• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு - 15

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
279
பகலிரவு பல கனவு - 15

“ஹேப்பி பர்த்டே சம்யு!” என்ற பிரபாகரனின் ஆழ்ந்த குரலில் காதில் இருந்த மொபைலை எடுத்து கண்ணைக் கசக்கி உற்றுப் பார்த்தாள். அவனே தான், சரியாக பன்னிரண்டு மணிக்கு அழைத்திருக்கிறான்.

“பிரபா??? ஹேய் நிஜமாவே நீங்க தானா? தாங்க் யூ ஸோ மச்” என்றவளுக்கு அப்போது தான் அது வீடியோ கால் என்பதே தெரிந்தது. ஏதோவொரு எண்ணத்தில் அழைப்பு வந்ததும் பச்சை பட்டனை அழுத்தியிருந்தாள். சட்டென்று தன்னைக் குனிந்து பார்த்தவள் திருப்தியாக அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

தூங்கும் போது நைட் டிரஸ்ஸில் இருந்தாலும் ஏசி போட்டு கழுத்து வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு தான் இருப்பாள். எத்தனையோ தடவை அவளது அம்மா வந்து முகத்தை மூடாதே என்று சொல்லி இருக்கிறார். இவள் கேட்டால் தானே. இன்றும் அப்படியே இருந்தாலும் பெண்களுக்கே உண்டான இயல்பாக உடையில் கண் சென்றது.

“ஹலோ மேடம், ரொம்பத்தான் அலட்டிக்காதீங்க. காலேஜுக்கு நீங்க போட்டு வர்ற டிரஸ்ஸ விடவா இந்த டிரஸ் ****யா இருக்கப் போகுது. ஒரு வேளை தூங்கும் போது நீங்க டிரஸ்ஸே… “ என்று விஷயத்தை முடிக்காமல் அவன் கண்ணடித்தான். அவன் சொல்லாமல் விட்ட வார்த்தைகளைப் புரிந்து கொண்டவள் அவனை முறைத்தாள்.

“அப்படி இருந்தாலும் தப்பில்லை… “ என்று அவன் மேலும் ஆரம்பிக்க, “மிஸ்டர்.பிரபாகரன்! இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா நான் காலைக் கட் பண்றேன்” (Mobile call) என்று திட்டவட்டமாக அறிவித்தாள்.

“ஓகே..‌ ஓகே.. பர்த்டே பேபி கோபப்படாதீங்க.” அவனும் பேச்சை மாற்றினான். அதன் பிறகு நேரம் போவதே தெரியாமல் இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர். இருவருக்குமே புது அனுபவமாக இருந்தது.‌

“நேத்து வரைக்கும் என் பர்த்டே மறந்து போனது மாதிரியே இருந்தீங்க? கூடவே பர்த்டே எல்லாம் ஜஸ்ட் அனதர் டேன்னு தத்துவம் பேசுனீங்க? எப்படி திடீர்னு ஞானோதயம் வந்துச்சு.? எந்த போதி மரத்தடியில உட்கார்ந்தீங்க?” சரமாரியாக கேள்விக் கணைகளால் தாக்கினாள்.

“ஏன் கேட்கமாட்ட, ஒரு மாசமா கேப் விடாமல் மனுஷனை டார்ச்சர் பண்ணதெல்லாம் மறந்துடுச்சா?” நிஜமாகவே நொந்து போயிருந்தான் பிரபாகரன். ஜுன் பதினெட்டு தனது பிறந்த நாள் என்று சொன்ன நாள் முதல் அவனைப் பார்க்கும் போதெல்லாம், “என் பிறந்த நாள் ஞாபகம் இருக்குல்ல?”, “என் பர்த்டே என்னைக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்”, “ஜுன் பதினெட்டாம் தேதி என்ன ஸ்பெஷல்?” என்று விதம் விதமான கேள்விகளால் அவனை வாட்டி இருந்தாள். நேரில் கேட்டது போதாது என்று வாட்ஸ்அப் வேறு.

“நீட் எக்ஸாம்ல கூட இவ்வளவு டஃபான கேள்வி எல்லாம் கேட்டிருக்க மாட்டாங்க. படுத்தாத சம்யு” என்று பிரபாகரன் நொந்து போகும் அளவுக்கு டார்ச்சர் செய்திருந்தாள்.

அதற்கும் மேலாக அவன் மறந்து விடக்கூடாது என்று அவனது மொபைலை வாங்கி காலண்டரில் ரிமைன்டர் வேறு செட் பண்ணி இருந்தாள். அத்தனைக்கும் பிறகும் அவன் மறந்து விடுவானா என்ன?

ஆனால், நிஜமாகவே அவன் மறந்து போய்விட்டான். முதல் நாள் முழுவதும் நல்ல மழை பெய்து அன்று பறிக்க வேண்டிய பழங்கள் மொத்தமும் வீணாகிப் போனது. கடைக்குத் தேவையான பழங்களை வெளியே வாங்கி எப்படியோ சமாளித்துவிட்டான். இரவு வரை தோட்டத்தில் தான் இருந்தான். மறுநாள் மழை பெய்தால் என்னென்ன செய்வது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்த போது நேரம் இரவு ஒன்பதை நெருங்கி இருந்தது.

வீட்டுக்கு வந்து இரவு உணவை உண்டு உடனே படுத்து விட்டான். உடம்பில் அத்தனை சோர்வு. படுத்த அடுத்த நொடியே நித்ரா தேவி அவனை அணைத்துக் கொண்டாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது மொபைல் அலறி அழைத்தது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியைப் படித்தவுடன் சட்டென்று எழுந்து அமர்ந்தான். கஷ்டப்பட்டு தூக்கத்தை விரட்டி எப்போது பன்னிரண்டு மணி ஆகும் என்று காத்திருந்தான். அதை நினைத்து இப்போது சிரித்தான்.

சற்று சத்தமாகவே சிரித்து விட்டான் போலும். “ஹலோ! என்ன நக்கலா, நான் என்ன இங்க காமெடியா பண்ணிட்டு இருக்கேன்?” என்று பல்லைக் கடித்தாள் சம்யுக்தா.

“ஹா.. ஹா.. நான் விஷயத்தை சொல்றேன். காமெடியா இல்லையான்னு நீ சொல்லு.”

“நீங்க முதல்ல விஷயத்தைச் சொல்லுங்க பாஸ்.”

“சொல்றேன்.. சொல்றேன்… உன் பிறந்த நாளை நேத்து நாள் பூராவும் தோட்டத்தில வேலை இருந்துச்சா, வீட்டுக்கு வந்து சாப்பிட்டு உடனே தூங்கிட்டேன். நல்லா தூக்கத்தில இருக்கும் போது ஒரு மெசேஜ் வந்தது. எவனோ அனுபவஸ்தன் ஒருவன் ஒரு டிப்ஸ் சொல்லி இருந்தான். அதைப் படிச்சதும் காலண்டர உடனே பார்த்தேனா, ஹப்பாடா தப்பிச்சுட்டேன்னு ஃபீல் ஆச்சு. மணி பதினொன்னு தான் ஆகியிருந்தது. அந்த மெசேஜ சரியான நேரத்துக்கு அனுப்பி வச்சானே என் ஃப்ரண்டு அவனுக்கு ஒரு கும்பிடு போட்டு, கஷ்டப்பட்டு கண்ணு முழிச்சு உனக்கு ஃபோன் பண்ணிட்டேன்.

“இவ்வளவு பில்டப் கொடுக்கிற அளவுக்கு அப்படி என்ன மெசேஜ் அது? அதைச் சொல்லுங்க முதல்ல.”

“அதுவா… வாசிக்கிறேன் கேளு..”

(இரண்டு ஃப்ரண்ட்ஸ் காஃபி ஷாப்ல இருக்காங்க. ஒருத்தன் ரொம்ப சோகமா இருக்கான்.

“என்னடா எதுக்கு இத்தனை சோகம்? உலகமே இடிஞ்சு விழுந்தது மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்க?”

“ஏன்டா கேட்கமாட்ட? உனக்கெல்லாம் நீ சொல்றதைக் கேட்கிற மாதிரி பொண்டாட்டி வாய்ச்சிருக்கு. எனக்கு அப்படியா?”

“உன் தங்கச்சி சொன்ன பேச்சைக் கேட்கிற ஆளா? அது சரி.. நான் பேச ஆரம்பிச்சா நீ தாங்கமாட்ட.. உன் விஷயத்தைச் சொல்லு.”

“போன வாரம் அவளோட பர்த்டே வந்துச்சுடா. முன்னாடியே என்ன வேணும்னாலும் வாங்கிக்கோன்னு காசு கொடுத்துட்டேன். ஆனா பர்த்டேய மறந்து போயிட்டேன். சர்ப்ரைஸ் பண்ணத்தான் தெரியல விஷ் பண்ணக் கூடத் தெரியாதான்னு ஒரு வழி பண்ணிட்டா. வீட்டுக்குப் போனா திருப்பி ஆரம்பிப்பா..”

“ஹா.. ஹா.. ஹா.. தங்கச்சி சூப்பர் டா மச்சான். இனிமேல் பர்த்டேய மறந்து போவியா என்ன? உன் அனுபவத்தை வச்சு உலகத்துக்கு பெரிய மெசேஜ் சொல்லலாம்.”

“மெசேஜா? ஏன்டா.. நீ வேற..?”

“பொண்டாட்டி பர்த்டேய ஞாபகம் வச்சுக்கணுமா? ஒரேயொரு தடவை மறந்து பாருங்க.. அப்புறம் ஜென்மத்துக்கும் மறந்து போகாது. எப்படி இருக்கு மெசேஜ்.. சூப்பர்ல!!”

சோகத்தில் இருந்த நண்பனும் அதைக் கேட்டுச் சிரித்தான்.)

படித்து முடித்த பிரபாகரன் மீண்டும் சிரித்தான். சம்யுக்தாவும் அவனுடன் இணைந்து கொண்டாள்.

“நீயே சொல்லு, கல்யாணம் ஆகியிருந்தால் வேற மாதிரி சமாதானம் செய்ய முடியும். இப்போ நம்மளோட வெஜிடேரியன் லவ்வுல என்ன செஞ்சு சமாதானம் செய்யறது? அதான் உன் பர்த்டேய மறக்க முடியாத அளவுக்கு மூளையோட எல்லாப் பக்கமும் save பண்ணிட்டேன்.”

“போதும். போதும். உங்க பெருமை. இன்னைக்கு வேற எந்த ப்ரோகிராமும் வச்சுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன். ஞாபகம் இருக்கா?”

“ம்ம்.. சொல்லு. எங்க போகணும்?”

“காலைல ஒன்பது மணிக்கு கடையில மீட் பண்ணலாம். அப்போ சொல்றேன்”

“அப்போ, காலேஜ் கட்டா நாளைக்கு? ஏதோ பெரிய ப்ளான் போடற போல. எனக்கு ஏதாவது நல்லது நடந்தால் சரி தான். கொஞ்சம் பார்த்து ஏதாவது செய்ங்க மேடம்.”

“பெரிசா செஞ்சிடுவோம். இப்போ தூங்கணும். நான் கட் பண்றேன்” என்று அழைப்பைத் துண்டித்து விட்டுப் படுத்துக் கொண்டாள் சம்யுக்தா. வண்ண வண்ணக் கனவுகளும் அதில் பிரபாகரனும் வந்தது. காலையில் மகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வந்த பாரதி முகத்தில் புன்னகையுடன் உறங்கும் மகளைப் பார்த்தார்.

“ஹேப்பி பர்த்டே சம்யு!” என்று நெற்றியில் முத்தமிட்டு எழுப்பினார். மிக உற்சாகமாக எழுந்த சம்யுக்தா தந்தை, அண்ணன், நண்பர்கள் என்று பலரது வாழ்த்துகளை அலைபேசி வாயிலாகப் பெற்ற வண்ணம் இருந்தாள்.

பாரதி வழக்கம் போல மருத்துவமனைக்கு கிளம்ப, “ம்மா! இன்னைக்கு ஃப்ரண்ட்ஸ் ட்ரீட் கேட்டாங்க. காலேஜ் லீவ் போட்டு இருக்கேன். வெளியே மீட் பண்ணலாம்னு இருக்கோம்” என்று அறிவித்தாள் மகள். மகளின் மீது முழு நம்பிக்கை வைத்து பாரதி எந்த கேள்வியும் கேட்கவில்லை.

“ஓகேடா. பார்த்து போயிட்டு வாங்க. ஈவ்னிங் சீக்கிரம் வரப் பாரு. என்ஜாய் யுவர் டே!”

“தாங்க் யூ ஸோ மச் மா!” என்ற சம்யுக்தாவின் உள்ளம் குறுகுறுத்தது. முதல் முறையாக பொய் சொல்லி விட்டு வெளியே செல்லவிருக்கிறாள்.

அப்பாவுக்கும் அண்ணனுக்கும் தெரிந்தால் என்ன நடக்கும் என்று யோசனையாக இருந்தாலும் இன்று எனது நாள் என்று கிளம்பி விட்டாள்.

பிரபாகரனைப் பார்த்தவுடன் மற்ற அனைவரும் பின்னுக்கு தள்ளப்பட்டனர். அவளுக்குப் பிடித்த ஜுஸைக் குடித்து விட்டு இருவரும் கிளம்பினார்கள். துப்பட்டாவை வைத்து முகம் முழுவதும் மூடியவாறு தனது புல்லட்டில் ஏறியவளைக் கண்டு சிரித்தான் பிரபாகரன்.

“அவ்வளவு பயம் இருக்கிறவ எதுக்கு இப்படி வரணும்?”

“ஷ்ஷு.. இது ஒரு சேஃப்டிக்கு. ஆரம்பத்திலேயே தெரிஞ்சவங்க கண்ணுல பட்டா நாள் பூராவும் வேஸ்டா போகும். பேசாம வண்டிய ஓட்டுங்க.”

“உஷாரா இருக்க, இன்னும் எங்க போகணும்னு நீங்க சொல்லவே இல்லை மேடம். வண்டிய ஸ்டார்ட் பண்ணி முழுசா ஒரு நிமிஷம் ஆச்சு.”

“மேகமலை வியூ பாயிண்ட் போங்க” அசால்ட்டாக சொல்லி விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள் சம்யுக்தா.

“வாட்! நிஜமா தன் சொல்றியா? உங்க டாடி பார்த்தால் பரவாயில்லையா?”

“எங்க டாடி கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருப்பாங்க. வியூ பாயிண்ட் பக்கம் போறதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மி. கேள்வியா கேட்காமல் கிளம்புங்க. அப்போ தான் சீக்கிரம் ரிட்டர்ன் ஆக முடியும்.”

“உனக்கே பயமில்லேன்னா எனக்கென்ன? அங்கே ஒத்தை யானை வேற அடிக்கடி க்ராஸ் ஆகும்ணு சொல்லுவாங்க. யார் மூஞ்சில முழிச்சேன்னு தெரியலையே! பிரபாகரா! உனக்கு இன்னைக்கு அதிர்ஷ்டம் தான்டா” என்று சொல்லிக் கொண்டே கண்ணாடி மூலம் பின்னே இருந்தவளைப் பார்த்துக் கண்ணடித்தான். அதற்காகவே காத்திருந்தது போல முதுகில் ஒன்று வைத்து அப்படியே சாய்ந்து கொண்டாள் சம்யுக்தா.

புல்லட் சீரிப் பாய்ந்தது. ஜில்லென்ற காற்று முகத்தில் வந்து மோத பிரபாகரனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் சம்யுக்தா. இடையில் ஆங்காங்கே நிறுத்தி பல செல்ஃபி எடுத்து, கொண்டு வந்த ஸ்நாக்ஸைக் காலி செய்து அவர்கள் மேகமலை வியூ பாயிண்ட் செ
ன்றபோது அங்கே ஒற்றை யானைக்குப் பதிலாக அவர்கள் எதிர்கொண்ட நபர், கண்ணன். சம்யுக்தா வின் தந்தை.
 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு - 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom