• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

காண்பது எல்லாம் உனது உருவம் 9

Uppada

New member
Joined
Mar 27, 2025
Messages
20
காண்பது எல்லாம் உனது உருவம் 9

வீட்டுக்கு போய் சேர்வதற்கு முன்பே ஈஸ்வரன் தன் மச்சானிடம் பேசி தோசை வார்த்து வைக்க சொல்லி இருக்கவே போனதுமே பிருந்தாவையும் அவள் அம்மாவையும் மிரட்டி சாப்பிட வைத்தான்.

அவர்கள் சாப்பிட்டதும் பிருந்தாவை தங்களது அறைக்குள் அழைத்தவன் "மதியத்துக்கு எதுவும் செய்ய வேணாம் பிருந்தா..நான் மாமா, ராஜா, பசங்களை கூப்பிட்டுக்கிட்டு வெளியே போறோம்..நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.."

"நான் என்ன செஞ்சேன்..ஏன் இப்படி பேசறீங்க..என் மேலே என்ன கோவம்ங்க.."

அவளை உற்று பார்த்தவன் "உன் மேலே எனக்கு என்ன கோவம் டி..எதுவும் இல்லை..
உங்கத்தையை பத்தி நல்லா தெரிஞ்சு தானே அங்க போனோம்..விடு.."

"பாவம் விக்ரமனும் ரத்னாவும் போன் பண்ணி ரொம்ப வருத்தப்பட்டாங்க..மன்னிப்பும் கேட்டாங்க.."

"என் தப்பு தான்..அவங்களுக்கு அவங்க மாப்பிள்ளை மரியாதைப்பட்டவர்னா எங்களுக்கு நீங்க..எப்படிங்க வீட்டுக்கு வந்தவங்களை அவமானப்படுத்தலாம்.."

"விடு..எதுவும் பேசாதே..நீ பேச பேச உங்கம்மாக்கு இன்னும் வருத்தமா ஆகிடும்..."

"மரியாதை இல்லாத இடத்துக்கு உங்களை அழைச்சிட்டு போனதற்கு என்னை மன்னிச்சிடுங்க.."

அவள் கண் கலங்கியதை பார்த்த ஈஸ்வரன் அவளை இழுத்து அணைத்து கொண்டு நெற்றியில் முத்தமிட்டு "பைத்தியம்..நீ என்ன தப்பு பண்ணே..உன்னை மன்னிக்க..கொஞ்ச நேரம் அசையாம அமைதியா நில்லு.."

சிறிது நேரம் கழித்து அவளை விடுவித்தவன் "எதை பத்தியும் யோசிக்காம இரு..நாங்க போயிட்டு வரோம்.."

"வந்த பிறகு நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்..அம்மாவால தனியா எதுவும் செய்ய முடியாதுல்ல....
எல்லாம் எடுத்து வெச்சுக்க.."

அவர்கள் கிளம்பியுதும் கதவை தாளிட்டு விட்டு அம்மா பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

"நான் ஒண்ணு கேட்பேன் தப்பா நினைக்க மாட்டியே பிருந்தா.."

"என்ன மா..எதுக்கு இவ்ளோ பீடிகை போடற..என்ன கேட்கணுமோ..கேளு மா.."

"இல்ல டி நீயும் சம்பாதிக்கற..
மாப்பிள்ளையும் நல்லாவே சம்பாதிக்கறாரு..அப்பறம் ஏன் டி வீட்டுல வேலைக்கு ஆள் வெக்கல
தினமும் வேலை செய்யணும்னா எவ்ளோ கஷ்டம்.."

"கரெக்ட் தான் மா..சரியா ஆள் கிடைக்கலங்கறது தான் உண்மை.."

"ஏன் டி உன் ரெண்டாவது குழந்தை பிறந்து நீ இங்கே இருந்து போகும் போது வரைக்கும் ஒருத்தர் இருந்தாங்களே..அப்பறம் தானே ஆள் இல்லாம போச்சு.."

"ஆமா மா..நிர்மலாம்மா இருந்தாங்க..அவங்க அவ்ளோ நல்லா வேலை செய்வாங்க..நம்ம வீட்டு ஆள் மாறி அவ்ளோ பொறுப்பா இருப்பாங்க..
எங்களுக்கும் அவ்ளோ நிம்மதியா இருந்தது..

"ரெண்டாவது பொறந்து நான் அங்க போனப்ப தான் நிர்மலாம்மாவோட பையன் வேற ஊருக்கு போயிடறான்னு அவங்களும் கிளம்பிட்டாங்க.."

"அதுக்கு பிறகு யாரும் சரியா அமையல..ஒரு நாள் வர்றது..ரெண்டு நாள் வர்றது..நாள் கணக்குல வராயமே இருக்கறது..போன் பண்ணா கூட எடுக்காம இருக்கறதுனு எவ்ளோ பிரச்சினை வந்தது தெரியுமா மா."

"எனக்கும் ஆபீஸீலேந்து வரும் போதே வீடு பெருக்காம, பாத்திரம் தேய்க்காம இருக்கறது பாக்க ஏக கடுப்பா வரும்..திட்டிட்டே வேலை செய்வேன்..அதனால எனக்கு அவருக்கும் எப்ப பாரு வாக்குவாதம் தான்.."

"அப்படியே சண்டை போட்டுக்கிட்டே நானும், அத்தையுமா செஞ்சோம்..கடேசில அத்தைக்கு ரொம்ப உடம்பு முடியாம போய் ஒரு வாரம் ஹாஸ்பிடல்ல இருந்தாங்கல்ல.."

"அப்ப தான் தண்ணி குடிச்ச டம்ளர் கூட எடுத்து வெக்காத உன் மாப்பிள்ளை அதுக்கு பிறகு ஒவ்வொரு வேலையா பழகிக்கிட்டாரு.."

"இன்னிக்கு பாரு..ரத்னா வீட்டுக்காரருக்கு, ராஜாக்கு எல்லாம் வீட்டு வேலை செய்ய சொல்லி பழக சொல்லி தான் பட்ட கஷ்டத்தை அவங்களும் அனுபவிக்க கூடாதுனு சொல்லி அவங்களையும் அவர் இப்ப இருக்க மாறி மாத்த முயற்சி செய்யறாரு.."

"என்ன டி அநியாயம் ஒருத்தர் கூடவா வேலைக்கு வரலை.."

"ஏன் வராம..பத்து பேருக்கு மேலே வேலை செய்ய வந்தாங்க மா.."

"அதுல யாராவது ஒருத்தரை வேலைக்கு வெசாசுக்க வேண்டியது தானே.."

"எங்க மா..ஒவ்வொருத்தர் ஒவ்வொரு காரணம் சொல்லி வேலையை விட்டாங்க..ஒருத்தருக்கு சம்பளம் பத்தல..ஒருத்தருக்கு வேலை அதிகம்..கடைசியா வந்த ஒரு அம்மா சொன்னாங்க பாரு..அது தான் ஹைலைட்டே"

"அப்படி என்ன டி சொன்னாங்க.."

"அந்தம்மா வாரம் ஒரு நாள் லீவ் எடுப்பாங்களாம்.."

"இது என்ன டி..எல்லாருமே பண்ற விஷயம் தானே.."

"அந்த ஒரு நாள் எதுனு மொதல் நாள் தான் அவங்க முடிவு எடுப்பாங்களாம்.."

"அவங்க வேலைக்கு வர்ற டைம் தாண்டினா போன் பண்ண கூடாதாம்..மெசேஜ் தான் அனுப்பணுமாம்..அவங்க எப்ப பாக்கறாங்களோ..அப்ப பதில் அனுப்புவாங்களாம்.."

"இது என்ன டி கூத்தா இருக்கு.."

"இரு..இரு..இன்னும் இருக்கு..அவங்க வேலைக்கு வர்றது ஆட்டோல தான் வருவாங்களாம்..
அந்த ஆட்டோக்கு மாசத்துக்கு நாம தான் குடுக்கணுமாம்.."

"அந்த ஆட்டோ அவங்க வீட்டுக்கரரோடது தான்..அவர் பேசினார் பாரு..அவங்க வீட்டு அம்மாவால தொடர்ந்து வேலை செய்ய முடியாதாம்.."

"பெருக்கினா ரெஸ்ட், பாத்திரம் அலம்பினா ரெஸ்ட்னு அவங்களுக்கு வேலைக்கு நடுவுல ரெஸ்ட் குடுக்கணுமாம்.."

"இத்தனைக்கும் எங்க வீட்டுல வேலை செய்ய வர்றவங்களுக்கு காலைல டீ, டிபன், மதிய சாப்பாடு எல்லாமே குடுத்துடுவோம்.."

"வீடு துடைக்கறது வாரத்துல ரெண்டு நாள்..எந்த ரெண்டு நாள்னு நாம மொதல்லயே சொல்லிடணும்..அப்பறம் அமாவாசை, கிருத்திகைனு அதிகப்படி துடைக்க சொல்ல கூடாதாம்.."

"அந்தம்மா வேலை செய்யும் போது அவருக்கு கூடவே தான் இருப்பாராம்..அவருக்கு தினமும் ரெண்டு டீ குடுத்திடணுமாம்.."

"நிர்மலா அம்மா இருக்கும்போது மாவுக்கு ஊற வைச்சிருந்தா அரைச்சு வெச்சிடுவாங்க..ரெண்டு நாளைக்கு ஒரு தடவை ஊற வைக்க சொல்வாங்க..அத்தையும்
ஊற வெச்சா அவங்க அரைச்சு வெச்சிட்டு க்ரைண்டர் அலம்பி வெச்சிடுவாங்க..

"ஆனா இவங்க மாவு அரைச்சு எடுக்க மாட்டாங்களாம்..க்ரைண்டர் தூக்க முடியாதாம்.."

"நைட் அவங்க செஞ்சு சாப்பிட மாவு இருந்தா குடுக்கணுமாம்..
இல்லேனா நைட் டிபன்க்கான காசு ரெண்டு பேருக்குமா சேர்த்து நூறு ரூபாய் குடுத்திடணுமாம்.."

"இதை எல்லாம் பாத்த மாமா கடுப்பாகிட்டு யாரும் வேணாம் நாமளே நம்ம வீட்டு வேலை செஞ்சுக்கலாம்னு சொல்லிட்டார்.."

"ஆரம்பத்துல வேலை செய்ய எல்லாருமே திணறினோம். ஆளுக்கு ஒரு பக்கம் திண்டாடினோம்..ஆனால் இப்ப எல்லாருக்குமே பழகிடுச்சு மா..எங்களுக்குனு ஒரு தினசரி வழக்கம் ஆகிடுச்சு.."

"மெல்ல பசங்களையும் கொஞ்ச கொஞ்சமா வீட்டு வேலை செய்ய பழக ஆரம்பிச்சிருக்காரு.."

"காலியான தண்ணீர் பாட்டில் எடுத்து வெக்கறது..சாப்பிட்ட தட்டை அவங்களே அலம்பி வெக்கறது..
டைனிங் டேபிள் துடைக்கறதுனு வேலை பழறாங்க மா..

"அதுவும் சரி தான் டி..நம்ம வீட்டு வேலையை நாமே செய்யறது நல்லது தான்..யாரையும் எதிர்பார்க்கலேனாலே அந்தந்த வேலை சரியான நேரத்துல நடந்திரும்.."

"சரி மா..நீ கொஞ்சம் நேரம் படு.. நான் போய் எங்க துணிகளை எடுத்து வெக்கறேன்..அவர் வந்த உடனே வீட்டுக்கு கிளம்பணும்னு சொன்னார்ல்ல.."

அன்று மாலையில் வந்த விக்ரமனின் அண்ணா விக்னேஷ்வரன் துர்காவை தான் பார்த்து கொள்வதாக சொல்லவே ரத்னாவுக்கு வீட்டு வேலைகளை பார்க்க வசதியாக இருந்தது.
அதுவரைக்கும் அழாமல் தைரியமாக இருந்தவள் கணவனை கண்டதும் துர்கா குழந்தையாய் "கால் ரொம்ப வலிக்குதுங்க.." என அழ ஆரம்பித்தாள்.

"அழாதே மா..எல்லாம் சரியாகிடும்..நீ இருக்கற தைரியத்துல தான் நான் ராஜா மாறி நிம்மதியா ஊரை சுத்திட்டு இருக்கேன்.."

"என்ன நடந்தது..நான் யார் கிட்டயும் எதுவும் கேட்க மாட்டேன்..நீ சொல்லு.."

மெல்லிய குரலில் துர்கா நடந்ததை சொல்லி முடித்தாள்.

விக்ரமன் போலவே அவன் அண்ணனுக்கும் தண்ணீர் கொட்டிய விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பத்து நாள் நிமிடங்களாக கரைந்து போக..துர்காவுக்கு கால் சரியாகி விட மெல்ல தன் டெய்லரிங்க் யூனிட்க்கு போய் உட்கார ஆரம்பித்தாள்.

அதுவரையில் அம்மா மீதும் தங்கையின் மீதும் அளவில்லாத கண்மூடித்தனமான பாசத்தில் இருந்த விக்னேஷ்வரனுக்கு பத்து நாளாக நடந்ததை பார்த்து அவர்கள் மேலே வெறுப்பே வந்து விட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக நித்யாவை பார்த்து கொள்ள கூட மனதில்லாமல் அவளை தனியாக விட்டதும், பக்கத்து வீட்டில் குழந்தை இருந்ததும், கடைசியில் குழந்தையை ரத்னா வீட்டில் பார்த்து கொண்டதும் அவனுக்கு அம்மா, தங்கை விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என தீர்மானமே வந்தது.(தொடரும்)
 

Author: Uppada
Article Title: காண்பது எல்லாம் உனது உருவம் 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
214
வேலைக்கு ஆள் கிடைப்பதும் ஒரு
வரமே 🤩🤩🤩.....
வீட்டில் இருக்கும் அனைவரும்
விரும்பி வேலை பகிர்ந்தால்
வாழ்வும் வரமே.... 🤩
 
Top Bottom