• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 13

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
சுயம்பு-13

அவர்களின் அலறலை கேட்டு மீரா எந்த பதிலும் சொல்லாமல் அங்கு காலியாக கிடந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள்.

அவளை பதட்டத்தோடு பார்த்த ஸ்வேதா "நீ என்ன சொன்னேனு யோசிச்சு தான் சொன்னியா" என்க..

பதட்டமே இல்லாமல் அமைதியான குரலில் "நல்லா தெரிஞ்சு தான் சொன்னேன்...

நீங்க பேசி பழகறதை பாத்து நானும் உங்களை போல...உங்க எல்லாரோடயும் ஒரே குடும்பமா ஆகணும்னு ஆசைப்பட்டேஇது தப்பா..சொல்லு"என தீர்க்கமாக பதில் சொன்னாள்.



அபிமன்யு"ஏன் மீரா கா..எங்க கூட பழகறத்துக்காக எதுக்கு இப்டி ஒரு முடிவு...எப்பவும் நீங்க எங்க ஃப்ரெண்ட் தான்.. உங்க கூட ப்ரெண்ட்ஷிப் எப்பவும் போல தான் இருக்கும்... எங்க பெரியத்தை பத்தி சொன்னதை கேட்ட பிறகுமா...நீங்க இப்டி முடிவெடுத்தீங்க.." என வேதனையோடு கேட்டபடி அவளை பார்க்க..



"ஆமா டா...வருணை பத்தி இந்த உத்ராவும், ஸ்வேதாவும் அடிக்கடி பேசி பேசி...எனக்குள் வருண் பத்தின ஒரு சலனத்தை ஏற்படுத்திட்டாங்க...இவரை கல்யாணம் பண்ணா என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு எனக்கு தோணும்படி வெச்சிட்டாங்க..இப்ப கூட இதை சொல்லலேனா...எப்பவுமே சொல்ல முடியாம போயிடுமோங்கற பயத்துல தான் நான் இப்ப இதை உடைச்சு சொல்லிட்டேன்..."



"ஏற்கனவே எனக்கு உங்களை பாக்க ஏக்கமா இருக்கும்...நீங்க எல்லாரும் குடும்பமா இருக்கீங்க...எனக்கு அம்மா அப்பானு குடும்பமா வாழற வாய்ப்பு கிடைக்கல.. அட்லீஸ்ட் என் குழந்தைகளுக்காவது அது கிடைக்கட்டும்னு நான் நெனச்சது தப்பா சொல்லுங்க.."என சொல்லி அழுது கொண்டே வேகமாக அங்கிருந்து ஓடி போனாள்.



கவுதம் அவளை கூப்பிட்டும்..அதை சட்டை செய்யாமல் ஓடியவளை பார்த்தவன் அங்கிருந்த ஸ்வேதாவை பார்த்து "அவளுக்கு என்ன பிரச்சினை... ஏன் அழுதுட்டு ஓடறா.." என புரியாமல் கேட்க...



அவளும் தனக்கும் எதுவும் தெரியவில்லை என பதில் சொல்லி விட்டு "நான் அவங்க ரூம்க்கு போய் என்னனு கேட்டு உங்களுக்கு சொல்றேன்.."என சொல்லி வேகமாக மீராவை பின் தொடர்ந்தாள்.



ரூம் கதவு தாளிட்டு இருக்க..தட்டினாலும் திறக்காததால் அமைதியாக அங்கிருந்த சேரில் உட்கார்ந்த ஸ்வேதா கவுதம்க்கு போன் செய்து "அவங்க கதவை திறக்கல...நான் வெளியே உக்காந்திருக்கேன்.. கதவை திறக்கட்டும்...நான் என்னனு கேக்கறேன்.." என சொல்லி போனை வைத்தாள்.

தர்மசங்கடமாக வருணை பார்த்த உத்ரா "ரொம்ப சாரி அண்ணா..இப்டி ஒரு பிரச்சனை வரும்னு எனக்கு தெரியாது.."என வேதனையோடு சொல்ல..

"பரவால்ல...மா...தப்பு என்னோடது தான்... எனக்கு நிம்மதி இல்லாம உன்னை பாக்க வந்து...உன்னையும் தேவையே இல்லாம கஷ்டப்படுத்திட்டேனோனு தோணுது..."

"சரி நான் கிளம்பறேன்...அடுத்த தடவை வரும் போது உனக்கு போன் பண்ணிட்டு வரேன்...வரேன் அபி..வரேன் கவுதம்.." என சொல்லி தளர்ந்த நடையாக நடந்து போனான்.

மாலை மணி ஆறு ஆனதும்...மீராவின் ரூம் கதவை தட்டிய அவளுடைய ரூம்மேட்.."மீரா...மீரா...உன்னை பாக்க கெஸ்ட் வந்திருக்காங்க..ஹால்ல உட்கார்ந்திருக்காங்க.." என குரல் குடுக்க...

அழுதபடி தூங்கி விட்டவள் ரூம்மேட் குரலை கேட்டு எழுந்து கதவை திறக்க...அழுததால் மீராவின் முகமும் கண்களும் சிவந்து போயிருந்தது.

என்னை தேடி யாரு வந்திருப்பாங்க என்ற யோசனேயோடு முகத்தில் நன்றாக தண்ணீர் அடித்து அலம்பி உடை மாற்றி கொண்டு கீழே இறங்கி போய் ஹாலில் பார்க்க அங்கிருந்த வருணையும், உத்ராவையும் பார்த்து திகைத்து போனாள்.

எதுவும் பேசாமல் நின்றவளிடம் போன உத்ரா.."அக்கா...எங்கண்ணா..உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணுமாம்.

ஹாஸ்டல்லேந்து வெளில வர முடியுமானு கேக்க சொன்னார்..."

"இல்ல உத்ரா...இவர் யாருனே எனக்கு தெரியாது..நான் எதுக்கு எனக்கு தெரியாத ஒருத்தர் கிட்ட பேசணும்.." என அலட்சியமாக மீரா கேட்க..

"சரி கா...அவரை உங்களுக்கு தெரிய வேணாம்...என்னை தெரியும்ல்ல...அவர் என்னோட அண்ணா...எனக்காக பேசலாமே.."என விடாமல் கேட்க..

அதில் தயங்கிய மீரா "ஏற்கனவே எனக்கு இன்னிக்கு உடம்பு சரியில்லைனு சொல்லி நான் நைட் ட்யூட்டிக்கு போகல...இப்ப வெளில போன தப்பா போயிடும் உத்ரா..." என்க..

வருண் எழுந்து "என்னை தப்பா நினைக்காதீங்க..எனக்கும் தங்கச்சிங்க இருக்காங்க..நானும் நல்ல குடும்பத்துலேந்து வந்தவன்..உங்க கிட்ட தப்பா எதுவும் பேசறத்துக்கு கூப்பிடல..."

"உங்களை வெளில எங்கயும் அழைச்சிட்டு போக விரும்பல..கொஞ்சம் உங்க ஹாஸ்டல்ல கார்டன்க்கு வாங்க...பத்து நிமிஷம்..ப்ளீஸ்.."என கூப்பிட "சரி வாங்க போகலாம்.."என மீரா அவர்களோடு கிளம்ப..

வெளியே வந்ததும் உத்ரா "சரி அண்ணா...அப்பறம் பாக்கலாம்.."என கிளம்பினாள்.

கார்டனில் போய் அங்கிருந்த கல் பெஞ்சில் மீரா உட்கார...அவளின் எதிரில் நின்ற வருண் சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் அவளையே பார்த்தபடி இருந்தான்.

தொண்டையை கனைத்து கொண்டவன் "நீங்க சொன்ன மாதிரி என்னை உங்களுக்கு தெரியாது... ஏன் என்னை பாத்து கூட இல்ல..எப்டி நான் உங்களுக்குள்ள சலனத்தை ஏற்படுத்தினேன்...உங்களுக்கு பொருத்தமா இருப்பேன்னு நீங்க முடிவு பண்ணிங்கனு தெரிஞ்சுக்கலாமா.."

"இது தெரியாம என்னால இங்கேயிருந்து போக முடியாதுனு தோணிடவே தான் நான் இத்தனை நேரம் காத்திருந்தேன்..." என்றான்

அவனையே உற்று பார்த்த மீரா "எல்லாத்துக்கும் காரணம் குடும்பம்ங்கற ஒரே விஷயம் தான்.." என சொன்னதும்..

அவளையே புரியாமல் பார்த்தவன் "நீங்க என்ன சொல்ல வரீங்கனு கொஞ்சம் தெளிவா..புரியும்படியா சொன்னா நல்லா இருக்கும்..."என்றதுமே

மீரா ஒரு பெரிய கேவலோடு.. "என்னை பத்தின எல்லா விஷயமும் சொன்னா தான் உங்களுக்கு புரியும்..என் ஃப்ரெண்ட்ஸ்க்கு என்னோட அப்பா அம்மா ரெண்டு பேரும் உயிரோட இல்லனு தான் தெரியும்.. இப்ப சொல்ல போற விஷயத்தை நான் அவங்க கிட்ட கூட சொன்னதில்லை.."

"எங்கம்மா,அப்பா, நான்னு ரொம்ப அமைதியான வாழ்க்கை எனக்கு பத்து வயசு வரைக்கும் இருந்தது. அப்பா எப்ப பாரு டூர் போயிடுவார்.. வீட்டுல அவரை அதிகமா நான் பாத்ததே இல்ல...மாசத்துல ரெண்டு தடவை தான் வீட்டுக்கு வருவாரு.."

"எங்களுக்கு சொந்தக்காரங்களும் கிடையாது. எங்கயாவது வெளியே போகணும்னா..

எங்கம்மா தான் அழைச்சிட்டு போவாங்க...அப்பா எங்க கூட வந்ததே இல்ல...நாங்களும் அவரோட வேலை அப்படினு சாதாரணமா இருந்துட்டோம்..."

"அது தப்புனு அன்னிக்கு...அந்த வெள்ளிக்கிழமை எங்களுக்கு கோடூரமா புரிய வெச்சது..." என்றதும்..

"என்னாச்சு.."என பதறிய வருணை பார்த்தவள்..

"நானும் எங்கம்மாவும்...எங்க வீட்டுக்கு கிட்ட ஒரு நகை கடை புதுசா திறக்கறாங்கனு பாக்க போனோம்...அப்ப...அப்ப.."என அழுகையில் திணறியவளை எதுவும் செய்ய முடியாது வேதனையாக பார்த்தான்.

"அந்த நகை கடைக்கு எங்கப்பா வந்திருந்தாரு...அவர் கூட ஒரு லேடி, ரெண்டு பசங்க நின்னுட்டு இருந்தாங்க...அவரை பாத்த சந்தோஷத்துல வேகமா அவர் கிட்ட போன எங்களுக்கு..

அவரோட இருந்த பொண்ணு டாடி..இதை வாங்கி தாங்கனு சொன்னதை கேட்டதும் அதிர்ச்சியா போச்சு.."

"அவர் கூட நின்னுருந்த லேடி யாரா இருக்கும்னு யோசிக்கறத்துக்குள்ள எங்க பக்கத்து நின்னுட்டு இருந்தவங்க...அவங்களோட ஜோடி பொருத்தத்தை பத்தி பெருமையா பேசினாங்க.."

அதை கேட்ட எங்கம்மா அவங்க கிட்ட அவங்க ரெண்டு பேரை பத்தி கேட்க..அந்தம்மா..ரொம்ப பெருமையா அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டினு சொன்னாங்க.."

அதை கேட்டதுமே பூமி பிளந்தது போல பாத்த எங்கம்மாவை தற்செயலா திரும்பி பாக்கும் போது..எங்கப்பா பாத்துட்டாரு.. அவரை சுத்தி நிறைய பேரு நிக்கவே..அங்கேயிருந்து நகர முடியாம..எங்களையே அதிர்ந்து போய் பாத்துட்டு இருந்தாரு.."

"அவர் எங்களை ஒருத்தர் அவர் கிட்ட வர சொல்லி மூலமா கூப்பிட்டாரு..அதை சட்டை செய்யாம அங்கே இருந்து வேகமா கிளம்பி வந்த எங்கம்மா வீட்டுக்குள்ள வந்ததும் தண்ணி குடுனு கேட்டாங்க..நான் எடுத்துட்டு வர்றத்துக்குள்ள.. அவங்க என்னை விட்டு போயிட்டாங்க.." என தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தாள்.(தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom