• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 14

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு-14

அவள் அழுவதை காண சகிக்க முடியாமல் வருண் "ப்ளீஸ்...ப்ளீஸ் அழாதீங்க..நீங்க இந்த மாதிரி அழுதா பாக்கறவங்க நம்மளை தான் தப்பா நினைப்பாங்க.." என அவளருகில் உட்கார்ந்து ஆறுதலாக பேசியதும்..

அதில் தன்னை மறந்து அவனுடைய தோளில் சாய்ந்தவளை பார்த்து அதிர்ந்தவன்.."என்னங்க..இது..
நீங்க என்னை இன்னும் தர்மசங்கடப்படுத்தறீங்க..தயவு செய்து என் தோள்லேந்து எந்திரிங்க..."

"நாளைக்கு உங்களை கல்யாணம் பண்ண போறவர் இதை பார்த்தா என்னாகும்னு யோசிச்சிங்களா..

அதுவும் போக நீங்க ஒரு டாக்டர்..சுத்தி நடப்பு என்னங்கறதே புரிஞ்சு நடந்துக்கோங்க.." என கோபமாக சொன்னான்.

அந்த வார்த்தைகளில் பாதிக்கப்படாததை போல மீரா "ப்ளீஸ்...தயவு செய்து என்னை உங்க தோளில் இருந்து எந்திரிக்க மட்டும் சொல்லாதீங்க..

எங்க அம்மாவோட தோளில் சாய்ந்து இருந்தப்ப கிடைச்ச நிம்மதி, பாதுகாப்பு எல்லாம் இத்தனை வருஷத்துக்கு பிறகு இப்ப தான் எனக்கு கிடைச்சிருக்கு.."என சொல்லி இன்னும் நெருக்கமாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவளை சமாளிக்க முடியாமல் போன வருண் "உங்கம்மா போன பிறகு உங்க வாழ்க்கை என்னாச்சுனு நான் தெரிஞ்சுக்கலாமா.." என மெதுவாக கேட்க..

மீரா "எங்கம்மா...இறந்து போன தகவல் கேட்டு எங்கப்பானு நான் நினைச்சவரும்...அவரோட பொண்டாட்டியும் நாங்க இருந்த வீட்டுக்கு வந்தாங்க...

அவரோட வந்தவங்க அழுது அழுது மயங்கி போன என்னை பார்த்து பயந்து போய் ஹாஸ்பிடல்ல சேத்துட்டு என் கூடவே இருந்தாங்க.."

"அப்பானு நான் சொன்னவர்... எங்க வீட்டையே பாத்துட்டு இருந்த எல்லாரும் எங்கம்மாவுக்குனு எந்த உறவும் இல்லாதவர்,எங்க சூழ்நிலை புரிஞ்சு தானே முன்வந்து அனாதைக்கு கொள்ளி வெச்சார்னு பெருமையா பேச வெச்சு..

ஊர் அவரோட காரியத்தை மெச்ச...
எங்கம்மாவோட கடைசி காரியங்களை பண்ணாரு.."

"ஹாஸ்பிடல்ல நான் கண் முழிச்சதும்..என்னை வந்து அவர் பாத்தாரு..என் பக்கத்துலேயே கண் கலங்க நின்னுட்டு இருந்தாரு..நான் பேசல..அவர் முகத்தை கூட பாக்க விரும்பல.."

"அவரோட பொண்டாட்டி என் கிட்ட..நீ சின்ன பொண்ணு...உனக்கு இது புரிஞ்சிக்கிற வயசு இல்ல..இவர் உங்களை மட்டும் இல்ல...என்னையும் ஏமாத்தியிருக்காரு.. நீ தனியா இருக்கறதா நெனச்சுக்காதே....

உனக்கு எப்பவும் நான் இருக்கேன்னு நெனச்சு தைரியமா இருக்க பழகணும்னு சொல்லி அழுதபடி என் கைகளை பிடிச்சு எனக்கு ஆறுதல் சொன்னாங்க.."

"ஓஓஓ..." என வருணின் வார்த்தைகளால் பாதிப்படையாது எந்த குறுக்கீடு இல்லாமல் மடை திறந்த வெள்ளம் போல தன்னை பற்றிய மீரா சொல்ல ஆரம்பித்தாள்.

நான் இருக்கேன்னு சொன்னவங்க...அதுக்கு பிறகு..உன்னை என் வீட்டுல வெச்சுக்க முடியாது...நீ யார்னு கேக்கறவங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியாது.."

"அதனால எனக்கு தெரிஞ்ச ஒரு லேடிஸ் ஸ்கூல்ல உன்னை சேத்து விடறேன்..அங்கேயே ஹாஸ்டல் இருக்கிறதால உனக்கு தங்கறது, சாப்பிடறதுனு எந்த பிரச்சனையும் இருக்காது..."

"உன் படிப்பு செலவு என்னோடது..உனக்கு கல்யாணம் பண்ற பொறுப்பும் என்னோடது.. ஆனா நீ எந்த காலத்துலயும்.. இவரோட பொண்ணுனு உரிமை கொண்டாட கூடாது..யார் கிட்டயும் சொல்ல கூடாதுனு கண்டிஷன் போட்டாங்க.."

"எனக்கு என்னோட நிலைமையை பாத்து கோவமா வந்தது..ஆனா அதை யார் கிட்ட காட்டறது சொல்லுங்க.. அவங்க சொன்னதை ஏத்துக்கறதை தவிர எனக்கு வேற வழியில்ல.."

"நானும் சின்ன பொண்ணு தானே..எனக்கும் ஆசை எல்லாம் இருக்கும் தானே..ஆனா
என்னை ஒதுக்கிட்டாங்களேனு வெறுப்பா இருந்தது..."

சொன்ன மாதிரி என்னை ஸ்கூல் படிக்க வெச்சாங்க..காலேஜ் மெரிட்ல கிடைச்சது...அதுக்கு பிறகு அவங்களை தொந்தரவு செய்ய கூடாதுனு இப்ப வரைக்கும் ஸ்காலர்ஷிப்ல தான்
படிக்கறேன்.."

"அன்னிக்கு அவங்க மேல எனக்கு வந்த கோவத்தை இப்ப நெனச்சா என்னோட சின்ன பிள்ளைத்தனம் புரியுது..பாவம்.."

"அவங்களோட சூழ்நிலையிலயும்..என்னை படிக்க வெச்சாங்களேனு இப்ப பாராட்ட தோணுது..."என சொல்லி முடித்தாள்.

அவள் சொன்ன விஷயத்தின் கனம் தாங்காமல் அமைதியாக இருந்தவன்..சில நிமிடத்தில்..

"நீங்க சொன்னதோட அர்த்தம் எனக்கு புரியுது...நீங்க உங்களுக்குனு மனுஷங்க இல்லாம ஏங்கி போயிருக்கறது நல்லா புரியுது..ஆனா உங்களுக்கு என்னை பத்தி என்ன தெரியும்னு தெரியல.."

"எங்கம்மாவை பத்தி ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்..என் தங்கை நான் ரெண்டு பேரும் சேந்து சென்னைல ஒரு விஷுவல் எபெக்ட்ஸ் கம்பெனி வெச்சிருக்கோம்..கம்பெனி ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் தான் ஆகுது.."

"நான் இன்னும் வாழ்க்கையில செட்டில் ஆகல..என் தங்கை அவ ஆசைப்படறவனுக்கு கல்யாணம் செஞ்சு வெக்கணும்...அதுக்கு பிறகு தான் என்னை பற்றி யோசிக்கணும்.."

"இதெல்லாம் எங்கம்மா கிட்ட சொல்லி புரிய வெக்க முயற்சி செஞ்சு நான் தோத்துட்டேன்..அப்டி இருக்கும் போது.."என சொல்லி கொண்டு இருக்கும் போதே..மீராவுக்கு கெஸ்ட் வந்திருப்பதாக கேள்விப்பட்டு அதிசயப்பட்டவள்..யார் என பார்க்க அங்கு வந்த ஸ்வேதா இருவரும் ஒன்றாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து கோபமாக முறைக்க ஆரம்பித்தாள்.

அவளை பார்த்ததும் அதிர்ந்து எழுந்த வருண்.."அது..ஸ்வேதா..
மீரா...அழுதா...அதான்.." என பதட்டத்தில் உளற..

"எதுக்கு எனக்கு விளக்கம்..நான் உங்களை எதுவுமே கேட்கலையே அத்தான்.." என இறுகிய குரலில் ஸ்வேதாவின் வார்த்தைகளை கேட்டதும்..

மீரா "நான் தான் ஸ்வேதா அவர் தோள்ல சாய்ஞ்சேன்..அவர் மேல எந்த தப்பும் தப்பில்ல.."என சொன்னாள்...

"அக்கா..நான் உங்களுக்கு சொல்ல கூடாது...மணி பாத்தீங்களா..எட்டாக போகுது...மதியமே சாப்பிடல..அழுதுட்டே தூங்கிட்டீங்க..இப்ப சாப்பிட வெக்க உங்களை தேடினா..நீங்க இன்னும் சாப்பிட வரலேனு உங்க ரூம்மேட் சொன்னாங்க..எங்க இருக்கீங்கனு உங்களை தேடி வந்தா..." என முடிக்காமல் நிறுத்தினாள்..

"சாரி ஸ்வேதா..நான் தான் அவங்களை பத்து நிமிஷம்னு கூப்பிட்டேன்..பேசிட்டு இருந்ததுல டைம் ஆனதே தெரியல.."என வருண் சொல்லி அவளை சமாளித்து..."நீங்க போய் சாப்பிடுங்க.. மீரா..நான் கிளம்பறேன்.."என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வருண் கிளம்பியதும் ஸ்வேதாவோடு குனிந்த தலை நிமிராமல் வந்த மீரா நேரா மெஸ்க்கு போய் என்ற சாப்பிட்டோம் என தெரியாது சாப்பிட்டு விட்டு ஸ்வேதா எதாவது கேட்பதற்கு முன்பாகவே அவளுக்கு குட் நைட் சொல்லிவிட்டு வேகமாக ரூம்க்கு திரும்பினாள்.

அவளுடைய ரூம் மேட்க்கு அன்று நைட் ட்யூட்டி என்பதால் அவள் மட்டுமே அவளுடைய ரூமில் அன்று இருந்தாள். தன் மொபைல் எடுத்து மனோதத்துவம் சம்பந்தப்பட்ட ஜர்னல்களின் வலைப்பதிவை தேடி படிக்க நேரம் போவதே தெரியாது ஆரம்பித்தாள்.

தொடர்ந்து பார்த்ததில் கண்கள் சோர்வடையவே..சில நிமிடங்கள் கண்களை மூடி உட்கார்ந்து கொண்டாள். மணி பார்க்க பதினொன்று என காட்ட..ஏதோ யோசித்தவள்..போனை எடுத்து கூகிளில் வருணின் கம்பெனி பேரை டைப் செய்து தேட..அவன் கம்பெனி பேரை கண்டதும்..

அங்கு போய் பார்க்க..அவர்களை பற்றிய விவரங்கள் எல்லாம் வந்தது.

அதில் தெரிந்த வருணின் எண்களை பார்த்து அவனை அழைத்தாள். நன்றாக தூங்கி கொண்டு இருந்தவன் போன் அடிக்கும் சப்தம் கேட்டு ..தூக்க கலக்கத்தோடு போனை எடுத்து "ஹலோ...வருண் ஹியர்.." என்றான்.

"வருண்..நான் மீரா..ஸாரி..
தூங்கிட்டீங்களா..நான் டிஸ்ட்ரப் பண்ணிட்டேனா..."என

திக்கி திக்கி பேசுவதற்குள் தன்னை நிதானித்து கொண்டவன்..

"அதெல்லாம் இல்லீங்க...
இப்ப தான் தூங்க ஆரம்பிச்சேன்..உங்க கிட்டேயிருந்து திடீர்னு போன் பாத்ததும் பயமாகிடுச்சுங்க.."

"என் நம்பர் எப்டி உங்களுக்கு கிடைச்சது..என்னாச்சு மீரா..எதாவது பிராப்ளமா.." என அக்கறையோடு கேட்டான். (தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom