்றான். ஆனால் அவனது உள்ளம் அவனை எச்சரிக்கை செய்தது. சம்யுக்தாவின் செய்கை என்னவோ யதார்த்தமாகவே இருந்தது. சில வருட பழக்கம் இருந்தது தான். ஆனாலும் இன்று ஒரே நாளில் இத்தனை நெருக்கம் காட்டுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. கல்லூரியில் சகஜமாகத் திரியும் ஜோடிகளால் அவள் படும் பாட்டை அவனெங்கே அறிவான்??
இந்த நாள் இதே இனிமையுடன் முடிவடைய வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுதல் பலிக்குமா?
நேரம் சென்றதே தவிர சம்யுக்தா அவளது இறுக்கத்தை தளர்த்தவில்லை. சூழல் உணர்ந்து பிரபாகரனே மெல்ல அவளிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அவளும் நிஜத்திற்கு வந்து அவனுடன் அடுத்த வாதத்திற்கு தயாராகி விட்டாள்.
“அதென்ன என்னைப் பார்த்து அப்படி சொல்றீங்க? அனிமல்ஸ் தான் மயங்கிப் போகும்னு சொல்றீங்களா?”
“சேச்சே.. உன்னைப் போய் அப்படிச் சொல்வேனா? அப்புறம் அனிமல்ஸ் எல்லாம் கோவிச்சுக்காது?”
“யூ.. யூ..”
“அட என்னடா இது சம்யுக்தாவுக்கு வந்த சோதனை? மேடம் பேச்சு வராமல் திக்குறாங்க?”
“போதும் மிஸ்டர்.பிரபாகரன்! ரொம்ப ஓவரா ஓட்டுறீங்க. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிட்டேன். மரியாதையா, வண்டி ஓட்டும் போது என்ன சொன்னீங்கன்னு சொல்லுங்க. இல்லேன்னா நான் பேசவே மாட்டேன்.”
“ஓகே.. ஓகே.. சீஸ்ஃபயர்!” என்று கையைத் தூக்கினான் பிரபாகரன்.
அவளோ கைகட்டி வேடிக்கை பார்த்தாள்.
“அது.. வேற ஒன்னும் இல்லை சம்யூ.. இவ்வளவு தூரம் வந்துட்டோமா.. போய் என் மாமனார் கிட்ட ஒரு ஹலோ சொல்லிட்டு வரலாமான்னு கேட்டேன்.” ஆனால் அவனது சிரிப்பு வேறு கதை சொன்னது.
“இவ்வளவு தானா? பொய் சொல்லாதீங்க. நீங்க நிறைய பேசுனீங்க? எல்லாத்தையும் சொல்லுங்க.”
“நீ இவ்வளவு கெஞ்சறதால சொல்றேன். அதாவது நான் பாட்டுக்கு நேரா போய் ஹலோ சொன்னால் மாமனாருக்கு என்னை யாருன்னு தெரியுமா? உன் ஃப்ரண்டுனு கூட நினைக்க சான்ஸ் இருக்கே. அதான், ஸ்ட்ரைட்டா மாமா! உன் பொண்ணைக் கொடுன்னு பாடிடலாமான்னு கேட்டேன்.”
“அடப்பாவி! அப்படி ஏதாவது செஞ்சுடாதீங்க. எங்க டாடி ரொம்ப டிஸிப்ளின் எதிர்பார்ப்பார்“ என்று படபடத்தவளுக்கு அவனது கலர் கலரான முடி கண்ணில் பட்டு கலக்கத்தை உண்டாக்கியது.
அவளது பார்வையை உணர்ந்து கொண்டவன், “என்ன சம்யூ, இத்தனை நாள் பிடிச்ச என் தலைமுடியைப் பார்த்து இன்னைக்கு பயமா இருக்கு போலருக்கு” என்றான் ஒரு மாதிரி குரலில்.
காதலிக்கும் போது அழகாகத் தெரிவதெல்லாம் கல்யாணம் என்று வரும் போது வேறு மாதிரி தோன்றுவது இயல்பு தானே. இத்தனை வருடமாக அவனது ஸ்டைலில் மயங்கி இருந்தவளின் மனதுக்குள் இப்போது தந்தை என்ன நினைப்பாரோ என்ற பயம் புகுந்து கொண்டு ஆட்டி வைத்தது.
அதைப் புரிந்து கொண்டாலும் இவளும் சராசரிப் பெண்களைப் போல யோசிக்கிறாளே என்று கஷ்டமாக இருந்தது பிரபாகரனுக்கு. ஆனால் அவளது பிறந்த நாளன்று அவள் கவலைப் படுவது போல் எதையும் பேசிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்ததால் அமைதியாகவே நின்றான்.
“சரி.. சரி.. மூஞ்சிய ஜெம் மாதிரி வைக்காதே. பார்க்க முடியல. இன்னைக்கு நான் நல்ல புள்ளையாவே இருப்பேன்னு என் மாமனார் மேல சத்தியம் செய்திடறேன்.” அவனது வார்த்தைகள் கோபம் வரவழைத்தாலும் காதுகளைப் பிடித்துப் பாவமாகப் பார்த்தவனைப் போனால் போகிறது என்று விட்டு விட்டாள். அவள் சமாதானத்துக்கு வந்து விட்டது கண்டு அவனும் பெருமூச்சு விட்டான்.
“நேரம் ஆயிடுச்சு சம்யூ. ஊருக்குத் திரும்பிடலாமா?”
“நோ.. நோ.. வியூ பாயிண்ட் வரைக்கும் போகலாம். இன்னும் இரண்டு மூணு கிலோமீட்டர் தான் இருக்கும்.”
“சரி, வா. அங்கே ரொம்ப நேரம் எடுத்துக்கக் கூடாது” என்ற நிபந்தனையுடன் இருவரும் கிளம்பினார்கள். போகும் வழியில் இவர்களுக்கு முன்னே சென்ற நிறைய வாகனங்கள் திரும்பி வருவதைப் பார்த்து புருவங்களை உயர்த்தினான் பிரபாகரன். காட்டின் நடுவே ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தவிர அந்தப் பாதையில் தடையின்றி அனைவரும் சென்று வரலாம். இப்படித் திருப்பி அனுப்புகிறார்கள் என்றால் ஏதோ காரணம் இருக்கும் என்று புரிந்தவன் ஒரு பைக்கை வழிமறித்துக் கேட்க அவர்கள் சொன்ன பதிலில் ஆடிப் போனான்.
“காலம் ரொம்ப கெட்டுப் போச்சு ப்ரோ. காட்டுக்குள்ள ஒரு சின்னப் பொண்ணோட உடம்பு கிடைச்சிருக்காம். உடம்பில துணியில்லாமல்.. சே.. சொல்லவே கஷ்டமா இருக்கு. ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் மொத்தமும் அங்கே தான் இருக்காங்க. போலீஸுக்காக வெயிட் பண்றாங்க போல. செக் பண்ணித் தான் எல்லாரையும் திருப்பி அனுப்பறாங்க. எதுக்கும் நீங்க இப்படியே ரிட்டர்ன் ஆயிடுங்க.”
அவன் சொன்னதைக் கேட்டு மனம் பதறினாலும் இருவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். வியூ பாயிண்ட் அருகில் புதிதாக செக் போஸ்ட் அமைத்திருக்க சம்யுக்தாவின் தந்தை கண்ணனின் தலைமையில் அங்கே வருவோரை எல்லாம் விசாரித்து அனுப்பி வைத்தனர். முகத்தை முழுமையாக மூடியிருந்தாலும் அவர் ஸ்பெஷலாக வரவழைத்த சுடிதாரில் இருந்த சம்யுக்தாவை எளிதாகக் கண்டுகொண்டார் அவளது தந்தை. அதற்குள் வேறொரு அலுவலர் அவளது முகத்தில் இருந்து துப்பட்டாவை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மெதுவாக அதை நீக்கியவள் தந்தையைத் தயக்கத்துடன் நோக்கினாள்.
மற்றவர்கள் முன்னிலையில் மகளைக் கேள்வி கேட்க விரும்பவில்லை. மேலும், ஆண் பெண் பேதமின்றி நட்பை மதிப்பவர் ஆதலால் இருவரையும் பார்த்தவுடன் சந்தேகம் கொள்ளவும் இல்லை. ஆனால் சம்யுக்தாவின் தயக்கமான பார்வை அவளைக் காட்டிக் கொடுத்துவிட்டது.
பிரபாகரனை மேலும் கீழும் பார்த்து முற்றிலும் ஸ்கேன் செய்தவர் சம்யுக்தாவிடம் பார்வையால் கண்டனம் தெரிவித்தார்.
அவர் பேச ஆரம்பிப்பதற்கு முன் விசாரணைக்கு வேண்டிய போலீஸ் அங்கே வந்து சேர வேறு வழியின்றி மகளையும் அவளுடன் வந்தவனையும் முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.
அப்போதைக்கு தப்பித்தோம் என்று நிம்மதியாக பெருமூச்சு விட்டாள் சம்யுக்தா. ஆனால் அவளது நிம்மதிக்கான ஆயுட்காலம் மிகக் குறைவாகவே இருந்தது.
மாலை ஆறு மணியளவில் பிரபாகரனுக்கு டாட்டா காட்டி விட்
டு வீட்டுக்குள் நுழைந்த சம்யுக்தாவை போர்டிகோவில் நின்ற அவளது தந்தையின் கார் வரவேற்றது.
Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: பகலிரவு பல கனவு -16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.