Ilampillai
New member
- Joined
- Mar 27, 2025
- Messages
- 20
கடல் தேடும் மீன்கள் - 17
இவள் குழலி வீட்டில் தான் இருந்தாள். குழலியும் அவ்வபோது போன் செய்து விசாரித்துக் கொண்டாள். முடிந்த போது வந்துப் பார்த்துக் கொண்டாள்.
எத்தனை வேகமாக இனியாவின் திருமணம் நடந்ததோ அத்தனை வேகமாக விவாகரத்து கிடைத்து விட்டது. ஏற்கனவே ஒரு பெண் மீது ஆசிட் அடிக்க உதவியவனால் எப்படி இனியாவின் உயிருக்கு ஆபத்து வராமல் இருக்கும்?
அந்த பெண் காவல் அதிகாரியின் உதவியோடு அவன் குற்றவாளி என்பதால் இவளுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று சொல்லி இருவருமே பார்த்துக் கொள்ளாமல் இருக்க உதவி செய்து பலரும் சேர்ந்து தான் இனியாவ, இன்பாவைக் காப்பாற்றினார்கள்.
இதற்கு நடுவில் தன்னுடைய வேலையை அடையாறில் இருக்கும் ஒரு சொசைட்டிக்கு மாற்றிக் கொண்டாள் இனியா. சம்பளம் பரவியில்லை. தங்கும் செலவு இல்லை. இருவருக்கும் உணவுக்கு மற்றும் அங்கே சென்று விட்டு வரும் செலவு தான். அவ்வபோது அங்கே செல்கிறேன் இங்கே செல்கிறேன் என்று சொல்லி கரிகாலன் காலை வேளையில் அழைத்து கொண்டு செல்வான். வரும்போது இவள் பார்த்துக் கொள்வாள் அல்லது அலுவகத்தில் இருக்கும் யாராவது அழைத்து வந்து விடுவார்கள்.
பொதுவாக இனியாவுக்கு பிரச்சனை என்று சொன்னால் யாரும் நம்பக் கூட மாட்டார்கள் இப்போது. பேச்சு தான் சரியாக வரவில்லை. மற்றபடி முன்னைப்போல அழுவதில்லை. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தாள். விளையாட்டுப் பொருட்களைக் கூட பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தாள். அதற்கு முக்கிய காரணம் சோழனும் அவன் அன்னையும் தான்.
"இந்த பொம்மை பாட்டிக்குத் தாடி என் செல்லமில்ல " கிளிக்கி சிரிப்பாள். அது என்ன அவர்கள் இருவரைக் கண்டால் மட்டும் அவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு?
"நான் பாட்லும் சிவனேன்னு கிடந்தேன். இவ வந்து என்னை வேலை வாங்கறா"
இன்பா தூக்கிப் போட்ட பொருட்களை பொறுக்கிக் கொண்டே விளையாட்டுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.
" இன்பா என்னதிது. பாட்டி பாவமில்ல?" அதட்டினாள் இனியா.
உதடு பிதுக்கி வழக்கம் போல தன்னுடைய வேலையை ஆரம்பித்தாள் இன்பா.
"அட புள்ளைய வையாத. இவளுக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்?"
எந்த குழந்தையை பார்த்தாலும் அவர் இப்படித் தான் சொல்லுவார்.
அழும் டிராமாவை ஆரம்பித்த பிள்ளையை மடியில் வைத்துக் கொண்டு சிவனேன்னு கிடந்தேன்னு சொன்னா என்ன அர்த்தம் தெரியுமா?
"எங்க ஊரு மீனாட்சிக்கு கல்யாணம் நடக்கும் போது அவளும் அண்ணா அழகனும் அடிக்கற கூத்து தான் சாஸ்தி. சொக்கன் சிவனேன்னு கிடப்பாரு"
இன்பா எதற்கு சிரித்தாள் என்பது இனியாவுக்குத் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்தது.
"சொக்கா! சொக்கா!" திரும்ப திரும்ப சொல்லி பிள்ளை திரும்ப திரும்ப சிரித்தாள் .
அவர் கிளம்பும் நேரம்,
"ரொம்ப தேங்க்ஸ் ஆன்டி. நீங்க எல்லாரும் இல்லன்னா நாங்க இப்படி சிரிச்சுருக்கவே முடியாது.
"நாங்க எல்லாம் நிரந்தரம் இல்ல இனியா. நீ உன் குடும்பத்தோட சேரனும். அது தான் என்னிக்குமே அதுதான் உனக்கும் பாப்பாவுக்கு நல்லது"
அதையே கரிகாலன் வேறு மாதிரி சொன்னான்.
"நீங்க இப்ப அவன் கிட்டேர்ந்து விடுதலையாகிட்டீங்க. வேற ஒரு வாழ்க்கையைப் பத்தி ஏன் யோசிக்க கூடாது?"
இன்னொரு முறை திருமணம்?
இவளால் யோசிக்க முடியவில்லை. செய்த தவறை சரி செய்ய முடியவில்லை. அப்போது தான் தனி. இப்போது தன்னை பற்றி மட்டும் எப்படி யோசிக்க முடியும்? பார்வதி நல்லவன் கூட குழந்தையை ஆசையாக முத்தமிட்ட தில்லை. கரிகாலன் தான் அவள் கண் முன் வந்தான். தன் மகளுக்கு அவர் ஏன் தந்தையாக இல்லை?
இது என்ன எண்ணம்?
இனி அவனிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும். நினைப்பது நடக்குமா?
இனியா வேலைப் பார்க்கும் இடத்தில் மாறன் வந்து குழந்தைகளுக்கு வரையக் கற்றுக் கொடுத்தான். அதில் நம் இன்பாவும் ஒருத்தி . ஆனால் அவள் இன்னும் ஸ்பெஷல். வயதுக்கு மீறிய வரையும் ஆற்றல் அவளுக்கு இருந்ததது. சில குழந்தைகள் இந்த குறைப்பாடு இருக்கும் போது செய்த வேலையே திருப்பி திருப்பி செய்வார்களாம். மாறன் வந்து அவளுக்கு பென்சில் பிடித்து வரையக் கற்றுக் கொடுத்ததும் அவள் அதையே திருப்பி திருப்பி செய்தாள்.
மாறனின் பொறுமை திறமை பார்த்து இனியா அசந்து விட்டாள். கரிகாலன் தீபக் மாறன் எல்லாம் சேர்ந்து நெருங்கிய தோழர்கள் என்று தெரிந்தபோதும் அவளுக்கு இன்னும் ஆச்சர்யம் . மாறன் மீது அண்ணன் தோழன் என்பது தாண்டி தங்கையின் கணவர் என்ற உறவு வந்தது. சோழனின் மீது அது என்ன அவளுக்குத் தெரியவில்லை. உரிமைதான் அது.
" சோழன் எனக்கு ஆர் ஓ வேலை செய்யல. தண்ணி கேன் கிடைக்குமா? எனக்கு பேங்க் வரைக்கும் போகணும் பாப்பாவை கொஞ்ச நேரம் வச்சுக்கறீங்களா?" எதுவாக இருந்தாலும் அவனிடம் தைரியமாகக் கேட்கலாம்.
ஒரு நாள் மதியத்திற்கு மேல் அவளுக்கு காய்ச்சல் அடிப்பது போல இருந்தது. மாத்திரை போட்டாள. சிறிது நேரத்திற்கு குறைவது போல இருந்தது. மீண்டும் கொதிக்க ஆரம்பித்து விட்டது.
"சோழன் கொஞ்சம் வந்து பாப்பாவை தூக்கிட்டு போறீங்களா. கொஞ்சம் பீவரிஷா இருக்கு" அவன் வந்து பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்தவள் அப்படியே மயங்கி விட்டாள. கைத் தாங்கலாக பிடித்துக் கொண்டவன் மெதுவாக சோபாவில் கிடத்தினான். லேசாக தண்ணீர் தெளிக்கவும் லேசாக அசைந்தாள் . அவசரமாக அன்னைக்கு அழைத்து விஷயம் சொல்லி விட்டு இவளை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றான். கார் ஓட்ட முடியவில்லை. படபடப்பாக இருந்தது. ஏன்? புரியவில்லை.
அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தார்கள. இவன் தான் கார்டியன் என்று கையெழுத்துப் போட்டான். டெஸ்டுகள் எடுத்தார்கள் இவன் தான் பணம் கட்டினான். பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. வைரல் பீவர்தான் என்று சொன்னதும் தான் இவனுக்கு நிம்மதியாக இருந்து. இருந்தாலும் அவள் அருகில் அமர்ந்துக் கொண்டான். கையால் சும்மா இருக்க முடியவில்லை . மெதுவாக தலை கோதினான். தனியாக சிறு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு திண்டாடும் அவளை பார்க்கப் பாவமாக இருந்தது.
உன்னையும் உன் பிள்ளையையும் தாங்கும் உரிமை எனக்கு கிடைக்குமா? வேண்டாம். இந்த அவலட்சணம் உனக்கு வேண்டாம். நினைத்ததும் கை தானாகவே நகர்ந்துக் கொண்டது.
ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. கண் திறந்தவள் பார்த்தது அருகில் இருந்த சோழனைத் தான்.
"சாரி சோழன் ! உங்களை ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன்."
"உதவரத்துக்குத் தானே அக்கம் பக்கத்து மனுஷங்க இருக்கோம்"
டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் கொண்டு வந்து விட்டான். பாட்டியும் இன்பாவும் கூட வந்து விட்டார்கள். இவளின் கையில் இன்னும் அந்த ட்ரிப்ஸ் ஊசி இருந்தது அடுத்த இரு தினங்களுக்கு மருந்து அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கிளினிக்கில் போட்டுக் கொள்ள சொல்லி இருந்தார்கள். அதை பார்த்த குழந்தை பயந்து வீல் வீல் என்று அலறினாள்.
"பாப்பா என் கூடவே இருக்கட்டும். அப்புறமா கூட்டிட்டு வந்து விடறேன்."
சொன்னவன் கடையில் பையனை விட்டு விட்டு அவன் மார்பில் போட்டு தூங்க வைத்த பிறகே குழந்தையை கொண்டு வந்து விட்டான்.
"சோழன் ! " அவள் அழைத்தாள. இது அவளின் பிரத்யேக அழைப்பு. பலர் அவனை கரி என்பார்கள் . சிலர் கரிகாலன் என்பார்கள் இவள் தான் முதன் முதலில் சோழன் என்று அழைத்தவள் .
"சொல்லுங்க மேடம்!"
"உங்க கிட்ட நான்..,"
எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க மேடம் "
"எங்க அம்மாவைப் பாக்கணும்." கண்கள் கலங்கி விட்டன.
சொன்னவள் சட்டென அவனைக் கட்டிக் கொண்டாள்.
"மேடம் ப்ளீஸ் என்ன இது?"
"சோழன் ப்ளீஸ்! எதுவும் சொல்லாதீங்க. அனாதையா கிடக்கறேன். ஏதேதோ தப்பான எண்ணங்கள் வருது. எதுவும் பேசாதீங்க "
இவனும் அமைதியாக இருந்தான். இவனுக்கு அவள் நிலை புரிந்தது. அவன் தந்தை இறந்த நேரம் கோர முகம் பார்த்தவனுக்கு யாரிடமும் சொல்லவும் முடியாமல் தவித்தான் . ஆண் மகனால் எல்லா துக்கங்களையும் தாங்கிக் கொள்ள முடியுமா என்ன?
'இப்போது நான் அன்னையைப் பார்க்க வேண்டும்' மனதில் சொல்லிக் கொண்டு தன் துக்கத்தை வெளியில் காட்டாமல் அடக்கிக் கொண்டான். திருமணம் ஆகி இருந்தால் நிச்சயம் மனைவி மடி சாய்ந்திருப்பான் . இவளோ திருமணம் ஆகியும் இந்த நிலையில் இருக்கிறாள் .
அவனின் இதயத்தின் ஒலி அவளை சாந்தப்ப படுத்தியது. கண்ணில் வழிந்த நீரை துடைத்து கொண்டவள், "தேங்க்ஸ்" என்றாள்.
அவள் கேட்டுக் கொண்டபடியே மறுநாள் அவள் தலைக் கோத அன்னை மட்டுமில்லை குடும்பமாக வந்து நின்றார்கள்.
காலிங் பெல் சத்தம் கேட்டது.
மெதுவாக அடி எடுத்து வைத்தவள் கதவை திறந்தாள். இன்னும் உடல் நலம் பெறவில்லை. தலை பாரமாக இருந்தது.
அன்னையின் முகம் பார்த்தவள், "வாம்மா! வாப்பா!" அதற்கு மேல் அவளை தீபக் பேச விடவில்லை. தோளில் சாய்த்துக் கொண்டு அறையில் படுக்க வைத்தான்.
"தேங்க்ஸ் அண்ணா "சொன்னவள் அவன் கையைப் பிடித்துக் கொண்டு உறங்கிப் போனாள் . கண் விழித்த இன்பா வீட்டில் யார் யாரோ இருக்கவும் உதடு பிதுக்கி அழுவதற்கு முன் தீபா அள்ளி எடுத்து சமாதானம் செய்தாள் . மாறனின் முகம் பார்த்து கை தட்டி சிரித்தாள் இன்பா .
பிறந்த நேரம் பார்த்து பேச வேண்டிய கதைகள் எல்லாம் இப்போது பேசினார்கள்.
யாரும் நல்லவனை பற்றியோ அவளது பழைய வாழக்கை பற்றியோ வாய் திறக்க கூடாது என்ற அருணாவின் கட்டளையைப் பின் பற்றினார்கள். முதல் நாள் இரவு கரிகாலன் போன் செய்த பிறகு இதை பற்றி எப்படி பேசுவது என்று தீபக் குழம்பிக் கொண்டி கொண்டிருந்தான். தங்கை அண்ணாவின் முகம் பார்த்து கண்டுபிடித்து விட்டாள். அவளிடம் பேசிக் கொண்டிருந்தபோது அதை பெரியவர்களும் கேட்டு விட்டார்கள்.
"அம்மா எனக்கும் விஷயம் தெரியும். இப்பதான் இவரும் சொன்னாரு. அக்கா பொண்ணுக்கு இவரு தான் வரைய சொல்லிக் கொடுக்கிறாராம்."
"அப்டின்னா இனியா பொண்ணுக்கு ?"
" ஆமாண்ணே !"
"ஒ மை காட்!இதை ஏன் மாறன் நம்ம கிட்ட இத்தனை நாள் சொல்லல?"
அக்கா தான் யாருகிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம் .குழலி அக்கா வீட்டுலதான் இப்ப அக்கா இருக்காம். இனியா அக்காவுக்கு பிள்ளை பிறந்த போது கூட யாரும் இல்லாம ரொம்ப கஷ்டபட்டுச்சாம். அப்ப என்றுத் தொடங்கி நடந்த விஷயங்களை சுருக்கமாக சொன்னாள்.
அப்போது தான் கோவில் வாயிலில் அவளை பார்த்து பேசிய விஷயத்தைச் சொன்னான்.
"அப்ப என் பொண்ணு இவ்ளோ கஷ்டப்படறது தெரிஞ்சும் நீ சொல்லாமலே இருந்தியா தீபக்?" என்றுத் தொடங்கி அழுகை சண்டை சமாதானம் எல்லாம் ஆகித் தான் இப்போது விடியலில் இங்கே வந்து நிற்கிறார்கள்.
அதேப் போலத்தான் அங்கே கரிகாலன் வீட்டிலும் சண்டை நடந்தது.
வகையாய் போட்டுக் கொடுத்த அடுத்த வீட்டு அக்காதான் காரணம்.
"இங்க பாருங்க கரியம்மா ! சொல்லறேன்னு தப்பா நினைக்காதீங்க. நம்ம பையனை பத்தி நமக்குத் தெரியும். பாக்கறவங்களுக்குத் தெரியாதே. ஊரு நாலு விதமா பேசறதுக்கு முன்ன உங்க சொந்ததுலேயே பார்த்து கரிக்கு சீக்கிரமா கல்யாணத்தை முடிங்க. அவனுக்கும் வயசாகிட்டே போகுது. பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா என்ன வேணுன்னாலும் நடக்கும். இந்த இந்த பிள்ளையை நீங்க தூக்கி தூக்கி இங்க வச்சுக்கறதும் அதை சாக்கு வைச்சு அந்த பொண்ணு இங்க வரதும். கரிக்கிட்ட சிரிச்சு மயக்கரதும் சரியாவேயில்ல"
"நம்ம மீனட்சி புள்ளை கூடாது தான் இங்க இருக்கு. அதுல என்ன தப்பு?"
பெரியவர் கேட்டதற்கு,
"அக்கா இன்னும் இப்படி ஊரு உலகம் தெரியாமலேயே இருக்கீங்களே . மீனாட்சியின் புள்ள உங்க மமகனை அப்பான்னு சொல்லலியே . அவ ஒழுக்கமானவளா இருந்தா எப்ப புள்ளை வேற எவனையோ அப்பான்னு கூப்பிடும்போது சிரிச்சுக்கிட்டு இருக்க முடியும்? என்னவோக்கா எனக்கு மனசுல பட்டதை நன் சொல்லிட்டேன். ரெண்டும் சின்னச்சிறுசுங்க அப்புறம் தப்பா எதுவும் ஆகிட்டா நம்ம பயல மீட்டுகிட்டு வர முடியாது சொல்லிட்டேன்."
அந்த ஏரியாவில் இருந்த பலரின் குரலாக அவளின் ஒரு குரல் முதலில் ஆரம்பித்து வைத்தது. அதற்கு ஏற்றது போல இன்பாவும் இவன் வரும் வரை முழித்திருந்து அப்பா என்றுக் கட்டிக் கொண்டாள் .
இடுப்பை தட்டிய குழந்தைக்கு பறக்கும் முத்தம் கொடுத்தவன் "பாப்பா சாப்பிட்டாங்களா? " அப்பா போய் குளிச்சுட்டு வந்திறன். சொல்லிவிட்டுச் சென்றான். வந்திடும் குழந்தையை மடியில் அமர்த்தி உணவு ஊட்டிய பிறகு இவன் சாப்பிட்டான்.
"இனியா எப்படி இருக்கா கரி ?
"அன்று இனியா சொன்னப் பிறகு அம்மா இவனை கரிகாலன் என்று தான் அழைக்க ஆரம்பித்தார் . இப்போது மறுபடியும் கரி என்கிறார். கையை துடைத்துக் கொண்டு வந்தவன் அர்த்தம் புரிந்தவனாக அன்னையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"என் மூஞ்சில கரிய பூசிடாதப்பா "
"என்ன அத்தா சொல்லற நீ? நீ என்ன சொல்லறன்னே எனக்குப் புரியல"
"சொல்லறேன். எல்லாத்தையும் விட்னு புட்டு உனக்கு சொல்லனுமா சொல்லறேன்"
மாலை நடந்த விஷயங்களைச் சொன்னாள் .
"நீ என்னை சந்தேகப் படறியா?"
"இல்லப்பா. இத்தனை நாளா அந்த ரூபாவைதான் நீ மனசுல வச்சு வாழ்ந்துகிட்டு இருக்கன்னு எனக்கு தெரியும். ஆனா இனியாவைப் பார்த்ததும் எனக்கே அந்த சந்தேகம் வர ஆரம்பிக்குது. நமக்கும் அவளுக்கும் என்னப்பா சம்பந்தம். அவளுக்கு ஒண்ணுன்னா நீ பதறிப் போற? தோளுல தூக்கி போட்டுட்டு ஆஸ்பத்ரிக்கு ஓடற. இங்க என்னப்பா நடக்குது ?"
"யாரோ என்னவோ பேசினா நீயும் அதை அப்படியே பேசுவியா?"
"அந்த அளவுக்கு நான் ஒன்னும் மூளை கெட்டுப் போய் கிடைக்கல. அவ ஒருத்தி பேசினது இங்க இருக்கற பல பேசற விஷயம் தான். இதனால நமக்கும் பிரச்சனை வரும். ஒவ்வொருத்தரா பேச ஆரம்பிம்பாங்க. அந்த ரூபாவையே மனசுல நினைச்சுகிட்டு வாழ வேண்டிய வயசுல ஆசைகளை தொலைச்சவன் நீ. எனக்குத் தெரியும். ஆனா மத்தவங்களுக்குத் தெரியாது. நாளைக்கே உனக்கு ஒரு கல்யாணம் பண்ணணுன்னா வர்றவளுக்கு இந்த விஷயமா தெரிஞ்சா உன் வாழ்க்கை என்ன ஆகும்? உன் வாழ்க்கை மட்டுமில்ல அந்த இனியா வாழ்க்கை என்ன ஆகும்?
"இப்ப என்னதான் சொல்ல வர்ற ?"
"உனக்கு அவளை புடிச்சுருக்கா கல்யாணம் பண்ணிக்கோ இல்லையா தள்ளி நிப்போம். ஆனா இந்த மாதிரி உறவு வேணாம். "
"அம்மா இந்த பிள்ளை முகத்தை பார்த்துட்டு எப்படிம்மா நாம் மூஞ்சிய திருப்பிக்க முடியும்?"
"இங்க பாருப்பா அந்த புள்ளைக்குன்னு பெத்தவங்க இருக்காங்க. உன் நண்பனுக்கு போன் பண்ணி பேசு. அவங்க வந்து இவங்களை கூட்டிக்கிட்டுப் போகட்டும். சில விஷயங்களை நாம ஏத்துகிட்டுதான் ஆகணும்."
பதில் எதுவும் பேசாமல் தான் குழந்தை தூங்கிய பிறகு கொண்டுப் போய் விட்டான்.
தன்னால் இனி இனியா இன்பா இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?
தினமும் காலையில் அவனுக்கு இனியாவின் முகம் பார்த்து விட வேண்டும். அவர்கள் கிளம்பி ஆட்டோவுக்கு நிற்கும்போது அவர்களை கண்ணால் பருகிக் கொள்வான்.
இன்பாவும் தான் முன்பு இருந்தது போல எல்லாம் இல்லை. இந்த ஒரு வருடத்தில் எத்தனை மாற்றங்கள் அந்த பிஞ்சிடம்?
குழந்தை அம்மா எனும்போது அவள் கொள்ளும் இன்பம் இவனும் அடைந்தான், அந்த குழந்தை அப்பா என்ற போது . இனியா விடம் எப்படி எனக்கு உங்களை பிடிக்கிறது என்று சொல்ல முடியும்? அவளோ திருமணம் ஆனவள். விவாகரத்து வாங்கி விட்டாலும் அவள் மனதில் தான் அமர தனக்கு என்ன தகுதி இருக்கிறது? அத்தனை அழகான மகாலட்சுமிக்கு இந்த கரிக்கட்டையா ? தனக்கு என்று என்ன இருக்கிறது ? அழுக்குச்சட்டையும் லுங்கியும் . தன்னை நினைத்தவனுக்கு அருவருப்பாக இருந்தது.
அவன் எத்தனை அழகானவன். அதை நாம் யோசிப்பதை விட அவனவன் யோசித்தால் தான் நன்றாக இருக்கும்.
காலையில் ஊசியை வாங்கி வந்து மாறன் போட்டு விட்டான். தன்னை சுற்றிலும் இத்தனை பேர் இருந்தாலும் அவர் ஏன் வரல? போன் பண்ணலாமா? அரை மயக்கத்தில் கூட அவன் நினைவுதான் அவளுக்கு .
அன்னையின் கைமணத்தில் கஞ்சி ரசம் சாதம் என்று வாய்க்கு ருசியாக வயறு வாடாமல் சாப்பிட்டாள் . தந்தையை விடவும் அம்மாவைத் தேடினாள் . தேவேந்திரனுக்கும் புரியாத பல விஷயங்கள் புரிந்தன . வாழ்க்கை பற்றி அல்ல. அவரின் வாழ்க்கைத் துணை பற்றி.
இளையவர்கள் கிளம்பி விட்டார்கள். வேலைக்குச் செல்ல வேண்டுமே! மாறன் இன்பாவை காலையில் விட்டான். தாத்தா மதியம் சென்று அழைத்து வந்தார்.
"ம்மா! சோழன் ஏதாவது கால் பண்ணாரா?"
"ஏம்மா ?"
"இல்ல சும்மாதான். இன்னிக்கும் நாளைக்கும் கைல ஊசிப் போடணும், அதான் "
இதோ அவருக்கு போன் பண்ணிக் கேக்கறேன்.
மகளின் மீ்து அன்னையின் குறுகுறு பார்வை படர்ந்தது
"ஹலோ சோழன் !"
நேற்றைய சம்பவத்திற்கு பிறகு இருவராலும் இயல்பாக இருக்க முடியவில்லை.
"ஹாஸ்பிடல் போகணும் எப்ப வரீங்க?"
"தீபக் இல்லையா?"
'நான் உங்களை கூப்பிட்டேன்."
வந்து நின்றான். வந்தவனை இன்பா அப்பா அப்பா கட்டிக் கொண்டாள் .
"அப்பா இல்லடா செல்லம் "
தேவேந்திரன் குழந்தையை தூக்கி கொண்டார் .
இரவில் பெற்றோர் மக்களிடம் பேசினார்கள்.
:குழந்தை நல்லவனை ரொம்ப தேடறா. அப்பா செல்லம்மா?"
"அம்மா அது வந்து அவ அப்பான்னு சொல்லறது சோழனைத் தான்." கேட்டவர்களுக்கு அதிர்ச்சி.
"அப்பா நீங்க ரெண்டு பேரும்?"
"எங்களுக்குள்ளே எதுவும் இல்ல. நாங்க ஜஸ்ட் நெய்பர்ஸ் தான். இங்க யாரும் இல்லாம வந்த போது சோழனும் ஆண்டியும் தான் எங்க ரெண்டு பேருக்கும் ஆதரவா இருந்தாங்க. அவரை பார்த்து தான் இன்பா முதன் முதல்ல சிரிச்சா. ஒரு வேலை நல்லவன் கூடவே இருந்திருந்தா இவளுக்கு இன்னும் பிரச்சனை அதிகமாகி இருந்திருக்கலாம். எனக்கும் பைத்தியம் பிடிச்சுருக்கும். சோழனும் அவங்க அம்மாவும் எங்க மேல காட்டின தூய அன்புதான் இன்னிக்கு என்னையும் என் பெண்ணையும் உசுரோட வச்சுருக்கு"
மற்றவர்கள் வேறு பெயர் சொல்ல இவளுக்கு மட்டும் அது என்ன அவனை வேறு பெயர் சொல்லக் காரணம்?
"சரி உங்க ரெண்டு பேரு மனசுல?"
"அம்மா அது வந்து?"
"வெளிப்படையா பேசு இனியா. எனக்கு கரிகாலனை ரொம்ப முன்னாடியேத் தெரியும். அவன் மனசை முழுசா ரூபாவுக்கு கொடுத்துட்டான். ஆனா நீ? "
மௌனம்
"நீ அவனை விரும்பரியாம்மா ?
தேவேந்திரனின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
அவளுக்கு அவன் வேண்டும். அவன் முகம் பார்க்காமல் அவளுக்கு ரொம்ப கஷ்டம்தான்.
அவர் முகம் பார்க்காமல் அவள் எத்தனை கஷ்டப்பட்டால் என்பது அவளுக்கே அப்போது தான் புரிந்தது.
எப்போது அவன் ரூபாவுக்கு திதி கொடுத்து விட்டு வந்தானோ அப்போதே அவனுக்குத் தான் சரியில்லை என்று அவள் புரிந்துக் கொண்டாள் .
"சொல்லு இனியா. உன்னோட மனசுல அவரு இருக்காரா? நம்ம குழந்தை யாரோ ஒருத்தரை அப்பான்னு சொல்லறது எப்படி சரியாகும்? காரிகாலங்கிட்ட தீபக்கை பேச சொல்லவா? "
"அம்மா என்னம்மா பேசற நீ? என்னோட விவாகரத்துக்கு, கூட வந்து நின்னவர் மா அவரு. அவருகிட்டையே போய் என்னோட முதல் புருஷனை கை கழுவிட்டேன். வா நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு எப்படிம்மா?"
"விவாகரத்து ஆனவங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கறது தப்புன்னு நினைக்கிறியா?"
"இல்லம்மா! கண்டிப்பா இல்ல. அது ஒவ்வொருத்தரோட வாழ்க்கைக்கு ஏத்தமாதிரி மாறும். நான் நல்லவனுக்காகவே பொறந்தவன்னு அவனுக்காக வாழ பழகிட்டேன். இப்ப நிச்சயமா அவன் என் மனசுல இல்ல. இருந்தாலும் நல்லவன் கை பாட்ட எச்சி மா நானு. தன்னை அசிங்கமா இருக்க, உனக்கு ஆங்கிலம் பேச வரல. பெரிய பணக்காரர் இல்லன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டு போனவளுக்காக இப்பவும் வருஷாவருஷம் திதி கொடுக்கறாரு. அந்த நல்லவருக்கு இந்த எச்சில் வேண்டாம்மா ."
"என்ன இனியா இப்படி பேசற. "
"ப்ளீஸ் மா புரிஞ்சுக்கோங்க."
முகம் மூடி கேவிக் கேவி அழுத்தவன் நிலை புரிந்தது. இப்போது அவள் மனம் முழுவதும் காரிகாலந்தான் இருக்கிறான். இவன் தான் வேண்டும் என்று பிடிவாதமாக வீட்டை விட்டு ஒட்டிப் போய் நல்லவனை திருமணம் செய்துக் கொண்டவள் இந்த உண்மையான நல்லவனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள். இதற்குத் தீர்வு தான் என்ன?
இங்கே இந்த விஷயம் நடந்துக் கொண்டிருக்க, மாறனும் தீபக்கும் பேசிக் கொண்டிருந்தாரகள்.
"கரிகாலனுக்கும் இனியாவுக்கும் ஒரு டிராக் ஓடுது தீபக்"
இதற்கு மேல் என்ன ?
சுபஸ்ய சீக்கிரம்.
இனியாவும் சோழனும் தங்கள் உலகத்தில் இருக்க பெரியவர்கள் சிறியவர்கள் எல்லாம் சேர்ந்து முடிவெடுத்துவிட்டார்கள். இன்பா குட்டியும் தான்.
கரிகாலன் அம்மா தான் வந்து உறவுக்கார பெண்கள் சிலருடன் வந்து இவளுக்குப் பூ வைத்து விட்டுப் போனார். அவர் வரையில் மகனின் சந்தோஷம் தான் முக்கியம். சிரிக்க மறந்தவன் உலகத்தில் சிரிக்க கற்றுக் கொடுத்தாள் இன்பா. மற்றபடி அவருக்கு யார் என்ன பேசினாலும் கவலை இல்லை.
"அக்கா நீயும் மாமாவும் பீச்சுக்குப் போய்ட்டு கொஞ்ச நேர டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. பாப்பாவை நாங்கப் பார்த்துக்கறோம் "
"ஏன் உனக்கு எக்ஸ்பீரியன்ஸா இருக்குன்னு பாக்கறியா ?
மாறன் என்ன சொல்லறீங்க ?"
"இன்னும் இவ உங்ககிட்ட விஷயத்தை சொல்லவேயில்லையா ?"
"டேய் பக்கி அக்காவும் மாமாவும் சேர்ந்து இருக்கும் போது சொல்லலாம்ன்னு நினச்சேன். உளறிட்டியே "
"அதுக்கு என்ன? இப்பவே கரிக்கு போன போடறேன்.
"டேய் இனிமே நாம அவனை கரினனு சொல்ல முடி மிஸ்டர் மேடத்துக்கு புடிக்காது."
தீபக் சொல்ல இவள் கன்னம் சிவந்தாள்.
இதோ அவர்கள் இருவரும் கடற்கரையில் ..
தள்ளி அமர்ந்தவள் அருகில் அவளை ஒட்டி அமர்ந்தான் அவன். அவனின் இந்த செயல் அவளுக்கு ஓரளவு தைரியம் கொடுத்தது. 'புடிக்கலன்னு சொல்லிடுவாரோ?' முன்பிருந்த பயம் இப்போது இல்லை.
"உங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா?"
அவன் முகம் பார்த்துக் கேட்டாள் அவள்.
மௌனம்.
"இதுக்கு மேல என்னால எதையும் கட்டுப் படுத்த முடியாது சோழன். எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு. உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. மத்தவர்களுக்காக நாம் எந்த செயலையும் செய்ய வேணாம்."
"எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு மேடம். ஆனா இந்த அசிங்கம் எங்க? நீங்க எங்க ?
யாருடா அசிங்கம்? நாந்தான் அசிங்கம். வாழாவெட்டின்னு என்ன நான் சொன்னபோது எனக்காக என்கிட்டியே கோபப்பட்டவன். நீயா அசிங்கம்? இனிமே இந்த அசிங்கம் அவலட்சணம் ஏதாச்சும் பேசினீங்கன்னா அவ்ளோதான் .
அவளைத் தான் அவன் ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
'என்ன அப்டி பாக்கற?
"இப்ப நீங்களும் அதை தான் பண்ணறீங்க"
அவன் சொன்னதும் அவளுக்கு கூச்சமாக இருந்தது.
இருவருக்கும் வார்த்தைகளை முட்டி மோதின. வாய் மட்டும் பூட்டிக் கொண்டது. வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்த மீன் களை அலைகள் ஓடி வந்து கால்களை நனைத்துக் கொண்டிருந்தது.
"பொதுவா தேவதைகள் பெண்களாக தான் இருப்பாங்கன்னு நினச்சேன். என் பெண்ணை சிரிக்க வைச்ச தேவதை நீங்க. என்னால உங்களை எவ்ளோ ஆசையா பார்த்துக்க முடியுமோ நான் பாத்துக்கறேன். இருந்தாலும் காதல் வருமான்னு தெரியல "
"உங்க வாழ்க்கைல நீங்க காதலித்து ஏமாந்து போனதால இருக்கலாம். எனக்கும் அந்த பிரச்சனை இருக்கு . இருந்தாலும் எனக்கு காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நாம் காதல் செய்தவங்க தப்பானவங்களா இருக்கலாம். அதுக்காக காதலே தப்புன்னு சொல்லிட முடியாது. என்னால எவ்ளோ காதல் குடுக்க முடியுதோ அவ்ளோ காதல் செய்வேன்.
அவள் கைகள் அவன் இரு கைக்குள் இருந்தது. அவள் கண்ணுக்குள் அவன் இருந்தான்.
பறந்த அவள் முடிக்களை மெதுவாக காதோரம் ஒதுக்கி விட்டான்.
"கிளம்பலாம்" கோவிலுக்கு போகணும் அவள் தான் சொன்னாள்.
"இப்ப என்ன கோவிலுக்கு? "
உடையில் இருந்த மண்ணை தட்டிக் கொண்டே நடந்தார்கள் .
இவ்ளோ அழகானவரை எனக்கு காட்டி கடவுளுக்கு நன்றி. சொல்ல. . உலகத்துலேயே சிறந்த அப்பாவை என் மகளுக்கு கொடுத்ததுக்கு"
"அதுவும் சரிதான். அவரு இல்லன்னா நான் இன்னிக்கு எனக்கு மாசுக்கு புடிச்ச பொண்ணோட கைய பிடிச்சுக்கிட்டு இப்படி உரிமையா நடக்க முடியுமா?"
அவர் கோவிலில் சந்தித்துக் கொண்டவர்களின் பயணம் அவரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
"வணக்கம் ! இன்றிய முக்கிய செய்திகள்.
நான்கு தொகுதிகளுக்கான இடை தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டிருக்கிறது.
எண்ணூர் அருகேநடந்த இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே நடந்த சண்டையில் ஒருவன் வெட்டி கொல்லப்பட்டான். அவன் பெயர் நல்லவன் என்பதும் வயது 29 தெரிய வந்துள்ளது . ஏற்கனவே இவன்குடிபோதையில் தனது அன்னையை தலையில் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்ய முயன்றபோது போலிஸாரால் கைது செய்யப் பட்டவன் என்பதும் இப்போது ஜாமினில் வந்தவனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது."
செய்திகள் ஓடி கொண்டிருக்கிறது.
பார்வதி மன நல காப்பகத்தில் இருப்பது, அல்லது நல்லவன் நிலை பற்றி எதுவும் இனியாவுக்கு தெரிய வேண்டியதில்லை.
இந்த மீன்களின் வாழ்வை சரிப்படுத்தியவர் தனது கோவில் குளத்தில் இருக்கும் மீன்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார் இறைவன் பக்தர்களின் மூலம் .
"நான் கொஞ்சம் பொறி போடறேன். இந்தா நீ கொஞ்சம் போடு "
குழந்தைகளின் ஆரவாரம் கேட்க உள்ளே நுழைந்தார்கள் நம் இனியாவும் கரிகாலனும்...
சுபம் .......
வணக்கம் மக்களே! இளம்பிள்ளை உண்மையில் இளம்பிள்ளைதான். கதைத் தறி எப்படி இருக்கு. டிசைன்ஸ் கலர்ஸ் எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இந்த புடவை நெய்து முடிச்சுட்டு பார்த்தா எனக்கு மன நிறைவா இருந்தது. உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். என்னுடன் வந்த அனைவருக்கும் மிக்க நன்றி...
ஹா! சொல்ல மறந்துட்டேன் . சீக்கிரமா நாம தீபக் குழலி காதல் கதையில் சந்திக்கலாம்.
இவள் குழலி வீட்டில் தான் இருந்தாள். குழலியும் அவ்வபோது போன் செய்து விசாரித்துக் கொண்டாள். முடிந்த போது வந்துப் பார்த்துக் கொண்டாள்.
எத்தனை வேகமாக இனியாவின் திருமணம் நடந்ததோ அத்தனை வேகமாக விவாகரத்து கிடைத்து விட்டது. ஏற்கனவே ஒரு பெண் மீது ஆசிட் அடிக்க உதவியவனால் எப்படி இனியாவின் உயிருக்கு ஆபத்து வராமல் இருக்கும்?
அந்த பெண் காவல் அதிகாரியின் உதவியோடு அவன் குற்றவாளி என்பதால் இவளுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று சொல்லி இருவருமே பார்த்துக் கொள்ளாமல் இருக்க உதவி செய்து பலரும் சேர்ந்து தான் இனியாவ, இன்பாவைக் காப்பாற்றினார்கள்.
இதற்கு நடுவில் தன்னுடைய வேலையை அடையாறில் இருக்கும் ஒரு சொசைட்டிக்கு மாற்றிக் கொண்டாள் இனியா. சம்பளம் பரவியில்லை. தங்கும் செலவு இல்லை. இருவருக்கும் உணவுக்கு மற்றும் அங்கே சென்று விட்டு வரும் செலவு தான். அவ்வபோது அங்கே செல்கிறேன் இங்கே செல்கிறேன் என்று சொல்லி கரிகாலன் காலை வேளையில் அழைத்து கொண்டு செல்வான். வரும்போது இவள் பார்த்துக் கொள்வாள் அல்லது அலுவகத்தில் இருக்கும் யாராவது அழைத்து வந்து விடுவார்கள்.
பொதுவாக இனியாவுக்கு பிரச்சனை என்று சொன்னால் யாரும் நம்பக் கூட மாட்டார்கள் இப்போது. பேச்சு தான் சரியாக வரவில்லை. மற்றபடி முன்னைப்போல அழுவதில்லை. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தாள். விளையாட்டுப் பொருட்களைக் கூட பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தாள். அதற்கு முக்கிய காரணம் சோழனும் அவன் அன்னையும் தான்.
"இந்த பொம்மை பாட்டிக்குத் தாடி என் செல்லமில்ல " கிளிக்கி சிரிப்பாள். அது என்ன அவர்கள் இருவரைக் கண்டால் மட்டும் அவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு?
"நான் பாட்லும் சிவனேன்னு கிடந்தேன். இவ வந்து என்னை வேலை வாங்கறா"
இன்பா தூக்கிப் போட்ட பொருட்களை பொறுக்கிக் கொண்டே விளையாட்டுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.
" இன்பா என்னதிது. பாட்டி பாவமில்ல?" அதட்டினாள் இனியா.
உதடு பிதுக்கி வழக்கம் போல தன்னுடைய வேலையை ஆரம்பித்தாள் இன்பா.
"அட புள்ளைய வையாத. இவளுக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்?"
எந்த குழந்தையை பார்த்தாலும் அவர் இப்படித் தான் சொல்லுவார்.
அழும் டிராமாவை ஆரம்பித்த பிள்ளையை மடியில் வைத்துக் கொண்டு சிவனேன்னு கிடந்தேன்னு சொன்னா என்ன அர்த்தம் தெரியுமா?
"எங்க ஊரு மீனாட்சிக்கு கல்யாணம் நடக்கும் போது அவளும் அண்ணா அழகனும் அடிக்கற கூத்து தான் சாஸ்தி. சொக்கன் சிவனேன்னு கிடப்பாரு"
இன்பா எதற்கு சிரித்தாள் என்பது இனியாவுக்குத் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்தது.
"சொக்கா! சொக்கா!" திரும்ப திரும்ப சொல்லி பிள்ளை திரும்ப திரும்ப சிரித்தாள் .
அவர் கிளம்பும் நேரம்,
"ரொம்ப தேங்க்ஸ் ஆன்டி. நீங்க எல்லாரும் இல்லன்னா நாங்க இப்படி சிரிச்சுருக்கவே முடியாது.
"நாங்க எல்லாம் நிரந்தரம் இல்ல இனியா. நீ உன் குடும்பத்தோட சேரனும். அது தான் என்னிக்குமே அதுதான் உனக்கும் பாப்பாவுக்கு நல்லது"
அதையே கரிகாலன் வேறு மாதிரி சொன்னான்.
"நீங்க இப்ப அவன் கிட்டேர்ந்து விடுதலையாகிட்டீங்க. வேற ஒரு வாழ்க்கையைப் பத்தி ஏன் யோசிக்க கூடாது?"
இன்னொரு முறை திருமணம்?
இவளால் யோசிக்க முடியவில்லை. செய்த தவறை சரி செய்ய முடியவில்லை. அப்போது தான் தனி. இப்போது தன்னை பற்றி மட்டும் எப்படி யோசிக்க முடியும்? பார்வதி நல்லவன் கூட குழந்தையை ஆசையாக முத்தமிட்ட தில்லை. கரிகாலன் தான் அவள் கண் முன் வந்தான். தன் மகளுக்கு அவர் ஏன் தந்தையாக இல்லை?
இது என்ன எண்ணம்?
இனி அவனிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும். நினைப்பது நடக்குமா?
இனியா வேலைப் பார்க்கும் இடத்தில் மாறன் வந்து குழந்தைகளுக்கு வரையக் கற்றுக் கொடுத்தான். அதில் நம் இன்பாவும் ஒருத்தி . ஆனால் அவள் இன்னும் ஸ்பெஷல். வயதுக்கு மீறிய வரையும் ஆற்றல் அவளுக்கு இருந்ததது. சில குழந்தைகள் இந்த குறைப்பாடு இருக்கும் போது செய்த வேலையே திருப்பி திருப்பி செய்வார்களாம். மாறன் வந்து அவளுக்கு பென்சில் பிடித்து வரையக் கற்றுக் கொடுத்ததும் அவள் அதையே திருப்பி திருப்பி செய்தாள்.
மாறனின் பொறுமை திறமை பார்த்து இனியா அசந்து விட்டாள். கரிகாலன் தீபக் மாறன் எல்லாம் சேர்ந்து நெருங்கிய தோழர்கள் என்று தெரிந்தபோதும் அவளுக்கு இன்னும் ஆச்சர்யம் . மாறன் மீது அண்ணன் தோழன் என்பது தாண்டி தங்கையின் கணவர் என்ற உறவு வந்தது. சோழனின் மீது அது என்ன அவளுக்குத் தெரியவில்லை. உரிமைதான் அது.
" சோழன் எனக்கு ஆர் ஓ வேலை செய்யல. தண்ணி கேன் கிடைக்குமா? எனக்கு பேங்க் வரைக்கும் போகணும் பாப்பாவை கொஞ்ச நேரம் வச்சுக்கறீங்களா?" எதுவாக இருந்தாலும் அவனிடம் தைரியமாகக் கேட்கலாம்.
ஒரு நாள் மதியத்திற்கு மேல் அவளுக்கு காய்ச்சல் அடிப்பது போல இருந்தது. மாத்திரை போட்டாள. சிறிது நேரத்திற்கு குறைவது போல இருந்தது. மீண்டும் கொதிக்க ஆரம்பித்து விட்டது.
"சோழன் கொஞ்சம் வந்து பாப்பாவை தூக்கிட்டு போறீங்களா. கொஞ்சம் பீவரிஷா இருக்கு" அவன் வந்து பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்தவள் அப்படியே மயங்கி விட்டாள. கைத் தாங்கலாக பிடித்துக் கொண்டவன் மெதுவாக சோபாவில் கிடத்தினான். லேசாக தண்ணீர் தெளிக்கவும் லேசாக அசைந்தாள் . அவசரமாக அன்னைக்கு அழைத்து விஷயம் சொல்லி விட்டு இவளை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றான். கார் ஓட்ட முடியவில்லை. படபடப்பாக இருந்தது. ஏன்? புரியவில்லை.
அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தார்கள. இவன் தான் கார்டியன் என்று கையெழுத்துப் போட்டான். டெஸ்டுகள் எடுத்தார்கள் இவன் தான் பணம் கட்டினான். பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. வைரல் பீவர்தான் என்று சொன்னதும் தான் இவனுக்கு நிம்மதியாக இருந்து. இருந்தாலும் அவள் அருகில் அமர்ந்துக் கொண்டான். கையால் சும்மா இருக்க முடியவில்லை . மெதுவாக தலை கோதினான். தனியாக சிறு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு திண்டாடும் அவளை பார்க்கப் பாவமாக இருந்தது.
உன்னையும் உன் பிள்ளையையும் தாங்கும் உரிமை எனக்கு கிடைக்குமா? வேண்டாம். இந்த அவலட்சணம் உனக்கு வேண்டாம். நினைத்ததும் கை தானாகவே நகர்ந்துக் கொண்டது.
ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. கண் திறந்தவள் பார்த்தது அருகில் இருந்த சோழனைத் தான்.
"சாரி சோழன் ! உங்களை ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன்."
"உதவரத்துக்குத் தானே அக்கம் பக்கத்து மனுஷங்க இருக்கோம்"
டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் கொண்டு வந்து விட்டான். பாட்டியும் இன்பாவும் கூட வந்து விட்டார்கள். இவளின் கையில் இன்னும் அந்த ட்ரிப்ஸ் ஊசி இருந்தது அடுத்த இரு தினங்களுக்கு மருந்து அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கிளினிக்கில் போட்டுக் கொள்ள சொல்லி இருந்தார்கள். அதை பார்த்த குழந்தை பயந்து வீல் வீல் என்று அலறினாள்.
"பாப்பா என் கூடவே இருக்கட்டும். அப்புறமா கூட்டிட்டு வந்து விடறேன்."
சொன்னவன் கடையில் பையனை விட்டு விட்டு அவன் மார்பில் போட்டு தூங்க வைத்த பிறகே குழந்தையை கொண்டு வந்து விட்டான்.
"சோழன் ! " அவள் அழைத்தாள. இது அவளின் பிரத்யேக அழைப்பு. பலர் அவனை கரி என்பார்கள் . சிலர் கரிகாலன் என்பார்கள் இவள் தான் முதன் முதலில் சோழன் என்று அழைத்தவள் .
"சொல்லுங்க மேடம்!"
"உங்க கிட்ட நான்..,"
எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க மேடம் "
"எங்க அம்மாவைப் பாக்கணும்." கண்கள் கலங்கி விட்டன.
சொன்னவள் சட்டென அவனைக் கட்டிக் கொண்டாள்.
"மேடம் ப்ளீஸ் என்ன இது?"
"சோழன் ப்ளீஸ்! எதுவும் சொல்லாதீங்க. அனாதையா கிடக்கறேன். ஏதேதோ தப்பான எண்ணங்கள் வருது. எதுவும் பேசாதீங்க "
இவனும் அமைதியாக இருந்தான். இவனுக்கு அவள் நிலை புரிந்தது. அவன் தந்தை இறந்த நேரம் கோர முகம் பார்த்தவனுக்கு யாரிடமும் சொல்லவும் முடியாமல் தவித்தான் . ஆண் மகனால் எல்லா துக்கங்களையும் தாங்கிக் கொள்ள முடியுமா என்ன?
'இப்போது நான் அன்னையைப் பார்க்க வேண்டும்' மனதில் சொல்லிக் கொண்டு தன் துக்கத்தை வெளியில் காட்டாமல் அடக்கிக் கொண்டான். திருமணம் ஆகி இருந்தால் நிச்சயம் மனைவி மடி சாய்ந்திருப்பான் . இவளோ திருமணம் ஆகியும் இந்த நிலையில் இருக்கிறாள் .
அவனின் இதயத்தின் ஒலி அவளை சாந்தப்ப படுத்தியது. கண்ணில் வழிந்த நீரை துடைத்து கொண்டவள், "தேங்க்ஸ்" என்றாள்.
அவள் கேட்டுக் கொண்டபடியே மறுநாள் அவள் தலைக் கோத அன்னை மட்டுமில்லை குடும்பமாக வந்து நின்றார்கள்.
காலிங் பெல் சத்தம் கேட்டது.
மெதுவாக அடி எடுத்து வைத்தவள் கதவை திறந்தாள். இன்னும் உடல் நலம் பெறவில்லை. தலை பாரமாக இருந்தது.
அன்னையின் முகம் பார்த்தவள், "வாம்மா! வாப்பா!" அதற்கு மேல் அவளை தீபக் பேச விடவில்லை. தோளில் சாய்த்துக் கொண்டு அறையில் படுக்க வைத்தான்.
"தேங்க்ஸ் அண்ணா "சொன்னவள் அவன் கையைப் பிடித்துக் கொண்டு உறங்கிப் போனாள் . கண் விழித்த இன்பா வீட்டில் யார் யாரோ இருக்கவும் உதடு பிதுக்கி அழுவதற்கு முன் தீபா அள்ளி எடுத்து சமாதானம் செய்தாள் . மாறனின் முகம் பார்த்து கை தட்டி சிரித்தாள் இன்பா .
பிறந்த நேரம் பார்த்து பேச வேண்டிய கதைகள் எல்லாம் இப்போது பேசினார்கள்.
யாரும் நல்லவனை பற்றியோ அவளது பழைய வாழக்கை பற்றியோ வாய் திறக்க கூடாது என்ற அருணாவின் கட்டளையைப் பின் பற்றினார்கள். முதல் நாள் இரவு கரிகாலன் போன் செய்த பிறகு இதை பற்றி எப்படி பேசுவது என்று தீபக் குழம்பிக் கொண்டி கொண்டிருந்தான். தங்கை அண்ணாவின் முகம் பார்த்து கண்டுபிடித்து விட்டாள். அவளிடம் பேசிக் கொண்டிருந்தபோது அதை பெரியவர்களும் கேட்டு விட்டார்கள்.
"அம்மா எனக்கும் விஷயம் தெரியும். இப்பதான் இவரும் சொன்னாரு. அக்கா பொண்ணுக்கு இவரு தான் வரைய சொல்லிக் கொடுக்கிறாராம்."
"அப்டின்னா இனியா பொண்ணுக்கு ?"
" ஆமாண்ணே !"
"ஒ மை காட்!இதை ஏன் மாறன் நம்ம கிட்ட இத்தனை நாள் சொல்லல?"
அக்கா தான் யாருகிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம் .குழலி அக்கா வீட்டுலதான் இப்ப அக்கா இருக்காம். இனியா அக்காவுக்கு பிள்ளை பிறந்த போது கூட யாரும் இல்லாம ரொம்ப கஷ்டபட்டுச்சாம். அப்ப என்றுத் தொடங்கி நடந்த விஷயங்களை சுருக்கமாக சொன்னாள்.
அப்போது தான் கோவில் வாயிலில் அவளை பார்த்து பேசிய விஷயத்தைச் சொன்னான்.
"அப்ப என் பொண்ணு இவ்ளோ கஷ்டப்படறது தெரிஞ்சும் நீ சொல்லாமலே இருந்தியா தீபக்?" என்றுத் தொடங்கி அழுகை சண்டை சமாதானம் எல்லாம் ஆகித் தான் இப்போது விடியலில் இங்கே வந்து நிற்கிறார்கள்.
அதேப் போலத்தான் அங்கே கரிகாலன் வீட்டிலும் சண்டை நடந்தது.
வகையாய் போட்டுக் கொடுத்த அடுத்த வீட்டு அக்காதான் காரணம்.
"இங்க பாருங்க கரியம்மா ! சொல்லறேன்னு தப்பா நினைக்காதீங்க. நம்ம பையனை பத்தி நமக்குத் தெரியும். பாக்கறவங்களுக்குத் தெரியாதே. ஊரு நாலு விதமா பேசறதுக்கு முன்ன உங்க சொந்ததுலேயே பார்த்து கரிக்கு சீக்கிரமா கல்யாணத்தை முடிங்க. அவனுக்கும் வயசாகிட்டே போகுது. பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா என்ன வேணுன்னாலும் நடக்கும். இந்த இந்த பிள்ளையை நீங்க தூக்கி தூக்கி இங்க வச்சுக்கறதும் அதை சாக்கு வைச்சு அந்த பொண்ணு இங்க வரதும். கரிக்கிட்ட சிரிச்சு மயக்கரதும் சரியாவேயில்ல"
"நம்ம மீனட்சி புள்ளை கூடாது தான் இங்க இருக்கு. அதுல என்ன தப்பு?"
பெரியவர் கேட்டதற்கு,
"அக்கா இன்னும் இப்படி ஊரு உலகம் தெரியாமலேயே இருக்கீங்களே . மீனாட்சியின் புள்ள உங்க மமகனை அப்பான்னு சொல்லலியே . அவ ஒழுக்கமானவளா இருந்தா எப்ப புள்ளை வேற எவனையோ அப்பான்னு கூப்பிடும்போது சிரிச்சுக்கிட்டு இருக்க முடியும்? என்னவோக்கா எனக்கு மனசுல பட்டதை நன் சொல்லிட்டேன். ரெண்டும் சின்னச்சிறுசுங்க அப்புறம் தப்பா எதுவும் ஆகிட்டா நம்ம பயல மீட்டுகிட்டு வர முடியாது சொல்லிட்டேன்."
அந்த ஏரியாவில் இருந்த பலரின் குரலாக அவளின் ஒரு குரல் முதலில் ஆரம்பித்து வைத்தது. அதற்கு ஏற்றது போல இன்பாவும் இவன் வரும் வரை முழித்திருந்து அப்பா என்றுக் கட்டிக் கொண்டாள் .
இடுப்பை தட்டிய குழந்தைக்கு பறக்கும் முத்தம் கொடுத்தவன் "பாப்பா சாப்பிட்டாங்களா? " அப்பா போய் குளிச்சுட்டு வந்திறன். சொல்லிவிட்டுச் சென்றான். வந்திடும் குழந்தையை மடியில் அமர்த்தி உணவு ஊட்டிய பிறகு இவன் சாப்பிட்டான்.
"இனியா எப்படி இருக்கா கரி ?
"அன்று இனியா சொன்னப் பிறகு அம்மா இவனை கரிகாலன் என்று தான் அழைக்க ஆரம்பித்தார் . இப்போது மறுபடியும் கரி என்கிறார். கையை துடைத்துக் கொண்டு வந்தவன் அர்த்தம் புரிந்தவனாக அன்னையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"என் மூஞ்சில கரிய பூசிடாதப்பா "
"என்ன அத்தா சொல்லற நீ? நீ என்ன சொல்லறன்னே எனக்குப் புரியல"
"சொல்லறேன். எல்லாத்தையும் விட்னு புட்டு உனக்கு சொல்லனுமா சொல்லறேன்"
மாலை நடந்த விஷயங்களைச் சொன்னாள் .
"நீ என்னை சந்தேகப் படறியா?"
"இல்லப்பா. இத்தனை நாளா அந்த ரூபாவைதான் நீ மனசுல வச்சு வாழ்ந்துகிட்டு இருக்கன்னு எனக்கு தெரியும். ஆனா இனியாவைப் பார்த்ததும் எனக்கே அந்த சந்தேகம் வர ஆரம்பிக்குது. நமக்கும் அவளுக்கும் என்னப்பா சம்பந்தம். அவளுக்கு ஒண்ணுன்னா நீ பதறிப் போற? தோளுல தூக்கி போட்டுட்டு ஆஸ்பத்ரிக்கு ஓடற. இங்க என்னப்பா நடக்குது ?"
"யாரோ என்னவோ பேசினா நீயும் அதை அப்படியே பேசுவியா?"
"அந்த அளவுக்கு நான் ஒன்னும் மூளை கெட்டுப் போய் கிடைக்கல. அவ ஒருத்தி பேசினது இங்க இருக்கற பல பேசற விஷயம் தான். இதனால நமக்கும் பிரச்சனை வரும். ஒவ்வொருத்தரா பேச ஆரம்பிம்பாங்க. அந்த ரூபாவையே மனசுல நினைச்சுகிட்டு வாழ வேண்டிய வயசுல ஆசைகளை தொலைச்சவன் நீ. எனக்குத் தெரியும். ஆனா மத்தவங்களுக்குத் தெரியாது. நாளைக்கே உனக்கு ஒரு கல்யாணம் பண்ணணுன்னா வர்றவளுக்கு இந்த விஷயமா தெரிஞ்சா உன் வாழ்க்கை என்ன ஆகும்? உன் வாழ்க்கை மட்டுமில்ல அந்த இனியா வாழ்க்கை என்ன ஆகும்?
"இப்ப என்னதான் சொல்ல வர்ற ?"
"உனக்கு அவளை புடிச்சுருக்கா கல்யாணம் பண்ணிக்கோ இல்லையா தள்ளி நிப்போம். ஆனா இந்த மாதிரி உறவு வேணாம். "
"அம்மா இந்த பிள்ளை முகத்தை பார்த்துட்டு எப்படிம்மா நாம் மூஞ்சிய திருப்பிக்க முடியும்?"
"இங்க பாருப்பா அந்த புள்ளைக்குன்னு பெத்தவங்க இருக்காங்க. உன் நண்பனுக்கு போன் பண்ணி பேசு. அவங்க வந்து இவங்களை கூட்டிக்கிட்டுப் போகட்டும். சில விஷயங்களை நாம ஏத்துகிட்டுதான் ஆகணும்."
பதில் எதுவும் பேசாமல் தான் குழந்தை தூங்கிய பிறகு கொண்டுப் போய் விட்டான்.
தன்னால் இனி இனியா இன்பா இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?
தினமும் காலையில் அவனுக்கு இனியாவின் முகம் பார்த்து விட வேண்டும். அவர்கள் கிளம்பி ஆட்டோவுக்கு நிற்கும்போது அவர்களை கண்ணால் பருகிக் கொள்வான்.
இன்பாவும் தான் முன்பு இருந்தது போல எல்லாம் இல்லை. இந்த ஒரு வருடத்தில் எத்தனை மாற்றங்கள் அந்த பிஞ்சிடம்?
குழந்தை அம்மா எனும்போது அவள் கொள்ளும் இன்பம் இவனும் அடைந்தான், அந்த குழந்தை அப்பா என்ற போது . இனியா விடம் எப்படி எனக்கு உங்களை பிடிக்கிறது என்று சொல்ல முடியும்? அவளோ திருமணம் ஆனவள். விவாகரத்து வாங்கி விட்டாலும் அவள் மனதில் தான் அமர தனக்கு என்ன தகுதி இருக்கிறது? அத்தனை அழகான மகாலட்சுமிக்கு இந்த கரிக்கட்டையா ? தனக்கு என்று என்ன இருக்கிறது ? அழுக்குச்சட்டையும் லுங்கியும் . தன்னை நினைத்தவனுக்கு அருவருப்பாக இருந்தது.
அவன் எத்தனை அழகானவன். அதை நாம் யோசிப்பதை விட அவனவன் யோசித்தால் தான் நன்றாக இருக்கும்.
காலையில் ஊசியை வாங்கி வந்து மாறன் போட்டு விட்டான். தன்னை சுற்றிலும் இத்தனை பேர் இருந்தாலும் அவர் ஏன் வரல? போன் பண்ணலாமா? அரை மயக்கத்தில் கூட அவன் நினைவுதான் அவளுக்கு .
அன்னையின் கைமணத்தில் கஞ்சி ரசம் சாதம் என்று வாய்க்கு ருசியாக வயறு வாடாமல் சாப்பிட்டாள் . தந்தையை விடவும் அம்மாவைத் தேடினாள் . தேவேந்திரனுக்கும் புரியாத பல விஷயங்கள் புரிந்தன . வாழ்க்கை பற்றி அல்ல. அவரின் வாழ்க்கைத் துணை பற்றி.
இளையவர்கள் கிளம்பி விட்டார்கள். வேலைக்குச் செல்ல வேண்டுமே! மாறன் இன்பாவை காலையில் விட்டான். தாத்தா மதியம் சென்று அழைத்து வந்தார்.
"ம்மா! சோழன் ஏதாவது கால் பண்ணாரா?"
"ஏம்மா ?"
"இல்ல சும்மாதான். இன்னிக்கும் நாளைக்கும் கைல ஊசிப் போடணும், அதான் "
இதோ அவருக்கு போன் பண்ணிக் கேக்கறேன்.
மகளின் மீ்து அன்னையின் குறுகுறு பார்வை படர்ந்தது
"ஹலோ சோழன் !"
நேற்றைய சம்பவத்திற்கு பிறகு இருவராலும் இயல்பாக இருக்க முடியவில்லை.
"ஹாஸ்பிடல் போகணும் எப்ப வரீங்க?"
"தீபக் இல்லையா?"
'நான் உங்களை கூப்பிட்டேன்."
வந்து நின்றான். வந்தவனை இன்பா அப்பா அப்பா கட்டிக் கொண்டாள் .
"அப்பா இல்லடா செல்லம் "
தேவேந்திரன் குழந்தையை தூக்கி கொண்டார் .
இரவில் பெற்றோர் மக்களிடம் பேசினார்கள்.
:குழந்தை நல்லவனை ரொம்ப தேடறா. அப்பா செல்லம்மா?"
"அம்மா அது வந்து அவ அப்பான்னு சொல்லறது சோழனைத் தான்." கேட்டவர்களுக்கு அதிர்ச்சி.
"அப்பா நீங்க ரெண்டு பேரும்?"
"எங்களுக்குள்ளே எதுவும் இல்ல. நாங்க ஜஸ்ட் நெய்பர்ஸ் தான். இங்க யாரும் இல்லாம வந்த போது சோழனும் ஆண்டியும் தான் எங்க ரெண்டு பேருக்கும் ஆதரவா இருந்தாங்க. அவரை பார்த்து தான் இன்பா முதன் முதல்ல சிரிச்சா. ஒரு வேலை நல்லவன் கூடவே இருந்திருந்தா இவளுக்கு இன்னும் பிரச்சனை அதிகமாகி இருந்திருக்கலாம். எனக்கும் பைத்தியம் பிடிச்சுருக்கும். சோழனும் அவங்க அம்மாவும் எங்க மேல காட்டின தூய அன்புதான் இன்னிக்கு என்னையும் என் பெண்ணையும் உசுரோட வச்சுருக்கு"
மற்றவர்கள் வேறு பெயர் சொல்ல இவளுக்கு மட்டும் அது என்ன அவனை வேறு பெயர் சொல்லக் காரணம்?
"சரி உங்க ரெண்டு பேரு மனசுல?"
"அம்மா அது வந்து?"
"வெளிப்படையா பேசு இனியா. எனக்கு கரிகாலனை ரொம்ப முன்னாடியேத் தெரியும். அவன் மனசை முழுசா ரூபாவுக்கு கொடுத்துட்டான். ஆனா நீ? "
மௌனம்
"நீ அவனை விரும்பரியாம்மா ?
தேவேந்திரனின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
அவளுக்கு அவன் வேண்டும். அவன் முகம் பார்க்காமல் அவளுக்கு ரொம்ப கஷ்டம்தான்.
அவர் முகம் பார்க்காமல் அவள் எத்தனை கஷ்டப்பட்டால் என்பது அவளுக்கே அப்போது தான் புரிந்தது.
எப்போது அவன் ரூபாவுக்கு திதி கொடுத்து விட்டு வந்தானோ அப்போதே அவனுக்குத் தான் சரியில்லை என்று அவள் புரிந்துக் கொண்டாள் .
"சொல்லு இனியா. உன்னோட மனசுல அவரு இருக்காரா? நம்ம குழந்தை யாரோ ஒருத்தரை அப்பான்னு சொல்லறது எப்படி சரியாகும்? காரிகாலங்கிட்ட தீபக்கை பேச சொல்லவா? "
"அம்மா என்னம்மா பேசற நீ? என்னோட விவாகரத்துக்கு, கூட வந்து நின்னவர் மா அவரு. அவருகிட்டையே போய் என்னோட முதல் புருஷனை கை கழுவிட்டேன். வா நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு எப்படிம்மா?"
"விவாகரத்து ஆனவங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கறது தப்புன்னு நினைக்கிறியா?"
"இல்லம்மா! கண்டிப்பா இல்ல. அது ஒவ்வொருத்தரோட வாழ்க்கைக்கு ஏத்தமாதிரி மாறும். நான் நல்லவனுக்காகவே பொறந்தவன்னு அவனுக்காக வாழ பழகிட்டேன். இப்ப நிச்சயமா அவன் என் மனசுல இல்ல. இருந்தாலும் நல்லவன் கை பாட்ட எச்சி மா நானு. தன்னை அசிங்கமா இருக்க, உனக்கு ஆங்கிலம் பேச வரல. பெரிய பணக்காரர் இல்லன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டு போனவளுக்காக இப்பவும் வருஷாவருஷம் திதி கொடுக்கறாரு. அந்த நல்லவருக்கு இந்த எச்சில் வேண்டாம்மா ."
"என்ன இனியா இப்படி பேசற. "
"ப்ளீஸ் மா புரிஞ்சுக்கோங்க."
முகம் மூடி கேவிக் கேவி அழுத்தவன் நிலை புரிந்தது. இப்போது அவள் மனம் முழுவதும் காரிகாலந்தான் இருக்கிறான். இவன் தான் வேண்டும் என்று பிடிவாதமாக வீட்டை விட்டு ஒட்டிப் போய் நல்லவனை திருமணம் செய்துக் கொண்டவள் இந்த உண்மையான நல்லவனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள். இதற்குத் தீர்வு தான் என்ன?
இங்கே இந்த விஷயம் நடந்துக் கொண்டிருக்க, மாறனும் தீபக்கும் பேசிக் கொண்டிருந்தாரகள்.
"கரிகாலனுக்கும் இனியாவுக்கும் ஒரு டிராக் ஓடுது தீபக்"
இதற்கு மேல் என்ன ?
சுபஸ்ய சீக்கிரம்.
இனியாவும் சோழனும் தங்கள் உலகத்தில் இருக்க பெரியவர்கள் சிறியவர்கள் எல்லாம் சேர்ந்து முடிவெடுத்துவிட்டார்கள். இன்பா குட்டியும் தான்.
கரிகாலன் அம்மா தான் வந்து உறவுக்கார பெண்கள் சிலருடன் வந்து இவளுக்குப் பூ வைத்து விட்டுப் போனார். அவர் வரையில் மகனின் சந்தோஷம் தான் முக்கியம். சிரிக்க மறந்தவன் உலகத்தில் சிரிக்க கற்றுக் கொடுத்தாள் இன்பா. மற்றபடி அவருக்கு யார் என்ன பேசினாலும் கவலை இல்லை.
"அக்கா நீயும் மாமாவும் பீச்சுக்குப் போய்ட்டு கொஞ்ச நேர டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. பாப்பாவை நாங்கப் பார்த்துக்கறோம் "
"ஏன் உனக்கு எக்ஸ்பீரியன்ஸா இருக்குன்னு பாக்கறியா ?
மாறன் என்ன சொல்லறீங்க ?"
"இன்னும் இவ உங்ககிட்ட விஷயத்தை சொல்லவேயில்லையா ?"
"டேய் பக்கி அக்காவும் மாமாவும் சேர்ந்து இருக்கும் போது சொல்லலாம்ன்னு நினச்சேன். உளறிட்டியே "
"அதுக்கு என்ன? இப்பவே கரிக்கு போன போடறேன்.
"டேய் இனிமே நாம அவனை கரினனு சொல்ல முடி மிஸ்டர் மேடத்துக்கு புடிக்காது."
தீபக் சொல்ல இவள் கன்னம் சிவந்தாள்.
இதோ அவர்கள் இருவரும் கடற்கரையில் ..
தள்ளி அமர்ந்தவள் அருகில் அவளை ஒட்டி அமர்ந்தான் அவன். அவனின் இந்த செயல் அவளுக்கு ஓரளவு தைரியம் கொடுத்தது. 'புடிக்கலன்னு சொல்லிடுவாரோ?' முன்பிருந்த பயம் இப்போது இல்லை.
"உங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா?"
அவன் முகம் பார்த்துக் கேட்டாள் அவள்.
மௌனம்.
"இதுக்கு மேல என்னால எதையும் கட்டுப் படுத்த முடியாது சோழன். எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு. உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. மத்தவர்களுக்காக நாம் எந்த செயலையும் செய்ய வேணாம்."
"எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு மேடம். ஆனா இந்த அசிங்கம் எங்க? நீங்க எங்க ?
யாருடா அசிங்கம்? நாந்தான் அசிங்கம். வாழாவெட்டின்னு என்ன நான் சொன்னபோது எனக்காக என்கிட்டியே கோபப்பட்டவன். நீயா அசிங்கம்? இனிமே இந்த அசிங்கம் அவலட்சணம் ஏதாச்சும் பேசினீங்கன்னா அவ்ளோதான் .
அவளைத் தான் அவன் ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
'என்ன அப்டி பாக்கற?
"இப்ப நீங்களும் அதை தான் பண்ணறீங்க"
அவன் சொன்னதும் அவளுக்கு கூச்சமாக இருந்தது.
இருவருக்கும் வார்த்தைகளை முட்டி மோதின. வாய் மட்டும் பூட்டிக் கொண்டது. வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்த மீன் களை அலைகள் ஓடி வந்து கால்களை நனைத்துக் கொண்டிருந்தது.
"பொதுவா தேவதைகள் பெண்களாக தான் இருப்பாங்கன்னு நினச்சேன். என் பெண்ணை சிரிக்க வைச்ச தேவதை நீங்க. என்னால உங்களை எவ்ளோ ஆசையா பார்த்துக்க முடியுமோ நான் பாத்துக்கறேன். இருந்தாலும் காதல் வருமான்னு தெரியல "
"உங்க வாழ்க்கைல நீங்க காதலித்து ஏமாந்து போனதால இருக்கலாம். எனக்கும் அந்த பிரச்சனை இருக்கு . இருந்தாலும் எனக்கு காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நாம் காதல் செய்தவங்க தப்பானவங்களா இருக்கலாம். அதுக்காக காதலே தப்புன்னு சொல்லிட முடியாது. என்னால எவ்ளோ காதல் குடுக்க முடியுதோ அவ்ளோ காதல் செய்வேன்.
அவள் கைகள் அவன் இரு கைக்குள் இருந்தது. அவள் கண்ணுக்குள் அவன் இருந்தான்.
பறந்த அவள் முடிக்களை மெதுவாக காதோரம் ஒதுக்கி விட்டான்.
"கிளம்பலாம்" கோவிலுக்கு போகணும் அவள் தான் சொன்னாள்.
"இப்ப என்ன கோவிலுக்கு? "
உடையில் இருந்த மண்ணை தட்டிக் கொண்டே நடந்தார்கள் .
இவ்ளோ அழகானவரை எனக்கு காட்டி கடவுளுக்கு நன்றி. சொல்ல. . உலகத்துலேயே சிறந்த அப்பாவை என் மகளுக்கு கொடுத்ததுக்கு"
"அதுவும் சரிதான். அவரு இல்லன்னா நான் இன்னிக்கு எனக்கு மாசுக்கு புடிச்ச பொண்ணோட கைய பிடிச்சுக்கிட்டு இப்படி உரிமையா நடக்க முடியுமா?"
அவர் கோவிலில் சந்தித்துக் கொண்டவர்களின் பயணம் அவரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
"வணக்கம் ! இன்றிய முக்கிய செய்திகள்.
நான்கு தொகுதிகளுக்கான இடை தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டிருக்கிறது.
எண்ணூர் அருகேநடந்த இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே நடந்த சண்டையில் ஒருவன் வெட்டி கொல்லப்பட்டான். அவன் பெயர் நல்லவன் என்பதும் வயது 29 தெரிய வந்துள்ளது . ஏற்கனவே இவன்குடிபோதையில் தனது அன்னையை தலையில் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்ய முயன்றபோது போலிஸாரால் கைது செய்யப் பட்டவன் என்பதும் இப்போது ஜாமினில் வந்தவனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது."
செய்திகள் ஓடி கொண்டிருக்கிறது.
பார்வதி மன நல காப்பகத்தில் இருப்பது, அல்லது நல்லவன் நிலை பற்றி எதுவும் இனியாவுக்கு தெரிய வேண்டியதில்லை.
இந்த மீன்களின் வாழ்வை சரிப்படுத்தியவர் தனது கோவில் குளத்தில் இருக்கும் மீன்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார் இறைவன் பக்தர்களின் மூலம் .
"நான் கொஞ்சம் பொறி போடறேன். இந்தா நீ கொஞ்சம் போடு "
குழந்தைகளின் ஆரவாரம் கேட்க உள்ளே நுழைந்தார்கள் நம் இனியாவும் கரிகாலனும்...
சுபம் .......
வணக்கம் மக்களே! இளம்பிள்ளை உண்மையில் இளம்பிள்ளைதான். கதைத் தறி எப்படி இருக்கு. டிசைன்ஸ் கலர்ஸ் எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இந்த புடவை நெய்து முடிச்சுட்டு பார்த்தா எனக்கு மன நிறைவா இருந்தது. உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். என்னுடன் வந்த அனைவருக்கும் மிக்க நன்றி...
ஹா! சொல்ல மறந்துட்டேன் . சீக்கிரமா நாம தீபக் குழலி காதல் கதையில் சந்திக்கலாம்.
Last edited:
Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள்-17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கடல் தேடும் மீன்கள்-17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.