• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கவிக்குயிலின் கவி விமர்சனம்

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
174
நீருக்குள் பூத்த நெருப்பு
கதைத்தறி போட்டிக் கதை

புடவை: திருபுவனம் ( தஞ்சாவூர்)

கதை : நீருக்குள் பூத்த நெருப்பு....

மணிமேகலையின் அக்னி நட்சத்திரம்( பிரவேசம்).....

நீண்ட வருடமாக
நெஞ்சுக்குள் எரியும்
நெருப்பின் அனல்
நீரால் அணையாது....

பெற்றவளை பற்றி பெரிதாய் தெரியாது
பெண் பிள்ளை
பாட்டியின் வளர்ப்
பாசத்துடன் பருவமங்கையின்
படிப்பின் துணையில்
பொறுப்பாய் வளர்ந்திட

படிக்க ஆசைப்பட்டு
பாதியில் தடை பட
பாவை மகன் அரசுடன்
பந்தம் தொடர....

பெண்ணை மதிக்காது பணத்தை மதிக்கும்
பணக்கார கணவன்
பாசமில்லா மன வாழ்வு பிள்ளை இரண்டோடு
பல வருடம் தொடர....

பொண்டாட்டியாகவும் பிள்ளைகளுக்குத் தாயாகவும் பொறுப்புகளை முடித்து
பிரிந்து செல்லும் மேகலை

பாதியில் விட்ட நட்பு பிரிந்து சென்ற உறவு
புதிய இடம்
புது திட்டம்
புது தெம்பாய் வலம்வர...

பொறுத்தும் போவாள் பொங்கியும் எழுவாள்
பெண்ணவள்....

ஆதிகாலம் முதல்
ஆண்கள் பெண்களை அடிமையாக அடக்கி ஆளப்பட்டு வந்த காலம்
அழிந்தது....

அன்புக்கு அடி பணிவாள் ஆணவத்திற்கு அல்ல...
அருமை தெரியாத
ஆணிடம் பெண் என்றும்
அடிப்பணிய மாட்டாள்...
அதற்கு உதாரணம் மேகலை.....

நீருக்குள் பூத்த நெருப்பு
தணிந்தது தாகம்
தன் விருப்பத்துடன்....

அருமை மா....
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா👏🏻👏🏻👏🏻💐🤩👍🏻
 

Author: Mrs Beenaloganathan
Article Title: கவிக்குயிலின் கவி விமர்சனம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom