• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 17

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு-17

வீட்டுக்கு வரும் வழியில் எல்லாருமே மாலினியும் அந்த பெண்ணும் உத்ராவை மட்டும் ஏன் அப்படி எதிரியை பார்ப்பது போல பார்க்க வேண்டும் என யோசனையோடு வந்தனர்.

அம்பலவாணன் தன் கட்டை குரலில் மகனிடம் "எதுக்கு உன் பொண்டாட்டியும், அந்த பொண்ணும் என் பேத்தியை முறைச்சிட்டு போனாங்க..."என கேட்க...

சுந்தரலிங்கம் "உங்க மருமக லட்சணம் தான் தெரியுமே...அவளுக்கு உத்ராவை எப்பவுமே பிடிக்காது..வீட்டுக்கு வந்தா கூட அவளை அலட்சியமா நடத்துவா..."

"எனக்கு அவளை நல்லா தெரியும்... அவ ஒரு விஷயம் தீர்மானம் பண்ணா அது தான் உண்மைனு நம்புவா...நாம எடுத்து சொன்னாலும் கேக்க மாட்டா.."

"என் சந்தேகம் என்னனா உத்ரா தான் இந்த கல்யாணத்தை நடத்தி அவளை அசிங்கப்படுத்தினதா தப்பா நினைச்சு...அவளை முறைச்சு பாத்துட்டு போயிருப்பா.." என தெளிவாக தன் மனைவியின் மனநிலையை சொன்னார்.

"சரி டா...நீ சொல்றது ஏத்துக்கற மாதிரி தான் இருக்கு...ஆனா கூட வந்த அந்த பொண்ணு.." என இழுக்க..

"அப்பா...அவ உத்ராவை சத்தியமா பாத்திருக்க மாட்டா..அவளை வருணுக்கு கல்யாணம் முடிக்கிறதா என் பொண்டாட்டி பேசிட்டு வந்ததால...அவ மீராவை தான் பாத்திருப்பா.. " என தன் கணிப்பை தப்பாக சொன்னார்.

அதுவரை அமைதியாக இருந்த மஹாலிங்கம் "ஏம்மா...மீரா..அந்த அம்மா உன் கிட்ட அப்டி என்ன மா..பேசினாங்க...அவங்க பேசினதை கேட்டு.. அடிக்கடி உன் முகம் மாறிச்சே..."

அதில் மறுபடியும் முகம் மாறிய மீராவை பார்த்தவர்.."தப்பா நெனக்காத மா...எங்கிட்ட சொல்லலாம்னு சொல்லு...நான் வம்புக்காக கேக்கறவன் இல்ல...ஏதாவது பிரச்னையா இருக்குமோங்கற ஆதங்கத்துல தான் கேக்கறேன்.."என விளக்கமளித்தார்.

"ஐயோ..நான் உங்களை தப்பா நினைக்கல மாமா...நானே உங்க எல்லார் கிட்டயும் எப்டி சொல்றதுனு தெரியாம குழம்பிட்டு இருந்தேன்..."

"அவங்க வேற யாரும் இல்ல...நான் அப்பானு சொன்னவரோட பொண்டாட்டி, பொண்ணு.." என சொல்ல..அதை கேட்டு குழம்பியவர்களிடம் மீரா..

"எங்கப்பானு சொன்னவர்க்கு ரெண்டு பொண்டாட்டி.. அவரோட மொதல் பொண்டாட்டியோட பொண்ணு நான். அவங்க ரெண்டாவது.

அவர் ரெண்டு பேரை கல்யாணம் பண்ணதே யாருக்கும் தெரியாம மறைச்சு...ரெண்டு வீட்டுலயும் வாழ்ந்து வந்தார்.

"எனக்கு பத்து வயசு இருக்கப்ப...ஒரு நாள் இந்த விஷயம் தெரிஞ்ச எங்கம்மா ஹார்ட் அட்டாக்ல இறந்து போக... அப்ப அவரோட பொண்டாட்டி என் கிட்ட வந்து என்னை படிக்க வெச்சு...பாதுகாப்பா வெச்சுக்கறதாவும்..அவங்களே கல்யாணம் பண்ணி தரதாவும் சொல்லி...நான் அவங்க புருஷனை எந்த காலத்துலயும் அப்பானு கூப்பிட கூடாதுனு சொல்லி சத்தியம் வாங்கிக்கிட்டாங்க.."

"நானும் சின்னவ தான் யோசிக்கற பக்குவம் கூட அவங்களுக்கு இல்ல...அவங்களுக்கு அவங்க குடும்ப கவுரவம் முக்கியமா இருந்தது.."

"அவங்க பேசறத்துக்கு எந்த பதிலும் சொல்லாம அமைதியா இருந்த அவரை பாத்த நானும் அப்பவே அவரை அப்பாங்கற ஸ்தானத்துலேந்து தூக்கி போட்டுட்டேன்..."

"அதுக்கு பிறகு என் வாழ்க்கை எல்லாம் ஹாஸ்டல்லேயே போச்சு...எதுக்கு இந்த வாழ்க்கையை வாழணும்னு வெறுத்து போய் இருந்தவ...

வருணை பத்தி உத்ரா, ஸ்வேதாவும் சொல்ல..சொல்ல கேட்டு கேட்டு,அதில் இம்ப்ரஸ் ஆகி, அவரை நேர்ல பாத்ததும், பழக ஆரம்பிச்சதும், பிறகு சந்தோஷமா அவர் கூட வாழணும்னு அடிக்கடி தோண ஆரம்பிச்சது..."

"எங்க வருணை விட்டுவேனோங்கற பயத்துல தான் நான் உடனே அவரை கல்யாணம் பண்ணிக்கறதா யோசிக்காம சொல்லிட்டேன்...அதுக்கு பிறகு நடந்தது தான் உங்களுக்கு தெரியுமே..."

"நான் நடந்துகிட்டது எதாவது தப்பா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க மாமா.."என அழுதபடி சொல்லி முடித்தாள்.

அவள் அழுவதை பார்த்து பதறிய மஹாலிங்கம் "இல்ல மா...உன்னை நாங்க தப்பா நினைக்கல..நம்ம வீட்டுக்கு வந்துட்டல்ல...உன் கவலை எல்லாம் மறந்துட்டு இனி நீ நிம்மதியா சந்தோஷமா இரு...சரியா.. என அவளை சமாதானம் செய்தார்.

அதன் பின் காரில் எந்த பேச்சு சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. தங்களது வீட்டு வாசலுக்கு வந்ததும் முதலில் உள்ளே போன உத்ரா வேகமாக ஆரத்தி கரைத்து எடுத்து சுற்ற..அதன் பின் வீட்டுக்குள் நுழைந்தனர்.

அம்பலவாணன் "ஏம்மா...பேத்தி..இதுவரைக்கும் நீ ஹாஸ்டல்ல இருந்தது போதும்...இனி நம்ம வீட்டுலேந்தே நீ காலேஜ் போ..."

"டேய் சின்னவனே..உத்ராவையும் இனி ஹாஸ்டல்ல விட வேணாம்...அதான் அவளை பாத்துக்க மருமக பொண்ணு வந்தாச்சே...அவளையும் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடு.." என சொல்லி தன்னறைக்குள் போனார்.

சற்று நேரத்தில் கவுதம் வீட்டினர் அங்கிருந்து கிளம்ப..அதன் பின் மறுநாளே ஹாஸ்டலை காலி செய்து மீராவும், உத்ராவும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

சமையல் செய்வதை அவர்கள் வீட்டில் இருந்த ஒரு பாட்டி பார்த்து கொள்ள...மேல் வேலைக்கு ஒரு பெண்,தோட்டத்தை சரியாக செப்பனிட்டு பார்த்து கொள்ள ஒரு ஆள் என வீட்டில் ஆட்கள் இருக்கவே...மீராவுக்கும் உத்ராவுக்கும் தங்களது படிப்பை எந்த தடையும் இல்லாமல் தொடர முடிந்தது.

மீரா தன் படிப்பை முடித்த பின் தன்னுடைய கம்பெனியை கோயமுத்தூருக்கு மாற்றி கொண்டு வர முடிவு எடுத்ததாக சொன்ன வருண் அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க போவதாக சொல்லி வருணும் அங்கிருந்து கிளம்பினான்.

அதன் பின் மீராவுக்கும் உத்ராவுக்கும் நடுவில் அண்ணி நாத்தனார் என்பதை தாண்டி ஒரு அழகிய நட்பு வளர்ந்தது.

காலையில் எழுந்து வந்ததும் மீராவோடு பேசுவதில் அந்த வீட்டினரின் பொழுது ஆரம்பம் ஆகும். வாக்கிங் போய் வந்த பின் தாத்தாவுக்கு கஞ்சி, மாமனார்களுக்கு காபி, தனக்கும் மீராவுக்கும் டீ என அவரவர் காலையில் குடிக்க தேவையானதை கொடுத்து எல்லாரோடும் அமர்ந்து பேசியபடி அருந்துவது அவளை பொறுத்தவரை புது அனுபவமாக இருக்க...உத்ராவுக்கோ..அது போல இதுவரை பார்க்காததால் ஆச்சரியமாக இருந்தது.

அதுவரை தன் நட்புக்களை தனக்கென வீடு இல்லாததால் அவர்களை தன் வீட்டுக்கு அழைக்க முடியாது வேதனைபட்ட மீரா...தன்னுடைய வீட்டுக்கு வந்த பின் வாராவாரம் தன் நட்புக்களை வீட்டுக்கு அழைத்து அவர்களோடு தன்னுடைய பொழுதை நல்ல விதமாக போகும்படி பார்த்து கொண்டாள்.

மீராவின் படிப்பு முடிந்து அவள் மேற்படிப்பாக சைக்காலஜியை தேர்தெடுத்து சென்னையில் படித்து முடிக்க..கவுதம் நெப்ராஜியை தன்னுடைய மேற்படிப்பாக தேர்ந்தெடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்து முடித்தான்.

அவர்கள் காலேஜில் இருந்து போன பின் ஸ்வேதா, அபிமன்யுவோடு ஒன்றாக இருந்த உத்ரா, ஸ்வேதாவும் படிப்பை முடித்து போன பின் சரியான நட்புக்கள் இல்லாமல் திணறினாள். அவளுடைய ஒரே ஆறுதல் தினமும் அவர்களிடம் போனில் பேசுவது தான்.

உத்ராவின் நினைப்பிலேயே தன்னை சுற்றி நடப்பதை உணராது கண்களை மூடி ஏதோ யோசனையோடு இருந்த கவுதமை பார்த்த ஸ்வேதா முதலில் தூங்குவதாக நினைத்தவள்...சற்று உற்று பார்க்க அவனின் கண்ணின் மணிகள் உருள்வது பார்த்து மெல்ல கவுதம் என கூப்பிட..கண் திறந்து பார்த்தவனிடம் "நாம ஷில்லாங்க் வந்தாச்சு...இன்னும் பத்து நிமிஷத்துல ஹாஸ்பிடல்ல இருப்போம்.."என்றாள்

(தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom