• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

காண்பது எல்லாம் உனது உருவம் 11

Uppada

New member
Joined
Mar 27, 2025
Messages
20
காண்பது எல்லாம் உனது உருவம் 11

விக்ரமன் எப்போது ஊருக்கு போவான் என காத்து கொண்டு இருந்த ரத்னா அவன் ஊருக்கு கிளம்பியதுமே தங்களது அறை கதவை தாளிட்டாள்.

மெல்ல சத்தமே வராமல் பரணுக்கு அருகில் பெரிய ஸ்டூல் போட்டு ஏறினாள்.

அதன் கதவை திறக்க எத்தனை முயன்றும் முடியாமல் போக..மறுபடியும் கீழே இறங்கி சாவி தேடி எடுக்க விக்ரமனிடம் துணி வைத்து இருக்கும் அலமாரியை திறக்க பார்க்க அதுவும் பூட்டப்பட்டிருந்தது.

விக்ரமன் சாவி வைக்கும் இடத்தை பற்றி என்ன யோசித்தும் அவளுக்கு தெரியாமல் போக ஏமாற்றத்தோடு வெளியே போனாள்.

அன்று மாலை நித்யாவோடு விளையாடி கொண்டு இருந்த போது நித்யா "சித்தி உங்களுக்கு ஒரு சீக்ரெட்.." என்றாள்.

"என்ன சீக்ரெட் சீக்கிரம் சொல்லு.."

"அந்த அத்தை சொத்தை இருக்காங்கல்ல.."

"நித்யா அவங்க உனக்கு அத்தை..வயசுல பெரியவங்க...மரியாதையா தான் சொல்லணும்.." என்ற ரத்னாவின் கண்டிப்பால் "சாரி சித்தி இனிமே சொல்ல மாட்டேன்...ஆனா அந்த வருண் மட்டும் எல்லாரையும் பத்தி மரியாதை இல்லாம பேசறானே.அவனை ஏன் யாருமே திட்ட மாட்டேங்கறீங்க.."

"நீ நான் சொன்னா புரிஞ்சிப்ப..தப்பா இருந்தா சாரி கேட்பே..மறுபடியும் அந்த தப்பை செய்ய மாட்டே.."

"என் சொல் பேச்சு கேக்கறவங்களை மட்டும் நான் கண்டிப்பேன்..அவன் கேட்க மாட்டான்..அதனால சொல்ல மாட்டேன்..நீ போய் அம்மா என்ன பண்றாங்கனு பாரு டா கண்ணா..போ.."

"சரியா சொன்னே ரத்னா.."

"வாங்க மாமா டீ போடவா.."

"சரி மா..லேசா பசிக்கிது..டீ கூட ஏதாவது சாப்பிட இருக்கா.."

"ராகி முறுக்கு இருக்கு..தரவா மாமா.."

"ஆஹா..ராகி முறுக்கா!! எத்தனை நாளாச்சு சாப்பிட்டு..குடு குடு..."

டீயோடு முறுக்கும் அவருக்கு குடுத்து விட்டு துர்காவுக்கும் கொண்டு போய் குடுத்தாள்.

"ஏன் கா..உங்க கொழுந்தனார் எதனால வீட்டுல சாப்பிடறதில்ல.."

"ஏன் டி உனக்கு தெரியாதா.."

"தெரியாததால தான் கேக்கறேன்.."

"மூணு நாலு..வருஷத்துக்கு முன்னால தம்பி அப்ப தான் தொழில் ஆரம்பிச்ச புதுசு..அதிகமா காசு வீட்டுக்கு குடுக்க முடியாம இருந்தாரு.."

"அவங்க அப்பா அண்ணன் கிட்ட சொல்லி ரொம்ப வருத்தப்படுவாரு..நாங்க வீட்டை பாத்துக்கறோம்..நீ இப்ப தான் தொழில் ஆரம்பிச்சிருக்க..வீட்டு கவலையை விட்டு உன் தொழில்ல கவனமா இருனு சொல்லி அவங்க ரெண்டு பேரும் தான் வீட்டு செலவை பாத்துக்கிட்டாங்க.."

"மளிகை, காய்கறி மாமா பாத்துப்பாரு...இன்டர்நெட் பில், ரீசார்ஜ், ஈபி பில், வீட்டு வரி, குழாய் வரினு எல்லாத்தையும் உங்க அத்தான் பாத்துப்பாரு.."

"பிரசவத்துக்கு பிறகு நானும் அதிகமா துணி தைக்கல..ரொம்ப வேண்டப்பட்டவங்களுக்கு மட்டும் நான் தைத்து குடுத்திட்டு இருந்தேன்.."

"அதுல எனக்கு வர்ற வருமானத்தை தினப்படி வீட்டு செலவுக்கு சமாளிச்சிட்டு இருந்தோம்.."

"எது எப்படி இருந்தாலும் தேவதைக்கும் அவ குடும்பத்துக்கும் படியளக்கறது மட்டும் நிக்கவே நிக்கல.."

"அப்படியா கா..அப்ப கூடவா.."

"நீ வேற..அவ கல்யாணமாகி போய் ஆறு மாசம் கூட மாமியார் வீட்டுல இல்ல..சண்டை போட்டுட்டு தனியா வந்துட்டா.."

"அதுலேந்தே இங்க தான் மூணு வேளையும் சாப்பாடே.."

"மாமாவால செலவு சமாளிக்க முடியல..அத்தை கிட்ட நிறைய தடவைகள் சொல்லியும் பாத்தாரு..அவங்களா கேப்பாங்க..

"அவங்க ரெண்டு பேரும் சம்பாதிக்கறாங்க..தனியா இருக்காங்க..செலவு கம்மி..அவ செஞ்சு சாப்பிட விடுனு சொன்னாரு.."

"இங்க அஞ்சு வளர்ந்த ஆளுங்க..ஒரு குழந்தை..அடிக்கடி சொந்தக்காரங்கனு நமக்கு ஆளுங்க அதிகம்..சாப்பாடு செலவும் அதிகம்.."

"அப்ப எல்லாம் தினமும் கறியும் மீனுமா வீடு அமர்க்களப்படும்..அமாவாசை, கிருத்திகைனு எதுவும் கிடையாது.."

"அதுவும் மாப்பிள்ளை இருக்காரே...அவருக்கு காலைல சாப்பாட்டுக்கு என்ன வேணும்னு நாம தான் தினமும் காலைல ஃபோன் பண்ணி கேக்கணும்..."

"அவர் வரும்போது சூடா இருக்கணும்...ஏற்கனவே செஞ்சு வெச்சு சூடாக்கி குடுக்க கூடாது..மதியத்துக்கு ஆஃபீஸ்க்கு சூடா குடுத்து அனுப்பணும்னு ஏகப்பட்ட ஆட்டம் ஆடினாங்க.."

"அம்மா தான் யோசிக்கறாங்க..பொண்ணு கிட்ட பேசுவோம்னு பொண்ணுக்கிட்ட மாமா பேசினா..நாங்க இங்க வர்றது உங்களுக்கு பிடிக்கலையானு கேட்டு அழுகை..ஆர்ப்பாட்டம்..."

"சரி..ஒழிஞ்சு போகட்டும் மாமா விட்டுட்டாரு.."

"கொஞ்ச நாள் இப்படியே போச்சு..அப்ப தான் மறுநாள் மாமாவோட அப்பாக்கு வருஷ திதி படையல் போடணும்னு எல்லாம் வாங்கிட்டு வந்து வெச்சிட்டு வீடு சுத்தம் பண்ணி அலம்பி தள்ளி எல்லாம் செஞ்சிட்டு உக்காந்துக்கறேன்..மாப்பிள்ளை கறி எடுத்துட்டு வராரு.."

"தம்பி மட்டும் தான் வீட்டுல இருந்தாரு..பயங்கரமா கோவம் வந்துடுச்சு..உங்களுக்கு தான் அமாவாசை, கிருத்திகை, வெள்ளிக்கிழமைனு எதுவும் கிடையாது..எங்களுக்குமா எதுவும் இருக்காது.."

"நாளைக்கு எங்க தாத்தாக்கு திதி படையல் போடணும்..அண்ணி பாவம் முடியாம இப்ப தான் வீட்டை சுத்தம் செஞ்சிட்டு உக்காந்திருக்காங்க.."

"இன்னிக்கு போய் இதை வாங்கிட்டு வர்றீங்களே..நியாயமானு மாப்பிள்ளைனு தான் சாதாரணமா கேட்டாரு.."

"அதுக்கு அவரு உங்க வீட்டு விஷயம் எனக்கு எப்படி தெரியும்..நான் வாங்கிட்டு வந்திட்டேன்..உங்கம்மாவை சமைச்சு குடுக்க சொல்லுங்கனு அலட்சியமா பேசிட்டு உக்காந்திட்டாரு.."

"மாப்பிள்ளையை பாத்ததும் மாமியாருக்கு வாயெல்லாம் பல்லு..நாளைக்கு தானே படையல்..மறுபடியும் வீட்டை கழுவினா போச்சு..நான் சமைச்சு தரேன் மாப்பிள்ளைனு அவர் கிட்டே இருந்து வாங்கி சமையல் செஞ்சு குடுத்தாங்க.."

"அந்த நேரம் பாத்து மாமா வீட்டுக்கு டீ குடிக்க வர..கவுச்சி வாடையை பாத்துட்டு மாமா அத்தை கிட்ட சண்டை போட்டு அத்தனையும் தூக்கிட்டு போய் வெளியே கொட்டிட்டாரு.."

"என் காசை ஏன் வீணாக்கினீங்கனு மாப்பிள்ளை கத்த..பதிலுக்கு தம்பி பேச....பத்து பைசா வீட்டுக்கு சம்பாதிச்சு தர வக்கில்ல..நீ எப்படி என்னை பேசலாம்னு மாப்பிள்ளை தம்பி கேட்டுட்டாரு.."

"தம்பியோட வருமான விவரம் மாமாக்கு உங்க அத்தானுக்கு எனக்கு மட்டும் தான் தெரியும்..அத்தைக்கே தெரியாது.."

"இது எப்படி அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு சந்தேகமா தம்பி அத்தையை பாக்க அவங்க எதுவும் பதிலே பேசாம இருக்கவே அதுக்கு பிறகு அவங்க சமைச்சா வீட்டுல சாப்பிட மாட்டேன்னு தம்பி கோவிச்சிட்டு போயிடாரு டி.."

"தேவதையோட வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லாம போய் அசைவமே சாப்பிட கூடாதுனு டாக்டர்கள் தீர்மானமா சொல்லிடவே இப்ப தான் அவங்க மனசு வந்து சைவம் சாப்பாடு பக்கம் வந்திருக்காங்க.."

"அப்பறம் தான் அவர் வீட்டுல சாப்பிடறதை நிறுத்திட்டாரா கா.."

"ஆமா..அதுவும் ஒரு வாரம்..தான்..
அதுக்கு பிறகு நான் சமைக்க ஆரம்பிச்சு அவரை பாடுபட்டு சமாதானம் செஞ்சு சாப்பிட வெச்சேன்.."

"சாப்பாடு ரூம்ல எடுத்துட்டு போய் வெச்சிடுவேன்..சாப்பிட மாட்டாரு..அவர் சாப்பிடலேனா நான் பேசவே மாட்டேன்னு சொல்லி பேசாம இருக்கவே தான் வழிக்கு வந்தாரு..சாப்பிட ஆரம்பிச்சாரு.."

"அப்ப நான் சமைச்சது?"

"நீ சமைக்கறது எல்லாம் அவருக்கு ரொம்ப பிடிக்கும் டி..நீ செய்யற வெங்காய தொக்குக்காவே அவர் இன்னும் ஒரு இட்லி அதிகமா சாப்பிடுவாரு.."

"ஓஹோ..அதான் என்னை வாரத்துல நாலு வாட்டி தொக்கு கிளற சொன்னீங்களா..ஏன் கா என் கிட்ட எதுவுமே சொல்லல.." என்ற ரத்னாவின் வேதனையான குரலில்..

"ஏய்..ஏன் டி..தம்பி உன் கிட்ட சொல்லி இருப்பாருனு நினைச்சேன்..ஏன் சொல்லலையா.."

"இரு..இரு..நீங்க ரெண்டு பேரும் பேசி நான் பாத்ததே இல்லயே...பேசுவீங்களா.."

"இல்ல கா..இதுவரைக்கும் பேசினதே இல்லை.."

"என்னது பேசினதே இல்லையா..!!
என்ன டி சொல்ற..ரெண்டு வருஷம் முடிய போகுது..இன்னும் பேசலையா.."

"இல்ல கா..அவர்க்கு என்னை பிடிக்கவே பிடிக்கலைனு நினைச்சேன் கா.."

"யாரு டி சொன்னா..உன்னை பிடிக்காதுனு...தம்பி உன் மேல ஆசைப்பட்டு நீ போற இடத்துக்கு எல்லாம் உன் பின்னாடியே வந்து சுத்தி சுத்தி வந்து உன்னை கல்யாணம் பண்ணாரு டி.."

"அடி பாவி பேசவே பேசாமயே வாழ்க்கை ஓட்டலாம்னு முடிவு பண்ணிட்டியா.."

"இல்ல கா..அவர் பேசல.. அதனால நானும் பேசல.."

"உங்க கல்யாணத்துல அத்தை செஞ்ச குளறுபடியால அவர் கோவத்துல இருந்தாரு..ஏன் டி நீ பேச வேண்டியது தானே.."

"தயக்கமா இருந்தது கா.."

"நல்லா வருது வாய்ல..ஏன் டி நீ நினைச்ச மாதிரி அவரும் நீ பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டேனு நினைச்சிருந்தா.. நீ பேசினா நிச்சயம் அவர் பேசி இருப்பாரு.."

"பேசவே இல்லேனா..மத்தது எல்லாம்..என் மூஞ்சில என்ன எழுதி ஒட்டி இருக்கு..பதில் சொல்லு டி.."

"இன்னும் இல்ல..கா.."

"இங்க பாரு..எதுவா இருந்தாலும் நீங்களே பேசிக்கிட்டா நல்லது..இதுல மூணாவது ஆள் யாராவது தலையிட்டா அப்பறம் இப்ப இருக்கற நிம்மதி போயிடும்.."

"நான் உன்னோட அக்கானு நீ உண்மையா நினைச்சா..தம்பி ஊர்லேந்து வந்ததும் பேசற..பேசி உங்க வாழ்க்கை ஆரம்பிச்சு..சீக்கிரமே என்னை பெரியம்மா ஆக்கற..புரியுதா.."

"சரி..கா..அப்படியே பண்றேன்.."

"ஆமா நித்யாவோட துணி வெக்கற பீரோல ஏன் கா துணி அடைச்சு இருக்கு.."

"எல்லாம் அவ சித்தப்பாவோட கைவண்ணம்..முடிஞ்சா அதை மடிச்சு வையேன்.."

"சரி..கா..நீங்க கொஞ்சம் நேரம் புக் படிச்சிட்டு இருங்க..நான் போய் துணி மடிக்கறேன்..

வெளியே வரும் போது யாரோ வேகமாக நகர்ந்தது போல இருக்க யாராக இருக்கும் என்ற யோசனையோடு ரத்னா தன்னறைக்குள் போனாள். (தொடரும்).
 

Author: Uppada
Article Title: காண்பது எல்லாம் உனது உருவம் 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom