• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சுயம்பு 11

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
79
சுயம்பு-11

துரத்தி கொண்டு ஓடியவளிடம் கடைசியாக மாட்டி கொண்டவனின் முதுகில் ரெண்டு அடி அடித்து இழுத்து வந்த ஸ்வேதாவை எல்லாருமே அதிசயமாக பார்த்தார்கள்.

"கவுதம் இவளை உனக்கு தெரியுமா.."என மீரா கேட்க..

சிரித்தபடி கவுதம் "நல்லா தெரியும்.. இவங்க ரெண்டு பேரும் என்னோட கஸின்ஸ்..

இது ஸ்வேதா...இது அபிமன்யு..

ரெண்டு பேரும் இங்க சேந்து ஒரு மாசமாக போகுது.."

"இந்த ஒரு மாசமா இவங்க ரெண்டு பேரும் என் கூட தானே சுத்திட்டு இருக்காங்க...நீங்க யாருமே பாக்கலையா.."

"சரி..நீ தான் நம்ம க்ளாஸ்லயே பயங்கர புத்திசாலியாச்சே..எப்டி இந்த அராத்தை நீ நம்பின மீரா.."

"இந்த ராட்சசி உங்க கிட்ட அப்பாவியா நடிச்சு.. என்ன சொல்லி நம்ப வெச்சா...."என சொல்லி வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

அப்போதும் புரியாமல் பார்த்தவர்களிடம் கவுதம் "விக்ரம் உனக்கு இவங்களை அன்னிக்கு இன்ட்ரோ குடுத்தேனே...மறந்துட்டியா.."என அங்கிருந்த இன்னொரு நண்பனிடம் கேட்க...

அவன் "அட...ஆமா...கவுதம்..

இவங்க முகம் எனக்கு மறந்து போச்சு...அபிமன்யுவை பாத்ததும் தான் நியாபகம் வருது.."என்றான்.

கவுதம் "ஃப்ரெண்ட்ஸ் எங்க ஸ்வேதாவை சாதாரணமா நினைச்சுடாதீங்க...எங்க ஸ்கூல்லயே இவ தான்

அவுட்ஸ்டேன்டிங் ஸ்டூடண்ட்..தெரியுமா" என சிரிக்காமல் சொன்னதும் அதில் ஆச்சர்யமான மீரா...

"எப்டி கவுதம்..நம்பவே முடியலயே..இவ்ளோ விஷமமா இருக்கா...இவ அவுட்ஸ்டேன்டிங் ஸ்டூடண்டா..ஆச்சர்யமா இருக்கே.."என கேட்டாள்

கவுதம் சிரித்தபடி "ஆமா...ஆமா..

பயங்கர அராத்து..வால் இல்லாத வானரம்...தினமும் இவ பண்ற விஷமம் தாங்க முடியாம டீச்சர்ஸ் இவளை கிளாஸை விட்டு வெளியே நிக்க வச்சிடுவாங்க.." என்றான்.

மீரா "ஓஹோ...ஓஹோ..நீ அந்த அவுட்ஸ்டேன்டிங்கை சொன்னியா.."என வெடித்து சிரிக்க...அவளுடைய சிரிப்பு அங்கிருப்பவர்களை தொற்றி கொண்டது.

எல்லாரும் தன்னை ஓட்டுவதை கண்ட ஸ்வேதா இது எல்லாவற்றுக்கும் காரணமான கவுதமை மறுபடியும் அடிக்க ஆரம்பித்தாள்.

அடி தாங்க முடியாமல் "போதும் ஸ்வேதா..என்னால அடி தாங்க முடியல...நிறுத்து..ப்ளீஸ்" என்றவனை பாவமாக பார்த்த அபிமன்யு.."என்ன பண்றது...

உங்க விதி..இது எல்லாம் நீங்களே வரவழிச்சுக்கிட்டது..

அத்தான்.." என சொல்ல..கவுதமை அடிப்பதை நிறுத்தி விட்டு ஸ்வேதா அபிமன்யுவை அடிக்க ஆரம்பித்தாள்.

ஸ்வேதாவின் அட்டகாசத்தை பார்த்து திகைத்தவர்கள் கவுதமிடம் "இவ..எங்க கிட்ட எவ்ளோ அப்பாவி மாதிரி பேசினா..தெரியுமா... இப்ப தானே தெரியுது...இது பச்சை மண்ணு இல்ல...கலவர பூமினு.."என சொல்லி சிரித்த நண்பர்கள் அவனிடம்..

"கவுதம்...நீ அதிகமா பேசி நாங்க பாத்ததே இல்ல...இப்ப உன்னை பாக்கவே அதிசயமா இருக்கு.." என மற்றொரு நண்பன் கேட்க..

அதை கேட்டு புன்னகைத்த அபிமன்யு "ஆமா...கரெக்ட் தான்..எங்க அத்தான் அதிகமா பேசமாட்டார்...அவருக்கு க்ளோஸா இருக்கறவங்க கிட்ட மட்டும் தான் அவர் நேச்சுரலா இருப்பார்..அதுவும் இந்த ராட்சசியும்...அந்த பிசாசும் சேந்தா..அத்தான் அவங்களை மாதிரியே ஆகிடுவார்" என்றான்

அதை கேட்டு அதிர்ந்த மீரா..."என்னது ராட்சசி...பிசாசா..இவளையே எங்களால சமாளிக்க முடியுமானு தெரியல..இதுல இன்னொரு ஸ்பெசிமன் வேறயா.." என்க

கவுதம் "அவ வேற யாரும் இல்ல..என்னோட தங்கை..அவ இவளை விட ரொம்ப அமைதியானவ..அனேகமா அவளும் இங்க தான் வந்து சேர்ந்து நம்ம ஜோதில ஐக்கியமாவானு நெனக்கறேன்.. " என சொல்லி சிரித்ததும்

அவன் நண்பர்கள் அனைவருமாக "இதை விட அட்வான்ஸா இன்னொன்னா...வீ பாவம் டா.." என ஒரே குரலில் சொல்லி சிரித்தனர்.

"ஓகே...ஜோக்ஸ் அபார்ட்..ஸ்வேதா என்ன தான் விஷமம் பண்ணாலும், விளையாட்டா இருந்தாலும் எப்டி தான் க்ளாஸ் கவனிப்பாளோ தெரியாது.. நல்லா படிப்பா..அதனால தான் அவ ஸ்கூல்ல செம வால்தனம் பண்ணாலும் அவளை அதிகமா பனிஷ் பண்ண மாட்டாங்க...

அவளோட இன்ட்ரோ போதும்னு நெனக்கறேன்...எங்களுக்கு நேரமாகுது..அப்பறமா பாக்கலாம்..நாங்க கிளம்பறோம்..பை" என்ற கவுதம் அவர்கள் அங்கிருந்தவர்களிடம் விடை பெற்று வந்ததும் அழைத்து கொண்டு கிளம்பினான்.

அவளுடைய ப்ரபசர்கள் அவளை அழைத்து தினமும் கண்டிக்கும் அளவுக்கு காலேஜில் ஸ்வேதாவின் வால் தனத்தால் பேமஸ் ஆகிவிட்டாள். விளையாடினாலும் படிப்பில் புத்திசாலியாக இருக்கவும் அதற்கு மேல் அவளை எந்த குறையும் அவர்களால் சொல்ல முடியாமல் போனது.

மெல்ல..மெல்ல..இரண்டு வருடங்களை கடந்து அவள் படிப்பும் நல்லபடியாக போனது. அவளுடைய நண்பர்கள், அபிமன்யுவின் நண்பர்கள், கவுதமின் நண்பர்கள் என ஸ்வேதாவின் நட்பு வட்டம் மிக பெரியதாக இருந்தது. அவளுடைய இனிமையான குணம், யாரையும் குறை சொல்லாத பழக்கத்தால் கவரப்பட்டு அதனால் அவளின் நட்பில் இணைந்தவர்களே அதிகம்.

எப்போது பார்த்தாலும் மரத்தடியில் ஃப்ரெண்ட்ஸோடு இருக்கும் ஸ்வேதாவை கவுதம் கண்டித்தாலும் கேட்க மாட்டாள். ப்ளீஸ் சொல்லியே அவனை ஏமாற்றி விடுவாள்.

மதிய வேளைகளில் கேண்டின் அவர்களின் வருகையால் அலறும். அங்கும் இவர்களின் ஆர்ப்பாட்டம் தான்.

மறுபடியும் ஒரு புது வருடம்...புது அட்மிஷன்கள் என அவர்களின் காலேஜ் களைகட்ட ஆரம்பித்தது.

அங்கு தான் சேருவேன் என அடம் பிடித்து அதற்காகவே நன்றாக படித்து மார்க் வாங்கி உத்ரா தான் நினைத்ததை சாதித்து காட்டினாள். அன்று தான் காலேஜில் அவளின் முதல் நாள்.

அவளை காலேஜில் கொண்டு விட தாத்தா...அப்பா.. மாமா...மாமி.. பெரியப்பா... பெரியம்மா என ஒரு கூட்டமே அவளுடன் வந்தது.

அவள் காரில் இருந்து இறங்கியதுமே..அவளை அழைத்து ஒவ்வொருவராக அறிவுரை சொல்ல..

அனைத்தையும் அமைதியாக கேட்டு கொண்டு விட்டு அவர்களிடம் விடை பெற்று காலேஜ்க்கு உள்ளே போக கிளம்பினாள்.

அதே மரத்தடி...அதே ஆட்கள் கண்களில் உத்ரா படவே... அவளின் அப்பாவித்தனத்தை பார்த்து ஏமாந்து போய் அவளை அழைத்தார்கள்.

அவள் அங்கு சென்றதும் அங்கிருந்த ஒருவன் "உன் பேரு என்ன.."என கேட்க..மிக மெல்லியதாக "என்னோட பேரு உத்ரா" என பதிலளித்தாள்.

"எங்க படிச்ச பேபி நீ...அது சரி..உன்னை எதுக்கு ஒரு ஊரே கொண்டு வந்து விட்டுட்டு போகுது.." என்ற கேள்விக்கு

உத்ரா "நான் ஊட்டி போர்டிங் ஸ்கூல்ல தான் படிச்சேன்..அண்ணா..அவங்க ஒண்ணும் ஊர் இல்ல...என்னோட சொந்தக்காரங்க...இன்னிக்கு நான் காலேஜ்க்கு வர்ற மொதல்ல நாள்னு ஆசையா என்னை கொண்டு வந்து விட வந்தாங்க.."என ரோஷமாக சொன்னாள்.

"பார்ரா...பாப்பா..கோவமா..பதில் சொல்லுது..சரியில்லையே.."என விக்ரம் சொல்லி முடிப்பதற்குள் மற்றொருவன்..

அந்த க்ரீன் சாரி கட்டி இருந்த ஆன்டி யாரு..அவங்களை அடிக்கடி பாத்த மாதிரியே இருக்கே.." என தன் சந்தேகத்தை கேட்க..

அதற்கு உத்ரா..அவங்க எங்க பெரியம்மா...கோயமுத்தூர்ல தான் இருக்காங்க.." என பதில் சொன்னாள்.

தூரத்தில் இருந்து இங்கு நடப்பதை பார்த்தபடி வந்த அபிமன்யு உத்ராவை பார்த்ததும் அதிர்ந்து போய் மூச்சிறைக்க ஓடி வந்தவன்..

"அண்ணாஸ்...அக்காஸ்..இது தான் அத்தான் சொன்ன பிசாசு" என பதட்டத்தில் உளறி கொட்ட...

அதை கேட்டவர்கள் "டேய்என்ன டா சொல்ற...தெளிவா பேசு டா...ஒண்ணும் புரியல..."

அங்கிருந்த கல் மேடையில் உட்கார்ந்து கொண்டு தன்னை ஆஸ்வாசப்படுத்தி கொண்ட அபிமன்யு.."அப்டியே கொசுவத்தி சுருளை ரெண்டு வருஷத்துக்கு முன்னால சுத்துங்க... இதே மரத்தடி...அராத்து...

அத்தான்..இதெல்லாம் நியாபகம் வருதா.." என்றான்

அதை கேட்டதுமே அதிர்ந்த பார்வையால் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு.."அன்னிக்கு நீ சொன்ன பிசாசு..இவளா"என நம்பாமல் கேட்க

ஆம் என தலையாட்டிய அபிமன்யுவை பார்த்த உத்ரா.."ஓஹோ...நாம வர்றத்துக்குள்ள...தம்பி நம்ம புகழை பரப்பிட்டானா...இது சரியில்லையே.."என கேலி குரலில் சொல்ல...

அவளை பார்த்து கும்பிட்டவன் "தாயே...நான் உன்னை விட பெரியவனா இருந்தாலும் உனக்கு தம்பியாவே இருக்கற தகுதி தான் எனக்கு இருக்கு" என்றவனுக்கு உத்ரா "நீ வேண்டும் வரம் தந்தோம் தம்பி" என சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள். (தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom