• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 15

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு-15

"பிரச்சினை எதுவும் இல்லங்க..எனக்கு உங்க கிட்ட பேசணும் போல இருந்தது...நீங்க தூங்குங்க.. வேணுமானா காலைல பேசவா.." என மீரா இழுக்க..

"இல்ல...இல்ல...சொல்லுங்க என வருணின் உற்சாக பேச்சால் பேச ஆரம்பித்தாள்..தொடர்ந்த பேச்சுக்கள்...என்ன பேசினார்கள் என தெரியாது பேசியபடி இருந்தவர்களுக்கு நேரம் போவதே தெரியவில்லை. பேசியபடி கடிகாரத்தை பார்த்த வருண் அதிகாலை ஐந்து என காட்ட..."விடிஞ்சு போச்சுங்க...நீங்க தப்பா நெனக்கலேனா..எனக்கு ரொம்ப தூக்கம் வருது..ஏற்கனவே இன்னிக்கு சித்தப்பாவோட மில்லுக்கு வரேன்னு சொல்லி இருக்கேன்...நான் தூங்கவா.."என பாவமாக கேட்க..

அதில் சிரித்தவள் "சரிங்க..வருண்...தூங்குங்க..நான் போனை வெக்கறேன்.." என சொல்லி போனை வைத்து அவளும் தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தாள்.

அன்று மறுபடியும் அவளை தேடி வருண் வர..மீராவும் அவனிடம் வந்து பேச...இது தினமும் தொடர ஆரம்பித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பித்தனர்.

சில மாதங்கள் கழித்து ஒரு நாள் மீராவை பார்க்க வந்த வருண் மிக பதட்டமாக இருந்தான். அவள் பல முறைகள் கேட்ட பின் மெதுவாக "நான் லவ் பண்ற விஷயம் எங்கம்மாக்கு தெரிஞ்சு போச்சு...அடிக்கடி இங்க வர்றது தெரிஞ்ச அவங்க..நான் பாக்க வர்றது ஸ்வேதானு தப்பா முடிவு செஞ்சு மாமா வீட்டுக்கு போய் சண்டை போட்டுட்டு வந்தவங்க... எங்க வீட்டுல யார்க்கும் தெரியாம, சொல்லாம அவங்களா போய் எனக்கு அந்த பிசாசையும் அவளோட பெரியம்மா பையனுக்கு என் தங்கையையும் பேசி முடிச்சிட்டாங்க...அடுத்த வாரம் நிச்சயம்னு முடிவு பண்ணிட்டாங்க...எங்க வீட்டு ஆளுங்களுக்கு அன்னிக்கு சொன்னா தான் யாரும் பிரச்சினை பண்ண மாட்டாங்கனு சொல்லாம அமைதியா இருக்காங்க...எனக்கு என்ன பண்றதுனே தெரியல.." என்றான்.

அவனுடைய பதட்டம் மீராவையும் தொற்றி கொள்ள..உடனே கவுதம்க்கு போன் செய்து காலேஜ் கார்டனுக்கு வருமாறு அழைத்தாள். அவனுடன் அபிமன்யு, ஸ்வேதா, உத்ரா சேர்ந்து வந்தனர்.

அங்கு வந்த கவுதம் அமைதியாக அவளுடன் வருணும் இருப்பதை நெற்றியை சுருக்கியபடி பார்த்தான்.

அவனிடம் தங்களை பற்றி மெதுவாக எடுத்து சொன்ன வருண்..தற்போது அவன் அம்மாவின் முடிவையும் சொன்னான்.

"இதுக்கு ஒரே வழி தான் இருக்கு அண்ணா...நீங்க வீட்டுக்கு தெரியாம மீராக்காவை கல்யாணம் பண்ணிக்கங்க.."என உத்ரா தெளிவாக சொல்ல..

அதை கேட்ட கவுதம் "உத்ரா..இது ரொம்ப தப்பு..வருண் அண்ணா பண்றதே தப்பு...இதுல நீ வேற அவருக்கு எடுத்து குடுக்கறீயா.."என அவளை கண்டித்தான்.

உடனே அவர்களிடமிருந்து தனியாக போய் தன்னுடைய போனை எடுத்தவள் வேகமாக சிலரை போனில் அழைத்து பேசி..சில ஏற்பாடுகளை செய்து விட்டு வந்த உத்ரா "அண்ணா..சொல்ல வேண்டியவங்க கிட்ட சொல்லியாச்சு..நீங்க அமைதியா நடக்கறதை பாத்துக்கிட்டே... எந்த கவலையும் இல்லாம இருக்கலாம்...இன்னும் கொஞ்சம் நேரத்துல அவங்களே இங்க வருவாங்க.." என சொல்லி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

அவளிடம் யார் என கேட்டும் பதில் சொல்லாததால் எல்லாரும் அவளை போலவே காத்திருக்க ஆரம்பித்தனர்.

ஒரு மணி நேரம் கழித்து வந்தவர்களை பார்த்து உத்ரா மீரா தவிர மீதி இருந்தவர்கள் அதிர்ந்து எழுந்து நின்றனர்.

வருண் தாத்தா,அப்பா,சித்தப்பா,

அவனுடைய தங்கை வர்ஷா என குடும்பமாக வந்திருக்க.. வந்தவர்களை அழைத்து அவர்களுக்கு மீராவை அறிமுகப்படுத்தி, அவளுக்கும் வருணுக்கு இடையே இருக்கும் காதலை சொல்லியவள்... தற்போது பெரியம்மா எடுத்திருக்கும் முடிவையும் அவர்களிடம் சொன்னாள்.

அதை கேட்டதுமே அதிர்ந்து போனவர்கள்.."போயும் போயும் அந்த வந்தனா தான் இவளுக்கு கெடச்சுதா..எந்த நேரத்துல என் பொண்டாட்டியா எங்க வீட்டுக்கு வந்தாளோ..அதுலேந்து நடக்கறது எல்லாமே தப்பு தப்பா இருக்கே"என கோவப்பட்ட சுந்தரலிங்கம் என்ன செய்வது என தெரியாது தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்து விட்டார்.

"நல்ல நேரம் பாத்து நம்ம செல்வி பையனுக்கு வர்ஷாவை கல்யாணம் செய்யறதை பத்தி அவங்க வீட்டுல பேசலாம்னு நெனச்சேனே.

அத்தனையிலும் படுபாவி மண்ணள்ளி போட்டுட்டாளே...."என புலம்பியபடி அவர்கள் தாத்தா ஒரு ஓரமாக அமர்ந்தார்.

ஆளாளுக்கு முடிவெடுக்க முடியாமல் பேசியபடி இருந்தவர்களை பார்த்த உத்ரா மீராவை அழைத்து கொண்டு தன் தாத்தாவின் அருகில் போய் உட்கார்ந்து "தாத்தா...இங்க பாருங்க..இவங்க பேர் மீரா..இவங்களும் வருண் அண்ணாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க..

பாவம்..மீராக்கா..அவங்களுக்கு அப்பா..அம்மா இல்ல..அவங்களை அண்ணாவுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிடுங்க தாத்தா..அவங்களுக்கு எல்லாமா நாம இருப்போம்" என விஷயத்தை மெல்ல சொன்னதும் மீரா அவரின் கால்களில் விழ..."நல்லா இரு மா" என்று ஆசீர்வாதம் செய்தார்.

அவளுடைய பெரியப்பா "சரி மா..திடீர்னு கல்யாணம்னா எப்டி..அதுவும் நமக்கு தெரியாம உங்க பெரியம்மா வேற மாதிரி முடிவெடுத்திருக்கும் போது.."என்றதும்..

உத்ரா "பெரியப்பா..நாம அவங்களுக்கு தெரியாம முடிவெடுத்திடுவோம்.."என சொல்லி முடித்தாள்.

சில நிமிடங்கள் எந்த பேச்சும் இல்லாமல் அமைதியாக போக...தன் தொண்டையை கனைத்து கொண்ட தாத்தா அம்பலவாணன்.. "எப்ப எங்க மருமக எங்களுக்கே தெரியாம பெரிய பெரிய விஷயங்கள் பண்ண ஆரம்பிச்சு..எங்களுக்கு அதிர்ச்சி தரணும்னு முடிவு பண்ணாளோ.. பதிலுக்கு நானும் அவளுக்கு அதிர்ச்சி தர முடிவெடுத்திட்டேன்...நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்..."

"வர்ற வெள்ளிக்கிழமை மருதமலை முருகன் கோயில்ல வருணுக்கும் மீராவுக்கும், செல்வி பையன் நிரஞ்சனுக்கும் வர்ஷாவுக்கும் கல்யாணம்.."என்றார்.

அதை கேட்டு அதிர்ந்த கவுதம் "இருந்தாலும் தாத்தா...சித்திக்கு சொல்லாம.."என இழுக்க..

"அவ கிட்ட சொன்னா..என்ன நடக்கும் தெரியுமா...எல்லாரையும் கேவலமா பேசி..சாப்பிடாம..செத்து போறதா மிரட்டி தான் நினைச்சதை சாதிச்சு சந்தோஷப்படுவா..ஆனா அதுக்கு பிறகு என் பசங்க வாழ்க்கை ...அவங்க ரெண்டு பேரும் நடை பிணம் ஆகிடுவாங்க..அதை நடக்க நான் விட மாட்டேன்.. அப்பா சொன்னது போல ரெண்டு கல்யாணமும் நடக்கும்... இனி இதுல பேச ஒண்ணுமில்ல...இன்னிக்கு ஞாயிறு.. நமக்கு நாலு நாள் தான் இருக்கு.."

"நாளைலேந்து நமக்கு நிறைய வேலை இருக்கு..தாலி வாங்கறது அப்பா பாத்துப்பாங்க. எங்க சொந்தக்காரங்க யார் வீட்டுல கல்யாணம்னாலும் எங்கப்பாவை தான் அழைச்சிட்டு போய் அவர் கையால வாங்கி தர சொல்லுவாங்க..அதனால என் பொண்டாட்டிக்கு சந்தேகம் வர வாய்பில்ல...

"கோயில்ல கல்யாணம் நடத்தற பொறுப்பு என் தம்பியோடது...

அடிக்கடி அவன் சொந்தக்காரங்களோட வேண்டுதல்னு மருதமலையில கல்யாணம் ஏற்பாடுகள் செய்வான்...அதனால பிரச்சினை இல்ல..."

கல்யாண பொண்ணுக்கு ஜவுளி எடுக்கறது எல்லாம் நீங்க பொண்ணுங்க யாராவது ரெண்டு பேரா போய் வாங்கிட்டு வந்துடுங்க..தவறி கூட கல்யாண பொண்ணுங்களை அழைச்சிட்டு போயிடாதீங்க.."

"ஒரு வேளை நாம பண்ற ஏற்பாடுகள் பத்தி என் பொண்டாட்டிக்கு தகவல் போயிட்டா..எல்லாம் விபரீதமா போயிடும்.." என சொல்லி சூழ்நிலையை தன் கைகளில் எடுத்து கொண்டார்.

அதன் பின் நடப்பது எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்தது. தாத்தா உடனே தன்னுடைய தம்பி பெண் செல்விக்கு போன் செய்து நடந்ததை சொல்ல..அவள் கணவரிடமும் அம்பலவாணன் எல்லா விஷயத்தை விளக்கி சொன்னதும் அவரும் சூழ்நிலை புரிந்து தன் மகனுக்கு கல்யாணம் செய்ய சம்மதித்தார்.

மறுநாள் தான் சொன்னபடி அம்பலவாணன் போய் தாலி வாங்கி வந்தார். முகூர்த்த ஜவுளி எடுக்கும் பொறுப்பை செல்வி ஏற்று கொள்ள..

மருதமலை கோயிலுக்கு போன மஹாலிங்கம்..அங்கு கல்யாணம் நடத்த ஏற்பாடுகள் செய்து விட்டு வந்தார்.

அதன் பின் அமைதியாக நாட்கள் போக..வெள்ளிக்கிழமை இனிதே விடிந்தது. காலையில் எல்லாருமாக கோயிலுக்கு போக...இனிதே இரண்டு திருமணங்களும் முடிந்தது.

உத்ரா நாத்தனார் என மீராவின் அருகிலேயே இருக்க..மீராவுக்கு தான் நினைத்தது வீட்டு பெரியவர்களின் ஆசியோடு நடந்ததில் சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை.(தொடரும்
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom