காண்பது எல்லாம் உனது உருவம் 7
"நீங்க சொல்றது சரி தான் அண்ணா...வீட்டு பெண்களுக்கு கஷ்டமில்லாம அப்பாவும் நானும் வீட்டுக்கு தேவையான மளிகை, காய்கறி எல்லாம் வாங்கிட்டு வந்துடுவோம்..ஆனா அம்மா எங்களை சமையறைக்குள்ள விட மாட்டாங்க..அதான்.."
"பரவால்ல டா..ஒவ்வொரு குடும்பத்துல ஒரு விதமா இருக்கும்..விடு டா.."
"நான் நைட்ல அதிகமா சாப்பாடு சாப்பிடறதில்ல..டிஃபன் தான்..இன்னிக்கு கொஞ்சம் அதிக சாப்பாடு..வரீயா..நாம ரெண்டு பேரும் வாக்கிங் போயிட்டு வரலாமா.."
"சரி அண்ணா..இருங்க நம்ம மச்சானையும் கூப்பிடறேன்.."
"டேய்..அறிவாளி..ஏன் மாமனாரை விட்டுட்ட..அவரையும் கூப்பிடறது தானே..உன்னை எல்லாம் வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாது.."
"வா டா..உன் கிட்ட கொஞ்சம் தனியா பேச வேண்டி இருக்கு.."
"சரி அண்ணா..வாங்க போகலாம்.."
இருவருமாக வாசலுக்கு வந்தவர்கள் அங்கிருந்த பிருந்தாவிடம் தாங்கள் வாக்கிங் போய் வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
ஏதாவது வீட்டு விஷயமா..இல்ல அவரோட ஆஃபீஸ் விஷயமா என்னவா இருக்கும் என யோசித்தபடி விக்ரமன் நடந்தான்..
முதல் அரைமணி நேரம் எதுவும் பேசாமலே நடந்து சென்று அங்கிருந்த கோவில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டனர்.
தன் பக்கத்தில் உட்கார்ந்த விக்ரமனை பார்த்த ஈஸ்வரன்
"இன்னும் எத்தனை வருஷம் ப்ளானிங்க்ல இருக்கீங்க.."
"என்ன அண்ணா..என்ன ப்ளானிங்க்..புரியல.."
"அதான் டா..எத்தனை வருஷம் குழந்தை வேண்டாம்னு இருக்கீங்க.."
ஈஸ்வரன் கேட்ட கேள்வியால் அதிர்ந்தவன் உடனே தன்னை சமாளித்து கொண்டு "ப்ளான்லாம் எதுவும் இல்ல அண்ணா..அவளும் சின்ன வயசு தானே..அதுவா வர்றப்ப வரட்டும்.."
"டேய்..எப்ப டா..தானா வர்றது..
உனக்கும் 30 வயசு ஆக போகுது..ரத்னாவை பத்தி யோசிக்கிறீயே..நம்ம மாமியார் பத்தி யோசி டா.."
"இப்பவே அவங்களுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது..
மாமனாருக்கோ எதுவுமே தெரியாது..சுடுதண்ணி வேணுமானா கூட அவருக்கே மாமியார் தான் வெச்சு தரணும்..மச்சான் சின்ன பையன்.."
"ஏன் இவங்க செய்ய கூடாதானு நீ நினைக்கலாம்..நாங்க தாராளமாக செய்ய காத்துட்டு இருக்கோம்.."
"உனக்கே தெரியும்..பிருந்தாக்கு லீவ் போடது கஷ்டம்..நான் ஏதோ என்னால முடிஞ்ச வெளி வேலைகளை வேணா செய்வேன்.."
"நாம ஆயிரம் தான் சொன்னாலும் செய்தாலும் குழந்தை பிறந்தா முழுக்க முழுக்க பெண்களா மட்டும் தான் பாத்துக்க முடியும்..."
"பிருந்தாவாலே அதிகபட்சமா ஒரு மாசம் தான் பாத்துக்க முடியும்..மாமியார் தானே டா சில மாசங்களாவது குழந்தையை பாக்கணும்.."
"என்னடா இவன் யாரு..நம்ம விஷயத்துல அதிகமா உரிமை எடுத்துக்கறான்னு தப்பா நினைக்காதே..நான் உன்னை எப்பவும் என் தம்பி மாதிரி நினைக்கறேன்..நினைப்பேன்..
அந்த உரிமைல தான் சொல்றேன்...."
"உண்மையா பாசம் காட்டற ஆள் யாரு..நக்கல் பேச்சு பேசறவங்க யாருனு எனக்கு இத்தனை வருஷ அனுபவத்துல நல்லா தெரியும் அண்ணா..
"நீங்க என்னோட அண்ணன்..நான் உங்களை எப்பவுமே தப்பா நினைக்க மாட்டேன்..அக்கறையா சொல்லும் போது கேட்டுக்கணும் அண்ணா.."
"சரி டா..எதுவா இருந்தாலும் ரொம்ப யோசிக்காம தள்ளி போடாம சீக்கிரம் என்னை பெரியப்பா ஆக்குற வழியை பாரு.."
"பாரு..நாம நடந்து ரொம்ப தூரம் வந்துட்டோம்..வீட்டுக்கு போகலாம்..அதோ மச்சானே நம்பளை தேடிட்டு வந்துட்டான்...
வா போகலாம்.."
இருவராக நடந்து வந்தவர்கள் ராஜாவோடு வண்டியில் மூவராக திரும்பி போனார்கள்.
இவர்கள் வீட்டில் கிளம்பியதுமே பிருந்தா தங்களது அம்மாவிடம் "மா..நேரமாச்சு..ஏற்கனவே உனக்கு உடம்பு சரியில்லை..
எங்களுக்காக பாக்காம நீ போய் படுத்துக்கோ மா.."
"இல்ல டி மாப்பிள்ளைகள் வரட்டும்..அவங்களுக்கு ஏதாவது சாப்பிட வேணுமானு கேட்டு குடுத்துட்டு போய் படுக்கறேன்..
"மா..அதான் நாங்க இருக்கோம்ல்ல..பாத்துக்கறோம்..நீ போய் தூங்கு மா.."என பிருந்தா அம்மாவை அனுப்பி வைத்தாள்.
அம்மா உள்ளே போனதுமே பிருந்தா மெல்லிய குரலில் ரத்னாவிடம் "பாத்தல்ல..அம்மா எப்டி ஆகிட்டாங்க.."
"ஆமா டி..நேத்திக்கு முட்டி வலி, இன்னிக்கு கை வலினு ஏதோ ஒரு பிரச்சனை அவங்களுக்கு மாத்தி மாத்தி வருது..நாம பாத்த அம்மாவானு இருக்கு.."
"நமக்கு பரவால்ல கா..கல்யாணம் முடிஞ்சாச்சு..ராஜா சின்ன பையன்..அவனுக்கு அம்மாவா இருக்கணுமே.."
"கல்யாணம் மட்டும் தானா ரத்னா.."
"என்ன கேக்கற புரியல..தெளிவா கேளு கா.."
"கல்யாணம் மட்டும் தான் வாழ்க்கையா..அதை தாண்டி குழந்தைனு ஒரு விஷயம் இருக்கறது தெரியுமா ரத்னா.."
"ஏன் கா..சிரிப்பு மூட்டற..அதான் உன் பசங்களை பாக்கறேனே..
தெரியாதா.."
"என் பசங்களை பாக்கற சரி..
உங்க குழந்தை பத்தி யோசிச்சு பாத்திருக்கியா.."
"என்ன கா..இப்படி பேசற..
அதெல்லாம் யோசிக்காம இருப்போமா.."
"யோசிச்சு இன்னும் எத்தனை வருஷம் போகணும் டி..ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷமாகிடுது.."
"இதே மாதிரி எனக்கு கல்யாணம் முடிஞ்சு ரெண்டாவது வருஷத்துல என் பொண்ணுக்கு ஒரு வயசு..நீ இன்னும் யோசிக்கற நிலையிலே இரு.."
"இங்க பாரு..உனக்கு ஏற்கனவே இருவத்தி ஆறு வயசு ஆகிடுச்சு..
அம்மா உடம்புல தெம்பு இருக்கும் போதே நீ குழந்தை பெத்துக்கிட்டா தான் உனக்கு செய்ய அவங்களா முடியும்.."
"ஏன் கா..நீ செய்ய மாட்டியா.."
"நான் நிச்சயம் செய்வேன்..ஆனா எத்தனை நாள் லீவ் போட முடியும்... சொல்லு..அம்மா மாதிரி என்னால உன்னை பாத்துக்க முடியாது டி.."
"நீ தம்பி வந்ததும் பேசி சீக்கிரமே ஒரு முடிவு எடு.."
இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே ராஜாவோடு விக்ரமன், ஈஸ்வரன் வர பேசியதை அதோடு நிறுத்தி கொண்டு மூவருக்கும் மோர் குடுத்து விட்டு கதவுகளை பூட்டி அவரவர் அறைக்குள் சென்றனர்.
அறைக்குள் போய் எதுவும் பேசாமல் அமைதியாக படுத்து கொண்ட விக்ரமன் இந்த அண்ணனுக்கு ஆனாலும் ஆசை ஜாஸ்தி தான்..சீக்கிரம் குழந்தை பெத்துக்கணுமாம்..அதுவும் என்னை பார்த்தாலே பிடிக்காத பொண்டாட்டி கிட்ட என நினைத்து நொடித்து கொண்டான்.
ரத்னாவோ ம்க்கூம்..இந்த மனுஷனுக்கு நம்மளை பாத்தாலே பிடிக்காது..இதுவரைக்கும் நம்ம கிட்ட வாய் முத்து உதிர்த்ததே இல்ல..இதுல எங்க குழந்தையை பத்தி நினைக்கறதாம் என யோசித்தபடி படுத்தவள் தூங்கி போனாள்.
அவள் தூங்கியபின் அவளையே பார்த்தபடி விக்ரமனும் தூங்கி போனான்.
மறுநாள் காலையிலேயே துர்கா பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக ஃபோன் வர இருவருமாக அவசர அவசரமாக விக்ரமனின் வீட்டுக்கு கிளம்பினார்கள்.
அங்கு வீட்டு நிலைமை என்னவாக இருக்குமோ என நொடிகளில் யோசித்து ரத்னாவின் அம்மாவும் அக்காவும் அவர்கள் கிளம்புவதற்குள் இட்லி, சட்னி, மதியத்துக்கு எலுமிச்சை சாதம், தயிர் சாதம், உருளைக்கிழங்கு வறுவல், இரவு டிபன்க்கு இட்லி மாவு, வீட்டில் பறித்த முருங்கைக்காய், கீரை என ரெண்டு பெரிய பைகளில் எல்லாவற்றையும் நிறைத்து வைத்து விட்டனர்.
அதை பார்த்த விக்ரமனுக்கு தன் அப்பாவின் மேல் இருக்கும் அத்தையின் பாசத்தை பார்த்து கண் கலங்கி போனது.
"என்ன அத்தை இத்தனை பெரிய பை..ஒரு வாரத்துக்கு குடுத்திட்டீங்க போல.."
"அதெல்லாம் இல்ல மாப்பிள்ளை..இன்னிக்கு மட்டும் தான் இது..துர்காக்கு சரி ஆகறவரைக்கும் நம்ம வீட்டுலேந்தே தினமும் சாப்பாடு மாமா கிட்ட குடுத்து விட்டுடறேன்.."
"வேணாம் அத்தை..நீங்க சிரமப்பட வேணாம்..மாமாவை கஷ்டப்படுத்தாதீங்க..அப்பா இருக்காரு..ஏதாவது அதிகமா வேலைனா அவர் பாத்துப்பாரு..நானும் ரத்னாவும் அவர் கூட பாத்துக்கறோம்..
அண்ணாவும் லீவ் போட்டு வந்துடறான்.."
"இதுல என்ன கஷ்டம் மாப்பிள்ளை மனுஷங்க..ஒருத்தர்க்கு ஒருத்தர் உதவி பண்றத்துக்கு தானே இருக்கோம்.."
"எனக்கு உங்களை கஷ்டப்படுத்தறதுல இஷ்டமே இல்லை அத்தை.."
"டேய் தம்பி..ரொம்ப யோசிக்காதே..தயங்காதே..நீ ரெண்டு உறவு வேற..நீ தான் உரிமையா கேக்க முடியும்.."
"ஆனாலும் நம்ம மாமியார் நல்ல விவரமான ஆளு தான்..அவங்க அண்ணன் இந்த சாக்குலயாவது நல்ல சாப்பாடு சாப்பிடட்டும்னு தான் சாப்பாடே குடுக்கறாங்க.."
"மாமா அப்ப என்னோட சமையல் நல்லா இருக்காதா.."
"தாயே..ரத்னா நீயும் இங்க தான் இருக்கியா..நான் ஏன் உன்னை சொல்ல போறேன்..நான் பொதுவா சொன்னேன்.."
"அங்க வீட்டுல சமையல் ரத்னா தான் செய்வா அண்ணா..அதான்.."
"என்ன நொதான்..டா.."
"நேத்து உங்க கிட்ட கிடைச்ச ட்ரையினிங்கால இனி எத்தனை நாள் வேணா சமாளிக்கலாம்னு அண்ணா.."
"ட்ரையினிங் கா.. கொழுப்பு டா..
பொண்டாட்டிய சப்போர்ட் பண்ணணும்னு சொன்னா போதுமே..மொதல் ஆளா ஓடி வந்துடுவீயே..இந்த வேகம் வேற எதுலயும் இல்லயே டா.."
"சரி..சரி..உங்களுக்கு காலைல யாரும் கிடைக்கலையா..தம்பி தான் மாட்டினாரா..அவங்களுக்கு மணியாச்சு..கிளம்பட்டும்ங்க.."
"நான் என்ன டி பண்ணேன்..
சாதாரணமா பேச கூட தடை போடு..எல்லாம் என் நேரம்.."
"விக்ரமா..இத்தனை பெரிய பை எடுத்துட்டு நீ வண்டி ஓட்டறது கஷ்டம்..கார் திருப்பிட்டு வரேன்..டேய் மச்சான்..சும்மா பாத்துட்டு நிக்காம பை எடுத்து கார்ல வை.."
கார் வந்தவுடன் பையை டிக்கியில் வைத்து விட விக்ரமனுக்கு வண்டி அவசியம் என்பதால் அவனும் ரத்னாவும் வண்டியில் வர குழந்தைகளை ராஜாவிடம் பார்த்து கொள்ள சொல்லி விட்டு ஈஸ்வரன், பிருந்தா, பரமசிவமும் அவர் மனைவியும் துர்காவை பார்க்க கிளம்பினார்கள். (தொடரும்)
"நீங்க சொல்றது சரி தான் அண்ணா...வீட்டு பெண்களுக்கு கஷ்டமில்லாம அப்பாவும் நானும் வீட்டுக்கு தேவையான மளிகை, காய்கறி எல்லாம் வாங்கிட்டு வந்துடுவோம்..ஆனா அம்மா எங்களை சமையறைக்குள்ள விட மாட்டாங்க..அதான்.."
"பரவால்ல டா..ஒவ்வொரு குடும்பத்துல ஒரு விதமா இருக்கும்..விடு டா.."
"நான் நைட்ல அதிகமா சாப்பாடு சாப்பிடறதில்ல..டிஃபன் தான்..இன்னிக்கு கொஞ்சம் அதிக சாப்பாடு..வரீயா..நாம ரெண்டு பேரும் வாக்கிங் போயிட்டு வரலாமா.."
"சரி அண்ணா..இருங்க நம்ம மச்சானையும் கூப்பிடறேன்.."
"டேய்..அறிவாளி..ஏன் மாமனாரை விட்டுட்ட..அவரையும் கூப்பிடறது தானே..உன்னை எல்லாம் வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாது.."
"வா டா..உன் கிட்ட கொஞ்சம் தனியா பேச வேண்டி இருக்கு.."
"சரி அண்ணா..வாங்க போகலாம்.."
இருவருமாக வாசலுக்கு வந்தவர்கள் அங்கிருந்த பிருந்தாவிடம் தாங்கள் வாக்கிங் போய் வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
ஏதாவது வீட்டு விஷயமா..இல்ல அவரோட ஆஃபீஸ் விஷயமா என்னவா இருக்கும் என யோசித்தபடி விக்ரமன் நடந்தான்..
முதல் அரைமணி நேரம் எதுவும் பேசாமலே நடந்து சென்று அங்கிருந்த கோவில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டனர்.
தன் பக்கத்தில் உட்கார்ந்த விக்ரமனை பார்த்த ஈஸ்வரன்
"இன்னும் எத்தனை வருஷம் ப்ளானிங்க்ல இருக்கீங்க.."
"என்ன அண்ணா..என்ன ப்ளானிங்க்..புரியல.."
"அதான் டா..எத்தனை வருஷம் குழந்தை வேண்டாம்னு இருக்கீங்க.."
ஈஸ்வரன் கேட்ட கேள்வியால் அதிர்ந்தவன் உடனே தன்னை சமாளித்து கொண்டு "ப்ளான்லாம் எதுவும் இல்ல அண்ணா..அவளும் சின்ன வயசு தானே..அதுவா வர்றப்ப வரட்டும்.."
"டேய்..எப்ப டா..தானா வர்றது..
உனக்கும் 30 வயசு ஆக போகுது..ரத்னாவை பத்தி யோசிக்கிறீயே..நம்ம மாமியார் பத்தி யோசி டா.."
"இப்பவே அவங்களுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது..
மாமனாருக்கோ எதுவுமே தெரியாது..சுடுதண்ணி வேணுமானா கூட அவருக்கே மாமியார் தான் வெச்சு தரணும்..மச்சான் சின்ன பையன்.."
"ஏன் இவங்க செய்ய கூடாதானு நீ நினைக்கலாம்..நாங்க தாராளமாக செய்ய காத்துட்டு இருக்கோம்.."
"உனக்கே தெரியும்..பிருந்தாக்கு லீவ் போடது கஷ்டம்..நான் ஏதோ என்னால முடிஞ்ச வெளி வேலைகளை வேணா செய்வேன்.."
"நாம ஆயிரம் தான் சொன்னாலும் செய்தாலும் குழந்தை பிறந்தா முழுக்க முழுக்க பெண்களா மட்டும் தான் பாத்துக்க முடியும்..."
"பிருந்தாவாலே அதிகபட்சமா ஒரு மாசம் தான் பாத்துக்க முடியும்..மாமியார் தானே டா சில மாசங்களாவது குழந்தையை பாக்கணும்.."
"என்னடா இவன் யாரு..நம்ம விஷயத்துல அதிகமா உரிமை எடுத்துக்கறான்னு தப்பா நினைக்காதே..நான் உன்னை எப்பவும் என் தம்பி மாதிரி நினைக்கறேன்..நினைப்பேன்..
அந்த உரிமைல தான் சொல்றேன்...."
"உண்மையா பாசம் காட்டற ஆள் யாரு..நக்கல் பேச்சு பேசறவங்க யாருனு எனக்கு இத்தனை வருஷ அனுபவத்துல நல்லா தெரியும் அண்ணா..
"நீங்க என்னோட அண்ணன்..நான் உங்களை எப்பவுமே தப்பா நினைக்க மாட்டேன்..அக்கறையா சொல்லும் போது கேட்டுக்கணும் அண்ணா.."
"சரி டா..எதுவா இருந்தாலும் ரொம்ப யோசிக்காம தள்ளி போடாம சீக்கிரம் என்னை பெரியப்பா ஆக்குற வழியை பாரு.."
"பாரு..நாம நடந்து ரொம்ப தூரம் வந்துட்டோம்..வீட்டுக்கு போகலாம்..அதோ மச்சானே நம்பளை தேடிட்டு வந்துட்டான்...
வா போகலாம்.."
இருவராக நடந்து வந்தவர்கள் ராஜாவோடு வண்டியில் மூவராக திரும்பி போனார்கள்.
இவர்கள் வீட்டில் கிளம்பியதுமே பிருந்தா தங்களது அம்மாவிடம் "மா..நேரமாச்சு..ஏற்கனவே உனக்கு உடம்பு சரியில்லை..
எங்களுக்காக பாக்காம நீ போய் படுத்துக்கோ மா.."
"இல்ல டி மாப்பிள்ளைகள் வரட்டும்..அவங்களுக்கு ஏதாவது சாப்பிட வேணுமானு கேட்டு குடுத்துட்டு போய் படுக்கறேன்..
"மா..அதான் நாங்க இருக்கோம்ல்ல..பாத்துக்கறோம்..நீ போய் தூங்கு மா.."என பிருந்தா அம்மாவை அனுப்பி வைத்தாள்.
அம்மா உள்ளே போனதுமே பிருந்தா மெல்லிய குரலில் ரத்னாவிடம் "பாத்தல்ல..அம்மா எப்டி ஆகிட்டாங்க.."
"ஆமா டி..நேத்திக்கு முட்டி வலி, இன்னிக்கு கை வலினு ஏதோ ஒரு பிரச்சனை அவங்களுக்கு மாத்தி மாத்தி வருது..நாம பாத்த அம்மாவானு இருக்கு.."
"நமக்கு பரவால்ல கா..கல்யாணம் முடிஞ்சாச்சு..ராஜா சின்ன பையன்..அவனுக்கு அம்மாவா இருக்கணுமே.."
"கல்யாணம் மட்டும் தானா ரத்னா.."
"என்ன கேக்கற புரியல..தெளிவா கேளு கா.."
"கல்யாணம் மட்டும் தான் வாழ்க்கையா..அதை தாண்டி குழந்தைனு ஒரு விஷயம் இருக்கறது தெரியுமா ரத்னா.."
"ஏன் கா..சிரிப்பு மூட்டற..அதான் உன் பசங்களை பாக்கறேனே..
தெரியாதா.."
"என் பசங்களை பாக்கற சரி..
உங்க குழந்தை பத்தி யோசிச்சு பாத்திருக்கியா.."
"என்ன கா..இப்படி பேசற..
அதெல்லாம் யோசிக்காம இருப்போமா.."
"யோசிச்சு இன்னும் எத்தனை வருஷம் போகணும் டி..ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷமாகிடுது.."
"இதே மாதிரி எனக்கு கல்யாணம் முடிஞ்சு ரெண்டாவது வருஷத்துல என் பொண்ணுக்கு ஒரு வயசு..நீ இன்னும் யோசிக்கற நிலையிலே இரு.."
"இங்க பாரு..உனக்கு ஏற்கனவே இருவத்தி ஆறு வயசு ஆகிடுச்சு..
அம்மா உடம்புல தெம்பு இருக்கும் போதே நீ குழந்தை பெத்துக்கிட்டா தான் உனக்கு செய்ய அவங்களா முடியும்.."
"ஏன் கா..நீ செய்ய மாட்டியா.."
"நான் நிச்சயம் செய்வேன்..ஆனா எத்தனை நாள் லீவ் போட முடியும்... சொல்லு..அம்மா மாதிரி என்னால உன்னை பாத்துக்க முடியாது டி.."
"நீ தம்பி வந்ததும் பேசி சீக்கிரமே ஒரு முடிவு எடு.."
இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே ராஜாவோடு விக்ரமன், ஈஸ்வரன் வர பேசியதை அதோடு நிறுத்தி கொண்டு மூவருக்கும் மோர் குடுத்து விட்டு கதவுகளை பூட்டி அவரவர் அறைக்குள் சென்றனர்.
அறைக்குள் போய் எதுவும் பேசாமல் அமைதியாக படுத்து கொண்ட விக்ரமன் இந்த அண்ணனுக்கு ஆனாலும் ஆசை ஜாஸ்தி தான்..சீக்கிரம் குழந்தை பெத்துக்கணுமாம்..அதுவும் என்னை பார்த்தாலே பிடிக்காத பொண்டாட்டி கிட்ட என நினைத்து நொடித்து கொண்டான்.
ரத்னாவோ ம்க்கூம்..இந்த மனுஷனுக்கு நம்மளை பாத்தாலே பிடிக்காது..இதுவரைக்கும் நம்ம கிட்ட வாய் முத்து உதிர்த்ததே இல்ல..இதுல எங்க குழந்தையை பத்தி நினைக்கறதாம் என யோசித்தபடி படுத்தவள் தூங்கி போனாள்.
அவள் தூங்கியபின் அவளையே பார்த்தபடி விக்ரமனும் தூங்கி போனான்.
மறுநாள் காலையிலேயே துர்கா பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக ஃபோன் வர இருவருமாக அவசர அவசரமாக விக்ரமனின் வீட்டுக்கு கிளம்பினார்கள்.
அங்கு வீட்டு நிலைமை என்னவாக இருக்குமோ என நொடிகளில் யோசித்து ரத்னாவின் அம்மாவும் அக்காவும் அவர்கள் கிளம்புவதற்குள் இட்லி, சட்னி, மதியத்துக்கு எலுமிச்சை சாதம், தயிர் சாதம், உருளைக்கிழங்கு வறுவல், இரவு டிபன்க்கு இட்லி மாவு, வீட்டில் பறித்த முருங்கைக்காய், கீரை என ரெண்டு பெரிய பைகளில் எல்லாவற்றையும் நிறைத்து வைத்து விட்டனர்.
அதை பார்த்த விக்ரமனுக்கு தன் அப்பாவின் மேல் இருக்கும் அத்தையின் பாசத்தை பார்த்து கண் கலங்கி போனது.
"என்ன அத்தை இத்தனை பெரிய பை..ஒரு வாரத்துக்கு குடுத்திட்டீங்க போல.."
"அதெல்லாம் இல்ல மாப்பிள்ளை..இன்னிக்கு மட்டும் தான் இது..துர்காக்கு சரி ஆகறவரைக்கும் நம்ம வீட்டுலேந்தே தினமும் சாப்பாடு மாமா கிட்ட குடுத்து விட்டுடறேன்.."
"வேணாம் அத்தை..நீங்க சிரமப்பட வேணாம்..மாமாவை கஷ்டப்படுத்தாதீங்க..அப்பா இருக்காரு..ஏதாவது அதிகமா வேலைனா அவர் பாத்துப்பாரு..நானும் ரத்னாவும் அவர் கூட பாத்துக்கறோம்..
அண்ணாவும் லீவ் போட்டு வந்துடறான்.."
"இதுல என்ன கஷ்டம் மாப்பிள்ளை மனுஷங்க..ஒருத்தர்க்கு ஒருத்தர் உதவி பண்றத்துக்கு தானே இருக்கோம்.."
"எனக்கு உங்களை கஷ்டப்படுத்தறதுல இஷ்டமே இல்லை அத்தை.."
"டேய் தம்பி..ரொம்ப யோசிக்காதே..தயங்காதே..நீ ரெண்டு உறவு வேற..நீ தான் உரிமையா கேக்க முடியும்.."
"ஆனாலும் நம்ம மாமியார் நல்ல விவரமான ஆளு தான்..அவங்க அண்ணன் இந்த சாக்குலயாவது நல்ல சாப்பாடு சாப்பிடட்டும்னு தான் சாப்பாடே குடுக்கறாங்க.."
"மாமா அப்ப என்னோட சமையல் நல்லா இருக்காதா.."
"தாயே..ரத்னா நீயும் இங்க தான் இருக்கியா..நான் ஏன் உன்னை சொல்ல போறேன்..நான் பொதுவா சொன்னேன்.."
"அங்க வீட்டுல சமையல் ரத்னா தான் செய்வா அண்ணா..அதான்.."
"என்ன நொதான்..டா.."
"நேத்து உங்க கிட்ட கிடைச்ச ட்ரையினிங்கால இனி எத்தனை நாள் வேணா சமாளிக்கலாம்னு அண்ணா.."
"ட்ரையினிங் கா.. கொழுப்பு டா..
பொண்டாட்டிய சப்போர்ட் பண்ணணும்னு சொன்னா போதுமே..மொதல் ஆளா ஓடி வந்துடுவீயே..இந்த வேகம் வேற எதுலயும் இல்லயே டா.."
"சரி..சரி..உங்களுக்கு காலைல யாரும் கிடைக்கலையா..தம்பி தான் மாட்டினாரா..அவங்களுக்கு மணியாச்சு..கிளம்பட்டும்ங்க.."
"நான் என்ன டி பண்ணேன்..
சாதாரணமா பேச கூட தடை போடு..எல்லாம் என் நேரம்.."
"விக்ரமா..இத்தனை பெரிய பை எடுத்துட்டு நீ வண்டி ஓட்டறது கஷ்டம்..கார் திருப்பிட்டு வரேன்..டேய் மச்சான்..சும்மா பாத்துட்டு நிக்காம பை எடுத்து கார்ல வை.."
கார் வந்தவுடன் பையை டிக்கியில் வைத்து விட விக்ரமனுக்கு வண்டி அவசியம் என்பதால் அவனும் ரத்னாவும் வண்டியில் வர குழந்தைகளை ராஜாவிடம் பார்த்து கொள்ள சொல்லி விட்டு ஈஸ்வரன், பிருந்தா, பரமசிவமும் அவர் மனைவியும் துர்காவை பார்க்க கிளம்பினார்கள். (தொடரும்)
Last edited:
Author: Uppada
Article Title: காண்பது எல்லாம் உனது உருவம் 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: காண்பது எல்லாம் உனது உருவம் 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.